அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் நொடித்துப் போய்விட்டால், (அவருக்கு விற்ற) மனிதர் (விற்பனையாளர்) தனது சரக்கை அவரிடம் (மாற்றப்படாமல், பயன்படுத்தப்படாமல்) அப்படியே கண்டால், அதனைத் (திரும்பப்) பெறுவதற்கு அவர் (விற்பனையாளர்) அதிக உரிமை படைத்தவர் ஆவார்.