حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ خَطَبَ عُمَرُ عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّهُ قَدْ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ، وَهْىَ مِنْ خَمْسَةِ أَشْيَاءَ الْعِنَبِ وَالتَّمْرِ وَالْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالْعَسَلِ، وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ، وَثَلاَثٌ وَدِدْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يُفَارِقْنَا حَتَّى يَعْهَدَ إِلَيْنَا عَهْدًا الْجَدُّ وَالْكَلاَلَةُ وَأَبْوَابٌ مِنْ أَبْوَابِ الرِّبَا. قَالَ قُلْتُ يَا أَبَا عَمْرٍو فَشَىْءٌ يُصْنَعُ بِالسِّنْدِ مِنَ الرُّزِّ. قَالَ ذَاكَ لَمْ يَكُنْ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ قَالَ عَلَى عَهْدِ عُمَرَ. وَقَالَ حَجَّاجُ عَنْ حَمَّادٍ عَنْ أَبِي حَيَّانَ مَكَانَ الْعِنَبِ الزَّبِيبَ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உமர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக மதுவைத் தடை செய்யும் சட்டம் அருளப்பெற்றது. அது ஐந்து பொருட்களிலிருந்து (தயாரிக்கப்பட்டு) வந்தது. அவை: திராட்சை, பேரீச்சம்பழம், கோதுமை, பார்லி மற்றும் தேன். புத்தியைப் பேதலிக்கச் செய்வதே மதுவாகும். மேலும் மூன்று விஷயங்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் ஒரு (தெளிவான) உடன்படிக்கையை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கக்கூடாதா என நான் விரும்புகிறேன். அவை: பாட்டனார் (வாரிசுரிமை), 'அல்-கலாலா' மற்றும் ரிபாவின் (வட்டி) வகைகள் ஆகியனவாகும்."
(அறிவிப்பாளர் கூறுகிறார்:) நான் (அபூ அம்ர் அஷ்ஷஅபீயிடம்), "அபூ அம்ர் அவர்களே! சிந்து தேசத்தில் அரிசியிலிருந்து ஒரு பொருள் (பானம்) தயாரிக்கப்படுகிறதே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அது நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது உமர் (ரழி) அவர்களின் காலத்திலோ இருக்கவில்லை" என்று கூறினார்கள்.
மேலும் ஹஜ்ஜாஜ் என்பவர் ஹம்மாத் வழியாக அபூ ஹய்யானிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில், 'திராட்சை' என்பதற்குப் பகரமாக 'உலர் திராட்சை' என்று இடம்பெற்றுள்ளது.
உமர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடையில் (மின்பரில்) உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றினார்கள்; பின்னர் கூறினார்கள்:
இப்போது விஷயத்திற்கு வருகிறேன். கவனியுங்கள்! மதுவைத் தடை செய்யும் கட்டளை அருளப்பட்டபோது, அது ஐந்து பொருட்களிலிருந்து (தயாரிக்கப்பட்டு) வந்தது. அவை: கோதுமை, பார்லி, பேரீச்சை, திராட்சை மற்றும் தேன் ஆகியனவாகும். மேலும் 'மது' என்பது அறிவை மறைக்கக்கூடியதாகும்.
மக்களே! மூன்று விஷயங்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் (இன்னும் விரிவாக) உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவை: பாட்டனார் (வாரிசுரிமை), 'கலாலா' (நேரடி வாரிசுகள் அற்றவர் நிலை) மற்றும் வட்டியின் (சில) வகைகள் ஆகும்.
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، حَدَّثَنَا أَبُو حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ، عُمَرَ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ أَمَّا بَعْدُ أَيُّهَا النَّاسُ فَإِنَّهُ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ وَهْىَ مِنْ خَمْسَةٍ مِنَ الْعِنَبِ وَالتَّمْرِ وَالْعَسَلِ وَالْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ وَثَلاَثٌ أَيُّهَا النَّاسُ وَدِدْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عَهِدَ إِلَيْنَا فِيهِنَّ عَهْدًا نَنْتَهِي إِلَيْهِ الْجَدُّ وَالْكَلاَلَةُ وَأَبْوَابٌ مِنْ أَبْوَابِ الرِّبَا .
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மிம்பரில் (நின்றவாறு) பின்வருமாறு கூறியதை நான் செவியுற்றேன்: "அம்மாக் பிறகு! மக்களே! மதுவைத் தடை செய்யும் கட்டளை அருளப்பட்டது. அது திராட்சை, பேரீச்சம்பழம், தேன், கோதுமை, பார்லி ஆகிய ஐந்து பொருட்களிலிருந்து (தயாரிக்கப்பட்டு) வந்தது. மேலும் மது என்பது அறிவை மறைக்கக்கூடிய ஒன்றாகும். மக்களே! மூன்று விஷயங்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் (முடிவாகக் கொண்டு) நின்றுவிடக்கூடிய ஒரு தெளிவான வழிகாட்டுதலை நமக்கு அளித்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அவை: பாட்டனார் (வாரிசுரிமை), கலாலா (தந்தையோ மக்களோ இன்றி இறப்பவரின் வாரிசுரிமை), மற்றும் வட்டியின் சில வகைகள் ஆகும்."