இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1509 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ سَعِيدِ ابْنِ مَرْجَانَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ مَنْ أَعْتَقَ رَقَبَةً مُؤْمِنَةً أَعْتَقَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنَ النَّارِ حَتَّى يُعْتِقَ فَرْجَهُ بِفَرْجِهِ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: எவர் ஒரு இறைநம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்கிறாரோ, அல்லாஹ், அந்த அடிமையின் ஒவ்வொரு உறுப்புக்கு ஈடாக, அவரின் (விடுதலை செய்தவரின்) ஒவ்வொரு உறுப்பையும், அந்த அடிமையின் அந்தரங்க உறுப்புக்கு ஈடாக, அவரின் (விடுதலை செய்தவரின்) அந்தரங்க உறுப்பைக்கூட நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்வான்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح