இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5817ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي خَمِيصَةٍ لَهُ لَهَا أَعْلاَمٌ، فَنَظَرَ إِلَى أَعْلاَمِهَا نَظْرَةً، فَلَمَّا سَلَّمَ قَالَ ‏ ‏ اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي، وَائْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمِ بْنِ حُذَيْفَةَ بْنِ غَانِمٍ مِنْ بَنِي عَدِيِّ بْنِ كَعْبٍ ‏ ‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கரைகள் (வேலைப்பாடுகள்) கொண்ட ‘கமீஸா’ ஒன்றை அணிந்து தொழுதார்கள். (தொழுகையில்) அதன் கரைகளை அவர்கள் ஒருமுறை பார்த்தார்கள். சலாம் கொடுத்ததும், “என்னுடைய இந்தக் கமீஸாவை அபூ ஜஹ்ம் (ரலி) அவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், சற்றுமுன் அது தொழுகையில் என் கவனத்தைத் திசை திருப்பியது. மேலும், பனூ அதீ இப்னு கஃப் கிளையைச் சேர்ந்த அபூ ஜஹ்ம் இப்னு ஹுதைஃபா இப்னு ஃகானிம் உடைய ‘அன்பிஜானியா’வை (கரைகளற்ற தடிமனான ஆடையை) என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
556 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي خَمِيصَةٍ ذَاتِ أَعْلاَمٍ فَنَظَرَ إِلَى عَلَمِهَا فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ ‏ ‏ اذْهَبُوا بِهَذِهِ الْخَمِيصَةِ إِلَى أَبِي جَهْمِ بْنِ حُذَيْفَةَ وَائْتُونِي بِأَنْبِجَانِيِّهِ فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا فِي صَلاَتِي ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடுகள் கொண்ட (கமீஸா எனும்) ஒரு ஆடையை அணிந்து தொழுதார்கள். அவர்கள் (தொழுகையில்) அதன் வேலைப்பாடுகளைப் பார்த்தார்கள். தொழுகையை முடித்த பிறகு கூறினார்கள்:

"இந்த ஆடையை அபூ ஜஹ்ம் இப்னு ஹுதைஃபாவிடம் எடுத்துச் செல்லுங்கள். எனக்கு அவரின் 'அன்பிஜானிய்யா' ஆடையைக் கொண்டு வாருங்கள். ஏனெனில், சற்று முன்பு தொழுகையில் இது என் கவனத்தைச் சிதறடித்தது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح