அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கரைகள் (வேலைப்பாடுகள்) கொண்ட ‘கமீஸா’ ஒன்றை அணிந்து தொழுதார்கள். (தொழுகையில்) அதன் கரைகளை அவர்கள் ஒருமுறை பார்த்தார்கள். சலாம் கொடுத்ததும், “என்னுடைய இந்தக் கமீஸாவை அபூ ஜஹ்ம் (ரலி) அவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், சற்றுமுன் அது தொழுகையில் என் கவனத்தைத் திசை திருப்பியது. மேலும், பனூ அதீ இப்னு கஃப் கிளையைச் சேர்ந்த அபூ ஜஹ்ம் இப்னு ஹுதைஃபா இப்னு ஃகானிம் உடைய ‘அன்பிஜானியா’வை (கரைகளற்ற தடிமனான ஆடையை) என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடுகள் கொண்ட (கமீஸா எனும்) ஒரு ஆடையை அணிந்து தொழுதார்கள். அவர்கள் (தொழுகையில்) அதன் வேலைப்பாடுகளைப் பார்த்தார்கள். தொழுகையை முடித்த பிறகு கூறினார்கள்:
"இந்த ஆடையை அபூ ஜஹ்ம் இப்னு ஹுதைஃபாவிடம் எடுத்துச் செல்லுங்கள். எனக்கு அவரின் 'அன்பிஜானிய்யா' ஆடையைக் கொண்டு வாருங்கள். ஏனெனில், சற்று முன்பு தொழுகையில் இது என் கவனத்தைச் சிதறடித்தது."