இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1852 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ ابْنُ نَافِعٍ : حَدَّثَنَا غُنْدَرٌ ، وقَالَ ابْنُ بَشَّارٍ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ ، قَالَ : سَمِعْتُ عَرْفَجَةَ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : إِنَّهُ سَتَكُونُ هَنَاتٌ وَهَنَاتٌ ، فَمَنْ أَرَادَ أَنْ يُفَرِّقَ أَمْرَ هَذِهِ الْأُمَّةِ وَهِيَ جَمِيعٌ ، فَاضْرِبُوهُ بِالسَّيْفِ كَائِنًا مَنْ كَانَ
அர்ஃபஜா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற செவியுற்றேன்: எதிர்காலத்தில் பல்வேறு தீமைகள் தோன்றும். இந்த உம்மத் ஒன்றுபட்டிருக்கும் வேளையில், அதன் காரியங்களைச் சீர்குலைக்க யார் முயன்றாலும், அவன் யாராக இருந்தாலும் அவனை வாளால் வெட்டுங்கள். (அவனிடம் கண்டித்து அறிவுரை செய்தும் அவன் திருந்தவில்லையெனில், மேலும் அவன் தனது சீர்குலைக்கும் செயல்களிலிருந்து விலகவில்லையெனில், அவன் கொல்லப்பட வேண்டும்.)

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح