ஒருவர் உஸ்மான் (ரழி) அவர்களைப் புகழத் தொடங்கினார். அப்போது பருமனான மனிதராக இருந்த மிக்தாத் (ரழி) அவர்கள், (அந்தப் புகழ்பவரை) நாடிச் சென்று, தம் முழங்கால்களிட்டு அமர்ந்து, (அவரின்) முகத்தில் சிறு கற்களை அள்ளி வீசத் தொடங்கினார்கள்.
அப்போது உஸ்மான் (ரழி) அவர்கள், "உமக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள்.
அதற்கு மிக்தாத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: '(அளவுக்கு மீறிப்) புகழ்பவர்களை நீங்கள் கண்டால், அவர்களின் முகங்களில் மண்ணை அள்ளி வீசுங்கள்'."