அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "உங்களில் ஒருவர் தொழுகையில் கொட்டாவி விட்டால், அவர் தன்னால் இயன்றவரை அதை அடக்கிக்கொள்ளட்டும். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் நுழைகிறான்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தொழுகையில் கொட்டாவி விடுவது ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும், ஆகவே, உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி வந்தால், தன்னால் இயன்றவரை அவர் அதனை அடக்கிக் கொள்ளட்டும்."