இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2718ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ سُهَيْلِ،
بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا كَانَ فِي
سَفَرٍ وَأَسْحَرَ يَقُولُ ‏ ‏ سَمَّعَ سَامِعٌ بِحَمْدِ اللَّهِ وَحُسْنِ بَلاَئِهِ عَلَيْنَا رَبَّنَا صَاحِبْنَا وَأَفْضِلْ
عَلَيْنَا عَائِذًا بِاللَّهِ مِنَ النَّارِ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருக்கும்போது விடியற்காலை (ஸஹர்) நேரம் வந்துவிட்டால் பின்வருமாறு கூறுவார்கள்:

**"ஸம்மஅ ஸாமிஉன் பிஹம்தில்லாஹி, வஹுஸ்னி பலாஇஹி அலைனா. ரப்பனா ஸாஹிப்னா வஅஃப்ளில் அலைனா. ஆஇதம் பில்லாஹி மினன் நார்."**

"அல்லாஹ் எங்களுக்கு அளித்த அவனுடைய நன்மையான சோதனைகளுக்காக (அருட்கொடைகளுக்காக) நாங்கள் அவனைப் புகழ்வதை, செவியேற்பவர் ஒருவர் செவியுற்றார். எங்கள் இறைவா! எங்களுடன் துணையிருப்பாயாக! மேலும் உனது அருளை எங்களுக்குப் பொழிவாயாக! நரக நெருப்பிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடியவனாக (இதை நான் கூறுகிறேன்)."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح