நான் அபூ தர் (ரழி) அவர்களை 'ரபதா' எனும் இடத்தில் சந்தித்தேன். அப்போது அவர்மீது (பருத்தியாலான) ஒரு ஜோடி ஆடையும், அவருடைய அடிமையின் மீது (அதே போன்ற) ஒரு ஜோடி ஆடையும் இருந்தன. அது குறித்து நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்:
"நான் ஒரு மனிதரை ஏசி, அவருடைய தாயைச் சுட்டிக்காட்டி அவரைப் பழித்துவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், 'அபூ தர்ரே! அவருடைய தாயைக் குறித்துப் பேசி அவரை நீர் இழிவுபடுத்தினீரா? நிச்சயமாக நீர் அறியாமைக்காலப் பண்பு குடிகொண்டிருக்கும் ஒரு மனிதராக இருக்கிறீர்! உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்களாவர். அல்லாஹ் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, எவருடைய அதிகாரத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ, அவர் தான் உண்பதிலிருந்து அவருக்கும் உண்ணக் கொடுக்கட்டும்; தான் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களால் இயலாத வேலைகளை அவர்கள்மீது சுமத்தாதீர்கள். அவ்வாறு (இயலாத) வேலையை அவர்கள்மீது நீங்கள் சுமத்தினால், அவர்களுக்கு(ச் செய்ய) உதவுங்கள்' என்று கூறினார்கள்."
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ، بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ الأَحْدَبِ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، قَالَ رَأَيْتُ أَبَا ذَرٍّ وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلاَمِهِ مِثْلُهَا فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ قَالَ فَذَكَرَ أَنَّهُ سَابَّ رَجُلاً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَعَيَّرَهُ بِأُمِّهِ - قَالَ - فَأَتَى الرَّجُلُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ إِخْوَانُكُمْ وَخَوَلُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدَيْهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ عَلَيْهِ .
மஃரூர் இப்னு ஸுவைத் அறிவித்தார்கள்:
நான் அபூ தர் (ரழி) அவர்கள் ஆடை அணிந்திருப்பதையும், அவர்களுடைய அடிமையும் அதே போன்ற ஆடை அணிந்திருப்பதையும் பார்த்தேன். நான் அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன், அதற்கு அவர்கள் (அபூ தர் (ரழி)) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் தாங்கள் ஒரு நபரைத் திட்டியதாகவும், அந்த நபரை அவருடைய தாயாரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாகவும் கூறினார்கள். அந்த நபர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றி அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீர் ஒரு மனிதர், உம்மிடத்தில் அறியாமைக் காலத்தின் (எச்சங்கள்) இருக்கின்றன. உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். அல்லாஹ் அவர்களை உங்கள் கைகளில் ஒப்படைத்துள்ளான். மேலும், எவருடைய பொறுப்பில் அவருடைய சகோதரர் இருக்கின்றாரோ, அவர் தான் உண்பதையே அவருக்கும் உண்ணக் கொடுக்கட்டும், தான் அணிவதையே அவருக்கும் அணியக் கொடுக்கட்டும். மேலும், அவர்களுடைய சக்திக்கு மீறி அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள், அவ்வாறு (அவர்களுடைய சக்திக்கு மீறி) அவர்களைச் சிரமப்படுத்தினால், அவர்களுக்கு உதவுங்கள்.