ஸாலிம் (ரஹ்) அவர்கள் தம் தந்தையார் (ரலி) வழியாக அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் உறங்கும்போது உங்கள் வீடுகளில் நெருப்பை விட்டுவிடாதீர்கள்."
ஸாலிம் அவர்கள், தம் தந்தை (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் உறங்கும்போது உங்கள் வீடுகளில் நெருப்பை விட்டு வைக்காதீர்கள்."
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ الْيَزَنِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْجُهَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِنِّي رَاكِبٌ غَدًا إِلَى الْيَهُودِ فَلاَ تَبْدَءُوهُمْ بِالسَّلاَمِ فَإِذَا سَلَّمُوا عَلَيْكُمْ فَقُولُوا وَعَلَيْكُمْ .
அபூ அப்திர்ரஹ்மான் அல் ஜுஹனீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் நாளை யூதர்களிடம் சவாரி செய்து செல்கிறேன். அவர்களுக்கு நீங்கள் முந்தி ஸலாம் கூறாதீர்கள், அவர்கள் உங்களுக்கு ஸலாம் கூறினால், வ அலைக்கும் (உங்கள் மீதும்) என்று கூறுங்கள்".
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لاَ تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ .
சாலிம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் தூங்கும்போது உங்கள் வீடுகளில் நெருப்பை விட்டு வைக்காதீர்கள்."