தேடல்


2:87
2:87 وَ لَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْۢ بَعْدِهٖ بِالرُّسُلِ‌ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ‌ۚ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ‏
وَ لَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْكِتٰبَ வேதத்தை وَقَفَّيْنَا இன்னும் தொடர்ச்சியாக அனுப்பினோம் مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் بِالرُّسُلِ‌ தூதர்களை وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் عِيْسَى ஈஸாவிற்கு ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய الْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளை وَاَيَّدْنٰهُ இன்னும் பலப்படுத்தினோம்/அவரை بِرُوْحِ ஆத்மாவைக்கொண்டு الْقُدُسِ‌ؕ பரிசுத்தமான اَفَكُلَّمَا جَآءَكُمْ வந்தபோதெல்லாம் / உங்களுக்கு رَسُوْلٌۢ ஒரு தூதர் بِمَا எதைக் கொண்டு لَا تَهْوٰٓى விரும்பவில்லை اَنْفُسُكُمُ மனங்கள்/உங்கள் اسْتَكْبَرْتُمْ‌ۚ பெருமையடித்தீர்கள் فَفَرِيْقًا ஒரு பிரிவினரை كَذَّبْتُمْ பொய்ப்பித்தீர்கள் وَفَرِيْقًا இன்னும் ஒரு பிரிவினரை تَقْتُلُوْنَ‏ கொலை செய்கிறீர்கள்
2:87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம்; அவருக்குப் பின் தொடர்ச்சியாகத் தூதர்களை நாம் அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து, ரூஹுல் குதுஸ் (என்னும் தூய ஆத்மாவான ஜிப்ரீல்) மூலம் அவரை நாம் பலப்படுத்தினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம், நீங்கள் கர்வம் கொள்ளவில்லையா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரைக் கொன்றீர்கள்.
2:136
2:136 قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ‌ۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
قُوْلُوْٓا கூறுங்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு وَمَآ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْنَا நமக்கு وَمَآ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلٰٓى اِبْرٰهٖمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَ الْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَآ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) مُوْسٰى மூசா وَعِيْسٰى இன்னும் ஈஸா وَمَآ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) النَّبِيُّوْنَ நபிமார்களுக்கு مِنْ இருந்து رَّبِّهِمْ‌ۚ இறைவன்/தங்கள் لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ மத்தியில் اَحَدٍ ஒருவருக்கு مِّنْهُمْ அவர்களில் وَنَحْنُ இன்னும் நாம் لَهٗ அவனுக்கு مُسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)
2:136. "நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும், இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்டமாட்டோம்; இன்னும், நாங்கள் அவனுக்கே வழிப்படுகிறோம்" என்று (நம்பிக்கை கொண்டோரே!) நீங்களும் கூறுங்கள்.
2:253
2:253 تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ‌ۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ‌ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ‌ؕ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ وَلٰـكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا وَلٰـكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ‏
تِلْكَ அந்த الرُّسُلُ தூதர்கள் فَضَّلْنَا மேன்மையாக்கினோம் بَعْضَهُمْ அவர்களில் சிலரை عَلٰى விட بَعْضٍ‌ۘ சிலரை مِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் كَلَّمَ பேசினான் اللّٰهُ‌ அல்லாஹ் وَرَفَعَ இன்னும் உயர்த்தினான் بَعْضَهُمْ அவர்களில் சிலரை دَرَجٰتٍ‌ؕ பதவிகளால் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் عِيْسَى ஈஸாவிற்கு ابْنَ مَرْيَمَ மர்யமுடைய மகன் الْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளை وَاَيَّدْنٰهُ இன்னும் அவருக்கு உதவினோம் بِرُوْحِ ஆத்மாவைக்கொண்டு الْقُدُسِ‌ؕ பரிசுத்த(மான) وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا اقْتَتَلَ சண்டையிட்டிருக்க மாட்டார்(கள்) الَّذِيْنَ எவர்கள் مِنْۢ بَعْدِهِمْ அவர்களுக்குப் பின் مِّنْۢ بَعْدِ பின்னர் مَا جَآءَتْهُمُ அவர்களிடம் வந்தது الْبَيِّنٰتُ தெளிவான அத்தாட்சிகள் وَلٰـكِنِ என்றாலும் اخْتَلَفُوْا வேறுபட்டார்கள் فَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் كَفَرَ‌ؕ நிராகரித்தார் وَلَوْ شَآءَ இன்னும் நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا اقْتَتَلُوْا அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள் وَلٰـكِنَّ என்றாலும் اللّٰهَ அல்லாஹ் يَفْعَلُ செய்தே ஆவான் مَا எதை يُرِيْدُ‏ நாடுவான்
2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; மேலும், மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், 'ரூஹுல் குதுஸ்' (எனும் பரிசுத்த ஆன்மாவான ஜிப்ரீல்) மூலம் அவரை பலப்படுத்தினோம்; அல்லாஹ் நாடியிருந்தால், அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், (தங்களுக்குள்) சண்டையிட்டுக் கொண்டிருக்கமாட்டார்கள்; ஆனால், அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொண்டனர்; அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால், அவர்கள் (இவ்வாறு) சண்டையிட்டுக் கொண்டிருக்கமாட்டார்கள்; ஆனால், அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
3:39
3:39 فَنَادَتْهُ الْمَلٰٓٮِٕكَةُ وَهُوَ قَآٮِٕمٌ يُّصَلِّىْ فِى الْمِحْرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ‏
فَنَادَتْهُ ஆகவேஅழைத்தா(ர்க)ள் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் وَهُوَ قَآٮِٕمٌ அவர் நின்று தொழுதுகொண்டிருக்க يُّصَلِّىْ தொழுகிறார் فِى الْمِحْرَابِۙ மாடத்தில் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُبَشِّرُكَ உமக்கு நற்செய்தி கூறுகிறான் بِيَحْيٰى யஹ்யாவைக் கொண்டு مُصَدِّقًۢا உண்மைப்படுத்துபவராக بِكَلِمَةٍ ஒரு வாக்கியத்தை مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَسَيِّدًا இன்னும் தலைவராக وَّحَصُوْرًا இன்னும் இன்பத்தைத் துறந்தவராக وَّنَبِيًّا இன்னும் நபியாக مِّنَ الصّٰلِحِيْنَ‏ நல்லோரைச்சேர்ந்தவர்
3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, வானவர் (மலக்கு)கள் அவரை சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் 'யஹ்யா' (எனும் மக)வைக் கொண்டு உமக்கு நன்மாராயம் கூறுகிறான்: அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை(க் கொண்டு உண்டாகக்கூடிய ஈஸா நபியை - முன்னறிக்கையாக) மெய்ப்பிப்பவராகவும், தலைவராகவும், ஒழுக்கநெறி பேணியவராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.
3:45
3:45 اِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۖ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏
اِذْ قَالَتِ கூறியசமயம் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يٰمَرْيَمُ மர்யமே! اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُبَشِّرُكِ உமக்கு நற்செய்தி கூறுகிறான் بِكَلِمَةٍ ஒரு வார்த்தையைக் கொண்டு مِّنْهُ ۖ அவனிடமிருந்து اسْمُهُ அதன் பெயர் الْمَسِيْحُ அல் மஸீஹ் عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் وَجِيْهًا கம்பீரமானவராக فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ இன்னும் மறுமை وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏ நெருக்கமானவர்களில்
3:45. வானவர்கள் கூறினார்கள், "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயம் கூறுகின்றான்; அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்; அவர் இவ்வுலகத்திலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்."
3:52
3:52 فَلَمَّاۤ اَحَسَّ عِيْسٰى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ؕ قَالَ الْحَـوَارِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ۚ اٰمَنَّا بِاللّٰهِ‌ۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ‏
فَلَمَّاۤ போது اَحَسَّ உணர்ந்தார் عِيْسٰى ஈஸா مِنْهُمُ அவர்களில் الْكُفْرَ நிராகரிப்பை قَالَ கூறினார் مَنْ யார் اَنْصَارِىْۤ என் உதவியாளர்கள் اِلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்விற்காக قَالَ கூறினார் الْحَـوَارِيُّوْنَ தோழர்கள் نَحْنُ நாங்கள் اَنْصَارُ உதவியாளர்கள் اللّٰهِ‌ۚ அல்லாஹ்வின் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ‌ۚ அல்லாஹ்வை وَاشْهَدْ சாட்சி அளிப்பீராக بِاَنَّا நிச்சயமாக நாங்கள் مُسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள்
3:52. அவர்களில் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்தபோது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார். (அதற்கு அவருடைய) சீடர்கள்: "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கிறோம். நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். திட்டமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்றும் நீர் சாட்சி கூறுவீராக!" எனக் கூறினர்.
3:54
3:54 وَمَكَرُوْا وَمَكَرَاللّٰهُ ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ‏
وَمَكَرُوْا சதி செய்தார்கள் وَمَكَر இன்னும் சதி செய்தான் اللّٰهُ ؕ அல்லாஹ் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் خَيْرُ மிக மேலானவன் الْمَاكِرِيْنَ‏ சதி செய்பவர்களில்
3:54. இன்னும், (ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொல்ல) சதி செய்தார்கள்; (எனினும் அல்லாஹ் அவரை இரட்சித்துக் கொண்டு, தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ்வும் (அவர்கள் விஷயத்தில்) சதி செய்தான்; அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
3:59
3:59 اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ‌ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
اِنَّ நிச்சயமாக مَثَلَ உதாரணம் عِيْسٰى ஈஸாவின் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் كَمَثَلِ உதாரணத்தைப் போன்று اٰدَمَ‌ؕ ஆதம் خَلَقَهٗ அவரைப் படைத்தான் مِنْ இருந்து تُرَابٍ மண் ثُمَّ பிறகு قَالَ கூறினான் لَهٗ அவருக்கு كُنْ ஆகு فَيَكُوْنُ‏ ஆகிவிட்டார்
3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் "ஆகுக" எனக் கூறினான்; அவர் ஆகிவிட்டார்.
3:60
3:60 اَلْحَـقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِيْنَ‏
اَلْحَـقُّ உண்மை مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் فَلَا تَكُنْ ஆகவே ஆகிவிடாதீர் مِّنَ الْمُمْتَرِيْنَ‏ சந்தேகிப்பவர்களில்
3:60. (நபியே! ஈஸாவைப் பற்றிய இது) உம் இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாகும்; எனவே, (இது குறித்து) சந்தேகப்படுவோரில் ஒருவராக நீர் ஆகிவிடாதீர்.
3:84
3:84 قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَيْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِىَ مُوْسٰى وَ عِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
قُلْ கூறுவீராக اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلَيْنَا எங்கள் மீது وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلٰٓى மீது اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَ اِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَاۤ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார் مُوْسٰى وَ عِيْسٰى மூஸா/இன்னும் ஈஸா وَالنَّبِيُّوْنَ இன்னும் நபிமார்கள் مِنْ رَّبِّهِمْ தங்கள் இறைவனிடமிருந்து لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ اَحَدٍ ஒருவருக்கு மத்தியில் مِّنْهُمْ இவர்களில் وَنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கே مُسْلِمُوْنَ‏ முற்றிலும் பணிந்தவர்கள்
3:84. "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், (அவர்களின்) சந்ததியர் ஆகியோர் மீது அருளப்பட்டதையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும், (மற்ற) நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நாங்கள் விசுவாசம் கொள்கிறோம்; அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!