குர்ஆனை செவியேற்குமாறு வந்த கட்டளை
இந்தக் குர்ஆன் மனிதகுலத்திற்கு ஒரு தெளிவான சான்றாகவும், நேர்வழியாகவும், அருட்கொடையாகவும் இருக்கிறது என்று அல்லாஹ் குறிப்பிட்ட பிறகு, குர்ஆன் ஓதப்படும்போது அதற்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கும் விதமாக அதனைக் கவனமாகக் கேட்க வேண்டும் என்று அவன் கட்டளையிட்டான்.
இது, குரைஷி இணைவைப்பாளர்களின் பழக்கத்திற்கு மாற்றமாக இருக்கிறது. அவர்கள் கூறினார்கள்,
﴾لاَ تَسْمَعُواْ لِهَـذَا الْقُرْءَانِ وَالْغَوْاْ فِيهِ﴿
("இந்தக் குர்ஆனைச் செவியேற்காதீர்கள், மேலும் அது (ஓதப்படும்) போது சப்தமிடுங்கள்")
41:26.
இப்னு ஜரீர் அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்; "நாங்கள் தொழுகையின் போது ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொள்வோம். எனவே குர்ஆனின் இந்த வசனம் அருளப்பட்டது;
﴾وَإِذَا قُرِىءَ الْقُرْءَانُ فَاسْتَمِعُواْ لَهُ﴿
(குர்ஆன் ஓதப்படும்போது, அப்பொழுது அதனைக் கவனமாகக் கேளுங்கள்.)