ஷைத்தானின் சூழ்ச்சிகளுக்கு எதிரான எச்சரிக்கை
மனிதகுலத்தின் தந்தை ஆதம் (அலை) அவர்கள் மீது இப்லீஸிற்கு இருந்த தீராத பகைமையை விளக்குவதன் மூலம், ஆதமுடைய மக்களை இப்லீஸிடமிருந்தும் அவனைப் பின்பற்றுபவர்களிடமிருந்தும் அல்லாஹ் எச்சரிக்கிறான். இன்பங்கள் நிறைந்த சுவர்க்கத்திலிருந்து, கஷ்டங்களும் சோர்வும் நிறைந்த தங்குமிடத்திற்கு (இவ்வுலகிற்கு) ஆதமை வெளியேற்ற இப்லீஸ் சதி செய்தான். அவரது ஆடையைக் களைந்து, மேலும், அவரிடமிருந்து மறைக்கப்பட்டிருந்த அவருடைய மறைவிடங்களை வெளிப்படச் செய்தான். நிச்சயமாக இது, ஆதம் (அலை) மற்றும் மனிதகுலத்தின் மீது ஷைத்தானுக்கு இருக்கும் ஆழ்ந்த வெறுப்பைக் காட்டுகிறது. இது போன்றதொரு வசனத்தில் அல்லாஹ் கூறினான்,
﴾أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَآءَ مِن دُونِى وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلاً﴿
(என்னை விடுத்து அவனையும் (இப்லீஸையும்) அவனது சந்ததியினரையும் நீங்கள் பாதுகாவலர்களாகவும் உதவியாளர்களாகவும் ஆக்கிக் கொள்கிறீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறார்கள். அநியாயக்காரர்களுக்கு (அல்லாஹ்வுக்குப் பகரமாக ஷைத்தானைத் தேர்ந்தெடுக்கும்) இந்தப் பரிமாற்றம் எவ்வளவு கெட்டதாகும்.)
18:50.