மக்காவில் அருளப்பெற்றது
﴾بِسْمِ اللَّهِ الرَّحْمَـنِ الرَّحِيمِ ﴿
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
﴾كِتَـبٌ أُنزِلَ إِلَيْكَ﴿
(முஹம்மதே!) உம் இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்ற (இந்த) வேதம்,
﴾فَلاَ يَكُن فِى صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ﴿
எனவே இதைப் பற்றி உம் நெஞ்சில் எவ்வித இறுக்கமும் இருக்க வேண்டாம்.
﴾فَاصْبِرْ كَمَا صَبَرَ أُوْلُواْ الْعَزْمِ مِنَ الرُّسُلِ﴿
"உறுதி மிக்க தூதர்கள் பொறுமையாக இருந்தது போல் நீரும் பொறுமையாக இருப்பீராக" (
46:35) என்று அல்லாஹ் கூறினான்.
﴾لِتُنذِرَ بِهِ﴿
இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காக,
﴾وَذِكْرَى لِلْمُؤْمِنِينَ﴿
இன்னும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டலாகவும் (இதை அருளினோம்).
﴾اتَّبِعُواْ مَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ﴿
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதைப் பின்பற்றுங்கள்.
﴾وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَآءَ﴿
அவனையன்றி (வேறு) பாதுகாவலர்களைப் பின்பற்றாதீர்கள்.
﴾قَلِيلاً مَّا تَذَكَّرُونَ﴿
நீங்கள் மிகக் குறைவாகவே நினைவு கூருகிறீர்கள்!
﴾وَمَآ أَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِينَ ﴿
"நீர் எவ்வளவு ஆர்வம் கொண்டாலும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்" (
12:103).
﴾وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِى الاٌّرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ﴿
"பூமியிலுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு நீர் கீழ்ப்படிந்தால், அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி தவறச் செய்து விடுவார்கள்" (
6:116).
﴾وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلاَّ وَهُمْ مُّشْرِكُونَ ﴿
"அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்லை; அவர்கள் இணை வைப்பவர்களாகவே இருக்கின்றனர்" (
12:106).