கைபர்
ஹுதைபியா ஒப்பந்தம் வாயிலாக மதினாவில் மீண்டும் சமாதானம் நிலை நாட்டப்பட்டது. ஆனால் வஞ்சகர்களான யூதர்களிருக்கும் வரையிலும் முஸ்லீம்கள் நிம்மதியாக வாழமுடியாது என்பது கந்தர் தரும் படிப்பினையாகும். நூறு குதிரை வீரர்களும் நூற்றி அறுபது காலாட்படையினரும் பெருமானாரின் தலைமையில் மதினாவிலிருந்து கைபரை நோக்கி புறப்பட்டு சென்றனர். இது கைபரில் உள்ள யூதர்களின் கோட்டையாகும்.

Jews Fort

முஸ்லீம்கள் பல நாட்கள் இந்த கோட்டையை முற்றுக்கையிட்டதும் கடுமையான மோதல் ஏற்ப்பட்டது. யூதர்கள் கோட்டைக்கு வெளியே வந்து சரணடைந்தார்கள். கோதுமை வைக்கோலும் களிமண்ணும் சேர்த்து பிசைந்து பேரிச்ச மரக்கட்டைகள் சேர்த்து கட்டப்பட்டதுதான் இந்த மூன்றடுக்க கோட்டையாகும்.


கைபரில் யூதர்களின் வீடுகளின் சிதிலங்கள் இப்பொழுதும் உள்ளன.


கைபரில் உள்ள ஒரு யூததேவாலயம்.

நிராகரிப்போர்களை கொன்றுவிடுவது என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் கொள்கையல்ல. முஸ்லீம்களிடம் சரணடைந்த யூதர்களிடம் பெருமானார் மிக கண்ணியமாக நடந்து கொண்டார்கள். அவர்களிடமிருந்து கைபற்றபட்ட தவ்ராத் வேதத்தின் ஒரு சில பக்கங்கள் அவர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டது. விவசாய நிலங்களின் உரிமையை தங்களுக்கே கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். யூதர்களுடன் சமாதான ஒப்பந்தம் ஏற்ப்படுத்திய பிறகுதான் முஸ்லீம்கள் கைபரைவிட்டு திரும்பி சென்றார்கள்.