தேடல்


37:135
37:135 اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ‏
اِلَّا தவிர عَجُوْزًا ஒரு மூதாட்டியை فِى الْغٰبِرِيْنَ‏ தங்கி விடுபவர்களில் (தங்கிவிடுகின்ற)
37:135. பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.
38:13
38:13 وَثَمُوْدُ وَقَوْمُ لُوْطٍ وَّاَصْحٰبُ لْئَیْكَةِ‌ ؕ اُولٰٓٮِٕكَ الْاَحْزَابُ‏
وَثَمُوْدُ ஸமூதும் وَقَوْمُ மக்களும் لُوْطٍ லூத்துடைய وَّاَصْحٰبُ لْئَیْكَةِ‌ ؕ தோட்டமுடையவர்களும் اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் الْاَحْزَابُ‏ கோஷ்டிகள்
38:13. (இவ்வாறு) “ஸமூது”ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.
50:13
50:13 وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍۙ‏
وَعَادٌ ஆது மக்களும் وَّفِرْعَوْنُ ஃபிர்அவ்னும் وَاِخْوَانُ சகோதரர்களும் لُوْطٍۙ‏ லூத்துடைய
50:13. “ஆது” (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).
53:53
53:53 وَالْمُؤْتَفِكَةَ اَهْوٰىۙ‏
وَالْمُؤْتَفِكَةَ இன்னும் தலைகீழாக புரட்டப்பட்ட சமுதாயத்தை اَهْوٰىۙ‏ அவன்தான் கவிழ்த்தான்
53:53. அன்றியும், அவனே (லூத் சமூகத்தார் வாழ்ந்திருந்த) ஊர்களான முஃதஃபிகாவையும் அழித்தான்.
54:33
54:33 كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ ۢ بِالنُّذُرِ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَوْمُ மக்களும் لُوْطٍ ۢ லூத்துடைய بِالنُّذُرِ‏ எச்சரிக்கையை
54:33. லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.
54:34
54:34 اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ‌ؕ نَّجَّيْنٰهُمْ بِسَحَرٍۙ‏
اِنَّاۤ நிச்சயமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது حَاصِبًا கல் மழையை اِلَّاۤ اٰلَ لُوْطٍ‌ؕ லூத்துடைய குடும்பத்தார்களைத் தவிர نَّجَّيْنٰهُمْ அவர்களைப் பாதுகாத்தோம் بِسَحَرٍۙ‏ அதிகாலையில்
54:34. லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்; விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.
66:10
66:10 ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّ امْرَاَتَ لُوْطٍ‌ ؕ كَانَـتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَـيْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَيْــٴًــا وَّقِيْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِيْنَ‏
ضَرَبَ விவரிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் مَثَلًا ஓர் உதாரணமாக لِّـلَّذِيْنَ كَفَرُوا நிராகரித்தவர்களுக்கு امْرَاَتَ மனைவியையும் نُوْحٍ நூஹூடைய وَّ امْرَاَتَ மனைவியையும் لُوْطٍ‌ ؕ லூத்துடைய كَانَـتَا இருவரும் இருந்தனர் تَحْتَ கீழ் عَبْدَيْنِ இரு அடியார்களுக்கு مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் صَالِحَـيْنِ நல்ல(வர்கள்) فَخَانَتٰهُمَا அவ்விருவரும் அவ்விருவருக்கும் மோசடி செய்தனர் فَلَمْ يُغْنِيَا ஆகவே, அவ்விருவரும் தடுக்கவில்லை عَنْهُمَا அவ்விருவரைவிட்டும் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் شَيْــٴًــا எதையும் وَّقِيْلَ கூறப்பட்டது ادْخُلَا நீங்கள் இருவரும் நுழையுங்கள் النَّارَ நரகத்தில் مَعَ الدّٰخِلِيْنَ‏ நுழைபவர்களுடன்
66:10. நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.