1541. ``உன் முஸ்லிம் சகோதரனுடன் சண்டையிடாதே! அவனைக் கேலி செய்யாதே! அவனிடம் உன்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளிக்காதே!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
பலவீனமான அறிவிப்புத் தொடருடன் இது திர்மிதீயில் பதிவிடப்பட்டுள்ளது.
1542. ``உலோபித்தனமும், தீயகுணமும் ஓர் இறைநம்பிக்கையாளனிடம் ஒன்று சேராது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறனார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
பலவீனமான அறிவிப்புத் தொடருடன் இது திர்மிதீயில் பதிவிடப்பட்டுள்ளது.
1543. ``இருவர் ஒருவருக்கொருவர் ஏசிக் கொண்டால் அதன் பாவம் (ஏச) ஆரம்பித்தவரைச் சாரும். இது எதுவரை எனில், அநீதி இழைக்கப்பட்டவர் வரம்பு மீறாதவரை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1544. ``ஒரு முஸ்லிமிற்குத் தீங்கிழைப்பவனுக்கு அல்லாஹ் தீங்கிழைக்கிறான். மேலும், முஸ்லிமைக் கஷ்டத்தில் ஆழ்த்துபவனை அல்லாஹ் கஷ்டத்தில் ஆழ்த்துகிறான்''என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸிர்மா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1545. ``தீய கெட்ட வார்த்தைகள் பேசுபவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்தா(ரலி) அறிவித்தார்.
இதனை ஆதாரப்பூர்வமான அறிவிப்புத் தொடரில் இமாம் திர்மிதீ(ரஹ்) பதிவிட்டுள்ளார்.
1546. ``இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும், அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருக்கமாட்டான்; மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், (சண்டையில்) தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருக்கமாட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்தா(ரலி) அறிவித்தார்.
நூல்: ஹாகிம்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது என்றும், இமாம் தாரகுத்னீ(ரஹ்) இதனை `மவ்கூஃப்' என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
1547. ``இறந்தவர்களை ஏசாதீர்கள். ஏனெனில், அவர்கள் தங்களின் செய்கையின் பால் சென்று விட்டார்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1548. ``புறம் பேசுபவன் சுவர்க்கம் புகமாட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1549. ``தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவரிடமிருந்து அல்லாஹ் தன் தண்டனையைத் தடுத்துக் கொள்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: தப்ரானீ
1550. மேற்கண்ட 1549 வது ஹதீஸிற்குச் சான்றாக இப்னு அபித் துன்யாவில் இப்னு உமர்(ரலி) வாயிலாக ஹதீஸ் உள்ளது.
1551. ``ஏமாற்றுக்காரன், கஞ்சன், தன் பொறுப்பின் உள்ளவர்களுக்குத் தீங்கிழைப்பவன் ஆகிய யாரும் சுவர்க்கம் புக மாட்டார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ பக்கர்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது.
1552. ஒரு கூட்டம் வெறுக்கக் கூடிய நிலையில், அவர்களின் பேச்சைக் கேட்பதற்கு முயல்பவரின் காதில் மறுமை நாளில் (காய்ச்சிய) ஈயம் ஊற்றப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1553. ``மக்களின் குறைகளை விட்டுவிட்டுத் தம் குறைகளைக் காண்பவருக்கு `தூபா' எனும் நிழல் தரும் மரம் (சுவர்க்கத்தில்) உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: பஸ்ஸார்
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1554. ``தன்னைத்தானே பெரியவன் என எண்ணிக்கொண்டும், பெருமையாக பூமியில் நடந்து கொண்டும் இருப்பவன் (மறுமையில்) அவன் மீது கோபமாய் இருக்கும் நிலையில் அல்லாஹ்வைக் சந்திப்பான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: ஹாகிம்
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ளவர்கள் பலமானவர்கள்.
1555. ``அவசரப்படுவது ஷைத்தானின் (செயல்களில்) ஒன்றாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இது `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1556. ``துர்க்குறி என்பது தீயகுணமேயாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இது பலவீனமான அறிவிப்பாகும்.
1557. ``சபிப்பவர்கள் மறுமையில் பரிந்துரைப்பவர்களாகவோ, சாட்சி அளிப்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூதர்தா(ரலி) அறிவிக்கிறார்.
நூல்: முஸ்லிம்
1558. ``தன் முஸ்லிம் சகோதரன் செய்த ஒரு பாவத்திற்காகக் குறை கூறிப்பழிப்பவன் அந்தப் பாவத்தை, தானும் செய்யாதவரை மரணிக்க மாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஹஸன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதன் அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டதாகும்.
1559. ``மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யுரைப்பவனுக்குக் கேடுதான். அவனுக்குக் கேடுதான். அவனுக்கு கேடுதான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என பஹ்ஜ் இப்னு ஹகீம்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இது பலமான ஹதீஸாகும்.
1560. ``நீ யாரைப் பற்றியாவது புறம் பேசினால் அதற்குப் பரிகாரம் அவரிடம் மன்னிப்புக் கேட்பதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: ஹாரிஸ் இப்னு அபீ உஸாமா
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது.