டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 78. ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)
மக்கீ, வசனங்கள்: 40
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
78:1 عَمَّ يَتَسَآءَلُوْنَۚ
عَمَّ எதைப் பற்றி يَتَسَآءَلُوْنَۚ விசாரித்துக் கொள்கிறார்கள்
78:1. 'அம்ம யதஸா-அலூன்
78:1. எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
78:2 عَنِ النَّبَاِ الْعَظِيْمِۙ
عَنِ النَّبَاِ செய்தியைப் பற்றி الْعَظِيْمِۙ மகத்தான(து)
78:2. 'அனின்-னBபா-இல் 'அளீம்
78:2. மகத்தான அச்செய்தியைப் பற்றி,
78:3 الَّذِىْ هُمْ فِيْهِ مُخْتَلِفُوْنَؕ
الَّذِىْ எது هُمْ அவர்கள் فِيْهِ அதில் مُخْتَلِفُوْنَؕ முரண்பட்டவர்கள்
78:3. அல்லதி ஹும் Fபீஹி முக் தலிFபூன்
78:3. அது எத்தகையதென்றால் அதில்தான் அவர்கள் வேறுபட்ட கருத்துக்கள் கொண்டிருக்கிறார்கள்.
78:4 كَلَّا سَيَعْلَمُوْنَۙ
كَلَّا அவ்வாறல்ல سَيَعْلَمُوْنَۙ (விரைவில்) அறிவார்கள்
78:4. கல்லா ஸ யஃலமூன்
78:4. அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
78:5 ثُمَّ كَلَّا سَيَعْلَمُوْنَ
ثُمَّ பிறகு كَلَّا அவ்வாறல்ல سَيَعْلَمُوْنَ (விரைவில்) அறிவார்கள்
78:5. தும்ம கல்லா ஸ யஃலமூன்
78:5. பின்னரும், (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
78:6 اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۙ
اَلَمْ نَجْعَلِ நாம் ஆக்கவில்லையா الْاَرْضَ பூமியை مِهٰدًا ۙ விரிப்பாக
78:6. அலம் னஜ்'அலில் அர்ள மிஹா தா
78:6. நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
78:7 وَّالْجِبَالَ اَوْتَادًا ۙ
وَّالْجِبَالَ இன்னும் மலைகளை اَوْتَادًا ۙ முளைக்கோல்களாக
78:7. வல் ஜிBபால அவ் தாதா
78:7. இன்னும், மலைகளை முடிகளாக (ஆக்கவில்லையா?)
78:8 وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا ۙ
وَّخَلَقْنٰكُمْ இன்னும் உங்களைப் படைத்தோம் اَزْوَاجًا ۙ ஜோடிகளாக
78:8. வ கலக் னாகும் அZஜ்வாஜா
78:8. இன்னும், உங்களை ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.
78:9 وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۙ
وَّجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் نَوْمَكُمْ உங்கள் நித்திரையை سُبَاتًا ۙ ஓய்வாக
78:9. வஜ'அல்ன னவ்மகும் ஸுBபதா
78:9. மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக நாம் ஆக்கினோம்.
78:10 وَّجَعَلْنَا الَّيْلَ لِبَاسًا ۙ
وَّجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் الَّيْلَ இரவை لِبَاسًا ۙ ஆடையாக
78:10. வஜ'அல்னல் லய்ல லிBபஸா
78:10. அன்றியும், இரவை (உங்களுக்கு) ஆடையாக நாம் ஆக்கினோம்.
78:11 وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
وَّجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் النَّهَارَ பகலை مَعَاشًا வாழ்வாக
78:11. வஜ'அல்னன் னஹர ம 'ஆஷா
78:11. மேலும், பகலை உங்கள் வாழ்க்கைக்குரிய (வற்றைத் தேடிக்கொள்ளும்) நேரமாக நாம் ஆக்கினோம்.
78:12 وَّبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ۙ
وَّبَنَيْنَا இன்னும் அமைத்தோம் فَوْقَكُمْ உங்களுக்கு மேல் سَبْعًا ஏழு வானங்களை شِدَادًا ۙ பலமான
78:12. வ Bபனய்னா Fபவ்ககும் ஸBப் 'அன் ஷி தாதா
78:12. உங்களுக்குமேல் பலமான ஏழினை (ஏழு வானங்களை) நாம் உண்டாக்கினோம்.
78:13 وَّ جَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا ۙ
وَّ جَعَلْنَا இன்னும் ஆக்கினோம் سِرَاجًا விளக்கை وَّهَّاجًا ۙ பிரகாசிக்கக்கூடிய
78:13. வஜ'அல்ன ஸிராஜவ் வஹ் ஹாஜா
78:13. ஒளிவீசும் விளக்கை (சூரியனை)யும் (அங்கு) நாம் அமைத்தோம்.
78:14 وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۙ
وَّاَنْزَلْنَا இன்னும் இறக்கினோம் مِنَ الْمُعْصِرٰتِ கார் மேகங்களிலிருந்து مَآءً (மழை) நீரை ثَجَّاجًا ۙ தொடர்ச்சியாக பொழியக்கூடிய
78:14. வ அன்Zஜல்ன மினல் முஃஸிராதி மா-அன் தஜ்-ஜாஜா
78:14. அன்றியும், கார்மேகங்களிலிருந்து அதிகமாகப் பொழியும் (மழை) நீரையும் நாம் இறக்கினோம்.
78:15 لِّـنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۙ
لِّـنُخْرِجَ நாம் உற்பத்தி செய்வதற்காக بِهٖ அதன் மூலம் حَبًّا தானியத்தை وَّنَبَاتًا ۙ இன்னும் தாவரத்தை
78:15. லினுக் ரிஜ Bபிஹீ ஹBப்Bபவ் வன Bபாதா
78:15. அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வளர்ப்பதற்காக.
78:16 وَّجَنّٰتٍ اَلْفَافًا ؕ
وَّجَنّٰتٍ இன்னும் தோட்டங்களை اَلْفَافًا ؕ அடர்த்தியான
78:16. வ ஜன் னாதின் அல்FபFபா
78:16. (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
78:17 اِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيْقَاتًا ۙ
اِنَّ நிச்சயமாக يَوْمَ الْفَصْلِ தீர்ப்பு நாள் كَانَ இருக்கிறது مِيْقَاتًا ۙ (நேரம்) குறிப்பிடப்பட்ட காலமாக
78:17. இன்ன யவ்மல்-Fபஸ்லி கான மீகாதா
78:17. நிச்சயமாக தீர்ப்புக்குரிய நாள், நேரம் குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
78:18 يَّوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ فَتَاْتُوْنَ اَفْوَاجًا ۙ
يَّوْمَ يُنْفَخُ ஊதப் படுகின்ற நாளில் فِى الصُّوْرِ ‘சூர்’ல் فَتَاْتُوْنَ ஆகவே வருவீர்கள் اَفْوَاجًا ۙ கூட்டங்களாக
78:18. யவ்ம யுன் Fபகு Fபிஸ்-ஸூரி Fபதா'தூன அFப்வாஜா
78:18. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணியணியாக வருவீர்கள்.
78:19 وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتْ اَبْوَابًا ۙ
وَّفُتِحَتِ இன்னும் திறக்கப்படும் السَّمَآءُ வானம் فَكَانَتْ அது மாறிவிடும் اَبْوَابًا ۙ வழிகளாக
78:19. வ Fபுதிஹ திஸ் ஸமா-உ Fபகானத் அBப்வாBபா
78:19. இன்னும், வானம் திறக்கப்பட்டுப் பல வாசல்களாக அது ஆகிவிடும்.
78:20 وَّ سُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ؕ
وَّ سُيِّرَتِ இன்னும் அகற்றப்பட்டுவிடும் الْجِبَالُ மலைகள் فَكَانَتْ அது மாறிவிடும் سَرَابًا ؕ கானல் நீராக
78:20. வ ஸுய்யி ராதில் ஜிBபாலு Fப கானத் ஸராBபா
78:20. மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
78:21 اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ۙ
اِنَّ جَهَنَّمَ நிச்சயமாக நரகம் كَانَتْ இருக்கிறது مِرْصَادًا ۙ எதிர் பார்க்கக்கூடியதாக
78:21. இன்ன ஜஹன் னம கானத் மிர்ஸாதா
78:21. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
78:22 لِّلطّٰغِيْنَ مَاٰبًا ۙ
لِّلطّٰغِيْنَ வரம்பு மீறியவர்களை مَاٰبًا ۙ தங்குமிடமாக
78:22. லித் தா கீன ம ஆBபா
78:22. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக.
78:23 لّٰبِثِيْنَ فِيْهَاۤ اَحْقَابًا ۚ
لّٰبِثِيْنَ தங்கக்கூடியவர்களாக فِيْهَاۤ அதில் اَحْقَابًا ۚ நீண்ட காலங்கள்
78:23. லா Bபிதீன Fபீஹா அஹ்காBபா
78:23. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
78:24 لَا يَذُوْقُوْنَ فِيْهَا بَرْدًا وَّلَا شَرَابًا ۙ
لَا يَذُوْقُوْنَ சுவைக்க மாட்டார்கள் فِيْهَا அதில் بَرْدًا குளிர்ச்சியை وَّلَا இன்னும் இல்லை شَرَابًا ۙ ஒரு பானத்தை
78:24. லா ய தூகூன Fபீஹா Bபர் தவ் வலா ஷராBபா
78:24. அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பதையோ சுவைக்கமாட்டார்கள்.
78:25 اِلَّا حَمِيْمًا وَّغَسَّاقًا ۙ
اِلَّا தவிர حَمِيْمًا கொதி நீரை وَّغَسَّاقًا ۙ இன்னும் சீழ் சலத்தை
78:25. இல்லா ஹமீ மவ்-வ கஸ் ஸாகா
78:25. கொதிக்கும் நீரையும், சீழையும் தவிர.
78:26 جَزَآءً وِّفَاقًا ؕ
جَزَآءً கூலியாக وِّفَاقًا ؕ தகுந்த
78:26. ஜZஜா-அவ் வி Fபாகா
78:26. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
78:27 اِنَّهُمْ كَانُوْا لَا يَرْجُوْنَ حِسَابًا ۙ
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் لَا يَرْجُوْنَ ஆதரவு வைக்காதவர்களாக حِسَابًا ۙ விசாரிக்கப்படுவதை
78:27. இன்னஹும் கானு லா யர்ஜூன ஹிஸாBபா
78:27. நிச்சயமாக அவர்கள் (மறுமையின் கேள்வி) கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
78:28 وَّكَذَّبُوْا بِاٰيٰتِنَا كِذَّابًا ؕ
وَّكَذَّبُوْا இன்னும் பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை كِذَّابًا ؕ அதிகமாகப் பொய்ப்பித்தல்
78:28. வ கத்தBபு Bபி ஆயாதினா கித்தாBபா
78:28. அன்றியும், அவர்கள் நம் வசனங்களை மிக்க அதிகமாகப் பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
78:29 وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ كِتٰبًا ۙ
وَكُلَّ شَىْءٍ இன்னும் எல்லாவற்றையும் اَحْصَيْنٰهُ அவற்றைப் பதிவு செய்தோம் كِتٰبًا ۙ எழுதி
78:29. வ குல்ல ஷய்-இன் அஹ்ஸய் னாஹு கிதா Bபா
78:29. நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் அதனைப் பதிவு செய்திருக்கின்றோம்.
78:30 فَذُوْقُوْا فَلَنْ نَّزِيْدَكُمْ اِلَّا عَذَابًا
فَذُوْقُوْا ஆகவே சுவையுங்கள் فَلَنْ نَّزِيْدَ அதிகப்படுத்தவே மாட்டோம் كُمْ உங்களுக்கு اِلَّا தவிர عَذَابًا வேதனையை
78:30. Fப தூகூ Fபலன்-னZஜீ தகும் இல்ல்-லா அதாBபா
78:30. "ஆகவே, சுவையுங்கள்; வேதனையைத் தவிர வேறு எதையும் உங்களுக்கு நாம் அதிகப்படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
78:31 اِنَّ لِلْمُتَّقِيْنَ مَفَازًا ۙ
اِنَّ நிச்சயமாக لِلْمُتَّقِيْنَ அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு مَفَازًا ۙ வெற்றி
78:31. இன்ன லில் முத்த கீன மFபாZஜா
78:31. நிச்சயமாக இறையச்சமுடையவர்களுக்கு வெற்றி இருக்கிறது.
78:32 حَدَآٮِٕقَ وَاَعْنَابًا ۙ
حَدَآٮِٕقَ தோட்டங்கள் وَاَعْنَابًا ۙ இன்னும் திராட்சைகள்
78:32. ஹதா-இக வ அஃனா Bபா
78:32. தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்
78:33 وَّكَوَاعِبَ اَتْرَابًا ۙ
وَّكَوَاعِبَ இன்னும் மார்பு நிமிர்ந்த கன்னிகள் اَتْرَابًا ۙ சம வயதுடைய(வர்கள்)
78:33. வ காவ 'இBப அத் ராBபா
78:33. (மனைவிகளாக - மார்பகங்கள் உயர்ந்த) சமவயதுள்ள கன்னிகளும்.
78:34 وَّكَاْسًا دِهَاقًا ؕ
وَّكَاْسًا இன்னும் கிண்ணம் دِهَاقًا ؕ நிரம்பிய
78:34. வ க'ஸன் தி ஹாகா
78:34. பானம் நிறைந்த கிண்ணங்களும் (இருக்கின்றன).
78:35 لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَـغْوًا وَّلَا كِذّٰبًا ۚ
لَا يَسْمَعُوْنَ செவியுறமாட்டார்கள் فِيْهَا அதில் لَـغْوًا வீண் பேச்சை وَّلَا كِذّٰبًا ۚ இன்னும் பொய்ப்பிப்பதை
78:35. லா யஸ்ம'ஊன Fபிஹா லக் வவ் வலா கித்தாBபா
78:35. அங்கு அவர்கள் வீணானவற்றையும் பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
78:36 جَزَآءً مِّنْ رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۙ
جَزَآءً கூலியாக مِّنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து عَطَآءً கொடையாக حِسَابًا ۙ கணக்கிடப்பட்ட
78:36. ஜZஜா-அம் மிர்-ரBப்Bபிக அதா-அன் ஹிஸாBபா
78:36. (இது) உம்முடைய இறைவனிடமிருந்து (நற்)கூலியாக (அளிக்கப் பெறும்) கணக்குப்படியான நன்கொடையாகும்.
78:37 رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمٰنِ لَا يَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا ۚ
رَّبِّ அதிபதியாகிய السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا இன்னும் அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் الرَّحْمٰنِ பேரருளாளனாகிய لَا மாட்டார்கள் يَمْلِكُوْنَ சக்தி பெற مِنْهُ அவனிடம் خِطَابًا ۚ பேசுவதற்கு
78:37. ரBப்Bபிஸ் ஸமா வாதி வல் அர்ளி வமா Bபய்ன ஹுமர் ரஹ்மானி லா யம் லிகூன மின்ஹு கிதாBபா
78:37. (அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ளவற்றிற்கும் இறைவன்; (அவனே) அளவற்ற அருளாளன்; அவனிடம் பேச அவர்கள் அதிகாரம் பெறமாட்டார்கள்.
78:38 يَوْمَ يَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓٮِٕكَةُ صَفًّا ؕۙ لَّا يَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا
يَوْمَ நாளில் يَقُوْمُ நிற்கின்ற الرُّوْحُ ஜிப்ரீல் وَالْمَلٰٓٮِٕكَةُ இன்னும் வானவர்கள் صَفًّا ؕۙ வரிசையாக لَّا يَتَكَلَّمُوْنَ பேசமாட்டார்கள் اِلَّا தவிர مَنْ எவர் اَذِنَ அனுமதித்தான் لَهُ அவருக்கு الرَّحْمٰنُ பேரருளாளன் وَقَالَ இன்னும் கூறுவார் صَوَابًا சரியானதையே
78:38. யவ்ம யகூ முர் ரூஹு வல் மலா-இகது ஸFப்-Fபல் லா யதகல்லமூன இல்ல்-லா மன் அதின லஹுர் ரஹ்மானு வ கால ஸவாBபா
78:38. (ஜிப்ரீலாகிய) ரூஹும், வானவர்களும் அணிவகுத்து நிற்கும் நாளில், அளவற்ற அருளாளன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவரைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள்; அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
78:39 ذٰلِكَ الْيَوْمُ الْحَـقُّ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ مَاٰبًا
ذٰلِكَ அதுதான் الْيَوْمُ நாள் الْحَـقُّ ۚ உண்மையான فَمَنْ ஆகவே யார் شَآءَ நாடுவாரோ اتَّخَذَ ஆக்கிக்கொள்வார் اِلٰى رَبِّهٖ தம் இறைவனருகில் مَاٰبًا தங்குமிடத்தை
78:39. தாலிகல் யவ்முல் ஹக்கு Fபமன் ஷா-அத் த காத இலா ரBப்Bபிஹி மஆBபா
78:39. அந்நாள் சத்தியமானது; ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் மீளுமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக!
78:40 اِنَّاۤ اَنْذَرْنٰـكُمْ عَذَابًا قَرِيْبًا ۖۚ يَّوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدٰهُ وَيَقُوْلُ الْـكٰفِرُ يٰلَيْتَنِىْ كُنْتُ تُرٰبًا
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْذَرْنٰـكُمْ உங்களை எச்சரித்தோம் عَذَابًا ஒரு வேதனையைப் பற்றி قَرِيْبًا ۖۚ சமீபமான يَّوْمَ நாளில் يَنْظُرُ பார்க்கின்ற الْمَرْءُ மனிதன் مَا قَدَّمَتْ முற்படுத்தியவற்றை يَدٰهُ தனது இரு கரங்கள் وَيَقُوْلُ இன்னும் கூறுவான் الْـكٰفِرُ நிராகரிப்பாளன் يٰلَيْتَنِىْ كُنْتُ நான் ஆகவேண்டுமே تُرٰبًا மண்ணாக
78:40. இன் னா அன்தர் னாகும் அதாBபன் கரீBபய்ய்-யவ்ம யன் ளுருல் மர்ர்-உ மா கத்தமத் யதாஹு வ ய கூலுல்-காFபிரு யா லய் தனீ குன்து துராBபா
78:40. நிச்சயமாக, நெருங்கிவரும் வேதனையைப் பற்றி உங்களுக்கு நாம் எச்சரிக்கை செய்கிறோம்; மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை (அமல்களை) அந்நாளில் கண்டு கொள்வான்; மேலும், நிராகரிப்பவன் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.