110. ஸூரத்துந் நஸ்ர் (உதவி)

மதனீ, வசனங்கள்: 3

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُ ۟ۙ
اِذَا جَآءَவந்தால்نَصْرُஉதவிاللّٰهِஅல்லாஹ்வுடையوَالْفَتْحُۙ‏இன்னும் வெற்றி
இத ஜா'அ னஸ்ருல்-லாஹி வல்Fபத்ஹ்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து,
IFT
அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வந்து விடும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவி மற்றும் (மக்காவின்) வெற்றி வரும்போது-
Saheeh International
When the victory of Allah has come and the conquest,
وَرَاَیْتَ النَّاسَ یَدْخُلُوْنَ فِیْ دِیْنِ اللّٰهِ اَفْوَاجًا ۟ۙ
وَرَاَيْتَஇன்னும் நீர் பார்த்தால்النَّاسَமக்களைيَدْخُلُوْنَநுழைபவர்களாகفِىْ دِيْنِமார்க்கத்தில்اللّٰهِஅல்லாஹ்வுடையاَفْوَاجًا ۙ‏கூட்டம் கூட்டமாக
வ ர-அய்தன் னாஸ யத்குலூன Fபீ தீனில் லாஹி அFப்வஜா
முஹம்மது ஜான்
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீர் கண்டால்,
IFT
மேலும் (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் திரள்திரளாக நுழைவதை நீர் காணும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மனிதர்களை – அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டங்கூட்டமாக பிரவேசிப்பவர்களாக (நபியே) நீர் காணும்போது-
Saheeh International
And you see the people entering into the religion of Allah in multitudes,
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا ۟۠
فَسَبِّحْதுதித்து தூய்மைப்படுத்துவீராகبِحَمْدِபுகழைرَبِّكَஉம் இறைவனின்وَاسْتَغْفِرْهُ‌ ؔؕஇன்னும் அவனிடம் மன்னிப்புக் கோருவீராகاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கிறான்تَوَّابًا‏மகா மன்னிப்பாளனாக
FபஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக வஸ்தக்Fபிர்ஹ், இன்னஹூ கான தவ்வாBபா
முஹம்மது ஜான்
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலை(யும்) அங்கீகரிப்பவனாக இருக்கிறான்.
IFT
நீர் உம் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதிப்பீராக! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன், பாவமன்னிப்புக் கோரிக்கையை பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது, (அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு) உமதிரட்சகனின் புகழைக் கொண்டு துதி செய்வீராக! மேலும், அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக! நிச்சயமாக அவன் தவ்பாவை (பாவமன்னிப்புக் கோருதலை) மிகவும் ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான்.
Saheeh International
Then exalt [Him] with praise of your Lord and ask forgiveness of Him. Indeed, He is ever Accepting of Repentance.