33. ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்)

மதனீ, வசனங்கள்: 73

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
یٰۤاَیُّهَا النَّبِیُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الْكٰفِرِیْنَ وَالْمُنٰفِقِیْنَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟ۙ
يٰۤـاَيُّهَا النَّبِىُّநபியே!اتَّقِபயந்துகொள்ளுங்கள்!اللّٰهَஅல்லாஹ்வைوَلَا تُطِعِகீழ்ப்படியாதீர்الْكٰفِرِيْنَநிராகரிப்பவர்களுக்கும்وَالْمُنٰفِقِيْنَ‌ ؕநயவஞ்சகர்களுக்கும்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கின்றான்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا ۙ‏மகா ஞானவானாக
யா அய்யுஹன் னBபிய்யுத் தகில் லாஹ வலா துதி'இல் காFபிரீன வல் முனாFபிகீன்; இன்னல் லாஹ கான 'அலீமன் ஹகீமா
முஹம்மது ஜான்
நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! காஃபிர்களுக்கும், முனாஃபிக்களுக்கும் கீழ்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
நபியே! நீர் அல்லாஹ்வுக்கே பயப்படுவீராக. நிராகரிப்பவர்களுக்கும், வஞ்சகர்களுக்கும் (பயந்து அவர்களுக்கு) கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனாக,ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
நபியே! அல்லாஹ்வுக்கு அஞ்சும்! மேலும், நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். உண்மையில், அல்லாஹ்தான் நன்கு அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! நீர் அல்லாஹ்வை பயந்துகொள்வீராக! நிராகரிப்போருக்கும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளுக்கும் கீழ்ப்படியாதிருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) நன்கறிகிறவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
O Prophet, fear Allah and do not obey the disbelievers and the hypocrites. Indeed, Allah is ever Knowing and Wise.
وَّاتَّبِعْ مَا یُوْحٰۤی اِلَیْكَ مِنْ رَّبِّكَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟ۙ
وَّاتَّبِعْஇன்னும் பின்பற்றுவீராகمَا يُوْحٰٓىவஹீ அறிவிக்கப்படுவதைاِلَيْكَஉமக்குمِنْ رَّبِّكَ‌ ؕஉமது இறைவனிடமிருந்துاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கின்றான்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்வதைخَبِيْرًا ۙ‏ஆழ்ந்தறிந்தவனாக
வத்தBபிஃ மா யூஹா இலய்க மிர் ரBப்Bபிக்; இன்னல் லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
முஹம்மது ஜான்
இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக. நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாகவே இருக்கிறான்.
IFT
உம் இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுகின்ற விஷயத்தை நீர் பின்பற்றும்! நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) உமதிரட்சகனிடமிருந்து உமக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக! நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவனாக இருக்கிறான்.
Saheeh International
And follow that which is revealed to you from your Lord. Indeed Allah is ever, of what you do, Aware.
وَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
وَّتَوَكَّلْஇன்னும் சார்ந்திருப்பீராக!عَلَى اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வைوَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِيْلًا‏பொறுப்பாளனாக இருக்க
வ தவக்கல் 'அலல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி வகீலா
முஹம்மது ஜான்
(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைப்பீராக. அல்லாஹ்வே (உமக்குப்) பொறுப்பேற்றுக்கொள்ள போதுமானவன்.
IFT
அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! பொறுப்பேற்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நீர் அல்லாஹ்வின் மீது (அவனிடமே சகல பொறுப்பையும் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பீராக! (உமது காரியங்களுக்குப்) பொறுப்பேற்றுக் கொள்கிறவனாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்.
Saheeh International
And rely upon Allah; and sufficient is Allah as Disposer of affairs.
مَا جَعَلَ اللّٰهُ لِرَجُلٍ مِّنْ قَلْبَیْنِ فِیْ جَوْفِهٖ ۚ وَمَا جَعَلَ اَزْوَاجَكُمُ الّٰٓـِٔیْ تُظٰهِرُوْنَ مِنْهُنَّ اُمَّهٰتِكُمْ ۚ وَمَا جَعَلَ اَدْعِیَآءَكُمْ اَبْنَآءَكُمْ ؕ ذٰلِكُمْ قَوْلُكُمْ بِاَفْوَاهِكُمْ ؕ وَاللّٰهُ یَقُوْلُ الْحَقَّ وَهُوَ یَهْدِی السَّبِیْلَ ۟
مَا جَعَلَஅமைக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்لِرَجُلٍஒரு மனிதனுக்குمِّنْ قَلْبَيْنِஇரு உள்ளங்களைفِىْ جَوْفِهٖ ۚஅவனது உடலில்وَمَا جَعَلَஅவன்ஆக்கவில்லைاَزْوَاجَكُمُஉங்கள்மனைவிகளைالّٰٓـئِْஎவர்கள்تُظٰهِرُوْنَளிஹார்செய்கின்றீர்கள்مِنْهُنَّஅவர்களில்اُمَّهٰتِكُمْ ۚஉங்கள் தாய்மார்களாகوَمَا جَعَلَஅவன்ஆக்கவில்லைاَدْعِيَآءَவளர்ப்புபிள்ளைகளைكُمْஉங்கள்اَبْنَآءَكُمْ‌ ؕஉங்கள் பிள்ளைகளாகذٰ لِكُمْஅதுقَوْلُـكُمْநீங்கள் கூறுவதாகும்بِاَ فْوَاهِكُمْ‌ ؕஉங்கள் வாய்களால்وَاللّٰهُஅல்லாஹ்يَقُوْلُகூறுகின்றான்الْحَقَّஉண்மையைوَهُوَஅவன்தான்يَهْدِىவழிகாட்டுகின்றான்السَّبِيْلَ‏நல்ல பாதைக்கு
மா ஜ'அலல் லாஹு லிரஜுலிம் மின் கல்Bபய்னி Fபீ ஜவ்Fபிஹ்; வமா ஜ'அல அZஜ்வாஜகுமுல் லா'ஈ துளாஹிரூன மின்ஹுன்ன உம்மஹாதிகும்; வமா ஜ'அல அத்'இயா'அகும் அBப்னா'அகும்; தாலிகும் கவ்லுகும் Bபி அFப்வா ஹிகும் வல்லாஹு யகூலுல் ஹக்க வ ஹுவ யஹ்திஸ் ஸBபீல்
முஹம்மது ஜான்
எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எம்மனிதருடைய நெஞ்சிலும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை. (ஆகவே, இயற்கை முறைப்படி மனிதர்களுக்குள் ஏற்படும் சம்பந்தங்களே உண்மையான சம்பந்தமாகும். வாயால் கூறும் சம்பந்த முறைகள் எல்லாம் உண்மையாகாது. ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் விவாகரத்தைக் கருதி) உங்கள் மனைவிகளில் எவரையும் நீங்கள் உங்கள் தாய் என்று கூறுவதனால் அல்லாஹ் அவர்களை உங்கள் (உண்மைத்) தாயாக்கிவிட மாட்டான். (அவ்வாறே உங்களுக்குப் பிறக்காத எவரையும் உங்கள் பிள்ளை என்றும்) நீங்கள் தத்தெடுத்துக் கொள்வதனால் அவர்களை உங்கள் (உண்மைச்) சந்ததிகளாக்கிவிட மாட்டான். இவை அனைத்தும் உங்கள் வாய்களால் கூறும் வெறும் வார்த்தைகளே (தவிர. உண்மையல்ல). அல்லாஹ் உண்மையையே கூறி, அவன் உங்களுக்கு நேரான வழியை அறிவிக்கிறான்.
IFT
அல்லாஹ் எந்த மனிதனுள்ளும் இரு இதயங்களை அமைத்திடவில்லை, நீங்கள் “ளிஹார்”* செய்கின்ற உங்கள் மனைவிகளை உங்களுடைய அன்னையராய் அவன் ஆக்கவு மில்லை. மேலும், அவன் உங்களுடைய வளர்ப்பு மகன்களை உங்களின் சொந்த மகன்களாய் ஆக்கவுமில்லை. இவை நீங்களே உங்கள் வாய்களிலிருந்து வெளிப்படுத்தும் வெறும் வார்த்தைகளாகும். ஆனால், அல்லாஹ் சத்தியத்(தின் அடிப்படையிலான)தைக் கூறுகின்றான். மேலும்; அவனே நேரிய வழியின் பக்கம் வழி காட்டுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எம்மனிதனுக்கும் அவனுடைய உட்புறத்தில் இரண்டு இதயங்களை அல்லாஹ் அமைக்கவில்லை, இன்னும், உங்கள் மனைவியரை_அவர்களிலிருந்து (தன் மனைவியைத் தன் தாய் போன்றவள் என்று கூறி) உங்களுடைய தாய்மார்களுக்கு ஒப்பாகக் கூறுகிறவர்களை_ உங்களுடைய (உண்மைத்) தாய்மார்களாகவும் அவன் ஆக்கவில்லை. (அவ்வாறே) உங்களுடைய வளர்ப்புப் புதல்வர்களாகவும் அவன் ஆக்கவில்லை. இவை (யாவும்), உங்கள் வாய்களால் கூறும் உங்கள் வார்த்தைகளே (தவிர உண்மையல்ல.) மேலும், அல்லாஹ் உண்மையைக் கூறுகிறான், அவனே (நேர்) வழியையும் காட்டுகிறான்.
Saheeh International
Allah has not made for a man two hearts in his interior. And He has not made your wives whom you declare unlawful your mothers. And He has not made your claimed [i.e., adopted] sons your [true] sons. That is [merely] your saying by your mouths, but Allah says the truth, and He guides to the [right] way.
اُدْعُوْهُمْ لِاٰبَآىِٕهِمْ هُوَ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ ۚ فَاِنْ لَّمْ تَعْلَمُوْۤا اٰبَآءَهُمْ فَاِخْوَانُكُمْ فِی الدِّیْنِ وَمَوَالِیْكُمْ ؕ وَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ فِیْمَاۤ اَخْطَاْتُمْ بِهٖ ۙ وَلٰكِنْ مَّا تَعَمَّدَتْ قُلُوْبُكُمْ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
اُدْعُوْஅழையுங்கள்!هُمْஅவர்களைلِاٰبَآٮِٕهِمْஅவர்களது தந்தைகளுடன் (சேர்த்தே)هُوَஅதுதான்اَقْسَطُமிக நீதமானதுعِنْدَ اللّٰهِ‌ ۚஅல்லாஹ்விடம்فَاِنْ لَّمْ تَعْلَمُوْۤاநீங்கள் அறியவில்லை என்றால்اٰبَآءَதந்தைகளைهُمْஅவர்களின்فَاِخْوَانُكُمْஉங்கள் சகோதரர்கள்فِى الدِّيْنِமார்க்கத்தில்وَمَوَالِيْكُمْ‌ؕஇன்னும் உங்கள் உதவியாளர்கள்وَ لَيْسَஇல்லைعَلَيْكُمْஉங்கள் மீதுجُنَاحٌகுற்றம்فِيْمَاۤஎதில்اَخْطَاْ تُمْநீங்கள் தவறு செய்தீர்களோبِهٖۙஅதில்وَلٰكِنْஎன்றாலும்مَّاஎதைتَعَمَّدَتْவேண்டுமென்று செய்ததுقُلُوْبُكُمْ‌ ؕஉங்கள் உள்ளங்கள்وَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏மகா கருணையாளனாக
உத்'ஊஹும் லி ஆBபா'இஹிம் ஹுவ அக்ஸது 'இன்தல் லாஹ்; Fப இல்லம் தஃலமூ ஆBபா'அஹும் Fப இக்வானுகும் Fபித் தீனி வ மவாலீகும்; வ லய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் Fபீமா அக்தாதும் Bபிஹீ வ லாகிம் மா த'அம்மதத் குலூBபுகும்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கிறது. அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்கள் மார்க்க சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க நண்பர்களாகவும் இருக்கின்றனர். (ஆகவே, அவர்களுடைய வயதுக்குத்தக்க முறையில் அவர்களை சகோதரர் என்றோ அல்லது நண்பரென்றோ அழையுங்கள். இவ்விஷயத்தில் இதற்கு முன்னர்) நீங்கள் ஏதும் தவறிழைத்திருந்தால் அதைப் பற்றி உங்கள் மீது குற்றமில்லை. (எனினும், இதன் பின்னர்) வேண்டுமென்றே உங்கள் மனமார கூறினாலே தவிர (அதுதான் உங்கள் மீது குற்றமாகும்). அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மகா கருணை உடையவனாக இருக்கிறான்.
IFT
வளர்ப்பு மகன்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்து அழையுங்கள். இது அல்லாஹ்விடம் மிக்க நீதமானதாகும். ஆனால் அவர்களுடைய தந்தையர் யார் என்று நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுடைய மார்க்கம் சார்ந்த சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கின்றார்கள். தெரியாமல் நீங்கள் ஏதேனும் பேசிவிட்டால், அதற்காக உங்கள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஆயினும், மனப்பூர்வமாக நாடி நீங்கள் கூறினால் அது நிச்சயம் குற்றமாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீங்கள் (வளர்த்த) அவர்களை, அவர்களுடைய தந்தைகளுக்கே (அவர்களின் பெயர்களைக் கூறியே) அழையுங்கள், அதுதான் அல்லாஹ்விடத்தில் மிக நீதமாகும், ஆனால், அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியவில்லையாயின், அப்பொழுது மார்க்கத்தில் உங்களுடைய சகோதரர்களாகவும், உங்கள் சிநேகிதர்களாகவும் இருக்கின்றனர், (இதற்கு முன்னர்) எதில் நீங்கள் தவறுசெய்தீர்களோ (அதைப் பற்றி) உங்கள் மீது எவ்வித குற்றமுமில்லை, எனினும், உங்கள் உள்ளங்கள் வேண்டுமென்று எண்ணுவதே (குற்றமாகும்), மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
Call them by [the names of] their fathers; it is more just in the sight of Allah. But if you do not know their fathers - then they are [still] your brothers in religion and those entrusted to you. And there is no blame upon you for that in which you have erred but [only for] what your hearts intended. And ever is Allah Forgiving and Merciful.
اَلنَّبِیُّ اَوْلٰی بِالْمُؤْمِنِیْنَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰی بِبَعْضٍ فِیْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِیْنَ وَالْمُهٰجِرِیْنَ اِلَّاۤ اَنْ تَفْعَلُوْۤا اِلٰۤی اَوْلِیٰٓىِٕكُمْ مَّعْرُوْفًا ؕ كَانَ ذٰلِكَ فِی الْكِتٰبِ مَسْطُوْرًا ۟
اَلنَّبِىُّநபிதான்اَوْلٰىமிக உரிமையாளர்بِالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குمِنْ اَنْفُسِهِمْ‌அவர்களின் ஆன்மாக்களைவிடوَاَزْوَاجُهٗۤஇன்னும் அவருடைய மனைவிமார்கள்اُمَّهٰتُهُمْ‌ ؕஅவர்களுக்கு தாய்மார்கள்وَاُولُوا الْاَرْحَامِஇன்னும் இரத்தபந்தங்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلٰىஉரிமையுள்ளவர்கள்بِبَعْضٍசிலருக்குفِىْ كِتٰبِவேதத்தின் படிاللّٰهِஅல்லாஹ்வின்مِنَ الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களை(யும்) விடوَالْمُهٰجِرِيْنَமுஹாஜிர்களையும்اِلَّاۤதவிரاَنْ تَفْعَلُوْۤاநீங்கள்ஏதும்செய்தால்اِلٰٓى اَوْلِيٰٓٮِٕكُمْஉங்கள் பொறுப்பாளர்களுக்குمَّعْرُوْفًا‌ ؕஒரு நன்மையைكَانَஇருக்கின்றதுذٰ لِكَஇதுفِى الْكِتٰبِவேதத்தில்مَسْطُوْرًا‏எழுதப்பட்டதாக
அன்-னBபிய்யு அவ்லா Bபில் மு'மினீன மின் அன்Fபுஸிஹிம் வ அZஜ்வாஜுஹூ உம்மஹாதுஹும் வ உலுல் அர்ஹாமி Bபஃளுஹும் அவ்லா BபிBபஃளின் Fபீ கிதாBபில் லாஹி மினல் மு'மீனீன வல் முஹாஜிரீன இல்லா அன் தFப்'அலூ இலா அவ்லியா'இகும் மஃரூFபா; கான தாலிக Fபில் கிதாBபி மஸ்தூரா
முஹம்மது ஜான்
இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நம் தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள். (நம்பிக்கை கொண்ட ஒருவருடைய சொத்தை அடைய) மற்ற நம்பிக்கையாளர்களை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களைவிடவும், (நம்பிக்கையாளர்களான) அவருடைய சொந்த உறவினர்கள்தான் அல்லாஹ்வுடைய இவ்வேதத்திலுள்ளபடி உரிமையுடையவர்களாக ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்கே அவர்களுடைய பங்கிற்கேற்ப பொருளைப்பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.) எனினும், உங்கள் நண்பர்களில் எவருக்கும் நீங்கள் (ஏதும் கொடுத்து) நன்றி செய்யக்கருதினால் (நீங்கள் ஏதும் கொடுக்கலாம்.) இவ்வாறே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
IFT
திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார். மேலும், நபியின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராவர். ஆயினும், அல்லாஹ்வின் வேதத்தின்படி ஏனைய பொது முஸ்லிம்களை விடவும், ஹிஜ்ரத்* செய்து வந்தவர்களை விடவும் இரத்தபந்த உறவினர்கள்தாம் ஒருவர் மற்றவருக்கு உதவி புரிவதில் அதிக உரிமையுடையவர்கள் ஆவர். ஆயினும், உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை (செய்ய விரும்பினால்) செய்துகொள்ளலாம். இந்த விதி இறைவேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளுக்கு, அவர்களுடைய உயிர்களைவிட இந்த நபி மிக முன்னுரிமைக்குரியவராவார்; இன்னும், அவருடைய மனைவியர்கள் அவர்களுடைய தாய்மார்களாவார்கள்; மேலும், விசுவாசிகளை விடவும், ஹிஜ்ரத் செய்தவர்களை விடவும் சொந்தபந்துக்களே அவர்களில் சிலர் சிலரைவிட அல்லாஹ்வுடைய வேதத்திலுள்ள பிரகாரம் (ஒரு முஸ்லிமுடைய சொத்தையடைய) மிக உரியவர்களாகவர்; (என்றாலும்) உங்கள் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு நன்மையைச் செய்ய நாடினால் தவிர (அவர்களுக்கு உங்கள் விருப்பப்படி செய்ய உங்களுக்கு அனுமதியுண்டு). இது வேதத்தில் எழுதப்பட்டதாக இருக்கிறது.
Saheeh International
The Prophet is more worthy of the believers than themselves, and his wives are [in the position of] their mothers. And those of [blood] relationship are more entitled [to inheritance] in the decree of Allah than the [other] believers and the emigrants, except that you may do to your close associates a kindness [through bequest]. That was in the Book inscribed.
وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِیّٖنَ مِیْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ۪ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟ۙ
وَاِذْ اَخَذْنَاநாம் வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராகمِنَ النَّبِيّٖنَஎல்லா நபிமார்களிடமும்مِيْثَاقَهُمْஅவர்களின் ஒப்பந்தத்தைوَمِنْكَஉம்மிடமும்وَمِنْ نُّوْحٍஇன்னும் நூஹிடம்وَّاِبْرٰهِيْمَஇன்னும் இப்ராஹீம்وَمُوْسٰىஇன்னும் மூஸாوَعِيْسَىஇன்னும் ஈஸாابْنِமகன்مَرْيَمَமர்யமின்وَاَخَذْنَاஇன்னும் நாம் வாங்கினோம்مِنْهُمْஅவர்களிடம்مِّیْثَاقًاஒப்பந்தத்தைغَلِيْظًا ۙ‏உறுதியான
வ இத் அகத்னா மினன் னBபிய்யீன மீதாகஹும் வ மின்க வ மின் னூஹி(ன்)வ் வ இBப்ராஹீம வ மூஸா வ ஈஸBப்-னி-மர்யம வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
முஹம்மது ஜான்
(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நம் தூதை எடுத்துரைக்கும்படி பொதுவாக) நபிமார்களிடமும் (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கியதை நினைவு கூர்வீராக, மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்திருக்கிறோம்.
IFT
மேலும் (நபியே!) எல்லா நபிமார்களிடமிருந்தும் என்ன வாக்குறுதியை நாம் வாங்கினோமோ அதனை நீர் நினைவு கூரும்: உம்மிடமிருந்தும், மேலும் நூஹ், இப்ராஹீம், மூஸா மற்றும் மர்யத்தின் குமாரர் ஈஸா ஆகியோரிடமிருந்தும் (நாம் வாக்குறுதி வாங்கினோம்). அனைவரிடமிருந்தும் நாம் வலு வான வாக்குறுதி வாங்கியிருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நபிமார்களிடமிருந்தும்_உம்மிடமிருந்தும், நூஹிடமிருந்தும் இன்னும், இப்றாஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸா ஆகியோரிடமிருந்தும் அவர்களின் உறுதிமொழியையே நாம் எடுத்த சமயத்தில்_அவர்களிடமிருந்து மிக்க உறுதியான உறுதிமொழியையே நாம் எடுத்தோம் (என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்துவீராக! ஏனெனில்.)
Saheeh International
And [mention, O Muhammad], when We took from the prophets their covenant and from you and from Noah and Abraham and Moses and Jesus, the son of Mary; and We took from them a solemn covenant
لِّیَسْـَٔلَ الصّٰدِقِیْنَ عَنْ صِدْقِهِمْ ۚ وَاَعَدَّ لِلْكٰفِرِیْنَ عَذَابًا اَلِیْمًا ۟۠
لِّيَسْئَلَவிசாரிப்பதற்காகالصّٰدِقِيْنَஉண்மையாளர்களைعَنْ صِدْقِهِمْ‌ۚஅவர்களின் உண்மையைப் பற்றிوَاَعَدَّஏற்படுத்திஇருக்கிறான்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குعَذَابًاதண்டனையைاَ لِيْمًا‏வலிமிகுந்த(து)
லியஸ்'அலஸ் ஸாதிகீன 'அன் ஸித்கிஹிம்; வ அ'அத்த லில்கா Fபிரீன 'அதாBபன் அலீமா
முஹம்மது ஜான்
எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையை பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.  
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, உண்மை சொல்லும் (தூதர்களாகிய) அவர்களிடம், அவர்கள் கூறிய (தூதின்) உண்மைகளைப் பற்றி (அல்லாஹ்) அவர்களையும் கேள்வி (கணக்குக்) கேட்பான். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
உண்மையாளர்களிடம் அவர்களின் உண்மை குறித்து (அவர்களின் இறைவன்) விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக! மேலும், நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார் செய்தே வைத்திருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தூதர்களான) உண்மையாளர்களிடம், அவர்களுடைய (தூதின்) உண்மையைப் பற்றி அவன் கேட்பதற்காக (இவ்வாறு உறுதி மொழி எடுத்தான்), நிராகரித்தோர்க்குத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார் செய்தும் வைத்திருக்கிறான்.
Saheeh International
That He may question the truthful about their truth. And He has prepared for the disbelievers a painful punishment.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ جَآءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا ؕ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرًا ۟ۚ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களேاذْكُرُوْاநினைத்துப் பாருங்கள்نِعْمَةَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْஉங்கள் மீதுள்ளاِذْ جَآءَتْكُمْஉங்களிடம்வந்தபோதுجُنُوْدٌபல ராணுவங்கள்فَاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்عَلَيْهِمْஅவர்களுக்கு எதிராகرِيْحًاகாற்றை(யும்)وَّجُنُوْدًاராணுவங்களையும்لَّمْ تَرَوْهَا‌ ؕநீங்கள் பார்க்கவில்லை/ அவர்களைوَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்வதைبَصِيْرًا ۚ‏உற்று நோக்கியவனாக
யா அய்யுஹல் லதீன ஆமனுத் குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் இத் ஜா'அத்கும் ஜுனூதுன் Fப அர்ஸல்னா 'அலய்ஹிம் ரீஹ(ன்)வ் வ ஜுனூதல் லம் தரவ்ஹா; வ கானல் லாஹு Bபிமா தஃமலூன Bபஸீரா
முஹம்மது ஜான்
முஃமின்களே! உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள்மீது (எதிரிகளின்) படைகள் (அணியணியாக) வந்த சமயத்தில் (புயல்) காற்றையும் உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். (அச்சமயம்) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
IFT
நம்பிக்கையாளர்களே! (அண்மையில்) அல்லாஹ் உங்களுக்குச் செய்திருக்கின்ற பேருதவியை நினைவுகூருங்கள்: எதிரிப்படையினர் உங்களைத் தாக்க வந்தபோது, நாம் அவர்கள் மீது ஒரு கடும் புயல்காற்றை ஏவினோம். உங்கள் கண்களுக்குத் தென்படாத படைகளையும் அனுப்பினோம். அப்போது நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள், உங்கள் மீது (எதிரிகளின்) படைகள் வந்த சமயத்தில் (புயற்) காற்றையும், நீங்கள் அதைப்பார்க்கவில்லையே அத்தகைய படைகளையும் அவர்கள் மீது நாம் அனுப்பி வைத்தோம், மேலும், நீங்கள் செய்பவகளை அல்லாஹ் பார்க்கக்கூடியவனாக இருக்கிறான்.
Saheeh International
O you who have believed, remember the favor of Allah upon you when armies came to [attack] you and We sent upon them a wind and armies [of angels] you did not see. And ever is Allah, of what you do, Seeing.
اِذْ جَآءُوْكُمْ مِّنْ فَوْقِكُمْ وَمِنْ اَسْفَلَ مِنْكُمْ وَاِذْ زَاغَتِ الْاَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَنَاجِرَ وَتَظُنُّوْنَ بِاللّٰهِ الظُّنُوْنَا ۟
اِذْ جَآءُوْஅவர்கள் வந்த சமயத்தில்كُمْஉங்களிடம்مِّنْ فَوْقِكُمْஉங்களுக்கு மேல் புறத்திலிருந்(தும்)وَمِنْ اَسْفَلَகீழ்ப்புறத்திலிருந்தும்مِنْكُمْஉங்களுக்குوَاِذْஇன்னும் சமயத்தில்زَاغَتِசொருகினالْاَبْصَارُபார்வைகள்وَبَلَغَتِஇன்னும் எட்டினالْقُلُوْبُஉள்ளங்கள்الْحَـنَـاجِرَதொண்டைகளுக்குوَتَظُنُّوْنَநீங்கள் எண்ணினீர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுالظُّنُوْنَا ؕ‏பல எண்ணங்களை
இத் ஜா'ஊகும் மின் Fபவ்கிகும் வ மின் அஸ்Fபல மின்கும் வ இத் Zஜாகதில் அBப்ஸாரு வ Bபலகதில் குலூBபுல் ஹனாஜிர வ தளுன்னூன Bபில்லாஹிள் ளுனூனா
முஹம்மது ஜான்
உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூறுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்கள் உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
IFT
பகைவர்கள் மேலிருந்தும், கீழிருந்தும் உங்கள் மீது படையெடுத்து வந்த நேரத்தில் உங்கள் கண்கள் பீதியினால் மருண்டுவிட்டன; இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொண்டன! மேலும், நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி விதவிதமான சந்தேகங்கள் கொள்ளத் தலைப்பட்டீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு மேற்புறமிருந்தும், உங்களுக்குக் கீழ் புறமிருந்தும் அவர்கள் (படையெடுத்து) உங்களிடம் வந்த சமயத்தில், இன்னும் (உங்களுடைய) பார்வைகள் (மாறிச்) சாய்ந்தும், (உங்களுடைய) இதயங்கள் உங்கள் தொண்டை(க்குழி)களை அடைந்துமிருந்த சமயத்தில் (உங்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்.) மேலும், அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் (தவறாக) பலவாறான எண்ணங்களை எண்ணிய சமயத்தில் (அல்லாஹ் உங்களுக்குச் செய்த பேரருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.)
Saheeh International
[Remember] when they came at you from above you and from below you, and when eyes shifted [in fear], and hearts reached the throats, and you assumed about Allah [various] assumptions.
هُنَالِكَ ابْتُلِیَ الْمُؤْمِنُوْنَ وَزُلْزِلُوْا زِلْزَالًا شَدِیْدًا ۟
هُنَالِكَஅங்குதான்ابْتُلِىَசோதிக்கப்பட்டார்கள்الْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்وَزُلْزِلُوْا زِلْزَالًاஇன்னும் அச்சுறுத்தப்பட்டார்கள்شَدِيْدًا‏கடுமையாக
ஹுனாலிகBப் துலியல் மு'மினூன வ Zஜுல்Zஜிலூ Zஜில்Zஜாலன் ஷதீதா
முஹம்மது ஜான்
அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர் (அச்சுறுத்தப்பட்டனர்).
IFT
அந்த(க் கடினமான) நேரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நன்கு சோதிக்கப்பட்டார்கள். மேலும், கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்த இடத்தில், விசுவாசிகள் (பெரும்) சோதனைக்குள்ளாக்கப்பட்டு மிக்க கடினமான அலைக்கழித்தலாக அலைக்கழிக்கப்பட்டும் விட்டனர்.
Saheeh International
There the believers were tested and shaken with a severe shaking.
وَاِذْ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اِلَّا غُرُوْرًا ۟
وَاِذْ يَقُوْلُஇன்னும் கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள்الْمُنٰفِقُوْنَநயவஞ்சகர்களும்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்فِىْ قُلُوْبِهِمْதங்கள் உள்ளங்களில்مَّرَضٌநோய்مَّا وَعَدَنَاநமக்கு வாக்களிக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்(வும்)وَرَسُوْلُهٗۤஅவனது தூதரும்اِلَّاதவிரغُرُوْرًا‏பொய்யை
வ இத் யகூலுல் முனாFபிகூன வல்லதீன Fபீ குலூBபிஹிம் மரளும் மா வ'அதனல் லாஹு வ ரஸூலுஹூ இல்லா குரூரா
முஹம்மது ஜான்
மேலும் (அச்சமயம் நயவஞ்சகர்கள்) முனாஃபிக்குகளும், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை” என்று கூறிய சமயத்தையும் நினைவு கூறுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்'' என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள்.
IFT
மேலும், அந்த நேரத்தை நினைவுகூருங்கள்: ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் செய்திருந்த வாக்குறுதிகள் யாவும் ஏமாற்று வேலையே தவிர வேறொன்றும் இல்லை’ என்று நயவஞ்சகர்களும் மற்றும் எவர்களின் உள்ளங்களில் பிணி இருந்ததோ அவர்களும் வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருந்தார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளும், எவர்களின் இதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் எமக்கு வாக்களிக்கவில்லை” என்று கூறியதையும்_ (நினைவு கூர்வீராக!)
Saheeh International
And [remember] when the hypocrites and those in whose hearts is disease said, "Allah and His Messenger did not promise us except delusion,"
وَاِذْ قَالَتْ طَّآىِٕفَةٌ مِّنْهُمْ یٰۤاَهْلَ یَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوْا ۚ وَیَسْتَاْذِنُ فَرِیْقٌ مِّنْهُمُ النَّبِیَّ یَقُوْلُوْنَ اِنَّ بُیُوْتَنَا عَوْرَةٌ ۛؕ وَمَا هِیَ بِعَوْرَةٍ ۛۚ اِنْ یُّرِیْدُوْنَ اِلَّا فِرَارًا ۟
وَاِذْ قَالَتْகூறிய சமயத்தை நினைவு கூறுங்கள்طَّآٮِٕفَةٌஒரு சாரார்مِّنْهُمْஅவர்களில்يٰۤـاَهْلَ يَثْرِبَயஸ்ரிப் வாசிகளே!لَا مُقَامَதங்குவது அறவே முடியாதுلَكُمْஉங்களுக்குفَارْجِعُوْا‌ ۚஆகவே, திரும்பிவிடுங்கள்وَيَسْتَاْذِنُஅனுமதிகேட்கின்றனர்فَرِيْقٌஒரு பிரிவினர்مِّنْهُمُஅவர்களில்النَّبِىَّநபியிடம்يَقُوْلُوْنَகூறியவர்களாகاِنَّநிச்சயமாகبُيُوْتَنَاஎங்கள் இல்லங்கள்عَوْرَة‌ٌ  ‌ۛؕபாதுகாப்பு அற்றதாக இருக்கின்றனوَمَاஆனால் இல்லை.هِىَஅவைبِعَوْرَةٍ  ۛۚபாதுகாப்பு அற்றதாகاِنْ يُّرِيْدُوْنَஅவர்கள் நாடவில்லைاِلَّاதவிரفِرَارًا‏விரண்டோடுவதை
வ இத் காலத் தா'இFபதும் மின்ஹும் யா அஹ்ல யத்ரிBப லா முகாமா லகும் Fபர்ஜி'ஊ; வ யஸ்தாதினு Fபரீகும் மின்ஹுமுன் னBபிய்ய யகூலூன இன்ன Bபுயூதனா 'அவ்ரஹ்; வமா ஹிய Bபி'அவ்ரதின் இ(ன்)ய் யுரீதூன இல்லா Fபிராரா
முஹம்மது ஜான்
மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) “யஸ்ரிப் வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் உறுதியாக நிற்க முடியாது, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்” என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்: “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன” என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி, (போர்க்களத்திலிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள் - இவர்கள் (போர்க்களத்திலிருந்து தப்பி) ஓடுவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) ‘‘யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்'' என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமலிருந்தும் ‘‘ நிச்சயமாக எங்கள் வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன'' என்று கூறி (யுத்த களத்திலிருந்து சென்றுவிட நம்) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (யுத்தத்திலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை.
IFT
அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் “யத்ரிப் வாசிகளே! இனி, நீங்கள் இங்கு தங்கியிருக்க உங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. திரும்பிச் சென்றுவிடுங்கள்!” என்று கூறினார்கள்; மேலும், அவர்களில் மற்றொரு பிரிவினர் “எங்களுடைய வீடுகள் ஆபத்திற்குள்ளாகி இருக்கின்றன” என்று கூறி, நபியிடம் அனுமதி கோரிக் கொண்டிருந்தனர். ஆனால், அவை ஆபத்திற்குள்ளாகியிருக்கவில்லை. உண்மை யாதெனில், அவர்கள் (போர்க் களத்திலிருந்து) ஓடிவிடவே விரும்பினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தினர், (மதீனா வாசிகளிடம்,) “யஸ்ரிப் வாசிகளே! (யுத்தகளத்தில்) உங்களுக்குத் தங்குதல் இல்லை, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்” என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினரோ, “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்றவையாக இருக்கின்றன” என்று கூறி, அவை பாதுகாப்பற்றவையாக இல்லாமலிருந்தும், (அங்கிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள், (அங்கிருந்து) வெருண்டோடுவததைத் தவிர (வேறெதனையும்) அவர்கள் நாடவில்லை.
Saheeh International
And when a faction of them said, "O people of Yathrib, there is no stability for you [here], so return [home]." And a party of them asked permission of the Prophet, saying, "Indeed, our houses are exposed [i.e., unprotected]," while they were not exposed. They did not intend except to flee.
وَلَوْ دُخِلَتْ عَلَیْهِمْ مِّنْ اَقْطَارِهَا ثُمَّ سُىِٕلُوا الْفِتْنَةَ لَاٰتَوْهَا وَمَا تَلَبَّثُوْا بِهَاۤ اِلَّا یَسِیْرًا ۟
وَلَوْ دُخِلَتْநுழைந்தால்عَلَيْهِمْஅவர்கள் மீதுمِّنْ اَقْطَارِசுற்றுப் புறங்களில் இருந்துهَاஅதன்ثُمَّபிறகுسُٮِٕلُواஅவர்களிடம் கேட்கப்பட்டால்الْفِتْنَةَகுழப்பத்தைلَاٰتَوْஅவர்கள் செய்திருப்பார்கள்هَاஅதைوَمَا تَلَبَّثُوْاஅவர்கள் தாமதித்திருக்க மாட்டார்கள்بِهَاۤஅதற்குاِلَّا يَسِيْرًا‏கொஞ்சமே தவிர
வ லவ் துகிலத் 'அலய்ஹிம் மின் அக்தாரிஹா தும்ம ஸு'இலுல் Fபித்னத ல ஆதவ்ஹா வமா தலBப்Bபதூ Bபிஹா இல்லா யஸீரா
முஹம்மது ஜான்
அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் புகுத்தப்பட்டு, குழப்பம் செய்யும்படி அவர்களிடம் கேட்கப் பட்டிருக்குமானால், நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்று அவ்வாறே) செய்து இருப்பார்கள்; அதை (குழப்பத்தை) சிறிது நேரமே தவிர தாமதப் படுத்த மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் முன்னேறி வந்து (அச்சமயம்) குழப்பம் செய்யும்படி இவர்களைக் கோரியிருந்தால் (இந்த நயவஞ்சகர்கள்) குழப்பம் செய்தே தீருவார்கள். மேலும், (யுத்த களத்திலும்) வெகு சொற்ப நேரமே தவிர அவர்கள் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அங்கிருந்து ஓடிவிடுவார்கள்.)
IFT
நகரின் நாற்புறங்களிலிருந்தும் எதிரிகள் ஊடுருவி, பிறகு குழப்பம் விளைவிக்குமாறு இவர்கள் அழைக்கப்பட்டிருந்தால், அதற்கு இவர்கள் தயாராயிருந்திருப்பார்கள். குழப்பத்தில் பங்கு பெறுவதில் அவர்களுக்குத் தயக்கம் ஏற்பட்டிருக்காது, சிறிதளவே தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது (எதிரிப் படைகள்) புகுத்தப்பட்டு, பின்னர் குழப்பம் செய்யுமாறு அவர்களைக் கேட்கப்பட்டிருந்தால் அவர்கள் அதனைச் செய்திருப்பார்கள். சொற்பமேயன்றி அவர்கள் அதில் தங்கவுமாட்டார்கள்.
Saheeh International
And if they had been entered upon from all its [surrounding] regions and fitnah [i.e., disbelief] had been demanded of them, they would have done it and not hesitated over it except briefly.
وَلَقَدْ كَانُوْا عَاهَدُوا اللّٰهَ مِنْ قَبْلُ لَا یُوَلُّوْنَ الْاَدْبَارَ ؕ وَكَانَ عَهْدُ اللّٰهِ مَسْـُٔوْلًا ۟
وَلَقَدْதிட்டவட்டமாகكَانُوْا عَاهَدُواஒப்பந்தம் செய்திருந்தனர்اللّٰهَஅல்லாஹ்விடம்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்لَا يُوَلُّوْنَஓடமாட்டார்கள்الْاَدْبَارَ‌ ؕபுறமுதுகிட்டுوَكَانَஇருக்கின்றதுعَهْدُஒப்பந்தம்اللّٰهِஅல்லாஹ்வின்مَسْــــٴُـوْلًا‏விசாரிக்கப்படுவதாக
வ லகத் கானூ 'ஆஹதுல் லாஹ மின் கBப்லு லா யுவல் லூனல் அத்Bபார்; வ கான 'அஹ்துல் லாஹி மஸ்'ஊலா
முஹம்மது ஜான்
எனினும், அவர்கள் (போரிலிருந்து) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள்; ஆகவே, அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதி பற்றி (அவர்களிடம்) கேட்கப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (யுத்தத்தில்) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை (அவர்கள் மீறியதை)ப் பற்றி மறுமையில் கேட்கப்படுவார்கள்.
IFT
இதற்கு முன்னரோ ‘புறங்காட்டி ஓடமாட்டோம்’ என்று அல்லாஹ்விடம் இவர்கள் வாக்குறுதி தந்திருந்தார்கள். மேலும், அல்லாஹ்விடம் அளித்திருந்த வாக்குறுதி விசாரிக்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (போரில்) புறமுதுகிட்டு ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் திட்டமாக வாக்குறுதியும் செய்திருந்தார்கள், மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதி (மறுமையில்) விசாரிக்கப்படுவதாக உள்ளது.
Saheeh International
And they had already promised Allah before not to turn their backs [i.e., flee]. And ever is the promise to Allah [that about which one will be] questioned.
قُلْ لَّنْ یَّنْفَعَكُمُ الْفِرَارُ اِنْ فَرَرْتُمْ مِّنَ الْمَوْتِ اَوِ الْقَتْلِ وَاِذًا لَّا تُمَتَّعُوْنَ اِلَّا قَلِیْلًا ۟
قُلْகூறுவீராக!لَّنْ يَّنْفَعَكُمُஉங்களுக்கு அறவே பலனளிக்காதுالْفِرَارُவிரண்டோடுவதுاِنْ فَرَرْتُمْநீங்கள் விரண்டோடினால்مِّنَ الْمَوْتِமரணத்தைவிட்டுاَوِ الْقَتْلِஅல்லது கொல்லப்படுவதை விட்டுوَاِذًاஅப்போதும்لَّا تُمَتَّعُوْنَசுகமளிக்கப்பட மாட்டீர்கள்اِلَّا قَلِيْلًا‏கொஞ்சமே தவிர
குல் ல(ன்)ய் யன்Fப'அகுமுல் Fபிராரு இன் Fபரர்தும் மினல் மவ்தி அவில் கத்லி வ இதல் லா துமத்த'ஊன இல்லா கலீலா
முஹம்மது ஜான்
“மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி (அதிக) சுகம் அனுபவிக்க மாட்டீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மரணத்தைவிட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடிய போதிலும், உங்கள் ஓட்டம் உங்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. இச்சமயம் (நீங்கள் தப்பித்துக் கொண்ட போதிலும்) வெகு சொற்ப நாள்களன்றி (அதிக நாள்கள்) நீங்கள் சுகமனுபவிக்க மாட்டீர்கள்.''
IFT
(நபியே!) நீர் இவர்களிடம் கூறும்: “நீங்கள் மரணத்திலிருந்து அல்லது கொல்லப்படுவதிலிருந்து ஓடினால் அவ்வாறு ஓடுவது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. அதன் பின்னர் வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க சிறிதளவு சந்தர்ப்பமே உங்களுக்குக் கிடைக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக, “மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ நீங்கள் வெருண்டோடுவீர்களாயின், அவ்வாறு வெருண்டோடுவது உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது, மேலும், அது சமயம் வெகு சொற்பமேயன்றி நீங்கள் சுகம் கொடுக்கப்பட மாட்டீர்கள்!”
Saheeh International
Say, [O Muhammad], "Never will fleeing benefit you if you should flee from death or killing; and then [if you did], you would not be given enjoyment [of life] except for a little."
قُلْ مَنْ ذَا الَّذِیْ یَعْصِمُكُمْ مِّنَ اللّٰهِ اِنْ اَرَادَ بِكُمْ سُوْٓءًا اَوْ اَرَادَ بِكُمْ رَحْمَةً ؕ وَلَا یَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
قُلْகூறுவீராக!مَنْயார்?ذَا الَّذِىْ يَعْصِمُكُمْஉங்களைப் பாதுகாக்கின்றவர்مِّنَ اللّٰهِஅல்லாஹ்வைவிட்டும்اِنْ اَرَادَநாடினால்بِكُمْஉங்களுக்குسُوْٓءًاஒரு தீங்கைاَوْஅல்லதுاَرَادَஅவன் நாடினால்بِكُمْஉங்களுக்குرَحْمَةً ؕகருணை புரியوَلَا يَجِدُوْنَஇன்னும் காணமாட்டார்கள்لَهُمْதங்களுக்குمِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிوَلِيًّاபொறுப்பாளரையோوَّلَا نَصِيْرًا‏உதவியாளரையோ
குல் மன் தல் லதீ யஃஸிமுகும் மினல் லாஹி இன் அராத Bபிகும் ஸூ'அன் அவ் அராத Bபிகும் ரஹ்மஹ்; வலா யஜிதூன லஹும் மின் தூனில் லாஹி வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
முஹம்மது ஜான்
“அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவன் யார் அல்லது உங்களுக்கு அருள்புரிய நாடினால் அதை தடுப்பவன் யார்? அல்லாஹ்வை அன்றி அவர்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களையும் பாதுகாப்பவர்களையும் காணமாட்டார்கள்.
IFT
மேலும், இவர்களிடம் கேளும்: “அல்லாஹ் உங்களுக்குத் தீங்களிக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவர் யார்? அவன் உங்கள் மீது கருணை பொழிய நாடினால் அவனுடைய கருணையைத் தடுக்க யாரால் முடியும்?” அல்லாஹ்வுக்கு எதிராக எந்த ஆதரவாளரையும் உதவியாளரையும் இவர்கள் காணமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! மேலும்) நீர் கூறுவீராக: ”அல்லாஹ்விடமிருந்து_அவன் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்க நாடினால்_ உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது, அவன் அருள் புரிய நாடினால் (உங்களை விட்டு அதனை தடுத்துவிடுபவர் யார்?) அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பாதுகாவலரையும், உதவி செய்பவரையும் அவர்கள் காணமாட்டார்கள்.”
Saheeh International
Say, "Who is it that can protect you from Allah if He intends for you an ill or intends for you a mercy?" And they will not find for themselves besides Allah any protector or any helper.
قَدْ یَعْلَمُ اللّٰهُ الْمُعَوِّقِیْنَ مِنْكُمْ وَالْقَآىِٕلِیْنَ لِاِخْوَانِهِمْ هَلُمَّ اِلَیْنَا ۚ وَلَا یَاْتُوْنَ الْبَاْسَ اِلَّا قَلِیْلًا ۟ۙ
قَدْதிட்டமாகيَعْلَمُநன்கறிவான்اللّٰهُஅல்லாஹ்الْمُعَوِّقِيْنَதடுப்பவர்களை(யும்)مِنْكُمْஉங்களில்وَالْقَآٮِٕلِيْنَசொல்பவர்களையும்لِاِخْوَانِهِمْதங்கள் சகோதரர்களுக்குهَلُمَّவந்துவிடுங்கள்اِلَيْنَا‌ ۚஎங்களிடம்وَلَا يَاْتُوْنَஇன்னும் வரமாட்டார்கள்الْبَاْسَபோருக்குاِلَّا قَلِيْلًا ۙ‏குறைவாகவே தவிர
கத் யஃலமுல் லாஹுல் மு'அவ்விகீன மின்கும் வல்கா'இலீன லி இக்வானிஹிம் ஹலும்ம இலய்னா, வலா யா'தூனல் Bபாஸ இல்லா கலீலா
முஹம்மது ஜான்
உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை செய்வோரையும் தம் சகோதரர்களை நோக்கி, “நம்மிடம் வந்து விடுங்கள்” என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான். அன்றியும் அவர்கள் சொற்பமாகவே போர் புரிய வருகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் (யுத்தத்திற்குச் செல்பவர்களைத்) தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களை நோக்கி நீங்கள் ‘‘(யுத்தத்திற்குச் செல்லாது) நம்மிடம் வந்து விடுங்கள்'' என்று கூறுபவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். (அவர்களில்) சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) யுத்தத்திற்கு வருவதில்லை.
IFT
உங்களில் எவர்கள் (போர்ப் பணிகளில்) இடையூறு விளைவிக்கின்றார்களோ அவர்களையும், மேலும், “எங்களிடம் வந்துவிடுங்கள்” என்று தங்களின் சகோதரர்களிடம் கூறுகின்ற வர்களையும் அல்லாஹ் நன்கறிவான். மேலும், அவர்கள் போரில் பங்கு கொண்டாலும், பெயரளவுக்குத்தான் பங்கு பெறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களில் (போர்செய்யச் செல்வோரைத்) தடை செய்வோரையும், தங்கள் சகோதரர்களிடம், “நீங்கள் நம்மிடம் வந்துவிடுங்கள்” என்று கூறுவோரையும் நிச்சயமாக அல்லாஹ் அறிவான், மேலும், (அவர்களில்) சொற்பமானவர்களன்றி (பெரும்பாலோர்) யுத்தத்திற்கு வரமாட்டார்கள்.
Saheeh International
Already Allah knows the hinderers among you and those [hypocrites] who say to their brothers, "Come to us," and do not go to battle, except for a few,
اَشِحَّةً عَلَیْكُمْ ۖۚ فَاِذَا جَآءَ الْخَوْفُ رَاَیْتَهُمْ یَنْظُرُوْنَ اِلَیْكَ تَدُوْرُ اَعْیُنُهُمْ كَالَّذِیْ یُغْشٰی عَلَیْهِ مِنَ الْمَوْتِ ۚ فَاِذَا ذَهَبَ الْخَوْفُ سَلَقُوْكُمْ بِاَلْسِنَةٍ حِدَادٍ اَشِحَّةً عَلَی الْخَیْرِ ؕ اُولٰٓىِٕكَ لَمْ یُؤْمِنُوْا فَاَحْبَطَ اللّٰهُ اَعْمَالَهُمْ ؕ وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
اَشِحَّةًமிகக் கருமிகளாக இருக்கின்றனர்عَلَيْكُمْ ۖۚஉங்கள் விஷயத்தில்فَاِذَا جَآءَவந்தால்الْخَوْفُபயம்رَاَيْتَهُمْஅவர்களை நீர் காண்பீர்يَنْظُرُوْنَஅவர்கள் பார்க்கக் கூடியவர்களாகاِلَيْكَஉம் பக்கம்تَدُوْرُசுழலக்கூடிய நிலையில்اَعْيُنُهُمْஅவர்களது கண்கள்كَالَّذِىْ يُغْشٰىமயக்கம் அடைகின்றவனைப் போல்عَلَيْهِஅவன் மீதுمِنَ الْمَوْتِ‌ ۚமரணத்தால்فَاِذَا ذَهَبَசென்றுவிட்டால்الْخَـوْفُபயம்سَلَقُوْكُمْஉங்களுக்கு தொந்தரவு தருகின்றனர்بِاَ لْسِنَةٍநாவுகளினால்حِدَادٍகூர்மையானاَشِحَّةًபேராசையுடையவர்களாகعَلَى الْخَيْـرِ‌ ؕசெல்வத்தின் மீதுاُولٰٓٮِٕكَஅவர்கள்لَمْ يُؤْمِنُوْاநம்பிக்கை கொள்ளவில்லைفَاَحْبَطَஆகவே, பாழ்ப்படுத்தி விட்டான்اللّٰهُஅல்லாஹ்اَعْمَالَهُمْ‌ ؕஅவர்களின் அமல்களைوَكَانَஇருக்கின்றதுذٰ لِكَஇதுعَلَى اللّٰهِஅல்லாஹ்விற்குيَسِيْرًا‏மிக எளிதாக
அஷிஹ்ஹதன் 'அலய்கும் Fப-இதா ஜா'அல் கவ்Fபு ர அய்தஹும் யன்ளுரூன இலய்க ததூரு அஃயுனுஹும் கல்லதீ யுக்ஷா 'அலய்ஹி மினல் மவ்தி Fப இதா தஹBபல் கவ்Fபு ஸல்கூகும் Bபி அல்ஸினதின் ஹிதாதின் அஷிஹ்ஹதன் 'அலல் கய்ர்; உலா'இக லம் யு'மினூ Fப அஹ்Bபதல் லாஹு அஃமாலஹும்; வ கான தாலிக 'அலல் லாஹி யஸீரா
முஹம்மது ஜான்
(அவர்கள்) உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் (பகைவர்கள் பற்றி) பயம் ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில் மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ, (போர்க் களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற) செல்வப் பொருள்மீது பேராசை கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு (கடுஞ் சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் (உண்மையாக) ஈமான் கொள்ளவில்லை; ஆகவே, அவர்களுடைய (நற்) செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) ஒரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் மயங்கிக் கிடப்பவர்களைப்போல் அவர்கள் கண்கள் சுழன்று சுழன்று உங்களைப் பார்த்த வண்ணமாய் இருப்பதை நீர் காண்பீர். அந்த பயம் நீங்கி (நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ, கொடிய வார்த்தைகளைக் கொண்டு உங்களைக் குற்றங்குறைகள் கூறி (யுத்தத்தில் கிடைத்த) பொருள்கள் மீது பேராசை கொண்டு விழுகின்றனர். இவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்ல. ஆதலால், அவர்கள் செய்திருந்த (நற்)காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதாகவே இருக்கிறது.
IFT
உங்களுக்கு உதவுவதில் அவர்கள் கடும் கஞ்சத்தனம் உள்ளவர்களாய் இருப்பார்கள். ஆபத்தான நேரம் வந்து விட்டாலோ, மரணத்தருவாயில் இருப்பவனுக்கு மயக்கம் வருவது போன்று கண்களைச் சுழற்றியவாறு உம் பக்கம் பார்ப்பார்கள். ஆனால், ஆபத்து நீங்கிவிட்டாலோ, இதே மக்கள் ஆதாயங்களின் மீது பேராசை கொண்டவர்களாய் (கத்தரிக்கோலைப் போன்று) கூர்மையான நாவுகளோடு உங்களை வரவேற்க வந்துவிடுகின்றார்கள். இத்தகையவர்கள் அறவே நம்பிக்கை கொள்ளவில்லை. எனவே, அல்லாஹ் இவர்களுடைய செயல்கள் அனைத்தையும் வீணாக்கிவிட்டான். மேலும், இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்து மிகவும் எளிதானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(போர்க்களத்தில் கிடைத்த பொருட்களில் அவர்கள்) உங்கள் மீது கஞ்சத்தனமாக இருக்கின்றனர், அப்பொழுது, (எதிரிகளைப் பற்றி) பயம் வந்துவிட்டால், மரணத்தினால் மயக்கப்பட்டவரைப் போன்று அவர்கள் கண்கள் சுழல்கின்ற நிலையில், அவர்கள் உம்மைப் பார்த்த வண்ணமாயிருப்பதை நீர் காண்பீர். அபயம் நீங்கி (விசுவாசிகளுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ நன்மையின் மீது (யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் மீது) பேராசைக் கொண்டு கூறிய நாவுகளால் (கொடிய வார்த்தைகளைக் கூறி) உங்களை(க் கடிந்து) இம்சிக்கின்றனர். இத்தகையோர் (உண்மையாக) விசுவாசங்கொள்ளவில்லை, ஆகவே, அவர்களின் (நற்)செயல்களை அல்லாஹ் அழித்துவிட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதாக இருக்கிறது.
Saheeh International
Indisposed toward you. And when fear comes, you see them looking at you, their eyes revolving like one being overcome by death. But when fear departs, they lash you with sharp tongues, indisposed toward [any] good. Those have not believed, so Allah has rendered their deeds worthless, and ever is that, for Allah, easy.
یَحْسَبُوْنَ الْاَحْزَابَ لَمْ یَذْهَبُوْا ۚ وَاِنْ یَّاْتِ الْاَحْزَابُ یَوَدُّوْا لَوْ اَنَّهُمْ بَادُوْنَ فِی الْاَعْرَابِ یَسْاَلُوْنَ عَنْ اَنْۢبَآىِٕكُمْ ؕ وَلَوْ كَانُوْا فِیْكُمْ مَّا قٰتَلُوْۤا اِلَّا قَلِیْلًا ۟۠
يَحْسَبُوْنَஎண்ணுகின்றனர்الْاَحْزَابَஇராணுவங்கள்لَمْ يَذْهَبُوْا‌ ۚஅவர்கள் செல்லவில்லைوَاِنْ يَّاْتِவந்தால்الْاَحْزَابُஅந்த இராணுவங்கள்يَوَدُّوْاஆசைப்படுகின்றனர்لَوْ اَنَّهُمْநிச்சயமாக அவர்கள் இருந்திருக்க வேண்டுமேبَادُوْنَகிராமங்களில்فِى الْاَعْرَابِதாங்கள் கிராமவாசிகளுடன்يَسْـاَ لُوْنَஅவர்கள் விசாரிக்கின்றனர்عَنْ اَنْۢبَآٮِٕكُمْ‌ ؕஉங்கள் செய்திகளைப் பற்றிوَلَوْ كَانُوْاஅவர்கள் இருந்தாலும்فِيْكُمْஉங்களுடன்مَّا قٰتَلُوْۤاஅவர்கள் போர் புரிந்திருக்க மாட்டார்கள்اِلَّا قَلِيْلًا‏மிகக் குறைவாகவே தவிர
யஹ்ஸBபூனல் அஹ்ZஜாBப லம் யத்ஹBபூ வ இ(ன்)ய் யா'தில் அஹ்ZஜாBபு யவத்தூ லவ் அன்னஹும் Bபாதூன Fபில் அஃராBபி யஸலூன 'அன் அம்Bபா'இகும் வ லவ் கானூ Fபீகும் மா காதலூ இல்லா கலீலா
முஹம்மது ஜான்
அந்த (எதிர்ப்புப்) படைகள் இன்னும் போகவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்; அ(வ் எதிர்ப்பு)ப் படைகள் (மீண்டும்) வருமானால் அவர்கள் (கிராமப்புறங்களுக்கு) ஓடிச் சென்று காட்டரபிகளிடம் (மறைவாக) உங்களைப் பற்றியுள்ள செய்திகளை விசாரித்துக் கொண்டிருப்பார்கள் - ஆயினும் அவர்கள் (அவ்வாறு போகாது) உங்களுடன் இருந்திருந்தாலும் ஒரு சிறிதேயன்றி (அதிகம்) போரிட மாட்டார்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
(முற்றுகையிட்டிருந்த எதிரிகளின் ராணுவங்கள் முற்றுகையை எடுத்துக் கொண்டுசென்று விட்டபோதிலும்) அந்த ராணுவம் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்த ராணுவங்கள் திரும்ப வந்துவிட்டாலோ ஒரு கிராமத்திற்குச் சென்று (ஓடி ஒளிந்து) மறைவாயிருந்து கொண்டு (நீங்கள் வெற்றி பெறுகிறீர்களோ தோல்வியுறுகிறீர்களோ என்ற) உங்களைப் பற்றிய செய்தியை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். (அவ்வாறு செல்லாது) அவர்கள் உங்களுடன் தங்கி இருந்தாலும், ஒரு சொற்ப நேரமே தவிர (அதிக நேரம்) போர் புரிய மாட்டார்கள்.
IFT
இவர்கள் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்; தாக்க வந்த கூட்டத்தார் இன்னும் திரும்பிச் செல்லவில்லை என்று! அவர்கள் மீண்டும் தாக்க வந்துவிட்டாலோ, அப்போது எங்கேனும் (பாலைவனத்தில்) நாட்டுப்புற அரபிகளுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட வேண்டும். மேலும், அங்கிருந்தவாறு உம்முடைய நிலைமையைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். ஒரு வேளை இவர்கள் உங்கள் மத்தியில் இருந்தாலும் போரில் குறைவாகவே பங்கு பெறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எதிர்ப்பு) அணியினர் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணுவார்கள், (அந்த எதிர்ப்பு) அணியினர் (திரும்ப) வந்துவிட்டால் கிராமப்புறங்களில் அவர்கள் நிச்சயமாக வெளியேறிச்சென்று, உங்களைப் பற்றிய செய்திகளைக் கேட்டு விசாரித்துக் கொண்டிருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள், அவர்கள் உங்களுடன் இருந்திருப்பினும் சொற்பமேயன்றி (அதிகமாக) அவர்கள் யுத்தம் புரிய மாட்டார்கள்.
Saheeh International
They think the companies have not [yet] withdrawn. And if the companies should come [again], they would wish they were in the desert among the bedouins, inquiring [from afar] about your news. And if they should be among you, they would not fight except for a little.
لَقَدْ كَانَ لَكُمْ فِیْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ یَرْجُوا اللّٰهَ وَالْیَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِیْرًا ۟ؕ
لَقَدْதிட்டவட்டமாகكَانَஇருக்கிறதுلَكُمْஉங்களுக்குفِىْ رَسُوْلِதூதரில்اللّٰهِஅல்லாஹ்வின்اُسْوَةٌமுன்மாதிரிحَسَنَةٌஅழகிய(து)لِّمَنْ كَانَ يَرْجُواஆதரவு வைக்கின்றவராக இருப்பவருக்குاللّٰهَஅல்லாஹ்வையும்وَالْيَوْمَ الْاٰخِرَமறுமை நாளையும்وَذَكَرَஇன்னும் அவர் நினைவு கூர்வார்اللّٰهَஅல்லாஹ்வைكَثِيْرًا ؕ‏அதிகம்
லகத் கான லகும் Fபீ ரஸூலில் லாஹி உஸ்வதுன் ஹஸனதுல் லிமன் கான யர்ஜுல் லாஹ வல் யவ்மல் ஆகிர வ தகரல் லாஹ கதீரா
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்.
IFT
உண்மை யாதெனில், உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருந்தது உங்களில் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றவராகவும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவர்க்கும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உங்களில்) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வையும் அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவருக்கு, அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
Saheeh International
There has certainly been for you in the Messenger of Allah an excellent pattern for anyone whose hope is in Allah and the Last Day and [who] remembers Allah often.
وَلَمَّا رَاَ الْمُؤْمِنُوْنَ الْاَحْزَابَ ۙ قَالُوْا هٰذَا مَا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗ وَصَدَقَ اللّٰهُ وَرَسُوْلُهٗ ؗ وَمَا زَادَهُمْ اِلَّاۤ اِیْمَانًا وَّتَسْلِیْمًا ۟ؕ
وَلَمَّا رَاَபார்த்தபோதுالْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்الْاَحْزَابَ ۙஇராணுவங்களைقَالُوْاகூறினார்கள்هٰذَاஇதுمَا وَعَدَنَاஎங்களுக்கு வாக்களித்ததாகும்اللّٰهُஅல்லாஹ்(வும்)وَرَسُوْلُهٗஅவனது தூதரும்وَ صَدَقَஉண்மை கூறினார்(கள்)اللّٰهُஅல்லாஹ்வும்وَرَسُوْلُهٗஅவனது தூதரும்وَمَا زَادَஅதிகப்படுத்தவில்லைهُمْஅவர்களுக்குاِلَّاۤதவிரاِيْمَانًـاநம்பிக்கை(யையும்)وَّتَسْلِيْمًا ؕ‏திருப்தியையும்
வ லம்மா ர அல் மு'மினூனல் அஹ்ZஜாBப காலூ ஹாதா மா வ'அதனல் லாஹு வ ரஸூலுஹ்; வ ஸதகல் லாஹு வ ரஸூலுஹ்; வமா Zஜாதஹும் இல்லா ஈமான(ன்)வ் வ தஸ்லீமா
முஹம்மது ஜான்
அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை.
IFT
மேலும், உண்மையான நம்பிக்கையாளர்கள் (நிலை இவ்வாறு இருந்தது: அதாவது) தாக்க வந்த கூட்டத்தாரை அவர்கள் பார்த்ததுமே உரக்கக் கூறினார்கள்: “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் வாக்களித்தது இதுதான்.” அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வாக்கு முற்றிலும் உண்மையாக இருந்தது. இந்நிகழ்ச்சி நம்பிக்கையையும் அடிபணிதலையும் அவர்களுக்கு இன்னும் அதிகப்படுத்திவிட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், விசுவாசிகள் (எதிர்ப்பு) அணியினரைக் கண்டபொழுது, “இது, அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்ததாகும். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்” என்று கூறினார்கள், அவர்களுடைய விசுவாசத்தையும், வழிப்படுதலையும் தவிர (வேறெதையும்) அவர்களுக்கு அது அதிகப்படுத்திடவில்லை.
Saheeh International
And when the believers saw the companies, they said, "This is what Allah and His Messenger had promised us, and Allah and His Messenger spoke the truth." And it increased them only in faith and acceptance.
مِنَ الْمُؤْمِنِیْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَیْهِ ۚ فَمِنْهُمْ مَّنْ قَضٰی نَحْبَهٗ وَمِنْهُمْ مَّنْ یَّنْتَظِرُ ۖؗ وَمَا بَدَّلُوْا تَبْدِیْلًا ۟ۙ
مِنَ الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களில்رِجَالٌஆண்களும்صَدَقُوْاஉண்மைப்படுத்தினர்مَاஎதைعَاهَدُواஒப்பந்தம் செய்தார்களோاللّٰهَஅல்லாஹ்விடம்عَلَيْهِ‌ۚஅதன் மீதுفَمِنْهُمْஅவர்களில்مَّنْ قَضٰىநிறைவேற்றியவரும் உண்டுنَحْبَهٗதனது நேர்ச்சையைوَمِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْ يَّنْتَظِرُ‌ ۖ எதிர்பார்ப்பவரும் உண்டுوَمَا بَدَّلُوْا تَبْدِيْلًا ۙ‏இன்னும் அவர்கள் மாற்றிவிடவில்லை
மினல் மு'மினீன ரிஜாலுன் ஸதகூ மா 'ஆஹதுல் லாஹ 'அலய்ஹி Fபமின்ஹும் மன் களா னஹ்Bபஹூ வ மின்ஹும் மய் யன்தளிரு வமா Bபத்தலூ தBப்தீலா
முஹம்மது ஜான்
முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் (இறந்து ‘ஷஹாதத்' என்னும்) தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர். வேறு சிலர் (மரணிக்கவில்லை என்றாலும் அதை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டுவிடவே இல்லை.
IFT
நம்பிக்கையாளரில் இத்தகையவர்களும் இருக்கின்றனர்: அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டிவிட்டிருக்கிறார்கள்; அவர்களில் சிலர் தமது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள்; இன்னும் சிலர் அதற்கான நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள் அவர்கள் (தம்முடைய நடத்தையில்) எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளில் சில ஆடவர்கள் இருக்கின்றனர், எதன் மீது அவர்கள் அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்களோ அதை உண்மையாக்கி வைத்தார்கள், ஆகவே, அவர்களில் தங்கள் இலட்சியத்தை (வீரமரணத்தை) அடைந்துவிட்டவரும் இருக்கின்றனர், அவர்களில் (அதற்காக) எதிர்ப்பார்ப்பவரும் இருக்கின்றனர், (தங்கள் வாக்குறுதியில்) அவர்கள் மாறிவிடவே இல்லை.
Saheeh International
Among the believers are men true to what they promised Allah. Among them is he who has fulfilled his vow [to the death], and among them is he who awaits [his chance]. And they did not alter [the terms of their commitment] by any alteration -
لِّیَجْزِیَ اللّٰهُ الصّٰدِقِیْنَ بِصِدْقِهِمْ وَیُعَذِّبَ الْمُنٰفِقِیْنَ اِنْ شَآءَ اَوْ یَتُوْبَ عَلَیْهِمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۚ
لِّيَجْزِىَஇறுதியாக நற்கூலி தருவான்اللّٰهُஅல்லாஹ்الصّٰدِقِيْنَஉண்மையாளர்களுக்குبِصِدْقِهِمْஅவர்களின் உண்மைக்குوَيُعَذِّبَஇன்னும் தண்டிப்பான்الْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்களைاِنْ شَآءَஅவன் நாடினால்اَوْஅல்லதுيَتُوْبَபிழை பொறுப்பான்عَلَيْهِمْ‌ ؕஅவர்களைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கின்றான்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا ۚ‏மகா கருணையாளனாக
லி யஜ்Zஜியல் ஆஹுஸ் ஸாதிகீன Bபிஸித்கிஹிம் வ யு'அத்திBபல் முனாFபிகீன இன் ஷா'அ அவ் யதூBப 'அலய்ஹிம்; இன்னல் லாஹ கான கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும் செய்வான், அல்லது அவர்களை மன்னிப்பான் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
உண்மையுடன் நடந்துகொண்ட (இ)வர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் வேதனை செய்வான். (அவன் நாடினால் அவர்களையும் மன்னிப்புக் கோரும்படிச் செய்து) அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
IFT
(இதுவெல்லலாம் நிகழ்ந்தது) எதற்காகவெனில், அல்லாஹ் வாய்மையாளர்களுக்கு அவர்களுடைய வாய்மைக்கான கூலியை வழங்குவதற்காகவும் மேலும், நயவஞ்சகர்களுக்கு நாடினால் அவன் தண்டனை அளிப்பதற்காகவும், நாடினால் அவர்களுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்வதற்காகவும்தான்! நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மையின் காரணத்தால், அல்லாஹ் (நற்)கூலி வழங்குவதற்காகவும், அவன் நாடினால் முனாஃபிக்குகளை (வேஷதாரிகளை) வேதனை செய்வதற்காகவும், அல்லது அவர்களின் தவ்பாவை அங்கீகரிப்பதற்காகவும் (அடியார்களை இவ்வாறு சோதிக்கிறான்), நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாக மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
That Allah may reward the truthful for their truth and punish the hypocrites if He wills or accept their repentance. Indeed, Allah is ever Forgiving and Merciful.
وَرَدَّ اللّٰهُ الَّذِیْنَ كَفَرُوْا بِغَیْظِهِمْ لَمْ یَنَالُوْا خَیْرًا ؕ وَكَفَی اللّٰهُ الْمُؤْمِنِیْنَ الْقِتَالَ ؕ وَكَانَ اللّٰهُ قَوِیًّا عَزِیْزًا ۟ۚ
وَرَدَّதிருப்பிவிட்டான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்களைبِغَيْظِهِمْஅவர்களது கோபத்துடன்لَمْ يَنَالُوْاஅவர்கள் அடையவில்லைخَيْرًا‌ ؕஎந்த நன்மையையும்وَكَفَىபாதுகாத்தான்اللّٰهُஅல்லாஹ்الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களைالْقِتَالَ‌ ؕபோரை விட்டும்وَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்قَوِيًّاமகா வலிமை மிக்கவனாகعَزِيْزًا ۚ‏மிகைத்தவனாக
வ ரத்தல் லாஹுல் லதீன கFபரூ Bபிகய்ளிஹிம் லம் யனாலூ கய்ரா; வ கFபல் லாஹுல் மு'மினீனல் கிதால்; வ கானல் லாஹு கவிய்யன் 'அZஜீZஜா
முஹம்மது ஜான்
நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் (மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும் போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன், மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களை அவர்களின் கோபத்தில் மூழ்கியவாறே அல்லாஹ் அவர்களைத் தடுத்து விட்டான். (இப்போரில்) அவர்கள் ஒரு நன்மையும் அடையவில்லை. (எல்லா விதங்களிலும் நஷ்டமே அடைந்தார்கள். இந்தப் போரில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வே பாதுகாத்துக் கொண்டான்.) இந்தப் போரில் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அல்லாஹ் (அனைவரையும் விட) மிக்க பலவானாகவும், மிகைத்தவனாகவும் இருக்கிறான்.
IFT
அல்லாஹ் நிராகரிப்பாளர்களைத் திருப்பிவிட்டான். அவர்கள் எந்தப் பயனும் அடையாமல் தம் மன எரிச்சலுடனே அப்படியே திரும்பிவிட்டனர். நம்பிக்கையாளர்களின் சார்பில் போரிடுவதற்கு அல்லாஹ்வே போதுமாகிவிட்டான். அல்லாஹ் பேராற்றலுடையவனாகவும் யாவற்றையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிராகரித்து விட்டார்களே அத்தகையோரை_அவர்களுடைய கடுங்கோபத்தில் அல்லாஹ் திருப்பி விட்டான், (இந்த யுத்தத்தில்) அவர்கள் யாதொரு நன்மையை(யும்) அடையவில்லை, (அகழ்) யுத்தத்தில் விசுவாசிகளுக்கு (வெற்றியளிக்க) அல்லாஹ் போதுமானவனாக இருந்தான், மேலும், அல்லாஹ் (யாவரையும் விட) மிக்க பலமிக்கவனாக (யாவரையும்) மிகைத்தவனாக இருக்கின்றான்.
Saheeh International
And Allah repelled those who disbelieved, in their rage, not having obtained any good. And sufficient was Allah for the believers in battle, and ever is Allah Powerful and Exalted in Might.
وَاَنْزَلَ الَّذِیْنَ ظَاهَرُوْهُمْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ صَیَاصِیْهِمْ وَقَذَفَ فِیْ قُلُوْبِهِمُ الرُّعْبَ فَرِیْقًا تَقْتُلُوْنَ وَتَاْسِرُوْنَ فَرِیْقًا ۟ۚ
وَاَنْزَلَஇறக்கினான்الَّذِيْنَ ظَاهَرُوْஉதவியவர்களைهُمْஅவர்களுக்குمِّنْஇருந்துاَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களில்مِنْ صَيَاصِيْهِمْஅவர்களின் கோட்டைகளில் இருந்துوَقَذَفَஇன்னும் போட்டான்فِىْ قُلُوْبِهِمُஅவர்களின் உள்ளங்களில்الرُّعْبَதிகிலைفَرِيْقًاஒரு பிரிவினரைتَقْتُلُوْنَகொன்றீர்கள்وَتَاْسِرُوْنَஇன்னும் சிறைப்பிடித்தீர்கள்فَرِيْقًا ۚ‏ஒரு பிரிவினரை
வ அன்Zஜலல் லதீன ளாஹ ரூஹும் மின் அஹ்லில் கிதாBபி மின் ஸ யாஸீஹிம் வ கதFப Fபீ குலூBபிஹிம்ம் முர் ருஃBப Fபரீகன் தக்துலூன வ தா'ஸிரூன Fபரீகா
முஹம்மது ஜான்
இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! உங்கள்) எதிரிகளுக்கு உதவி செய்த வேதக்காரர்(களாகிய யூதர்)களை அவர்களுடைய அரண்மனைகளிலிருந்து இறங்கவைத்து அவர்களுடைய உள்ளங்களில் (திடுக்கத்தையும்) நடுக்கத்தையும் போட்டுவிட்டான். ஆகவே, அவர்களில் ஒரு தொகையினரை நீங்கள் வெட்டி விட்டீர்கள்; மற்றொரு தொகையினரை நீங்கள் சிறை பிடித்தீர்கள்.
IFT
மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர்கள் இவ்வாறு தாக்க வந்த படையினர்க்கு உதவினார்களோ அவர்களை அல்லாஹ், அவர்களுடைய கோட்டைகளிலிருந்து இறக்கிக் கொண்டு வந்தான். மேலும், அவர்களுடைய உள்ளங்களில் திகிலை ஏற்படுத்தினான். நீங்கள் (இன்று அவர்களில்) ஒரு பிரிவினரை கொன்றுகொண்டும் மற்றொரு பிரிவினரைக் கைது செய்துகொண்டும் இருக்கிறீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் வேதக்காரர்களிலிருந்து, அ(ப்பகை)வர்களுக்கு உதவி செய்தார்களே அவர்களை, அவர்களுடைய கோட்டையிலிருந்து (அல்லாஹ்) இறக்கிவிட்டான், அவர்களுடைய இதயங்களில் கடும் பயத்தையும் போட்டு விட்டான், (ஆகவே) ஒரு சாராரை நீங்கள் கொன்று விட்டீர்கள், (மற்றும்) ஒரு சாராரை நீங்கள் சிறைபிடித்தும் கொண்டீர்கள்.
Saheeh International
And He brought down those who supported them among the People of the Scripture from their fortresses and cast terror into their hearts [so that] a party [i.e., their men] you killed, and you took captive a party [i.e., the women and children].
وَاَوْرَثَكُمْ اَرْضَهُمْ وَدِیَارَهُمْ وَاَمْوَالَهُمْ وَاَرْضًا لَّمْ تَطَـُٔوْهَا ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرًا ۟۠
وَاَوْرَثَكُمْஇன்னும் உங்களுக்கு சொந்தமாக்கினான்اَرْضَهُمْஅவர்களின் பூமியை(யும்)وَدِيَارَஇல்லங்களையும்هُمْஅவர்களின்وَ اَمْوَالَهُمْஅவர்களின் செல்வங்களையும்وَاَرْضًاஇன்னும் ஒரு பூமியையும்لَّمْ تَطَــــٴُـوْهَا‌ ؕநீங்கள் மிதிக்காதوَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதும்قَدِيْرًا‏பேராற்றலுடையவனாக
வ அவ்ரதகும் அர்ளஹும் வ தியாரஹும் வ அம்வாலஹும் வ அர்ளல் லம் தத'ஊஹா; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீரா
முஹம்மது ஜான்
இன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கி விட்டான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.  
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய பூமிகளையும், அவர்களுடைய வீடுகளையும், அவர்களுடைய பொருள்களையும் (இதுவரை) நீங்கள் கால் வைக்காத அவர்களுடைய மற்ற பூமிகளையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்த மாக்கித் தந்தான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
IFT
மேலும், அவன் அவர்களுடைய நிலத்திற்கும், அவர்களுடைய இல்லங்களுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும் உங்களை வாரிசுகளாக்கினான்; நீங்கள் கால் வைத்திருக்காத பூமியையும் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அல்லாஹ்வாகிய) அவன் அவர்களுடைய பூமி, மற்றும் அவர்களுடைய வீடுகள் மற்றும் அவர்களுடைய செல்வங்கள் இன்னும் (இதுவரையில்) நீங்கள் மிதித்திராத (அவர்களுடைய மற்ற) பூமி ஆகியவற்றிற்கு உங்களை வாரிசாக்கினான், மேலும் அல்லாஹ், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
And He caused you to inherit their land and their homes and their properties and a land which you have not trodden. And ever is Allah, over all things, competent.
یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَیٰوةَ الدُّنْیَا وَزِیْنَتَهَا فَتَعَالَیْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِیْلًا ۟
يٰۤـاَيُّهَا النَّبِىُّநபியே!قُلْசொல்வீராக!لِّاَزْوَاجِكَஉமது மனைவிகளுக்குاِنْ كُنْتُنَّநீங்கள் இருந்தால்تُرِدْنَநீங்கள் விரும்புகிறவர்களாகالْحَيٰوةَவாழ்க்கையை(யும்)الدُّنْيَاஉலகوَزِيْنَتَهَاஅதன் அலங்காரத்தையும்فَتَعَالَيْنَவாருங்கள்اُمَتِّعْكُنَّஉங்களுக்கு செல்வம் தருகின்றேன்وَاُسَرِّحْكُنَّஇன்னும் உங்களை விட்டுவிடுகின்றேன்سَرَاحًا جَمِيْلًا‏அழகிய முறையில்
யா அய்யுஹன் னBபிய்யு குல் லி அZஜ்வாஜிக இன் குன்துன்ன துரித்னல் ஹயாதத் துன்யா வ Zஜீனதஹா Fபத'ஆலய்ன உமத்திஃகுன்ன வ உஸர்ரிஹ்குன்ன ஸராஹன் ஜமீலா
முஹம்மது ஜான்
நபியே! உம்முடைய மனைவிகளிடம்: “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
நபியே! உமது மனைவிகளை நோக்கி கூறுவீராக: ‘‘ நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன்.
IFT
நபியே! நீர் உம்முடைய மனைவிமார்களிடம் கூறிவிடும்: “நீங்கள் உலகவாழ்வையும், அதன் அழகையும் விரும்புகிறீர்கள் என்றால், வாருங்கள்! நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! உம்முடைய மனைவியருக்கு நீர் கூறுவீராக “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக நீங்கள் இருந்தால், வாருங்கள்! உங்களுக்கு (வாழ்க்கைகுரியதைக் கொடுத்து) சுகத்தை அளிக்கிறேன், அழகிய விடுவித்தலாக (விவாக பந்தத்தை) விடுவித்தும் விடுகிறேன்.”
Saheeh International
O Prophet, say to your wives, "If you should desire the worldly life and its adornment, then come, I will provide for you and give you a gracious release.
وَاِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالدَّارَ الْاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْمُحْسِنٰتِ مِنْكُنَّ اَجْرًا عَظِیْمًا ۟
وَاِنْ كُنْتُنَّநீங்கள் இருந்தால்تُرِدْنَவிரும்புகிறவர்களாகاللّٰهَஅல்லாஹ்வை(யும்)وَرَسُوْلَهٗஅவனது தூதரையும்وَالدَّارَவீட்டையும்الْاٰخِرَةَமறுமைفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اَعَدَّதயார்படுத்தி வைத்துள்ளான்لِلْمُحْسِنٰتِநல்லவர்களுக்குمِنْكُنَّஉங்களில்اَجْرًاகூலியைعَظِيْمًا‏மகத்தான
வ இன் குன்துன்ன துரித்னல் லாஹ வ ரஸூலஹூ வத் தாரல் ஆகிரத Fப இன்னல் லாஹ அ'அத்த லில் முஹ்ஸினாதி மின் குன்ன அஜ்ஜ்ரன் 'அளீமா
முஹம்மது ஜான்
“ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மை செய்பவர்களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், மறுஉலகையும் நாடுகிறீர்களென்றால் (அறிந்து கொள்ளுங்கள்) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை தயார் செய்து வைத்துள்ளான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அன்றியும் நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும். இறுதி வீட்டையும் நாடுபவர்களாக நீங்கள் இருந்தால், அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் உங்களில் (இத்தகைய) நன்மையுடையோருக்கு மகத்தான கூலியை தயார் செய்து வைத்திருக்கிறான்.”
Saheeh International
But if you should desire Allah and His Messenger and the home of the Hereafter - then indeed, Allah has prepared for the doers of good among you a great reward."
یٰنِسَآءَ النَّبِیِّ مَنْ یَّاْتِ مِنْكُنَّ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ یُّضٰعَفْ لَهَا الْعَذَابُ ضِعْفَیْنِ ؕ وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
يٰنِسَآءَமனைவிகளே!النَّبِىِّநபியின்مَنْயார்يَّاْتِசெய்வாரோمِنْكُنَّஉங்களில்بِفَاحِشَةٍமானக்கேடான செயலைمُّبَيِّنَةٍதெளிவானيُّضٰعَفْஇரு மடங்காக ஆக்கப்படும்لَهَاஅவருக்குالْعَذَابُவேதனைضِعْفَيْنِ ؕஇரு மடங்காகوَكَانَஇருக்கின்றதுذٰ لِكَஅதுعَلَى اللّٰهِஅல்லாஹ்விற்குيَسِيْرًا‏இலகுவானதாக
யா னிஸா'அன் னBபிய்யி மய் யாதி மின்குன்ன BபிFபா ஹிஷதிம் முBபய்யினதி(ன்)ய் யுளா'அFப் லஹல் 'அதாBபு ளிஃFபய்ன் வ கான தாலிக 'அலல் லாஹி யஸீர
முஹம்மது ஜான்
நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!  
அப்துல் ஹமீது பாகவி
நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான ஒரு மானக் கேடான காரியத்தைச் செய்வாராயின் அதற்குரிய தண்டனை அவருக்கு இரு மடங்காக அதிகரிக்கப்படும். இது அல்லாஹ்விற்கு மிக்க சுலபமாக இருக்கிறது.
IFT
நபியின் மனைவியரே! உங்களில் எவரேனும் வெளிப்படையான, மானக்கேடான செயலைச் செய்தால் அவருக்கு இருமடங்கு வேதனை அளிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதான காரியமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியுடைய மனைவியரே! உங்களில் எவர் பகிரங்கமான மானக்கேடான ஒரு காரியத்தைச் செய்வாரோ, அவருக்கு இரு மடங்காக வேதனை இரட்டிப்பாக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதாகவே இருக்கிறது.
Saheeh International
O wives of the Prophet, whoever of you should commit a clear immorality - for her the punishment would be doubled two fold, and ever is that, for Allah, easy.
وَمَنْ یَّقْنُتْ مِنْكُنَّ لِلّٰهِ وَرَسُوْلِهٖ وَتَعْمَلْ صَالِحًا نُّؤْتِهَاۤ اَجْرَهَا مَرَّتَیْنِ ۙ وَاَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِیْمًا ۟
وَمَنْயார்يَّقْنُتْபணிந்து நடப்பாரோمِنْكُنَّஉங்களில்لِلّٰهِஅல்லாஹ்வுக்கு(ம்)وَرَسُوْلِهٖஅவனது தூதருக்கும்وَتَعْمَلْஇன்னும் செய்வாரோصَالِحًـاநன்மையைنُّؤْتِهَـآஅவருக்கு நாம் கொடுப்போம்اَجْرَهَاஅவரது கூலியைمَرَّتَيْنِۙஇருமுறைوَاَعْتَدْنَا لَهَاஇன்னும் அவருக்கு ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம்رِزْقًاஉணவைكَرِيْمًا‏கண்ணியமான
வ மய் யக்னுத் மின்குன்ன லில்லாஹி வ ரஸூலிஹீ வ தஃமல் ஸாலிஹன் னு'திஹா அஜ்ரஹா மர்ரதய்னி வ அஃதத்னா லஹா ரிZஜ்கன் கரீமா
முஹம்மது ஜான்
அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்தால், அதற்குரிய கூலியை அவருக்கு நாம் இரு மடங்காகத் தருவோம். மேலும், மிக்க கண்ணியமான வாழ்க்கையையும் அவருக்கு நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
IFT
மேலும், உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தால், மேலும், நற்செயல் புரிந்தால், அவர்களுக்கு நாம் இருமடங்கு கூலி வழங்குவோம். மேலும், நாம் அவர்களுக்காக கண்ணியமான நற்பாக்கியங்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து, நற்கருமங்களையும் செய்கிறாரோ, அவருக்குரிய (நற்)கூலியை அவருக்கு நாம் இரு முறை தருவோம், இன்னும் அவருக்கு (சுவனத்தில்) மிக்க கண்ணியமான உணவை நாம் தயார் படுத்தி வைத்திருக்கின்றோம்.
Saheeh International
And whoever of you devoutly obeys Allah and His Messenger and does righteousness - We will give her her reward twice; and We have prepared for her a noble provision.
یٰنِسَآءَ النَّبِیِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَیْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَیَطْمَعَ الَّذِیْ فِیْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۟ۚ
يٰنِسَآءَமனைவிகளே!النَّبِىِّநபியின்لَسْتُنَّநீங்கள் இல்லைكَاَحَدٍஒருவரைப் போன்றுمِّنَ النِّسَآءِபெண்களில்اِنِ اتَّقَيْتُنَّநீங்கள் அல்லாஹ்வை பயந்து நடந்தால்فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِஆகவே, மென்மையாகப் பேசாதீர்கள்فَيَـطْمَعَதப்பாசைப்படுவான்الَّذِىْ فِىْ قَلْبِهٖஎவன்/ தனது உள்ளத்தில்مَرَضٌநோய்وَّقُلْنَஇன்னும் பேசுங்கள்قَوْلًاபேச்சைمَّعْرُوْفًا ۚ‏சரியான
யா னிஸா'அன் னBபிய்யி லஸ்துன்ன க அஹதிம் மினன் னிஸா'இ இனித் தகய்துன்ன Fபலா தக்ளஃன Bபில்கவ்லி Fப யத்ம'அல் லதீ Fபீ கல்Bபிஹீ மரளு(ன்)வ் வ குல்ன கவ்லம் மஃரூFபா
முஹம்மது ஜான்
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரண) பெண்களைப் போன்றவர்களல்ல. நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால் (பாவ) நோய் இருக்கும் உள்ளத்தையுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும். ஆகவே, நீங்கள் (எதைக் கூறிய போதிலும்) யதார்த்தவாதிகளைப்போல் (கண்டிப்பாகப்) பேசிவிடுங்கள்.
IFT
நபியின் மனைவியரே! நீங்கள் ஏனைய சாதாரணப் பெண்களைப் போன்றவர்களல்லர். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாயிருந்தால், மென்மையாகப் பேசாதீர்கள். ஏனெனில், உள்ளத்தில் கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் யாரேனும் ஒருவன் சபலம் கொள்ளக்கூடும்! ஆகவே, தெளிவாய் நேர்த்தியாய்ப் பேசுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியுடைய மனைவியரே! நீங்கள் (இதர) பெண்களில் எந்த ஒருவரைப் போன்றவர்களுமல்லர், நீங்கள் (அல்லாஹ்வுக்கு) பயந்து கொண்டவர்களானால் (அந்நியருடன்) பேச்சில் நீங்கள் நளினம் காட்டாதீர்கள், ஏனென்றால், எவனுடைய இதயத்தில் (பாவ) நோய் இருக்கின்றதோ அத்தகையவன் (தவறான விருப்பங்களில்) ஆசை கொள்வான், மேலும், நீங்கள் (நேர்மையான) பேச்சையே பேசிவிடுங்கள்.
Saheeh International
O wives of the Prophet, you are not like anyone among women. If you fear Allah, then do not be soft in speech [to men], lest he in whose heart is disease should covet, but speak with appropriate speech.
وَقَرْنَ فِیْ بُیُوْتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِیَّةِ الْاُوْلٰی وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِیْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ اِنَّمَا یُرِیْدُ اللّٰهُ لِیُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَیْتِ وَیُطَهِّرَكُمْ تَطْهِیْرًا ۟ۚ
وَقَرْنَதங்கியிருங்கள்فِىْ بُيُوْتِكُنَّஉங்கள் இல்லங்களில்وَلَا تَبَـرَّجْنَஅலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள்تَبَرُّجَஅலங்காரங்களை வெளிப்படுத்தியதுபோன்றுالْجَاهِلِيَّةِஅறியாமைக்காலத்தில்الْاُوْلٰىமுந்தியوَاَقِمْنَநிலைநிறுத்துங்கள்!الصَّلٰوةَதொழுகையைوَاٰتِيْنَகொடுங்கள்!الزَّكٰوةَஸகாத்தைوَاَطِعْنَகீழ்ப்படியுங்கள்!اللّٰهَஅல்லாஹ்விற்கும்وَرَسُوْلَهٗ ؕஅவனது தூதருக்கும்اِنَّمَا يُرِيْدُநாடுவதெல்லாம்اللّٰهُஅல்லாஹ்لِيُذْهِبَபோக்குவதற்கும்عَنْكُمُஉங்களை விட்டும்الرِّجْسَஅசுத்தத்தைاَهْلَ الْبَيْتِவீட்டார்களே!وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ۚ‏முற்றிலும் உங்களை சுத்தப்படுத்துவதற்கும்தான்
வ கர்ன Fபீ Bபு யூ திகுன்ன வலா தBபர்ரஜ்ன தBபர்ருஜல் ஜாஹிலிய்யதில் ஊலா வ அகிம்னஸ் ஸலாத வ ஆதீனZஜ் Zஜகாத வ அதிஃனல் லாஹ வ ரஸூலஹ்; இன்னமா யுரீதுல் லாஹு லியுத்ஹிBப 'அன்குமுர் ரிஜ்ஸ அஹ்லல் Bபய்தி வ யுதஹ்ஹிரகும் தத்ஹீரா
முஹம்மது ஜான்
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச் சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியுடைய) வீட்டுடையார்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்.
IFT
மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்கள். தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத்தைக் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நபியினுடைய குடும்பத்தினராகிய உங்களிலிருந்து தூய்மையின்மையை அகற்றி உங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றுதான் அல்லாஹ் நாடுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியுடைய மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரியாதீர்கள், மேலும், தொழுகையை நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடு(த்து வாரு)ங்கள், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், (நபியுடைய) வீட்டினரே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் (சகல) அசுத்தத்தைப் போக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதையும்தான்.
Saheeh International
And abide in your houses and do not display yourselves as [was] the display of the former times of ignorance. And establish prayer and give zakah and obey Allah and His Messenger. Allah intends only to remove from you the impurity [of sin], O people of the [Prophet's] household, and to purify you with [extensive] purification.
وَاذْكُرْنَ مَا یُتْلٰی فِیْ بُیُوْتِكُنَّ مِنْ اٰیٰتِ اللّٰهِ وَالْحِكْمَةِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ لَطِیْفًا خَبِیْرًا ۟۠
وَاذْكُرْنَஇன்னும் மனனம் செய்யுங்கள்مَا يُتْلٰىஓதப்படுகின்றவற்றையும்فِىْ بُيُوْتِكُنَّஉங்கள் இல்லங்களில்مِنْ اٰيٰتِஅதாவது,வசனங்களில்اللّٰهِஅல்லாஹ்வின்وَالْحِكْمَةِؕஇன்னும் ஞானத்தைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கின்றான்لَطِيْفًاமிக கருணையாளனாகخَبِيْرًا‏ஆழ்ந்தறிபவனாக
வத்குர்ன மா யுத்லா Fபீ Bபு யூதிகுன்ன மின் ஆயாதில் லாஹி வல் ஹிக்மஹ்; இன்னல் லாஹ கான லதீFபன் கBபீரா
முஹம்மது ஜான்
மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சுமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.  
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞானவாக்கியங்க(ளான ஹதீஸ்க)ளையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்.
IFT
உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்ற இறைவசனங்களையும், விவேகமான விஷயங்களையும் நினைவில் வையுங்கள்; திண்ணமாக, அல்லாஹ் நுண்மையானவனாகவும் யாவும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும், ஹிக்மத் (எனும் சுன்னத்தை)தையும் நினைவு கூறுங்கள், (அவற்றின் மூலம் உபதேசம் அடையுங்கள்) நிச்சயமாக அல்லாஹ் நுட்பமானவனாக (யாவையும்) நன்கறிந்தோனாக இருக்கிறான்.
Saheeh International
And remember what is recited in your houses of the verses of Allah and wisdom. Indeed, Allah is ever Subtle and Aware.
اِنَّ الْمُسْلِمِیْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِیْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِیْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِیْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِیْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِیْنَ وَالْمُتَصَدِّقٰتِ وَالصَّآىِٕمِیْنَ وَالصّٰٓىِٕمٰتِ وَالْحٰفِظِیْنَ فُرُوْجَهُمْ وَالْحٰفِظٰتِ وَالذّٰكِرِیْنَ اللّٰهَ كَثِیْرًا وَّالذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِیْمًا ۟
اِنَّ الْمُسْلِمِيْنَநிச்சயமாக முஸ்லிமான ஆண்கள்وَالْمُسْلِمٰتِஇன்னும் முஸ்லிமான பெண்கள்وَالْمُؤْمِنِيْنَஇன்னும் முஃமினான ஆண்கள்وَالْمُؤْمِنٰتِஇன்னும் முஃமினான பெண்கள்وَالْقٰنِتِيْنَஇன்னும் பணிவான ஆண்கள்وَالْقٰنِتٰتِஇன்னும் பணிவான பெண்கள்وَالصّٰدِقِيْنَஇன்னும் உண்மையான ஆண்கள்وَالصّٰدِقٰتِஇன்னும் உண்மையான பெண்கள்وَالصّٰبِرِيْنَஇன்னும் பொறுமையான ஆண்கள்وَالصّٰبِرٰتِஇன்னும் பொறுமையான பெண்கள்وَالْخٰشِعِيْنَஇன்னும் உள்ளச்சமுடைய ஆண்கள்وَالْخٰشِعٰتِஇன்னும் உள்ளச்சமுடைய பெண்கள்وَالْمُتَصَدِّقِيْنَஇன்னும் தர்மம் செய்கின்ற ஆண்கள்وَ الْمُتَصَدِّقٰتِஇன்னும் தர்மம் செய்கின்ற பெண்கள்وَالصَّآٮِٕمِيْنَஇன்னும் நோன்பாளியான ஆண்கள்وَالصّٰٓٮِٕمٰتِஇன்னும் நோன்பாளியான பெண்கள்وَالْحٰفِظِيْنَஇன்னும் பேணுகின்ற ஆண்கள்فُرُوْجَهُمْஇன்னும் தங்கள் மறைவிடங்களைوَالْحٰـفِظٰتِஇன்னும் பேணுகின்ற பெண்கள்وَالذّٰكِرِيْنَஇன்னும் நினைவு கூரக்கூடிய ஆண்கள்اللّٰهَஅல்லாஹ்வைكَثِيْرًاஅதிகம்وَّ الذّٰكِرٰتِ ۙஇன்னும் நினைவு கூரக்கூடிய பெண்கள்اَعَدَّஏற்படுத்தி இருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْஇவர்களுக்குمَّغْفِرَةًமன்னிப்பை(யும்)وَّاَجْرًاகூலியையும்عَظِيْمًا‏மகத்தான
இன்னல் முஸ்லிமீன வல் முஸ்லிமாதி வல் மு'மினீன வல் மு'மினாதி வல்கானிதீன வல்கானிதாதி வஸ்ஸாதிகீன வஸ்ஸாதிகாதி வஸ்ஸாBபிரீன வஸ்ஸாBபிராதி வல்காஷி'ஈன வல்காஷி'ஆதி வல்முதஸத்திகீன வல்முதஸத்திகாதி வஸ்ஸா'இமீன வஸ்ஸா'இமாதி வல்ஹாFபிளீன Fபுரூஜஹும் வல்ஹாFபிளாதி வத் தாகிரீனல் லாஹ கதீர(ன்)வ் வத் தாகிராதி அ'அத்தல் லாஹு லஹும் மக்Fபிரத(ன்)வ் வ அஜ்ரன் 'அளீமா
முஹம்மது ஜான்
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும், நம்பிக்கையுடைய ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும்) கீழ்ப்படியும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன்னிலையில் பணிபவர்களாகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ, திண்ணமாக, அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், விசுவாசிகளான பெண்களும், (அல்லாஹ்வுக்கு) வழிபாடு செய்பவர்களான ஆண்களும், வழிபாடு செய்பவர்களான பெண்களும், உண்மையே கூறுபவர்களான ஆண்களும், உண்மையே கூறுபவர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறுமையாளர்களான பெண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் ஆண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் பெண்களும், தானம் செய்பவர்களான ஆண்களும், தானம் செய்பவர்களான பெண்களும், நோன்பு நோற்பவர்களான ஆண்களும், நோன்பு நோற்பவர்களான பெண்களும், தங்கள் மர்மஸ்தானங்களைக் காத்துக் கொள்பவர்களான ஆண்களும், (மர்மஸ்தானங்களைக்) காத்து கொள்பவர்களான பெண்களும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவர்களான ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமாக) நினைவு கூறுபவர்களான பெண்களும்_(ஆகிய) இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான (நற்)கூலியையும் தயார் செய்து வைத்திருக்கிறான்.
Saheeh International
Indeed, the Muslim men and Muslim women, the believing men and believing women, the obedient men and obedient women, the truthful men and truthful women, the patient men and patient women, the humble men and humble women, the charitable men and charitable women, the fasting men and fasting women, the men who guard their private parts and the women who do so, and the men who remember Allah often and the women who do so - for them Allah has prepared forgiveness and a great reward.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَی اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ یَّكُوْنَ لَهُمُ الْخِیَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِیْنًا ۟ؕ
وَمَا كَانَஆகுமானதல்லلِمُؤْمِنٍநம்பிக்கையுடைய ஆணுக்கு(ம்)وَّلَا مُؤْمِنَةٍநம்பிக்கையுடைய பெண்ணுக்கும்اِذَا قَضَىமுடிவுசெய்துவிட்டால்اللّٰهُஅல்லாஹ்வும்وَرَسُوْلُهٗۤஅவனது தூதரும்اَمْرًاஒரு காரியத்தைاَنْ يَّكُوْنَஇருப்பதுلَهُمُஅவர்களுக்குالْخِيَرَةُஒரு விருப்பம்مِنْ اَمْرِهِمْ ؕதங்களது காரியத்தில்وَمَنْயார்يَّعْصِமாறு செய்வாரோاللّٰهَஅல்லாஹ்வுக்கும்وَرَسُوْلَهٗஅவனது தூதருக்கும்فَقَدْதிட்டமாகضَلَّ ضَلٰلًاவழிகெட்டுவிட்டார்مُّبِيْنًا‏தெளிவாக
வமா கான லிமு'மினி(ன்)வ் வலா மு'மினதின் இதா களல் லாஹு வ ரஸூலுஹூ அம்ரன் அய் யகூன லஹுமுல் கியரது மின் அம்ரிஹிம்; வ மய் யஃஸில் லாஹ வ ரஸூலஹூ Fபகத் ளல்ல ளலாலம் முBபீனா
முஹம்மது ஜான்
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்.
IFT
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விவகாரத்தில் தீர்ப்பளித்துவிட்டால், பிறகு அந்த விவகாரத்தில் சுயமாகத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இறைநம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும், இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது. மேலும், எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றானோ, அவன் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்துவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்பவதற்கு, விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்தப் பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமான வழிகேடாக திட்டமாக வழிகெட்டுவிட்டார்.
Saheeh International
It is not for a believing man or a believing woman, when Allah and His Messenger have decided a matter, that they should [thereafter] have any choice about their affair. And whoever disobeys Allah and His Messenger has certainly strayed into clear error.
وَاِذْ تَقُوْلُ لِلَّذِیْۤ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِ وَاَنْعَمْتَ عَلَیْهِ اَمْسِكْ عَلَیْكَ زَوْجَكَ وَاتَّقِ اللّٰهَ وَتُخْفِیْ فِیْ نَفْسِكَ مَا اللّٰهُ مُبْدِیْهِ وَتَخْشَی النَّاسَ ۚ وَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشٰىهُ ؕ فَلَمَّا قَضٰی زَیْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنٰكَهَا لِكَیْ لَا یَكُوْنَ عَلَی الْمُؤْمِنِیْنَ حَرَجٌ فِیْۤ اَزْوَاجِ اَدْعِیَآىِٕهِمْ اِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا ۟
وَاِذْ تَقُوْلُநீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!لِلَّذِىْۤஎவருக்குاَنْعَمَஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்(வும்)عَلَيْهِஅவர் மீதுوَاَنْعَمْتَஇன்னும் அருள் புரிந்தீர்عَلَيْهِஅவர் மீதுاَمْسِكْவைத்துக்கொள்!عَلَيْكَஉன்னுடன்زَوْجَكَஉன் மனைவியைوَاتَّقِஇன்னும் அஞ்சிக்கொள் !اللّٰهَஅல்லாஹ்வைوَتُخْفِىْநீர் மறைக்கிறீர்فِىْ نَفْسِكَஉமது உள்ளத்தில்مَاஒன்றைاللّٰهُஅல்லாஹ்مُبْدِيْهِஅதை வெளிப்படுத்தக்கூடியவனாகوَتَخْشَىஇன்னும் பயப்படுகின்றீர்النَّاسَ ۚமக்களைوَاللّٰهُஅல்லாஹ்தான்اَحَقُّமிகத் தகுதியானவன்اَنْ تَخْشٰٮهُ ؕஅவனை நீர் பயப்படுவதற்குفَلَمَّا قَضٰىமுடித்துவிட்ட போதுزَيْدٌசைதுمِّنْهَاஅவளிடம்وَطَرًاதேவையைزَوَّجْنٰكَهَاஅவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம்لِكَىْ لَا يَكُوْنَஇருக்கக்கூடாது என்பதற்காகعَلَى الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குحَرَجٌசிரமம்فِىْۤ اَزْوَاجِமனைவிகள் விஷயத்தில்اَدْعِيَآٮِٕهِمْஅவர்களது வளர்ப்பு பிள்ளைகளின்اِذَا قَضَوْاஅவர்கள் முடித்துவிட்டபோதுمِنْهُنَّஅவர்களிடம்وَطَرًا ؕதேவையைوَكَانَஇருக்கின்றதுاَمْرُகாரியம்اللّٰهِஅல்லாஹ்வின்مَفْعُوْلًا‏நடக்கக்கூடியதாக
வ இத் தகூலு லில்லதீ அன்'அமல் லாஹு 'அலய்ஹி வ அன்'அம்த 'அலய்ஹி அம்ஸிக் 'அலய்க Zஜவ்ஜக வத்தகில் லாஹ வ துக்Fபீ Fபீ னFப்ஸிக மல் லாஹு முBப்தீஹி வ தக்-ஷன் னாஸ வல்லாஹு அஹக்கு அன் தக்-ஷாஹ்; Fபலம்மா களா Zஜய்தும் மின்ஹா வதரன் Zஜவ்வஜ்னா கஹா லிகய் லா யகூன 'அலல் மு'மினீன ஹரஜுன் Fபீ அZஜ்வாஜி அத்'இயா'இஹிம் இதா களவ் மின்ஹுன்ன வதரா; வ கான அம்ருல் லாஹி மFப்'ஊலா
முஹம்மது ஜான்
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ்வும், நீரும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி ‘‘ நீ அல்லாஹ்வுக்குப் பயந்து உன் மனைவியை (நீக்காது) உன்னிடமே நிறுத்திக் கொள்'' என்று கூறிய சமயத்தில், நீர் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உமது உள்ளத்தில் மறைத்தீர். நீர் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல.) ‘ஜைது' (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக்கு கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உமக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கையாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக்குக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை திருமணம் செய்து கொள்வதில் ஒரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும்.
IFT
மேலும் (நபியே!) அந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாரும்; எவர் மீது அல்லாஹ்வும் நீரும் உபகாரம் செய்திருந்தீர்களோ, அவரிடம் நீர் கூறிக்கொண்டிருந்தீர்: “உம்முடைய மனைவியைக் கைவிட்டு விடாதே! மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சு” நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உம்முடைய உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர். மேலும், நீர் மனிதர்களுக்கு அஞ்சிக் கொண்டிருந்தீர். ஆனால், அல்லாஹ்தான் நீர் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன்! ஸைத் அவளுடைய விஷயத்தில் தம் நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு (விவாகரத்து செய்யப்பட்ட) அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம் நம்பிக்கையாளர்களின் வளர்ப்பு மகன்கள் தம்முடைய மனைவிமார் விஷயத்தில் தம் தேவையை நிறைவேற்றி விடும்போது (விவாகரத்தான) அப்பெண்களின் விவகாரத்தில் நம்பிக்கையாளர்க்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக! மேலும், அல்லாஹ்வின் கட்டளையோ செயல்படுத்தப்பட வேண்டிய தாகவே இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் எவருக்கு (நேர் வழி காட்டுவதன் மூலம்) அருள் புரிந்து, நீரும் எவருக்கு (அடிமைத்தனத்திலிருந்து உரிமை விடுவதன் மூலம்) உபகாரம் செய்தீரோ அவரிடத்தில் “(ஜைனபு ஆகிய) உம்முடைய மனைவியை (விவாக பந்தத்திலிருந்து நீக்காது) உம்மிடமே (மனைவியாக) நிறுத்திக் கொள்ளும், இன்னும் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளும்” என்று நீர் கூறிய சமயத்தில்_(நடந்த இச்சம்பவத்தை நினைவு கூர்வீராக) அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைந்திருந்தீர். மேலும், மனிதர்களுக்கு நீர் பயப்படுகிறீர், இன்னும் அல்லாஹ்_அவன்தான் நீர் பயப்படுவதற்கு மிக உரியவன் (மனிதர்களல்ல). ஜைது (என்பவர்) ஜைனபைத் திருமணம் செய்து தாம்பத்திய வாழ்க்கை எனும் தன்) தேவையை அவளிடமிருந்து நிறைவேற்றிவிட்டபோது, நாம் அவளை உமக்குத் திருமணம் செய்து வைத்தோம், ஏனென்றால், விசுவாசிகளால் வளர்க்கப் பட்டவர்கள் தங்கள் தேவையை (அப்பெண்களான) அவர்களிடம் பூர்த்தி செய்துகொண்டு (அவர்களைத் தலாக்குக் கூறி)விட்டால், (அவர்களை வளர்த்த) விசுவாசிகள், (அவ்வாறு தலாக் கூறப்பட்ட) அப்பெண்களை திருமணம் செய்து கொள்வதில் யாதொரு குற்றமிருக்கக்கூடாது என்பதற்காக (உமக்கு, உமது வளர்ப்பு மகனால் விவாகரத்துச் செய்யப்பட்ட ஜைனபை திருமணம் செய்துவைத்தோம்.) மேலும், அல்லாஹ்வுடைய கட்டளை (இவ்வாறு) நடைபெற்றுத்தீர வேண்டியதாக இருந்தது.
Saheeh International
And [remember, O Muhammad], when you said to the one on whom Allah bestowed favor and you bestowed favor, "Keep your wife and fear Allah," while you concealed within yourself that which Allah is to disclose. And you feared the people, while Allah has more right that you fear Him. So when Zayd had no longer any need for her, We married her to you in order that there not be upon the believers any discomfort [i.e., guilt] concerning the wives of their claimed [i.e., adopted] sons when they no longer have need of them. And ever is the command [i.e., decree] of Allah accomplished.
مَا كَانَ عَلَی النَّبِیِّ مِنْ حَرَجٍ فِیْمَا فَرَضَ اللّٰهُ لَهٗ ؕ سُنَّةَ اللّٰهِ فِی الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلُ ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ قَدَرًا مَّقْدُوْرَا ۟ؗۙ
مَا كَانَஇருக்கவில்லைعَلَىமீதுالنَّبِىِّநபியின்مِنْ حَرَجٍஅறவே குற்றம்فِيْمَا فَرَضَகடமையாக்கியதைاللّٰهُஅல்லாஹ்لَهٗ ؕதனக்குسُنَّةَவழிமுறையைத்தான்اللّٰهِஅல்லாஹ்வின்فِى الَّذِيْنَ خَلَوْاசென்றவர்களில்مِنْ قَبْلُ ؕஇதற்கு முன்னர்وَكَانَஇருக்கின்றதுاَمْرُசெயல்اللّٰهِஅல்லாஹ்வின்قَدَرًاதீர்ப்பாகمَّقْدُوْرَا  ۙ‏நிறைவேற்றப்படுகின்ற
மா கான 'அலன் னBபிய்ய்யி மின் ஹரஜின் Fபீமா Fபரளல் லாஹு லஹூ ஸுன்னதல் லாஹி Fபில் லதீன கலவ் மின் கBப்ல்; வ கான அம்ருல் லாஹி கதரம் மக்தூரா
முஹம்மது ஜான்
நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை; இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் தனக்கு சட்டமாக்கிய ஒரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. இதற்கு முன் உள்ளவர்களுக்கு (நபிமார்களுக்கு) அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே. அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன.
IFT
அல்லாஹ் எந்த ஒரு பணியை நபிக்காக நிர்ணயித்துள்ளானோ அந்தப் பணியை ஆற்றுவதில் நபியின் மீது எந்தத் தடையும் இல்லை. முன்பு சென்ற நபிமார்களின் விவகாரத்திலும் இதுதான் அல்லாஹ்வுடைய நியதியாய் இருந்திருக்கின்றது. மேலும், அல்லாஹ்வுடைய கட்டளை திட்டவட்டமாக முடிவு செய்யப்பட்ட தீர்ப்பாய் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஜைனபை மணமுடிக்கும் விஷயத்தில்) நபியின் மீது அல்லாஹ் அவருக்காக விதியாக்கியதில் எவ்வித குற்றமும் இல்லை, இதற்கு முன் சென்றுவிட்டவர்(களாகிய நபிமார்)களுக்கு (அல்லாஹ் ஏற்படுத்திய) வழியும் இதுவே; இன்னும் அல்லாஹ்வுடைய கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கின்றது.
Saheeh International
There is not to be upon the Prophet any discomfort concerning that which Allah has imposed upon him. [This is] the established way of Allah with those [prophets] who have passed on before. And ever is the command of Allah a destiny decreed.
لَّذِیْنَ یُبَلِّغُوْنَ رِسٰلٰتِ اللّٰهِ وَیَخْشَوْنَهٗ وَلَا یَخْشَوْنَ اَحَدًا اِلَّا اللّٰهَ ؕ وَكَفٰی بِاللّٰهِ حَسِیْبًا ۟
اۨلَّذِيْنَ يُبَـلِّـغُوْنَஅவர்கள் எடுத்துச் சொல்வார்கள்رِسٰلٰتِதூதுச் செய்திகளைاللّٰهِஅல்லாஹ்வின்وَيَخْشَوْنَهٗஇன்னும் அவனை பயப்படுவார்கள்وَلَا يَخْشَوْنَஇன்னும் பயப்பட மாட்டார்கள்اَحَدًاஒருவரையும்اِلَّا اللّٰهَ ؕதவிர/அல்லாஹ்வைوَكَفٰىபோதுமான(வன்)بِاللّٰهِஅல்லாஹ்வேحَسِيْبًا‏விசாரணையாளன்
அல்லதீன யுBபல்லிகூன ரிஸாலாதில் லாஹி வ யக்-ஷவ் னஹூ வலா யக்க்-ஷவ்ன அஹதன் இல்லல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி ஹஸீBபா
முஹம்மது ஜான்
(இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே, நபியே! நீர் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். (இதைப் பற்றி அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.
IFT
(இது அல்லாஹ்வின் நியதியாகும்; இந்த மக்களுக்காக) அவர்களோ அல்லாஹ்வின் தூதுச்செய்திகளை சேர்ப்பிக்கின்றார்கள். அவனுக்கே அஞ்சுகின்றார்கள். மேலும், ஓரிறைவனைத் தவிர வேறு எவருக்கும் அவர்கள் அஞ்சுவதில்லை. மேலும், கணக்கு வாங்கிட அல்லாஹ் போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(முன் சென்றுவிட்ட) அவர்கள் எத்தகயோரென்றால் அல்லாஹ்வுடைய (இத்தகைய) தூதுச் செய்திகளை (மக்களுக்குக் கூடுதல் குறைவின்றி) எத்திவைப்பார்கள், இன்னும் அவர்கள் அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள், அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள், கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
Saheeh International
[Allah praises] those who convey the messages of Allah and fear Him and do not fear anyone but Allah. And sufficient is Allah as Accountant.
مَا كَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِیّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟۠
مَا كَانَஇருக்கவில்லைمُحَمَّدٌமுஹம்மதுاَبَآதந்தையாகاَحَدٍஒருவருக்கும்مِّنْ رِّجَالِكُمْஉங்கள் ஆண்களில்وَلٰـكِنْஎன்றாலும்رَّسُوْلَதூதராகவும்اللّٰهِஅல்லாஹ்வின்وَخَاتَمَஇறுதி முத்திரையாகவும்النَّبِيّٖنَ ؕநபிமார்களின்وَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمًا‏நன்கறிந்தவனாக
மா கான முஹம்ம்மதுன் அBபா அஹதிம் மிர் ரிஜாலிகும் வ லாகிர் ரஸூலல் லாஹி வ காதமன் னBபிய்யீன்; வ கானல் லாஹு Bபிகுல்லி ஷய்'இன் 'அலீமா
முஹம்மது ஜான்
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் ஒரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
IFT
(மக்களே!) முஹம்மத் உங்களுடைய ஆண்களில் எவருக்கும் தந்தையல்லர். ஆனால், அவர் அல்லாஹ்வின் தூதராகவும், இறுதிநபியாகவும் இருக்கின்றார். அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது தகப்பனாக இருக்கவில்லை, எனினும் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு(க் கடைசி) முத்திரையாகவும், (இறுதி நபியாகவும்) இருக்கிறார், அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிந்தோனாக இருக்கிறான்.
Saheeh International
Muhammad is not the father of [any] one of your men, but [he is] the Messenger of Allah and seal [i.e., last] of the prophets. And ever is Allah, of all things, Knowing.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوا اللّٰهَ ذِكْرًا كَثِیْرًا ۟ۙ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களேاذْكُرُوْاநினைவு கூறுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைذِكْرًا كَثِيْرًا ۙ‏மிக அதிகம்
யா அய்யுஹல் லதீன ஆமனுத் குருல் லாஹ திக்ரன் கதீரா
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைவு கூருங்கள்.
IFT
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளே! அல்லாஹ்வை அதிகமான நினைவு கூறுதலாக நினைவு கூறுங்கள்.
Saheeh International
O you who have believed, remember Allah with much remembrance
وَّسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِیْلًا ۟
وَّ سَبِّحُوْهُஇன்னும் அவனை துதியுங்கள்بُكْرَةًகாலையிலும்وَّاَصِيْلًا‏மாலையிலும்
வ ஸBப்Bபிஹூஹு Bபுக்ரத(ன்)வ் வ அஸீலா
முஹம்மது ஜான்
இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.
IFT
மேலும், காலையிலும், மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருங்கள். அவனே உங்கள் மீது கருணை பொழிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.
Saheeh International
And exalt Him morning and afternoon.
هُوَ الَّذِیْ یُصَلِّیْ عَلَیْكُمْ وَمَلٰٓىِٕكَتُهٗ لِیُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ وَكَانَ بِالْمُؤْمِنِیْنَ رَحِیْمًا ۟
هُوَ الَّذِىْஅவன்தான்يُصَلِّىْஅருள் புரிவான் -பிரார்த்திப்பார்(கள்)عَلَيْكُمْஉங்கள் மீதுوَمَلٰٓٮِٕكَتُهٗஇன்னும் அவனது வானவர்கள்لِيُخْرِجَكُمْஉங்களை அவன் வெளியேற்றுவதற்காகمِّنَ الظُّلُمٰتِஇருள்களிலிருந்துاِلَى النُّوْرِ ؕவெளிச்சத்தின் பக்கம்وَكَانَஅவன் இருக்கிறான்بِالْمُؤْمِنِيْنَநம்பிக்கை யாளர்கள் மீதுرَحِيْمًا‏மகா கருணையுள்ளவனாக
ஹுவல் லதீ யுஸல்லீ 'அலய்கும் வ மலா'இகதுஹூ லியுக்ரிஜகும் மினள்ளுலுமாதி இலன்-னூர் வ கான Bபில்மு'மினீன ரஹீமா
முஹம்மது ஜான்
உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே; இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்;) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் உங்களை(ப் பலவகைப் பாவ) இருள்களில் இருந்து வெளிப்படுத்தி பிரகாசத்தின் பக்கம் கொண்டுவந்து உங்கள் மீது அருள் புரிந்திருக்கிறான். அவனுடைய வானவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அல்லாஹ், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
IFT
அவனுடைய வானவர்களும் உங்கள் மீது கருணை புரியும்படி இறைஞ்சுகின்றார்கள்; அவன் உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் கொண்டுவருவதற்காக! அவன் நம்பிக்கையாளர்கள் மீது பெருங்கருணை பொழிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், உங்கள் மீது அவன் அருள் புரிகின்றான், இன்னும் அவனது மலக்குகளும் (உங்களுக்காக பாவ மன்னிப்புக் கேட்கிறார்கள்), காரணம், இருள்களிலிருந்து ஒளியின்பால் உங்களை அவன் வெளியேற்றுவதற்காக மேலும், அல்லாஹ் விசுவாசி(களாகிய உங்)கள் மீது மிக்க கிருபையுடையோனாக இருக்கிறான்.
Saheeh International
It is He who confers blessing upon you, and His angels [ask Him to do so] that He may bring you out from darknesses into the light. And ever is He, to the believers, Merciful.
تَحِیَّتُهُمْ یَوْمَ یَلْقَوْنَهٗ سَلٰمٌ ۚۖ وَاَعَدَّ لَهُمْ اَجْرًا كَرِیْمًا ۟
تَحِيَّتُهُمْஅவர்களது முகமன்يَوْمَ يَلْقَوْنَهٗஅவனை அவர்கள் சந்திக்கின்ற நாளில்سَلٰمٌ ۖۚஸலாம்وَاَعَدَّஇன்னும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான்لَهُمْஅவர்களுக்குاَجْرًاகூலியைكَرِيْمًا‏கண்ணியமான
தஹிய்யதுஹும் யவ்ம யல்கவ்னஹூ ஸலாமு(ன்)வ் வ அ'அத்த லஹும் அஜ்ரன் கரீமா
முஹம்மது ஜான்
அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் “ஸலாமுன்” (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்கள்) அவனைச் சந்திக்கும் நாளில் (உங்களுக்கு) ‘‘ஈடேற்றம் உண்டாவதாக'' என்று ஆசீர்வதிப்பான். அவர்களுக்காக மிக்க கண்ணியமான கூலியையும் அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
அவர்கள், அவனைச் சந்திக்கும் நாளில் ஸலாம் சாந்தி உண்டாகட்டும் என்று வாழ்த்துக் கூறி வரவேற்கப்படுவார்கள். மேலும், அல்லாஹ் அவர்களுக்காக கண்ணியமான கூலியை தயார் செய்து வைத்துள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனை அவர்கள் சந்திக்கும் நாளில், அவர்களுக்குரிய காணிக்கை “(உங்களுக்குச்) சாந்தி உண்டாவதாக” என்பதாகும், மேலும், அவர்களுக்காக கண்ணியமான கூலியையும் அவன் தயாராக்கி வைத்திருக்கிறான்.
Saheeh International
Their greeting the Day they meet Him will be, "Peace." And He has prepared for them a noble reward.
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِیْرًا ۟ۙ
يٰۤـاَيُّهَا النَّبِىُّநபியே!اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنٰكَநாம் உம்மை அனுப்பினோம்شَاهِدًاசாட்சியாளராக(வும்)وَّمُبَشِّرًاநற்செய்தி கூறுபவராகவும்وَّنَذِيْرًا ۙ‏அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்
யா அய்யுஹன் னBபிய்யு இன்னா அர்ஸல்னாக ஷாஹித(ன்)வ் வ முBபஷ்ஷிர(ன்)வ் வ னதீரா
முஹம்மது ஜான்
நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
அப்துல் ஹமீது பாகவி
நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்குச்) சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.
IFT
நபியே! (சத்தியத்திற்காகச்) சாட்சியம் பகருபவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், அச்சமூட்டி, எச்சரிக்கை செய்பவராகவும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்குச்) சாட்சியாளராகவும், நன்மாராயங்கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.
Saheeh International
O Prophet, indeed We have sent you as a witness and a bringer of good tidings and a warner
وَّدَاعِیًا اِلَی اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِیْرًا ۟
وَّدَاعِيًاஅழைப்பவராகவும்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்بِاِذْنِهٖஅவனது அனுமதிகொண்டுوَسِرَاجًاவிளக்காகவும்مُّنِيْرًا‏பிரகாசிக்கின்ற
வ தா'இயன் இலல் லாஹி Bபி இத்னிஹீ வ ஸிராஜம் முனீரா
முஹம்மது ஜான்
இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.)
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி (மக்களை நீர்) அவன் பக்கம் அழைப்பவராகவும் பிரகாசிக்கும் ஒரு விளக்காகவும் (இருக்கிறீர்).
IFT
அல்லாஹ்வின் பக்கம் அவனுடைய அனுமதியுடன் அழைப்பு விடுப்பவராகவும், சுடர்வீசும் விளக்காகவும் நாம் உம்மை அனுப்பியிருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ்வின்பால்_அவனின் அனுமதி கொண்டு_(ஜனங்களை) நீர் அழைப்பவராகவும், பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.)
Saheeh International
And one who invites to Allah, by His permission, and an illuminating lamp.
وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ بِاَنَّ لَهُمْ مِّنَ اللّٰهِ فَضْلًا كَبِیْرًا ۟
وَبَشِّرِநற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குبِاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடம்فَضْلًاஅருள்كَبِيْرًا‏மிகப் பெரிய
வ Bபஷ்ஷிரில் மு'மினீன Bபி அன்ன்ன லஹும் மினல் லாஹி Fபள்லன் கBபீரா
முஹம்மது ஜான்
எனவே! முஃமின்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாக பேரருட்கொடை இருக்கிறதென நன்மாராயங் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக பெரும் அருள் இருப்பதாக நீர் அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
IFT
எனவே, எவர்கள் (உம்மீது) நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு, அல்லாஹ்விடமிருந்து திண்ணமாக, பெரும் வெகுமதி இருக்கின்றது எனும் நற்செய்தியினை அறிவிப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) விசுவாசிகளுக்கு_அல்லாஹ்விடமிருந்து, நிச்சயமாக அவர்களுக்கு_பெரும்பேரருள் உண்டு என்று நீர் நன்மாராயமும் கூறுவீராக!
Saheeh International
And give good tidings to the believers that they will have from Allah great bounty.
وَلَا تُطِعِ الْكٰفِرِیْنَ وَالْمُنٰفِقِیْنَ وَدَعْ اَذٰىهُمْ وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
وَلَا تُطِعِகீழ்ப்படியாதீர்الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்கு(ம்)وَالْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்களுக்கும்وَدَعْஇன்னும் விட்டுவிடுவீராக!اَذٰٮهُمْஅவர்களின் தொந்தரவைوَتَوَكَّلْஇன்னும் சார்ந்து இருப்பீராக!عَلَى اللّٰهِ ؕஅல்லாஹ்வைوَكَفٰىபோதுமான(வன்)بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِيْلًا‏பொறுப்பாளன்
வ லா துதி'இல் காFபிரீன வல்முனாFபிகீன வ தஃஅதாஹும் வ தவக்கல் 'அலல்லாஹ்; வ கFபா Bபில்லாஹி வகீலா
முஹம்மது ஜான்
அன்றியும் காஃபிர்களுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக; அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் நீர் கீழ்ப்படியாதீர். அவர்களால் (உமக்கு) ஏற்படும் துன்பங்களை புறக்கணித்து விடுவீராக. (உம்முடைய எல்லா காரியங்களின்) பொறுப்பை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விடுவீராக. அல்லாஹ்வே (உமக்குப்) பொறுப்பேற்கப் போதுமானவன்.
IFT
நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் ஒருபோதும் நீர் பணிந்துவிடாதீர். அவர்களுடைய துன்புறுத்தலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாதீர். மேலும், அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! (மனிதன் தன்னுடைய) விவகாரங்களை ஒப்படைப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிராகரிப்போருக்கும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளுக்கும் நீர் கீழ்படியாதீர், அவர்கள் (இழைக்கும்) துன்பங்களையும் நீர் (புறக்கணித்து) விட்டுவிடுவீராக! (உம்முடைய சகல காரியங்களையும் அவனிடமே ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் வைப்பீராக! பொறுப்பேற்கிறவனாக இருக்க அல்லாஹ்வே (உமக்குப்) போதுமானவன்.
Saheeh International
And do not obey the disbelievers and the hypocrites and disregard their annoyance, and rely upon Allah. And sufficient is Allah as Disposer of affairs.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنٰتِ ثُمَّ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ فَمَا لَكُمْ عَلَیْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّوْنَهَا ۚ فَمَتِّعُوْهُنَّ وَسَرِّحُوْهُنَّ سَرَاحًا جَمِیْلًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاِذَا نَكَحْتُمُநீங்கள் திருமணம் முடித்தால்الْمُؤْمِنٰتِநம்பிக்கைகொண்ட பெண்களைثُمَّபிறகுطَلَّقْتُمُوْهُنَّஅவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால்مِنْ قَبْلِமுன்னர்اَنْ تَمَسُّوْநீங்கள் உறவு வைப்பதற்குهُنَّஅவர்களுடன்فَمَا لَـكُمْஉங்களுக்கு இல்லைعَلَيْهِنَّஅவர்கள் மீதுمِنْ عِدَّةٍஎவ்வித இத்தாவும்تَعْتَدُّوْنَهَا ۚநீங்கள் அதைக் கணக்கிட வேண்டியفَمَتِّعُوْசெல்வத்தை கொடுங்கள்!هُنَّஅவர்களுக்குوَسَرِّحُوْஇன்னும் விடுவித்து விடுங்கள்هُنَّஅவர்களைسَرَاحًاவிடுவித்தல்جَمِيْلًا‏அழகிய முறையில்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா னகஹ்துமுல் மு'மினாதி தும்ம தல்லக்து மூஹுன்ன மின் கBப்லி அன் தமஸ் ஸூஹுன்ன Fபமா லகும் 'அலய்ஹின்ன மின் 'இத்ததின் தஃதத்தூனஹா Fபமத்தி'ஊஹுன்ன வ ஸர்ரி ஹூஹுன்ன ஸராஹன் ஜமீலா
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே “தலாக்” செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை நீங்கள் தொடுவதற்கு முன்னதாகவே ‘தலாக்' கூறி (அவர்களை நீக்கி) விட்டால் (தலாக்குக் கூறப்பட்ட பெண்கள் இத்தா இருக்கவேண்டிய) கணக்கின்படி இத்தா இருக்கும்படி அவர்களை வற்புறுத்த உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. (அதாவது: அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.) நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (மண வாழ்க்கையில் இருந்து) அவர்களை நீக்கிவிடுங்கள்.
IFT
நம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து பின்னர் அவர்களைத் தொடுவதற்கு முன்பாக விவாகரத்துச் செய்து விட்டால், நிறைவேற்றுமாறு நீங்கள் கோரக்கூடிய வகையில் உங்களுக்காக அவர்கள் மீது ‘இத்தா’ எதுவும் இல்லை. எனவே, அவர்களுக்குக் கொஞ்சம் பொருள்களைக் கொடுத்து நல்ல முறையில் அவர்களை அனுப்பி வைத்துவிடுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் விசுவாசங்கொண்ட பெண்களைத் திருமணம் செய்து, பிறகு அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் தலாக் கூறி விட்டால், (மற்ற விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்காக) நீங்கள் எதைக் கணக்கிடுவீர்களோ அத்தகைய எந்த “இத்தா”வும் அவர்களின் மீது (நிர்ணயிக்க) உங்களுக்கு (உரிமை) இல்லை. எனவே, நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (விவாக பந்தத்திலிருந்து) அவர்களை விடுவித்தும் விடுங்கள்.
Saheeh International
O you who have believed, when you marry believing women and then divorce them before you have touched them [i.e., consummated the marriage], then there is not for you any waiting period to count concerning them. So provide for them and give them a gracious release.
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِنَّاۤ اَحْلَلْنَا لَكَ اَزْوَاجَكَ الّٰتِیْۤ اٰتَیْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَكَتْ یَمِیْنُكَ مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ عَلَیْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِیْ هَاجَرْنَ مَعَكَ ؗ وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِیِّ اِنْ اَرَادَ النَّبِیُّ اَنْ یَّسْتَنْكِحَهَا ۗ خَالِصَةً لَّكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَیْهِمْ فِیْۤ اَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ اَیْمَانُهُمْ لِكَیْلَا یَكُوْنَ عَلَیْكَ حَرَجٌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
يٰۤاَيُّهَا النَّبِىُّநபியே!اِنَّاۤநிச்சயமாக நாம்اَحْلَلْنَاஆகுமாக்கினோம்لَـكَஉமக்குاَزْوَاجَكَஉமது மனைவிகளை(யும்)الّٰتِىْۤஎவர்கள்اٰتَيْتَநீர் கொடுத்தீர்اُجُوْرَதிருமணக் கொடைகளைهُنَّஅவர்களின்وَمَاஇன்னும் எவர்கள்مَلَـكَتْசொந்தமாகிய(து)يَمِيْنُكَஉமது வலக்கரம்مِمَّاۤ اَفَآءَ اللّٰهُஅல்லாஹ் போரில் கொடுத்தவர்களிலிருந்துعَلَيْكَஉமக்குوَبَنٰتِமகள்களையும்عَمِّكَஉமது சாச்சாவின்وَبَنٰتِமகள்களையும்عَمّٰتِكَஉமது மாமியின்وَبَنٰتِமகள்களையும்خَالِكَஉமது தாய் மாமாவின்وَبَنٰتِமகள்களையும்خٰلٰتِكَஉமது காலாவின்الّٰتِىْஎவர்கள்هَاجَرْنَஹிஜ்ரா செய்தனர்مَعَكَஉம்முடன்وَامْرَاَةًஇன்னும் ஒரு பெண்مُّؤْمِنَةًமுஃமினானاِنْ وَّهَبَتْஅன்பளிப்பு செய்தால்نَفْسَهَاதன்னைلِلنَّبِىِّநபிக்குاِنْ اَرَادَநாடினால்النَّبِىُّநபி(யும்)اَنْ يَّسْتَـنْكِحَهَاஅவளை மணமுடிக்கخَالِصَةًபிரத்தியோகமாகும்لَّـكَஉமக்கு மட்டும்مِنْ دُوْنِஅன்றிالْمُؤْمِنِيْنَ ؕமுஃமின்கள்قَدْதிட்டமாகعَلِمْنَاநாம் அறிவோம்مَا فَرَضْنَاநாம் கடமையாக்கியதைعَلَيْهِمْஅவர்கள் மீதுفِىْۤ اَزْوَاجِهِمْஅவர்களின் மனைவிமார்களின் விஷயத்தில்وَمَا مَلَـكَتْ اَيْمَانُهُمْஇன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள்لِكَيْلَا يَكُوْنَஇருக்கக் கூடாது என்பதற்காகعَلَيْكَஉமக்குحَرَجٌ ؕசிரமம்وَكَانَ اللّٰهُஅல்லாஹ் இருக்கின்றான்غَفُوْرًاமன்னிப்பாளனாக,رَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
யா அய்யுஹன் னBபிய்யு இன்னா அஹ்லல்னா லக அZஜ்வா ஜகல் லாதீ ஆதய்ய்த உஜூர ஹுன்ன வமா மலகத் யமீனுக மிம்மா அFபா'அல் லாஹு 'அலய்க வ Bபனாதி 'அம்மிக வ Bபனாதி 'அம்மாதிக வ Bபனாதி காலிக வ Bபனாதி காலா திகல் லாதீ ஹாஜர்ன ம'அக வம்ர' அதன் மு'மினதன் இ(ன்)வ் வஹBபத் னFப்ஸஹா லின் னBபிய்யி இன் அராதன் னBபிய்யு அய் யஸ்தன் கிஹஹா காலிஸதன் லக மின் தூனில் மு'மினீன்; கத் 'அலிம்னா மா Fபரள்னா 'அலய்ஹிம் Fபீ அZஜ்வாஜிஹிம் வமா மலகத் அய்மானுஹும் லி கய்லா யகூன 'அலய்க ஹரஜ்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
நபியே! நிச்சயமாக நீர் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொண்ட பெண்களையும், அல்லாஹ் உமக்கு (யுத்தத்தில்) கொடுத்தவர்களில் உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையும் நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். உமது தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உமது அத்தையின் மகள்கள், உமது தாய்மாமனின் மகள்கள், உமது தாயின் சகோதரியுடைய மகள்கள் ஆகிய இவர்களில் எவர்கள் (மக்காவை விட்டு) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் (நீர் திருமணம் செய்துகொள்ள நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். மேலும்) நம்பிக்கை கொண்ட ஒரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து நபியும் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அவளையும் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். (நபியே!) இது சொந்தமாக உமக்கு (நாம் அளிக்கும்) விசேஷ சுதந்திரமாகும்; மற்ற நம்பிக்கையாளர்களுக்கல்ல. (மற்ற நம்பிக்கையாளர்களே!) அவர்கள் மனைவிகள் விஷயத்திலும், அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் விஷயத்திலும் (மஹர் கொடுத்தே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், நான்குக்கு அதிகமான பெண்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்றும்) நாம் அவர்கள் மீது சட்டமாக்கி இருக்கும் கட்டளையை நன்கறிவோம். (அதை அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்.) உமக்கு அத்தகைய நிர்ப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்காக (அக்கடமையிலிருந்து) உமக்கு விதி விலக்குச் செய்தோம். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
IFT
நபியே! நீர் மஹர் கொடுத்துவிட்ட உம்முடைய மனைவியரையும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்டு உமது கைவசத்தில் வந்துள்ள அடிமைப் பெண்களையும், மற்றும் உம்மோடு ஹிஜ்ரத்* செய்த பெண்களாகிய உம் தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உம் தந்தையின் சகோதரிகளின் மகள்கள், உம் தாயின் சகோதரர்களின் மகள்கள், உம் தாயின் சகோதரிகளின் மகள்கள் ஆகியோரையும் திண்ணமாக, நாம் உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம். மேலும், இறைநம்பிக்கை கொண்ட பெண்ணையும் அவள் தன்னைத் தானே நபிக்காக அன்பளிப்பாய் வழங்கி, நபியும் அவளைத் திருமணம் செய்திட விரும்பும் பட்சத்தில் (உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம்). இந்தச் சலுகை உமக்கு மட்டுமே உரியதாகும்; பிற நம்பிக்கையாளர்களுக்கு இல்லை! ஏனைய நம்பிக்கையாளர்கள் மீது அவர்களுடைய மனைவிகள் மற்றும் அடிமைப் பெண்களின் விஷயத்தில் என்னென்ன வரையறைகளை நாம் விதித்திருக்கின்றோம் என்பதை நாம் அறிவோம். (இவ்வரையறைகளிலிருந்து உமக்கு நாம் விலக்களித்திருப்பது) உமக்கு எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்! மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! எவர்களின் மஹர்களை நீர் கொடுத்து விட்டீரோ அத்தகைய உம்முடைய மனைவியரையும், அல்லாஹ் உமக்கு (யுத்தத்தில்) அளித்து உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், (மக்காவை விட்டு) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களே அத்தகைய உம் தந்தையின் சகோதரரின் புதல்வியரையும், உம் தந்தையின் சகோதரிகளுடைய புதல்வியரையும், உமது தாய் மாமனின் புதல்வியரையும், உம் தாயின் சகோதரிகளுடைய புதல்வியரையும் மஹர் கொடுத்து நீர் திருமணம் செய்து கொள்ள) நிச்சயமாக நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம், மேலும், விசுவாசங்கொண்ட ஒரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து, நபியும் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், (அவளையும் மணக்க உமக்கு அனுமதி அளித்தோம்.) நபியே! இது மற்ற விசுவாசிகளுக்கன்றி உமக்கு மட்டும் பிரத்தியேகமாக உள்ளதாகும், (மற்ற விசுவாசிகள்) அவர்கள் மனைவியரிலும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவற்றிலும், நாம் அவர்கள் மீது விதித்திருக்கும் கட்டளையை நாம் நன்கறிவோம், உமக்கு (அனுமதிக்கப்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண்ட விஷயத்தில்) எவ்வித சங்கடமும் எற்படாமலிப்பதற்காக (அக்கடமையிலிருந்து உமக்கு விதி விலக்குச் செய்தோம்.) மேலும், அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
O Prophet, indeed We have made lawful to you your wives to whom you have given their due compensation and those your right hand possesses from what Allah has returned to you [of captives] and the daughters of your paternal uncles and the daughters of your paternal aunts and the daughters of your maternal uncles and the daughters of your maternal aunts who emigrated with you and a believing woman if she gives herself to the Prophet [and] if the Prophet wishes to marry her; [this is] only for you, excluding the [other] believers. We certainly know what We have made obligatory upon them concerning their wives and those their right hands possess, [but this is for you] in order that there will be upon you no discomfort [i.e., difficulty]. And ever is Allah Forgiving and Merciful.
تُرْجِیْ مَنْ تَشَآءُ مِنْهُنَّ وَتُـْٔوِیْۤ اِلَیْكَ مَنْ تَشَآءُ ؕ وَمَنِ ابْتَغَیْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَیْكَ ؕ ذٰلِكَ اَدْنٰۤی اَنْ تَقَرَّ اَعْیُنُهُنَّ وَلَا یَحْزَنَّ وَیَرْضَیْنَ بِمَاۤ اٰتَیْتَهُنَّ كُلُّهُنَّ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا فِیْ قُلُوْبِكُمْ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَلِیْمًا ۟
تُرْجِىْதள்ளிவைப்பீராக!مَنْ تَشَآءُநீர் நாடுகின்றவரைمِنْهُنَّஅவர்களில்وَتُـــْٔوِىْۤசேர்த்துக்கொள்வீராக!اِلَيْكَஉம் பக்கம்مَنْ تَشَآءُ ؕநீர் நாடுகின்றவரைوَمَنِ ابْتَغَيْتَஇன்னும் யாரை நீர் சேர்க்க விரும்பினீரோمِمَّنْ عَزَلْتَநீர்நீக்கிவிட்டவர்களில்فَلَا جُنَاحَகுற்றம் இல்லைعَلَيْكَ ؕஉம்மீதுذٰ لِكَஇதுاَدْنٰٓىசுலபமானதாகும்اَنْ تَقَرَّகுளிர்ச்சி அடைவதற்கு(ம்)اَعْيُنُهُنَّஅவர்களின் கண்கள்وَلَا يَحْزَنَّஅவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும்وَيَرْضَيْنَஇன்னும் அவர்கள் திருப்தி அடைவதற்கும்بِمَاۤ اٰتَيْتَهُنَّநீர் அவர்களுக்கு கொடுத்ததைக்கொண்டுكُلُّهُنَّ ؕஅவர்கள் எல்லோரும்وَاللّٰهُஅல்லாஹ்يَعْلَمُநன்கறிவான்مَا فِىْ قُلُوْبِكُمْ ؕஉங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைوَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَلِيْمًا‏மகா சகிப்பாளனாக
துர்ஜீ மன் தஷா'உ மின்ஹுன்ன வ து'வீ இலய்க மன் தஷா'உ வ மனிBப்த கய்த மிம்மன் 'அZஜல்த Fபலா ஜுனாஹ 'அலய்க்; தாலிக அத்னா அன் தகர்ர அஃயுனுஹுன்ன வலா யஹ்Zஜன்ன வ யர்ளய்ன Bபிமா ஆதய்தஹுன்ன குல்லுஹுன்ன்; வல் லாஹு யஃலமு மா Fபீ குலூ Bபிகும்; வ கானல் லாஹு 'அலீமன் ஹலீமா
முஹம்மது ஜான்
அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது மனைவிகளில் நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) விலக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் விலக்கியவர்களில் நீர் விரும்பியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இவற்றைப் பற்றி) உம் மீது ஒரு குற்றமுமில்லை. அவர்களுடைய கண்கள் குளிர்ந்திருப்பதற்கும் நீர் அவர்களுக்குக் கொடுத்தவற்றைப் பற்றி அவர்கள் அனைவருமே திருப்தியடைந்து கவலைப்படாதிருப்பதற்கும் இது மிக்க சுலபமான வழியாக இருக்கிறது. உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனாக, பொறுமையுடையவனாக இருக்கிறான்.
IFT
உம்முடைய மனைவியரில் உம்முடைய விருப்பப்படி சிலரை உம்மைவிட்டுத் தனிமைப்படுத்தி வைப்பதற்கும், நீர் விரும்புகின்றபடி வேறு சிலரை உம்முடன் வைத்துக் கொள்வதற்கும், நீர் தனிமைப்படுத்தி வைத்தவர்களில் எவரையாவது நீர் அழைத்துக் கொள்வதற்கும் அனுமதி இருக்கிறது, (இந்த விவகாரத்தில்) உம் மீது எத்தகைய தவறுமில்லை. இதனால் இவர்கள் கண் குளிர்ந்தும் வருத்தமற்றும் இருப்பார்கள் என்பதையும், மேலும், எதனை நீர் அவர்களுக்கு அளித்தாலும் அதனைக் குறித்து அவர்கள் அனைவரும் திருப்தி கொள்வார்கள் என்பதையும் அதிகம் எதிர்பார்க்கலாம். உங்களுடைய உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். மேலும், அல்லாஹ் யாவும் அறிந்தவனாகவும், சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உம்முடைய மனைவியராகிய) அவர்களில், நீர் விரும்பியவரை ஒதுக்கி வைக்கலாம், நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவும் வைக்கலாம், நீர் ஒதுக்கியவர்களில், நீர் எவரையேனும் (மீண்டும்) நாடினால் உம்மீது குற்றமில்லை. அது, அவர்களுடைய கண்கள் குளிர்சியடைவதற்கும், அவர்கள் கவலைபடாமலிருப்பதற்கும், நீர் அவர்களனைவருக்கும் எதைக் கொடுத்தீரோ அதைக் கொண்டு திருப்தியடைவதற்கும் மிக்க நெருக்கமானதாகும், இன்னும், உங்களுடைய உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிவான், மேலும், அல்லாஹ் (யாவையும்) நன்கறிந்தவனாக, சகித்துக் கொள்பவனாக இருக்கிறான்.
Saheeh International
You, [O Muhammad], may put aside whom you will of them or take to yourself whom you will. And any that you desire of those [wives] from whom you had [temporarily] separated - there is no blame upon you [in returning her]. That is more suitable that they should be content and not grieve and that they should be satisfied with what you have given them - all of them. And Allah knows what is in your hearts. And ever is Allah Knowing and Forbearing.
لَا یَحِلُّ لَكَ النِّسَآءُ مِنْ بَعْدُ وَلَاۤ اَنْ تَبَدَّلَ بِهِنَّ مِنْ اَزْوَاجٍ وَّلَوْ اَعْجَبَكَ حُسْنُهُنَّ اِلَّا مَا مَلَكَتْ یَمِیْنُكَ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ رَّقِیْبًا ۟۠
لَا يَحِلُّஆகுமாக மாட்டார்கள்لَـكَஉமக்குالنِّسَآءُபெண்கள்مِنْۢ بَعْدُபின்னர்وَلَاۤ اَنْ تَبَدَّلَஇன்னும் நீர் மாற்றுவதும் (உமக்கு) ஆகுமானதல்லبِهِنَّஇவர்களுக்கு பதிலாகمِنْ اَزْوَاجٍ(வேறு) பெண்களைوَّلَوْ اَعْجَبَكَஉம்மைக் கவர்ந்தாலும் சரியே!حُسْنُهُنَّஅவர்களின் அழகுاِلَّاதவிரمَا مَلَـكَتْசொந்தமாக்கிய பெண்கள்يَمِيْنُكَ‌ؕஉமது வலக்கரம்وَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்رَّقِيْبًا‏கண்காணிப்பவனாக
லா யஹில்லு லகன் னிஸா'உ மிம் Bபஃது வ லா அன் தBபத்தல Bபிஹின்ன மின் அZஜ்வாஜி(ன்)வ் வ லவ் அஃஜBபக ஹுஸ்னுஹுன்ன இல்லா மா மலகத் யமீனுக்க்; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இர் ரகீBபா
முஹம்மது ஜான்
இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.  
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இப்போதிருக்கும் உமது மனைவிகளுக்குப்) பின்னர், வேறு பெண்கள் (அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ள) உமக்கு ஆகுமாக மாட்டார்கள். மேலும், ஒரு பெண்ணின் அழகு உம்மை கவர்ந்தபோதிலும் உமது மனைவிகளில் எவரையும் நீக்கி, அதற்குப் பதிலாக அவளை எடுத்துக் கொள்வதும் உமக்கு ஆகுமாகாது. ஆயினும், உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண் அவ்வாறல்ல. (அவள் உமக்கு ஆகுமானவளே!) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கிறான்.
IFT
இதற்குப் பின்னர், வேறு பெண்கள் உமக்கு ஆகுமானவர்களல்லர். மேலும், இம்மனைவியருக்குப் பகரமாக நீர் வேறு மனைவியரை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அனுமதியில்லை. அவர்களின் அழகு உமக்கு மிகவும் பிடித்தமானதாயினும் சரியே! ஆயினும் உமக்கு அடிமைப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ் யாவற்றையும் கண்காணிப்பவனாயிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! இதற்குப்) பின்னர், உம்வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர (நீர் திருமணம் செய்து கொள்ள) வேறு பெண்கள் உமக்கு ஆகுமாகமாட்டர்கள், இன்னும், அவர்களுடைய (இடத்தில் வேறு பெண்களின்) அழகு உம்மை கவர்ந்த போதிலும் அவர்களை, (உம்முடைய மனைவியராக) இவர்களைக் கொண்டு நீர் மாற்றிக் கொள்வதும் உமக்கு (அனுமதி) இல்லை, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் கண்காணிக்கிறவனாக இருக்கிறான்.
Saheeh International
Not lawful to you, [O Muhammad], are [any additional] women after [this], nor [is it] for you to exchange them for [other] wives, even if their beauty were to please you, except what your right hand possesses. And ever is Allah, over all things, an Observer.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتَ النَّبِیِّ اِلَّاۤ اَنْ یُّؤْذَنَ لَكُمْ اِلٰی طَعَامٍ غَیْرَ نٰظِرِیْنَ اِنٰىهُ ۙ وَلٰكِنْ اِذَا دُعِیْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِیْنَ لِحَدِیْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ یُؤْذِی النَّبِیَّ فَیَسْتَحْیٖ مِنْكُمْ ؗ وَاللّٰهُ لَا یَسْتَحْیٖ مِنَ الْحَقِّ ؕ وَاِذَا سَاَلْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْـَٔلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰلِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ وَمَا كَانَ لَكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِیْمًا ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!لَا تَدْخُلُوْاநுழையாதீர்கள்بُيُوْتَவீடுகளுக்குள்النَّبِىِّநபியின்اِلَّاۤதவிரاَنْ يُّؤْذَنَஅனுமதி கொடுக்கப்பட்டால்لَـكُمْஉங்களுக்குاِلٰى طَعَامٍஓர் உணவின் பக்கம்غَيْرَ نٰظِرِيْنَஎதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும்اِنٰٮهُஅது தயாராவதைوَلٰـكِنْஎன்றாலும்,اِذَا دُعِيْتُمْநீங்கள் அழைக்கப்பட்டால்فَادْخُلُوْاநுழையுங்கள்فَاِذَا طَعِمْتُمْநீங்கள் சாப்பிட்டுவிட்டால்فَانْتَشِرُوْاபிரிந்துவிடுங்கள்وَلَا مُسْتَاْنِسِيْنَபுதிதாக ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும்لِحَـدِيْثٍ ؕபேச்சைاِنَّ ذٰلِكُمْநிச்சயமாக இதுكَانَஇருக்கின்றதுيُؤْذِىதொந்தரவு தரக்கூடியதாகالنَّبِىَّநபிக்குفَيَسْتَحْىٖஅவர்வெட்கப்படுவார்مِنْكُمْஉங்களிடம்وَاللّٰهُஅல்லாஹ்لَا يَسْتَحْىٖவெட்கப்படமாட்டான்مِنَ الْحَـقِّ ؕசத்தியத்திற்குوَاِذَا سَاَ لْتُمُوْநீங்கள் கேட்டால்هُنَّஅவர்களிடம்مَتَاعًاஒரு பொருளைفَسْــٴَــــلُوْகேளுங்கள்هُنَّஅவர்களிடம்مِنْ وَّرَآءِபின்னால் இருந்துحِجَابٍ ؕதிரைக்குذٰ لِكُمْஅதுதான்اَطْهَرُமிகத் தூய்மையானதுلِقُلُوْبِكُمْஉங்கள் உள்ளங்களுக்கு(ம்)وَقُلُوْبِهِنَّ ؕஅவர்களின் உள்ளங்களுக்கும்وَمَا كَانَஆகுமானதல்லلَـكُمْஉங்களுக்குاَنْ تُؤْذُوْاநீங்கள் தொந்தரவு தருவது(ம்)رَسُوْلَதூதருக்குاللّٰهِஅல்லாஹ்வின்وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤاநீங்கள் மணமுடிப்பதும்اَزْوَاجَهٗஅவருடைய மனைவிகளைمِنْۢ بَعْدِهٖۤஅவருக்குப் பின்னர்اَبَدًا ؕஎப்போதும்اِنَّ ذٰ لِكُمْநிச்சயமாக/இவைكَانَஇருக்கின்றதுعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்عَظِيْمًا‏பெரிய பாவமாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்குலூ Bபு யூதன் னBபிய்யி இல்லா அய் யு'தன லகும் இலா த'ஆமின் கய்ர னாளிரீன இனாஹு வ லாகின் இதா து'ஈதும் Fபத்குலூ Fப இதா த'இம்தும் Fபன்தஷிரூ வலா முஸ்தானிஸீன லிஹதீத்; இன்ன தாலிகும் கான யு'தின் னBபிய்ய Fப யஸ்தஹ்யீ மின்கும் வல்லாஹு லா யஸ்தஹ்யீ மினல் ஹக்க்; வ இதா ஸ அல்துமூஹுன்ன மதா'அன் Fபஸ்'அலூஹுன்ன மி(ன்)வ் வரா'இ ஹிஜாBப்; தாலிகும் அத்ஹரு லிகுலூBபிகும் வ குலூBபிஹின்ன்; வமா கான லகும் அன் து'தூ ரஸூலல் லாஹி வ லா அன் தன்கிஹூ அZஜ்வாஜஹூ மிம் Bபஃதிஹீ அBபதா; இன்ன தாலிகும் கான 'இன்தல் லாஹி 'அளீமா
முஹம்மது ஜான்
முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்கள் நபி விருந்துக்காக அழைத்திருந்த போதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள்.அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப்பட்டால்தான் உள்ளே செல்லவும். மேலும், நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளியேறி விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் ஒரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமான தல்ல. மேலும், அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும்.
IFT
நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் அனுமதியின்றி நுழையாதீர்கள்; உணவு தயாராகும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டும் இருக்காதீர்கள். ஆனால், நீங்கள் உணவு உண்பதற்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்லுங்கள்; சாப்பிட்டு முடிந்ததும் பிரிந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஈடுபட்டு விடாதீர்கள்; உங்களுடைய இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், வெட்கத்தின் காரணத்தால் உங்களிடம் அவர் எதுவும் சொல்வதில்லை. ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் மனைவியரிடம் நீங்கள் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். உங்களுடையவும், அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை கொடுப்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவருக்குப் பின்னர் அவருடைய மனைவியரை நீங்கள் திருமணம் முடிப்பதும் ஒருபோதும் ஆகுமானதன்று. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் திண்ணமாக, பெரும் பாவமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! உணவின்பால் (அதை உண்ண) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலே தவிர, அது தயாராவதை எதிர்பார்த்திராதவர்களாக (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள். எனினும் நீங்கள் அழைக்கப்பட்டால், அப்பொழுது பிரவேசியுங்கள், பின்னர் நீங்கள் உணவைப் புசித்துவிட்டால், (அங்கிருந்து கொண்டே) பேசுவதில் விருப்பம் கொண்டவர்களாகவும் ஆகிவிடாது கலைந்து சென்று விடுங்கள், நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாக இருந்தது, ஆகவே, (இதனை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுகிறார், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படவுமாட்டான், மேலும், (நபியுடைய மனைவியராக) அவர்களிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்(க நேரிட்)டால், நீங்கள் திரைக்கு அப்பால் இருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள், அ(வ்வாறு செய்வ)து உங்கள் உள்ளங்களுக்கும், அவர்கள் உள்ளங்களுக்கும் மிகப் பரிசுத்தமானதாகும், மேலும், அல்லாஹ்வுடைய தூதருக்கு நீங்கள் தொல்லை கொடுப்பது உங்களுக்குத் தகுமானதன்று, அவருடைய மனைவியரை அவருக்குப் பின்னர் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் ஒரு காலத்திலும் கூடாது, நிச்சயமாக அது அல்லாஹ்விடத்தில் (பாவத்தால்) மிக்க மகத்தானதாக இருக்கிறது.
Saheeh International
O you who have believed, do not enter the houses of the Prophet except when you are permitted for a meal, without awaiting its readiness. But when you are invited, then enter; and when you have eaten, disperse without seeking to remain for conversation. Indeed, that [behavior] was troubling the Prophet, and he is shy of [dismissing] you. But Allah is not shy of the truth. And when you ask [his wives] for something, ask them from behind a partition. That is purer for your hearts and their hearts. And it is not [conceivable or lawful] for you to harm the Messenger of Allah or to marry his wives after him, ever. Indeed, that would be in the sight of Allah an enormity.
اِنْ تُبْدُوْا شَیْـًٔا اَوْ تُخْفُوْهُ فَاِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟
اِنْ تُبْدُوْاநீங்கள்வெளிப்படுத்தினால்شَيْئًاஒரு விஷயத்தைاَوْஅல்லதுتُخْفُوْهُஅதை நீங்கள் மறைத்தால்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கின்றான்بِكُلِّ شَىْءٍஎல்லா விஷயங்களையும்عَلِيْمًا‏நன்கறிந்தவனாக
இன் துBப்தூ ஷய்'அன் அவ் துக்Fபூஹு Fப இன்னல் லாஹ கான Bபிகுல்லி ஷய்'இன் 'அலீமா
முஹம்மது ஜான்
நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் எவ்விஷயத்தை வெளியிட்டபோதிலும் அல்லது மறைத்துக் கொண்ட போதிலும் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையுமே நன்கறிபவனாக இருக்கிறான்.
IFT
நீங்கள் எதையேனும் வெளிப்படுத்தினாலும் அல்லது அதனை மறைத்தாலும், திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒரு விஷயத்தை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கு அறிகிறவனாக இருக்கிறான்.
Saheeh International
Whether you reveal a thing or conceal it, indeed Allah is ever, of all things, Knowing.
لَا جُنَاحَ عَلَیْهِنَّ فِیْۤ اٰبَآىِٕهِنَّ وَلَاۤ اَبْنَآىِٕهِنَّ وَلَاۤ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اَخَوٰتِهِنَّ وَلَا نِسَآىِٕهِنَّ وَلَا مَا مَلَكَتْ اَیْمَانُهُنَّ ۚ وَاتَّقِیْنَ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدًا ۟
لَا جُنَاحَகுற்றம் இல்லைعَلَيْهِنَّஅவர்கள் மீதுفِىْۤ اٰبَآٮِٕهِنَّதங்கள் தந்தைமார்கள் விஷயத்தில்وَلَاۤ اَبْنَآٮِٕهِنَّஇன்னும் தங்கள் ஆண் பிள்ளைகள்وَلَاۤ اِخْوَانِهِنَّஇன்னும் தங்கள் சகோதரர்கள்وَلَاۤ اَبْنَآءِஇன்னும் ஆண் பிள்ளைகள்اِخْوَانِهِنَّதங்கள் சகோதரர்களின்وَلَاۤ اَبْنَآءِஇன்னும் ஆண் பிள்ளைகள்اَخَوٰتِهِنَّதங்கள் சகோதரிகளின்وَلَا نِسَآٮِٕهِنَّஇன்னும் தங்கள் பெண்கள்وَلَا مَا مَلَـكَتْஇன்னும் சொந்தமாக்கியவர்கள்اَيْمَانُهُنَّ ۚதங்கள் வலக்கரங்கள்وَاتَّقِيْنَபயந்து கொள்ளுங்கள்!اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கின்றான்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்شَهِيْدًا‏நன்கு பார்த்தவனாக
லா ஜுனாஹ 'அலய்ஹின்ன Fபீ ஆBபா'இஹின்ன வ லா அBப்னா'இஹின்ன வ லா இக்வானிஹின்ன்ன வ லா அBப்னா'இ இக்வானிஹின்ன வ லா அBப்னா'இ அகவாதிஹின்ன வலா னிஸா'இ ஹின்ன வலா மா மலகத் அய்மானுஹுன்ன்; வத்தகீனல் லாஹ்; இன்னல் லாஹ கான 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீதா
முஹம்மது ஜான்
(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நபியுடைய மனைவிகள் தங்கள் தந்தைகள் முன்பாகவும், தங்கள் மகன்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்களின் மகன்கள் முன்பாகவும், தங்கள் சகோதரிகளின் மகன்கள் முன்பாகவும், தங்கள் (போன்ற நம்பிக்கையாளர்களான) பெண்கள் முன்பாகவும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் முன்பாகவும் (வருவதில்) அவர்கள் மீது ஒரு குற்றமுமில்லை. (இவர்களைத் தவிர மற்றவர்கள் முன்பாக வருவதைப் பற்றி நபியுடைய மனைவிகளே!) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் பார்த்தவனாகவே இருக்கிறான்.
IFT
நபியின் மனைவியர் மீது இவ்விஷயத்தில் எந்தக் குற்றமும் இல்லை; அவர்களின் தந்தைகள், அவர்களின் மகன்கள், அவர்களின் சகோதரர்கள், அவர்களின் சகோதரர்களின் மகன்கள், அவர்களுடைய சகோதரிகளின் மகன்கள், அவர்களுடன் நட்பு கொண்டுள்ள பெண்கள் மற்றும் அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் ஆகியோர் அவர்களுடைய இல்லங்களுக்கு வரலாம். (பெண்களே!) அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் நேரடிப் பார்வை வைத்திருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியுடைய மனைவியர்) தங்களுடைய தந்தைகள் (முன்பாகவும்), தங்கள் ஆண்மக்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்களின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரிகளின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் பெண்கள் (முன்பாகவும்), தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களி(ன் முன்பாக வருவதி)லும் அவர்களின் மீது குற்றமில்லை. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.
Saheeh International
There is no blame upon them [i.e., women] concerning their fathers or their sons or their brothers or their brothers' sons or their sisters' sons or their women or those their right hands possess [i.e., slaves]. And fear Allah. Indeed Allah is ever, over all things, Witness.
اِنَّ اللّٰهَ وَمَلٰٓىِٕكَتَهٗ یُصَلُّوْنَ عَلَی النَّبِیِّ ؕ یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَیْهِ وَسَلِّمُوْا تَسْلِیْمًا ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்வும்وَمَلٰٓٮِٕكَتَهٗஅவனது மலக்குகளும்يُصَلُّوْنَவாழ்த்துகின்றனர்عَلَى النَّبِىِّ ؕநபியைيٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேصَلُّوْاநீங்களும் வாழ்த்துங்கள்!عَلَيْهِஅவரைوَسَلِّمُوْاஇன்னும் அவருக்கு ஸலாம் கூறுங்கள்!تَسْلِيْمًا‏முகமன்
இன்னல் லாஹ வ மலா'இ கதஹூ யுஸல்லூன 'அலன் னBபிய்ய்; யா அய்யுஹல் லதீன ஆமனூ ஸல்லூ 'அலய்ஹி வ ஸல்லிமூ தஸ்லீமா
முஹம்மது ஜான்
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.
IFT
அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத் எனும் நல்வாழ்த்துக்களை அனுப்புகின்றார்கள். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்து (அருள், பிரார்த்தனை)ச் செய்கிறார்கள், (ஆகவே) விசுவாசிகளே! நீங்கள் அவர் மீது ஸலாவத்துச் சொல்லுங்கள், ஸலாமும் கூறுங்கள்.
Saheeh International
Indeed, Allah confers blessing upon the Prophet, and His angels [ask Him to do so]. O you who have believed, ask [Allah to confer] blessing upon him and ask [Allah to grant him] peace.
اِنَّ الَّذِیْنَ یُؤْذُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ لَعَنَهُمُ اللّٰهُ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ وَاَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِیْنًا ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ يُؤْذُوْنَதொந்தரவு தருபவர்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்கு(ம்)وَرَسُوْلَهٗஅவனது தூதருக்கும்لَعَنَهُمُஅவர்களை சபிக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்فِى الدُّنْيَاஇம்மையிலும்وَالْاٰخِرَةِமறுமையிலும்وَاَعَدَّஇன்னும் ஏற்படுத்தியிருக்கின்றான்لَهُمْஅவர்களுக்குعَذَابًاவேதனையைمُّهِيْنًا‏இழிவுபடுத்துகின்ற
இன்னல் லதீன யு'தூனல் லாஹ வ ரஸூலஹூ ல'அனஹுமுல் லாஹு Fபித் துன்யா வல் ஆகிரதி வ அ'அத்த லஹும் 'அதாBபம் முஹீனா
முஹம்மது ஜான்
எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் தொல்லை கொடுக்கின்றார்களோ அவர்களை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கின்றான். மேலும், இழிவுபடுத்தும் வேதனையையும் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களே அத்தகையோர்_அவர்களை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபித்து விட்டான். இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்கு தயார் செய்து வைத்திருக்கிறான்.
Saheeh International
Indeed, those who abuse Allah and His Messenger - Allah has cursed them in this world and the Hereafter and prepared for them a humiliating punishment.
وَالَّذِیْنَ یُؤْذُوْنَ الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ بِغَیْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟۠
وَالَّذِيْنَ يُؤْذُوْنَதொந்தரவு தருபவர்கள்الْمُؤْمِنِيْنَமுஃமினான ஆண்களுக்கு(ம்)وَالْمُؤْمِنٰتِமுஃமினான பெண்களுக்கும்بِغَيْرِ مَا اكْتَسَبُوْاஅவர்கள் செய்யாத ஒன்றைக் கொண்டுفَقَدِதிட்டமாகاحْتَمَلُوْاசுமந்துகொண்டார்கள்بُهْتَانًاஅபாண்டமான பழியை(யும்)وَّاِثْمًاபாவத்தையும்مُّبِيْنًا‏தெளிவான
வல்லதீன யு'தூனல் மு'மினீன வல் மு'மினாதி Bபிகய்ரி மக் தஸBபூ Fபகதிஹ் தமலூ Bபுஹ்தான(ன்)வ் வ இத்மம் முBபீனா
முஹம்மது ஜான்
ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர்.
IFT
மேலும், நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே எவர்கள் துன்பம் அளிக்கின்றார்களோ, அவர்கள் ஒரு மாபெரும் அவதூறையும் வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்துகொள்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங்கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாத (குற்றத்)தை(ச் செய்ததாக)க் கூறி துன்புறுத்துகிறார்களே அத்தகையவர்கள், நிச்சயமாக(ப் பெரும்) அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொண்டனர்.
Saheeh International
And those who harm believing men and believing women for [something] other than what they have earned [i.e., deserved] have certainly borne upon themselves a slander and manifest sin.
یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِیْنَ یُدْنِیْنَ عَلَیْهِنَّ مِنْ جَلَابِیْبِهِنَّ ؕ ذٰلِكَ اَدْنٰۤی اَنْ یُّعْرَفْنَ فَلَا یُؤْذَیْنَ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
يٰۤـاَيُّهَا النَّبِىُّநபியே!قُلْகூறுங்கள்!لِّاَزْوَاجِكَஉமது மனைவிமார்களுக்கு(ம்)وَبَنٰتِكَஉமது பெண் பிள்ளைகளுக்கும்وَنِسَآءِபெண்களுக்கும்الْمُؤْمِنِيْنَமுஃமின்களின்يُدْنِيْنَஅவர்கள் போர்த்திக்கொள்ளும்படிعَلَيْهِنَّதங்கள் மீதுمِنْ جَلَابِيْبِهِنَّ ؕதங்கள் பர்தாக்களைذٰ لِكَஇதுاَدْنٰٓىமிக சுலபமானதாகும்اَنْ يُّعْرَفْنَஅவர்கள் அறியப்படுவதற்குفَلَا يُؤْذَيْنَ ؕஆகவே, அவர்கள் தொந்தரவுக்கு ஆளாக மாட்டார்கள்وَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
யா அய்யுஹன் னBபிய்யு குல் லி அZஜ்வாஜிக வ Bபனாதிக வ னிஸா'இல் மு'மினீன யுத்னீன 'அலய்ஹின்ன மின் ஜலாBபீ Bபிஹின்ன்; தாலிக அத்னா அய் யுஃரFப்ன Fபலா யு'தய்ன்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில் போட்டு) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இதுசுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்.
IFT
நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமலிருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! உம்முடைய மனைவியருக்கும், உங்கள் புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும், அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள், இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
O Prophet, tell your wives and your daughters and the women of the believers to bring down over themselves [part] of their outer garments. That is more suitable that they will be known and not be abused. And ever is Allah Forgiving and Merciful.
لَىِٕنْ لَّمْ یَنْتَهِ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْمُرْجِفُوْنَ فِی الْمَدِیْنَةِ لَنُغْرِیَنَّكَ بِهِمْ ثُمَّ لَا یُجَاوِرُوْنَكَ فِیْهَاۤ اِلَّا قَلِیْلًا ۟
لَٮِٕنْ لَّمْ يَنْتَهِவிலகவில்லை என்றால்الْمُنٰفِقُوْنَநயவஞ்சகர்களு(ம்)وَ الَّذِيْنَஎவர்கள்فِى قُلُوْبِهِمْ مَّرَضٌதங்கள் உள்ளங்களில் நோய்وَّالْمُرْجِفُوْنَகெட்ட விஷயங்களில் ஈடுபடுபவர்களும்فِى الْمَدِيْنَةِமதீனாவில்لَـنُغْرِيَـنَّكَஉம்மை தூண்டிவிடுவோம்بِهِمْஅவர்கள் மீதுثُمَّபிறகுلَا يُجَاوِرُوْنَكَஉம்முடன் வசிக்க மாட்டார்கள்فِيْهَاۤஅதில்اِلَّاதவிரقَلِيْلًا ۛۚ  ۖ‏குறைவாகவே
ல'இல் லம் யன்தஹில் முனாFபிகூன வல்லதீன Fபீ குலூBபிஹிம் மரளு(ன்)வ் வல்முர் ஜிFபூன Fபில் மதீனதி லனுக்ரி யன்னக Bபிஹிம் தும்ம லா யுஜாவிரூனக Fபீஹா இல்லா கலீலா
முஹம்மது ஜான்
முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நயவஞ்சகர்களும், உள்ளத்தில் (பாவ) நோயுள்ளவர்களும், மதீனாவில் பொய்ப் பிரச்சாரம் செய்கிறவர்களும் (இனியும் தங்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொள்ளாவிடில் நிச்சயமாக நாம் உம்மையே அவர்கள் மீது ஏவிவிட்டு விடுவோம். பின்னர், அதில் உமக்கு அருகில் வெகு சொற்ப நாள்களே தவிர அவர்கள் வசித்திருக்க முடியாது.
IFT
நயவஞ்சகர்களும், எவர்களின் உள்ளங்களில் பிணி படிந்துள்ளதோ அவர்களும் மற்றும் மதீனாவில் கொந்தளிப்பை உருவாக்கும் வதந்திகளைப் பரப்பக்கூடியவர்களும் (தங்களின் செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உம்மை வீறுகொண்டு எழச்செய்வோம். பிறகு, அவர்களால் இந்நகரத்தில் சொற்பகாலமே உம்முடன் வசிக்க முடியும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! வேஷதாரிகளான) முனாஃபிக்குகளும், எவர்களுடைய இதயத்தில் (பாவ)நோய் உள்ளதோ அத்தகையோரும், மதீனாவில் பொய்யான விஷயங்களை மக்களுக்கு மத்தியில் பரப்பக்கூடியவர்களும், (தங்களின் இச்செயலிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில், நிச்சயமாக நாம் உம்மை அவர்களின் மீது சாட்டிவிடுவோம், பின்னர், வெகு சொற்பமே தவிர (மதீனாவாகிய) அதில் உம் அண்டை வீட்டினராக அவர்கள் வசித்திருக்கமாட்டார்கள்.
Saheeh International
If the hypocrites and those in whose hearts is disease and those who spread rumors in al-Madīnah do not cease, We will surely incite you against them; then they will not remain your neighbors therein except for a little,
مَّلْعُوْنِیْنَ ۛۚ اَیْنَمَا ثُقِفُوْۤا اُخِذُوْا وَقُتِّلُوْا تَقْتِیْلًا ۟
مَّلْـعُوْنِيْنَ ۛۚஅவர்கள் சபிக்கப்பட்டவர்கள்اَيْنَمَا ثُقِفُوْۤاஅவர்கள் எங்கு காணப்பட்டாலும்اُخِذُوْاஅவர்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும்وَقُتِّلُوْا تَقْتِيْلًا‏இன்னும் முற்றிலும் கொல்லப்படவேண்டும்
மல்'ஊனீன அய்னமா துகிFபூ உகிதூ வ குத்திலூ தக்தீலா
முஹம்மது ஜான்
அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். ஆகவே, அவர்கள் எங்கு காணப்பட்ட போதிலும் (சிறை) பிடிக்கப்பட்டும், வெட்டி அழிக்கப்பட்டும் விடுவார்கள்.
IFT
(எல்லாத் திசைகளிலிருந்தும்) அவர்கள் சரமாரியாய் சபிக்கப்படுவார்கள்; காணுமிடமெல்லாம் அவர்கள் பிடிக்கப்படுவார்கள். மேலும், மோசமான முறையில் கொல்லப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சபிக்கப்பட்டவர்களாக (அவர்கள் இருப்பர், ஆகவே) அவர்கள் எங்கு காணப்பட்ட போதிலும் பிடிக்கப்படுவார்கள், இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்.
Saheeh International
Accursed wherever they are found, [being] seized and massacred completely.
سُنَّةَ اللّٰهِ فِی الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلُ ۚ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِیْلًا ۟
سُنَّةَநடைமுறைதான்اللّٰهِஅல்லாஹ்வின்فِى الَّذِيْنَ خَلَوْاசென்றவர்களில்مِنْ قَبْلُۚஇதற்கு முன்னர்وَلَنْ تَجِدَஅறவே நீர் காணமாட்டீர்لِسُنَّةِநடைமுறையில்اللّٰهِஅல்லாஹ்வின்تَبْدِيْلًا‏எவ்வித மாற்றத்தையும்
ஸுன்னதல் லாஹி Fபில் லதீன கலவ் மின் கBப்லு வ லன் தஜித லிஸுன்னதில் லாஹி தBப்தீலா
முஹம்மது ஜான்
அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடைய வழியில் எவ்வித மாறுதலையும் நீர் காணமாட்டீர்.
IFT
இது அல்லாஹ்வின் நியதியாகும். இத்தகையவர்களின் விவகாரத்தில் இந்நியதி முன்பிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது! மேலும், அல்லாஹ்வுடைய நியதியில் நீர் எவ்வித மாற்றத்தையும் காணமாட்டீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதற்கு முன் சென்றுவிட்டார்களே அத்தகையோரில் அல்லாஹ்வின் வழிமுறை (இது) தான், ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ்வுடைய வழிமுறையில் யாதொரு மாறுதலையும் காணவே மாட்டீர்.
Saheeh International
[This is] the established way of Allah with those who passed on before; and you will not find in the way of Allah any change.
یَسْـَٔلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ ؕ وَمَا یُدْرِیْكَ لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُ قَرِیْبًا ۟
يَسْــٴَــلُكَஉம்மிடம் கேட்கின்றனர்النَّاسُமக்கள்عَنِ السَّاعَةِؕமறுமையைப் பற்றிقُلْகூறுவீராக!اِنَّمَا عِلْمُهَاஅதன் அறிவெல்லாம்عِنْدَ اللّٰهِؕஅல்லாஹ்விடம்தான் இருக்கின்றதுوَمَا يُدْرِيْكَஉமக்குத் தெரியுமா?لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُமறுமை இருக்கக்கூடும்قَرِيْبًا‏சமீபமாக
யஸ்'அலுகன் னாஸு 'அனிஸ் ஸா'அதி குல் இன்னமா 'இல்முஹா 'இன்தல் லாஹ்; வமா யுத்ரீக ல'அல்லஸ் ஸா'அத தகூனு கரீBபா
முஹம்மது ஜான்
(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்: “அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது” என்று நீர் கூறுவீராக; அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்து விடலாம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இறுதிநாளைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என) மனிதர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘ (அது எப்பொழுது வருமென்ற) அதன் ஞானம் அல்லாஹ்விடம் (மட்டும்)தான் இருக்கிறது. நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்துவிடக்கூடும்.''
IFT
மறுமைநாள் எப்போது வரும் என்று மக்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.” உமக்குத் தெரியுமா என்ன? அந்நாள் நெருங்கி வந்திருக்கலாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) மறுமை நாளைப்பற்றி (“அது எப்பொழுது” என்று) உம்மிடம் மனிதர்கள் கேட்கின்றனர், (அதற்கு) நீர் கூறும், (“அது எப்பொழுது என்ற) அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் (மட்டும்)தான் இருக்கின்றது, மேலும், மறுமை நாள் சமீபத்தில் வந்து விடக்கூடும் என உமக்கு எது அறிவித்துக் கொடுக்கும்?
Saheeh International
People ask you concerning the Hour. Say, "Knowledge of it is only with Allah. And what may make you perceive? Perhaps the Hour is near."
اِنَّ اللّٰهَ لَعَنَ الْكٰفِرِیْنَ وَاَعَدَّ لَهُمْ سَعِیْرًا ۟ۙ
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَعَنَசபித்தான்الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களைوَاَعَدَّஏற்படுத்தினான்لَهُمْஅவர்களுக்குسَعِيْرًا ۙ‏கொழுந்து விட்டெரியும் நரகத்தை
இன்னல் லாஹ ல'அனல் காFபிரீன வ அ'அத்த லஹும் ஸ'ஈரா
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
எவ்வாறாயினும் நிராகரிப்பாளர்களை அல்லாஹ் திண்ணமாகச் சபித்துவிட்டான். மேலும், அவர்களுக்காக, கொழுந்து விட்டெரியும் நெருப்பைத் தயார் செய்துவிட்டிருக்கின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரைச் சபித்துவிட்டான், கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்குத் தயார் செய்தும் வைத்திருகின்றான்.
Saheeh International
Indeed, Allah has cursed the disbelievers and prepared for them a Blaze.
خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۚ لَا یَجِدُوْنَ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟ۚ
خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்فِيْهَاۤஅதில்اَبَدًا ۚஎப்போதும்لَا يَجِدُوْنَகாணமாட்டார்கள்وَلِيًّاபொறுப்பாளரையோوَّلَا نَصِيْرًا ۚ‏உதவியாளரையோ
காலிதீன Fபீஹா அBபதா, லா யஜிதூன வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
முஹம்மது ஜான்
அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்; தங்களைக் காப்பவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் என்றென்றும் அதில்தான் தங்கிவிடுவார்கள். (அவர்களை) பாதுகாப்பவர்களையும் (அவர்களுக்கு) உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்.
IFT
அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள். எந்த ஓர் ஆதரவாளரையும் உதவியாளரையும் அவர்கள் பெறமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் என்றென்றும் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள், (அவர்களைக்) காப்பவரையும், (அவர்களுக்கு) உதவி செய்பவரையும் அவர்கள் (அங்கு) காணமாட்டார்கள்.
Saheeh International
Abiding therein forever, they will not find a protector or a helper.
یَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِی النَّارِ یَقُوْلُوْنَ یٰلَیْتَنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا ۟
يَوْمَநாளில்تُقَلَّبُபுரட்டப்படுகின்றوُجُوْهُهُمْஅவர்களது முகங்கள்فِى النَّارِநெருப்பில்يَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்يٰلَيْتَـنَاۤ اَطَعْنَاநாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!اللّٰهَஅல்லாஹ்வுக்குوَاَطَعْنَاஇன்னும் நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!الرَّسُوْلَا‏ரசூலுக்கு
யவ்ம துகல்லBபு வுஜூஹுஹும் Fபின் னாரி யகூலூன யா லய்தனா அதஃனல் லாஹ வ அதஃனர் ரஸூலா
முஹம்மது ஜான்
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில் ‘‘எங்கள் கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!'' என்று கதறுவார்கள்.
IFT
எந்நாளில் அவர்களுடைய முகங்கள் நெருப்பில் புரட்டி எடுக்கப்படுமோ அந்நாளில் அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! நாங்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தோமில்லையே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய முகங்கள் (நரக) நெருப்பில் புரட்டப்படும் நாளில், “நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே” என்று கூறுவார்கள்.
Saheeh International
The Day their faces will be turned about in the Fire, they will say, "How we wish we had obeyed Allah and obeyed the Messenger."
وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِیْلَا ۟
وَقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவா!اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اَطَعْنَاகீழ்ப்படிந்தோம்سَادَتَنَاஎங்கள் தலைவர்களுக்கு(ம்)وَكُبَرَآءَنَاஎங்கள் பெரியோருக்கும்فَاَضَلُّوْنَا السَّبِيْلَا‏அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டனர்
வ காலூ ரBப்Bபனா இன்னா அதஃனா ஸாததனா வ குBபரா'அனா Fப அளல்லூனஸ் ஸBபீலா
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும் ‘‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள்.
IFT
மேலும், கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். அவர்கள் எங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்துவிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும் எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆகவே, அவர்கள் எங்களை வழி தவறச்செய்து விட்டார்கள்.”
Saheeh International
And they will say, "Our Lord, indeed we obeyed our masters and our dignitaries, and they led us astray from the [right] way.
رَبَّنَاۤ اٰتِهِمْ ضِعْفَیْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِیْرًا ۟۠
رَبَّنَاۤஎங்கள் இறைவா!اٰتِهِمْஅவர்களுக்கு கொடு!ضِعْفَيْنِஇரு மடங்குمِنَ الْعَذَابِவேதனையைوَالْعَنْهُمْஇன்னும் அவர்களை சபிப்பாயாக!لَعْنًاசாபத்தால்كَبِيْرًا‏பெரிய
ரBப்Bபனா ஆதிஹிம் ளிஃFபய் னி மினல் 'அதாBபி வல்'அன்ஹும் லஃ னன் கBபீரா
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்).  
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்களை பெரும் சாபத்தால் சபித்துவிடு'' என்று கூறுவார்கள்.
IFT
எங்கள் இறைவனே! இவர்களுக்கு இருமடங்கு வேதனை கொடுப்பாயாக! மேலும், அவர்களைக் கடுமையாக சபிப்பாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே “எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கை கொடுப்பாயாக! இன்னும், பெரும் சாபமாக அவர்களைச் சபிப்பாயாக!” (என்றும் கூறுவார்கள்).
Saheeh International
Our Lord, give them double the punishment and curse them with a great curse."
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ اٰذَوْا مُوْسٰی فَبَرَّاَهُ اللّٰهُ مِمَّا قَالُوْا ؕ وَكَانَ عِنْدَ اللّٰهِ وَجِیْهًا ۟ؕ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَكُوْنُوْاநீங்கள் ஆகிவிடாதீர்கள்كَالَّذِيْنَ اٰذَوْاதொந்தரவு தந்தவர்களைப் போன்றுمُوْسٰىமூஸாவிற்குفَبَـرَّاَهُஅவரை நிரபராதியாக்கினான்اللّٰهُஅல்லாஹ்مِمَّا قَالُوْا ؕஅவர்கள் கூறியதிலிருந்துوَكَانَஅவர் இருந்தார்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்وَجِيْهًا ؕ‏மிகசிறப்பிற்குரியவராக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தகூனூ கல்ல தீன ஆதவ் மூஸா Fப Bபர்ர அஹுல் லாஹு மிம்ம காலூ; வ கான 'இன்தல் லாஹி வஜீஹா
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! மூஸாவை(ப் பற்றி பொய்யாக அவதூறு கூறி அவரை)த்துன்புறுத்திய மக்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் கூறிய அவதூற்றிலிருந்து மூஸாவை அல்லாஹ் பரிசுத்தமாக்கி விட்டான். அவர் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமானவராகவே இருந்தார்.
IFT
நம்பிக்கை கொண்டவர்களே! மூஸாவுக்கு தொல்லை அளித்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் இட்டுக் கட்டிக் கூறிய விஷயங்களிலிருந்து அல்லாஹ் அவரை விடுவித்து விட்டான். மேலும், அல்லாஹ்விடத்தில் அவர் கண்ணியத்துக்குரியவராய் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! மூஸாவை நோவினை செய்தார்களே அவர்களைப் போல் நீங்கள் ஆகிவிடவேண்டாம், பின்னர், அவர்கள் கூறியதிலிருந்து அல்லாஹ் அவரை நீக்கி விட்டான், மேலும், அவர் அல்லாஹ்விடத்தில் பெரும் தகுதியுடையவராக இருந்தார்.
Saheeh International
O you who have believed, be not like those who abused Moses; then Allah cleared him of what they said. And he, in the sight of Allah, was distinguished.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِیْدًا ۟ۙ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களேاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَقُوْلُوْاஇன்னும் பேசுங்கள்قَوْلًاபேச்சைسَدِيْدًا ۙ‏நேர்மையான
யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ வ கூலூ கவ்லன் ஸதீதா
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள்.
IFT
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், நேர்மையான சொல்லை மொழியுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே) விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், நேர்மையான கூற்றையே கூறுங்கள்.
Saheeh International
O you who have believed, fear Allah and speak words of appropriate justice.
یُّصْلِحْ لَكُمْ اَعْمَالَكُمْ وَیَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ؕ وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِیْمًا ۟
يُّصْلِحْஅவன்சீர்படுத்துவான்لَـكُمْஉங்களுக்குاَعْمَالَـكُمْஉங்கள் அமல்களைوَيَغْفِرْஇன்னும் மன்னிப்பான்لَـكُمْஉங்களுக்குذُنُوْبَكُمْؕஉங்கள் பாவங்களைوَمَنْயார்يُّطِعِகீழ்ப்படிகின்றாரோاللّٰهَஅல்லாஹ்வுக்கு(ம்)وَرَسُوْلَهٗஅவனது தூதருக்கும்فَقَدْதிட்டமாகفَازَவெற்றிபெறுவார்فَوْزًاவெற்றிعَظِيْمًا‏மகத்தான
யுஸ்லிஹ் லகும் அஃமாலகும் வ யக்Fபிர் லகும் துனூBபகும்; வ மய் யுதி'இல் லாஹ வ ரஸூலஹூ Fபகத் FபாZஜ Fபவ்Zஜன் 'அளீமா
முஹம்மது ஜான்
(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார்.
IFT
அல்லாஹ் உங்களுடைய செயல்களைச் சீர்திருத்திவிடுவான்; மேலும், உங்களுடைய குற்றங்களை மன்னிக்கவும் செய்வான். எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றானோ, அவன் மகத்தான வெற்றி அடைந்துவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு நீங்கள் செய்தால்) அவன் உங்களுடைய செயல்களை உங்களுக்குச் சீர் படுத்தி வைப்பான், உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான், மேலும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப் படிகின்றாரோ அப்போது அவர், திட்டமாக மகத்தான வெற்றியாக வெற்றியடைந்து விட்டார்.
Saheeh International
He will [then] amend for you your deeds and forgive you your sins. And whoever obeys Allah and His Messenger has certainly attained a great attainment.
اِنَّا عَرَضْنَا الْاَمَانَةَ عَلَی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالْجِبَالِ فَاَبَیْنَ اَنْ یَّحْمِلْنَهَا وَاَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْاِنْسَانُ ؕ اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلًا ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்عَرَضْنَاசமர்ப்பித்தோம்الْاَمَانَةَஅமானிதத்தைعَلَى السَّمٰوٰتِவானங்கள் மீதுوَالْاَرْضِஇன்னும் பூமிوَالْجِبَالِஇன்னும் மலைகள்فَاَبَيْنَஅவைமறுத்துவிட்டனاَنْ يَّحْمِلْنَهَاஅதை சுமப்பதற்குوَاَشْفَقْنَஇன்னும் அவை பயந்தனمِنْهَاஅதனால்وَ حَمَلَهَاஅதை சுமந்து கொண்டான்الْاِنْسَانُؕமனிதன்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கின்றான்ظَلُوْمًاஅநியாயக்காரனாகجَهُوْلًا ۙ‏அறியாதவனாக
இன்னா 'அரள்னல் அமானத 'அலஸ் ஸமாவாதி வல்'அர்ளி வல் ஜிBபாலி Fப அBபய்ன அய் யஹ்மில் னஹா வ அஷ்Fபக்ன மின்ஹா வ ஹமலஹல் இன்ஸானு இன்னஹூ கான ளலூமன் ஜஹூலா
முஹம்மது ஜான்
நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக ‘‘(நம்) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?'' என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் நாம் வினவினோம். அதற்கு அவை அதைப் பற்றிப் பயந்து, அதைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாதவனாக தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவனாக இருக்கிறான்.
IFT
நாம் இந்த அமானிதத்தை வானங்கள், பூமி மற்றும் மலைகள் ஆகியவற்றின் முன்பாக வைத்தபோது அவை அதனை ஏற்கத் தயாராகவில்லை. மேலும், அதனைக் கண்டு அஞ்சின. ஆனால், மனிதன் அதனை ஏற்றுக்கொண்டான். திண்ணமாக, அவன் பெரிதும் அநீதி இழைப்பவனாகவும் அறியாதவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் அமானித்தை வானங்கள், பூமி மலைகள் ஆகியவற்றின் மீது (அதைச் சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக் காட்டினோம், அப்போது அதைச் சுமந்து கொள்வதிலிருந்து அவை விலகிக் கொண்டன, இன்னும், அ(தைச் சுமப்ப)திலிருந்து அவை பயந்தன. (ஆனால்) மனிதனோ அதனைச் சுமந்து கொண்டான், நிச்சயமாக அவன் (அமானிதத்தை நிறைவேற்றும் விஷயத்தில்) பெரும் அநியாயக்காரனாக (அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்.
Saheeh International
Indeed, We offered the Trust to the heavens and the earth and the mountains, and they declined to bear it and feared it; but man [undertook to] bear it. Indeed, he was unjust and ignorant.
لِّیُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِیْنَ وَالْمُشْرِكٰتِ وَیَتُوْبَ اللّٰهُ عَلَی الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
لِّيُعَذِّبَவேதனை செய்வதற்காகاللّٰهُஅல்லாஹ்الْمُنٰفِقِيْنَநயவஞ்சகமுடைய ஆண்களை(யும்)وَالْمُنٰفِقٰتِநயவஞ்சகமுடைய பெண்களையும்وَالْمُشْرِكِيْنَஇணைவைக்கின்ற ஆண்களையும்وَالْمُشْرِكٰتِஇணைவைக்கின்ற பெண்களையும்وَيَتُوْبَமன்னிப்பதற்காகاللّٰهُஅல்லாஹ்عَلَى الْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்ட ஆண்களைوَالْمُؤْمِنٰتِؕநம்பிக்கை கொண்ட பெண்களைوَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
லியு 'அத்திBபல் லாஹுல் முனாFபிகீன வல் முனாFபிகாதி வல்முஷ்ரிகீன வல் முஷ்ரிகாதி வ யதூBபல் லாஹு 'அலல் மு'மினீன வல்மு'மினாத்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
எனவே, (இவ்வமானிதத்தை மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும்; முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கு மாறாக நடக்கும்) நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வான். (அந்த பொறுப்பை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களாகிய ஆண்களையும் பெண்களையும் (அவர்களுடைய) தவறிலிருந்து (அருளின் பக்கம்) அல்லாஹ் திருப்பிவிடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக கருணை உடையவனாக இருக்கிறான்.
IFT
ஏனெனில், (இந்த அமானிதம் எனும் பொறுப்பை அவன் ஏற்றுக்கொண்டான். அதன் தவிர்க்க முடியாத விளைவு இதுதான்:) நயவஞ்சகம் கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும், இணைவைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் தண்டனை அளிக்க வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அத்தகைய அமானிதத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு மாறாக நடக்கும்) முனாஃபிக்கான (வேஷதாரிகளான) ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணை வைத்துக் கொண்டிருக்கும் ஆண்களையும், இணை வைத்துக் கொண்டிருக்கும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காகவும், (அந்த அமானிதத்தை ஏற்றபின் மதித்து நடக்கும்) விசுவாசிகளான ஆண்களையும், விசுவாசிகளான பெண்களையும் அவர்களுடைய தவ்பாவை ஏற்று மன்னிப்பதற்காகவும் (இவ்வாறு எடுத்துக்காட்டினான்). மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
[It was] so that Allah may punish the hypocrite men and hypocrite women and the men and women who associate others with Him and that Allah may accept repentance from the believing men and believing women. And ever is Allah Forgiving and Merciful.