52. ஸூரத்துத் தூர் (மலை)

மக்கீ, வசனங்கள்: 49

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
وَالطُّوْرِ ۟ۙ
وَالطُّوْرِۙ‏தூர் மலையின் மீது சத்தியமாக!
வத்-தூர்
முஹம்மது ஜான்
தூர் (மலை) மீது சத்தியமாக!
அப்துல் ஹமீது பாகவி
தூர் (என்னும்) மலையின் மீது சத்தியமாக!
IFT
தூர் மலையின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தூர் (மலை) மீது சத்தியமாக!
Saheeh International
By the mount
وَكِتٰبٍ مَّسْطُوْرٍ ۟ۙ
وَكِتٰبٍபுத்தகத்தின் மீது சத்தியமாக!مَّسْطُوْرٍۙ‏எழுதப்பட்டது
வ கிதாBபிம் மஸ்தூர்
முஹம்மது ஜான்
எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
அப்துல் ஹமீது பாகவி
விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக!
IFT
மெல்லிய தோலில் எழுதப்பட்ட
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எழுதப்பட்ட நூலின் மீது சத்தியமாக!
Saheeh International
And [by] a Book inscribed
فِیْ رَقٍّ مَّنْشُوْرٍ ۟ۙ
فِىْ رَقٍّகாகிதத்தில்مَّنْشُوْرٍۙ‏விரிக்கப்பட்டது
Fபீ ரக்கிம் மன்ஷூர்
முஹம்மது ஜான்
விரித்து வைக்கப்பட்ட ஏட்டில்- 
அப்துல் ஹமீது பாகவி
விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக!
IFT
திறந்த புத்தகத்தின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விரித்துவைக்கப்பட்ட ஏட்டில்_
Saheeh International
In parchment spread open
وَّالْبَیْتِ الْمَعْمُوْرِ ۟ۙ
وَالْبَيْتِஆலயத்தின் மீது சத்தியமாக!الْمَعْمُوْرِۙ‏செழிப்பான(து)
வல் Bபய்தில் மஃமூர்
முஹம்மது ஜான்
பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
அப்துல் ஹமீது பாகவி
பைத்துல் மஃமூர் (என்னும் ஆலயத்தின்) மீது சத்தியமாக!
IFT
மக்கள் நடமாட்டமுள்ள இல்லத்தின்மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
Saheeh International
And [by] the frequented House
وَالسَّقْفِ الْمَرْفُوْعِ ۟ۙ
وَالسَّقْفِமுகட்டின் மீது சத்தியமாக!الْمَرْفُوْعِۙ‏உயர்த்தப்பட்ட(து)
வஸ்ஸக்Fபில் மர்Fபூ'
முஹம்மது ஜான்
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
அப்துல் ஹமீது பாகவி
உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக!
IFT
உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
Saheeh International
And [by] the ceiling [i.e., heaven] raised high
وَالْبَحْرِ الْمَسْجُوْرِ ۟ۙ
وَالْبَحْرِகடலின் மீது சத்தியமாக!الْمَسْجُوْرِۙ‏நீரால் நிரம்பிய(து)
வல் Bபஹ்ரில் மஸ்ஜூர்
முஹம்மது ஜான்
பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
அப்துல் ஹமீது பாகவி
(தொடர்ந்து) அலைகள் மோதிக் கொண்டிருக்கும் சமுத்திரத்தின் மீது சத்தியமாக!
IFT
அலைபுரளும் கடலின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நெருப்பினால்) மூட்டப்பட்ட கடலின் மீது சத்தியமாக!
Saheeh International
And [by] the sea set on fire,
اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ ۟ۙ
اِنَّநிச்சயமாகعَذَابَதண்டனைرَبِّكَஉமது இறைவனின்لَوَاقِعٌ ۙ‏நிகழ்ந்தே தீரும்
இன்ன 'அதாBப ரBப்Bபிக லவாகி'
முஹம்மது ஜான்
நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக உமது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும்.
IFT
உம்முடைய இறைவன் தரும் வேதனை நிச்சயம் வந்தே தீரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக உமதிரட்சகனின் வேதனை (அவர்களுக்கு) நிகழும்_
Saheeh International
Indeed, the punishment of your Lord will occur.
مَّا لَهٗ مِنْ دَافِعٍ ۟ۙ
مَّاஇல்லைلَهٗஅதைمِنْ دَافِعٍۙ‏தடுப்பவர்
மா லஹூ மின் தாFபி'
முஹம்மது ஜான்
அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
எவராலும் அதைத் தடுக்க முடியாது.
IFT
அதனைத் தடுப்பவர் எவருமிலர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
Saheeh International
Of it there is no preventer.
یَّوْمَ تَمُوْرُ السَّمَآءُ مَوْرًا ۟ۙ
يَّوْمَநாளில்تَمُوْرُகுலுங்குகின்றالسَّمَآءُ مَوْرًا ۙ‏வானம்/குலுங்குதல்
யவ்ம தமூருஸ் ஸமா'உ மவ்ரா
முஹம்மது ஜான்
வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்;
அப்துல் ஹமீது பாகவி
வானமும் துடிதுடித்துக் குமுறும் நாளில்,
IFT
அது நிகழும் நாளில் வானம் கடுமையாக நடுங்கும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானம் கடுமையாக அசைந்து (திருகையைப் போன்று) சுற்றும் நாளில்,
Saheeh International
On the Day the heaven will sway with circular motion
وَّتَسِیْرُ الْجِبَالُ سَیْرًا ۟ؕ
وَّتَسِيْرُஇன்னும் செல்லும்الْجِبَالُமலைகள்سَيْرًا ؕ‏செல்வது
வ தஸீருல் ஜிBபாலு ஸய்ரா
முஹம்மது ஜான்
இன்னும், மலைகள் தூள் தூளாகி விடும் போது,
அப்துல் ஹமீது பாகவி
மலைகள் (பெயர்ந்து) பறந்தோடும் (நாளில்)
IFT
மலைகள் பறந்து கொண்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மலைகள் (இடம் பெயர்ந்து) ஒரே நடையாக நடக்கும்.
Saheeh International
And the mountains will pass on, departing -
فَوَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟ۙ
فَوَيْلٌஆகவே நாசம்தான்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்لِّـلْمُكَذِّبِيْنَۙ‏பொய்ப்பிப்பவர்களுக்கு
Fபவய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில் முகாத்திBபீன்
முஹம்மது ஜான்
(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மைப்) பொய்யாக்கும் இவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
IFT
கேடுதான் இருக்கிறது அந்நாளில், பொய் என்று தூற்றியவர்களுக்கு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உம்மைப்) பொய்ப்பித்துக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
Saheeh International
Then woe, that Day, to the deniers,
الَّذِیْنَ هُمْ فِیْ خَوْضٍ یَّلْعَبُوْنَ ۟ۘ
الَّذِيْنَஎவர்கள்هُمْஅவர்கள்فِىْ خَوْضٍகுழப்பத்தில் இருந்துகொண்டுيَّلْعَبُوْنَ‌ۘ‏விளையாடுகிறார்கள்
அல்லதீன ஹும் Fபீ கவ்ளி(ன்)ய் யல்'அBபூன்
முஹம்மது ஜான்
எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (வீண் விதண்டாவாதத்தில்) மூழ்கி விளையாடிக்கொண்டு இருக்கின்றனர்.
IFT
அவர்களோ இன்று வீண் வாதங்களில் விளையாட்டாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், வீண் விதண்டாவாதத்தில் (மூழ்கி) விளையாடுகின்றனர்.
Saheeh International
Who are in [empty] discourse amusing themselves.
یَوْمَ یُدَعُّوْنَ اِلٰی نَارِ جَهَنَّمَ دَعًّا ۟ؕ
يَوْمَநாளில்يُدَعُّوْنَஅவர்கள் தள்ளப்படுகின்ற(னர்)اِلٰى نَارِ جَهَنَّمَநரக நெருப்பின் பக்கம்دَعًّاؕ‏தள்ளப்படுதல்
யவ்ம யுத'-'ஊன இலா னாரி ஜஹன்னம த'-'ஆ
முஹம்மது ஜான்
அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் நரகத்தின் பக்கம் (அடித்து) வெருட்டி ஓட்டப்படும் நாளில்,
IFT
எந்நாளில் அவர்கள் நெட்டித் தள்ளப்பட்டு நரக நெருப்பின் பக்கம் விரட்டப்படுவார்களோ அந்நாளில்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் நரகத்தின்பால் ஒரே தள்ளாகத் தள்ளப்படும் நாளில்.
Saheeh International
The Day they are thrust toward the fire of Hell with a [violent] thrust, [its angels will say],
هٰذِهِ النَّارُ الَّتِیْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ۟
هٰذِهِஇதுالنَّارُநெருப்புالَّتِىْஎதுكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்بِهَاஅதைتُكَذِّبُوْنَ‏பொய்ப்பிப்பவர்களாக
ஹாதிஹின் னாருல் லதீ குன்தும் Bபிஹா துகத்திBபூன்
முஹம்மது ஜான்
அந்நாளில்: (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக நெருப்பு இதுதான்'' என்று கூறப்படும்.
IFT
அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் அந்த நரக நெருப்பு; இதனைத்தான் நீங்கள் பொய்யென வாதித்தீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களிடம்) “நீங்கள் எதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அந்(நரக) நெருப்பு இதுதான்” (என்று கூறப்படும்.)
Saheeh International
"This is the Fire which you used to deny.
اَفَسِحْرٌ هٰذَاۤ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَ ۟ۚ
اَفَسِحْرٌஎன்ன சூனியமா?هٰذَاۤஇதுاَمْ اَنْتُمْநீங்கள் ?لَا تُبْصِرُوْنَ‌ۚ‏பார்க்கவில்லையா
அFபஸிஹ்ருன் ஹாதா அம் அன்தும் லா துBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
“இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
இது வெறும் சூனியம்தானா? அல்லது, இதை நீங்கள் (உங்கள் கண்ணால்) பார்க்கவில்லையா?
IFT
இப்போது கூறுங்கள், இது சூனியமா அல்லது உங்களுக்குப் புலப்படவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எனவே இது (வெறும்) சூனியம்தானா? அல்லது (இதனை) நீங்கள் (உங்கள் கண்ணால்) காணமுடியாதவர்களாகி விட்டீர்களா?”
Saheeh International
Then is this magic, or do you not see?
اِصْلَوْهَا فَاصْبِرُوْۤا اَوْ لَا تَصْبِرُوْا ۚ سَوَآءٌ عَلَیْكُمْ ؕ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
اِصْلَوْهَاஇதில் எரிந்து பொசுங்குங்கள்!فَاصْبِرُوْۤاபொறுமையாக இருங்கள்!اَوْஅல்லதுلَا تَصْبِرُوْا‌ۚபொறுக்காதீர்கள்!سَوَآءٌஇரண்டும் சமம்தான்عَلَيْكُمْ‌ؕஉங்களுக்குاِنَّمَا تُجْزَوْنَநீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம்مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்
இஸ்லவ்ஹா Fபஸ்Bபிரூ அவ் லா தஸ்Bபிரூ ஸவா'உன் 'அலய்கும் இன்னமா துஜ்Zஜவ்ன மா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
“நீங்கள் அதில் நுழையுங்கள்; பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள்; (இரண்டும்) உங்களுக்குச் சமமே; நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
அதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறையாது.) நீங்கள் செய்தவற்றுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
IFT
இப்போது அதனுள் நுழைந்து எரிந்து விடுங்கள். நீங்கள் சகித்துக்கொண்டாலும் சரி, சகிக்காவிட்டாலும் சரி. இரண்டும் உங்களுக்குச் சமம்தான். நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்களோ அவ்வாறே உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுகின்றது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இதில் நீங்கள் நுழைந்து விடுங்கள், (இதன் வேதனையைச் சகித்துப்) பொறுமையாயிருங்கள், அல்லது பொறுமையாய் இல்லாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, (வேதனையில் ஓர் அணுவளவும் குறைக்கப் படமாட்டீர்கள்). நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குத்தான்” (என்று கூறப்படும்).
Saheeh International
[Enter to] burn therein; then be patient or impatient - it is all the same for you. You are only being recompensed [for] what you used to do."
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَعِیْمٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِيْنَஇறையச்சமுடையவர்கள்فِىْ جَنّٰتٍசொர்க்கங்களிலும்وَّنَعِيْمٍۙ‏இன்பங்களிலும்
இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ ன'ஈம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தவர்கள் நிச்சயமாக சொர்க்கங்களிலும் இன்பத்திலும் இருப்பார்கள்.
IFT
இறையச்சமுள்ளவர்கள் அங்கு சுவனங்களிலும் அருட்பேறுகளிலும் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், (அல்லாஹ்வின்) அருட்கொடையிலும் (திளைத்து) இருப்பார்கள்.
Saheeh International
Indeed, the righteous will be in gardens and pleasure,
فٰكِهِیْنَ بِمَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ۚ وَوَقٰىهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟
فٰكِهِيْنَஅவர்களிடம் பழங்கள்بِمَاۤ اٰتٰٮهُمْஅவர்களுக்கு வழங்கியதால்رَبُّهُمْ‌ۚஅவர்களின் இறைவன்وَوَقٰٮهُمْஇன்னும் அவர்களை பாதுகாப்பான்رَبُّهُمْஅவர்களின் இறைவன்عَذَابَ الْجَحِيْمِ‏நரக வேதனையை விட்டும்
Fபாகிஹீன Bபிமா ஆதாஹும் ரBப்Bபுஹும் வ வகாஹும் ரBப்Bபுஹும் 'அதாBபல் ஜஹீம்
முஹம்மது ஜான்
அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி
தங்கள் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவற்றைப் பற்றியும், நரக வேதனையிலிருந்து தங்களைத் தங்கள் இறைவன் பாதுகாத்துக் கொண்டதைப் பற்றியும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள்.
IFT
அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றிலிருந்து இன்பம் துய்த்துக் கொண்டிருப்பார்கள். மேலும், அவர்களுடைய இறைவன் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்கள் இரட்சகன் தங்களுக்கு அளித்திருப்பவைகளை அனுபவித்தவர்களாக இருப்பர், மேலும், அவர்களின் இரட்சகன் அவர்களை நரக வேதனையிலிருந்து காத்துக் கொண்டான்.
Saheeh International
Enjoying what their Lord has given them, and their Lord protected them from the punishment of Hellfire.
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ
كُلُوْاஉண்ணுங்கள்وَاشْرَبُوْاஇன்னும் பருகுங்கள்هَـنِٓـيـْئًا ۢமகிழ்ச்சியாகبِمَا كُنْـتُمْ تَعْمَلُوْنَۙ‏நீங்கள் செய்துகொண்டிருந்த காரணத்தால்
குலூ வஷ்ரBபூ ஹனீ 'அம் Bபிமா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
(அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாக (இதில் உள்ளவற்றை) மிக்க தாராளமாகப் புசித்துக் கொண்டும், பருகிக் கொண்டும் இருங்கள்'' (என்றும் கூறப்படும்).
IFT
(அவர்களிடம் கூறப்படும்:) “உண்ணுங்கள், பருகுங்கள் மகிழ்வோடு; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்குரிய வெகுமதியாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களிடம் உலகில் நன்மைகளிலிருந்து) “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள் இன்னும் பருகுங்கள்” (என்றும் கூறப்படும்).
Saheeh International
[They will be told], "Eat and drink in satisfaction for what you used to do."
مُتَّكِـِٕیْنَ عَلٰی سُرُرٍ مَّصْفُوْفَةٍ ۚ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟
مُتَّكِـــِٕيْنَசாய்ந்தவர்களாக இருப்பார்கள்عَلٰى سُرُرٍகட்டில்களில்مَّصْفُوْفَةٍ‌ ۚவரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளில்وَزَوَّجْنٰهُمْஅவர்களுக்கு நாம் மணமுடித்துவைப்போம்بِحُوْرٍ عِيْنٍ‏கண்ணழகிகளான கருவிழிகளுடைய பெண்களை
முத்தகி'ஈன 'அலா ஸுருரிம் மஸ்FபூFபதி(ன்)வ் வ Zஜவ்வஜ் னாஹும் Bபிஹூரின் 'ஈன்
முஹம்மது ஜான்
அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்(து படுத்)தவர்களாக இருப்பர். நாம் அவர்களுக்கு (‘ஹூருல்ஈன்' என்னும்) கண்ணழகிக(ளாகிய கன்னி)களை திருமணம் செய்து வைப்போம்.
IFT
எதிரெதிரே விரித்து வைக்கப்பட்டிருக்கும் கட்டில்களில் மெத்தைகள் வைத்து அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அழகிய கண்களைக் கொண்ட மங்கையரை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அணியணியாகப் போடப்பட்ட கட்டில்களி(ல் உள்ள மஞ்சங்களி)ன் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள், நாம் அவர்களுக்கு (ஹூருல் ஈன் என்னும்) கண்ணழகி(களாகிய கன்னிகை)களை மணமுடித்து வைப்போம்.
Saheeh International
They will be reclining on thrones lined up, and We will marry them to fair women with large, [beautiful] eyes.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّیَّتُهُمْ بِاِیْمَانٍ اَلْحَقْنَا بِهِمْ ذُرِّیَّتَهُمْ وَمَاۤ اَلَتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَیْءٍ ؕ كُلُّ امْرِىۢ بِمَا كَسَبَ رَهِیْنٌ ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَاتَّبَعَتْهُمْஇன்னும் அவர்களைப் பின்பற்றினார்களோذُرِّيَّتُهُمْஅவர்களின் சந்ததிகளும்بِاِيْمَانٍஇறை நம்பிக்கையில்اَلْحَـقْنَا بِهِمْஅவர்களுடன் சேர்த்து வைப்போம்ذُرِّيَّتَهُمْஅவர்களின் சந்ததிகளைوَمَاۤ اَلَـتْنٰهُمْஅவர்களுக்கு நாம் குறைக்க மாட்டோம்مِّنْ عَمَلِهِمْஅவர்களின் அமல்களில்مِّنْ شَىْءٍ‌ؕஎதையும்كُلُّஒவ்வொருامْرِیءٍۢமனிதனும்بِمَا كَسَبَதான் செய்த செயலுக்காகرَهِيْنٌ‏தடுத்து வைக்கப்பட்டிருப்பான்
வல்லதீன ஆமனூ வத்தBப'அத் ஹும் துர்ரிய்யதுஹும் Bபிஈமானின் அல்ஹக்னா Bபிஹிம் துர்ரிய்யதஹும் வ மா அலத்னாஹும் மின் 'அமலிஹிம் மின் ஷய்'; குல்லும் ரி'இம் Bபிமா கஸBப ரஹீன்
முஹம்மது ஜான்
எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றி நம்பிக்கை கொள்கிறார்களோ (அந்தச் சந்ததிகளின் நன்மைகள் குறைவாக இருந்தும் அவர்களின் பெற்றோர்கள் திருப்தியடையும் பொருட்டு) அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் (சொர்க்கத்தில்) சேர்த்துவிடுவோம். இதனால் அவர்களுடைய பெற்றோர்களின் நன்மைகளில் எதையும் நாம் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்த செயலுக்குப் பிணையாக இருக்கிறான்.
IFT
எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ, அவர்களையும், இறைநம்பிக்கையில் ஓரளவாவது அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய அவர்களின் வழித்தோன்றல்களையும் நாம் (சுவனத்தில்) ஒன்று சேர்த்து வைப்போம். மேலும், அவர்களின் செயல்களில் எந்த இழப்பையும் அவர்களுக்கு நாம் ஏற்படுத்தமாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பணயமாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் விசுவாசங்கொண்டார்களே அத்தகையோர், அவர்களுடைய சந்ததிகளும் விசுவாசத்தின் மூலம் அவர்களை பின்பற்றினார்கள், (அத்தகைய அந்தச் சந்ததியினரின் படித்தரங்கள் குறைவாக இருப்பினும் அவர்களின் பெற்றோர்கள் இருக்கும் உயர் பதவிக்கு) அவர்களுடன் (சுவனபதியில்) அவர்களின் சந்ததியினரை சேர்த்து விடுவோம், (இதனால்) அவர்களுடைய (பெற்றோர்களின் நன்மையான) செயல்களில் எதனையும் அவர்களுக்கு நாம் குறைத்து விடமாட்டோம், ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்ததைக் கொண்டு பிணையாக்கபட்டிருக்கின்றான்.
Saheeh International
And those who believed and whose descendants followed them in faith - We will join with them their descendants, and We will not deprive them of anything of their deeds. Every person, for what he earned, is retained.
وَاَمْدَدْنٰهُمْ بِفَاكِهَةٍ وَّلَحْمٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟
وَاَمْدَدْنٰهُمْநாம் இவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்போம்بِفَاكِهَةٍபழங்களை(யும்)وَّلَحْمٍமாமிசங்களையும்مِّمَّا يَشْتَهُوْنَ‏அவர்கள் விரும்புகின்றவற்றின்
வ அம்தத்னாஹும் BபிFபா கிஹதி(ன்)வ் வ லஹ்மிம் மிம்மா யஷ்தஹூன்
முஹம்மது ஜான்
இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் விரும்பிய (பற்பல வகை) கனிவர்க்கங்களையும், மாமிசங்களையும் அவர்களுக்கு (நாள்தோறும்) நாம் (ஏராளமாகக்) கொடுத்து வருவோம்.
IFT
மேலும், நாம் எல்லாவிதமான பழங்களையும், இறைச்சியையும், அவர்களின் உள்ளம் விரும்புகின்றவற்றையும் அவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்துக்கொண்டே இருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பல வகையான) பழத்தையும், அவர்கள் விரும்பக்கூடியதிலிருந்து (பலவகையான) இறைச்சியையும் கொண்டு அவர்களும் நாம் (ஏராளமாகக் கொடுத்து) அதிகப்படுத்துவோம்.
Saheeh International
And We will provide them with fruit and meat from whatever they desire.
یَتَنَازَعُوْنَ فِیْهَا كَاْسًا لَّا لَغْوٌ فِیْهَا وَلَا تَاْثِیْمٌ ۟
يَـتَـنَازَعُوْنَ فِيْهَاஅதில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள்كَاْسًاகுடிபானம் நிறைந்த குவளைகளைلَّا لَغْوٌ فِيْهَاஅதில் பொய் இருக்காதுوَلَا تَاْثِيْمٌ‏பிறரை பாவத்தில் தள்ளுகின்ற செயல்கள் இருக்காது
யதனாZஜ'ஊன Fபீஹா கா'ஸல் லா லக்வுன் Fபீஹா வலா தா'தீம்
முஹம்மது ஜான்
(அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஒருவருடைய கிண்ணத்தை மற்றொருவர் (களிப்பால்) பிடுங்கிக் கொள்வார். (அதனால்) மனத்தாங்கலோ அல்லது மரியாதைக்குறைவோ ஏற்படாது.
IFT
அங்கே அவர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து மதுக்கிண்ணத்தைப் பாய்ந்து பாய்ந்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். அங்கு வீணான பேச்சும் இருக்காது; தீய நடத்தையும் இருக்காது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(ச்சுவனத்)தில் ஒருவருக்கொருவர் (மதுக்) கோப்பையை பரிமாறிக் கொள்வர், (அதில்) வீணானது இருக்காது, (அதை அருந்துவதால்) குற்றமிழைப்பதோ ஏற்படுவதில்லை.
Saheeh International
They will exchange with one another a cup [of wine] wherein [results] no ill speech or commission of sin.
وَیَطُوْفُ عَلَیْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُوْنٌ ۟
وَيَطُوْفُசுற்றி வருவார்கள்عَلَيْهِمْஅவர்களைغِلْمَانٌசிறுவர்கள்لَّهُمْஅவர்களுக்குரியكَاَنَّهُمْஅவர்களோ இருப்பார்கள்لُـؤْلُـؤٌமுத்துக்களைப் போன்றுمَّكْنُوْنٌ‏பாதுகாக்கப்பட்ட
வ யதூFபு 'அலய்ஹிம் கில்மானுல் லஹும் க அன்னஹும் லு'லு'உம் மக்னூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்களைச் சுற்றி (அவர்களுக்குப் பணி செய்ய எந்நேரமும்) சிறுவர்கள் பலர் சுற்றி வருவார்கள். அவர்கள் பதிந்த முத்துக்களைப் போல் (பிரகாசமாக) இருப்பார்கள்.
IFT
அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கென்று நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களுக்குச் சேவைபுரிய ஓடியாடிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அழகாய் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களுக்குரிய (பணிபுரியும்) சிறுவர்கள் அவர்களைச் சுற்றிகொண்டே இருப்பார்கள், அவர்கள் (சிப்பிகளில்) மறைத்து வைக்கப்பட்ட (கைபடாத) முத்துக்களைப் போல் (பிரகாசமான தோற்றமளிப்பவர்களாக) இருப்பர்.
Saheeh International
There will circulate among them [servant] boys [especially] for them, as if they were pearls well-protected.
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
وَاَقْبَلَமுன்னோக்கி வருவார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰى بَعْضٍசிலரைيَّتَسَآءَلُوْنَ‏தங்களுக்குள் கேட்டவர்களாக
வ அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதஸா'அலூன்
முஹம்மது ஜான்
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி (அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக) உரையாடுவார்கள்.
IFT
மேலும், அவர்கள் (உலகில் நடந்த) நிலைமைகளைக் குறித்து பரஸ்பரம் விசாரிப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்பவர்களாக அவர்களில் சிலர் (மற்ற) சிலரின் பால் முன்னோக்கியிருப்பார்கள்.
Saheeh International
And they will approach one another, inquiring of each other.
قَالُوْۤا اِنَّا كُنَّا قَبْلُ فِیْۤ اَهْلِنَا مُشْفِقِیْنَ ۟
قَالُـوْۤاஅவர்கள் கூறுவார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُـنَّاஇருந்தோம்قَبْلُஇதற்கு முன்னர்فِىْۤ اَهْلِنَاஎங்கள் குடும்பங்களில்مُشْفِقِيْنَ‏பயந்தவர்களாகவே
காலூ இன்னா குன்னா கBப்லு Fபீ அஹ்லினா முஷ்Fபிகீன்
முஹம்மது ஜான்
“இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘இதற்கு முன்னர், நாம் நம் குடும்பத்தைப் பற்றி (அவர்களுடைய கதி என்னவாகுமோ என்று) மெய்யாகவே பயந்துகொண்டே இருந்தோம்.
IFT
அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் முன்பு எங்கள் குடும்பத்தாரிடையே அஞ்சிய வண்ணம் வாழ்ந்து வந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாங்கள் முன்பு, எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய நிலை என்னவாகுமோ என்று) நிச்சயமாக பயந்தவர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள்.
Saheeh International
They will say, "Indeed, we were previously among our people fearful [of displeasing Allah].
فَمَنَّ اللّٰهُ عَلَیْنَا وَوَقٰىنَا عَذَابَ السَّمُوْمِ ۟
فَمَنَّஆக, உபகாரம் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْنَاஎங்கள் மீதுوَوَقٰٮنَاஇன்னும் எங்களை பாதுகாத்தான்عَذَابَவேதனையை விட்டும்السَّمُوْمِ‏நரகத்தின்
Fபமன்ன்னல் லாஹு 'அலய்னா வ வகானா 'அதாBபஸ் ஸமூம்
முஹம்மது ஜான்
“ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், அல்லாஹ் நம்மீது அருள் புரிந்து கொடிய வேதனையிலிருந்து நம்மை(யும் நம் குடும்பத்தினரையும்) காப்பாற்றினான்.
IFT
இறுதியில், அல்லாஹ் எங்கள்மீது அருள்புரிந்தான்; மேலும், பொசுக்கிவிடும் காற்றின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றிவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆயினும், அல்லாஹ் எங்கள் மீது பேருபகாரம் செய்து நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்துவிட்டான்.
Saheeh International
So Allah conferred favor upon us and protected us from the punishment of the Scorching Fire.
اِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُ ؕ اِنَّهٗ هُوَ الْبَرُّ الرَّحِیْمُ ۟۠
اِنَّاநிச்சயமாக நாங்கள்كُـنَّاஇருந்தோம்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்نَدْعُوْهُ‌ ؕஅவனை அழைப்பவர்களாகاِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْبَـرُّமிகவும் அருளுடையவன்الرَّحِيْمُ‏மகா கருணையாளன்
இன்னா குன்னா மின் கBப்லு னத்'ஊஹு இன்னஹூ ஹுவல் Bபர்ருர் ரஹீம்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்; நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்; பெருங்கிருபையுடையவன்.”  
அப்துல் ஹமீது பாகவி
இதற்கு முன்னர் (வேதனையிலிருந்து நம்மை காக்கும்படி) மெய்யாகவே நாம் அவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தோம். மெய்யாகவே அவன்தான் நன்மை செய்பவன், பேரன்புடையவன் ஆவான்'' என்று கூறுவார்கள்.
IFT
திண்ணமாக, நாங்கள் முந்தைய வாழ்க்கையில் அவனிடமே இறைஞ்சிக்கொண்டிருந்தோம். அவன் உண்மையில் பேருபகாரியும் கருணையாளனும் ஆவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (இதற்கு) முன்னர் (வேதனையிலிருந்து எங்களைக் காக்குமாறு) நாங்கள் அவனை (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக, அவனே மிகக் கூடுதலாக உபகாரம் செய்பவன், மிகக்கிருபையுடையவன்” (என்றும் கூறுவார்கள்).
Saheeh International
Indeed, we used to supplicate Him before. Indeed, it is He who is the Beneficent, the Merciful."
فَذَكِّرْ فَمَاۤ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍ ۟ؕ
فَذَكِّرْஆகவே, நல்லுபதேசம் செய்வீராக!فَمَاۤ اَنْتَநீர் இல்லைبِنِعْمَتِஅருட்கொடையால்رَبِّكَஉமது இறைவனின்بِكَاهِنٍகுறிசொல்பவராக(வும்)وَّلَا مَجْنُوْنٍؕ‏பைத்தியக்காரராகவும்
Fபதக்கிர் Fபமா அன்த Bபினிஃமதி ரBப்Bபிக Bபிகாஹினி(ன்)வ் வலா மஜ்னூன்
முஹம்மது ஜான்
எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) (நிராகரிப்பவர்களுக்கு வேதனையை) ஞாபகமூட்டிக் கொண்டே இருப்பீராக. உமது இறைவனின் அருளால் நீர் குறி சொல்பவருமல்ல; பைத்தியக்காரருமல்ல.
IFT
(நபியே!) நீர் அறிவுரை வழங்கிய வண்ணம் இருப்பீராக! உம் இறைவனின் அருளால் நீர் சூனியக்காரருமல்லர்; பைத்தியக்காரரும் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே! அல்லாஹ்வின் தூதை எத்திவைத்து, அவன் இறக்கிவைத்த குர் ஆனின் மூலம்) அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக! உமது இரட்சகனின் அருளால் நீர் குறிகாரரல்லர், பைத்திக்காரருமல்லர்.
Saheeh International
So remind, [O Muhammad], for you are not, by the favor of your Lord, a soothsayer or a madman.
اَمْ یَقُوْلُوْنَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهٖ رَیْبَ الْمَنُوْنِ ۟
اَمْ يَقُوْلُوْنَஅல்லது கூறுகிறார்களா?شَاعِرٌஒரு கவிஞர்نَّتَـرَبَّصُநாங்கள் எதிர்பார்க்கின்றோம்بِهٖஅவருக்குرَيْبَஅசம்பாவிதங்களைالْمَنُوْنِ‏காலத்தின்
அம் யகூலூன ஷா'இருன் னதரBப்Bபஸு Bபிஹீ ரய்Bபல் மனூன்
முஹம்மது ஜான்
அல்லது அவர்கள் (உம்மைப் பற்றி, “அவர்) புலவர்; அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்துக் இருக்கிறோம்” என்று கூறுகிறார்களா?
அப்துல் ஹமீது பாகவி
(உம்மைப் பற்றி) அவர்கள் (நீர்) ஒரு கவிஞர்தான் என்று கூறுகின்றனரா? (இக்கூற்றுக்குத் தண்டனையாக அவர்கள் மீது சம்பவிக்கக்கூடிய சோதனையின்) காலச்சக்கரத்தை எதிர்பார்த்திருப்போம்.
IFT
“இவர் ஒரு கவிஞர்; இவர் விஷயத்தில் சுழற்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்” என்று இவர்கள் கூறுகின்றார்களா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது_(உம்மைப்பற்றி, ”அவர்) ஒரு கவிஞர் தாம், அவருக்கு (இறப்பெனும்) காலச்சூழலை நாம் எதிர்பார்த்திருப்போம்” என்று அவர்கள் கூறுகின்றனரா?
Saheeh International
Or do they say [of you], "A poet for whom we await a misfortune of time"?
قُلْ تَرَبَّصُوْا فَاِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُتَرَبِّصِیْنَ ۟ؕ
قُلْகூறுவீராக!تَرَبَّصُوْاநீங்கள் எதிர்பாருங்கள்فَاِنِّىْநிச்சயமாக நானும்مَعَكُمْஉங்களுடன்مِّنَ الْمُتَـرَبِّصِيْنَ ؕ‏எதிர்பார்ப்பவர்களில்
குல் தரBப்Bபஸூ Fப இன்னீ ம'அகும் மினல் முதரBப்Bபிஸீன்
முஹம்மது ஜான்
“நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே (அவர்களை நோக்கி, அதை) ‘‘நீங்களும் எதிர்பார்த்திருங்கள். (என்ன நடக்கிறது என்பதை) நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்'' என்று கூறுவீராக.
IFT
இவர்களிடம் நீர் கூறும்: “சரி, எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்க்கிறேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, அவர்களிடம் “அதனை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள், (என்ன நடக்கிறதென்பதை நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களிலுள்ளவன்” என்று கூறுவீராக!
Saheeh International
Say, "Wait, for indeed I am, with you, among the waiters."
اَمْ تَاْمُرُهُمْ اَحْلَامُهُمْ بِهٰذَاۤ اَمْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ
اَمْ تَاْمُرُهُمْஅவர்களை ஏவுகின்றதா?اَحْلَامُهُمْஅவர்களது அறிவுகள்بِهٰذَآ‌இதற்குاَمْ هُمْஅல்லது அவர்கள்قَوْمٌமக்களா?طَاغُوْنَ‌ۚ‏வரம்பு மீறுகின்ற(வர்கள்)
அம் தாமுருஹும் அஹ்லாமுஹும் Bபிஹாதா அம் ஹும் கவ்முன் தாகூன்
முஹம்மது ஜான்
அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மை குறிகாரர் என்றும், பைத்தியக்காரர் என்றும் கூறும்படி) அவர்களுடைய அறிவுதான் அவர்களைத் தூண்டுகிறதா? அல்லது (இயற்கையாகவே) அவர்கள் விஷமிகள்தானா?
IFT
இவர்களின் அறிவுதான் இவ்வாறெல்லாம் இவர்களைப் பேசத் தூண்டுகிறதா? அல்லது உண்மையில் இவர்கள் பகைமையில் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாய் இருக்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லது (நபியே! உம்மை பற்றி கவிஞர், பைத்தியக்காரர், குறிகாரர் என்றெல்லாம் கூறுமாறு) அவர்களுடைய அறிவுகள்தான் இவ்வாறு அவர்களை ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்புமீறிய கூட்டத்தினரா?”
Saheeh International
Or do their minds command them to [say] this, or are they a transgressing people?
اَمْ یَقُوْلُوْنَ تَقَوَّلَهٗ ۚ بَلْ لَّا یُؤْمِنُوْنَ ۟ۚ
اَمْ يَقُوْلُوْنَஅல்லது கூறுகிறார்களா?تَقَوَّلَهٗ‌ ۚஇதை புனைந்து கூறுகிறார்بَلْ لَّا يُؤْمِنُوْنَ‌ ۚ‏மாறாக/நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்
அம் யகூலூன தகவ்வலஹ்; Bபல் லா யு'மினூன்
முஹம்மது ஜான்
அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது (நம் நபியாகிய) இவர் பொய்யாகவே அதைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? மாறாக (மனமுரண்டாகவே) இதை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
IFT
அல்லது, “இந்த மனிதர் இந்தக் குர்ஆனை சுயமாகப் புனைந்திருக்கின்றார்” என்று இவர்கள் கூறுகின்றார்களா? உண்மை யாதெனில், இவர்கள் நம்பிக்கை கொள்ள விரும்பவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, “அவர் அதனைக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகின்றனரா? இல்லை! அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
Or do they say, "He has made it up"? Rather, they do not believe.
فَلْیَاْتُوْا بِحَدِیْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟ؕ
فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤஇது போன்ற ஒரு பேச்சை அவர்கள் கொண்டு வரட்டும்!اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ‏இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்
Fபல்யாதூ Bபிஹதீதிம் மித்லிஹீ இன் கானூ ஸாதிகீன்
முஹம்மது ஜான்
ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீரென்று கூறுவதில்) அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவர்களும் கற்பனை செய்து கொண்டு) இதைப்போன்ற ஒரு வாக்கியத்தைக்கொண்டு வரவும்.
IFT
இவர்கள் உண்மையானவர்களாய் இருந்தால், இதே போன்ற மகத்துவமிக்க ஒரு வாக்கை இவர்கள் இயற்றிக்கொண்டு வரட்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (நபியே! இவ்வாறு கூறுவதில்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதைப்போன்ற செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
Saheeh International
Then let them produce a statement like it, if they should be truthful.
اَمْ خُلِقُوْا مِنْ غَیْرِ شَیْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَ ۟ؕ
اَمْ خُلِقُوْاஇவர்கள் படைக்கப்பட்டார்களா?مِنْ غَيْرِ شَىْءٍஏதும் இன்றிاَمْஅல்லதுهُمُஇவர்கள்தான்الْخٰلِقُوْنَؕ‏படைத்தவர்களா?
அம் குலிகூ மின் கய்ரி ஷய்'இன் அம் ஹுமுல் காலிகூன்
முஹம்மது ஜான்
அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா?
IFT
படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, அவர்கள் எப்பொருளுமின்றி (தாமகாவே) படைக்கப்பட்டு விட்டனரா? அல்லது அவர்கள்தான் படைக்கின்றவர்களா?
Saheeh International
Or were they created by nothing, or were they the creators [of themselves]?
اَمْ خَلَقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ بَلْ لَّا یُوْقِنُوْنَ ۟ؕ
اَمْ خَلَـقُواஇவர்கள்தான் படைத்தார்களா?السَّمٰوٰتِவானங்களை(யும்)وَالْاَرْضَ‌ۚபூமியையும்بَلْமாறாகلَّا يُوْقِنُوْنَؕ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
அம் கலகுஸ் ஸமாவாதி வல் அர்ள்; Bபல் லா யூகினூன்
முஹம்மது ஜான்
அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? மாறாக, (இவற்றை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை.
IFT
அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? உண்மை யாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, வானங்களையும், பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல! (இவைகளையெல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான்! அவனை) இவர்கள் உறுதி கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
Or did they create the heavens and the earth? Rather, they are not certain.
اَمْ عِنْدَهُمْ خَزَآىِٕنُ رَبِّكَ اَمْ هُمُ الْمُصَۜیْطِرُوْنَ ۟ؕ
اَمْ عِنْدَهُمْஇவர்களிடம் இருக்கின்றனவா?خَزَآٮِٕنُபொக்கிஷங்கள்رَبِّكَஉமது இறைவனின்اَمْ هُمُ الْمُصَۜيْطِرُوْنَؕ‏அல்லது அவர்கள் அடக்கிவிடக் கூடியவர்களா?
அம்'இன்தஹும் கZஜா'இனு ரBப்Bபிக அம் ஹுமுல் முஸய்திரூன்
முஹம்மது ஜான்
அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது இவர்களிடம்தான் உமது இறைவனின் பொக்கிஷங்கள் அனைத்தும் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் அதைப் பங்கிடக்கூடிய அதிகாரிகளா?
IFT
உம் அதிபதியின் கருவூலங்கள் இவர்களின் பிடியில் உள்ளனவா? அல்லது அவற்றின் மீது இவர்களின் ஆதிக்கம்தான் நடைபெறுகின்றதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, அவர்களிடம் உமதிரட்சகனின் களஞ்சியங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்களே (அவற்றை) ஆதிக்கம் செலுத்துபவர்களா?
Saheeh International
Or have they the depositories [containing the provision] of your Lord? Or are they the controllers [of them]?
اَمْ لَهُمْ سُلَّمٌ یَّسْتَمِعُوْنَ فِیْهِ ۚ فَلْیَاْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ؕ
اَمْ لَهُمْஅவர்களுக்கு ?سُلَّمٌஓர் ஏணிيَّسْتَمِعُوْنَசெவியுறுகின்றனராفِيْهِ‌ ۚஅதில்فَلْيَاْتِவரட்டும்مُسْتَمِعُهُمْஅவர்களில் செவியுற்றவர்بِسُلْطٰنٍ مُّبِيْنٍؕ‏தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டு
அம் லஹும் ஸுல்லமு(ன்)ய் யஸ்தமி'ஊன Fபீஹி Fபல்யாதி முஸ்தமி'உஹும் Bபிஸுல்தானிம் முBபீன்
முஹம்மது ஜான்
அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது இவர்களுக்கு (வானத்தில் ஏறக்கூடிய) ஏணி இருந்து, அதில் (ஏறிச் சென்று, அங்கு நடைபெறும் பேச்சுகளைக்) கேட்டு வருகின்றனரா? அவ்வாறாயின், (அவற்றை) கேட்டு வந்தவர் (அதற்குத்) தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டுவரவும்.
IFT
அல்லது இவர்களிடம் ஏணி ஏதும் இருந்து அதில் ஏறிச்சென்று (மேலுலகின் செய்திகளை) இவர்கள் ஒட்டுக்கேட்டு வருகின்றார்களா, என்ன? இவர்களில் எவரேனும் அப்படிக் கேட்டிருந்தால் அவர் ஏதேனும் தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரட்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, இவர்களுக்கு (வானத்தில் ஏறிச்செல்ல) ஏணி இருந்து, அதில் (ஏறி அங்கு பேசப்படுபவற்றைச்) செவிமடுக்கிறார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் தெளிவான ஒரு சான்றைக் கொண்டு வரட்டும்.
Saheeh International
Or have they a stairway [into the heaven] upon which they listen? Then let their listener produce a clear authority [i.e., proof].
اَمْ لَهُ الْبَنٰتُ وَلَكُمُ الْبَنُوْنَ ۟ؕ
اَمْ لَـهُஅவனுக்கு ?الْبَنٰتُபெண் பிள்ளைகளும்وَلَـكُمُஉங்களுக்குالْبَنُوْنَؕ‏ஆண் பிள்ளைகளும்
அம் லஹுல் Bபனாது வ லகுமுல் Bபனூன்
முஹம்மது ஜான்
அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது (நீங்கள் கூறுகின்றபடி) அல்லாஹ்வுக்குப் பெண் சந்ததிகள்; உங்களுக்கு மட்டும் ஆண் சந்ததிகளா?
IFT
என்ன, அல்லாஹ்விற்கு மட்டும் பெண்மக்கள்; உங்களுக்கு ஆண் மக்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, (உங்கள் கற்பனைகளில் உள்ளவாறு அல்லாஹ்வாகிய) அவனுக்குப் பெண் மக்களும், உங்களுக்கு (மட்டும்) ஆண் மக்களுமா?
Saheeh International
Or has He daughters while you have sons?
اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ؕ
اَمْ تَسْــٴَــلُهُمْஅவர்களிடம் நீர் கேட்கின்றீரா?اَجْرًاகூலி எதையும்فَهُمْஅவர்கள்مِّنْ مَّغْرَمٍகடன் தொகையினால்مُّثْقَلُوْنَؕ‏ ‏சுமைக்குள்ளாகி விட்டார்களா?
அம் தஸ்'அலுஹும் அஜ்ரன் Fபஹும் மிம் மக்ரமிம் முத்கலூன்
முஹம்மது ஜான்
அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,
அப்துல் ஹமீது பாகவி
அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்டு அந்தப் பளுவை அவர்கள் சுமக்க முடியாமல் இருக்கின்றனரா?
IFT
நீர் அவர்களிடம் ஏதாவது கூலியைக் கேட்கின்றீரா? அதன் சுமையால் அவர்கள் அழுத்தப்படுகின்றார்களா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, அவர்களிடம் நீர் ஏதேனும் கூலி கேட்கிறீரா? எனவே அவர்கள் கடனால் பளுவாக்கப்பட்டவர்களா?
Saheeh International
Or do you, [O Muhammad], ask of them a payment, so they are by debt burdened down?
اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟ؕ
اَمْ عِنْدَهُمُஅவர்களிடம் இருக்கின்றதாالْغَيْبُமறைவானவற்றின் அறிவுفَهُمْஅதை அவர்கள்يَكْتُبُوْنَؕ‏எழுதுகின்றார்களா?
அம் 'இன்தஹுமுல் கய்Bபு Fபஹும் யக்துBபூன்
முஹம்மது ஜான்
அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,
அப்துல் ஹமீது பாகவி
அல்லது இவர்களிடம் மறைவான விஷய(த்தின் ஞான)ம் இருக்கிறதா? இவர்கள் (அதை அல்லாஹ்வைப் போல்) எழுதி வருகின்றனரா?
IFT
அல்லது, இவர்களிடம் மறைவான உண்மைகளின் ஞானம் இருக்கின்றதா? (அதன் அடிப்படையில்) இவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, அவர்களிடம் (அல்லாஹ்வைப் போல்) மறைவானது (அது பற்றிய அறிவு) இருக்கிறதா? எனவே அவர்கள் (அதனை) எழுதுகிறார்களா?
Saheeh International
Or have they [knowledge of] the unseen, so they write [it] down?
اَمْ یُرِیْدُوْنَ كَیْدًا ؕ فَالَّذِیْنَ كَفَرُوْا هُمُ الْمَكِیْدُوْنَ ۟ؕ
اَمْ?يُرِيْدُوْنَநாடுகின்றனர்كَيْدًا‌ؕசூழ்ச்சியைفَالَّذِيْنَ كَفَرُوْاஆனால், நிராகரித்தவர்கள்தான்هُمُ الْمَكِيْدُوْنَؕ‏சூழ்ச்சி செய்யப்பட்டவர்கள்
அம் யுரீதூன கய்தன் Fபல்லதீன கFபரூ ஹுமுல் மகீதூன்
முஹம்மது ஜான்
அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது ஒரு சூழ்ச்சி செய்ய இவர்கள் கருதுகின்றனரா? அவ்வாறாயின், இந்நிராகரிப்பவர்கள்தான் சூழ்ச்சிக்குள்ளாவார்கள்.
IFT
அல்லது, இவர்கள் சூழ்ச்சி ஏதும் செய்ய விரும்புகின்றார்களா, என்ன? அப்படியென்றால், நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி அவர்களையே திருப்பித் தாக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது ஏதேனுமொரு சூழ்ச்சி செய்ய அவர்கள் நாடுகிறார்களா? அவ்வாறாயின், நிராகரித்தார்களே அவர்கள்தாம் சூழ்ச்சிக்குள்ளாக்கப்படுபவர்கள்.
Saheeh International
Or do they intend a plan? But those who disbelieve - they are the object of a plan.
اَمْ لَهُمْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟
اَمْ لَهُمْஅவர்களுக்கு உண்டா?اِلٰهٌ(வேறு) கடவுள்غَيْرُ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வை அன்றிسُبْحٰنَமகா பரிசுத்தமானவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّا يُشْرِكُوْنَ‏அவர்கள் இணைவைப்பதை விட்டும்
அம் லஹும் இலாஹுன் கய்ருல் லா; ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யுஷ்ரிகூன்
முஹம்மது ஜான்
அல்லது, அவர்கள் அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது அல்லாஹ்வையன்றி இவர்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் இருக்கிறானா? இவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
IFT
அல்லாஹ்வைத் தவிர, வேறு ஒரு கடவுள் இவர்களுக்கு உண்டா? அல்லாஹ் தூய்மையானவன், இவர்களின் இணை வைப்பை விட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாத (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இருக்கின்றானா? அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
Saheeh International
Or have they a deity other than Allah? Exalted is Allah above whatever they associate with Him.
وَاِنْ یَّرَوْا كِسْفًا مِّنَ السَّمَآءِ سَاقِطًا یَّقُوْلُوْا سَحَابٌ مَّرْكُوْمٌ ۟
وَاِنْ يَّرَوْاஅவர்கள் பார்த்தால்كِسْفًاதுண்டுகளைمِّنَ السَّمَآءِவானத்திலிருந்துسَاقِطًاவிழக்கூடிய(து)يَّقُوْلُوْاஅவர்கள் கூறுவார்கள்سَحَابٌமேகங்கள்مَّرْكُوْمٌ‏ஒன்று சேர்ந்த(வை)
வ இ(ன்)ய் யரவ் கிஸ்Fபம் மினஸ் ஸமா'இ ஸாகித(ன்)ய் யகூலூ ஸஹாBபும் மர்கூம்
முஹம்மது ஜான்
வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
வானம் இடிந்து அதிலிருந்த ஒரு துண்டு விழுவதை இவர்கள் கண்ணால் கண்டபோதிலும் (அது வானமல்ல;) மேகம்தான் என்றும், ஆனால் அது உறைந்து இறுகிவிட்டதென்றும் கூறுவார்கள்.
IFT
வானத்தின் துண்டுகள் கீழே வீழ்வதை இவர்கள் பார்த்தாலும், “இவை அடர்த்தியாய் வந்து கொண்டிருக்கும் மேகங்கள்” என்றுதான் கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானத்திலிருந்து (இடிந்து) துண்டுகள் விழுவதை அவர்கள் (கண்ணால்) காண்பார்களானால், (அது வானமல்ல,) அது அடர்த்தியான மேகம்தான்” என்று கூறுவார்கள்.
Saheeh International
And if they were to see a fragment from the sky falling, they would say, "[It is merely] clouds heaped up."
فَذَرْهُمْ حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ فِیْهِ یُصْعَقُوْنَ ۟ۙ
فَذَرْهُمْஆகவே, அவர்களை விட்டுவிடுவீராக!حَتّٰىவரைيُلٰقُوْاஅவர்கள் சந்திக்கின்றيَوْمَهُمُஅவர்களுடைய நாள்الَّذِىْஎதுفِيْهِஅதில்يُصْعَقُوْنَۙ‏அழிந்துவிடுகின்ற
Fபதர்ஹும் ஹத்தா யுலாகூ யவ்மஹுமுல் லதீ Fபீஹி யுஸ்'அகூன்
முஹம்மது ஜான்
ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்களுடைய அறிவு பறந்துவிடக்கூடிய நாளை இவர்கள் சந்திக்கும் வரை நீர் இவர்களை விட்டு விடுவீராக.
IFT
எனவே (நபியே!) இவர்களை இவர்களுடைய நிலையிலேயே விட்டுவிடும்; இவர்கள் எந்நாளில் அடித்து வீழ்த்தப்படுவார்களோ அந்நாளை அடையும் வரையில்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) எதில் அவர்கள் அழிக்கப்படுவார்களோ, அத்தகைய அவர்களுடைய நாளை அவர்கள் சந்திக்கும் வரையில் நீர் அவர்களை விட்டுவிடுவீராக!
Saheeh International
So leave them until they meet their Day in which they will be struck insensible -
یَوْمَ لَا یُغْنِیْ عَنْهُمْ كَیْدُهُمْ شَیْـًٔا وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟ؕ
يَوْمَஅந்நாளில்لَا يُغْنِىْதடுக்காதுعَنْهُمْஅவர்களை விட்டும்كَيْدُهُمْஅவர்களின் சூழ்ச்சிشَيْـٴًـــاஎதையும்وَّلَا هُمْ يُنْصَرُوْنَؕ‏அவர்கள் உதவியும் செய்யப்பட மாட்டார்கள்
யவ்ம லா யுக்னீ 'அன்ஹும் கய்துஹும் ஷய்'அ(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
முஹம்மது ஜான்
அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது; அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் இவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றுமே இவர்களுக்குப் பயனளிக்காது. எவர்களுடைய உதவியும் இவர்களுக்குக் கிடைக்காது.
IFT
அந்நாளில் இவர்களின் எந்த சூழ்ச்சியும் இவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காது. மேலும், இவர்களுக்கு உதவி செய்திட யாரும் வரமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயனளிக்காது, (எவராலும்) அவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
Saheeh International
The Day their plan will not avail them at all, nor will they be helped.
وَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا عَذَابًا دُوْنَ ذٰلِكَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
وَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْاநிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்குعَذَابًاவேதனைدُوْنَ ذٰلِكَஅதற்கு முன்னரேوَلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَهُمْஅவர்களில் அதிகமானவர்கள்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
வ இன்ன லில்லதீன ளலமூ 'அதாBபன் தூன தலிக வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
முஹம்மது ஜான்
அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இவ்வக்கிரமக்காரர்களுக்கு (மறுமையின்) வேதனைக்கு முன்னால் (இம்மையிலும்) வேதனை இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.
IFT
மேலும், அந்த நாள் வருவதற்கு முன்பும் கூட கொடுமைக்காரர்களுக்கு ஒரு வேதனை இருக்கின்றது. ஆனால், அவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், நிச்சயமாக அநியாயம் செய்துகொண்டிருந்தோர்க்கு (மறுமையின் வேதனையாகிய) அதுமட்டுமின்றி (இம்மையில்) மற்றொரு வேதனையுமிருக்கின்றது, எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்துகொள்ளமாட்டார்கள்.
Saheeh International
And indeed, for those who have wronged is a punishment before that, but most of them do not know.
وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْیُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِیْنَ تَقُوْمُ ۟ۙ
وَاصْبِرْபொறுமையாக இருப்பீராக!لِحُكْمِதீர்ப்புக்காகرَبِّكَஉமது இறைவனின்فَاِنَّكَநிச்சயமாக நீர்بِاَعْيُنِنَا‌நமது கண்களுக்கு முன்னால்وَسَبِّحْநீர் துதிப்பீராகبِحَمْدِபுகழ்ந்துرَبِّكَஉமது இறைவனைحِيْنَநேரத்தில்تَقُوْمُۙ‏எழும்
வஸ்Bபிர் லிஹுக்மி ரBப்Bபிக Fப இன்னக Bபி-அஃயுனினா வ ஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக ஹீன தகூம்
முஹம்மது ஜான்
எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையாக எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கிறீர். (ஆகவே, அவர்கள் உம்மைத் தங்கள் விருப்பப்படி துன்புறுத்த முடியாது.) ஆயினும், நீர் (நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமது இறைவனின் புகழைக்கூறித் துதி செய்வீராக!
IFT
(நபியே!) உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இருப்பீராக! நீர் எம் கண்காணிப்பில் இருக்கின்றீர். நீர் எழும்போது உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதிப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) உமதிரட்சகனின் தீர்ப்பை (எதிர்பார்த்துப்) பொருத்திருப்பீராக! நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர், (ஆகவே, அவர்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்து விட முடியாது.) மேலும் (நீர் நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமதிரட்சகனின் புகழைக்கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக!
Saheeh International
And be patient, [O Muhammad], for the decision of your Lord, for indeed, you are in Our eyes [i.e., sight]. And exalt [Allah] with praise of your Lord when you arise
وَمِنَ الَّیْلِ فَسَبِّحْهُ وَاِدْبَارَ النُّجُوْمِ ۟۠
وَمِنَ الَّيْلِஇன்னும் இரவில்فَسَبِّحْهُஅவனை துதிப்பீராக!وَاِدْبَارَஇன்னும் மறைந்த பின்னர்النُّجُوْمِ‏நட்சத்திரங்கள்
வ மினல் லய்லி FபஸBப்Bபிஹ்ஹு வ இத்Bபாரன் னுஜூம்
முஹம்மது ஜான்
இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக!
அப்துல் ஹமீது பாகவி
இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் (காலை) நேரத்திலும் அவனை துதி செய்வீராக!
IFT
இரவிலும் அவனைத் துதி செய்வீராக. தாரகைகள் மறையும் வேளையிலும் (துதிப்பீராக!)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் (காலை) நேரத்திலும் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக!
Saheeh International
And in a part of the night exalt Him and after [the setting of] the stars.