">

தேடல் வார்த்தை: "மூஸா"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

170 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 2 / 4 (முடிவுகள் 51 - 100)

ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی وَهٰرُوْنَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ بِاٰیٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
ثُمَّபிறகுبَعَثْنَاஅனுப்பினோம்مِنْۢ بَعْدِபின்னர்هِمْஇவர்களுக்குمُّوْسٰமூஸாவைوَهٰرُوْنَஇன்னும் ஹாரூனைاِلٰபக்கம்فِرْعَوْنَஃபிர்அவ்ன்وَ مَلَا۟ىِٕهٖஇன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்بِاٰيٰتِنَاநம் அத்தாட்சிகளுடன்فَاسْتَكْبَرُوْاஅவர்கள் கர்வம் கொண்டனர்وَكَانُوْاஇன்னும் இருந்தனர்قَوْمًاசமுதாயமாகمُّجْرِمِيْنَ‏குற்றம் புரிகின்றவர்கள்
தும்ம Bப'அத்னா மின் Bபஃதிஹிம் மூஸா வ ஹாரூன இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Bபி ஆயாதினா Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மன் முஜ்ரிமீன்
இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
قَالَ مُوْسٰۤی اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ ؕ اَسِحْرٌ هٰذَا ؕ وَلَا یُفْلِحُ السّٰحِرُوْنَ ۟
قَالَகூறினார்مُوْسٰٓىமூஸாاَتَقُوْلُوْنَகூறுகிறீர்களா?لِلْحَقِّஉண்மையைلَمَّاபோதுجَآءَவந்தكُمْஉங்களிடம்اَسِحْرٌசூனியமா?هٰذَا ؕஇதுوَلَا يُفْلِحُவெற்றி பெறமாட்டார்கள்السَّاحِرُوْنَ‏சூனியக்காரர்கள்
காலா மூஸா 'அ தகூலூன லில் ஹக்கி லம்ம்மா ஜா'அ கும் 'அ ஸிஹ்ருன் ஹாதா வலா யுFப்லிஹுஸ் ஸாஹிரூன்
அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.
فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟
فَلَمَّا جَآءَவந்த போதுالسَّحَرَةُசூனியக்காரர்கள்قَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குمُّوْسٰۤىமூஸாاَلْقُوْاஎறியுங்கள்مَاۤஎதைاَنْتُمْநீங்கள்مُّلْقُوْنَ‏எறியக்கூடியவர்கள்
Fபலம்மா ஜா'அஸ்ஸ ஹரது கால லஹும் மூஸா அல்கூ மா அன்தும் முல்கூன்
அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.
فَلَمَّاۤ اَلْقَوْا قَالَ مُوْسٰی مَا جِئْتُمْ بِهِ ۙ السِّحْرُ ؕ اِنَّ اللّٰهَ سَیُبْطِلُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَا یُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِیْنَ ۟
فَلَمَّاۤ اَلْقَوْاஆகவே அவர்கள் எறிந்தபோதுقَالَகூறினார்مُوْسٰىமூஸாمَا جِئْتُمْ بِهِۙநீங்கள் செய்தவைالسِّحْرُ‌ؕசூனியம்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்سَيُبْطِلُهٗஅழிப்பான்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يُصْلِحُசீர்படுத்த மாட்டான்عَمَلَசெயலைالْمُفْسِدِيْنَ‏விஷமிகளின்
Fபலம்மா அல்கவ் கால மூஸா மா ஜி'தும் Bபிஹிஸ் ஸிஹ்ர்; இன்னல் லாஹ ஸ யுBப்திலுஹூ; இன்னல் லாஹ லா யுஸ்லிஹு 'அமலல் முFப்ஸிதீன்
அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா: “நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்” என்று கூறினார்.
فَمَاۤ اٰمَنَ لِمُوْسٰۤی اِلَّا ذُرِّیَّةٌ مِّنْ قَوْمِهٖ عَلٰی خَوْفٍ مِّنْ فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهِمْ اَنْ یَّفْتِنَهُمْ ؕ وَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِی الْاَرْضِ ۚ وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِیْنَ ۟
فَمَاۤ اٰمَنَநம்பிக்கை கொள்ளவில்லைلِمُوْسٰٓىமூஸாவைاِلَّاதவிரذُرِّيَّةٌஒரு சந்ததியினர்مِّنْ قَوْمِهٖஅவரின்சமுதாயத்தில்عَلٰى خَوْفٍபயந்துمِّنْ فِرْعَوْنَஃபிர்அவ்ன்وَمَلَا۟ ٮِٕهِمْஇன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்اَنْ يَّفْتِنَهُمْ‌ ؕஅவன் துன்புறுத்துவதை/தங்களைوَاِنَّநிச்சயமாகفِرْعَوْنَஃபிர்அவ்ன்لَعَالٍசர்வாதிகாரிفِى الْاَرْضِ‌ ۚபூமியில்وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவன்لَمِنَ الْمُسْرِفِيْنَ‏வரம்பு மீறக்கூடியவர்களில்
Fபமா ஆமன லி-மூஸா இல்லா துர்ரிய்யதுன் மின் கவ்மிஹீ 'அலா கவ்Fபின் மின் Fபிர்'அவ்ன வ மல'இஹிம் 'அ(ன்)ய் யFப்தினஹும்; வ இன்ன Fபிர்'அவ்ன ல'ஆலின் Fபில் அர்ளி வ இன்னஹூ லமினல் முஸ்ரிFபீன்
ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.
وَقَالَ مُوْسٰی یٰقَوْمِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ فَعَلَیْهِ تَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّسْلِمِیْنَ ۟
وَقَالَகூறினார்مُوْسٰىமூஸாيٰقَوْمِஎன் சமுதாயமேاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்اٰمَنْتُمْநம்பிக்கை கொண்டீர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைفَعَلَيْهِஅவன் மீதேتَوَكَّلُوْاۤநம்பிக்கை வையுங்கள்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّسْلِمِيْنَ‏முஸ்லிம்களாக
வ கால மூஸா யா கவ்மி இன் குன்தும் ஆமன்தும் Bபில்லாஹி Fப'அலய்ஹி தவக்கலூ இன் குன்தும் முஸ்லிமீன்
மூஸா (தம் சமூகத்தவரிடம்): “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லிம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார்.
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰی وَاَخِیْهِ اَنْ تَبَوَّاٰ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُیُوْتًا وَّاجْعَلُوْا بُیُوْتَكُمْ قِبْلَةً وَّاَقِیْمُوا الصَّلٰوةَ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
وَاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَىٰ مُوْسٰىமூஸாவுக்குوَاَخِيْهِஇன்னும் அவரது சகோதரரைاَنْ تَبَوَّاٰநீங்கள் இருவரும் அமையுங்கள்لِقَوْمِكُمَاஉங்கள் சமுதாயத்திற்காகبِمِصْرَமிஸ்ரில்بُيُوْتًاவீடுகளைوَّاجْعَلُوْاஇன்னும் ஆக்குங்கள்بُيُوْتَكُمْஉங்கள் வீடுகளைقِبْلَةًதொழுமிடங்களாகوَّاَقِيْمُواஇன்னும் நிலைநிறுத்துங்கள்الصَّلٰوةَ‌ ؕதொழுகையைوَبَشِّرِநற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
வ அவ்ஹய்னா இலா மூஸா வ அகீஹி அன் தBபவ் வ ஆலி கவ்மிகும Bபி மிஸ்ர Bபுயூத(ன்)வ் வஜ்'அலூ Bபுயூதகும் கிBப்லத(ன்)வ் வ அகீமுஸ் ஸலாஹ்; வ Bபஷ்ஷிரில் மு'மினீன்
ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்: “நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (கிப்லாவாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!” என்று வஹீ அறிவித்தோம்.
وَقَالَ مُوْسٰی رَبَّنَاۤ اِنَّكَ اٰتَیْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِیْنَةً وَّاَمْوَالًا فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۙ رَبَّنَا لِیُضِلُّوْا عَنْ سَبِیْلِكَ ۚ رَبَّنَا اطْمِسْ عَلٰۤی اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰی قُلُوْبِهِمْ فَلَا یُؤْمِنُوْا حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟
وَقَالَ مُوْسٰىமூஸா கூறினார்رَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّكَநிச்சயமாக நீاٰتَيْتَகொடுத்தாய்فِرْعَوْنَஃபிர்அவ்னுக்குوَمَلَاَهٗஇன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களுக்குزِيْنَةًஅலங்காரத்தைوَّاَمْوَالًاஇன்னும் செல்வங்கள்فِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْيَا ۙஇவ்வுலகம்رَبَّنَاஎங்கள் இறைவாلِيُضِلُّوْاஅவர்கள் வழிகெடுப்பதற்குعَنْ سَبِيْلِكَ‌ۚஉன் பாதையிலிருந்துرَبَّنَاஎங்கள் இறைவாاطْمِسْநாசமாக்குعَلٰٓى اَمْوَالِهِمْஅவர்களின் பொருள்களைوَاشْدُدْஇன்னும் இறுக்கிவிடுعَلٰى قُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்களைفَلَا يُؤْمِنُوْاநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்حَتّٰىவரைيَرَوُاஅவர்கள் காண்பர்الْعَذَابَவேதனையைالْاَ لِيْمَ‏துன்புறுத்தக்கூடியது
வ கால மூஸா ரBப்Bபனா இன்னக ஆதய்த Fபிர்'அவ்ன வ மல அஹூ Zஜீனத(ன்)வ் வ அம்வாலன் Fபில் ஹயாதித் துன்யா ரBப்Bபனா லியுளில்லூ 'அன்ஸBபீலிக ரBப்Bபனத் மிஸ் 'அலா அம்வாலிஹிம் வஷ்துத் 'அலா குலூBபிஹிம் Fபலா யு'மினூ ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَیَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ وَمَنْ یَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ ۚ فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّنْهُ ۗ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
اَفَمَنْஎவர்(கள்)?كَانَஇருக்கின்றார்(கள்)عَلٰىமீதுبَيِّنَةٍதெளிவான அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّهٖதன் இறைவன்وَيَتْلُوْهُஇன்னும் ஓதுகிறார்/அதைشَاهِدٌசாட்சியாளர்مِّنْهُஅவன் புறத்திலிருந்துوَمِنْ قَبْلِهٖஇன்னும் அதற்கு முன்னர்كِتٰبُவேதம்مُوْسٰٓىமூஸாவின்اِمَامًاவழிகாட்டியாகوَّرَحْمَةً‌  ؕஇன்னும் அருளாகاُولٰٓٮِٕكَஅவர்கள்يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள்بِهٖ‌ ؕஇதைوَمَنْஎவர்يَّكْفُرْநிராகரிப்பார்بِهٖஇதைمِنَ الْاَحْزَابِகூட்டங்களில்فَالنَّارُநரகம்مَوْعِدُهٗ‌ ۚஅவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாகும்فَلَا تَكُஇருக்காதீர்فِىْ مِرْيَةٍசந்தேகத்தில்مِّنْهُ‌இதில்اِنَّهُநிச்சயமாக இதுالْحَـقُّஉண்மைதான்مِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்وَلٰـكِنَّஎனினும்اَكْثَرَபலர்النَّاسِமக்களில்لَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
அFபமன் கான 'அல Bபய்யினதிம் மிர் ரBப்Bபிஹீ வ யத்லூஹு ஷாஹிதும் மின்ஹு வ மின் கBப்லிஹீ கிதாBபு மூஸா இமாம(ன்)வ் வ ரஹ்மஹ்; உலா 'இக யு'மினூன Bபிஹ்; வ மய் யக்Fபுர் Bபிஹீ மினல் அஹ்ZஜாBபி Fபன் னாரு மவ்'இதுஹ்; Fபலா தகு Fபீ மிர்யதிம் மின்ஹ்; இன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிக வ லாகின்ன அக்தரன் னாஸி லா யு'மினூன்
எவர் தன் இறைவனிடமிருந்து (பெற்ற)தெளிவின் மீது இருக்கிறாரோ மேலும் இறைவனிடமிருந்து ஒரு சாட்சியாளர் எவரிடம் (பக்க பலமாய்) வந்திருக்கிறாரோ மேலும் இதற்கு முன்னால் மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறதோ அவர்கள் தான் இதனை நம்புவார்கள்; ஆனால் (இக்) கூட்டதார்களில் எவர் இதை நிராகரிக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் நரக நெருப்பேயாகும். ஆதலால் (நபியே!) இதைப் பற்றி நீர் சந்தேகத்திலிருக்க வேண்டாம் - இ(வ்வேதமான)து நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰىமூஸாவைبِاٰيٰتِنَاநம் வசனங்களுடன்وَسُلْطٰنٍஇன்னும் அத்தாட்சிمُّبِيْنٍۙ‏தெளிவான(து)
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
நிச்சயமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடன், தெளிவான அத்தாட்சியுடனும், அனுப்பிவைத்தோம்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَاخْتُلِفَ فِیْهِ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاகொடுத்தோம்مُوْسَىமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைفَاخْتُلِفَமாறுபாடு கொள்ளப்பட்டதுفِيْهِ‌ ؕஅதில்وَ لَوْلَاஇல்லையெனில்كَلِمَةٌஒரு வாக்குسَبَقَتْமுந்தியதுمِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்لَـقُضِىَமுடிக்கப்பட்டிருக்கும்بَيْنَهُمْ‌ ؕஇவர்களுக்கிடையில்وَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்தான்مِّنْهُஅதில்مُرِيْبٍ‏மிக ஆழமான (சந்தேகம்)
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப Fபக்துலிFப Fபீஹ்; வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும்; வ இன்னஹும் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது; உமது இறைவனிடமிருந்து முந்தி விட்ட வாக்கு இல்லை என்றால் இவர்கள் மத்தியிலே முடிவு செய்யப்பட்டிருக்கும். நிச்சயமாக இவர்கள் இதை (குர்ஆனை)ப் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬ وَذَكِّرْهُمْ بِاَیّٰىمِ اللّٰهِ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟
وَلَـقَدْ اَرْسَلْنَاதிட்டமாக அனுப்பினோம்مُوْسٰىமூஸாவைبِاٰيٰتِنَاۤநம் அத்தாட்சிகளைக் கொண்டுاَنْ اَخْرِجْவெளியேற்றுقَوْمَكَஉம் சமுதாயத்தைمِنَ الظُّلُمٰتِஇருள்களிலிருந்துاِلَى النُّوْرِ ۙஒளியின் பக்கம்وَذَكِّرْஇன்னும் ஞாபகமூட்டுهُمْஅவர்களுக்குبِاَيّٰٮمِ(அந்)நாட்களைاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்اِنَّ فِىْ ذٰ لِكَநிச்சயமாக/இதில்لَاٰيٰتٍஅத்தாட்சிகள்لّـِكُلِّஎல்லோருக்கும்صَبَّارٍமிக பொறுமையாளர்شَكُوْرٍ‏மிக நன்றியறிபவர்
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா அன் அக்ரிஜ் கவ்மக மினள் ளுலுமாதி இலன் னூரி வ தக் கிர்ஹும் Bபி அய்யாமில் லாஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகுல்லி ஸBப்Bபாரின் ஷகூர்
நிச்சயமாக, நாம் மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு அனுப்பிவைத்து, “நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து, வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் கொண்டு வாரும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக” என்று கட்டளையிட்டோம்; நிச்சயமாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலுத்துவோர் எல்லோருக்கும் படிப்பினைகள் இருக்கின்றன.
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ اَنْجٰىكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ وَیُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠
وَاِذْ قَالَகூறிய சமயம்مُوْسٰىமூஸாلِـقَوْمِهِதன் சமுதாயத்திற்குاذْكُرُوْاநினைவு கூறுங்கள்نِعْمَةَஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْஉங்கள் மீதுاِذْபோதுاَنْجٰٮكُمْஉங்களை காப்பாற்றினான்مِّنْஇருந்துاٰلِகூட்டம்فِرْعَوْنَஃபிர்அவ்னுடையيَسُوْمُوْنَـكُمْசிரமம் தந்தார்கள்/உங்களுக்குسُوْۤءَ الْعَذَابِகடினமான வேதனையால்وَ يُذَبِّحُوْنَஇன்னும் அறுத்தார்கள்اَبْنَآءَஆண் பிள்ளைகளைكُمْஉங்கள்وَيَسْتَحْيُوْنَஇன்னும் வாழவிட்டார்கள்نِسَآءَபெண்(பிள்ளை)களைكُمْ‌ ؕஉங்கள்وَفِىْ ذٰ لِكُمْஇன்னும் இதில்بَلَاۤ ءٌஒரு சோதனைمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்عَظِيْمٌ‏மகத்தானது
வ இத் கால மூஸா லிகவ்மிஹித் குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் இத் அன்ஜாகும் மின் ஆலி Fபிர்'அவ்ன யஸூமூ னகும் ஸூ'அல் 'அதாBபி வ யுதBப்Bபிஹூன அBப்னா'அகும் வ யஸ்தஹ்யூன னிஸா'அகும்; வ Fபீ தாலிகும் Bபலா'உன் மிர் ரBப்Bபிகும் 'அளீம்
மூஸா தம் சமூகத்தாரிடம்: ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது” என்று கூறினார்.
وَقَالَ مُوْسٰۤی اِنْ تَكْفُرُوْۤا اَنْتُمْ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ۙ فَاِنَّ اللّٰهَ لَغَنِیٌّ حَمِیْدٌ ۟
وَقَالَகூறினார்مُوْسٰٓىமூஸாاِنْ تَكْفُرُوْۤاநீங்கள் நிராகரித்தால்اَنْـتُمْநீங்கள்وَمَنْஇன்னும் எவர்فِى الْاَرْضِபூமியில்جَمِيْعًا ۙஅனைவரும்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَـغَنِىٌّநிறைவானவன்حَمِيْدٌ‏மகா புகழாளன்
வ கால மூஸா இன் தக்Fபுரூ அன்தும் வ மன் Fபில் அர்ளி ஜமீ'அன் Fப இன்னல் லாஹ ல கனிய்யுன் ஹமீத்
மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) “நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது;) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்” என்றும் கூறினார்.
وَاٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنٰهُ هُدًی لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ اَلَّا تَتَّخِذُوْا مِنْ دُوْنِیْ وَكِیْلًا ۟ؕ
وَاٰتَيْنَاகொடுத்தோம்مُوْسَىமூஸாவிற்குالْـكِتٰبَவேதத்தைوَ جَعَلْنٰهُஇன்னும் ஆக்கினோம் / அதைهُدًىநேர்வழி காட்டியாகلِّبَنِىْۤசந்ததிகளுக்குاِسْرَآءِيْلَஇஸ்ராயீலின்اَلَّا تَتَّخِذُوْاநீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றுمِنْ دُوْنِىْஎன்னைத் தவிரوَكِيْلًا ؕ‏பொறுப்பாளனாக (பாதுகாவலனாக)
வ ஆதய்னா மூஸல்-கிதாBப வ ஜ'அல்னாஹு ஹுதல்-லிBபனீ இஸ்ரா'ஈல்; அல்லா தத்-தகிதூ மின் தூனீ வகீலா.
இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, “என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی تِسْعَ اٰیٰتٍ بَیِّنٰتٍ فَسْـَٔلْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ اِذْ جَآءَهُمْ فَقَالَ لَهٗ فِرْعَوْنُ اِنِّیْ لَاَظُنُّكَ یٰمُوْسٰی مَسْحُوْرًا ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسٰىமூஸாவிற்குتِسْعَஒன்பதுاٰيٰتٍۢஅத்தாட்சிகள்بَيِّنٰتٍ‌தெளிவானவைفَسْــٴَــلْஆகவே கேட்பீராகبَنِىْۤசந்ததிகளைاِسْرَاۤءِيْلَஇஸ்ராயீலின்اِذْ جَآءَஅவர் வந்த போதுهُمْஅவர்களிடம்فَقَالَகூறினான்لَهٗஅவரைக் நோக்கிفِرْعَوْنُஃபிர்அவ்ன்اِنِّىْநிச்சயமாக நான்لَاَظُنُّكَஎண்ணுகிறேன்/உம்மைيٰمُوْسٰىமூஸாவே!مَسْحُوْرًا‏சூனியக்காரராக
வ லகத் ஆதய்னா மூஸா திஸ்'அ ஆயாதிம் Bபய்யினாதின் Fபஸ்'அல் Bபனீ இஸ்ரா'ஈல இத் ஜா'அஹும் Fபகால லஹூ Fபிர்'அவ்னு இன்னீ ல அளுன்னுக யா மூஸா மஸ் ஹூரா
நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நாம் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்” என்று கூறினான்.
قَالَ لَقَدْ عَلِمْتَ مَاۤ اَنْزَلَ هٰۤؤُلَآءِ اِلَّا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ بَصَآىِٕرَ ۚ وَاِنِّیْ لَاَظُنُّكَ یٰفِرْعَوْنُ مَثْبُوْرًا ۟
قَالَகூறினார்لَقَدْதிட்டவட்டமாகعَلِمْتَநீ அறிந்தாய்مَاۤ اَنْزَلَஇறக்கிவைக்கவில்லைهٰٓؤُلَاۤءِஇவற்றைاِلَّاதவிரرَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَالْاَرْضِஇன்னும் பூமிبَصَآٮِٕرَ‌ ۚதெளிவான அத்தாட்சிகளாகوَاِنِّىْஇன்னும் நிச்சயமாக நான்لَاَظُنُّكَஎண்ணுகிறேன்/உன்னைيٰفِرْعَوْنُஃபிர்அவ்னேمَثْبُوْرًا‏அழிந்துவிடுபவனாக
கால லகத் 'அலிம்த மா அன்Zஜல ஹா'உலா'இ இல்லா ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி Bபஸா'இர வ இன்னீ ல அளுன் னுக யா Fபிர்'அவ்னு மத்Bபூரா
(அதற்கு) மூஸா “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்” என்று கூறினார்.
فَاَرَادَ اَنْ یَّسْتَفِزَّهُمْ مِّنَ الْاَرْضِ فَاَغْرَقْنٰهُ وَمَنْ مَّعَهٗ جَمِیْعًا ۟ۙ
فَاَرَادَநாடினான்اَنْ يَّسْتَفِزَّஅவன் விரட்டிவிடهُمْஇவர்களைمِّنَ الْاَرْضِபூமியிலிருந்துفَاَغْرَقْنٰهُஆகவே மூழ்கடித்தோம்/ அவனைوَ مَنْஇன்னும் எவர்கள்مَّعَهٗஅவனுடன்جَمِيْعًا ۙ‏அனைவரையும்
Fப அராத அ(ன்)ய் யஸ்தFபிZஜ்Zஜஹும் மினல் அர்ளி Fப அக்ரக்னாஹு வ மம் ம'அஹூ ஜமீ'ஆ
ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
وَاِذْ قَالَ مُوْسٰی لِفَتٰىهُ لَاۤ اَبْرَحُ حَتّٰۤی اَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَیْنِ اَوْ اَمْضِیَ حُقُبًا ۟
وَاِذْசமயம்قَالَகூறினார்مُوْسٰىமூஸாلِفَتٰٮهُதன் வாலிபரை நோக்கிلَاۤ اَبْرَحُசென்று கொண்டே இருப்பேன்حَتّٰۤىவரைاَبْلُغَஅடைவேன்مَجْمَعَஇணைகின்ற இடத்தைالْبَحْرَيْنِஇரு கடல்களும்اَوْஅல்லதுاَمْضِىَநடந்து கொண்டே இருப்பேன்حُقُبًا‏நீண்டதொரு காலம்
வ இத் காலா மூஸா லிFபதாஹு லா அBப்ரஹு ஹத்தா அBப்லுக மஜ்ம'அல் Bபஹ்ரய்னி அவ் அம்ளிய ஹுகுBபா
இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.
فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتٰىهُ اٰتِنَا غَدَآءَنَا ؗ لَقَدْ لَقِیْنَا مِنْ سَفَرِنَا هٰذَا نَصَبًا ۟
فَلَمَّا جَاوَزَاஅவ்விருவரும் கடந்தபோதுقَالَகூறினார்لِفَتٰٮهُதன் வாலிபரை நோக்கிاٰتِنَاகொண்டுவா/நம்மிடம்غَدَآءَنَاஉணவை/நம்لَقَدْதிட்டவட்டமாகلَقِيْنَاசந்தித்தோம்مِنْ سَفَرِنَاநம் பயணத்தில்هٰذَاஇந்தنَصَبًا‏களைப்பை
Fபலம்மா ஜாவZஜா கால லிFபதாஹு ஆதினா கதா'அனா லகத் லகீன மின் ஸFபரினா ஹாதா னஸBபா
அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.
قَالَ ذٰلِكَ مَا كُنَّا نَبْغِ ۖۗ فَارْتَدَّا عَلٰۤی اٰثَارِهِمَا قَصَصًا ۟ۙ
قَالَகூறினார்ذٰ لِكَஅதுதான்مَاஎதுكُنَّاஇருந்தோம்نَبْغِதேடுவோம்ۖ  فَارْتَدَّاஅவ்விருவரும் திரும்பினார்கள்عَلٰٓى اٰثَارِهِمَاதங்கள் சுவடுகள் மீதேقَصَصًا ۙ‏பின்பற்றி
கால தாலிக மா குன்னா னBப்கி; Fபர்தத்தா 'அலா ஆதாரி ஹிம் மா கஸஸா
(அப்போது) மூஸா, “நாம் தேடிவந்த (இடம் அ)துதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.
قَالَ لَهٗ مُوْسٰی هَلْ اَتَّبِعُكَ عَلٰۤی اَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا ۟
قَالَகூறினார்لَهٗஅவரை நோக்கிمُوْسٰىமூஸாهَلْ?اَتَّبِعُكَபின்தொடர்வேன்/உம்மைعَلٰٓى اَنْ تُعَلِّمَنِநீர் எனக்கு கற்பிப்பதற்காகمِمَّا عُلِّمْتَநீர் கற்பிக்கப்பட்டதிலிருந்துرُشْدًا‏நல்லறிவை
கால லஹூ மூஸா ஹல் அத்தBபி'உக 'அலா அன் து'அல்லிமனி மிம்மா 'உல்லிம்த ருஷ்தா
“உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.
قَالَ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ صَابِرًا وَّلَاۤ اَعْصِیْ لَكَ اَمْرًا ۟
قَالَகூறினார்سَتَجِدُنِىْۤகாண்பீர்/என்னைاِنْ شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்صَابِرًاபொறுமையாளனாகوَّلَاۤ اَعْصِىْஇன்னும் மாறுசெய்யமாட்டேன்لَكَஉமக்குاَمْرًا‏எந்த ஒரு காரியத்திலும்
கால ஸதஜிதுனீ இன் ஷா 'அல் லாஹு ஸாBபிர(ன்)வ் வ லா அஃஸீ லக அம்ரா
(அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று (மூஸா) சொன்னார்.
فَانْطَلَقَا ۥ حَتّٰۤی اِذَا رَكِبَا فِی السَّفِیْنَةِ خَرَقَهَا ؕ قَالَ اَخَرَقْتَهَا لِتُغْرِقَ اَهْلَهَا ۚ لَقَدْ جِئْتَ شَیْـًٔا اِمْرًا ۟
فَانْطَلَقَاஆகவே, இருவரும் சென்றனர்حَتّٰۤىஇறுதியாகاِذَا رَكِبَاஇருவரும் பயணித்தபோதுفِى السَّفِيْنَةِகப்பலில்خَرَقَهَا‌ஓட்டையாக்கினார்قَالَகூறினார்اَخَرَقْتَهَاஅதை ஓட்டையாக்கினீரா?لِتُغْرِقَநீர் மூழ்கடிக்கاَهْلَهَا‌ ۚஇதில் உள்ளவர்களைلَقَدْதிட்டவட்டமாகجِئْتَசெய்தீர்شَيْــٴًـــاகாரியத்தைاِمْرًا‏மிக கெட்டது
Fபன்தலகா ஹத்தா இதா ரகிBபா Fபிஸ் ஸFபீனதி கரகஹா கால அகரக்தஹா லிதுக்ரிக அஹ்லஹா லகத் ஜி'த ஷய்'அன் இம்ரா
பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
قَالَ لَا تُؤَاخِذْنِیْ بِمَا نَسِیْتُ وَلَا تُرْهِقْنِیْ مِنْ اَمْرِیْ عُسْرًا ۟
قَالَகூறினார்لَا تُؤَاخِذْنِىْகுற்றம் பிடிக்காதீர் / என்னைبِمَا نَسِيْتُநான் மறந்ததினால்وَلَا تُرْهِقْنِىْஇன்னும் என்னை கட்டாயப்படுத்தாதீர்مِنْ اَمْرِىْஎன் காரியத்தில்عُسْرًا‏சிரமத்திற்கு
கால லா து'ஆகித்னீ Bபிமா னஸீது வலா துர்ஹிக்னீ மின் அம்ரீ 'உஸ்ரா
“நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
فَانْطَلَقَا ۥ حَتّٰۤی اِذَا لَقِیَا غُلٰمًا فَقَتَلَهٗ ۙ قَالَ اَقَتَلْتَ نَفْسًا زَكِیَّةً بِغَیْرِ نَفْسٍ ؕ لَقَدْ جِئْتَ شَیْـًٔا نُّكْرًا ۟
فَانْطَلَقَاஆகவே, இருவரும் சென்றனர்حَتّٰۤىஇறுதியாகاِذَا لَقِيَاஇருவரும் சந்தித்தபோதுغُلٰمًاஒரு சிறுவனைفَقَتَلَهٗ ۙகொன்றார் / அவனைقَالَகூறினார்اَقَتَلْتَகொன்றீரா?نَـفْسًاஓர் உயிரைزَكِيَّةً ۢபரிசுத்தமானதுبِغَيْرِ نَـفْسٍ ؕஓர் உயிரைக் கொன்ற குற்றமின்றிلَـقَدْதிட்டவட்டமாகجِئْتَசெய்தீர்شَيْــٴًـــاசெயலைنُّـكْرًا‏மகா கொடியது
Fபன்தலகா ஹத்தா இதா லகியா குலாமன் Fபகதலஹூ கால அகதல்த னFப்ஸன் Zஜகிய் யதம் Bபிகய்ரி னFப்ஸ்; லகத் ஜி'த ஷய்'அன் னுக்ரா
பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!” என்று (மூஸா) கூறினார்.
فَانْطَلَقَا ۥ حَتّٰۤی اِذَاۤ اَتَیَاۤ اَهْلَ قَرْیَةِ سْتَطْعَمَاۤ اَهْلَهَا فَاَبَوْا اَنْ یُّضَیِّفُوْهُمَا فَوَجَدَا فِیْهَا جِدَارًا یُّرِیْدُ اَنْ یَّنْقَضَّ فَاَقَامَهٗ ؕ قَالَ لَوْ شِئْتَ لَتَّخَذْتَ عَلَیْهِ اَجْرًا ۟
فَانْطَلَقَاஆகவே, இருவரும் சென்றனர்حَتّٰۤىஇறுதியாகاِذَاۤ اَتَيَاۤஅவ்விருவரும்வரவேاَهْلَ قَرْيَةِஓர் ஊராரிடம்ۨاسْتَطْعَمَاۤஅவ்விருவரும் உணவு கேட்டார்கள்اَهْلَهَاஅவ்வூராரிடம்فَاَبَوْاஅவர்கள் மறுத்தனர்اَنْ يُّضَيِّفُوْஅவர்கள் விருந்தளிக்கهُمَاஅவ்விருவருக்கும்فَوَجَدَاஅவ்விருவரும் கண்டனர்فِيْهَاஅங்குجِدَارًاஒரு சுவற்றைيُّرِيْدُ اَنْ يَّـنْقَضَّவிழ இருக்கும்فَاَقَامَهٗ‌ ؕஅவர் நிறுத்தினார் / அதைقَالَகூறினார்لَوْ شِئْتَநீ நாடியிருந்தால்لَـتَّخَذْتَஎடுத்திருக்கலாமேعَلَيْهِஅதற்காகاَجْرًا‏ஒரு கூலியை
Fபன்தலகா ஹத்தா இதா அதயா அஹ்ல கர்யதினிஸ் தத்'அமா அஹ்லஹா Fப அBபவ் அ(ன்)ய் யுளய்யிFபூஹுமா Fபவஜதா Fபீஹா ஜிதார(ன்)ய் யுரீது அ(ன்)ய் யன்கள்ள Fப அகாமஹ்; கால லவ் ஷி'த லத்தகத்த 'அலய்ஹி அஜ்ரா
பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ مُوْسٰۤی ؗ اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟
وَاذْكُرْநினைவு கூர்வீராகفِى الْكِتٰبِஇவ்வேதத்தில்مُوْسٰٓى‌மூஸாவைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்مُخْلَصًاதேர்ந்தெடுக்கப்பட்டவராகوَّكَانَஇன்னும் இருக்கிறார்رَسُوْلًاதூதராகنَّبِيًّا‏நபியாக
வத்குர் Fபில் கிதாBபி மூஸா; இன்னஹூ கான முக்லஸ(ன்)வ் வ கான ரஸூலன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார்.
وَهَلْ اَتٰىكَ حَدِیْثُ مُوْسٰی ۟ۘ
وَهَلْ اَتٰٮكَஉமக்கு வந்ததா?حَدِيْثُசெய்திمُوْسٰى‌ۘ‏மூஸாவுடைய
வ ஹல் அதாக ஹதீது மூஸா
இன்னும் (நபியே!) மூஸாவின் வரலாறு உம்மிடம் வந்ததா?
فَلَمَّاۤ اَتٰىهَا نُوْدِیَ یٰمُوْسٰی ۟ؕ
فَلَمَّاۤ اَتٰٮهَاஅவர் அதனிடம் வந்தபோதுنُوْدِىَஅழைக்கப்பட்டார்يٰمُوْسٰىؕ‏மூஸாவே!
Fபலம்மா அதாஹா னூதிய யா மூஸா
அவர் (நெருப்பின்) அருகே வந்த போது “மூஸாவே!” என்று அழைக்கப் பட்டார்.
وَمَا تِلْكَ بِیَمِیْنِكَ یٰمُوْسٰی ۟
وَمَاஎன்ன?تِلْكَஅதுبِيَمِيْنِكَஉமது வலக்கையில்يٰمُوْسٰى‏மூஸாவே!
வமா தில்க Bபி யமீ னிக யா மூஸா
மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)
قَالَ اَلْقِهَا یٰمُوْسٰی ۟
قَالَஅவன் கூறினான்اَلْقِهَاஅதை நீர் எறிவீராகيٰمُوْسٰى‏மூஸாவே!
கால அல்கிஹா யா மூஸா
அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்” என்றான்.
قَالَ رَبِّ اشْرَحْ لِیْ صَدْرِیْ ۟ۙ
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاشْرَحْ لِىْஎனக்கு விரிவாக்குصَدْرِىْ ۙ‏என் நெஞ்சத்தை
கால ரBப்Bபிஷ் ரஹ் லீ ஸத்ரீ
(அதற்கு மூஸா) கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
قَالَ قَدْ اُوْتِیْتَ سُؤْلَكَ یٰمُوْسٰی ۟
قَالَஅவன் கூறினான்قَدْ اُوْتِيْتَதிட்டமாக கொடுக்கப்பட்டீர்سُؤْلَـكَஉமது கோரிக்கையைيٰمُوْسٰى‏மூஸாவே!
கால கத் ஊதீத ஸு'லக யா மூஸா
மூஸாவே! நீர் கேட்டவை, நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன” என்று (அல்லாஹ்) கூறினான்.
اَنِ اقْذِفِیْهِ فِی التَّابُوْتِ فَاقْذِفِیْهِ فِی الْیَمِّ فَلْیُلْقِهِ الْیَمُّ بِالسَّاحِلِ یَاْخُذْهُ عَدُوٌّ لِّیْ وَعَدُوٌّ لَّهٗ ؕ وَاَلْقَیْتُ عَلَیْكَ مَحَبَّةً مِّنِّیْ ۚ۬ وَلِتُصْنَعَ عَلٰی عَیْنِیْ ۟ۘ
اَنِ اقْذِفِيْهِஅதாவது அவரை போடுவீராகفِى التَّابُوْتِபேழையில்فَاقْذِفِيْهِஅதை போடுவீராகفِى الْيَمِّகடலில்فَلْيُلْقِهِஅதை எறியும்الْيَمُّகடல்بِالسَّاحِلِகரையில்يَاْخُذْهُஅதை எடுப்பான்عَدُوٌّஎதிரிلِّىْஎனதுوَعَدُوٌّஇன்னும் எதிரிلَّهٗ‌ ؕஅவரதுوَاَلْقَيْتُஇன்னும் ஏற்படுத்தினேன்عَلَيْكَஉம்மீதுمَحَـبَّةًஅன்பைمِّنِّىْ ۚஎன் புறத்திலிருந்துوَلِتُصْنَعَஇன்னும் நீ பராமரிக்கப்படுவதற்காகعَلٰى عَيْنِىْ ۘ‏என் கண்பார்வையில்
'அனிக்திFபீஹி Fபித் தாBபூதி Fபக்திFபீஹி Fபில் யம்மி Fபல் யுல் கிஹில் யம்மு Bபிஸ் ஸாஹிலி ய'குத்ஹு 'அதுவ்வுல் லீ வ 'அதுவ்வுல் லஹ்; வ அல்கய்து 'அலய்க மஹBப்Bபதன் மின்னீ வ லிதுஸ்ன'அ 'அலா 'அய்னீ
அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும்; அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்). மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.
اِذْ تَمْشِیْۤ اُخْتُكَ فَتَقُوْلُ هَلْ اَدُلُّكُمْ عَلٰی مَنْ یَّكْفُلُهٗ ؕ فَرَجَعْنٰكَ اِلٰۤی اُمِّكَ كَیْ تَقَرَّ عَیْنُهَا وَلَا تَحْزَنَ ؕ۬ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّیْنٰكَ مِنَ الْغَمِّ وَفَتَنّٰكَ فُتُوْنًا ۫۬ فَلَبِثْتَ سِنِیْنَ فِیْۤ اَهْلِ مَدْیَنَ ۙ۬ ثُمَّ جِئْتَ عَلٰی قَدَرٍ یّٰمُوْسٰی ۟
اِذْ تَمْشِىْۤநடந்து சென்றபோதுاُخْتُكَஉமது சகோதரிفَتَقُوْلُகூறினாள்هَلْ اَدُلُّـكُمْநான் உங்களுக்கு அறிவிக்கவா?عَلٰى مَنْ يَّكْفُلُهٗ‌ ؕஅவரை பொறுப்பேற்பவரைفَرَجَعْنٰكَஉம்மை திரும்பக் கொண்டு வந்தோம்اِلٰٓى اُمِّكَஉமது தாயிடமேكَىْ تَقَرَّகுளிர்வதற்காகعَيْنُهَاஅவளது கண்وَلَا تَحْزَنَ ؕஇன்னும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகوَقَتَلْتَநீர் கொன்று விட்டீர்نَـفْسًاஓர் உயிரைفَنَجَّيْنٰكَஉம்மை நாம் பாதுகாத்தோம்مِنَ الْغَمِّஅந்த துக்கத்திலிருந்துوَفَتَـنّٰكَஇன்னும் உம்மை நாம் சோதித்தோம்فُتُوْنًا பல சோதனைகளில்فَلَبِثْتَஆக, நீர் தங்கினீர்سِنِيْنَபல ஆண்டுகள்فِىْۤ اَهْلِவாசிகளிடம்مَدْيَنَ ۙமத்யன்ثُمَّபிறகுجِئْتَநீர் அடைந்தீர்عَلٰى قَدَرٍஒரு குறிப்பிட்ட நேரத்தைيّٰمُوْسٰى‏மூஸாவே!
இத் தம்ஷீ உக்துக Fபதகூலு ஹல் அதுல்லுகும் 'அலா மய் யக்Fபுலுஹூ Fபரஜஃனாக இலா உம்மிக கய் தகர்ர 'அய்னுஹா வலா தஹ்Zஜன்; வ கதல்த னFப்ஸன் Fபனஜ்ஜய்னாக மினல் கம்மி வ Fபதன்னாக Fபுதூனா; FபலBபித்த ஸினீன Fபீ அஹ்லி மத்யன தும்ம ஜி'த 'அலா கதரி(ன்)ய் யா மூஸா
(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டாள்; ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும்; அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம்; பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.
قَالَا رَبَّنَاۤ اِنَّنَا نَخَافُ اَنْ یَّفْرُطَ عَلَیْنَاۤ اَوْ اَنْ یَّطْغٰی ۟
قَالَاஇருவரும் கூறினர்رَبَّنَاۤஎங்கள் இறைவன்اِنَّـنَاநிச்சயமாக நங்கள்نَخَافُபயப்படுகிறோம்اَنْ يَّفْرُطَஅவசரப்படுவதைعَلَيْنَاۤஎங்கள் மீதுاَوْஅல்லதுاَنْ يَّطْغٰى‏வரம்பு மீறுவதை
காலா ரBப்Bபனா இன்னனா னகாFபு அய் யFப்ருத 'அலய்னா அவ் அய் யத்கா
“எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.
قَالَ فَمَنْ رَّبُّكُمَا یٰمُوْسٰی ۟
قَالَஅவன் கூறினான்فَمَنْயார்رَّبُّكُمَاஉங்கள் இருவரின் இறைவன்يٰمُوْسٰى‏மூஸாவே!
கால Fபமர் ரBப்Bபு குமா யா மூஸா
(இதற்கு ஃபிர்அவ்ன்) “மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?” என்று கேட்டான்.
قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّیْ فِیْ كِتٰبٍ ۚ لَا یَضِلُّ رَبِّیْ وَلَا یَنْسَی ۟ؗ
قَالَஅவர் கூறினார்عِلْمُهَاஅவர்களைப் பற்றிய ஞானம்عِنْدَ رَبِّىْஎன் இறைவனிடம்فِىْ كِتٰبٍ‌ۚபதிவுப் புத்தகத்தில்لَا يَضِلُّதவறு செய்துவிட மாட்டான்رَبِّىْஎன் இறைவன்وَلَا يَنْسَى‏இன்னும் மறக்கமாட்டான்
கால 'இல்முஹா 'இன்த ரBபீ Fபீ கிதாBப், லா யளில்லு ரBப்Bபீ வலா யன்ஸா
“இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை” என்று (மூஸா பதில்) சொன்னார்.
قَالَ اَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ اَرْضِنَا بِسِحْرِكَ یٰمُوْسٰی ۟
قَالَஅவன் கூறினான்اَجِئْتَنَاஎங்களிடம் வந்தீரா?لِتُخْرِجَنَاஎங்களை நீர் வெளியேற்றுவதற்காகمِنْ اَرْضِنَاஎங்கள் பூமியிலிருந்துبِسِحْرِكَஉமது சூனியத்தால்يٰمُوْسٰى‏மூஸாவே!
கால அஜி'தனா லிதுக்ரி ஜனா மின் அர்ளினா Bபிஸிஹ்ரிக யா மூஸா
மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?” என்று கூறினான்.
قَالَ لَهُمْ مُّوْسٰی وَیْلَكُمْ لَا تَفْتَرُوْا عَلَی اللّٰهِ كَذِبًا فَیُسْحِتَكُمْ بِعَذَابٍ ۚ وَقَدْ خَابَ مَنِ افْتَرٰی ۟
قَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குمُّوْسٰىமூஸாوَيْلَكُمْஉங்களுக்கு கேடுதான்لَا تَفْتَرُوْاகற்பனை செய்யாதீர்கள்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًاபொய்யைفَيُسْحِتَكُمْஉங்களை அழித்து விடுவான்بِعَذَابٍ‌ۚவேதனையைக் கொண்டுوَقَدْதிட்டமாகخَابَநஷ்டமடைந்து விட்டான்مَنِஎவன்افْتَرٰى‏கற்பனை செய்தான்
கால லஹும் மூஸா வய்லகும் லா தFப்தரூ 'அலல் லாஹி கதிBபன் Fப யுஸ் ஹிதகும் Bபி 'அதாBப், வ கத் காBப மனிFப் தரா
(அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்” என்று கூறினார்.
قَالُوْا یٰمُوْسٰۤی اِمَّاۤ اَنْ تُلْقِیَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ اَوَّلَ مَنْ اَلْقٰی ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்يٰمُوْسٰٓىமூஸாவே!اِمَّاۤ اَنْ تُلْقِىَஒன்று நீர் எறிவீராகوَاِمَّاۤ اَنْ نَّكُوْنَஅவர்கள் நாங்கள் இருப்போம்اَوَّلَமுதலாவதாகمَنْ اَلْقٰى‏எறிபவர்களில்
காலூ யா மூஸா இம்மா அன் துல்கிய வ இம்மா அன் னகூன அவ்வல மன் அல்கா
மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
قَالَ بَلْ اَلْقُوْا ۚ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِیُّهُمْ یُخَیَّلُ اِلَیْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰی ۟
قَالَஅவர் கூறினார்بَلْமாறாகاَلْقُوْا‌ۚநீங்கள் எறியுங்கள்فَاِذَاஆக, அப்போதுحِبَالُهُمْஅவர்களுடைய கயிர்களும்وَعِصِيُّهُمْஅவர்களுடைய தடிகளும்يُخَيَّلُதோற்றமளிக்கப்பட்டதுاِلَيْهِஅவருக்குمِنْ سِحْرِهِمْஅவர்களுடைய சூனியத்தால்اَنَّهَاஅவைتَسْعٰى‏ஓடுவதாக
கால Bபல் அல்கூ Fப இதா ஹிBபாலுஹும் வ 'இஸிய்யுஹும் யுகய்யலு இலய்ஹி மின் ஸிஹ்ரிஹிம் அன்னஹா தஸ்'ஆ
அதற்கவர்: “அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.
فَاَوْجَسَ فِیْ نَفْسِهٖ خِیْفَةً مُّوْسٰی ۟
فَاَوْجَسَஅவர் உணர்ந்தார்فِىْ نَفْسِهٖதனது உள்ளத்தில்خِيْفَةًபயத்தைمُّوْسٰى‏மூஸா
Fப அவ்ஜஸ Fபீ னFப்ஸிஹீ கீFபதம் மூஸா
அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.
قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰی ۟
قُلْنَاநாம் கூறினோம்لَا تَخَفْபயப்படாதீர்اِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்الْاَعْلٰى‏மிகைத்தவர்
குல்னா லா தகFப் இன்னக அன்தல் அஃலா
“(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்!” என்று நாம் சொன்னோம்.
فَاُلْقِیَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰی ۟
فَاُلْقِىَஆக, விழுந்தனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்سُجَّدًاசிரம்பணிந்தவர்களாகقَالُوْۤاகூறினார்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِرَبِّஇறைவனைக்கொண்டுهٰرُوْنَஹாரூன்وَمُوْسٰى‏இன்னும் மூஸாவுடைய
Fப உல்கியஸ் ஸஹரது ஸுஜ்ஜதன் காலூ ஆமன்னா Bபி ரBப்Bபி ஹாரூன வ மூஸா
(மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
وَلَقَدْ اَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی ۙ۬ اَنْ اَسْرِ بِعِبَادِیْ فَاضْرِبْ لَهُمْ طَرِیْقًا فِی الْبَحْرِ یَبَسًا ۙ لَّا تَخٰفُ دَرَكًا وَّلَا تَخْشٰی ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلٰى مُوْسٰٓى ۙமூஸாவிற்குاَنْ اَسْرِஇரவில் அழைத்துச் செல்வீராகبِعِبَادِىْஎன் அடியார்களைفَاضْرِبْஇன்னும் ஏற்படுத்துவீராகلَهُمْஅவர்களுக்காகطَرِيْقًاஒரு பாதையைفِى الْبَحْرِகடலில்يَبَسًا ۙகாய்ந்தلَّا تَخٰفُநீர் பயப்பட மாட்டீர்دَرَكًاபிடிக்கப்படுவதைوَّلَا تَخْشٰى‏அஞ்சமாட்டீர்
வ லகத் அவ்ஹய்னா இலா மூஸா அன் அஸ்ரி Bபி'இBபாதீ Fபள்ரிBப் லஹும் தரீகன் Fபில் Bபஹ்ரி யBபஸல் லா தகாFபு தரக(ன்)வ் வலா தக்-ஷா
இன்னும்: “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!” என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.
وَمَاۤ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ یٰمُوْسٰی ۟
وَمَاۤஎது?اَعْجَلَكَஉம்மை அவசரமாக வரவழைத்ததுعَنْ قَوْمِكَஉமது சமுதாயத்தை விட்டுيٰمُوْسٰى‏மூஸாவே!
வ மா அஃஜலக 'அன் கவ்மிக யா மூஸா
மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது?” (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர்கள் வந்த போது அல்லாஹ் கேட்டான்.)
فَرَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۚ۬ قَالَ یٰقَوْمِ اَلَمْ یَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ؕ۬ اَفَطَالَ عَلَیْكُمُ الْعَهْدُ اَمْ اَرَدْتُّمْ اَنْ یَّحِلَّ عَلَیْكُمْ غَضَبٌ مِّنْ رَّبِّكُمْ فَاَخْلَفْتُمْ مَّوْعِدِیْ ۟
فَرَجَعَதிரும்பினார்مُوْسَىٰۤமூஸாاِلٰى قَوْمِهٖதனது சமுதாயத்திடம்غَضْبَانَகோபமானவராகاَسِفًا  ۙகவலையடைந்தவராகقَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேاَلَمْ يَعِدْவாக்களிக்கவில்லையாكُمْஉங்களுக்குرَبُّكُمْஉங்கள் இறைவன்وَعْدًا حَسَنًا  ۙஅழகிய வாக்கைاَفَطَالَதூரமாகிவிட்டதாعَلَيْكُمُஉங்களுக்குالْعَهْدُகாலம்اَمْஅல்லதுاَرَدْتُّمْநீங்கள் நாடுகிறீர்களாاَنْ يَّحِلَّஇறங்குவதைعَلَيْكُمْஉங்கள் மீதுغَضَبٌகோபம்مِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவன் புறத்திலிருந்துفَاَخْلَفْتُمْஅதனால் மாறு செய்தீர்களாمَّوْعِدِىْ‏எனது குறிப்பிட்ட நேரத்திற்கு
Fபரஜ'அ மூஸா இலா கவ்மிஹீ கள்Bபான அஸிFபா; கால யா கவ்மி அலம் ய'இத்கும் ரBப்Bபுகும் வ'தன் ஹஸனா; அFபதால 'அலய்குமுல் 'அஹ்து அம் அரத்தும் அய் யஹில்ல 'அலய்கும் களBபும் மிர் ரBப்Bபிகும் Fப அக்லFப்தும் மவ்'இதீ
ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).
فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَاۤ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰی ۬ فَنَسِیَ ۟ؕ
فَاَخْرَجَஉருவாக்கினான்لَهُمْஅவர்களுக்குعِجْلًاஒரு காளைக் கன்றைجَسَدًاஓர் உடலைلَّهٗஅதற்குخُوَارٌமாட்டின் சப்தத்தை உடையفَقَالُوْاகூறினர்هٰذَاۤஇதுதான்اِلٰهُكُمْஉங்களது தெய்வமும்وَاِلٰهُதெய்வமும்مُوْسٰى மூஸாவுடையفَنَسِىَ‏ஆனால் மறந்து விட்டார்
Fப அக்ரஜ லஹும் 'இஜ்லன் ஜஸதல் லஹூ குவாருன் Fபகாலூ ஹாதா இலாஹுகும் வ இலாஹு மூஸா Fபனஸீ
பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.