">

தேடல் வார்த்தை: "மூஸா"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

170 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 3 / 4 (முடிவுகள் 101 - 150)

قَالُوْا لَنْ نَّبْرَحَ عَلَیْهِ عٰكِفِیْنَ حَتّٰی یَرْجِعَ اِلَیْنَا مُوْسٰی ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்لَنْ نَّبْرَحَநாங்கள் நீடித்திருப்போம்عَلَيْهِஇதைعٰكِفِيْنَவணங்கியவர்களாகவேحَتّٰى يَرْجِعَதிரும்புகின்ற வரைاِلَيْنَاஎங்களிடம்مُوْسٰى‏மூஸா
காலூ லன் னBப்ரஹ 'அலய்ஹி 'ஆகிFபீன ஹத்தா யர்ஜி'அ இலய்னா மூஸா
மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
قَالَ یٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَیْتَهُمْ ضَلُّوْۤا ۟ۙ
قَالَகூறினார்يٰهٰرُوْنُஹாரூனேمَاஎதுمَنَعَكَஉம்மை தடுத்ததுاِذْ رَاَيْتَهُمْநீர் அவர்களைப் பார்த்தபோதுضَلُّوْٓا ۙ‏அவர்கள் வழிதவறி விட்டார்கள்
கால யா ஹாரூனு மா மன 'அக இத் ர அய்தஹும் ளல்லூ
(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
قَالَ فَمَا خَطْبُكَ یٰسَامِرِیُّ ۟
قَالَகூறினார்فَمَا خَطْبُكَஉன் விஷயம் என்னيٰسَامِرِىُّ‏ஸாமிரியே
கால Fபமா கத்Bபுக யா ஸாமிரிய்ய்
“ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?” என்று மூஸா அவனிடம் கேட்டார்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِیَآءً وَّذِكْرًا لِّلْمُتَّقِیْنَ ۟ۙ
وَلَـقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسٰىமூஸாوَهٰرُوْنَஇன்னும் ஹாரூனுக்குالْفُرْقَانَபிரித்தறிவிக்கக்கூடியوَضِيَآءًவெளிச்சத்தைوَّذِكْرًاஓர் அறிவுரையைلِّـلْمُتَّقِيْنَۙ‏இறையச்ச முள்ளவர்களுக்குரிய
வ லகத் ஆதய்னா மூஸா வ ஹாரூனல் Fபுர்கான வ ளியா'அ(ன்)வ் வ திக்ரல் லில்முத்தகீன்
இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
وَّاَصْحٰبُ مَدْیَنَ ۚ وَكُذِّبَ مُوْسٰی فَاَمْلَیْتُ لِلْكٰفِرِیْنَ ثُمَّ اَخَذْتُهُمْ ۚ فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟
وَّاَصْحٰبُவாசிகளும்مَدْيَنَ‌ۚமத்யன்وَكُذِّبَபொய்ப்பிக்கப்பட்டார்مُوْسٰىமூஸாவும்فَاَمْلَيْتُநான் அவகாசம் அளித்தேன்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குثُمَّபிறகுاَخَذْتُهُمْ‌ۚநான் அவர்களைப் பிடித்தேன்فَكَيْفَஆகவே, எப்படி?كَانَஇருந்ததுنَكِيْرِ‏எனது மறுப்பு
வ அஸ் ஹாBபு மத்யன வ குத்திBப மூஸா Fப அம்லய்து லில்காFபிரீன தும்ம அகத்துஹும் Fபகய்Fப கான னகீர்
(இவ்வாறே) மத்யன் வாசிகளும் (முற்பட்டனர்); இன்னும் மூஸாவையும் பொய்ப்பிக்கவே முற்பட்டனர் -எனினும் நான் காஃபிர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பின்னர் அவர்களை நான் பிடித்துக் கொண்டேன்; என் தண்டனை எப்படியிருந்தது? (என்பதை கவனிப்பீராக!)
ثُمَّ اَرْسَلْنَا مُوْسٰی وَاَخَاهُ هٰرُوْنَ ۙ۬ بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
ثُمَّபிறகுاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰىமூஸாவையும்وَاَخَاهُஇன்னும் அவருடையசகோதரர்هٰرُوْنَ ۙஹாரூனையும்بِاٰيٰتِنَاநமது அத்தாட்சிகளைக் கொண்டும்وَسُلْطٰنٍஇன்னும் ஆதாரத்தைக் கொண்டும்مُّبِيْنٍۙ‏தெளிவான
தும்ம அர்ஸல்னா மூஸா வ அகாஹு ஹாரூன Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்-
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ لَعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسَىமூஸாவிற்குالْـكِتٰبَவேதத்தைلَعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏அவர்கள் நேர்வழி பெறுவதற்காக
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப ல'அல்லஹும் யஹ்ததூன்
(தவிர) அவர்கள் நேர்வழி பெறுவதற்காக நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தையும் கொடுத்தோம்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗۤ اَخَاهُ هٰرُوْنَ وَزِیْرًا ۟ۚۖ
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاகொடுத்தோம்مُوْسَىமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைوَجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்مَعَهٗۤஅவருடன்اَخَاهُஅவரது சகோதரர்هٰرُوْنَஹாரூனைوَزِيْرًا‌ ۖ‌ ۚ‏உதவியாளராக
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப வ ஜ'அல்னா ம'அஹூ அகாஹு ஹாரூன வZஜீரா
மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.
وَاِذْ نَادٰی رَبُّكَ مُوْسٰۤی اَنِ ائْتِ الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۙ
وَاِذْ نَادٰىஅந்நேரத்தை நினைவு கூருங்கள்! / அழைத்தான்رَبُّكَஉமது இறைவன்مُوْسٰۤىமூசாவைاَنِ ائْتِநீர் வருவீராக!الْقَوْمَமக்களிடம்الظّٰلِمِيْنَۙ‏அநியாயக்காரர்கள்
வ இத் னாதா ரBப்Bபுக மூஸா அனி'-தில் கவ்மள் ளாலிமீன்
உம் இறைவன் மூஸாவிடம் “அநியாயக்கார சமூகத்திடம் செல்க” என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக.)
قَالَ فَعَلْتُهَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّیْنَ ۟ؕ
قَالَஅவர் கூறினார்فَعَلْتُهَاۤஅதை நான் செய்தேன்اِذًاஅப்போதுوَّاَنَاநானோمِنَ الضَّآلِّيْنَؕ‏அறியாதவர்களில்
கால Fப'அல்துஹா இத(ன்)வ் வ அன மினள் ளாலீன்
(மூஸா) கூறினார்: “நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்.
قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ مُّوْقِنِیْنَ ۟
قَالَகூறினார்رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَاؕஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّوْقِنِيْنَ‏உறுதிகொள்பவர்களாக
கால ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா இன் குன்தும் மூகினீன்
அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார்.
قَالَ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبُّكُمْஉங்கள் இறைவன்وَرَبُّஇன்னும் இறைவன்اٰبَآٮِٕكُمُஉங்கள் மூதாதைகளின்الْاَوَّلِيْنَ‏முன்னோர்களான
கால ரBப்Bபுகும் வ ரBப்Bபு ஆBபா'இகுமுல் அவ்வலீன்
(அப்பொழுது மூஸா) “உங்களுக்கும் இறைவன்; உங்கள் முன்னவர்களான மூதாதையருக்கும் (அவனே) இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَیْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبُّஇறைவன்الْمَشْرِقِகிழக்கு திசைوَالْمَغْرِبِஇன்னும் மேற்கு திசைوَمَا بَيْنَهُمَا ؕஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْقِلُوْنَ‏சிந்தித்துபுரிபவர்களாக
கால ரBப்Bபுல் மஷ்ரிகி வல் மக்ரிBபி வமா Bபய்ன ஹுமா இன் குன்தும் தஃகிலூன்
(அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَىِٕنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِیْنَ ۟
فَلَمَّا جَآءَவந்த போதுالسَّحَرَةُசூனியக்காரர்கள்قَالُوْاகூறினர்لِفِرْعَوْنَஃபிர்அவ்னிடம்اَٮِٕنَّ لَـنَاஎங்களுக்கு உண்டாلَاَجْرًاதிட்டமாக கூலிاِنْ كُنَّاநாங்கள் ஆகிவிட்டால்نَحْنُநாங்கள்الْغٰلِبِيْنَ‏வெற்றியாளர்களாக
Fபலம்மா ஜா'அஸ் ஸஹரது காலூ லி Fபிர்'அவ்ன அ'இன்ன லனா ல அஜ்ஜ்ரன் இன் குன்னா னஹ்னுல் காலிBபீன்
ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லவா ?” என்று கேட்டார்கள்.
قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟
قَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குمُّوْسٰۤىமூசாاَلْقُوْاஎறியுங்கள்مَاۤஎதைاَنْتُمْநீங்கள்مُّلْقُوْنَ‏எறியப் போகிறீர்களோ
கால லஹும் மூஸா அல்கூ மா அன்தும் முல்கூன்
மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்” என்று கூறினார்.
فَاَلْقٰی مُوْسٰی عَصَاهُ فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚۖ
فَاَ لْقٰىஆகவே அவர் எறிந்தார்مُوْسٰىமூசாعَصَاهُதனது தடியைفَاِذَاஆகவே, உடனேهِىَஅதுتَلْقَفُவிழுங்கியதுمَا يَاْفِكُوْنَ‌ ۖ ۚ‏அவர்கள் வித்தைகாட்டிய அனைத்தையும்
Fப அல்கா மூஸா 'அஸாஹு Fப இதா ஹிய தல்கFபு மா யாFபிகூன்
பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது.
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
رَبِّஇறைவனைمُوْسٰىமூஸாوَهٰرُوْنَ‏இன்னும் ஹாரூனுடைய
ரBப்Bபி மூஸா வ ஹாரூன்
“அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.” என்று கூறினர்.
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَسْرِ بِعِبَادِیْۤ اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ۟
وَاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلٰى مُوْسٰٓىமூஸாவிற்குاَنْ اَسْرِஇரவில் அழைத்துச் செல்லுங்கள்بِعِبَادِىْۤஎனது அடியார்களைاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مُّتَّبَعُوْنَ‏பின்தொடரப்படுவீர்கள்
வ அவ்ஹய்னா இலா மூஸா அன் அஸ்ரி Bபி'இBபாதீ இன்னகும் முத்தBப'ஊன்
மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்.
فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰۤی اِنَّا لَمُدْرَكُوْنَ ۟ۚ
فَلَمَّا تَرَآءَஒருவரை ஒருவர் பார்த்தபோதுالْجَمْعٰنِஇரண்டு படைகளும்قَالَகூறினர்اَصْحٰبُதோழர்கள்مُوْسٰٓىமூஸாவின்اِنَّاநிச்சயமாக நாங்கள்لَمُدْرَكُوْنَ‌ۚ‏பிடிக்கப்பட்டோம்
Fபலம்மா தரா'அல் ஜம்'ஆனி கால அஸ் ஹாBபு மூஸா இன்னா லமுத்ரகூன்
இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.
قَالَ كَلَّا ۚ اِنَّ مَعِیَ رَبِّیْ سَیَهْدِیْنِ ۟
قَالَஅவர் கூறினார்كَلَّا‌ ۚஅவ்வாறல்லاِنَّநிச்சயமாகمَعِىَஎன்னுடன் இருக்கின்றான்رَبِّىْஎன் இறைவன்سَيَهْدِيْنِ‏அவன் எனக்கு விரைவில் வழிகாட்டுவான்
கால கல்லா இன்ன ம'இய ரBப்Bபீ ஸ யஹ்தீன்
அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்;.
فَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ ؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِیْمِ ۟ۚ
فَاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلٰى مُوْسٰٓىமூஸாவிற்குاَنِ اضْرِبْஅடிப்பீராக! என்றுبِّعَصَاكَஉமது தடியைக் கொண்டுالْبَحْرَ‌ؕகடலைفَانْفَلَقَஆக, அது பிளந்ததுفَكَانَஇருந்ததுكُلُّஒவ்வொருفِرْقٍபிளவும்كَالطَّوْدِமலைப் போன்றுالْعَظِيْمِ‌ۚ‏பெரிய
Fப அவ்ஹய்னா இலா மூஸா அனிள்ரிBப் Bபி'அஸாகல் Bபஹ்ர Fபன்Fபலக Fபகான குல்லு Fபிர்கின் கத்தவ்தில் 'அளீம்
உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
وَاَنْجَیْنَا مُوْسٰی وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۚ
وَاَنْجَيْنَاநாம் பாதுகாத்தோம்مُوْسٰىமூசாவையும்وَمَنْ مَّعَهٗۤஇன்னும் , அவருடன் இருந்தவர்களைاَجْمَعِيْنَ‌ۚ‏அனைவரையும்
வ அன்ஜய்னா மூஸா வ மம் ம'அஹூ அஜ்ம'ஈன்
மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.
اِذْ قَالَ مُوْسٰی لِاَهْلِهٖۤ اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا ؕ سَاٰتِیْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِیْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ ۟
اِذْ قَالَஅந்த சமயத்தை நினைவு கூறினார்مُوْسٰىமூசாلِاَهْلِهٖۤதன்குடும்பத்தினருக்குاِنِّىْۤநிச்சயமாக நான்اٰنَسْتُநான் பார்த்தேன்نَارًاؕநெருப்பைسَاٰتِيْكُمْஉங்களுக்கு கொண்டு வருகிறேன்مِّنْهَاஅதிலிருந்துبِخَبَرٍஒரு செய்தியைاَوْஅல்லதுاٰتِيْكُمْஉங்களுக்கு கொண்டு வருகிறேன்بِشِهَابٍநெருப்பைقَبَسٍகொள்ளிக்கட்டைلَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ‏நீங்கள் குளிர் காய்வதற்காக
இத் கால மூஸா லி அஹ்லிஹீ இன்னீ ஆனஸ்து னாரன் ஸ'ஆதீகும் மின்ஹா BபிகBபரின் அவ் ஆதீகும் BபிஷிஹாBபின் கBபஸில் ல'அல்லகும் தஸ்தலூன்
மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி: “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்” என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!
یٰمُوْسٰۤی اِنَّهٗۤ اَنَا اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ۙ
يٰمُوْسٰۤىமூஸாவே!اِنَّـهٗۤநிச்சயமாகاَنَاநான்தான்اللّٰهُஅல்லாஹ்الْعَزِيْزُமிகைத்தவனானالْحَكِيْمُۙ‏மகா ஞானமுடையவனான
யா மூஸா இன்னஹூ அனல் லாஹுல் 'அZஜீZஜுல் ஹகீம்
மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
وَاَلْقِ عَصَاكَ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰی مُدْبِرًا وَّلَمْ یُعَقِّبْ ؕ یٰمُوْسٰی لَا تَخَفْ ۫ اِنِّیْ لَا یَخَافُ لَدَیَّ الْمُرْسَلُوْنَ ۟ۗۖ
وَاَ لْقِபோடுவீராக!عَصَاكَ‌ ؕஉமது தடியைفَلَمَّا رَاٰهَاஅவர் அதை பார்த்த போதுتَهْتَزُّநெளிவதாகكَاَنَّهَاஅது போன்றுجَآنٌّபாம்பைوَّلّٰىதிரும்பினார்مُدْبِرًاபுறமுதுகிட்டுوَّلَمْ يُعَقِّبْ‌ ؕஅவர் திரும்பவே இல்லைيٰمُوْسٰىமூஸாவே!لَا تَخَفْபயப்படாதீர்اِنِّىْநிச்சயமாக நான்لَا يَخَافُபயப்பட மாட்டார்கள்لَدَىَّஎன்னிடம்الْمُرْسَلُوْنَ ۖ‏இறைத்தூதர்கள்
வ அல்கி 'அஸாக்; Fபலம்ம்மா ர ஆஹா தஹ்தZஜ்Zஜு க அன்னஹா ஜான்னு(ன்)வ் வல்லா முத்Bபிர(ன்)வ் வ லம் யு'அக்கிBப்; யா மூஸா லா தகFப் இன்னீ லா யகாFபு லதய்யல் முர்ஸலூன்
“உம் கைத்தடியைக் கீழே எறியும்;” (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்; “மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்.”
نَتْلُوْا عَلَیْكَ مِنْ نَّبَاِ مُوْسٰی وَفِرْعَوْنَ بِالْحَقِّ لِقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
نَـتْلُوْاநாம் ஓதுகிறோம்عَلَيْكَஉம்மீதுمِنْ نَّبَاِசெய்தியைمُوْسٰىமூசாوَفِرْعَوْنَமற்றும் ஃபிர்அவ்னின்بِالْحَـقِّஉண்மையாகلِقَوْمٍமக்களுக்காகيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கைகொள்கின்ற
னத்லூ 'அலய்க மின் னBப-இ மூஸா வ Fபிர்'அவ்ன Bபில்ஹக்கி லிகவ்மி(ன்)ய் யு'மிஇனூன்
நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்.
وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اُمِّ مُوْسٰۤی اَنْ اَرْضِعِیْهِ ۚ فَاِذَا خِفْتِ عَلَیْهِ فَاَلْقِیْهِ فِی الْیَمِّ وَلَا تَخَافِیْ وَلَا تَحْزَنِیْ ۚ اِنَّا رَآدُّوْهُ اِلَیْكِ وَجَاعِلُوْهُ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
وَاَوْحَيْنَاۤநாம் உள்ளத்தில் போட்டோம்اِلٰٓى اُمِّதாயாருக்குمُوْسٰٓىமூஸாவின்اَنْ اَرْضِعِيْهِ‌ۚநீ அவருக்கு பாலூட்டு!فَاِذَا خِفْتِநீ பயந்தால்عَلَيْهِஅவரைفَاَ لْقِيْهِஅவரை எரிந்து விடுفِى الْيَمِّகடலில்وَلَا تَخَافِىْநீ பயப்படாதே!وَلَا تَحْزَنِىْۚஇன்னும் நீ கவலைப்படாதே!اِنَّاநிச்சயமாக நாம்رَآدُّوْهُஅவரை திரும்பக் கொண்டு வருவோம்اِلَيْكِஉம்மிடம்وَجٰعِلُوْهُஇன்னும் , அவரை ஆக்குவோம்مِنَ الْمُرْسَلِيْنَ‏தூதர்களில்
வ அவ்ஹய்னா இலா உம்மி மூஸா அன் அர்ளி'ஈஹி Fபய்-தா கிFப்தி 'அலய்ஹி Fப அல்கீஹி Fபில்யம்மி வலா தகாFபீ வலா தஹ்Zஜனீ இன்னா ராத்தூஹு இலய்கி வ ஜா'இலூஹு மினல் முர்ஸலீன்
நாம் மூஸாவின் தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.
وَاَصْبَحَ فُؤَادُ اُمِّ مُوْسٰی فٰرِغًا ؕ اِنْ كَادَتْ لَتُبْدِیْ بِهٖ لَوْلَاۤ اَنْ رَّبَطْنَا عَلٰی قَلْبِهَا لِتَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
وَاَصْبَحَஆகிவிட்டதுفُؤَادُஉள்ளம்اُمِّதாயாருடையمُوْسٰىமூஸாவின்فٰرِغًا‌ ؕவெறுமையாகاِنْ كَادَتْ لَـتُبْدِىْநிச்சயமாக அவள் வெளிப்படுத்தி இருக்கக்கூடும்بِهٖஅவரைلَوْلَاۤ اَنْ رَّبَطْنَاநாம் உறுதிப்படுத்தவில்லையெனில்عَلٰى قَلْبِهَاஅவளுடைய உள்ளத்தைلِتَكُوْنَஅவள் ஆகவேண்டும் என்பதற்காகمِنَ الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களில்
வ அஸ்Bபஹ Fபு'ஆது உம்மி மூஸா Fபாரிகன் இன் காதத் லதுBப்தீ Bபிஹீ லவ் லா அர்ரBபத்னா 'அலா கல்Bபிஹா லிதகூன மினல் மு'மினீன்
மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.
وَقَالَتْ لِاُخْتِهٖ قُصِّیْهِ ؗ فَبَصُرَتْ بِهٖ عَنْ جُنُبٍ وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟ۙ
وَقَالَتْஅவள் கூறினாள்لِاُخْتِهٖஅவருடைய சகோதரிக்குقُصِّيْهِ‌நீ அவரைப் பின்தொடர்ந்து செல்فَبَصُرَتْஆக, அவள் பார்த்துவிட்டாள்بِهٖஅவரைعَنْ جُنُبٍதூரத்திலிருந்துوَّهُمْஎனினும், அவர்கள்لَا يَشْعُرُوْنَۙ‏உணரவில்லை
வ காலத் லி உக்திஹீ குஸ்ஸீஹி FபBபஸுரத் Bபிஹீ 'அன் ஜுனுBபி(ன்)வ் வஹும் லா யஷ்'உரூன்
இன்னும் மூஸாவின் சகோதரியிடம்: “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை கவனித்து வந்தாள்.
وَدَخَلَ الْمَدِیْنَةَ عَلٰی حِیْنِ غَفْلَةٍ مِّنْ اَهْلِهَا فَوَجَدَ فِیْهَا رَجُلَیْنِ یَقْتَتِلٰنِ ؗۗ هٰذَا مِنْ شِیْعَتِهٖ وَهٰذَا مِنْ عَدُوِّهٖ ۚ فَاسْتَغَاثَهُ الَّذِیْ مِنْ شِیْعَتِهٖ عَلَی الَّذِیْ مِنْ عَدُوِّهٖ ۙ فَوَكَزَهٗ مُوْسٰی فَقَضٰی عَلَیْهِ ؗۗ قَالَ هٰذَا مِنْ عَمَلِ الشَّیْطٰنِ ؕ اِنَّهٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِیْنٌ ۟
وَدَخَلَஇன்னும் நுழைந்தார்الْمَدِيْنَةَநகரத்தில்عَلٰى حِيْنِநேரத்தில்غَفْلَةٍகவனமற்று இருந்தمِّنْ اَهْلِهَاஅதன் வாசிகள்فَوَجَدَகண்டார்فِيْهَاஅதில்رَجُلَيْنِஇருவரைيَقْتَتِلٰنِ அவ்விருவரும் சண்டை செய்தனர்هٰذَاஇவர்مِنْ شِيْعَتِهٖஅவருடைய பிரிவை சேர்ந்தவர்وَهٰذَاஇன்னும் இவர்مِنْ عَدُوِّهٖ‌ۚஅவருடைய எதிரிகளில் உள்ளவர்فَاسْتَغَاثَهُஅவரிடம் உதவி கேட்டான்الَّذِىْ مِنْ شِيْعَتِهٖஇவருடைய பிரிவைச் சேர்ந்தவன்عَلَى الَّذِىْ مِنْ عَدُوِّهٖۙதனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராகفَوَكَزَهٗ مُوْسٰىமூஸா அவனை குத்து விட்டார்فَقَضٰىகதையை முடித்து விட்டார்عَلَيْهِ‌ அவனுடையقَالَகூறினார்هٰذَاஇதுمِنْ عَمَلِசெயலில் உள்ளதுالشَّيْطٰنِ‌ ؕஷைத்தானின்اِنَّهٗநிச்சயமாக அவன்عَدُوٌّஎதிரி ஆவான்مُّضِلٌّவழி கெடுக்கின்றவன்مُّبِيْنٌ‏தெளிவான
வ தகலல் மதீனத 'அலா ஹீனீ கFப்லதிம் மின் அஹ்லிஹா Fபவஜத Fபீஹா ரஜு லய்னி யக்ததிலானி ஹாதா மின் ஷீ'அதிஹீ வ ஹாத மின் 'அதுவ்விஹீ Fபஸ்தகாதஹுல் லதீ மின் ஷீ'அதிஹீ 'அலல் லதீ மின் 'அதுவ்விஹீ FபவகZஜஹூ மூஸா Fபகளா 'அலய்ஹி கால ஹாத மின் 'அமலிஷ் ஷய்தானி இன்னஹூ 'அதுவ்வும்ம் முளில்லும் முBபீன்
(ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் - மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா): “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்” என்று கூறினார்.
فَاَصْبَحَ فِی الْمَدِیْنَةِ خَآىِٕفًا یَّتَرَقَّبُ فَاِذَا الَّذِی اسْتَنْصَرَهٗ بِالْاَمْسِ یَسْتَصْرِخُهٗ ؕ قَالَ لَهٗ مُوْسٰۤی اِنَّكَ لَغَوِیٌّ مُّبِیْنٌ ۟
فَاَصْبَحَகாலையில் அவர் இருந்தார்فِى الْمَدِيْنَةِநகரத்தில்خَآٮِٕفًاபயந்தவராகيَّتَرَقَّبُஎதிர்பார்த்தவராகفَاِذَا الَّذِى اسْتَـنْصَرَهٗஅப்போது/ எவன்/உதவிதேடினான்/அவரிடத்தில்بِالْاَمْسِநேற்றுيَسْتَصْرِخُهٗ‌ ؕஅவரை உதவிக்கு கத்தி அழைத்தான்قَالَகூறினார்لَهٗஅவனுக்குمُوْسٰٓىமூசாاِنَّكَநிச்சயமாக நீلَـغَوِىٌّஒரு மூடன் ஆவாய்مُّبِيْنٌ‏தெளிவான
Fப அஸ்Bபஹ Fபில் மதீனதி கா'இFப(ன்)ய் யதரக்கBபு Fப இதல் லதிஸ் தன்ஸரஹூ Bபில் அம்ஸி யஸ்தஸ்ரிகுஹ்; கால லஹூ மூஸா இன்னக லகவிய்யும் முBபீன்
மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கோரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸா: “நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கின்றாய்” என்று அவனிடம் கூறினார்.
فَلَمَّاۤ اَنْ اَرَادَ اَنْ یَّبْطِشَ بِالَّذِیْ هُوَ عَدُوٌّ لَّهُمَا ۙ قَالَ یٰمُوْسٰۤی اَتُرِیْدُ اَنْ تَقْتُلَنِیْ كَمَا قَتَلْتَ نَفْسًا بِالْاَمْسِ ۖۗ اِنْ تُرِیْدُ اِلَّاۤ اَنْ تَكُوْنَ جَبَّارًا فِی الْاَرْضِ وَمَا تُرِیْدُ اَنْ تَكُوْنَ مِنَ الْمُصْلِحِیْنَ ۟
فَلَمَّاۤ اَنْ اَرَادَஆக, அவர் நாடியபோதுاَنْ يَّبْطِشَதண்டிக்கبِالَّذِىْஎவனைهُوَஅவன்عَدُوٌّஎதிரியாகلَّهُمَا ۙஅவர்கள் இருவருக்கும்قَالَஅவன் கூறினான்يٰمُوْسٰٓىமூஸாவே!اَ تُرِيْدُநீ நாடுகிறாயா?اَنْ تَقْتُلَنِىْஎன்னை கொல்லكَمَا قَتَلْتَநீ கொன்றது போன்றுنَفْسًۢاஓர் உயிரைبِالْاَمْسِநேற்றுۖ  اِنْ تُرِيْدُநீ நாடவில்லைاِلَّاۤதவிரاَنْ تَكُوْنَநீ ஆகுவதைجَبَّارًاஅநியாயக்காரனாகفِى الْاَرْضِபூமியில்وَمَا تُرِيْدُநீ நாடவில்லைاَنْ تَكُوْنَநீ ஆகுவதைمِنَ الْمُصْلِحِيْنَ‏சீர்திருத்தவாதிகளில்
Fபலம்மா அன் அராத அய் யBப்திஷ Bபில்லதீ ஹுவ 'அதுவ்வுல் லஹுமா கால யா மூஸா அதுரீது அன் தக்துலனீ கமா கதல்த னFப்ஸம் Bபில் அம்ஸி இன் துரீது இல்லா அன் தகூன ஜBப்Bபாரம் Fபில் அர்ளி வமா துரீது அன் தகூன மினல் முஸ்லிஹீன்
பின்னர், மூஸா தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க, நாடியபோது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க) வருகிறார் என்று எண்ணி) “மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில் (ஒருவராக) இருக்க நீர் நாடவில்லை” என்று கூறினான்.
وَجَآءَ رَجُلٌ مِّنْ اَقْصَا الْمَدِیْنَةِ یَسْعٰی ؗ قَالَ یٰمُوْسٰۤی اِنَّ الْمَلَاَ یَاْتَمِرُوْنَ بِكَ لِیَقْتُلُوْكَ فَاخْرُجْ اِنِّیْ لَكَ مِنَ النّٰصِحِیْنَ ۟
وَجَآءَஇன்னும் வந்தார்رَجُلٌஓர் ஆடவர்مِّنْ اَقْصَاஇறுதியிலிருந்துالْمَدِيْنَةِநகரத்தின்يَسْعٰىவிரைந்தவராகقَالَகூறினார்يٰمُوْسٰٓىமூஸாவே!اِنَّநிச்சயமாகالْمَلَاَபிரமுகர்கள்يَاْتَمِرُوْنَஆலோசிக்கின்றனர்بِكَஉமக்காகلِيَـقْتُلُوْكَஅவர்கள் உம்மைக் கொல்வதற்குفَاخْرُجْஆகவே, நீர் வெளியேறிவிடும்!اِنِّىْநிச்சயமாக நான்لَـكَஉமக்குمِنَ النّٰصِحِيْنَ‏நன்மையை நாடுபவர்களில் ஒருவன்
வ ஜா'அ ரஜுலும் மின் அக்ஸல் மதீனதி யஸ்'ஆ கால யா மூஸா இன்னல் மல அ யா தமிரூன Bபிக லியக்துலூக Fபக்ருஜ் இன்னீ லக மினன் னாஸிஹீன்
பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.
فَجَآءَتْهُ اِحْدٰىهُمَا تَمْشِیْ عَلَی اسْتِحْیَآءٍ ؗ قَالَتْ اِنَّ اَبِیْ یَدْعُوْكَ لِیَجْزِیَكَ اَجْرَ مَا سَقَیْتَ لَنَا ؕ فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَیْهِ الْقَصَصَ ۙ قَالَ لَا تَخَفْ ۫ۥ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
فَجَآءَتْهُஅவரிடம் வந்தாள்اِحْدٰٮہُمَاஅவ்விருவரில் ஒருத்திتَمْشِىْநடந்தவளாகعَلَى اسْتِحْيَآءٍ வெட்கத்துடன்قَالَتْஅவள் கூறினாள்اِنَّநிச்சயமாகاَبِىْஎன் தந்தைيَدْعُوْكَஉம்மை அழைக்கிறார்لِيَجْزِيَكَஉமக்கு தருவதற்காகاَجْرَகூலியைمَا سَقَيْتَநீநீர்புகட்டியதற்குரியلَـنَا‌ ؕஎங்களுக்காகفَلَمَّا جَآءَهٗபோது/அவரிடம்/வந்தார்وَقَصَّஇன்னும் விவரித்தார்عَلَيْهِஅவரிடம்الْقَصَصَ ۙவரலாற்றைقَالَஅவர் கூறினார்لَا تَخَفْ‌பயப்படாதே!نَجَوْتَநீ தப்பித்து விட்டாய்مِنَ الْقَوْمِமக்களிடமிருந்துالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்(கள்)
Fபஜா'அத் ஹு இஹ்தாஹுமா தம்ஷீ 'அலஸ் திஹ்யா'இன் காலத் இன்ன அBபீ யத்'ஊக லி யஜ்Zஜியக அஜ்ர மா ஸகய்த லனா; Fபலம்மா ஜா'அஹூ வ கஸ்ஸ 'அலய்ஹில் கஸஸ கால லா தகFப் னஜவ்த மினல் கவ்மிள் ளாலிமீன்
(சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்” என்று கூறினார்.
قَالَ اِنِّیْۤ اُرِیْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَی ابْنَتَیَّ هٰتَیْنِ عَلٰۤی اَنْ تَاْجُرَنِیْ ثَمٰنِیَ حِجَجٍ ۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ ۚ وَمَاۤ اُرِیْدُ اَنْ اَشُقَّ عَلَیْكَ ؕ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்اِنِّىْۤநிச்சயமாக நான்اُرِيْدُநான் விரும்புகிறேன்اَنْ اُنْكِحَكَஉனக்கு நான் மணமுடித்துத்தரاِحْدَىஒருத்தியைابْنَتَىَّஎன் இரு பெண் பிள்ளைகளில்هٰتَيْنِஇந்த இரண்டுعَلٰٓىமீதுاَنْ تَاْجُرَنِىْஎனக்கு கூலியாக (-மஹராக)த் தரவேண்டும்ثَمٰنِىَ حِجَجٍ‌ۚஎட்டு ஆண்டுகள்فَاِنْ اَتْمَمْتَநீ பூர்த்திசெய்தால்عَشْرًاபத்து ஆண்டுகளைفَمِنْ عِنْدِكَ‌ۚஉன் புறத்திலிருந்துوَمَاۤ اُرِيْدُநான் விரும்பவில்லைاَنْ اَشُقَّநான் சிரமம் ஏற்படுத்தعَلَيْكَ‌ؕஉம்மீதுسَتَجِدُنِىْۤநீ காண்பாய்/என்னைاِنْ شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்مِنَ الصّٰلِحِيْنَ‏என்னை நல்லோரில்
கால இன்னீ உரீது அன் உன்கிஹக இஹ்தBப் னதய்ய ஹாதய்னி 'அலா அன் தா'ஜுரனீ தமானிய ஹிஜஜ்; Fப இன் அத்மம்த 'அஷ்ரன் Fபமின் 'இன்திக வமா உரீது அன் அஷுக்க 'அலய்க்; ஸதஜிதுனீ இன் ஷா'அல் லாஹு மினஸ் ஸாலிஹீன்
(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: “நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.”
قَالَ ذٰلِكَ بَیْنِیْ وَبَیْنَكَ ؕ اَیَّمَا الْاَجَلَیْنِ قَضَیْتُ فَلَا عُدْوَانَ عَلَیَّ ؕ وَاللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟۠
قَالَஅவர் கூறினார்ذٰ لِكَஇதுبَيْنِىْஎனக்கு மத்தியிலும்وَبَيْنَكَ‌ ؕஉமக்கு மத்தியிலும்اَيَّمَاஎதைالْاَجَلَيْنِஇரண்டு தவணையில்قَضَيْتُநான் நிறைவேற்றினாலும்فَلَا عُدْوَانَவரம்பு மீறுதல் கூடாதுعَلَـىَّ‌ ؕஎன் மீதுوَاللّٰهُஅல்லாஹ்عَلٰى مَا نَقُوْلُநாம் கூறுவதற்குوَكِيْلٌ‏பொறுப்பாளன்
கால தாலிக Bபய்னீ வ Bபய்னக அய்யமல் அஜலய்னி களய்து Fபலா 'உத்வான 'அலய்ய வல்லாஹு 'அலா ம னகூலு வகீல்
(அதற்கு மூஸா) கூறினார்: “இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்.
فَلَمَّا قَضٰی مُوْسَی الْاَجَلَ وَسَارَ بِاَهْلِهٖۤ اٰنَسَ مِنْ جَانِبِ الطُّوْرِ نَارًا ۚ قَالَ لِاَهْلِهِ امْكُثُوْۤا اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا لَّعَلِّیْۤ اٰتِیْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ جَذْوَةٍ مِّنَ النَّارِ لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ ۟
فَلَمَّاபோதுقَضٰىமுடித்தார்مُوْسَىமூசாالْاَجَلَதவணையைوَسَارَஇன்னும் சென்றார்بِاَهْلِهٖۤதனது குடும்பத்தினரோடுاٰنَسَபார்த்தார்مِنْ جَانِبِஅருகில்الطُّوْرِமலையின்نَارًا‌ۚநெருப்பைقَالَகூறினார்لِاَهْلِهِதனது குடும்பத்தினரிடம்امْكُثُوْۤاநீங்கள் தாமதியுங்கள்اِنِّىْۤநிச்சயமாக நான்اٰنَسْتُநான் பார்த்தேன்نَارًا‌ஒரு நெருப்பைلَّعَلِّىْۤ اٰتِيْكُمْஉங்களிடம் (கொண்டு) வருகிறேன்مِّنْهَاஅதிலிருந்துبِخَبَرٍஒரு செய்தியைاَوْஅல்லதுجَذْوَةٍகங்கைمِّنَ النَّارِநெருப்பின்لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ‏நீங்கள் குளிர்காய்வதற்காக
Fபலம்ம்மா களா மூஸல் அஜல வ ஸார Bபி அஹ்லிஹீ ஆனஸ மின் ஜானிBபித் தூரி னாரன் கால லி அஹ்லிஹிம் குதூ இன்னீ ஆனஸ்து னாரல் ல 'அல்லீ ஆதீகும் மின்ஹா BபிகBபரின் அவ் ஜத்வதிம் மினன் னாரி ல 'அல்லகும் தஸ்தலூன்
ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது; “தூர்” (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.
فَلَمَّاۤ اَتٰىهَا نُوْدِیَ مِنْ شَاطِئِ الْوَادِ الْاَیْمَنِ فِی الْبُقْعَةِ الْمُبٰرَكَةِ مِنَ الشَّجَرَةِ اَنْ یّٰمُوْسٰۤی اِنِّیْۤ اَنَا اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟ۙ
فَلَمَّاۤ اَتٰٮهَاஅவர் அதனிடம் வந்தபோதுنُوْدِىَசப்தமிட்டு அழைக்கப்பட்டார்مِنْ شَاطِیٴِபக்கத்திலிருந்துالْوَادِபள்ளத்தாக்கின்الْاَيْمَنِவலதுفِى الْبُقْعَةِஇடத்தில்الْمُبٰرَكَةِபுனிதமானمِنَ الشَّجَرَةِமரத்திலிருந்துاَنْ يّٰمُوْسٰٓىமூசாவே!اِنِّىْۤ اَنَاநிச்சயமாக நான்தான்اللّٰهُஅல்லாஹ்رَبُّஇறைவனாகியالْعٰلَمِيْنَ ۙ‏அகிலங்களின்
Fபலம்மா அதாஹா னூதிய மின் ஷாதி'இல் வாதில் அய்மனி Fபில் Bபுக்'அதில் முஉBபாரகதி மினஷ் ஷஜரதி அய் யா மூஸா இன்னீ அனல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து: “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!” என்று கூப்பிடப்பட்டார்.
وَاَنْ اَلْقِ عَصَاكَ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰی مُدْبِرًا وَّلَمْ یُعَقِّبْ ؕ یٰمُوْسٰۤی اَقْبِلْ وَلَا تَخَفْ ۫ اِنَّكَ مِنَ الْاٰمِنِیْنَ ۟
وَاَنْ اَ لْقِஇன்னும் எறிவீராக!عَصَاكَ‌ ؕஉமது கைத்தடியைفَلَمَّاஆக, அவர் பார்த்தபோதுرَاٰهَاஅதைتَهْتَزُّநெளிவதாகكَاَنَّهَاஒரு போன்று/அதுجَآنٌّபாம்பைوَّلّٰىதிரும்பி ஓடினார்مُدْبِرًاபுறமுதுகிட்டவராகوَّلَمْ يُعَقِّبْ‌ ؕஅவர் பார்க்கவில்லைيٰمُوْسٰٓىமூஸாவே!اَ قْبِلْமுன்னே வருவீராக!وَلَا تَخَفْ‌பயப்படாதீர்!اِنَّكَநிச்சயமாக நீர்مِنَ الْاٰمِنِيْنَ‏பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்
வ அன் அல்கி 'அஸாக Fபலம் மா ர ஆஹா தஹ்தZஜ்Zஜு க அன்ன்னஹா ஜான்னு(ன்)வ் வல்லா முத்Bபிர(ன்)வ் வ லம் யு'அக்கிBப்; யா மூஸா அக்Bபில் வலா தகFப் இன்னக மினல் ஆமினீன்
“உம் கைத்தடியைக் கீழே எறியும்” என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது): “மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.”
فَلَمَّا جَآءَهُمْ مُّوْسٰی بِاٰیٰتِنَا بَیِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّفْتَرًی وَّمَا سَمِعْنَا بِهٰذَا فِیْۤ اٰبَآىِٕنَا الْاَوَّلِیْنَ ۟
فَلَمَّا جَآءَஆகவே, வந்தபோதுهُمْஅவர்களிடம்مُّوْسٰىமூசாبِاٰيٰتِنَاநமது அத்தாட்சிகளுடன்بَيِّنٰتٍதெளிவானقَالُوْاஅவர்கள் கூறினர்مَاஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியமேمُّفْتَـرًىஇட்டுக்கட்டப்பட்டوَمَا سَمِعْنَاநாங்கள் கேள்விப்பட்டதில்லைبِهٰذَاஇதைப் பற்றிفِىْۤ اٰبَآٮِٕنَاஎங்கள் மூதாதைகளில்الْاَوَّلِيْنَ‏முந்திய(வர்கள்)
Fபலம்மா ஜா'அஹும் மூஸா Bபி ஆயாதினா Bபய்யினாதின் காலூ மா ஹாதா இல்லா ஸிஹ்ரும் முFப்தர(ன்)வ் வமா ஸமிஃனா Bபிஹாதா Fபீ ஆBபா'இனல் அவ்வலீன்
ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: “இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.
وَقَالَ مُوْسٰی رَبِّیْۤ اَعْلَمُ بِمَنْ جَآءَ بِالْهُدٰی مِنْ عِنْدِهٖ وَمَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟
وَقَالَகூறினார்مُوْسٰىமூசாرَبِّىْۤஎன் இறைவன்اَعْلَمُநன்கறிந்தவன்بِمَنْ جَآءَவந்தவரை(யும்)بِالْهُدٰىநேர்வழியுடன்مِنْ عِنْدِهٖஅவனிடமிருந்துوَمَنْஇன்னும் எவர்تَكُوْنُஇருக்கும்لَهٗ عَاقِبَةُஅவருக்கு முடிவுالدَّارِ‌ؕமறுமையின்اِنَّهٗநிச்சயமாகلَا يُفْلِحُவெற்றி பெறமாட்டார்கள்الظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
வ கால மூஸா ரBப்Bபீ அஃலமு Bபிமன் ஜா'அ Bபில்ஹுதா மின் 'இன்திஹீ வ மன் தகூனு லஹூ 'ஆகிBபதுத் தாரி இன்னஹூ லா யுFப்லிஹுள் ளாலிமூன்
(அப்போது மூஸா) கூறினார்: “அவனிடமிருந்து நேர்வழியுடன் வருபவர் யாரென்றும்; இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்.”
وَقَالَ فِرْعَوْنُ یٰۤاَیُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرِیْ ۚ فَاَوْقِدْ لِیْ یٰهَامٰنُ عَلَی الطِّیْنِ فَاجْعَلْ لِّیْ صَرْحًا لَّعَلِّیْۤ اَطَّلِعُ اِلٰۤی اِلٰهِ مُوْسٰی ۙ وَاِنِّیْ لَاَظُنُّهٗ مِنَ الْكٰذِبِیْنَ ۟
وَقَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்يٰۤـاَيُّهَا الْمَلَاُபிரமுகர்களே!مَا عَلِمْتُநான் அறியமாட்டேன்لَـكُمْஉங்களுக்கு (இருப்பதை)مِّنْ اِلٰهٍஒரு கடவுள்غَيْرِىْ‌ ۚஎன்னை அன்றிفَاَوْقِدْஆகவே, நெருப்பூட்டுلِىْஎனக்காகيٰهَامٰنُஹாமானே!عَلَى الطِّيْنِகுழைத்தகளிமண்ணைفَاجْعَلْஉருவாக்குلِّىْஎனக்காகصَرْحًاமுகடுள்ள ஓர் உயரமான கோபுரத்தைلَّعَلِّىْۤ اَطَّلِعُநான் தேடிப்பார்க்க வேண்டும்اِلٰٓى اِلٰهِகடவுளைمُوْسٰى ۙமூஸாவின்وَاِنِّىْஇன்னும் நிச்சயமாக நான்لَاَظُنُّهٗஅவரை கருதுகிறேன்مِنَ الْـكٰذِبِيْنَ‏பொய்யர்களில் (ஒருவராக)
வ கால Fபிர்'அவ்னு யா அய்யுஹல் மல-உ மா 'அலிம்து லகும் மின் இலாஹின் கய்ரீ Fப அவ்கித் லீ யா ஹாமானு 'அலத்தீனி Fபஜ்'அல் லீ ஸர்ஹல் ல'அல்லீ அத்தலி'உ இலா இலாஹி மூஸா வ இன்னீ ல அளுன்னுஹூ மினல் காதிBபீன்
இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்” என்றே கருதுகின்றேன்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ مِنْ بَعْدِ مَاۤ اَهْلَكْنَا الْقُرُوْنَ الْاُوْلٰی بَصَآىِٕرَ لِلنَّاسِ وَهُدًی وَّرَحْمَةً لَّعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் தந்தோம்مُوْسَىமூஸாவிற்குالْكِتٰبَவேதத்தைمِنْۢ بَعْدِபின்னர்مَاۤ اَهْلَكْنَاநாம் அழித்தالْقُرُوْنَதலைமுறையினர்களைالْاُوْلٰىமுந்திய(வர்கள்)بَصَآٮِٕرَஒளியாகவும்لِلنَّاسِமக்களுக்குوَهُدًىநேர்வழியாகவும்وَّرَحْمَةًகருணையாகவும்لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும்
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப மிம் Bபஃதி மா அஹ்லக்னல் குரூனல் ஊலா Bபஸா'இர லின்னாஸி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் ல'அல்லஹும் யத தக்க்கரூன்
இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).
وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِیِّ اِذْ قَضَیْنَاۤ اِلٰی مُوْسَی الْاَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشّٰهِدِیْنَ ۟ۙ
وَمَا كُنْتَநீர் இருக்கவில்லைبِجَانِبِபக்கத்தில்الْغَرْبِىِّமேற்குاِذْ قَضَيْنَاۤநாம் ஒப்படைத்த போதுاِلٰى مُوْسَىமூஸாவிடம்الْاَمْرَசட்டங்களைوَمَا كُنْتَநீர் இருக்கவில்லைمِنَ الشّٰهِدِيْنَۙ‏இருந்தவர்களில்
வமா குன்த BபிஜானிBபில் கர்Bபிய்யி இத் களய்னா இலா மூஸல் அம்ர வமா குன்த மினஷ் ஷாஹிதீன்
மேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளைகளைக் கடமையாக்கிய சமயம் நீர் (தூர் மலைக்கு) மேற்குத் திசையில் இருக்கவில்லை; (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை.
وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّوْرِ اِذْ نَادَیْنَا وَلٰكِنْ رَّحْمَةً مِّنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰىهُمْ مِّنْ نَّذِیْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
وَمَا كُنْتَநீர் இருக்கவில்லைبِجَانِبِஅருகில்الطُّوْرِமலைக்குاِذْ نَادَيْنَاநாம் அழைத்தபோதுوَلٰـكِنْஎனினும்رَّحْمَةًஅருளினால்مِّنْ رَّبِّكَஉமது இறைவனின்لِتُنْذِرَஏனெனில், நீர் எச்சரிக்க வேண்டும்قَوْمًاஒரு மக்களைمَّاۤ اَتٰٮهُمْஅவர்களிடம் வரவில்லைمِّنْ نَّذِيْرٍஎச்சரிப்பாளர் எவரும்مِّنْ قَبْلِكَஉமக்கு முன்னர்لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
வமா குன்த BபிஜானிBபித் தூரி இத் னாதய்னா வ லாகிர் ரஹ்மதம் மிர் ரBப்Bபிக லிதுன்திர கவ்மம் மா அதாஹும் மின் னதீரிம் மின் கBப்லிக ல'அல்லஹும் யததக்கரூன்
இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).
فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْا لَوْلَاۤ اُوْتِیَ مِثْلَ مَاۤ اُوْتِیَ مُوْسٰی ؕ اَوَلَمْ یَكْفُرُوْا بِمَاۤ اُوْتِیَ مُوْسٰی مِنْ قَبْلُ ۚ قَالُوْا سِحْرٰنِ تَظٰهَرَا ۥ۫ وَقَالُوْۤا اِنَّا بِكُلٍّ كٰفِرُوْنَ ۟
فَلَمَّا جَآءَவந்த போதுهُمُஅவர்களுக்குالْحَـقُّசத்திய தூதர்مِنْ عِنْدِنَاநம்மிடமிருந்துقَالُوْاகூறினர்لَوْلَاۤ اُوْتِىَவழங்கப்பட்டிருக்க வேண்டாமா!مِثْلَபோன்றمَاۤ اُوْتِىَவழங்கப்பட்டதைمُوْسٰى‌ ؕமூஸாவிற்குاَوَلَمْ يَكْفُرُوْاஇவர்கள் மறுக்கவில்லையா?بِمَاۤ اُوْتِىَவழங்கப்பட்டதைمُوْسٰىமூஸாவிற்குمِنْ قَبْلُ ۚஇதற்கு முன்னர்قَالُوْاகூறினர்سِحْرٰنِஇரண்டு சூனியங்களாகும்تَظَاهَرَاதங்களுக்குள் உதவி செய்தனர்وَقَالُوْۤاஅவர்கள் கூறினர்اِنَّاநிச்சயமாக நாங்கள்بِكُلٍّஅனைத்தையும்كٰفِرُوْنَ‏மறுப்பவர்கள்தான்
Fபலம்மா ஜா'அஹுமுல் ஹக்கு மின் 'இன்தினா காலூ லவ் லா ஊதிய மித்ல மா ஊதியா மூஸா; அவலம் யக்Fபுரூ Bபிமா ஊதிய மூஸா மின் கBப்லு காலூ ஸிஹ்ரானி தளாஹரா வ காலூ இன்னா Bபிகுல்லின் காFபிரூன்
எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை” என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) “ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!” என்று; இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்” என்று.
اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰی فَبَغٰی عَلَیْهِمْ ۪ وَاٰتَیْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَتَنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِی الْقُوَّةِ ۗ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْفَرِحِیْنَ ۟
اِنَّநிச்சயமாகقَارُوْنَகாரூன்كَانَஇருந்தான்مِنْ قَوْمِசமுதாயத்தில்مُوْسٰىமூஸாவின்فَبَغٰىஅநியாயம் புரிந்தான்عَلَيْهِمْ‌அவர்கள் மீதுوَاٰتَيْنٰهُஅவனுக்கு நாம் கொடுத்தோம்مِنَ الْكُنُوْزِபொக்கிஷங்களிலிருந்துمَاۤஎவைاِنَّநிச்சயமாகمَفَاتِحَهٗஅவற்றின் சாவிகள்لَـتَـنُوْٓاُசிரமத்தோடு சுமக்கும்بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِபலமுள்ள கூட்டம்اِذْஅந்த சமயத்தை (நினைவு கூறுங்கள்)قَالَகூறினர்لَهٗஅவனுக்குقَوْمُهٗஅவனுடைய மக்கள்لَا تَفْرَحْ‌பெருமிதம் கொள்ளாதே!اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْفَرِحِيْنَ‏பெருமிதப்படுவோரை
இன்ன காரூன கான மின் கவ்மி மூஸா FபBபகா 'அலய்ஹிம் வ ஆதய்னாஹு மினல் குனூZஜி மா இன்ன மFபாதி ஹஹூ லதனூ'உ Bபில்'உஸ்Bபதி உலில் குவ்வதி இத் கால லஹூ கவ்முஹூ லா தFப்ரஹ் இன்னல் லாஹா லா யுஹிBப்Bபுல் Fபரிஹீன்
நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
وَقَارُوْنَ وَفِرْعَوْنَ وَهَامٰنَ ۫ وَلَقَدْ جَآءَهُمْ مُّوْسٰی بِالْبَیِّنٰتِ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ وَمَا كَانُوْا سٰبِقِیْنَ ۟ۚۖ
وَقَارُوْنَஇன்னும் காரூனையும்وَفِرْعَوْنَஃபிர்அவ்னையும்وَهَامٰنَ‌ஹாமானையும்وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَهُمْஅவர்களிடம் வந்தார்مُّوْسٰىமூசாبِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَاسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமையடித்தனர்فِى الْاَرْضِபூமியில்وَمَا كَانُوْاஅவர்கள் இல்லைسٰبِقِيْنَ ۖ ۚ‏தப்பி விடுபவர்களாக
வ காரூன வ Fபிர்'அவ்ன வ ஹாமான வ லகத் ஜா'அஹும் மூஸா Bபில்Bபய்யினாதி Fபஸ்தக்Bபரூ Fபில் அர்ளி வமா கானூ ஸாBபிகீன்
இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள். ஆனால் அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَلَا تَكُنْ فِیْ مِرْیَةٍ مِّنْ لِّقَآىِٕهٖ وَجَعَلْنٰهُ هُدًی لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ۚ
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسَىமூஸாவிற்குالْكِتٰبَவேதத்தைفَلَا تَكُنْஆகவே, நீர் இருக்க வேண்டாம்فِىْ مِرْيَةٍசந்தேகத்தில்مِّنْ لِّقَآٮِٕهٖ‌அவரை சந்திப்பதில்وَجَعَلْنٰهُஇன்னும் அதை ஆக்கினோம்هُدًىநேர்வழியாகلِّبَنِىْۤ اِسْرَآءِيْلَۚ‏இஸ்ரவேலர்களுக்கு
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப Fபலா தகுன் Fபீ மிர்யதிம் மில் லிகா'இஹீ வ ஜ'அல்னாஹு ஹுதல் லி Bபனீ இஸ்ரா'ஈல்
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (அவ்) வேதத்தைக் கொடுத்தோம். எனவே, அவர் அதைப் பெற்றதைப்பற்றி சந்தேகப்படாதீர்; நாம் இதனை இஸ்ராயீலின் சந்ததிக்கு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.
وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِیّٖنَ مِیْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ۪ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟ۙ
وَاِذْ اَخَذْنَاநாம் வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராகمِنَ النَّبِيّٖنَஎல்லா நபிமார்களிடமும்مِيْثَاقَهُمْஅவர்களின் ஒப்பந்தத்தைوَمِنْكَஉம்மிடமும்وَمِنْ نُّوْحٍஇன்னும் நூஹிடம்وَّاِبْرٰهِيْمَஇன்னும் இப்ராஹீம்وَمُوْسٰىஇன்னும் மூஸாوَعِيْسَىஇன்னும் ஈஸாابْنِமகன்مَرْيَمَமர்யமின்وَاَخَذْنَاஇன்னும் நாம் வாங்கினோம்مِنْهُمْஅவர்களிடம்مِّیْثَاقًاஒப்பந்தத்தைغَلِيْظًا ۙ‏உறுதியான
வ இத் அகத்னா மினன் னBபிய்யீன மீதாகஹும் வ மின்க வ மின் னூஹி(ன்)வ் வ இBப்ராஹீம வ மூஸா வ ஈஸBப்-னி-மர்யம வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.