நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
(யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
“யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,
قَالَகூறினார்قَآىِٕلٌஒருவர்مِّنْهُمْஅவர்களில்لَاவேண்டாம்تَقْتُلُوْاகொல்லாதீர்கள்یُوْسُفَயூஸுஃபைوَ اَلْقُوْهُமேலும் அவரைப் போடுங்கள்فِیْஇல்غَیٰبَتِஆழத்தில்الْجُبِّகிணற்றின்یَلْتَقِطْهُஅவரை எடுத்துக் கொள்வார்கள்بَعْضُசிலர்السَّیَّارَةِபயணிகளில்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்فٰعِلِیْنَசெய்பவர்களாக
காலா கா'இலும் மின்ஹும் லா தக்துலூ யூஸுFப வ அல்கூஹு Fபீ கயாBபதில் ஜுBப்Bபி யல்தகித்ஹு Bபஃளுஸ் ஸய் யாரதி இன் குன்தும் Fபா 'இலீன்
அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰۤاَبَانَاஎங்கள் தந்தையேمَاஏன்لَكَஉங்களுக்குلَاஇல்லைتَاْمَنَّاஎங்களை நீர் நம்புகிறீர்عَلٰیவிஷயத்தில்یُوْسُفَயூஸுப்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَهٗஅவருக்குلَنٰصِحُوْنَநிச்சயமாக நலன் நாடுபவர்கள்
(பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.
(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்ந்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰۤاَبَانَاۤஎங்கள் தந்தையேاِنَّاநிச்சயமாக நாங்கள்ذَهَبْنَاசென்றோம்نَسْتَبِقُபந்தயமிடوَ تَرَكْنَاமேலும் நாங்கள் விட்டுச் சென்றோம்یُوْسُفَயூஸுஃபைعِنْدَஅருகில்مَتَاعِنَاஎங்கள் பொருட்களின்فَاَكَلَهُஆகவே அவரைத் தின்றுவிட்டதுالذِّئْبُ ۚஓநாய்وَ مَاۤமேலும் இல்லைاَنْتَநீர்بِمُؤْمِنٍநம்புபவராகلَّنَاஎங்களைوَ لَوْஎன்றாலும்كُنَّاநாங்கள்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
“எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!” என்று கூறினார்கள்.
(மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; “இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்;மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்.
وَ جَآءَتْமேலும் வந்ததுسَیَّارَةٌஒரு பயணக்குழுفَاَرْسَلُوْاஎனவே அவர்கள் அனுப்பினார்கள்وَارِدَهُمْதங்கள் தண்ணீர் எடுப்பவரைفَاَدْلٰیஎனவே அவர் இறக்கினார்دَلْوَهٗ ؕதனது வாளியைقَالَஅவர் கூறினார்یٰبُشْرٰیஆஹா! நற்செய்திهٰذَاஇதோغُلٰمٌ ؕஒரு சிறுவன்وَ اَسَرُّوْهُமேலும் அவர்கள் அவரை மறைத்து வைத்தார்கள்بِضَاعَةً ؕஒரு வியாபாரப் பொருளாகوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِمَاஎவற்றைیَعْمَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோ
பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
(யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
(யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.
قَالَஅவர் கூறினார்هِیَஅவள்رَاوَدَتْنِیْஎன்னை மயக்க முயன்றாள்عَنْபற்றிنَّفْسِیْஎன்னையேوَ شَهِدَமேலும் சாட்சியளித்தார்شَاهِدٌஒரு சாட்சிمِّنْஇருந்துاَهْلِهَا ۚஅவளுடைய குடும்பத்தாரில்اِنْஒருவேளைكَانَஇருந்தால்قَمِیْصُهٗஅவருடைய சட்டைقُدَّகிழிக்கப்பட்டுمِنْஇருந்துقُبُلٍமுன்புறம்فَصَدَقَتْஎனவே அவள் உண்மை உரைத்தாள்وَ هُوَமேலும் அவர்مِنَஉள்ளவர்الْكٰذِبِیْنَபொய்யர்களில்
கால ஹிய ராவதத்னீ 'அன் னFப்ஸீ வ ஷஹித ஷாஹிதும் மின் அஹ்லிஹா இன் கான கமீஸுஹூ குத்த மின் குBபுலின் Fபஸதகத் வ ஹுவ மினல் காதிBபீன்
(இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
(என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.
فَلَمَّاஆக, எப்போதுسَمِعَتْஅவள் கேள்விப்பட்டாளோبِمَكْرِهِنَّஅவர்களின் சூழ்ச்சியைاَرْسَلَتْஅவள் ஆள் அனுப்பினாள்اِلَیْهِنَّஅவர்களிடம்وَ اَعْتَدَتْமேலும் அவள் தயார் செய்தாள்لَهُنَّஅவர்களுக்காகمُتَّكَاًசாய்ந்து அமரும் இருக்கைகளைوَّ اٰتَتْமேலும் அவள் கொடுத்தாள்كُلَّஒவ்வொருوَاحِدَةٍஒருத்திக்கும்مِّنْهُنَّஅவர்களில்سِكِّیْنًاஒரு கத்தியைوَّ قَالَتِமேலும் அவள் கூறினாள்اخْرُجْவெளியே வருவீராகعَلَیْهِنَّ ۚஅவர்கள் முன்فَلَمَّاஆக, எப்போதுرَاَیْنَهٗۤஅவர்கள் அவரைப் பார்த்தார்களோاَكْبَرْنَهٗஅவர்கள் அவரை வியந்தார்கள்وَ قَطَّعْنَமேலும் அவர்கள் அறுத்துக் கொண்டார்கள்اَیْدِیَهُنَّதங்களது கைகளைوَ قُلْنَமேலும் அவர்கள் கூறினார்கள்حَاشَதூய்மையானவன்لِلّٰهِஅல்லாஹ்مَاஇல்லைهٰذَاஇவர்بَشَرًا ؕஒரு மனிதர்اِنْஇல்லைهٰذَاۤஇவர்اِلَّاதவிரمَلَكٌஒரு வானவர்كَرِیْمٌகண்ணியமிக்க
அப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
ثُمَّபிறகுبَدَاதோன்றியதுلَهُمْஅவர்களுக்குمِّنْۢஇருந்துبَعْدِபின்புمَاஎவற்றைرَاَوُاஅவர்கள் கண்டார்களோالْاٰیٰتِஅத்தாட்சிகளைلَیَسْجُنُنَّهٗநிச்சயமாக அவனைச் சிறையிலிடحَتّٰیவரைحِیْنٍ۠ஒரு காலம்
அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).
அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.
(சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக; மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்).
(“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
(இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.
இன்னும், அரசர் கூறினார்: “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) “நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்” என்று கூறினார்.
யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
وَ جَآءَமேலும் வந்தனர்اِخْوَةُசகோதரர்கள்یُوْسُفَயூஸுஃபுடையفَدَخَلُوْاபின்பு அவர்கள் நுழைந்தனர்عَلَیْهِஅவரிடம்فَعَرَفَهُمْஅவர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டார்وَ هُمْஅவர்களோلَهٗஅவரைمُنْكِرُوْنَஅடையாளம் காணவில்லை
(பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்,
(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) “உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் “சிறந்தவன்” என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
وَ قَالَமேலும் அவர் கூறினார்لِفِتْیٰنِهِதன் பணியாளர்களிடம்اجْعَلُوْاவைத்துவிடுங்கள்بِضَاعَتَهُمْஅவர்களின் பொருட்களைفِیْஉள்ளேرِحَالِهِمْஅவர்களின் பொதிகளில்لَعَلَّهُمْஅதனால் அவர்கள்یَعْرِفُوْنَهَاۤஅதனை அடையாளம் காண்பார்கள்اِذَاபோதுانْقَلَبُوْۤاஅவர்கள் திரும்பிச் சென்றاِلٰۤیநோக்கிاَهْلِهِمْதங்கள் குடும்பத்தாரைلَعَلَّهُمْஅதனால் அவர்கள்یَرْجِعُوْنَதிரும்பி வருவார்கள்
வ கால லிFபித்யானிஹிஜ் 'அலூ Bபிளா'அதஹும் Fபீ ரிஹாலிஹிம் ல'அல்லஹும் யஃரிFபூனஹா இதன் கலBபூ இலா அஹ்லிஹிம் ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, “அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடும்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார்.
(பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யுஸுஃப்); அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்” என்று (இரகசியமாகக்) கூறினார்.
فَبَدَاَஎனவே அவர் தொடங்கினார்بِاَوْعِیَتِهِمْஅவர்களின் பைகளைقَبْلَமுன்னதாகوِعَآءِபைக்குاَخِیْهِதன் சகோதரருடையثُمَّபின்னர்اسْتَخْرَجَهَاஅதை அவர் வெளியே எடுத்தார்مِنْஇருந்துوِّعَآءِபையின்اَخِیْهِ ؕதன் சகோதரருடையكَذٰلِكَஇவ்வாறாகவேكِدْنَاநாம் திட்டம் வகுத்துக் கொடுத்தோம்لِیُوْسُفَ ؕயூஸுஃபுக்காகمَاஇல்லைكَانَஇருக்கவில்லைلِیَاْخُذَஅவர் பிடித்து வைத்துக் கொள்ளاَخَاهُதன் சகோதரரைفِیْஇல்دِیْنِசட்டத்தின்الْمَلِكِஅரசனுடையاِلَّاۤதவிரاَنْஎனیَّشَآءَநாடினால்اللّٰهُ ؕஅல்லாஹ்نَرْفَعُநாம் உயர்த்துகிறோம்دَرَجٰتٍஅந்தஸ்துகளில்مَّنْஎவரைنَّشَآءُ ؕநாம் நாடுகிறோமோوَ فَوْقَமேலும் மேலாகكُلِّஒவ்வொருذِیْஉடையعِلْمٍஅறிவுعَلِیْمٌநன்கு அறிந்தவன்
ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய பொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம் (சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!
(அப்போது) அவர்கள், “இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்” என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் “நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்” என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.
அவர்கள் (யூஸுஃபை நோக்கி), (இந்நாட்டின் அதிபதி) அஜீஸே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும்; நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வேரில் ஒருவராகவே காண்கிறோம்” என்று கூறினார்கள்.
Fபலம்மஸ் தய்'அஸூ மின்ஹு கலஸூ னஜிய்யன் கால கBபீருஹும் அலம் தஃலமூன் அன்ன அBபாகும் கத் அகத 'அலய்கும் மவ்திகம் மினல் லாஹி வ மின் கBப்லு மா Fபர்ரத்தும் Fபீ யூஸுFப Fபலன் அBப்ரஹல் அர்ள ஹத்தா யாதன லீ அBபீ அவ் யஹ்குமல் லாஹு லீ வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களுக்குள் பெரியவர் சொன்னார்: நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.
وَ تَوَلّٰیமேலும் அவர் விலகிச் சென்றார்عَنْهُمْஅவர்களிடமிருந்துوَ قَالَமேலும் அவர் கூறினார்یٰۤاَسَفٰیஅந்தோ என் துக்கமேعَلٰیமீதுیُوْسُفَயூஸுஃபின்وَ ابْیَضَّتْமேலும் வெளுத்தனعَیْنٰهُஅவருடைய இரு கண்கள்مِنَஇருந்துالْحُزْنِகவலையினால்فَهُوَஎனவே அவர்كَظِیْمٌதுக்கத்தை அடக்கிக் கொண்டவர்
பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.
(இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
“என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்” என்றும் கூறினார்.
அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள்.
قَالَஅவர் கூறினார்هَلْஎன்னعَلِمْتُمْநீங்கள் அறிந்தீர்கள்مَّاஎதைفَعَلْتُمْநீங்கள் செய்தீர்கள்بِیُوْسُفَயூஸுபுக்குوَ اَخِیْهِமற்றும் அவரது சகோதரருக்குاِذْபோதுاَنْتُمْநீங்கள்جٰهِلُوْنَஅறியாதவர்களாக
கால ஹல் 'அலிம்தும் மா Fப'அல்தும் Bபி யூஸுFப வ அகீஹி இத் அன்தும் ஜாஹிலூன்
(அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார்.
(அப்போது அவர்கள்) “நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” என்று கூறினார்.
வ லம்மா Fபஸலதில் 'ஈரு கால அBபூஹும் இன்னீ ல அஜிது ரீஹ யூஸுFப லவ் லா அன் துFபன்னிதூன்
(அவர்களுடைய) ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே!” என்றார்.
(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார்.
“மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார், எனினும் அவர் இறந்து விடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில் (அவர் இறந்தபின்) “அவருக்குப் பின் எந்த ரஸூலையும் (தூதரையும்) அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்பு மீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான்.