صحيح البخاري

91. كتاب التعبير

ஸஹீஹுல் புகாரி

91. கனவுகளின் விளக்கம்

باب أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْوَحْىِ الرُّؤْيَا الصَّالِحَةُ
அல்லாஹ்வின் தூதருக்கு (ஸல்) வஹீ (இறைச்செய்தி) தொடங்கியது நல்ல கனவுகளின் வடிவத்தில்
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ،‏.‏ وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، قَالَ الزُّهْرِيُّ فَأَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْوَحْىِ الرُّؤْيَا الصَّادِقَةُ فِي النَّوْمِ، فَكَانَ لاَ يَرَى رُؤْيَا إِلاَّ جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ، فَكَانَ يَأْتِي حِرَاءً فَيَتَحَنَّثُ فِيهِ ـ وَهْوَ التَّعَبُّدُ ـ اللَّيَالِيَ ذَوَاتِ الْعَدَدِ، وَيَتَزَوَّدُ لِذَلِكَ ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيجَةَ فَتُزَوِّدُهُ لِمِثْلِهَا، حَتَّى فَجِئَهُ الْحَقُّ وَهْوَ فِي غَارِ حِرَاءٍ فَجَاءَهُ الْمَلَكُ فِيهِ فَقَالَ اقْرَأْ‏.‏ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ فَقُلْتُ مَا أَنَا بِقَارِئٍ فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي‏.‏ فَقَالَ اقْرَأْ‏.‏ فَقُلْتُ مَا أَنَا بِقَارِئٍ‏.‏ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ اقْرَأْ‏.‏ فَقُلْتُ مَا أَنَا بِقَارِئٍ‏.‏ فَغَطَّنِي الثَّالِثَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدُ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ‏"‏‏.‏ حَتَّى بَلَغَ ‏{‏مَا لَمْ يَعْلَمْ‏}‏ فَرَجَعَ بِهَا تَرْجُفُ بَوَادِرُهُ حَتَّى دَخَلَ عَلَى خَدِيجَةَ فَقَالَ ‏"‏ زَمِّلُونِي زَمِّلُونِي ‏"‏‏.‏ فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ فَقَالَ ‏"‏ يَا خَدِيجَةُ مَا لِي ‏"‏‏.‏ وَأَخْبَرَهَا الْخَبَرَ وَقَالَ ‏"‏ قَدْ خَشِيتُ عَلَى نَفْسِي ‏"‏‏.‏ فَقَالَتْ لَهُ كَلاَّ أَبْشِرْ، فَوَاللَّهِ لاَ يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَصْدُقُ الْحَدِيثَ، وَتَحْمِلُ الْكَلَّ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ‏.‏ ثُمَّ انْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ الْعُزَّى بْنِ قُصَىٍّ ـ وَهْوَ ابْنُ عَمِّ خَدِيجَةَ أَخُو أَبِيهَا، وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ يَكْتُبُ الْكِتَابَ الْعَرَبِيَّ فَيَكْتُبُ بِالْعَرَبِيَّةِ مِنَ الإِنْجِيلِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ، وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ ـ فَقَالَتْ لَهُ خَدِيجَةُ أَىِ ابْنَ عَمِّ اسْمَعْ مِنِ ابْنِ أَخِيكَ‏.‏ فَقَالَ وَرَقَةُ ابْنَ أَخِي مَاذَا تَرَى فَأَخْبَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم مَا رَأَى فَقَالَ وَرَقَةُ هَذَا النَّامُوسُ الَّذِي أُنْزِلَ عَلَى مُوسَى، يَا لَيْتَنِي فِيهَا جَذَعًا أَكُونُ حَيًّا، حِينَ يُخْرِجُكَ قَوْمُكَ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَوَمُخْرِجِيَّ هُمْ ‏"‏‏.‏ فَقَالَ وَرَقَةُ نَعَمْ، لَمْ يَأْتِ رَجُلٌ قَطُّ بِمَا جِئْتَ بِهِ إِلاَّ عُودِيَ، وَإِنْ يُدْرِكْنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا‏.‏ ثُمَّ لَمْ يَنْشَبْ وَرَقَةُ أَنْ تُوُفِّيَ، وَفَتَرَ الْوَحْىُ فَتْرَةً حَتَّى حَزِنَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِيمَا بَلَغَنَا حُزْنًا غَدَا مِنْهُ مِرَارًا كَىْ يَتَرَدَّى مِنْ رُءُوسِ شَوَاهِقِ الْجِبَالِ، فَكُلَّمَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ لِكَىْ يُلْقِيَ مِنْهُ نَفْسَهُ، تَبَدَّى لَهُ جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا‏.‏ فَيَسْكُنُ لِذَلِكَ جَأْشُهُ وَتَقِرُّ نَفْسُهُ فَيَرْجِعُ، فَإِذَا طَالَتْ عَلَيْهِ فَتْرَةُ الْوَحْىِ غَدَا لِمِثْلِ ذَلِكَ، فَإِذَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ تَبَدَّى لَهُ جِبْرِيلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ‏.‏ قَالَ ابْنُ عَبَّاسٍ ‏{‏فَالِقُ الإِصْبَاحِ‏}‏ ضَوْءُ الشَّمْسِ بِالنَّهَارِ، وَضَوْءُ الْقَمَرِ بِاللَّيْلِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (வஹீ எனும்) இறைச்செய்தியின் ஆரம்பம், உறக்கத்தில் காணும் உண்மையான கனவுகளாகவே அமைந்தன. அவர்கள் எந்தக் கனவைக் கண்டாலும் அது விடியற்காலையைப் போன்று (தெளிவாகப்) பலிதமாகும். பின்னர் தனிமை அவர்கள் மீது விருப்பமாக்கப்பட்டது. அவர்கள் 'ஹிரா' குகைக்குச் சென்று, பல இரவுகள் அங்கே தஹன்னுத் (வணக்கம்) புரிவார்கள். அதற்காக (உணவு) முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வார்கள். பின்னர் (தம் மனைவி) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, அதேபோன்று (அடுத்த முறை செல்வதற்கும்) ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள்.

அவர்கள் ஹிரா குகையில் இருந்தபோது அவர்களிடம் சத்தியம் (வஹீ) வந்தது. வானவர் அவர்களிடம் வந்து, "ஓதுவீராக" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் ஓதத் தெரிந்தவன் அல்லன்" என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அவர் என்னைப் பிடித்து, என்னால் தாங்க முடியாத அளவு இருக்கும் வரை இறுகக் கட்டித் தழுவினார். பிறகு என்னை விட்டுவிட்டு 'ஓதுவீராக' என்றார். நான் 'ஓதத் தெரிந்தவன் அல்லன்' என்றேன். இரண்டாம் முறையும் அவர் என்னைப் பிடித்து, என்னால் தாங்க முடியாத அளவு இருக்கும் வரை இறுகக் கட்டித் தழுவினார். பிறகு என்னை விட்டுவிட்டு 'ஓதுவீராக' என்றார். நான் 'ஓதத் தெரிந்தவன் அல்லன்' என்றேன். மூன்றாம் முறையும் அவர் என்னைப் பிடித்து, என்னால் தாங்க முடியாத அளவு இருக்கும் வரை இறுகக் கட்டித் தழுவினார். பிறகு என்னை விட்டுவிட்டு,

'படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை 'அலக்' (கருக்கட்டி)யிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் மாபெரும் கொடையாளி.. அவன் (மனிதனுக்கு) அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்' (திருக்குர்ஆன் 96:1-5)

என்று கூறினார்."

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைச்செய்தியுடன் திரும்பினார்கள். (பயத்தால்) அவர்களின் தோள் சதைகள் துடித்தன. அவர்கள் கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து, "என்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்!" என்றார்கள். அவர்களின் நடுக்கம் நீங்கும் வரை அவரைப் போர்த்தினார்கள். பிறகு அவர்கள் கதீஜா (ரலி) அவர்களிடம், "கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டு, நடந்த செய்தியைத் தெரிவித்து, "நான் என் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள்.

அதற்குக் கதீஜா (ரலி) அவர்கள், "அப்படியில்லை! (பயப்படாதீர்கள்). நற்செய்தியையே எதிர்பருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டான். தாங்கள் உறவுகளைப் பேணுகிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்கு உதவுகிறீர்கள்; விருந்தினரை உபசரிக்கிறீர்கள்; சோதனைகளில் (மக்களுக்கு) உதவுகிறீர்கள்" என்று கூறினார்கள்.

பிறகு கதீஜா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களை வரகா இப்னு நவ்ஃபல் இப்னு அஸத் இப்னு அப்துல் உஸ்ஸா இப்னு குஸை என்பவரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் கதீஜாவின் தந்தையுடைய சகோதரர் (பெரியப்பா) மகன் ஆவார். அவர் அறியாமைக் காலத்தில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவராகவும், அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இருந்தார். அவர் இன்ஜீல் வேதத்திலிருந்து அல்லாஹ் நாடியதை அரபு மொழியில் எழுதுபவராக இருந்தார். அவர் கண்பார்வை இழந்த முதியவராக இருந்தார்.

அவரிடம் கதீஜா (ரலி), "என் தந்தையின் சகோதரர் மகனே! உங்கள் சகோதரர் மகன் கூறுவதைக் கேளுங்கள்" என்றார். வரகா அவரிடம், "என் சகோதரர் மகனே! நீர் என்ன காண்கிறீர்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தாம் கண்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.

அப்போது வரகா, "மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் அனுப்பிய அதே 'நாமஸ்' (ஜிப்ரீல் எனும் வானவர்) தான் இவர். உமது சமுதாயத்தினர் உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றும் போது நான் உயிருடனும் வாலிபராகவும் இருக்க வேண்டுமே!" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் என்னை வெளியேற்றுவார்களா?" என்று கேட்டார்கள். அதற்கு வரகா, "ஆம். நீர் கொண்டு வந்ததைப் போன்று கொண்டு வந்த எவரும் பகைக்கப்படாமல் இருந்ததில்லை. உமது (சமுதாயத்தினரின் எதிர்ப்பை எதிர்கொள்ளும்) காலத்தை நான் அடைந்தால், உமக்கு நான் வலுவான உதவி செய்வேன்" என்று கூறினார்.

பிறகு வரகா விரைவிலேயே இறந்துவிட்டார். வஹீ வருவது சிறிது காலம் தடைபட்டது. இதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையுற்றார்கள். நமக்கு எட்டிய செய்தியின்படி, அவர்கள் கவலையின் காரணமாகப் பலமுறை மலை உச்சிகளிலிருந்து கீழே விழுந்து விடச் சென்றார்கள் (அதிக கவலையால் தற்கொலை எண்ணத்துடன்). அவர்கள் மலையுச்சியிலிருந்து கீழே விழச் செல்லும் போதெல்லாம் அவர்களுக்கு ஜிப்ரீல் தோன்றி, "முஹம்மதே! நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் உண்மையான தூதர் தான்" என்று கூறுவார். இதனால் அவர்களின் மனம் அமைதியுற்று, அவர்களின் பதற்றம் தணியும். உடனே அவர்கள் திரும்பி விடுவார்கள். வஹீ வருவது நீண்ட காலத்திற்குத் தடைபட்டால், மீண்டும் அதுபோன்று செய்வார்கள். அவர்கள் மலை உச்சிக்குச் செல்லும் போது அவர்களுக்கு ஜிப்ரீல் தோன்றி, முன்பு கூறியது போன்றே கூறுவார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (திருக்குர்ஆன் 6:96 வசனத்தில் உள்ள) 'ஃபாலிக்குல் இஸ் பாஹ்' (விடியலைப் பிளப்பவன்) என்பதற்கு, பகலில் சூரியனின் ஒளி என்றும் இரவில் நிலவின் ஒளி என்றும் விளக்கம் அளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب رُؤْيَا الصَّالِحِينَ
நல்லோர்களின் கனவுகள்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ الرَّجُلِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏ ‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு நல்ல மனிதர் காணும் நற்கனவு (உண்மையான கனவு), நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الرُّؤْيَا مِنَ اللَّهِ
நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து வருகின்றன
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى ـ هُوَ ابْنُ سَعِيدٍ ـ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الرُّؤْيَا مِنَ اللَّهِ، وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ ‏ ‏‏.‏
அபூ கதாதா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நற்கனவு அல்லாஹ்விடமிருந்தாகும்; கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்தாகும்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ إِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يُحِبُّهَا فَإِنَّمَا هِيَ مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا، وَلْيُحَدِّثْ بِهَا، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ، فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا، وَلاَ يَذْكُرْهَا لأَحَدٍ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ ‏ ‏‏.‏
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் எவரேனும் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். ஆகவே, அதற்காக அவர் அல்லாஹ்வைப் புகழட்டும்; மேலும் அதை (நம்பிக்கைக்குரிய பிறரிடம்) கூறட்டும். ஆனால், அவர் அதற்கு மாற்றமாக தமக்கு விருப்பமில்லாத ஒன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்து வந்ததாகும். ஆகவே, அதன் தீங்கிலிருந்து அவர் (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடட்டும்; மேலும் அதை எவரிடமும் கூற வேண்டாம்; ஏனெனில், நிச்சயம் அது அவருக்குத் தீங்கிழைக்காது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الرُّؤْيَا الصَّالِحَةُ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ
பாடம்: நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ـ وَأَثْنَى عَلَيْهِ خَيْرًا لَقِيتُهُ بِالْيَمَامَةِ ـ عَنْ أَبِيهِ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الرُّؤْيَا الصَّالِحَةُ مِنَ اللَّهِ، وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا حَلَمَ فَلْيَتَعَوَّذْ مِنْهُ وَلْيَبْصُقْ عَنْ شِمَالِهِ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ ‏ ‏‏.‏ وَعَنْ أَبِيهِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ‏.‏
அபூ கத்தாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருகிறது; (தீய) கனவு ஷைத்தானிடமிருந்து வருகிறது. எனவே, எவரேனும் (தீய) கனவு கண்டால், அதிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடட்டும்; மேலும் தனது இடதுபுறம் (வெறுப்புடன்) உமிழட்டும். ஏனெனில் நிச்சயமாக அது அவருக்குத் தீங்கு செய்யாது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏ ‏‏.‏
உபாதா பின் அஸ்ஸாமித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இறைநம்பிக்கையாளரின் (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒரு பாகமாகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏ ‏‏.‏ رَوَاهُ ثَابِتٌ وَحُمَيْدٌ وَإِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ وَشُعَيْبٌ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இறைநம்பிக்கையாளரின் கனவு (மெய்யான கனவு), நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒரு பாகமாகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ الرُّؤْيَا الصَّالِحَةُ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏ ‏‏.‏
அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நல்ல கனவு என்பது நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒரு பகுதியாகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْمُبَشِّرَاتِ
பாடம் : அல்-முபஷ்ஷிராத்
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ لَمْ يَبْقَ مِنَ النُّبُوَّةِ إِلاَّ الْمُبَشِّرَاتُ ‏"‏‏.‏ قَالُوا وَمَا الْمُبَشِّرَاتُ قَالَ ‏"‏ الرُّؤْيَا الصَّالِحَةُ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நபித்துவத்தில் நற்செய்திகளைத் தவிர (வேறெதுவும்) எஞ்சியிருக்கவில்லை" என்று கூற நான் கேட்டேன். (அப்போது அங்கிருந்த நபித்தோழர்கள்) "நற்செய்திகள் என்றால் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு (நபி ஸல் அவர்கள்), "நல்ல கனவு" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب التَّوَاطُؤُ عَلَى الرُّؤْيَا
பாடம்: கனவுகள் ஒத்திருத்தல்
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنه ـ أَنَّ أُنَاسًا، أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، وَأَنَّ أُنَاسًا أُرُوا أَنَّهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ الْتَمِسُوهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
சிலருக்கு லைலத்துல் கத்ர் (ரமலான் மாதத்தின்) கடைசி ஏழு நாட்களில் இருப்பதாகவும், மேலும் சிலருக்கு அது கடைசிப் பத்து நாட்களில் இருப்பதாகவும் (கனவில்) காண்பிக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "(ரமலானின்) கடைசி ஏழு நாட்களில் அதைத் தேடுங்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب رُؤْيَا أَهْلِ السُّجُونِ وَالْفَسَادِ وَالشِّرْكِ
சிறைக்கைதிகள், தீயவர்கள் மற்றும் முஷ்ரிக்குகளின் கனவுகள்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَأَبَا، عُبَيْدٍ أَخْبَرَاهُ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ لَوْ لَبِثْتُ فِي السِّجْنِ مَا لَبِثَ يُوسُفُ، ثُمَّ أَتَانِي الدَّاعِي لأَجَبْتُهُ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் தங்கியிருந்த காலம் அளவுக்கு நான் சிறையில் தங்கியிருந்து, பிறகு (அரசரின்) தூதுவர் என்னிடம் வந்திருந்தால், (சிறையிலிருந்து வெளியேறுவதற்கான) அவரது அழைப்பை நான் ஏற்றுக்கொண்டிருப்பேன்.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَنْ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْمَنَامِ
பாடம்: நபி (ஸல்) அவர்களைக் கனவில் காண்பவர்
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَسَيَرَانِي فِي الْيَقَظَةِ، وَلاَ يَتَمَثَّلُ الشَّيْطَانُ بِي ‏ ‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ ابْنُ سِيرِينَ إِذَا رَآهُ فِي صُورَتِهِ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன், "எவர் என்னைக் கனவில் காண்கிறாரோ அவர் என்னை விழித்திருக்கும்போதும் காண்பார் (அதாவது, அவரது கனவின் உண்மைப் பலனை அடைவார் அல்லது மறுமையில் அவரைக் காண்பார் அல்லது அவரது சுன்னாவைப் பின்பற்றுவதன் மூலம் வழிகாட்டுதலைப் பெறுவார்); மேலும், ஷைத்தான் என் உருவத்தில் (என் உண்மையான தோற்றத்தில்) காட்சியளிக்க முடியாது."

அபூ அப்துல்லாஹ் கூறினார்கள், "இப்னு சீரீன் கூறினார்கள், 'அவர் நபி (ஸல்) அவர்களை அவர்களின் (உண்மையான) உருவத்தில் கண்டால் மட்டுமே.'"
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُخْتَارٍ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَخَيَّلُ بِي، وَرُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏ ‏‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவர் என்னைக் கனவில் கண்டாரோ, நிச்சயமாக அவர் என்னையே கண்டார் (அதாவது, அது ஷைத்தானின் உருமாற்றம் அல்ல). ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க முடியாது. மேலும், ஓர் இறைநம்பிக்கையாளரின் கனவு, இறைத் தூதுத்துவத்தின் நாற்பத்தி ஆறு பாகங்களில் ஒரு பாகமாகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ الرُّؤْيَا الصَّالِحَةُ مِنَ اللَّهِ، وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ، فَمَنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلْيَنْفِثْ عَنْ شِمَالِهِ ثَلاَثًا، وَلْيَتَعَوَّذْ مِنَ الشَّيْطَانِ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ، وَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَرَاءَى بِي ‏ ‏‏.‏
அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருகிறது, ஒரு கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருகிறது. ஆகவே, எவரேனும் தமக்கு விருப்பமில்லாத ஒன்றைக் (கனவில்) கண்டால், அவர் தமது இடது புறம் மும்முறை (உமிழ்நீரின்றி) இலேசாகத் துப்பட்டும், மேலும் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும்; ஏனெனில், அது அவருக்குத் தீங்கு செய்யாது, மேலும், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க முடியாது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا خَالِدُ بْنُ خَلِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَبُو سَلَمَةَ قَالَ أَبُو قَتَادَةَ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ رَآنِي فَقَدْ رَأَى الْحَقَّ ‏ ‏‏.‏ تَابَعَهُ يُونُسُ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ
அபூ கத்தாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் என்னைக் (கனவில்) காண்கிறாரோ அவர் நிச்சயமாக உண்மையையே கண்டார்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏مَنْ رَآنِي فَقَدْ رَأَى الْحَقَّ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَكَوَّنُنِي‏ ‏‏.‏
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) கூறினார்கள், 'எவர் என்னைக் (கனவில்) காண்கிறாரோ, அவர் (உண்மையான) சத்தியத்தையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க முடியாது.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب رُؤْيَا اللَّيْلِ
பாடம்: இரவுக் கனவு
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ أُعْطِيتُ مَفَاتِيحَ الْكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَبَيْنَمَا أَنَا نَائِمٌ الْبَارِحَةَ إِذْ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ حَتَّى وُضِعَتْ فِي يَدِي ‏ ‏‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ فَذَهَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنْتُمْ تَنْتَقِلُونَهَا‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனக்கு (குறைந்த சொற்களில் ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்தும்) செறிவான பேச்சின் திறவுகோல்களும், (பகைவர்களின் உள்ளங்களில்) திகிலூட்டப்படுவதன் மூலம் வெற்றியும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நான் நேற்றிரவு உறங்கிக் கொண்டிருந்தபோது, பூமியின் புதையல்களின் திறவுகோல்கள் என்னிடம் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வுலகை விட்டுப்) பிரிந்துவிட்டார்கள். இப்போது நீங்கள் அந்தப் புதையல்களை (அதாவது, பூமியின் செல்வங்களை) இடத்திற்கு இடம் கொண்டு செல்கிறீர்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ أُرَانِي اللَّيْلَةَ عِنْدَ الْكَعْبَةِ فَرَأَيْتُ رَجُلاً آدَمَ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنْ أُدْمِ الرِّجَالِ، لَهُ لِمَّةٌ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنَ اللِّمَمِ، قَدْ رَجَّلَهَا تَقْطُرُ مَاءً، مُتَّكِئًا عَلَى رَجُلَيْنِ ـ أَوْ عَلَى عَوَاتِقِ رَجُلَيْنِ ـ يَطُوفُ بِالْبَيْتِ، فَسَأَلْتُ مَنْ هَذَا فَقِيلَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ‏.‏ ثُمَّ إِذَا أَنَا بِرَجُلٍ جَعْدٍ قَطَطٍ أَعْوَرِ الْعَيْنِ الْيُمْنَى كَأَنَّهَا عِنَبَةٌ طَافِيَةٌ، فَسَأَلْتُ مَنْ هَذَا فَقِيلَ الْمَسِيحُ الدَّجَّالُ ‏ ‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இன்றிரவு (கனவில்) கஅபாவிற்கு அருகில் நான் எனக்குக் காட்டப்பட்டேன். அப்போது அங்கு மாநிறமுடைய ஒரு மனிதரைக் கண்டேன்; மாநிறமுடைய ஆண்களில் நீங்கள் காணக்கூடிய மிகச் சிறந்த அழகராக அவர் இருந்தார். அவருக்குத் தோள்கள் வரை தொங்கும் தலைமுடி இருந்தது; அத்தகைய முடியுடையவர்களில் நீங்கள் காணக்கூடிய மிகச் சிறந்த அழகராக அது இருந்தது. அவர் தலை வாரியிருந்தார்; அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அவர் இரு மனிதர்கள் மீது - அல்லது இருவரின் தோள்கள் மீது - சாய்ந்தவாறு கஅபாவைச் சுற்றி வலம் (தவாஃப்) வந்து கொண்டிருந்தார். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். ‘(இவர்) மர்யமின் மகன் மஸீஹ்’ என்று பதிலளிக்கப்பட்டது. பிறகு நான் மிகவும் சுருண்ட முடியும், வலது கண் குருடாகவும் இருந்த ஒரு மனிதரை நான் கண்டேன். அவனது கண் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்று இருந்தது. நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். ‘(இவர்) மஸீஹ் தஜ்ஜால்’ என்று பதிலளிக்கப்பட்டது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، كَانَ يُحَدِّثُ أَنَّ رَجُلاً، أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي أُرِيتُ اللَّيْلَةَ فِي الْمَنَامِ، وَسَاقَ الْحَدِيثَ‏.‏ وَتَابَعَهُ سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ وَسُفْيَانُ بْنُ حُسَيْنٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ وَقَالَ الزُّبَيْدِيُّ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ أَنَّ ابْنَ عَبَّاسٍ أَوْ أَبَا هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ وَقَالَ شُعَيْبٌ وَإِسْحَاقُ بْنُ يَحْيَى عَنِ الزُّهْرِيِّ كَانَ أَبُو هُرَيْرَةَ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَ مَعْمَرٌ لاَ يُسْنِدُهُ حَتَّى كَانَ بَعْدُ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நேற்றிரவு எனக்கு ஒரு கனவில் (சில காட்சிகள்) காட்டப்பட்டன..." என்று கூறினார். பிறகு (இப்னு அப்பாஸ்) அந்த ஹதீஸை (முழுமையாக) விவரித்தார்கள்.

(இந்த ஹதீஸை யூனுஸ் அறிவித்ததைப் போலவே) சுலைமான் இப்னு கஸீர், இப்னு அஃகி அஸ்-ஸுஹ்ரி, மற்றும் சுஃப்யான் இப்னு ஹுஸைன் ஆகியோர் அஸ்-ஸுஹ்ரி வழியாக, உபைதுல்லாஹ் வழியாக, இப்னு அப்பாஸ் வழியாக, நபி (ஸல்) அவர்களிடமிருந்து (அறிவித்ததன் மூலம்) பின்தொடர்ந்தனர்.

அஸ்-ஸுபைதி, அஸ்-ஸுஹ்ரி வழியாக, உபைதுல்லாஹ் வழியாக, இப்னு அப்பாஸ் அல்லது அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (அறிவித்ததாக) கூறினார்.

ஷுஐப் மற்றும் இஸ்ஹாக் இப்னு யஹ்யா ஆகியோர் அஸ்-ஸுஹ்ரி வழியாக, அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள் என்று கூறினர். மஃமர் (இந்த ஹதீஸை ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு) இணைக்கவில்லை, பின்னர் (அவர் அதை நபி (ஸல்) அவர்களுக்கு) இணைக்கும் வரை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الرُّؤْيَا بِالنَّهَارِ
பகல் நேரத்தில் கனவுகள்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، وَكَانَتْ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، فَدَخَلَ عَلَيْهَا يَوْمًا فَأَطْعَمَتْهُ، وَجَعَلَتْ تَفْلِي رَأْسَهُ، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ اسْتَيْقَظَ وَهْوَ يَضْحَكُ‏.‏ قَالَتْ فَقُلْتُ مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ، يَرْكَبُونَ ثَبَجَ هَذَا الْبَحْرِ، مُلُوكًا عَلَى الأَسِرَّةِ أَوْ مِثْلَ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ ‏"‏‏.‏ شَكَّ إِسْحَاقُ‏.‏ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، فَدَعَا لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ وَضَعَ رَأْسَهُ ثُمَّ اسْتَيْقَظَ وَهْوَ يَضْحَكُ‏.‏ فَقُلْتُ مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ ‏"‏‏.‏ كَمَا قَالَ فِي الأُولَى‏.‏ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ‏.‏ قَالَ ‏"‏ أَنْتِ مِنَ الأَوَّلِينَ ‏"‏‏.‏ فَرَكِبَتِ الْبَحْرَ فِي زَمَانِ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنَ الْبَحْرِ، فَهَلَكَتْ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரழி) அவர்களிடம் செல்வது வழக்கம். அவர்கள் உபாதா பின் அஸ்-ஸாமித் (ரழி) அவர்களின் மனைவியாவார்கள். ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்தார்; மேலும், அன்னாரின் தலையில் பேன் பார்க்கலானார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கினார்கள்; பிறகு சிரித்தவாறு விழித்தார்கள்.

உம்மு ஹராம் (ரழி) கூறினார்கள்: "நான், 'அல்லாஹ்வின் தூதரே! தங்களைச் சிரிக்க வைத்தது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சமுதாயத்தாரில் சிலர், அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்களாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டார்கள். அவர்கள் இந்தக் கடலின் நடுவே, சிம்மாசனங்களில் வீற்றிருக்கும் அரசர்கள் என்றோ - அல்லது அரசர்களைப் போன்றோ - சவாரி செய்கிறார்கள்' என்று கூறினார்கள்." (இங்கு 'அரசர்கள்' என்றா அல்லது 'அரசர்களைப் போன்று' என்றா என்பதில் அறிவிப்பாளர் இஸ்ஹாக் அவர்களுக்கு ஐயமேற்பட்டது).

உம்மு ஹராம் (ரழி) கூறினார்கள்: "நான், 'அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவராக என்னையும் ஆக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினேன். அவர்களுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தம் தலையை வைத்து (உறங்கி)னார்கள்; பிறகு சிரித்தவாறு விழித்தார்கள்.

(உம்மு ஹராம் (ரழி) கூறினார்கள்): "நான், 'அல்லாஹ்வின் தூதரே! தங்களைச் சிரிக்க வைத்தது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சமுதாயத்தாரில் சிலர், அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டார்கள்' என்று முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள். நான், 'அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவராக என்னையும் ஆக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ முதலாவதாகச் செல்பவர்களுடன் இருப்பாய்' என்றார்கள்."

பிறகு முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் உம்மு ஹராம் (ரழி) கடல் பயணம் மேற்கொண்டார்கள். கடலிலிருந்து (கரைக்கு) வந்தபோது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب رُؤْيَا النِّسَاءِ
பாடம்: பெண்களின் கனவு
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ أُمَّ الْعَلاَءِ ـ امْرَأَةً مِنَ الأَنْصَارِ بَايَعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ـ أَخْبَرَتْهُ أَنَّهُمُ اقْتَسَمُوا الْمُهَاجِرِينَ قُرْعَةً‏.‏ قَالَتْ فَطَارَ لَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، وَأَنْزَلْنَاهُ فِي أَبْيَاتِنَا، فَوَجِعَ وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ، فَلَمَّا تُوُفِّيَ غُسِّلَ وَكُفِّنَ فِي أَثْوَابِهِ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ أَكْرَمَهُ ‏"‏‏.‏ فَقُلْتُ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ فَمَنْ يُكْرِمُهُ اللَّهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَمَّا هُوَ فَوَاللَّهِ لَقَدْ جَاءَهُ الْيَقِينُ، وَاللَّهِ إِنِّي لأَرْجُو لَهُ الْخَيْرَ، وَوَاللَّهِ مَا أَدْرِي وَأَنَا رَسُولُ اللَّهِ مَاذَا يُفْعَلُ بِي ‏"‏‏.‏ فَقَالَتْ وَاللَّهِ لاَ أُزَكِّي بَعْدَهُ أَحَدًا أَبَدًا‏.‏
அன்சாரிப் பெண்மணியும் நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் (உறுதிமொழி) செய்தவருமான உம்முல் அலா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்) எங்களிடையே சீட்டுக் குலுக்கல் மூலம் பங்கிடப்பட்டார்கள். அதில் உஸ்மான் பின் மழ்ஊன் (ரழி) அவர்கள் எங்களுக்குக் கிடைத்தார்கள். நாங்கள் அவர்களை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர்கள் நோயுற்றார்கள். அந்நோயிலேயே அவர்கள் மரணமும் அடைந்தார்கள். அவர்கள் இறந்த பின் குளிப்பாட்டப்பட்டு, அவர்களுடைய (சாதாரண) ஆடைகளிலேயே கஃபனிடப்பட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். நான் (இறந்த உடலைப் பார்த்து), 'அபூ ஸாயிப் அவர்களே! உங்கள் மீது அல்லாஹ்வின் ரஹ்மத் (கருணை) உண்டாகட்டும்! அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்' என்று கூறினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அவரைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள்.

நான், 'என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அல்லாஹ்வின் தூதரே! வேறு யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அவரைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவருக்கு உறுதியான நிலை (மரணம்) வந்துவிட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவருக்கு நன்மையையே விரும்புகிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதராக இருந்தும், எனக்கு என்ன செய்யப்படும் என்று எனக்கே தெரியாது.'

உம்முல் அலா (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்குப் பிறகு இனி ஒருபோதும் எவருடைய தூய்மைக்கும் நான் சான்று பகரமாட்டேன்.'"
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا وَقَالَ ‏"‏ مَا أَدْرِي مَا يُفْعَلُ بِهِ ‏"‏‏.‏ قَالَتْ وَأَحْزَنَنِي فَنِمْتُ، فَرَأَيْتُ لِعُثْمَانَ عَيْنًا تَجْرِي، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ ذَلِكَ عَمَلُهُ ‏"‏‏.‏
அஸ்-ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:

(முந்தைய அறிவிப்புத் தொடர்பாக) நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு (உஸ்மான் பின் மழ்ஊன் (ரழி) அவர்களுக்கு) என்ன செய்யப்படும் என்று எனக்குத் தெரியாது” எனக் கூறினார்கள். உம்முல் அலா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அது எனக்கு வருத்தத்தை அளித்தது; ஆகவே நான் உறங்கினேன். (கனவில்) உஸ்மான் அவர்களுக்கு ஓர் ஊற்று ஓடுவதைக் கண்டேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், ‘அதுதான் அவருடைய நற்செயல்’ என்று கூறினார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْحُلْمُ مِنَ الشَّيْطَانِ
பாடம்: கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا قَتَادَةَ الأَنْصَارِيّ َ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَفُرْسَانِهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ الرُّؤْيَا مِنَ اللَّهِ، وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا حَلَمَ أَحَدُكُمُ الْحُلُمَ يَكْرَهُهُ فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ وَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنْهُ، فَلَنْ يَضُرَّهُ ‏ ‏‏.‏
அபூ கத்தாதா அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (நபி (ஸல்) அவர்களின் தோழரும், அவர்களின் குதிரைப்படை வீரர்களில் ஒருவருமானவர்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: 'நற்கனவு அல்லாஹ்விடமிருந்து வருகிறது; கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருகிறது. ஆகவே, உங்களில் எவரேனும் தமக்கு விருப்பமில்லாத கனவைக் கண்டால், அவர் தமது இடதுபுறம் (சத்தமில்லாமல்) துப்பட்டும்; மேலும் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (அவ்வாறு செய்தால்) அது அவருக்குத் தீங்கிழைக்காது.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب اللَّبَنِ
பால் பற்றிய பாடம்
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ، فَشَرِبْتُ مِنْهُ، حَتَّى إِنِّي لأَرَى الرِّيَّ يَخْرُجُ مِنْ أَظْفَارِي، ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي ‏"‏‏.‏ يَعْنِي عُمَرَ‏.‏ قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الْعِلْمَ ‏"‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: “நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, (கனவில்) என்னிடம் பால் நிறைந்த ஒரு கிண்ணம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்து பருகினேன். எந்த அளவிற்கென்றால், அதன் ஈரம் என் நகங்களிலிருந்து வெளியேறுவதை நான் காணும் அளவிற்கு (பருகினேன்). பிறகு என்னிடம் மீதமிருந்ததை (நான்) உமர் (ரழி) அவர்களுக்குக் கொடுத்தேன்.”
மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இதற்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “(அது மார்க்க) அறிவாகும்” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا جَرَى اللَّبَنُ فِي أَطْرَافِهِ أَوْ أَظَافِيرِهِ
பாடம்: அவரது உறுப்புகளில் அல்லது நகங்களில் பால் பாய்ந்தால்...
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ، فَشَرِبْتُ مِنْهُ، حَتَّى إِنِّي لأَرَى الرِّيَّ يَخْرُجُ مِنْ أَطْرَافِي، فَأَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏"‏‏.‏ فَقَالَ مَنْ حَوْلَهُ فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الْعِلْمَ ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் உறங்கிக் கொண்டிருந்தபோது, (கனவில்) எனக்கு பால் நிறைந்த ஒரு கிண்ணம் கொடுக்கப்பட்டது. அதிலிருந்து நான் (முழுமையாக) அருந்தினேன்; (எந்த அளவிற்கென்றால்) அதன் ஈரம் என் விரல் நுனிகளிலிருந்து (மற்றும் உடலின் பிற உறுப்புகளிலிருந்து) வெளியேறுவதை நான் காணும் வரை. பிறகு, மீதமிருந்ததை நான் உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்களுக்குக் கொடுத்தேன்."

அவரைச் சுற்றியிருந்தவர்கள், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! (அந்தக் கனவைப் பற்றி) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "(அது மார்க்க) அறிவாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْقَمِيصِ فِي الْمَنَامِ
பாடம்: கனவில் சட்டை
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ بَيْنَمَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ يُعْرَضُونَ عَلَىَّ، وَعَلَيْهِمْ قُمُصٌ، مِنْهَا مَا يَبْلُغُ الثَّدْىَ، وَمِنْهَا مَا يَبْلُغُ دُونَ ذَلِكَ، وَمَرَّ عَلَىَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلَيْهِ قَمِيصٌ يَجُرُّهُ ‏"‏‏.‏ قَالُوا مَا أَوَّلْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الدِّينَ ‏"‏‏.‏
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, மக்கள் எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டார்கள். அவர்கள் சட்டைகளை அணிந்திருந்தார்கள். அவற்றில் சில மார்புகள் வரை இருந்தன; இன்னும் சில அதைவிடக் குறைவாக இருந்தன. (அப்போது) உமர் பின் அல்-கத்தாப் (ரழி) என்னைக் கடந்து சென்றார்கள். அவர் (தரையில்) இழுபடும் அளவுக்கு (நீளமான) ஒரு சட்டையை அணிந்திருந்தார்."

மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதற்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், "மார்க்கம் (தீன்)" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب جَرِّ الْقَمِيصِ فِي الْمَنَامِ
கனவில் சட்டையை இழுத்துச் செல்லுதல்
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ عُرِضُوا عَلَىَّ، وَعَلَيْهِمْ قُمُصٌ، فَمِنْهَا مَا يَبْلُغُ الثَّدْىَ، وَمِنْهَا مَا يَبْلُغُ دُونَ ذَلِكَ، وَعُرِضَ عَلَىَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلَيْهِ قَمِيصٌ يَجْتَرُّهُ ‏"‏‏.‏ قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الدِّينَ ‏"‏‏.‏
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: "நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, மக்கள் எனக்கு முன்பாகக் காட்டப்படுவதை (ஒரு கனவில்) கண்டேன். அவர்கள் சட்டைகளை அணிந்திருந்தார்கள்; அவற்றில் சில (மிகவும் குட்டையாக இருந்ததால்) அவர்களின் மார்பு வரைக்கும் நீண்டிருந்தன; சில அதற்குக் கீழே நீண்டிருந்தன. பிறகு உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் எனக்குக் காட்டப்பட்டார்கள்; மேலும் அவர்கள் ஒரு சட்டையை அணிந்திருந்தார்கள், அதை அவர்கள் (தங்களுக்குப் பின்னால்) இழுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள்." அவர்கள் கேட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! (அந்தக் கனவைப் பற்றி) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள்?" அவர்கள் கூறினார்கள்: "மார்க்கம் (தீன்)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْخُضَرِ فِي الْمَنَامِ وَالرَّوْضَةِ الْخَضْرَاءِ
கனவில் பசுமையும், பசுமையான தோட்டமும்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ قَالَ قَيْسُ بْنُ عُبَادٍ كُنْتُ فِي حَلْقَةٍ فِيهَا سَعْدُ بْنُ مَالِكٍ وَابْنُ عُمَرَ فَمَرَّ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ فَقَالُوا هَذَا رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ‏.‏ فَقُلْتُ لَهُ إِنَّهُمْ قَالُوا كَذَا وَكَذَا‏.‏ قَالَ سُبْحَانَ اللَّهِ مَا كَانَ يَنْبَغِي لَهُمْ أَنْ يَقُولُوا مَا لَيْسَ لَهُمْ بِهِ عِلْمٌ، إِنَّمَا رَأَيْتُ كَأَنَّمَا عَمُودٌ وُضِعَ فِي رَوْضَةٍ خَضْرَاءَ، فَنُصِبَ فِيهَا وَفِي رَأْسِهَا عُرْوَةٌ وَفِي أَسْفَلِهَا مِنْصَفٌ ـ وَالْمِنْصَفُ الْوَصِيفُ ـ فَقِيلَ ارْقَهْ‏.‏ فَرَقِيتُ حَتَّى أَخَذْتُ بِالْعُرْوَةِ‏.‏ فَقَصَصْتُهَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ يَمُوتُ عَبْدُ اللَّهِ وَهْوَ آخِذٌ بِالْعُرْوَةِ الْوُثْقَى ‏ ‏‏.‏
கைஸ் பின் உபாத் அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு சபையில் அமர்ந்திருந்தேன்; அதில் ஸஅத் பின் மாலிக் (ரழி) அவர்களும் இப்னு உமர் (ரழி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரழி) அவர்கள் கடந்து சென்றார்கள். அவர்கள் (சபையிலிருந்தவர்கள்), "இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்" என்று கூறினார்கள்.

நான் (அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களிடம்), "அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "சுப்ஹானல்லாஹ்! தமக்கு அறிவு இல்லாத ஒன்றைக் கூறுவது அவர்களுக்குத் தகாது. நான் (கனவில்) ஒரு பசுமையான தோட்டத்தில் ஒரு தூண் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அது (பூமியில்) நாட்டப்பட்டிருந்தது. அதன் உச்சியில் ஒரு கைப்பிடியும், அதன் கீழே ஒரு பணியாளும் இருந்தார் – (இங்கு) 'மின்சஃப்' என்பது 'வஸீஃப்' (பணியாளர்) ஆகும். என்னிடம் 'ஏறுவீராக' என்று சொல்லப்பட்டது. நான் ஏறி, அந்தக் கைப்பிடியைப் பற்றிக்கொண்டேன்."

பிறகு இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ், 'அல்-உர்வதுல் வுத்ஃகா'வை (அந்த உறுதியான பிடிமானத்தைப்) பற்றியவாறே மரணிப்பார்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب كَشْفِ الْمَرْأَةِ فِي الْمَنَامِ
பாடம்: கனவில் பெண்ணின் திரையை விலக்குதல்
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أُرِيتُكِ فِي الْمَنَامِ مَرَّتَيْنِ، إِذَا رَجُلٌ يَحْمِلُكِ فِي سَرَقَةِ حَرِيرٍ فَيَقُولُ هَذِهِ امْرَأَتُكَ‏.‏ فَأَكْشِفُهَا فَإِذَا هِيَ أَنْتِ فَأَقُولُ إِنْ يَكُنْ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ يُمْضِهِ ‏ ‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: "(என்) கனவில் நீர் எனக்கு இருமுறை காட்டப்பட்டீர். அப்போது ஒரு மனிதர் உம்மை ஒரு பட்டுத் துண்டில் சுமந்து கொண்டிருந்தார். அவர், 'இவர் உம்முடைய மனைவி' என்று கூறினார். நான் அதை (அவளது முகத்தை அடையாளம் காணும் பொருட்டு) நீக்கினேன்; அங்கு நீர்தான் இருந்தீர். அப்போது நான், 'இது அல்லாஹ்விடமிருந்து (வந்தது) என்றால், அவன் இதை நிறைவேற்றுவான்' என்று கூறினேன்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب ثِيَابِ الْحَرِيرِ فِي الْمَنَامِ
கனவில் பட்டு ஆடைகள்
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أُرِيتُكِ قَبْلَ أَنْ أَتَزَوَّجَكِ مَرَّتَيْنِ، رَأَيْتُ الْمَلَكَ يَحْمِلُكِ فِي سَرَقَةٍ مِنْ حَرِيرٍ فَقُلْتُ لَهُ اكْشِفْ‏.‏ فَكَشَفَ فَإِذَا هِيَ أَنْتِ، فَقُلْتُ إِنْ يَكُنْ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ يُمْضِهِ‏.‏ ثُمَّ أُرِيتُكِ يَحْمِلُكِ فِي سَرَقَةٍ مِنْ حَرِيرٍ فَقُلْتُ اكْشِفْ‏.‏ فَكَشَفَ فَإِذَا هِيَ أَنْتِ فَقُلْتُ إِنْ يَكُ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ يُمْضِهِ ‏ ‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள், "நான் உங்களை மணமுடித்துக்கொள்வதற்கு முன்பு இரண்டு முறை (என் கனவில்) நீங்கள் எனக்குக் காட்டப்பட்டீர்கள். (முதல் முறை,) ஒரு வானவர் உங்களை ஒரு பட்டுத் துணியில் தூக்கிக்கொண்டு வருவதை நான் கண்டேன், மேலும் நான் அவரிடம், '(அவரை) திறவுங்கள்,' என்று கூறினேன், பார்த்தால், அது நீங்கள்தான். நான் (எனக்குள்ளே) சொல்லிக்கொண்டேன், 'இது அல்லாஹ்விடமிருந்து என்றால், அது நடந்தே தீரும்.' பிறகு, (மீண்டும்) நீங்கள் எனக்குக் காட்டப்பட்டீர்கள், (அதே வானவர்) உங்களை ஒரு பட்டுத் துணியில் சுமந்து வந்த நிலையில். நான் (அவரிடம்), '(அவரை) திறவுங்கள்,' என்று கூறினேன், பார்த்தால், அது நீங்கள்தான். நான் (எனக்குள்ளே) சொல்லிக்கொண்டேன், 'இது அல்லாஹ்விடமிருந்து என்றால், அது நடந்தே தீரும்.' "
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْمَفَاتِيحِ فِي الْيَدِ
பாடம்: கையில் திறவுகோல்கள்
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ، فَوُضِعَتْ فِي يَدِي ‏ ‏‏.‏ قَالَ مُحَمَّدٌ وَبَلَغَنِي أَنَّ جَوَامِعَ الْكَلِمِ أَنَّ اللَّهَ يَجْمَعُ الأُمُورَ الْكَثِيرَةَ الَّتِي كَانَتْ تُكْتَبُ فِي الْكُتُبِ قَبْلَهُ فِي الأَمْرِ الْوَاحِدِ وَالأَمْرَيْنِ‏.‏ أَوْ نَحْوَ ذَلِكَ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் செவியுற்றேன்: "நான் 'ஜவாமிஉல் கலிம்' (செறிவான கருத்துடைய சுருக்கமான சொற்கள்) வழங்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளேன்; (எதிரிகளின் உள்ளங்களில் ஏற்படும்) திகிலின் மூலம் நான் வெற்றியளிக்கப்பட்டுள்ளேன்; மேலும் நான் உறங்கிக் கொண்டிருந்தபோது, பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள் என்னிடம் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன."

முஹம்மது (இப்னு ஷிஹாப்) கூறினார்கள்: "'ஜவாமிஉல் கலிம்' என்பது பற்றி எனக்கு எட்டிய செய்தி யாதெனில், நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் (வேதங்களில்) எழுதப்பட்டிருந்த பல விஷயங்களை அல்லாஹ் (அவர்களுக்கு) ஒன்று அல்லது இரண்டு விஷயங்களிலோ அல்லது அது போன்றோ (சுருக்கி) ஒன்று திரட்டித் தருவதாகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب التَّعْلِيقِ بِالْعُرْوَةِ وَالْحَلْقَةِ
அத்தியாயம்: கைப்பிடி மற்றும் வளையத்தில் தொங்கவிடுதல்
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَزْهَرُ، عَنِ ابْنِ عَوْنٍ، ح وَحَدَّثَنِي خَلِيفَةُ، حَدَّثَنَا مُعَاذٌ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، حَدَّثَنَا قَيْسُ بْنُ عُبَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، قَالَ رَأَيْتُ كَأَنِّي فِي رَوْضَةٍ، وَسَطَ الرَّوْضَةِ عَمُودٌ فِي أَعْلَى الْعَمُودِ عُرْوَةٌ، فَقِيلَ لِي ارْقَهْ‏.‏ قُلْتُ لاَ أَسْتَطِيعُ‏.‏ فَأَتَانِي وَصِيفٌ فَرَفَعَ ثِيَابِي فَرَقِيتُ، فَاسْتَمْسَكْتُ بِالْعُرْوَةِ، فَانْتَبَهْتُ وَأَنَا مُسْتَمْسِكٌ بِهَا، فَقَصَصْتُهَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ تِلْكَ الرَّوْضَةُ رَوْضَةُ الإِسْلاَمِ، وَذَلِكَ الْعَمُودُ عَمُودُ الإِسْلاَمِ، وَتِلْكَ الْعُرْوَةُ عُرْوَةُ الْوُثْقَى، لاَ تَزَالُ مُسْتَمْسِكًا بِالإِسْلاَمِ حَتَّى تَمُوتَ ‏ ‏‏.‏
அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

“(ஒரு கனவில்) நான் ஒரு தோட்டத்தில் என்னைக் கண்டேன். அந்தத் தோட்டத்தின் நடுவில் ஒரு தூண் இருந்தது. அந்தத் தூணின் உச்சியில் ஒரு பிடிமானம் இருந்தது. என்னிடம், ‘ஏறு’ என்று சொல்லப்பட்டது. நான் ‘என்னால் முடியாது’ என்று கூறினேன். பிறகு ஒரு பணியாளர் வந்து என் ஆடையைத் தூக்கிவிட்டார். நான் (அந்தத் தூணில்) ஏறினேன்; பின்னர் அந்தப் பிடிமானத்தைப் பிடித்துக்கொண்டேன். நான் அதைப் பிடித்துக்கொண்டிருந்த நிலையிலேயே விழித்துக்கொண்டேன்.

இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தேன். அவர்கள் கூறினார்கள்: ‘அந்தத் தோட்டம் இஸ்லாத்தின் தோட்டமாகும். அந்தத் தூண் இஸ்லாத்தின் தூணாகும். அந்தப் பிடிமானம் ‘அல்உர்வதுல் வுத்ஃகா’ (மிக உறுதியான பிடிமானம்) ஆகும். நீங்கள் மரணிக்கும் வரை இஸ்லாத்தை உறுதியாகப் பற்றியிருப்பீர்கள்.’”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الإِسْتَبْرَقِ وَدُخُولِ الْجَنَّةِ فِي الْمَنَامِ
அல்-இஸ்தப்ரக் மற்றும் கனவில் சொர்க்கத்தில் நுழைதல்
حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ فِي يَدِي سَرَقَةً مِنْ حَرِيرٍ لاَ أَهْوِي بِهَا إِلَى مَكَانٍ فِي الْجَنَّةِ إِلاَّ طَارَتْ بِي إِلَيْهِ، فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ‏.‏ فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ إِنَّ أَخَاكِ رَجُلٌ صَالِحٌ ‏"‏‏.‏ أَوْ قَالَ ‏"‏ إِنَّ عَبْدَ اللَّهِ رَجُلٌ صَالِحٌ ‏"‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் ஒரு கனவில், என் கையில் ஒரு பட்டுத் துணியின் துண்டு (அல்லது பட்டை) இருப்பதைக் கண்டேன். சொர்க்கத்தில் நான் அதை எந்த இடத்திற்கு அசைத்தேனோ (அல்லது சுட்டிக்காட்டினேனோ), அந்த இடத்திற்கு அது என்னைச் சுமந்துகொண்டு பறந்தது.

நான் இந்தக் (கனவை) (என் சகோதரியான) ஹஃப்ஸா (ரழி) அவர்களிடம் விவரித்தேன். அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஹஃப்ஸா (ரழி) அவர்களிடம்), “நிச்சயமாக, உங்கள் சகோதரர் ஒரு ஸாலிஹான மனிதர்,” அல்லது, “நிச்சயமாக, அப்துல்லாஹ் ஒரு ஸாலிஹான மனிதர்” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْقَيْدِ فِي الْمَنَامِ
கனவில் விலங்கைக் காண்பது
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، سَمِعْتُ عَوْفًا، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ تَكْذِبُ رُؤْيَا الْمُؤْمِنِ، وَرُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ‏.‏ ‏ ‏ قَالَ مُحَمَّدٌ وَأَنَا أَقُولُ هَذِهِ قَالَ وَكَانَ يُقَالُ الرُّؤْيَا ثَلاَثٌ حَدِيثُ النَّفْسِ، وَتَخْوِيفُ الشَّيْطَانِ، وَبُشْرَى مِنَ اللَّهِ، فَمَنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلاَ يَقُصُّهُ عَلَى أَحَدٍ، وَلْيَقُمْ فَلْيُصَلِّ‏.‏ قَالَ وَكَانَ يُكْرَهُ الْغُلُّ فِي النَّوْمِ، وَكَانَ يُعْجِبُهُمُ الْقَيْدُ، وَيُقَالُ الْقَيْدُ ثَبَاتٌ فِي الدِّينِ‏.‏ وَرَوَى قَتَادَةُ وَيُونُسُ وَهِشَامٌ وَأَبُو هِلاَلٍ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَدْرَجَهُ بَعْضُهُمْ كُلَّهُ فِي الْحَدِيثِ، وَحَدِيثُ عَوْفٍ أَبْيَنُ‏.‏ وَقَالَ يُونُسُ لاَ أَحْسِبُهُ إِلاَّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْقَيْدِ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لاَ تَكُونُ الأَغْلاَلُ إِلاَّ فِي الأَعْنَاقِ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "காலம் (இறுதி நாளுக்கு) நெருங்கிவிட்டால், இறைநம்பிக்கையாளரின் கனவு பெரும்பாலும் பொய்யாகாது. இறைநம்பிக்கையாளரின் கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்."

(அறிவிப்பாளர்) முஹம்மது பின் சீரீன் கூறினார்: "இதை நான் கூறுகிறேன்." மேலும் அவர் கூறினார்: "கனவுகள் மூன்று வகைப்படும் என்று சொல்லப்படுவதுண்டு: (ஒன்று) மனதின் எண்ண ஓட்டம், (இரண்டு) ஷைத்தான் ஏற்படுத்தக்கூடிய பயம், (மூன்று) அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தி. எனவே, யாரேனும் தனக்கு விருப்பமில்லாத ஒன்றைக் (கனவில்) கண்டால், அதை யாரிடமும் விவரிக்க வேண்டாம்; மாறாக, அவர் எழுந்து தொழட்டும்."

மேலும் அவர் கூறினார்: "கனவில் 'அல் குல்' (கழுத்தில் மாட்டும் விலங்கு) வருவதை அவர்கள் வெறுத்தார்கள்; ஆனால் 'அல் கைத்' (காலில் மாட்டும் விலங்கு) வருவதை விரும்பினார்கள். 'அல் கைத்' என்பது மார்க்கத்தில் உறுதியாக இருப்பதாகும் என்று சொல்லப்படுகிறது."

கத்தாதா, யூனுஸ், ஹிஷாம் மற்றும் அபூ ஹிலால் ஆகியோர் இப்னு சீரீன் வழியாக அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும், அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் (இச்செய்தியை) அறிவித்துள்ளனர். அவர்களில் சிலர் இது முழுவதையும் (நபிமொழியாகச் சேர்த்து) அறிவித்துள்ளனர். ஆனால் அவ்ஃப் அவர்களின் அறிவிப்பே மிகவும் தெளிவானது. "கால் விலங்கு பற்றிய செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறியதே தவிர வேறில்லை என்று நான் கருதவில்லை" என்று யூனுஸ் கூறினார்.

அபூ அப்துல்லாஹ் கூறினார்: "அக்லால் (எனும் விலங்குகள்) கழுத்துகளுக்கு மட்டுமே உரியன."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْعَيْنِ الْجَارِيَةِ فِي الْمَنَامِ
கனவில் ஓடும் ஊற்றை (பார்ப்பது)
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ أُمِّ الْعَلاَء ِ ـ وَهْىَ امْرَأَةٌ مِنْ نِسَائِهِمْ بَايَعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ـ قَالَتْ طَارَ لَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ فِي السُّكْنَى حِينَ اقْتَرَعَتِ الأَنْصَارُ عَلَى سُكْنَى الْمُهَاجِرِينَ، فَاشْتَكَى فَمَرَّضْنَاهُ حَتَّى تُوُفِّيَ، ثُمَّ جَعَلْنَاهُ فِي أَثْوَابِهِ فَدَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ‏.‏ قَالَ ‏"‏ وَمَا يُدْرِيكِ ‏"‏‏.‏ قُلْتُ لاَ أَدْرِي وَاللَّهِ‏.‏ قَالَ ‏"‏ أَمَّا هُوَ فَقَدْ جَاءَهُ الْيَقِينُ، إِنِّي لأَرْجُو لَهُ الْخَيْرَ مِنَ اللَّهِ، وَاللَّهِ مَا أَدْرِي وَأَنَا رَسُولُ اللَّهِ مَا يُفْعَلُ بِي وَلاَ بِكُمْ ‏"‏‏.‏ قَالَتْ أُمُّ الْعَلاَءِ فَوَاللَّهِ لاَ أُزَكِّي أَحَدًا بَعْدَهُ‏.‏ قَالَتْ وَرَأَيْتُ لِعُثْمَانَ فِي النَّوْمِ عَيْنًا تَجْرِي، فَجِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ ‏"‏ ذَاكِ عَمَلُهُ يَجْرِي لَهُ ‏"‏
காரிஜா பின் ஸைத் பின் ஸாபித் அறிவித்தார்கள்:

அன்சாரிப் பெண்மணியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பைஅத் (உறுதிமொழி) செய்திருந்த உம்முல் அலா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“அன்சாரிகள் முஹாஜிர்களை (தங்களிடையே தங்க வைப்பதற்காக) சீட்டுக் குலுக்கிப் போட்டபோது உஸ்மான் பின் மழ்ஊன் (ரழி) அவர்கள் எங்கள் பங்கிற்கு வந்தார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள்; அவர் இறக்கும் வரை நாங்கள் அவருக்குப் பணிவிடை செய்தோம். பிறகு நாங்கள் அன்னாரின் ஆடைகளிலேயே அவரைக் கஃபனிட்டோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நான் (இறந்த உடலைப் பார்த்து), ‘அபூஸ்ஸாயிப் அவர்களே! அல்லாஹ்வின் ரஹ்மத் (கருணை) உங்கள் மீது உண்டாவதாக! அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்’ என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘அது உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக, எனக்குத் தெரியாது’ என்று பதிலளித்தேன்.

அவர்கள் கூறினார்கள், ‘அவரைப் பொறுத்தவரை, அவருக்கு (மரணமெனும்) உறுதி வந்துவிட்டது. அல்லாஹ்விடமிருந்து அவருக்கு நன்மையையே நான் ஆதரவு வைக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், எனக்கோ அல்லது உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன்.’ ”

உம்முல் அலா (ரழி) அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக, இதற்குப் பிறகு நான் ஒருபோதும் எவருடைய தூய்மைக்கும் (அல்லது சொர்க்கவாசி என்பதற்கும்) சாட்சியம் கூறமாட்டேன்.”

மேலும் அவர்கள் கூறினார்கள், “பிறகு நான் கனவில், உஸ்மான் (ரழி) அவர்களுக்காக ஒரு நீரூற்று ஓடுவதைக் கண்டேன். ஆகவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அவர்கள், ‘அது அவருக்காக ஓடிக்கொண்டிருக்கும் அவருடைய நற்செயலாகும்’ என்று கூறினார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب نَزْعِ الْمَاءِ مِنَ الْبِئْرِ حَتَّى يَرْوَى النَّاسُ
மக்கள் தாகம் தீரும் வரை கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்தல்
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا صَخْرُ بْنُ جُوَيْرِيَةَ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ حَدَّثَهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ بَيْنَا أَنَا عَلَى بِئْرٍ أَنْزِعُ مِنْهَا إِذْ جَاءَ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَأَخَذَ أَبُو بَكْرٍ الدَّلْوَ، فَنَزَعَ ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ، وَفِي نَزْعِهِ ضَعْفٌ، فَغَفَرَ اللَّهُ لَهُ، ثُمَّ أَخَذَهَا ابْنُ الْخَطَّابِ مِنْ يَدِ أَبِي بَكْرٍ فَاسْتَحَالَتْ فِي يَدِهِ غَرْبًا، فَلَمْ أَرَ عَبْقَرِيًّا مِنَ النَّاسِ يَفْرِي فَرْيَهُ، حَتَّى ضَرَبَ النَّاسُ بِعَطَنٍ ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் ஒரு கிணற்றருகே (நின்று) அதிலிருந்து தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தபோது, திடீரென அபூபக்ரும் உமரும் வந்தார்கள். அபூபக்ர் அந்த வாளியை எடுத்தார்; ஒரு வாளி அல்லது இரண்டு வாளிகள் இறைத்தார். அவர் இறைத்ததில் (சிறிது) பலவீனம் இருந்தது; அல்லாஹ் அவருக்கு அருள்புரிந்தான் (இது அவரது ஆட்சிக்காலத்தின் சுருக்கத்தையும், அதன் எளிமையையும் குறிப்பதாக அறிஞர்கள் விளக்குகிறார்கள்). பிறகு இப்னுல் கத்தாப் (உமர்), அபூபக்ரின் கையிலிருந்து அந்த வாளியை வாங்கினார். உடனே அது அவர் கையில் மிகப் பெரிய வாளியாக மாறியது. மக்களில் அவரைப் போன்று (வலிமையாகவும் நேர்த்தியாகவும்) செயல்படும் ஒரு மேதையை நான் கண்டதில்லை. இறுதியில் மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி) அவை நீர்நிலை அருகே ஓய்வெடுக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب نَزْعِ الذَّنُوبِ وَالذَّنُوبَيْنِ مِنَ الْبِئْرِ بِضَعْفٍ
ஒரு கிணற்றிலிருந்து பலவீனத்துடன் ஒன்று அல்லது இரண்டு வாளிகள் தண்ணீர் இறைத்தல்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُوسَى، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ رُؤْيَا النَّبِيِّ، صلى الله عليه وسلم فِي أَبِي بَكْرٍ وَعُمَرَ قَالَ ‏ ‏ رَأَيْتُ النَّاسَ اجْتَمَعُوا فَقَامَ أَبُو بَكْرٍ فَنَزَعَ ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ، وَفِي نَزْعِهِ ضَعْفٌ وَاللَّهُ يَغْفِرُ لَهُ، ثُمَّ قَامَ ابْنُ الْخَطَّابِ، فَاسْتَحَالَتْ غَرْبًا فَمَا رَأَيْتُ مِنَ النَّاسِ يَفْرِي فَرْيَهُ، حَتَّى ضَرَبَ النَّاسُ بِعَطَنٍ ‏ ‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் குறித்துக் கண்ட கனவு பற்றிச் சொன்னதாவது: "நான் (கனவில்) மக்கள் ஒன்று கூடியிருப்பதைக் கண்டேன். அப்போது அபூபக்ர் எழுந்து ஒரு வாளி அல்லது இரண்டு வாளிகள் (நீர்) இறைத்தார். அவர் நீர் இறைத்ததில் (சற்று) பலவீனம் இருந்தது. அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! பிறகு இப்னுல் கத்தாப் (உமர்) எழுந்தார். உடனே அந்த வாளி மிகப் பெரியதாக மாறியது. அவரைப் போன்று (ஆற்றலோடு) செயல்படும் எவரையும் நான் மக்களிடத்தில் கண்டதில்லை; மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்குப் போதுமான அளவு) நீர் புகட்டி, (திருப்தியுடன்) நீர்நிலைகளுக்கு அருகே (ஓய்வெடுக்க) படுத்துக்கொள்ளும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَعِيدٌ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي عَلَى قَلِيبٍ وَعَلَيْهَا دَلْوٌ، فَنَزَعْتُ مِنْهَا مَا شَاءَ اللَّهُ، ثُمَّ أَخَذَهَا ابْنُ أَبِي قُحَافَةَ فَنَزَعَ مِنْهَا ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ، وَفِي نَزْعِهِ ضَعْفٌ وَاللَّهُ يَغْفِرُ لَهُ، ثُمَّ اسْتَحَالَتْ غَرْبًا، فَأَخَذَهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَلَمْ أَرَ عَبْقَرِيًّا مِنَ النَّاسِ يَنْزِعُ نَزْعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ، حَتَّى ضَرَبَ النَّاسُ بِعَطَنٍ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு கிணற்றின் அருகே நான் நிற்பதாகவும், அதன் மீது ஒரு வாளி இருந்ததாகவும் நான் கண்டேன். நான் அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவு (தண்ணீரை) இறைத்தேன். பின்னர் இப்னு அபீ குஹாஃபா (அபூபக்கர் ரழி) அவர்கள் அதை எடுத்து, ஒரு வாளி அல்லது இரண்டு வாளிகள் (தண்ணீரை) இறைத்தார்கள். அவர்களின் இறைத்தலில் ஒரு பலவீனம் இருந்தது — அல்லாஹ் அவரை மன்னிப்பானாக. பிறகு (அந்த வாளி) ஒரு பெரிய தோல் வாளியாக மாறியது. உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் அதை எடுத்தார்கள். உமர் போன்று (வலிமையாகவும், திறமையாகவும்) தண்ணீர் இறைக்கும் எந்த ஒரு மேதையையும் மக்களில் நான் கண்டதில்லை. எதுவரையெனில், மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி) அவை நீர் நிலைகளுக்கு அருகில் படுத்து ஓய்வெடுக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الاِسْتِرَاحَةِ فِي الْمَنَامِ
கனவில் ஓய்வெடுப்பது
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ أَنِّي عَلَى حَوْضٍ أَسْقِي النَّاسَ، فَأَتَانِي أَبُو بَكْرٍ فَأَخَذَ الدَّلْوَ مِنْ يَدِي لِيُرِيحَنِي، فَنَزَعَ ذَنُوبَيْنِ وَفِي نَزْعِهِ ضَعْفٌ وَاللَّهُ يَغْفِرُ لَهُ، فَأَتَى ابْنُ الْخَطَّابِ فَأَخَذَ مِنْهُ، فَلَمْ يَزَلْ يَنْزِعُ، حَتَّى تَوَلَّى النَّاسُ وَالْحَوْضُ يَتَفَجَّرُ ‏ ‏‏.‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, நான் ஒரு நீர்நிலை (ஹவ்ழ்) அருகே நின்றுகொண்டு மக்களுக்கு நீர் புகட்டிக் கொண்டிருப்பதாகக் கண்டேன். பிறகு அபூபக்ர் (ரழி) அவர்கள் என்னிடம் வந்து எனக்கு ஓய்வளிக்கும் நோக்குடன் என்னிடமிருந்து வாளியை வாங்கினார்கள். அவர்கள் இரண்டு வாளிகள் நீர் இறைத்தார்கள். அவர்கள் நீர் இறைத்ததில் ஒரு பலவீனம் இருந்தது (அதாவது, அவர்களின் ஆட்சி காலம் குறைவானதாக இருந்தது). அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக! பிறகு இப்னு அல்-கத்தாப் (உமர் ரழி) அவர்கள் வந்து, அவர்களிடமிருந்து அதை வாங்கிக் கொண்டார்கள். மக்கள் (நீர் அருந்தி) திரும்பிச் செல்லும் வரை அவர் நீர் இறைத்துக் கொண்டேயிருந்தார், மேலும் அந்த நீர்நிலை பொங்கி வழிந்து கொண்டிருந்தது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْقَصْرِ فِي الْمَنَامِ
கனவில் மாளிகை
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ بَيْنَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي فِي الْجَنَّةِ، فَإِذَا امْرَأَةٌ تَتَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ، قُلْتُ لِمَنْ هَذَا الْقَصْرُ قَالُوا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ‏.‏ فَذَكَرْتُ غَيْرَتَهُ فَوَلَّيْتُ مُدْبِرًا ‏ ‏‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ فَبَكَى عُمَرُ بْنُ الْخَطَّابِ ثُمَّ قَالَ أَعَلَيْكَ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ أَغَارُ
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: "நான் உறங்கிக் கொண்டிருந்தபோது, நான் சுவர்க்கத்தில் இருப்பதைக் கண்டேன். திடீரென்று ஒரு அரண்மனைக்கு அருகில் ஒரு பெண் உளூச் செய்துகொண்டிருப்பதை நான் கண்டேன். 'இந்த அரண்மனை யாருக்காக?' என்று நான் கேட்டேன். '(அது) உமர் இப்னு அல்-கத்தாப் அவர்களுக்காக' என்று (வானவர்கள்) பதிலளித்தார்கள். பிறகு நான் (உமரின்) ரோஷத்தை (கைரத்) நினைவுகூர்ந்தேன்; எனவே, நான் (அங்கிருந்து) திரும்பிச் சென்றுவிட்டேன்."

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: (இதைக் கேட்டதும்) உமர் (ரழி) அவர்கள் அழுதுகொண்டே, "என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! தங்கள் மீதா நான் ரோஷம் கொள்வேன்?" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ دَخَلْتُ الْجَنَّةَ فَإِذَا أَنَا بِقَصْرٍ مِنْ ذَهَبٍ، فَقُلْتُ لِمَنْ هَذَا فَقَالُوا لِرَجُلٍ مِنْ قُرَيْشٍ‏.‏ فَمَا مَنَعَنِي أَنْ أَدْخُلَهُ يَا ابْنَ الْخَطَّابِ إِلاَّ مَا أَعْلَمُ مِنْ غَيْرَتِكَ ‏ ‏‏.‏ قَالَ وَعَلَيْكَ أَغَارُ يَا رَسُولَ اللَّهِ
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நான் சொர்க்கத்திற்குள் நுழைந்தேன். அங்கே தங்கத்தால் ஆன ஒரு மாளிகை இருந்தது. நான், 'இது யாருக்குரியது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதருக்குரியது' என்று பதிலளித்தனர். கத்தாபின் மகனாரே! உமது ரோஷத்தை (கௌரவ உணர்வு, தன்மான உணர்வு அல்லது பாதுகாப்பு உணர்வை) நான் அறிவேன். அதுவே நான் அதில் நுழைவதிலிருந்து என்னைத் தடுத்தது.'
அதற்கு உமர் (ரழி), 'அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீதா நான் ரோஷம் (அதாவது, தங்களுக்கு எதிராக கௌரவ உணர்வு அல்லது பாதுகாப்பு உணர்வு) கொள்வேன்?' என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْوُضُوءِ فِي الْمَنَامِ
கனவில் அங்கத்தூய்மை செய்தல்
حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي فِي الْجَنَّةِ، فَإِذَا امْرَأَةٌ تَتَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ، فَقُلْتُ لِمَنْ هَذَا الْقَصْرُ فَقَالُوا لِعُمَرَ‏.‏ فَذَكَرْتُ غَيْرَتَهُ فَوَلَّيْتُ مُدْبِرًا ‏ ‏‏.‏ فَبَكَى عُمَرُ وَقَالَ عَلَيْكَ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ أَغَارُ
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: 'நான் உறங்கிக் கொண்டிருந்தபோது, என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அங்கே ஒரு மாளிகையின் அருகே ஒரு பெண் வுளூ செய்து கொண்டிருந்தார். நான், 'இந்த மாளிகை யாருக்குரியது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'உமருக்குரியது' என்று கூறினார்கள். (அப்போது) உமர் (ரழி) அவர்களின் ரோஷம் (மற்றும் கண்டிப்பு) எனக்கு நினைவுக்கு வந்தது; உடனே நான் திரும்பிவிட்டேன்.'

(இதைக் கேட்ட) உமர் (ரழி) அவர்கள் அழுதார்கள். மேலும், 'என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், அல்லாஹ்வின் தூதரே! (உங்களைப் போன்ற ஒருவரின் விஷயத்தில்) நான் ரோஷம் கொள்வேனா?' என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الطَّوَافِ بِالْكَعْبَةِ فِي الْمَنَامِ
கனவில் கஃபாவைச் சுற்றி தவாஃப் செய்தல்
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي أَطُوفُ بِالْكَعْبَةِ فَإِذَا رَجُلٌ آدَمُ سَبْطُ الشَّعَرِ بَيْنَ رَجُلَيْنٍ يَنْطِفُ رَأْسُهُ مَاءً، فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا ابْنُ مَرْيَمَ‏.‏ فَذَهَبْتُ أَلْتَفِتُ فَإِذَا رَجُلٌ أَحْمَرُ جَسِيمٌ جَعْدُ الرَّأْسِ أَعْوَرُ الْعَيْنِ الْيُمْنَى، كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ، قُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا الدَّجَّالُ‏.‏ أَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا ابْنُ قَطَنٍ ‏ ‏‏.‏ وَابْنُ قَطَنٍ رَجُلٌ مِنْ بَنِي الْمُصْطَلِقِ مِنْ خُزَاعَةَ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "நான் உறங்கிக் கொண்டிருந்தபோது, நான் கஃபாவை தவாஃப் செய்வதாகக் கண்டேன். அப்போது அங்கே மாநிற மேனியுடைய, நேரான தலைமுடியுடைய, தலைமுடியிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதரை இரு மனிதர்களுக்கு இடையில் கண்டேன். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'மர்யமின் குமாரர் (ஈஸா)' என்று பதிலளித்தார்கள். பிறகு நான் (திரும்பிப்) பார்த்தபோது, சிவப்பு நிறமுடைய, பருத்த உடலமைப்புள்ள, சுருண்ட முடி கொண்ட, வலது கண் குருடான மற்றொரு மனிதரைக் கண்டேன்; அவனது கண் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சைப் பழம் போல இருந்தது. நான், 'இவன் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இவன் தஜ்ஜால்' என்று பதிலளித்தார்கள். மக்களில் இப்னு கத்தான் என்பவர்தான் அவனை எல்லோரையும் விட அதிகமாக ஒத்திருந்தார். இப்னு கத்தான் குஸாஆ குலத்தின் பனூ முஸ்தலிக் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதராவார்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا أَعْطَى فَضْلَهُ غَيْرَهُ فِي النَّوْمِ
கனவில் தன் மீதத்தை மற்றொருவருக்குக் கொடுப்பது
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ، حَتَّى إِنِّي لأَرَى الرِّيَّ يَجْرِي، ثُمَّ أَعْطَيْتُ فَضْلَهُ عُمَرَ ‏"‏‏.‏ قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الْعِلْمُ ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறக் கேட்டேன், "நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, பால் (நிறைந்த) ஒரு கிண்ணம் என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்து (முழுமையாகத் தாகம் தீரும் வரை) குடித்தேன்; (நான் குடித்ததன்) ஈரப்பதம் என் நகங்களில் வழிந்தோடுவதை நான் காணும் வரை (குடித்தேன்). பிறகு, அதில் மீதமிருந்ததை உமர் (ரழி) அவர்களுக்குக் கொடுத்தேன்." (அங்கிருந்தவர்கள்) கேட்டார்கள், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! (அந்தக் கனவிற்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள்?" அவர்கள் கூறினார்கள், "(அது மார்க்க) அறிவு."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الأَمْنِ وَذَهَابِ الرَّوْعِ فِي الْمَنَامِ
கனவில் பாதுகாப்பு உணர்வும் பயம் மறைவதும்
حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا صَخْرُ بْنُ جُوَيْرِيَةَ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ إِنَّ رِجَالاً مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانُوا يَرَوْنَ الرُّؤْيَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُصُّونَهَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُ فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا شَاءَ اللَّهُ، وَأَنَا غُلاَمٌ حَدِيثُ السِّنِّ وَبَيْتِي الْمَسْجِدُ قَبْلَ أَنْ أَنْكِحَ، فَقُلْتُ فِي نَفْسِي لَوْ كَانَ فِيكَ خَيْرٌ لَرَأَيْتَ مِثْلَ مَا يَرَى هَؤُلاَءِ‏.‏ فَلَمَّا اضْطَجَعْتُ لَيْلَةً قُلْتُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ فِيَّ خَيْرًا فَأَرِنِي رُؤْيَا‏.‏ فَبَيْنَمَا أَنَا كَذَلِكَ إِذْ جَاءَنِي مَلَكَانِ فِي يَدِ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا مَقْمَعَةٌ مِنْ حَدِيدٍ، يُقْبِلاَ بِي إِلَى جَهَنَّمَ، وَأَنَا بَيْنَهُمَا أَدْعُو اللَّهَ اللَّهُمَّ أَعُوذُ بِكَ مِنْ جَهَنَّمَ‏.‏ ثُمَّ أُرَانِي لَقِيَنِي مَلَكٌ فِي يَدِهِ مِقْمَعَةٌ مِنْ حَدِيدٍ فَقَالَ لَنْ تُرَاعَ، نِعْمَ الرَّجُلُ أَنْتَ لَوْ تُكْثِرُ الصَّلاَةَ‏.‏ فَانْطَلَقُوا بِي حَتَّى وَقَفُوا بِي عَلَى شَفِيرِ جَهَنَّمَ فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَىِّ الْبِئْرِ، لَهُ قُرُونٌ كَقَرْنِ الْبِئْرِ، بَيْنَ كُلِّ قَرْنَيْنِ مَلَكٌ بِيَدِهِ مِقْمَعَةٌ مِنْ حَدِيدٍ، وَأَرَى فِيهَا رِجَالاً مُعَلَّقِينَ بِالسَّلاَسِلِ، رُءُوسُهُمْ أَسْفَلَهُمْ، عَرَفْتُ فِيهَا رِجَالاً مِنْ قُرَيْشٍ، فَانْصَرَفُوا بِي عَنْ ذَاتِ الْيَمِينِ‏.‏ فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ إِنَّ عَبْدَ اللَّهِ رَجُلٌ صَالِحٌ ‏ ‏‏.‏ فَقَالَ نَافِعٌ لَمْ يَزَلْ بَعْدَ ذَلِكَ يُكْثِرُ الصَّلاَةَ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்களில் சிலர் கனவுகளைக் கண்டு, அவற்றை நபி (ஸல்) அவர்களிடம் விவரிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அது குறித்து அல்லாஹ் நாடியதை (விளக்கிக்) கூறுவார்கள். நான் இள வயது இளைஞனாக இருந்தேன்; மேலும் நான் திருமணத்திற்கு முன்பு பள்ளிவாசலிலேயே தங்குபவனாக இருந்தேன். "என்னிடத்தில் ஏதேனும் நன்மை இருந்தால், இந்த மக்கள் காண்பது போல் நானும் (கனவு) காண்பேனே" என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

ஆகவே, ஒரு நாள் இரவு நான் படுக்கைக்குச் சென்றபோது, **"அல்லாஹும்ம இன் குன்த தஅலமு ஃபிய்ய கைரன் ஃபஅரினீ ருஃயா"** (யா அல்லாஹ்! என்னிடம் நன்மை இருப்பதாக நீ அறிந்தால், எனக்கு ஒரு கனவைக் காட்டுவாயாக) என்று கூறினேன்.

அவ்வாறு நான் இருந்த நிலையில், (கனவில்) என்னிடம் இரண்டு வானவர்கள் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் இரும்பாலான ஒரு கதாயுதம் (அல்லது சவுக்கு) இருந்தது. அவர்கள் இருவரும் என்னை நரகத்தை நோக்கி அழைத்துச் சென்றனர். நான் அவர்களுக்கு இடையே இருந்தவாறு, **"அல்லாஹும்ம அஊது பிக மின் ஜஹன்னம்"** (யா அல்லாஹ்! நரகத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது கையில் இரும்புக் கதாயுதத்தை (அல்லது சவுக்கை) வைத்திருந்த மற்றொரு வானவர் என்னை எதிர்கொள்வதை நான் கண்டேன். அவர் என்னிடம், "பயப்படாதே! நீ ஒரு சிறந்த மனிதன்; நீ (இரவில்) அதிகமாகத் தொழுதால் (அது உனக்கு மேலும் சிறப்பைத் தரும்)" என்று கூறினார்.

அவர்கள் என்னை நரகத்தின் விளிம்பில் நிறுத்தும் வரை அழைத்துச் சென்றார்கள். அது கிணறு கட்டப்பட்டிருப்பதைப் போன்று (வட்ட வடிவில்) கட்டப்பட்டிருந்தது. கிணற்றுக்கு இருப்பதைப் போன்றே அதற்கும் விளிம்புகள் (அல்லது தூண்கள்) இருந்தன. ஒவ்வொரு விளிம்பிலும் (அல்லது தூணிலும்) இரும்புக் கதாயுதத்துடன் (அல்லது சவுக்கோடு) ஒரு வானவர் இருந்தார். அதில் சங்கிலிகளால் (கட்டப்பட்டு) தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட நிலையில் பல மனிதர்களை நான் கண்டேன். அவர்களில் குரைஷி குலத்தைச் சேர்ந்த சில ஆண்களை நான் அறிந்து கொண்டேன். பிறகு அவர்கள் என்னை (நரகத்திலிருந்து) வலப்பக்கமாகத் திருப்பிக்கொண்டு சென்றனர்.

நான் இந்தக் கனவை ஹஃப்ஸா (ரழி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரழி) அவர்கள் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக, அப்துல்லாஹ் ஒரு நல்ல மனிதர்" என்று கூறினார்கள். (நாஃபிஃ (ரஹ்) கூறுகிறார்: "அதற்குப் பிறகு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அதிகமாகத் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்.")
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الأَخْذِ عَلَى الْيَمِينِ فِي النَّوْمِ
கனவில் வலது பக்கத்தைக் கடைப்பிடித்தல்
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنْتُ غُلاَمًا شَابًّا عَزَبًا فِي عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكُنْتُ أَبِيتُ فِي الْمَسْجِدِ، وَكَانَ مَنْ رَأَى مَنَامًا قَصَّهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ اللَّهُمَّ إِنْ كَانَ لِي عِنْدَكَ خَيْرٌ فَأَرِنِي مَنَامًا يُعَبِّرُهُ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَنِمْتُ فَرَأَيْتُ مَلَكَيْنِ أَتَيَانِي فَانْطَلَقَا بِي، فَلَقِيَهُمَا مَلَكٌ آخَرُ فَقَالَ لِي لَنْ تُرَاعَ، إِنَّكَ رَجُلٌ صَالِحٌ، فَانْطَلَقَا بِي إِلَى النَّارِ، فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَىِّ الْبِئْرِ، وَإِذَا فِيهَا نَاسٌ قَدْ عَرَفْتُ بَعْضَهُمْ، فَأَخَذَا بِي ذَاتَ الْيَمِينِ، فَلَمَّا أَصْبَحْتُ ذَكَرْتُ ذَلِكَ لِحَفْصَةَ‏.‏ فَزَعَمَتْ حَفْصَةُ أَنَّهَا قَصَّتْهَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ إِنَّ عَبْدَ اللَّهِ رَجُلٌ صَالِحٌ لَوْ كَانَ يُكْثِرُ الصَّلاَةَ مِنَ اللَّيْلِ ‏ ‏‏.‏ قَالَ الزُّهْرِيُّ وَكَانَ عَبْدُ اللَّهِ بَعْدَ ذَلِكَ يُكْثِرُ الصَّلاَةَ مِنَ اللَّيْلِ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் திருமணமாகாத இளைஞனாக இருந்தேன்; பள்ளிவாசலில் உறங்குவது வழக்கம். (அக்காலத்தில்) யாரேனும் கனவு கண்டால், அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரிப்பார்கள். ஆகவே நான், **"அல்லாஹும்ம இன் கான லீ இந்தக்க கைருன், ஃபஅரினீ மனாமன் யுஅப்பிருஹு லீ ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்"** (யா அல்லாஹ்! உன்னிடம் எனக்கு ஏதேனும் நன்மை இருந்தால், எனக்கு ஒரு கனவைக் காட்டுவாயாக! அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு விளக்கம் அளிப்பார்கள்) என்று (வேண்டிக்) கூறினேன்.

அவ்வாறே நான் உறங்கினேன். (கனவில்) இரண்டு வானவர்கள் என்னிடம் வந்து, என்னை அழைத்துச் சென்றார்கள். அப்போது (வழியில்) மற்றொரு வானவர் அவர்களைச் சந்தித்தார். அவர் என்னிடம், "பயப்படாதீர்! நிச்சயமாக நீர் ஒரு நல்ல மனிதர்" என்று கூறினார். அவர்கள் என்னை நரகத்தை நோக்கி அழைத்துச் சென்றார்கள். அது கிணற்றின் சுவர் கட்டப்பட்டிருப்பதைப் போன்று (சுவர்) கட்டப்பட்டிருந்தது. அதில் நான் (எனக்குத் தெரிந்த) சிலரை அடையாளம் கண்டுகொண்டேன். பிறகு அவ்விருவரும் என்னை வலது பக்கமாக அழைத்துச் சென்றார்கள்.

காலையில், நான் அந்தக் கனவை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சொன்னேன். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்ததாகக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், **"நிச்சயமாக அப்துல்லாஹ் ஒரு நல்ல மனிதர்; அவர் இரவில் அதிகமாகத் தொழுபவராக இருந்தால்!"** என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர் அஸ்-ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "அதற்குப் பிறகு, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இரவில் அதிகமாகத் தொழுபவராக ஆகிவிட்டார்கள்.")
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْقَدَحِ فِي النَّوْمِ
கனவில் ஒரு கிண்ணம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ، ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏"‏‏.‏ قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الْعِلْمَ ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "நான் உறங்கிக் கொண்டிருந்தபோது, பால் நிரம்பிய ஒரு கோப்பை எனக்குக் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்து அருந்தினேன். பின்னர் எனது மீதத்தை உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்களுக்குக் கொடுத்தேன் (என்று கனவில் கண்டேன்)." அவர்கள் கேட்டார்கள்: "(இந்தக் கனவிற்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(அது) அறிவு (ஞானம்)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا طَارَ الشَّىْءُ فِي الْمَنَامِ
கனவில் ஏதாவது பறந்தால்
حَدَّثَنِي سَعِيدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ عُبَيْدَةَ بْنِ نَشِيطٍ، قَالَ قَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنْ رُؤْيَا، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي ذَكَرَ‏.‏
உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் அவர்கள் அறிவித்தார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருந்த கனவைப் பற்றி கேட்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
فَقَالَ ابْنُ عَبَّاسٍ ذُكِرَ لِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ أَنَّهُ وُضِعَ فِي يَدَىَّ سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَفُظِعْتُهُمَا وَكَرِهْتُهُمَا، فَأُذِنَ لِي، فَنَفَخْتُهُمَا فَطَارَا، فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ ‏ ‏‏.‏ فَقَالَ عُبَيْدُ اللَّهِ أَحَدُهُمَا الْعَنْسِيُّ الَّذِي قَتَلَهُ فَيْرُوزٌ بِالْيَمَنِ، وَالآخَرُ مُسَيْلِمَةُ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது: ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, என் இரண்டு கைகளில் இரண்டு தங்கக் காப்புகள் வைக்கப்பட்டதாகக் கண்டேன். அதனால் நான் பயந்து (பீதியடைந்து) போனேன்; அவற்றை நான் வெறுத்தேன். பிறகு (அவற்றை ஊத) எனக்கு அனுமதி வழங்கப்பட்டது; நான் அவற்றை ஊதியதும் அவை பறந்து சென்றன. அவற்றை நான், தோன்றவிருக்கும் இரண்டு பொய்யர்களாக வியாக்கியானம் செய்கிறேன்.’”

உபைதுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “அவ்விருவரில் ஒருவர் யமனில் ஃபைரூஸால் கொல்லப்பட்ட அல்-அன்ஸி ஆவார்; மற்றவர் முஸைலமா ஆவார்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا رَأَى بَقَرًا تُنْحَرُ
(கனவில்) பசுக்கள் அறுக்கப்படுவதைக் காண்பதானால்
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، أُرَاهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ رَأَيْتُ فِي الْمَنَامِ أَنِّي أُهَاجِرُ مِنْ مَكَّةَ إِلَى أَرْضٍ بِهَا نَخْلٌ، فَذَهَبَ وَهَلِي إِلَى أَنَّهَا الْيَمَامَةُ أَوْ هَجَرٌ، فَإِذَا هِيَ الْمَدِينَةُ يَثْرِبُ، وَرَأَيْتُ فِيهَا بَقَرًا وَاللَّهُ خَيْرٌ، فَإِذَا هُمُ الْمُؤْمِنُونَ يَوْمَ أُحُدٍ، وَإِذَا الْخَيْرُ مَا جَاءَ اللَّهُ مِنَ الْخَيْرِ وَثَوَابِ الصِّدْقِ الَّذِي أَتَانَا اللَّهُ بِهِ بَعْدَ يَوْمِ بَدْرٍ ‏ ‏‏.‏
அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் மக்காவிலிருந்து பேரீச்ச மரங்கள் நிறைந்த ஒரு பூமிக்கு ஹிஜ்ரத் (புலம்பெயர்ந்து) செல்வதாகக் கனவில் கண்டேன். அது 'யமாமா' அல்லது 'ஹஜர்' என்று என் மனம் எண்ணியது. ஆனால், அது மதீனா (எனும் யத்ரிப்) ஆக இருந்தது. மேலும் அங்கே நான் மாடுகளைக் கண்டேன்; அல்லாஹ் (நாடியது) நன்மையே! இதோ (அம்மாடுகள்) உஹுத் நாளில் (தியாகம் செய்யப்பட்ட) இறைநம்பிக்கையாளர்களாவர். மேலும் (நான் கண்ட) நன்மை என்பது, அல்லாஹ் கொண்டுவந்த நன்மையும், பத்ரு போருக்குப் பிறகு அல்லாஹ் எங்களுக்கு அளித்த சத்தியத்திற்கான நற்கூலியுமாகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب النَّفْخِ فِي الْمَنَامِ
கனவில் ஊதுதல்
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا بِهِ أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ ‏"‏‏.‏ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ بَيْنَا أَنَا نَائِمٌ إِذْ أُوتِيتُ خَزَائِنَ الأَرْضِ، فَوُضِعَ فِي يَدَىَّ سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَكَبُرَا عَلَىَّ وَأَهَمَّانِي، فَأُوحِيَ إِلَىَّ أَنِ انْفُخْهُمَا، فَنَفَخْتُهُمَا فَطَارَا، فَأَوَّلْتُهُمَا الْكَذَّابَيْنِ اللَّذَيْنِ أَنَا بَيْنَهُمَا صَاحِبَ صَنْعَاءَ وَصَاحِبَ الْيَمَامَةِ ‏"‏‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நாம் (காலத்தால்) பிந்தியவர்கள்; ஆனால் (சிறப்பால்) முந்தியவர்கள்."

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: "நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, பூமியின் பொக்கிஷங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அப்போது என் கைகளில் இரண்டு தங்கக் காப்புகள் வைக்கப்பட்டன. அவ்விரண்டும் எனக்குப் பளுவாகத் தெரிந்தன; எனக்குக் கவலையளித்தன. அவற்றை ஊதிவிடுமாறு எனக்கு 'வஹீ' (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டது. அவ்வாறே நான் அவற்றை ஊதியதும் அவை பறந்துவிட்டன. நான் எவருக்கிடையே (அதாவது, என் காலத்திலேயே தோன்றுவார்கள் என்று) இருக்கிறேனோ அந்த இரண்டு பொய்யர்களான 'ஸன்ஆ'வைச் சேர்ந்தவனும், 'யமாமா'வைச் சேர்ந்தவனுமே அவ்விருவர் என்று நான் விளக்கம் கொண்டேன்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا رَأَى أَنَّهُ أَخْرَجَ الشَّىْءَ مِنْ كُورَةٍ فَأَسْكَنَهُ مَوْضِعًا آخَرَ
பாடம்: ஒருவர் தனது கனவில் ஒரு பொருளை ஓர் ஊரிலிருந்து வெளியேற்றி, வேறொரு இடத்தில் தங்கவைப்பதைக் காண்பாரானால்
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي أَخِي عَبْدُ الْحَمِيدِ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ رَأَيْتُ كَأَنَّ امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ، خَرَجَتْ مِنَ الْمَدِينَةِ، حَتَّى قَامَتْ بِمَهْيَعَةَ ـ وَهْىَ الْجُحْفَةُ ـ فَأَوَّلْتُ أَنَّ وَبَاءَ الْمَدِينَةِ نُقِلَ إِلَيْهَا ‏ ‏‏.‏
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நான் (ஒரு கனவில்) தலைவிரி கோலத்துடன் ஒரு கறுநிறப் பெண் மதீனாவிலிருந்து வெளியேறி மஹய்ஆ என்ற இடத்தில் – அதாவது அல்ஜுஹ்ஃபாவில் – தங்குவதைக் கண்டேன். மதீனாவின் கொள்ளைநோய் அதற்கு (அல்ஜுஹ்ஃபாவிற்கு) மாற்றப்பட்டது என்று நான் அதை வியாக்கியானம் செய்தேன்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْمَرْأَةِ السَّوْدَاءِ
பாடம்: கறுப்பு நிறப் பெண்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ فِي رُؤْيَا النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْمَدِينَةِ ‏ ‏ رَأَيْتُ امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ، خَرَجَتْ مِنَ الْمَدِينَةِ، حَتَّى نَزَلَتْ بِمَهْيَعَةَ، فَتَأَوَّلْتُهَا أَنَّ وَبَاءَ الْمَدِينَةِ نُقِلَ إِلَى مَهْيَعَةَ، وَهْىَ الْجُحْفَةُ ‏ ‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் கண்ட கனவைப் பற்றி (கூறும்போது), (நபி ஸல் அவர்கள்) கூறினார்கள்: "நான் (என் கனவில்) கலைந்த கூந்தலுடன் ஒரு கறுப்புப் பெண் மதீனாவிலிருந்து வெளியேறி மஹ்'யஆவில் குடியேறுவதைக் கண்டேன். மதீனாவின் கொள்ளைநோய் மஹ்'யஆவிற்கு, அதாவது அல்-ஜுஹ்ஃபாவிற்கு, மாற்றப்படுவதன் (அடையாளமாக) நான் அதை விளக்கினேன்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْمَرْأَةِ الثَّائِرَةِ الرَّأْسِ
பாடம்: தலைமுடி கலைந்த பெண்
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ رَأَيْتُ امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ، خَرَجَتْ مِنَ الْمَدِينَةِ، حَتَّى قَامَتْ بِمَهْيَعَةَ فَأَوَّلْتُ أَنَّ وَبَاءَ الْمَدِينَةِ نُقِلَ إِلَى مَهْيَعَةَ، وَهْىَ الْجُحْفَةُ ‏ ‏‏.‏
ஸாலிம் அவர்களின் தந்தை (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் (ஒரு கனவில்) தலைவிரி கோலமான ஒரு கருப்புப் பெண் மதீனாவிலிருந்து வெளியேறி, மஹ்யஆ என்ற இடத்தில் தங்குவதைக் கண்டேன். மதீனாவின் கொள்ளை நோய் மஹ்யஆவுக்கு (அதாவது, அல்ஜுஹ்ஃபாவுக்கு) மாற்றப்படுவதன் (அடையாளமாக) நான் அதை வியாக்கியானம் செய்தேன்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا هَزَّ سَيْفًا فِي الْمَنَامِ
கனவில் வாளை ஆட்டினால்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، أُرَاهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ رَأَيْتُ فِي رُؤْيَا أَنِّي هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ، فَإِذَا هُوَ مَا أُصِيبَ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ، ثُمَّ هَزَزْتُهُ أُخْرَى، فَعَادَ أَحْسَنَ مَا كَانَ، فَإِذَا هُوَ مَا جَاءَ اللَّهُ بِهِ مِنَ الْفَتْحِ، وَاجْتِمَاعِ الْمُؤْمِنِينَ ‏ ‏‏.‏
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நான் ஒரு கனவில் கண்டேன், நான் ஒரு வாளை அசைத்தேன், அதன் முன்பகுதி முறிந்துவிட்டது. அது உஹுத் (போர்) நாளில் மூஃமின்களுக்கு (நம்பிக்கையாளர்களுக்கு) ஏற்பட்ட பாதிப்புகளை (இழப்புகளை) அடையாளப்படுத்தியது. பிறகு நான் அதை மீண்டும் அசைத்தேன், அது முன்பிருந்ததை விட மிகச் சிறந்ததாக மாறியது. அது அல்லாஹ் ஏற்படுத்திய வெற்றியையும் (மக்கா வெற்றி), மூஃமின்களின் (நம்பிக்கையாளர்களின்) ஒன்றுகூடலையும் அடையாளப்படுத்தியது.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَنْ كَذَبَ فِي حُلُمِهِ
கனவில் பொய் சொல்பவர்
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ تَحَلَّمَ بِحُلُمٍ لَمْ يَرَهُ، كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ، وَلَنْ يَفْعَلَ، وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ أَوْ يَفِرُّونَ مِنْهُ، صُبَّ فِي أُذُنِهِ الآنُكُ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ صَوَّرَ صُورَةً، عُذِّبِ وَكُلِّفَ أَنْ يَنْفُخَ فِيهَا، وَلَيْسَ بِنَافِخٍ ‏"‏‏.‏ قَالَ سُفْيَانُ وَصَلَهُ لَنَا أَيُّوبُ‏.‏ وَقَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَوْلَهُ مَنْ كَذَبَ فِي رُؤْيَاهُ‏.‏ وَقَالَ شُعْبَةُ عَنْ أَبِي هَاشِمٍ الرُّمَّانِيِّ سَمِعْتُ عِكْرِمَةَ قَالَ أَبُو هُرَيْرَةَ قَوْلَهُ مَنْ صَوَّرَ، وَمَنْ تَحَلَّمَ، وَمَنِ اسْتَمَعَ‏.‏ حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا خَالِدٌ عَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ ‏"‏ مَنِ اسْتَمَعَ، وَمَنْ تَحَلَّمَ، وَمَنْ صَوَّرَ ‏"‏‏.‏ نَحْوَهُ‏.‏ تَابَعَهُ هِشَامٌ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَوْلَهُ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் தாம் காணாத கனவைக் கண்டதாகப் பொய்யாகக் கூறுகிறாரோ, அவர் (மறுமை நாளில்) இரண்டு வாற்கோதுமை தானியங்களுக்கிடையே முடிச்சுப் போடுமாறு கட்டளையிடப்படுவார். அவரால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது. யார் சிலர் தம் பேச்சை அவர் செவியேற்பதை விரும்பாமலிருக்கும்போது அல்லது அவரைவிட்டு அவர்கள் வெருண்டோடும்போது அவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்கிறாரோ அவரின் காதுகளில் மறுமை நாளில் உருக்கப்பட்ட ஈயம் ஊற்றப்படும். யார் (உயிர் உள்ளவற்றின்) உருவப்படம் வரைகிறாரோ அவர் (மறுமை நாளில்) தண்டிக்கப்படுவார். மேலும், அந்த உருவப்படத்திற்கு உயிர் கொடுக்குமாறு அவர் கட்டளையிடப்படுவார். அவரால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، مَوْلَى ابْنِ عُمَرَ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مِنْ أَفْرَى الْفِرَى أَنْ يُرِيَ عَيْنَيْهِ مَا لَمْ تَرَ ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் தாம் காணாத ஒன்றைத் தமது கண்களுக்குக் காட்டியதாகக் கூறுவது (அதாவது, காணாத கனவைக் கண்டதாகப் பொய் கூறுவது) பொய்களில் மிக மோசமானதாகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا رَأَى مَا يَكْرَهُ فَلاَ يُخْبِرْ بِهَا وَلاَ يَذْكُرْهَا
பாடம்: ஒருவர் தான் வெறுக்கக்கூடியதைக் (கனவில்) கண்டால், அது பற்றித் தெரிவிக்கவோ குறிப்பிடவோ கூடாது.
حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ لَقَدْ كُنْتُ أَرَى الرُّؤْيَا فَتُمْرِضُنِي حَتَّى سَمِعْتُ أَبَا قَتَادَةَ يَقُولُ وَأَنَا كُنْتُ لأَرَى الرُّؤْيَا تُمْرِضُنِي، حَتَّى سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ اللَّهِ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يُحِبُّ فَلاَ يُحَدِّثْ بِهِ إِلاَّ مَنْ يُحِبُّ، وَإِذَا رَأَى مَا يَكْرَهُ فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَلْيَتْفِلْ ثَلاَثًا وَلاَ يُحَدِّثْ بِهَا أَحَدًا فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ ‏ ‏‏.‏
அபூ ஸலமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“நான் கனவுகளைக் கண்டு அதனால் நோயுற்று வந்தேன். அபூ கதாதா (ரழி) அவர்கள், ‘நானும் கனவுகளைக் கண்டு அதனால் நோயுற்று வந்தேன்; நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுவதை நான் கேட்கும் வரை’ என்று கூறியதை நான் செவியுற்றேன்:

‘நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் எவரேனும் தமக்கு விருப்பமானதைக் கண்டால், அவர் அதைத் தாம் நேசிப்பவரைத் தவிர வேறு எவரிடமும் கூற வேண்டாம். மேலும், அவர் தமக்கு விருப்பமில்லாததைக் கண்டால், அதன் தீங்கிலிருந்தும், ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். மேலும் மூன்று முறை (உமிழ்நீர் இல்லாமல்) துப்பட்டும். அதை எவரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அது அவருக்குத் தீங்கு செய்யாது.’”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ إِذَا رَأَى أَحَدُكُمُ الرُّؤْيَا يُحِبُّهَا، فَإِنَّهَا مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا، وَلْيُحَدِّثْ بِهَا، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ، فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا، وَلاَ يَذْكُرْهَا لأَحَدٍ، فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ ‏ ‏
அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: "உங்களில் எவரேனும் தனக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். ஆகவே, அதற்காக அவர் அல்லாஹ்வைப் புகழட்டும்; மேலும் அதை (நம்பிக்கைக்குரிய, நல்லோரிடம்) கூறட்டும். மாறாக, தனக்கு விருப்பமில்லாத வேறொன்றை அவர் கண்டால், அது ஷைத்தானிடமிருந்து வந்ததாகும். ஆகவே, அதன் தீங்கிலிருந்து அவர் பாதுகாப்பு தேடட்டும்; மேலும் அதை எவரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அது அவருக்குத் தீங்கிழைக்காது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَنْ لَمْ يَرَ الرُّؤْيَا لأَوَّلِ عَابِرٍ إِذَا لَمْ يُصِبْ
பாடம்: முதல் விளக்கம் அளிப்பவர் சரியாகச் சொல்லாதபோது, கனவு அவருக்கே உரியது என்று கருதாதவர்
حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ كَانَ يُحَدِّثُ أَنَّ رَجُلاً أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ فِي الْمَنَامِ ظُلَّةً تَنْطِفُ السَّمْنَ وَالْعَسَلَ، فَأَرَى النَّاسَ يَتَكَفَّفُونَ مِنْهَا فَالْمُسْتَكْثِرُ وَالْمُسْتَقِلُّ، وَإِذَا سَبَبٌ وَاصِلٌ مِنَ الأَرْضِ إِلَى السَّمَاءِ، فَأَرَاكَ أَخَذْتَ بِهِ فَعَلَوْتَ، ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَعَلاَ بِهِ، ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَعَلاَ بِهِ ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَانْقَطَعَ ثُمَّ وُصِلَ‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَاللَّهِ لَتَدَعَنِّي فَأَعْبُرَهَا‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ اعْبُرْ ‏"‏‏.‏ قَالَ أَمَّا الظُّلَّةُ فَالإِسْلاَمُ، وَأَمَّا الَّذِي يَنْطِفُ مِنَ الْعَسَلِ وَالسَّمْنِ فَالْقُرْآنُ حَلاَوَتُهُ تَنْطُفُ، فَالْمُسْتَكْثِرُ مِنَ الْقُرْآنِ وَالْمُسْتَقِلُّ، وَأَمَّا السَّبَبُ الْوَاصِلُ مِنَ السَّمَاءِ إِلَى الأَرْضِ فَالْحَقُّ الَّذِي أَنْتَ عَلَيْهِ تَأْخُذُ بِهِ فَيُعْلِيكَ اللَّهُ، ثُمَّ يَأْخُذُ بِهِ رَجُلٌ مِنْ بَعْدِكَ فَيَعْلُو بِهِ، ثُمَّ يَأْخُذُ رَجُلٌ آخَرُ فَيَعْلُو بِهِ، ثُمَّ يَأْخُذُهُ رَجُلٌ آخَرُ فَيَنْقَطِعُ بِهِ ثُمَّ يُوَصَّلُ لَهُ فَيَعْلُو بِهِ، فَأَخْبِرْنِي يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ أَصَبْتُ أَمْ أَخْطَأْتُ‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَصَبْتَ بَعْضًا وَأَخْطَأْتَ بَعْضًا ‏"‏‏.‏ قَالَ فَوَاللَّهِ لَتُحَدِّثَنِّي بِالَّذِي أَخْطَأْتُ‏.‏ قَالَ ‏"‏ لاَ تُقْسِمْ ‏"‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் (இன்று) இரவு கனவில் நிழல் தரும் ஒரு மேகத்தைக் கண்டேன். அதிலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக் கொண்டிருந்தன. மக்கள் அதைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொள்வதைக் கண்டேன். அவர்களில் அதிகமாக எடுத்துக் கொண்டவரும் உண்டு; குறைவாக எடுத்துக் கொண்டவரும் உண்டு. மேலும், பூமியிலிருந்து வானம் வரை இணைக்கப்பட்ட ஒரு கயிற்றைக் கண்டேன். நீங்கள் (நபி (ஸல்) அவர்கள்) அதைப் பிடித்து மேலே சென்றதை நான் கண்டேன். பிறகு வேறொருவர் அதைப் பிடித்து மேலே சென்றார். பிறகு வேறொருவர் அதைப் பிடித்து மேலே சென்றார். பிறகு வேறொருவர் அதைப் பிடித்தார்; அது அறுந்துவிட்டது; பின்னர் அது இணைக்கப்பட்டது" என்று கூறினார்.

அபூபக்கர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீது ஆணையாக, இதற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "விளக்கமளியுங்கள்" என்று கூறினார்கள்.

அபூபக்கர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அந்த நிழல் இஸ்லாமாகும். அதிலிருந்து சொட்டும் நெய்யும் தேனும் குர்ஆனாகும். அதன் இனிமை (இவ்வாறு) சொட்டுகிறது. குர்ஆனிலிருந்து அதிகமாகப் பயனடைபவர்களும் (அதனை ஓதுவதிலும், விளங்குவதிலும், செயல்படுத்துவதிலும்) உண்டு; குறைவாகப் பயனடைபவர்களும் உண்டு. வானத்திலிருந்து பூமிக்கு நீண்டிருக்கும் அந்தக் கயிறு, நீங்கள் இருக்கும் சத்தியமாகும். நீங்கள் அதைப் பற்றியுள்ளீர்கள்; அல்லாஹ் உங்களை அதன் மூலம் உயர்த்துகிறான். பிறகு உங்களுக்குப் பின் வேறொருவர் அதைப் பற்றுவார்; அதன் மூலம் அவர் உயர்வார். பிறகு வேறொருவர் அதைப் பற்றுவார்; அதன் மூலம் அவரும் உயர்வார். பிறகு வேறொருவர் அதைப் பற்றுவார்; அவரிடம் அது அறுந்துவிடும் (உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் சவால்களைக் குறிக்கிறது); பின்னர் அவருக்காக அது இணைக்கப்படும் (அலி (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் சத்தியம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதைக் குறிக்கிறது); அதன் மூலம் அவரும் உயர்வார். அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் கூறியது சரியா? தவறா? என்று எனக்கு அறிவியுங்கள்."

நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள், "சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்; சிலவற்றைத் தவறாகச் சொன்னீர்."

அபூபக்கர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் எதில் தவறு செய்தேன் என்பதைத் தாங்கள் எனக்குக் கூற வேண்டும்" என்றார்.

நபி (ஸல்) அவர்கள், "சத்தியம் செய்யாதீர்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب تَعْبِيرِ الرُّؤْيَا بَعْدَ صَلاَةِ الصُّبْحِ
ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு கனவுகளின் விளக்கம்
حَدَّثَنِي مُؤَمَّلُ بْنُ هِشَامٍ أَبُو هِشَامٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَوْفٌ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، حَدَّثَنَا سَمُرَةُ بْنُ جُنْدَبٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِمَّا يُكْثِرُ أَنْ يَقُولَ لأَصْحَابِهِ ‏"‏ هَلْ رَأَى أَحَدٌ مِنْكُمْ مِنْ رُؤْيَا ‏"‏‏.‏ قَالَ فَيَقُصُّ عَلَيْهِ مَنْ شَاءَ اللَّهُ أَنْ يَقُصَّ، وَإِنَّهُ قَالَ ذَاتَ غَدَاةٍ ‏"‏ إِنَّهُ أَتَانِي اللَّيْلَةَ آتِيَانِ، وَإِنَّهُمَا ابْتَعَثَانِي، وَإِنَّهُمَا قَالاَ لِي انْطَلِقْ‏.‏ وَإِنِّي انْطَلَقْتُ مَعَهُمَا، وَإِنَّا أَتَيْنَا عَلَى رَجُلٍ مُضْطَجِعٍ، وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِصَخْرَةٍ، وَإِذَا هُوَ يَهْوِي بِالصَّخْرَةِ لِرَأْسِهِ، فَيَثْلَغُ رَأْسَهُ فَيَتَهَدْهَدُ الْحَجَرُ هَا هُنَا، فَيَتْبَعُ الْحَجَرَ فَيَأْخُذُهُ، فَلاَ يَرْجِعُ إِلَيْهِ حَتَّى يَصِحَّ رَأْسُهُ كَمَا كَانَ، ثُمَّ يَعُودُ عَلَيْهِ، فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الأُولَى‏.‏ قَالَ قُلْتُ لَهُمَا سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ قَالَ قَالاَ لِي انْطَلِقْ ـ قَالَ ـ فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ، وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِكَلُّوبٍ مِنْ حَدِيدٍ، وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقَّىْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ، وَمَنْخِرَهُ إِلَى قَفَاهُ وَعَيْنَهُ إِلَى قَفَاهُ ـ قَالَ وَرُبَّمَا قَالَ أَبُو رَجَاءٍ فَيَشُقُّ ـ قَالَ ثُمَّ يَتَحَوَّلُ إِلَى الْجَانِبِ الآخَرِ، فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ الأَوَّلِ، فَمَا يَفْرُغُ مِنْ ذَلِكَ الْجَانِبِ حَتَّى يَصِحَّ ذَلِكَ الْجَانِبُ كَمَا كَانَ، ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الأُولَى‏.‏ قَالَ قُلْتُ سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ قَالَ قَالاَ لِي انْطَلِقْ‏.‏ فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَى مِثْلِ التَّنُّورِ ـ قَالَ فَأَحْسِبُ أَنَّهُ كَانَ يَقُولُ ـ فَإِذَا فِيهِ لَغَطٌ وَأَصْوَاتٌ ـ قَالَ ـ فَاطَّلَعْنَا فِيهِ، فَإِذَا فِيهِ رِجَالٌ وَنِسَاءٌ عُرَاةٌ، وَإِذَا هُمْ يَأْتِيهِمْ لَهَبٌ مِنْ أَسْفَلَ مِنْهُمْ، فَإِذَا أَتَاهُمْ ذَلِكَ اللَّهَبُ ضَوْضَوْا ـ قَالَ ـ قُلْتُ لَهُمَا مَا هَؤُلاَءِ قَالَ قَالاَ لِي انْطَلِقِ انْطَلِقْ‏.‏ قَالَ فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَى نَهَرٍ ـ حَسِبْتُ أَنَّهُ كَانَ يَقُولُ ـ أَحْمَرَ مِثْلِ الدَّمِ، وَإِذَا فِي النَّهَرِ رَجُلٌ سَابِحٌ يَسْبَحُ، وَإِذَا عَلَى شَطِّ النَّهَرِ رَجُلٌ قَدْ جَمَعَ عِنْدَهُ حِجَارَةً كَثِيرَةً، وَإِذَا ذَلِكَ السَّابِحُ يَسْبَحُ مَا يَسْبَحُ، ثُمَّ يَأْتِي ذَلِكَ الَّذِي قَدْ جَمَعَ عِنْدَهُ الْحِجَارَةَ فَيَفْغَرُ لَهُ فَاهُ فَيُلْقِمُهُ حَجَرًا فَيَنْطَلِقُ يَسْبَحُ، ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ، كُلَّمَا رَجَعَ إِلَيْهِ فَغَرَ لَهُ فَاهُ فَأَلْقَمَهُ حَجَرًا ـ قَالَ ـ قُلْتُ لَهُمَا مَا هَذَانِ قَالَ قَالاَ لِي انْطَلِقِ انْطَلِقْ‏.‏ قَالَ فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَى رَجُلٍ كَرِيهِ الْمَرْآةِ كَأَكْرَهِ مَا أَنْتَ رَاءٍ رَجُلاً مَرْآةً، وَإِذَا عِنْدَهُ نَارٌ يَحُشُّهَا وَيَسْعَى حَوْلَهَا ـ قَالَ ـ قُلْتُ لَهُمَا مَا هَذَا قَالَ قَالاَ لِي انْطَلِقِ انْطَلِقْ‏.‏ فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَى رَوْضَةٍ مُعْتَمَّةٍ فِيهَا مِنْ كُلِّ نَوْرِ الرَّبِيعِ، وَإِذَا بَيْنَ ظَهْرَىِ الرَّوْضَةِ رَجُلٌ طَوِيلٌ لاَ أَكَادُ أَرَى رَأْسَهُ طُولاً فِي السَّمَاءِ، وَإِذَا حَوْلَ الرَّجُلِ مِنْ أَكْثَرِ وِلْدَانٍ رَأَيْتُهُمْ قَطُّ ـ قَالَ ـ قُلْتُ لَهُمَا مَا هَذَا مَا هَؤُلاَءِ قَالَ قَالاَ لِي انْطَلِقِ انْطَلِقْ‏.‏ ـ قَالَ ـ فَانْطَلَقْنَا فَانْتَهَيْنَا إِلَى رَوْضَةٍ عَظِيمَةٍ لَمْ أَرَ رَوْضَةً قَطُّ أَعْظَمَ مِنْهَا وَلاَ أَحْسَنَ‏.‏ ـ قَالَ ـ قَالاَ لِي ارْقَ فِيهَا‏.‏ قَالَ فَارْتَقَيْنَا فِيهَا فَانْتَهَيْنَا إِلَى مَدِينَةٍ مَبْنِيَّةٍ بِلَبِنِ ذَهَبٍ وَلَبِنِ فِضَّةٍ، فَأَتَيْنَا باب الْمَدِينَةِ فَاسْتَفْتَحْنَا فَفُتِحَ لَنَا، فَدَخَلْنَاهَا فَتَلَقَّانَا فِيهَا رِجَالٌ شَطْرٌ مِنْ خَلْقِهِمْ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ، وَشَطْرٌ كَأَقْبَحِ مَا أَنْتَ رَاءٍ ـ قَالَ ـ قَالاَ لَهُمُ اذْهَبُوا فَقَعُوا فِي ذَلِكَ النَّهَرِ‏.‏ قَالَ وَإِذَا نَهَرٌ مُعْتَرِضٌ يَجْرِي كَأَنَّ مَاءَهُ الْمَحْضُ فِي الْبَيَاضِ، فَذَهَبُوا فَوَقَعُوا فِيهِ، ثُمَّ رَجَعُوا إِلَيْنَا قَدْ ذَهَبَ ذَلِكَ السُّوءُ عَنْهُمْ، فَصَارُوا فِي أَحْسَنِ صُورَةٍ ـ قَالَ ـ قَالاَ لِي هَذِهِ جَنَّةُ عَدْنٍ، وَهَذَاكَ مَنْزِلُكَ‏.‏ قَالَ فَسَمَا بَصَرِي صُعُدًا، فَإِذَا قَصْرٌ مِثْلُ الرَّبَابَةِ الْبَيْضَاءِ ـ قَالَ ـ قَالاَ هَذَاكَ مَنْزِلُكَ‏.‏ قَالَ قُلْتُ لَهُمَا بَارَكَ اللَّهُ فِيكُمَا، ذَرَانِي فَأَدْخُلَهُ‏.‏ قَالاَ أَمَّا الآنَ فَلاَ وَأَنْتَ دَاخِلُهُ‏.‏ قَالَ قُلْتُ لَهُمَا فَإِنِّي قَدْ رَأَيْتُ مُنْذُ اللَّيْلَةِ عَجَبًا، فَمَا هَذَا الَّذِي رَأَيْتُ قَالَ قَالاَ لِي أَمَا إِنَّا سَنُخْبِرُكَ، أَمَّا الرَّجُلُ الأَوَّلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُثْلَغُ رَأْسُهُ بِالْحَجَرِ، فَإِنَّهُ الرَّجُلُ يَأْخُذُ الْقُرْآنَ فَيَرْفُضُهُ وَيَنَامُ عَنِ الصَّلاَةِ الْمَكْتُوبَةِ، وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُشَرْشَرُ شِدْقُهُ إِلَى قَفَاهُ، وَمَنْخِرُهُ إِلَى قَفَاهُ، وَعَيْنُهُ إِلَى قَفَاهُ، فَإِنَّهُ الرَّجُلُ يَغْدُو مِنْ بَيْتِهِ فَيَكْذِبُ الْكَذْبَةَ تَبْلُغُ الآفَاقَ، وَأَمَّا الرِّجَالُ وَالنِّسَاءُ الْعُرَاةُ الَّذِينَ فِي مِثْلِ بِنَاءِ التَّنُّورِ فَإِنَّهُمُ الزُّنَاةُ وَالزَّوَانِي‏.‏ وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يَسْبَحُ فِي النَّهَرِ وَيُلْقَمُ الْحَجَرَ، فَإِنَّهُ آكِلُ الرِّبَا، وَأَمَّا الرَّجُلُ الْكَرِيهُ الْمَرْآةِ الَّذِي عِنْدَ النَّارِ يَحُشُّهَا وَيَسْعَى حَوْلَهَا، فَإِنَّهُ مَالِكٌ خَازِنُ جَهَنَّمَ، وَأَمَّا الرَّجُلُ الطَّوِيلُ الَّذِي فِي الرَّوْضَةِ فَإِنَّهُ إِبْرَاهِيمُ صلى الله عليه وسلم وَأَمَّا الْوِلْدَانُ الَّذِينَ حَوْلَهُ فَكُلُّ مَوْلُودٍ مَاتَ عَلَى الْفِطْرَةِ ‏"‏‏.‏ قَالَ فَقَالَ بَعْضُ الْمُسْلِمِينَ يَا رَسُولَ اللَّهِ وَأَوْلاَدُ الْمُشْرِكِينَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَأَوْلاَدُ الْمُشْرِكِينَ‏.‏ وَأَمَّا الْقَوْمُ الَّذِينَ كَانُوا شَطْرٌ مِنْهُمْ حَسَنًا وَشَطَرٌ مِنْهُمْ قَبِيحًا، فَإِنَّهُمْ قَوْمٌ خَلَطُوا عَمَلاً صَالِحًا وَآخَرَ سَيِّئًا، تَجَاوَزَ اللَّهُ عَنْهُمْ ‏"‏‏.‏
ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடிக்கடி தம் தோழர்களிடம், "உங்களில் யாரேனும் கனவு கண்டீர்களா?" என்று கேட்பார்கள். அல்லாஹ் நாடியவர் தம் கனவை அவர்களிடம் கூறுவார். ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நேற்றிரவு என்னிடம் இருவர் (வானவர்கள்) வந்தனர். அவர்கள் என்னை அழைத்துச் சென்றனர்.

நாங்கள் படுத்திருக்கும் ஒரு மனிதரிடம் வந்தோம். அவருக்கு அருகில் மற்றொருவர் ஒரு பாறையைத் தாங்கியபடி நின்று, அந்தப் பாறையினால் படுத்திருப்பவரின் தலையை நசுக்கினார். (நபியவர்கள் இதற்கான விளக்கமாகக் கூறியது: இவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் தூங்கியவர்).

நாங்கள் மல்லாந்து படுத்திருந்த ஒரு மனிதரிடம் வந்தோம். ஒருவர் இரும்புக் கொக்கியால் அவரது வாய், மூக்கு மற்றும் கண்களைப் பிடரி வரை கிழித்தார். (விளக்கம்: இவர் உலகம் முழுவதும் பரவக்கூடிய பொய்யைச் சொல்பவர்).

நெருப்பு அடுப்பு (தன்னூர்) போன்ற ஒன்றில் நிர்வாணமான ஆண்களும் பெண்களும் அலறிக் கொண்டிருந்தனர். (விளக்கம்: இவர்கள் விபச்சாரம் செய்தவர்கள்).

இரத்த ஆறு போன்ற ஒன்றில் ஒரு மனிதர் நீந்திக் கொண்டிருக்க, கரையில் இருந்தவர் அவர் வாயில் கல்லைத் திணித்தார். (விளக்கம்: இவர் வட்டி - ரிபா - உண்டவர்).

அருவருப்பான தோற்றமுடைய ஒருவர் நெருப்பை மூட்டிக் கொண்டிருந்தார். (விளக்கம்: இவர் நரகத்தின் காவலர் மாலிக்).

பசுமையான தோட்டத்தில் வானளாவிய உயரத்துடன் ஒரு மனிதரும், அவரைச் சுற்றி ஏராளமான குழந்தைகளும் இருந்தனர். (விளக்கம்: அந்த மனிதர் இப்ராஹீம் (அலை), குழந்தைகள் இயற்கை நெறியில் - ஃபித்ராவில் - மரணித்தவர்கள்).

தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன நகருக்குள் பாதி அழகாகவும் பாதி குரூரமாகவும் இருந்த மக்கள் ஒரு வெண்மையான ஆற்றில் குளித்து அழகாக மாறினர். (விளக்கம்: இவர்கள் நன்மைகளையும் தீமைகளையும் கலந்து செய்தவர்கள், அல்லாஹ் அவர்களை மன்னித்துவிட்டான்).

இறுதியில் நபியவர்கள் ஒரு வெண்மேகம் போன்ற மாளிகையைக் கண்டார்கள். அதுவே அவர்களது இருப்பிடம் என்று வானவர்கள் கூறினர்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح