டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 80. ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)
மக்கீ, வசனங்கள்: 42
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
80:1 عَبَسَ وَتَوَلّٰٓىۙ
عَبَسَ கடுகடுத்தார் وَتَوَلّٰٓىۙ இன்னும் புறக்கணித்தார்
80:1. 'அBபஸ வ தவல்லா.
80:1. அவர் கடுகடுத்தார்; மேலும், (முகத்தைத்) திருப்பிக்கொண்டார்.
80:2 اَنْ جَآءَهُ الْاَعْمٰىؕ
اَنْ جَآءَهُ அவரிடம் வந்ததற்காக الْاَعْمٰىؕ பார்வையற்றவர்
80:2. அன் ஜா-அஹுல் அஃ-மா
80:2. அவரிடம் பார்வையற்றவர் வந்ததற்காக.
80:3 وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ
وَمَا يُدْرِيْكَ இன்னும் நீர் அறிவீரா? لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ அவர் பரிசுத்தமடையலாம்
80:3. வமா யுத்ரீக ல'அல்லஹு யZஜ் Zஜக்கா.
80:3. (நபியே! உம்மிடம் வந்த) அவர் தூய்மையாகிவிடக்கூடும் என்பதை உமக்கு எது அறிவித்தது?
80:4 اَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰىؕ
اَوْ அல்லது يَذَّكَّرُ அவர் அறிவுரை பெறுவார் فَتَنْفَعَهُ அவருக்கு பலனளிக்கலாம் الذِّكْرٰىؕ அறிவுரை
80:4. அவ் யத்தக்கரு Fபதன்Fப 'அஹுத் திக்ரா.
80:4. அல்லது, அவர் (உம் உபதேசத்தை) நினைவுபடுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
80:5 اَمَّا مَنِ اسْتَغْنٰىۙ
اَمَّا مَنِ ஆக, எவன் اسْتَغْنٰىۙ தேவையற்றவனாகக் கருதினானோ
80:5. அம்மா மனிஸ் தக்னா
80:5. எவன் (பொருளாதாரத்தில்) தேவையற்றவனாக இருக்கிறானோ -
80:6 فَاَنْتَ لَهٗ تَصَدّٰىؕ
فَاَنْتَ நீர் لَهٗ அவனை تَصَدّٰىؕ முன்னோக்குகிறீர்
80:6. Fப-அன்த லஹு தஸத்தா
80:6. நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7 وَمَا عَلَيْكَ اَلَّا يَزَّكّٰٓىؕ
وَمَا இன்னும் இல்லை عَلَيْكَ உம்மீது اَلَّا يَزَّكّٰٓىؕ அவன் பரிசுத்தமடையாதது
80:7. வ ம 'அலய்க அல்லா யZஜ் Zஜக்க.
80:7. ஆயினும், (இஸ்லாத்தை ஏற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம்மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8 وَاَمَّا مَنْ جَآءَكَ يَسْعٰىۙ
وَاَمَّا مَنْ ஆக, எவர் جَآءَ வந்தாரோ كَ உம்மிடம் يَسْعٰىۙ விரைந்தவராக
80:8. வ அம்மா மன் ஜா-அக யஸ்'ஆ
80:8. ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9 وَهُوَ يَخْشٰىۙ
وَهُوَ அவரோ يَخْشٰىۙ பயப்படுகிறவராக
80:9. வஹுவ யக்-ஷா,
80:9. அவர் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவராக
80:10 فَاَنْتَ عَنْهُ تَلَهّٰىۚ
فَاَنْتَ நீர் عَنْهُ அவரை تَلَهّٰىۚ அலட்சியப்படுத்துகிறீர்
80:10. Fப-அன்த 'அன்ஹு தலஹ் ஹா.
80:10. அவரைவிட்டும் நீர் அலட்சியமாக இருக்கின்றீர்.
80:11 كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۚ
كَلَّاۤ அவ்வாறல்ல اِنَّهَا நிச்சயமாக இது تَذْكِرَةٌ ۚ ஓர் அறிவுரை
80:11. கல்லா இன்னஹ தத்கிரஹ்
80:11. அவ்வாறல்ல! ஏனெனில், நிச்சயமாக இது (திருக்குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
80:12 فَمَنْ شَآءَ ذَكَرَهٗۘ
فَمَنْ ஆகவே, யார் شَآءَ நாடுகிறாரோ ذَكَرَهٗۘ இதை நினைவில் வைப்பார்
80:12. Fபமன் ஷா அ தகரஹ்
80:12. எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவுகொள்வார்.
80:13 فِىْ صُحُفٍ مُّكَرَّمَةٍۙ
فِىْ صُحُفٍ ஏடுகளில் مُّكَرَّمَةٍۙ கண்ணி யப்படுத்தப்பட்ட
80:13. Fபி ஸுஹுFபிம் முகர் ரமா,
80:13. (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கின்றது.
80:14 مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍ ۭۙ
مَّرْفُوْعَةٍ உயர்வாக்கப்பட்ட مُّطَهَّرَةٍ ۭۙ தூய்மையாக்கப்பட்ட
80:14. மர்Fபூ'அதிம் முதஹ் ஹரா,
80:14. உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.
80:15 بِاَيْدِىْ سَفَرَةٍۙ
بِاَيْدِىْ கைகளில் سَفَرَةٍۙ எழுதுபவர்களின்
80:15. Bபி'அய்தீ ஸFபரா
80:15. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால் -
80:16 كِرَامٍۢ بَرَرَةٍؕ
كِرَامٍۢ கண்ணிய மானவர்களான بَرَرَةٍؕ நல்லவர்களான
80:16. கிராமிம் Bபரரஹ்.
80:16. (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
80:17 قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗؕ
قُتِلَ அழியட்டும் الْاِنْسَانُ மனிதன் مَاۤ اَكْفَرَهٗؕ அவன் எவ்வளவு நன்றி கெட்டவன்
80:17. குதிலல்-இன்ஸானு மா அக்Fபரஹ்.
80:17. (நன்றிகெட்ட) மனிதன் சபிக்கப்பட்டுவிட்டான்; (நன்றிகெட்டு) அவனை நிராகரிக்கிறவனாக இருக்கச் செய்தது எது?
80:18 مِنْ اَىِّ شَىْءٍ خَلَقَهٗؕ
مِنْ اَىِّ شَىْءٍ எந்த பொருளிலிருந்து خَلَقَهٗؕ அவனைப் படைத்தான்
80:18. மின் அய்யி ஷய்-இன் கலகஹ்
80:18. எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
80:19 مِنْ نُّطْفَةٍؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۙ
مِنْ نُّطْفَةٍؕ விந்திலிருந்து خَلَقَهٗ அவனைப் படைத்தான் فَقَدَّرَهٗ ۙ அவனை அமைத்தான்
80:19. மின் னுத்Fபதின் கலகஹூ Fபகத்தரஹ்.
80:19. (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
80:20 ثُمَّ السَّبِيْلَ يَسَّرَهٗۙ
ثُمَّ பிறகு السَّبِيْلَ பாதையை يَسَّرَهٗۙ அதை எளிதாக்கினான்
80:20. தும்மஸ் ஸBபீல யஸ்-ஸரஹ்
80:20. பின்னர், அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
80:21 ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗۙ
ثُمَّ اَمَاتَهٗ பிறகு அவனை மரணிக்கச் செய்தான் فَاَقْبَرَهٗۙ அவனைப் புதைக்குழியில் தள்ளினான்
80:21. தும்ம அமதஹு Fப-அக்Bபரஹ்
80:21. பின்னர் அவனை மரணிக்கச் செய்து, அவனை மண்ணறைக்குள் ஆக்குகிறான்.
80:22 ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗؕ
ثُمَّ பிறகு اِذَا شَآءَ அவன் நாடியபோது اَنْشَرَهٗؕ அவனை உயிர்ப்பிப்பான்
80:22. தும்ம இத ஷா-அ அன்ஷரஹ்
80:22. பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
80:23 كَلَّا لَمَّايَقْضِ مَاۤ اَمَرَهٗؕ
كَلَّا அவ்வாறல்ல لَـمَّا يَقْضِ அவன் நிறைவேற்றவில்லை مَاۤ اَمَرَهٗؕ எதை/கட்டளையிட்டான்/அவனுக்கு
80:23. கல்ல லம்ம யக்ளி மா அமரஹ்.
80:23. (இவ்வாறிருந்தும், அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
80:24 فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤۙ
فَلْيَنْظُرِ ஆகவே பார்க்கட்டும் الْاِنْسَانُ மனிதன் اِلٰى பக்கம் طَعَامِهٖۤۙ தன் உணவின்
80:24. Fபல்யன்ளுரில் இன்ஸனு இலா த-அமிஹ்
80:24. எனவே, மனிதன் தன் உணவின் பக்கம் (அது எவ்வாறு பெறப்படுகிறது என்பதை) கவனித்துப் பார்க்கட்டும்.
80:25 اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۙ
اَنَّا நிச்சயமாக நான் صَبَبْنَا பொழிந்தோம் الْمَآءَ நீரை صَبًّا ۙ பொழிதல்
80:25. அன்ன ஸBபBப் னல்மா-அ ஸBப்Bபா.
80:25. நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
80:26 ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۙ
ثُمَّ பிறகு شَقَقْنَا பிளந்தோம் الْاَرْضَ பூமியை شَقًّا ۙ பிளத்தல்
80:26. தும்ம ஷ கக்னல்-அர்ள ஷக்கா.
80:26. பின்னர், பூமியை நன்கு பிளக்கச் செய்தோம்.
80:27 فَاَنْۢبَتْنَا فِيْهَا حَبًّا ۙ
فَاَنْۢبَتْنَا இன்னும் முளைக்க வைத்தோம் فِيْهَا அதில் حَبًّا ۙ தானியம்
80:27. Fப அம்Bபத்ன Fபீஹா ஹBப்Bபா
80:27. பின்னர், அதிலிருந்து விதை முளைப்பிக்கிறோம்.
80:28 وَّ عِنَبًا وَّقَضْبًا ۙ
وَّ عِنَبًا இன்னும் திராட்சை وَّقَضْبًا ۙ இன்னும் காய்கறி
80:28. வ 'இனBபவ்-வ கள்Bபா
80:28. திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்
80:29 وَّزَيْتُوْنًا وَّنَخْلًا ؕ
وَّزَيْتُوْنًا இன்னும் ஸைத்தூன் وَّنَخْلًا ؕ இன்னும் பேரிச்சை மரம்
80:29. வ Zஜய்தூனவ் வனக் ல'
80:29. ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும்
80:30 وَحَدَآٮِٕقَ غُلْبًا ۙ
وَحَدَآٮِٕقَ இன்னும் தோட்டங்கள் غُلْبًا ۙ அடர்ந்த
80:30. வ ஹதா-இக குல்Bபா
80:30. அடர்ந்த தோட்டங்களையும்
80:31 وَّفَاكِهَةً وَّاَبًّا ۙ
وَّفَاكِهَةً இன்னும் கனி وَّاَبًّا ۙ இன்னும் புற்பூண்டு
80:31. வ Fபகி ஹதவ்-வ அBப்Bபா.
80:31. பழங்களையும், தீவனங்களையும்
80:32 مَّتَاعًا لَّـكُمْ وَلِاَنْعَامِكُمْؕ
مَّتَاعًا பலன் தருவதற்காக لَّـكُمْ உங்களுக்கும் وَلِاَنْعَامِكُمْؕ உங்கள் கால்நடைகளுக்கும்
80:32. மத'அல்-லகும் வ லி-அன்'அமிகும்.
80:32. (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
80:33 فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ
فَاِذَا جَآءَتِ ஆகவே, வந்தால் الصَّآخَّةُ செவிடாக்கும் சப்தம்
80:33. Fபய்த ஜா-அதிஸ் ஸாகஹ்.
80:33. ஆகவே, (யுக முடிவின் போது, காதைச் செவிடாக்கும்) பெரும் சப்தம் வரும்போது,
80:34 يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ
يَوْمَ நாளில் يَفِرُّ விரண்டோடுவான் الْمَرْءُ மனிதன் مِنْ விட்டும் اَخِيْهِۙ தன் சகோதரன்
80:34. யவ்ம யFபிர்-ருல் மர்-உ மின் அகீஹ்
80:34. அந்த நாளில் மனிதன் வெருண்டோடுவான்; தன் சகோதரனை விட்டும்
80:35 وَاُمِّهٖ وَاَبِيْهِۙ
وَاُمِّهٖ இன்னும் தன் தாய் وَاَبِيْهِۙ இன்னும் தன் தந்தை
80:35. வ உம்மிஹீ வ அBபீஹ்
80:35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்
80:36 وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِؕ
وَصَاحِبَتِهٖ இன்னும் தன் மனைவி وَبَنِيْهِؕ இன்னும் தான் பிள்ளைகள்
80:36. வ ஸாஹி Bபதிஹீ வ Bபனீஹ்.
80:36. தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் (வெருண்டோடுவான்).
80:37 لِكُلِّ امْرِیءٍ مِّنْهُمْ يَوْمَٮِٕذٍ شَاْنٌ يُّغْنِيْهِؕ
لِكُلِّ امْرِیءٍ ஒவ்வொரு மனிதனுக்கும் مِّنْهُمْ அவர்களில் يَوْمَٮِٕذٍ அந்நாளில் شَاْنٌ நிலைமை يُّغْنِيْهِؕ அவனைத் திருப்பிவிடுகின்ற
80:37. லிகுல் லிம்ரி-இம்-மின்ஹும் யவ்மா-இதின் ஷா னுய்-யுக்னீஹ்
80:37. அன்று, ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவள்) நிலையே போதுமானதாயிருக்கும்.
80:38 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ مُّسْفِرَةٌ ۙ
وُجُوْهٌ (சில) முகங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் مُّسْفِرَةٌ ۙ ஒளிரக்கூடியதாக
80:38. வுஜூ ஹு(ன்)ய்-யவ்ம-இதிம்-முஸ்Fபிர;
80:38. அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாக இருக்கும்.
80:39 ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ
ضَاحِكَةٌ சிரித்தவையாக مُّسْتَبْشِرَةٌ ۚ நற்செய்தி பெற்றவையாக
80:39. ளஹி கதும் முஸ்தBப் ஷிரஹ்
80:39. சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
80:40 وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌ ۙ
وَوُجُوْهٌ இன்னும் (சில) முகங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் عَلَيْهَا அவற்றின் மீது غَبَرَةٌ ۙ புழுதி
80:40. வ வுஜூஹுய் யவ்ம-இதின் 'அலய்ஹ கBபரா
80:40. ஆனால், அந்நாளில் (வேறு) சில முகங்கள் - அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
80:41 تَرْهَقُهَا قَتَرَةٌ ؕ
تَرْهَقُهَا அவற்றை மூடிக்கொள்ளும் قَتَرَةٌ ؕ கருமை
80:41. தர்ஹகுஹ கதரஹ்.
80:41. அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
80:42 اُولٰٓٮِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
اُولٰٓٮِٕكَ هُمُ இவர்கள்தான் الْكَفَرَةُ நிராகரிப்பாளர்கள் الْفَجَرَةُ பெரும் பாவிகளான
80:42. உலா-இக ஹுமுல்-கFப ரதுல்-Fபஜரஹ்.
80:42. அவர்கள்தாம் நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.