رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَاஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்وَرَبُّஇன்னும் நிர்வகிப்பவன்الْمَشَارِقِ ؕஅவன் சூரியன் உதிக்கும் இடங்களையும்
லா யஸ்ஸம்ம 'ஊன இலல் மல 'இல் அஃலா வ யுக்தFபூன மின் குல்லி ஜானிBப்
முஹம்மது ஜான்
(அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது; இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேல் உலகத்தில் உள்ளவர்களின் விஷயங்களை (ஷைத்தான்கள்) செவியுற முடியாது. (ஏனென்றால், அதை நெருங்கும் ஒவ்வொருவரும்) பல பாகங்களிலிருந்தும் (கொள்ளிகளால்) எறியப்பட்டு விரட்டப்படுகின்றனர்.
IFT
ஷைத்தான்களால் ‘மலா அஃலா’வின்* செய்திகளைச் செவியுற முடியாது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் எறியப்பட்டு விரட்டப்படுகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மிக உயர்வான (மலக்குகளின்) கூட்டத்தார்பால் (அவர்களின் பேச்சுக்களை மறைந்திருந்து ஷைத்தான்களாகிய) இவர்கள் செவியேற்கமாட்டார்கள், ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (எரி கொள்ளிகளால்) எறியப்படுவார்கள்.
Saheeh International
[So] they may not listen to the exalted assembly [of angels] and are pelted from every side,
ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீர் கேட்பீராக: (இறந்த பின்) உங்களைப் படைப்பது சிரமமா? அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி, நட்சத்திரங்கள் ஆகிய) இவற்றைப் படைப்பது சிரமமா? நிச்சயமாக நாம் இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கிறோம்.
IFT
இப்போது அவர்களிடம் கேளும்: எது அதிகக் கடினமானது? இவர்களைப் படைத்திருப்பதா? அல்லது இப்பொருள்களை நாம் படைத்திருப்பதா? திண்ணமாக, நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே “படைப்பால் அவர்கள் மிகக் கடினமானவர்களா? அல்லது நாம் படைத்திருப்பைவைகளா?” என இவர்களிடம் (நபியே! நீர்) விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணால் படைத்திருக்கின்றோம்.
Saheeh International
Then inquire of them, [O Muhammad], "Are they a stronger [or more difficult] creation or those [others] We have created?" Indeed, We created them [i.e., men] from sticky clay.
اُحْشُرُواஒன்று திரட்டுங்கள்!الَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயம் செய்தவர்களைوَاَزْوَاجَهُمْஅவர்களின் இனத்தவர்களையும்وَمَا كَانُوْا يَعْبُدُوْنَۙஇன்னும் அவர்கள் வணங்கி வந்தவர்களையும்
“அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் நீங்கள் ஒன்று சேர்த்து,
IFT
(இவ்வாறு கட்டளையிடப்படும்:) “அக்கிரமம் இழைத்துக் கொண்டிருந்தவர்களையும் அவர்களுடைய கூட்டாளிகளையும் மற்றும் அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று திரட்டிக் கொண்டு வாருங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அநியாயம் செய்தார்களே அவர்களையும், (அநியாயம் செய்வதில் அவர்களுக்கு நிகரானவர்களான) அவர்களின் துணைவர்களையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தார்களே அவர்களையும் ஒன்று திரட்டுங்கள்”.
Saheeh International
[The angels will be ordered], "Gather those who committed wrong, their kinds, and what they used to worship
“உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?” (என்று கேட்கப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? (உலகத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தபடி இங்கு) நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லை'' (என்றும் கேட்கப்படும்).
IFT
உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இப்போது ஏன் ஒருவருக்கொருவர் நீங்கள் உதவி புரிந்து கொள்வதில்லை?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் உதவி செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை? (என்றும் கேட்கப்படும்).
Saheeh International
[They will be asked], "What is [wrong] with you? Why do you not help each other?"
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்.
IFT
பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்குவார்கள்; ஒருவருக்கொருவர் தர்க்கம் செய்யத் தொடங்குவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களில் சிலர் சிலரை முன்னோக்க்கிக் (கேள்விகளைக்) கேட்டுக் கொள்வார்கள்.
Saheeh International
And they will approach one another asking [i.e., blaming] each other.
قَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்كُنْتُمْஇருந்தீர்கள்تَاْتُوْنَنَاஎங்களிடம் வருபவர்களாகعَنِ الْيَمِيْنِநன்மையை விட்டுத் தடுக்க
காலூ இன்னகும் குன்தும் தா'தூனனா 'அனில் யமீன்
முஹம்மது ஜான்
(தம் தலைவர்களை நோக்கி:) “நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்.
IFT
(பின்பற்றி வாழ்ந்த மக்கள் தம்முடைய தலைவர்களை நோக்கி) கூறுவார்கள்: “சரியான திசையில் வருவது போல் எங்களிடம் நீங்கள் வந்தீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“வலப்பக்கத்திலிருந்து எங்களிடம் (உங்கள் பலத்தால் நல்லவற்றைச் செய்வதிலிருந்து தடுத்தும், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதிலிருந்து எங்களைத் திருப்பி விட்டும்) வருபவர்களாகவும் இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
Saheeh International
They will say, "Indeed, you used to come at us from the right."
இன்னஹும் கானூ இதா கீல லஹும் லா இலாஹ இல்லல் லாஹு யஸ்தக்Bபிரூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் அறவே இல்லை (ஆகவே, அவனையே வணங்குங்கள்)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொள்கின்றனர்,
IFT
இவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்களெனில், “உண்மையான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, அவர்கள் தற்பெருமை கொண்டார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வைத் தவிர வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயன் இல்லை!” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள், பெருமையடிப்பவர்களாக இருந்தனர்.
Saheeh International
Indeed they, when it was said to them, "There is no deity but Allah," were arrogant
“ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை மெய்யாகவே விட்டுவிடுவோமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
IFT
மேலும், கூறினார்கள்: ‘பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை நாங்கள் கைவிட்டு விடுவோமா என்ன?’
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாங்கள் பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்களுடைய வணக்கத்துக்குரியவர்(களான தெய்வங்)களை நிச்சயமாக விட்டுவிடுகின்றவர்களா?” என்றும் அவர்கள் கூறுபவர்களாக இருந்தனர்.
Saheeh International
And were saying, "Are we to leave our gods for a mad poet?"
بَلْ جَآءَ بِالْحَقِّமாறாக அவர் சத்தியத்தைக் கொண்டு வந்தார்وَصَدَّقَஇன்னும் உண்மைப்படுத்தினார்الْمُرْسَلِيْنَதூதர்களை
Bபல் ஜா'அ Bபில்ஹக்கி வ ஸத்தகல் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘(அவர் பைத்தியக்காரர் அல்ல.) மாறாக, அவர் உண்மையையே கொண்டு வந்தார். (தனக்கு முன்னர் வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றை எல்லாம் நீங்கள் பொய்யாக்கி விட்டீர்கள்.)
IFT
அவரோ உண்மையில் சத்தியத்தைக் கொண்டு வந்திருந்தார்; மேலும், ஏனைய இறைத்தூதர்களை மெய்ப்படுத்திக் கொண்டுமிருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர் பைத்தியக்காரர்) அல்ல! அவர் உண்மையான(மார்க்கத்)தையே கொண்டு வந்தார், (தனக்கு முன்சென்ற) தூதர்களையும் அவர் உண்மைப்படுத்தினார்.
Saheeh International
Rather, he [i.e., the Prophet (ﷺ] has come with the truth and confirmed the [previous] messengers.
“நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.)
அப்துல் ஹமீது பாகவி
என்ன! நாம் இறந்து உக்கி எலும்பாகவும், மண்ணாகவும் போனதன் பின்னர் (எழுப்பப்படுவோமா?) நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்குரிய) கூலிகள் கொடுக்கப்படுவோமா?'' என்று (பரிகாசமாகக்) கூறிக் கொண்டிருந்தான்.
IFT
நாம் இறந்து மண்ணோடு மண்ணாகி எலும்புக் கூடுகளாய் ஆன பின்னரும் திண்ணமாக நமக்குக் கூலியும், தண்டனையும் வழங்கப்படுமா?’ என்றெல்லாம் அவன் என்னிடம் வினவிக்கொண்டிருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும், ஆகிவிட்டாலும் (உயிர்ப்பித்து) நாம் கூலி வழங்கப்படுவோரா? (என்றும் கூறுபவனாக இருந்தான்).
Saheeh International
That when we have died and become dust and bones, we will indeed be recompensed?'"
اِلَّا مَوْتَتَـنَاஎங்கள் மரணத்தை தவிரالْاُوْلٰىமுதல்وَمَا نَحْنُஇன்னும் நாங்கள் இல்லைبِمُعَذَّبِيْنَவேதனை செய்யப்படுபவர்களாக
இல்லா மவ்ததனல் ஊல வமா னஹ்னு Bபிமு'அத்தBபீன்
முஹம்மது ஜான்
“(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்று கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சொர்க்கத்தில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்'' (என்றும் கூறுவார்).
IFT
நமக்கு வரவேண்டிய மரணமோ முன்பே வந்துவிட்டதே! இனி நமக்கு எவ்வித வேதனையும் ஏற்படப்போவதில்லை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நம்முடைய முந்தைய மரணத்தைத் தவிர (வேறில்லை), நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர் (என்றும் சுவனவாசிகள் கூறுவர்).
Saheeh International
Except for our first death, and we will not be punished?"
فَرَاغَஆக, அவர் விரைந்தார்اِلٰٓى اٰلِهَتِهِمْஅவர்களின் தெய்வங்கள் பக்கம்فَقَالَகூறினார்اَلَا تَاْكُلُوْنَۚநீங்கள் சாப்பிட மாட்டீர்களா?
Fபராக இலா ஆலிஹதிஹிம் Fபகால அலா த'குலூன்
முஹம்மது ஜான்
அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று; “(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர்) அவர், (அவர்களுடைய கோயிலுக்குள்) அவர்களுடைய தெய்வங்களிடம் இரகசியமாகச் சென்றார். (விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பல வகை உணவுகள் இருக்கக் கண்டு, சிலைகளை நோக்கி) ‘‘நீங்கள் இவற்றை ஏன் புசிப்பதில்லை?
IFT
பின்னர் அவர் அவர்களுடைய கடவுளரின் கோயிலுக்குள் இரகசியமாக நுழைந்து (அவற்றை நோக்கிக்) கூறினார்: “நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர் அவர்களுடைய வணக்கத்துக்குரியவர்(களான தெய்வங்)களின் பால் (மறைவாகச்) சென்று (அங்கு அவர்களுக்கென படைக்கப் பட்டிருந்தவற்றைச் சுட்டிக்காட்டி) “நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கேட்டார்.
Saheeh International
Then he turned to their gods and said, "Do you not eat?
அவர்கள் கூறினார்கள்: “இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு அவர்கள் பதில்கூற வகையறியாது கோபம் கொண்டு,) ‘‘இவருக்காகப் பெரியதொரு (நெருப்புக்) கிடங்கை அமைத்து, அந்நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.
IFT
அவர்கள் தமக்கிடையே கூறிக்கொண்டார்கள். “இவருக்காக ஒரு நெருப்புக் குண்டத்தை உருவாக்குங்கள்; கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இவரை வீசிவிடுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்கள் கோபங் கொண்டு) இவருக்காக ஒரு கிடங்கை எழுப்புங்கள், பின்னர், (அதில் நெருப்பை உண்டாக்கி) அந்நெருப்பில் அவரைப்போட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Construct for him a structure [i.e., furnace] and throw him into the burning fire."
Fபலம்மா Bபலக ம'அ ஹுஸ் ஸஃய கால யா Bபுனய்ய இன்னீ அரா Fபில் மனாமி அன்னீ அத்Bபஹுக Fபன்ளுர் மாதா தரா; கால யா அBபதிFப் 'அல் மா து'மரு ஸதஜிதுனீ இன் ஷா'அல்லாஹு மினஸ் ஸாBபிரீன்
முஹம்மது ஜான்
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்தபொழுது, அவர் (தன் மகனை நோக்கி) ‘‘என் அருமை மைந்தனே! நான் உன்னை (என் கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என் கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?'' என்று கேட்டார். அதற்கவர், ‘‘என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் (அதைச் சகித்துக் கொண்டு) உறுதியாயிருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்'' என்று கூறினார்.
IFT
அம்மகன் அவருடன் சேர்ந்து உழைக்கும் வயதினை அடைந்தபோது இப்ராஹீம் (ஒருநாள்) அவரிடம் கூறினார்: “என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவு கண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!” அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (இஸ்மாயீல்) அவருடன் சேர்ந்து உழைக்ககூடிய பருவத்தை அவர் அடைந்தபொழுது, அவர் (தன் மகனிடம்) ”என் அருமை மகனே! நிச்சயமாக நான், உன்னை அறு(த்து)ப் ப(லியிடுவ)தாக, நிச்சயமாக நான் கனவில் கண்டேன், (இதைப் பற்றி) நீ என்ன அபிப்ராயப்படுகிறாய்?” என்று கேட்டார், அ(தற்க)வர், “என் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள், அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் உள்ளவனாகக் காண்பீர்கள்” என்று கூறினார்.
Saheeh International
And when he reached with him [the age of] exertion, he said, "O my son, indeed I have seen in a dream that I [must] sacrifice you, so see what you think." He said, "O my father, do as you are commanded. You will find me, if Allah wills, of the steadfast."
فَلَمَّاۤ اَسْلَمَاஅப்போது அவர்கள் இருவரும் முற்றிலும் பணிந்தனர்وَتَلَّهٗஅவர் அவரை கீழே சாய்த்தார்لِلْجَبِيْنِۚகன்னத்தின் மீது
Fபலம்மா அஸ்லமா வ தல்லஹூ லில்ஜBபீன்
முஹம்மது ஜான்
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் பணிந்து, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) அவரை முகங்குப்புறக் கிடத்தினார்.
IFT
இறுதியில் அவ்விருவரும் இறைவனுக்கு முன்னால் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்கள். மேலும், இப்ராஹீம் மகனை முகங்குப்புறக் கிடத்தினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவ்விருவரும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து, (இப்றாஹீமாகிய) அவர், (இஸ்மாயிலாகிய) அவரை (அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தியபோது,
Saheeh International
And when they had both submitted and he put him down upon his forehead,
இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நம் நற்பாக்கியங்களைச் சொரிந்தோம். அவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் இருக்கின்றனர்; பகிரங்கமாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்(ட கெட்)டவர்களும் இருக்கின்றனர்.
IFT
மேலும், அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் அருட்பாக்கியங்களைப் பொழிந்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல்களில் சிலர் நன்னடத்தை கொண்டவர்களாகவும் இன்னும் சிலர் தமக்குத் தாமே வெளிப்படையாக கொடுமை புரிபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நமது பாக்கியங்களை நல்கினோம். அவ்விருவரின் சந்ததியரில் நன்மை செய்பவரும், பகிரங்கமாகத் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொள்பவரும் இருக்கின்றனர்.
Saheeh International
And We blessed him and Isaac. But among their descendants is the doer of good and the clearly unjust to himself [i.e., sinner].
இன்னும், நீங்கள் காலை வேளைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் வர்த்தகத்திற்காக ஷாம் தேசம் போகும்பொழுதும், வரும்பொழுதும்) காலையிலோ மாலையிலோ, நிச்சயமாக நீங்கள் (அழிந்துபோன) அவர்களை கடந்து செல்கிறீர்கள்.
IFT
நீங்கள் (இப்போது இரவிலும், பகலிலும்) அழிந்து போன அவர்களின் நகரங்களின் அருகே கடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் வர்த்தகத்திற்குச் சென்று திரும்புகின்ற போது) காலைப் பொழுதை அடைந்தவர்களாக நிச்சயமாக நீங்கள் அவர்களின் (ஊரின்) மீதே நடந்து செல்கின்றீர்கள்.
فَنَبَذْنٰهُஅவரை எறிந்தோம்بِالْعَرَآءِபெருவெளியில்وَهُوَஅவர்سَقِيْمٌۚநோயுற்றவராக இருந்தார்
FபனBபத்னாஹு Bபில்'அரா'இ வ ஹுவ ஸகீம்
முஹம்மது ஜான்
ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார்.
IFT
இறுதியில் அவர் பெரிதும் நோயுற்றிருந்த நிலையில் ஒரு பாலைவெளியில் அவரை நாம் எறிந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர் துதி செய்ததன் காரணமாக) அவர் நோயுற்றவராக இருந்தநிலையில் வெட்டவெளியில், (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறிந்தோம்.
Saheeh International
But We threw him onto the open shore while he was ill.
اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مِّنْ اِفْكِهِمْதங்களது பெரும் பொய்யில்لَيَقُوْلُوْنَۙஅவர்கள் கூறுகின்றனர்
அலா இன்னஹும் மின் இFப்கிஹிம் ல யகூலூன்
முஹம்மது ஜான்
“அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று'' இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீர் அறிந்து கொள்வீராக. நிச்சயமாக இவர்கள் பொய்யர்களே!
IFT
நன்கு கேட்டுக்கொள்ளுங்கள். தாமாகப் புனைந்துதான் அவர்கள் கூறுகின்றார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அறிந்து கொள்வீராக! நிச்சயமாக இவர்கள் தங்கள் பொய்யினால் கூறுகின்றனர்,
Saheeh International
Unquestionably, it is out of their [invented] falsehood that they say,
‘‘அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று'' இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீர் அறிந்து கொள்வீராக. நிச்சயமாக இவர்கள் பொய்யர்களே!
IFT
அல்லாஹ் குழந்தைகளைப் பெற்றெடுத்தான் என்று. மேலும், உண்மையில் இவர்கள் பொய்யர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் (என்று)_ நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்; ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்கும் இடையில் பந்துத்துவத்தைக் கற்பனை செய்கின்றனர். ஆயினும், ஜின்களோ (தாங்கள் குற்றம் செய்தால் தண்டனைக்காக) நிச்சயமாக அவனிடம் கொண்டு வரப்படுவோம் என்று திட்டமாக அறிந்து இருக்கின்றனர்.
IFT
அல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும் இடையே இவர்கள் உறவுமுறையை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். உண்மையில் இவர்கள் குற்றவாளிகளாய் கொண்டு வரப்படுவார்கள் என்பதை வானவர்கள் நன்கறிந்துள்ளார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) இவர்கள், அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் வம்சா வழி உறவை (கற்பனையாக) ஆக்குகின்றனர், ஜின்கள் (தண்டனைக்காக) நிச்சயமாக தாம் (அல்லாஹ்விடம்) கொண்டுவரப்படுபவர்கள் என்று திட்டமாக அறிந்தும் இருகின்றனர்.
Saheeh International
And they have made [i.e., claimed] between Him and the jinn a lineage, but the jinn have already known that they [who made such claims] will be brought [to punishment].
ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது.
IFT
ஆக, நீங்களும் நீங்கள் வணங்கி வருகின்ற இந்தத் தெய்வங்களும் ,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவைகளும்,
Saheeh International
So indeed, you [disbelievers] and whatever you worship,
(எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது.
IFT
அல்லாஹ்வை விட்டு எவரையும் திசைதிருப்பிவிட முடியாது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஒன்று சேர்ந்தபோதிலும் எவரையும் அல்லாஹ்வாகிய) அவனுக்கு விரோதமாக நீங்கள் வழி கெடுத்து விடுபவர்களல்லர்_
فَكَفَرُوْا بِهٖஅதை அவர்கள் நிராகரித்து விட்டனர்فَسَوْفَ يَعْلَمُوْنَஅவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்
FபகFபரூ Bபிஹீ Fபஸவ்Fப யஃலமூன்
முஹம்மது ஜான்
ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
அப்துல் ஹமீது பாகவி
எனினும், இவ்வாறு கூறிக்கொண்டிருந்த இவர்களிடம் (இவ்வேதம் வரவே,) அதை இவர்கள் நிராகரிக்கின்றனர். அதிசீக்கிரத்தில் (இதன் முடிவை) இவர்கள் அறிந்து கொள்வார்கள்.
IFT
ஆயினும் (அது வந்துவிட்டபோது) இவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள்! இனி (தமது நடத்தைக்கான விளைவை) அதிவிரைவில் இவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது (இவ்வேதம் வரவே,) இதை அவர்கள் நிராகரித்துவிட்டனர், அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
Saheeh International
But they disbelieved in it, so they are going to know.