69. ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)

மக்கீ, வசனங்கள்: 52

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اَلْحَآقَّةُ ۟ۙ
اَلْحَآقَّةُۙநிச்சயமாக நிகழக்கூடியது
அல் ஹாக்கஹ்
முஹம்மது ஜான்
நிச்சயமானது.
அப்துல் ஹமீது பாகவி
(நிகழக்கூடிய) உண்மை(ச் சம்பவம்)
IFT
நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய விஷயம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உறுதியாக நடந்தேறக்கூடியதா(ன மறுமைநாளா)னது-
Saheeh International
The Inevitable Reality -
مَا الْحَآقَّةُ ۟ۚ
مَاஎன்னالْحَآقَّةُۚநிச்சயமாக நிகழக்கூடியது
மல் ஹாக்கஹ்
முஹம்மது ஜான்
நிச்சயமானது எது?
அப்துல் ஹமீது பாகவி
அந்த உண்மை(ச் சம்பவம்) எது?
IFT
நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய அந்த விஷயம் என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உறுதியாக நடந்தேறக்கூடியது என்ன?
Saheeh International
What is the Inevitable Reality?
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحَآقَّةُ ۟ؕ
وَ مَاۤமேலும் எதுاَدْرٰىكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்னவென்றுالْحَآقَّةُؕஅந்த உறுதியான நிகழ்ச்சி
வ மா அத்ராக மல் ஹாக்கஹ்
முஹம்மது ஜான்
அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அந்த உண்மை(ச் சம்பவம்) என்னவென்பதை நீர் அறிவீரா?
IFT
நிச்சயமாக நிகழ்ந்தே தீர வேண்டிய அந்த விஷயம் என்னவென்று உமக்குத் தெரியுமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உறுதியாக நடந்தேறக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
Saheeh International
And what can make you know what is the Inevitable Reality?
كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌ بِالْقَارِعَةِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்ثَمُوْدُஸமூதுوَ عَادٌۢமேலும் ஆதுبِالْقَارِعَةِதிடுக்கிடச் செய்யும் நாளை
கத்தBபத் தமூது வ 'ஆதும் Bபில் காரி'அஹ்
முஹம்மது ஜான்
ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
‘ஸமூத்' என்னும் மக்களும் ‘ஆத்' என்னும் மக்களும் (மரணித்தவர்களைத்) தட்டி எழுப்பு(ம் அச்சம்ப)வ(த்)தைப் பொய்யாக்கினர்.
IFT
ஸமூது மற்றும் ஆது சமூகத்தினர் திடீரென நிகழவிருக்கும் அந்த ஆபத்தைப் பொய்யென வாதிட்டனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஸமூது (கூட்டத்தினரும், ஆது) கூட்டத்தினரும் (இதயங்களைத்) திடுக்கிடச் செய்யக்கூடியதை (மறுமைநாளை)ப் பொய்யாக்கினர்.
Saheeh International
Thamūd and ʿAad denied the Striking Calamity [i.e., the Resurrection].
فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِیَةِ ۟
فَاَمَّاஎனவேثَمُوْدُஸமூதுفَاُهْلِكُوْاஅழிக்கப்பட்டனர்بِالطَّاغِیَةِவரம்பு மீறிய பேரொலியால்
Fப-அம்மா தமூது Fப உஹ்லிகூ Bபித்தாகியஹ்
முஹம்மது ஜான்
எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, ‘ஸமூத்' மக்கள் பெரும் சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.
IFT
எனவே ஸமூது சமூகத்தினர் ஒரு கடுமையான விபத்தினால் அழிக்கப்பட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (ஸாலிஹ் நபியின் கூட்டத்தாராகிய) ஸமூது ஒரு பெரிய சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.
Saheeh International
So as for Thamūd, they were destroyed by the overpowering [blast].
وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِیْحٍ صَرْصَرٍ عَاتِیَةٍ ۟ۙ
وَ اَمَّاஇன்னும்عَادٌஆது சமுதாயமோفَاُهْلِكُوْاஅவர்கள் அழிக்கப்பட்டார்கள்بِرِیْحٍஒரு காற்றினால்صَرْصَرٍகடுங்குளிருடையعَاتِیَةٍۙகட்டுக்கடங்காத
வ அம்மா 'ஆதுன் Fப உஹ்லிகூ Bபி ரீஹின் ஸர்ஸரின் 'ஆதியஹ்
முஹம்மது ஜான்
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.
IFT
ஆது சமூகத்தினர் மிகப்பெரிய கடும் சூறாவளிக் காற்றினால் அழிக்கப்பட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (ஹூது நபியின் கூட்டத்தாராகிய) ஆது, பெரும் சப்தத்தோடு கடுங்குளிர் கலந்த கொடுங்காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.
Saheeh International
And as for ʿAad, they were destroyed by a screaming, violent wind
سَخَّرَهَا عَلَیْهِمْ سَبْعَ لَیَالٍ وَّثَمٰنِیَةَ اَیَّامٍ ۙ حُسُوْمًاۙ فَتَرَی الْقَوْمَ فِیْهَا صَرْعٰی ۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِیَةٍ ۟ۚ
سَخَّرَهَاஅதனை அவன் ஏவினான்عَلَیْهِمْஅவர்கள் மீதுسَبْعَஏழுلَیَالٍஇரவுகள்وَّ ثَمٰنِیَةَமேலும் எட்டுاَیَّامٍ ۙநாட்கள்حُسُوْمًا ۙதொடர்ச்சியாகفَتَرَیஅப்போது நீர் காண்பீர்الْقَوْمَஅந்த மக்களைفِیْهَاஅதில்صَرْعٰی ۙவீழ்ந்து கிடப்பவர்களாகكَاَنَّهُمْஅவர்கள் இருப்பதைப் போலاَعْجَازُஅடிமரங்கள்نَخْلٍபேரீச்ச மரத்தின்خَاوِیَةٍۚஉள்ளீடற்ற
ஸக்கர ஹா 'அலய்ஹிம் ஸBப்'அ ல யாலி(ன்)வ் வ தமானியத அய்யாமின் ஹுஸூமன் Fபதரல் கவ்ம Fபீஹா ஸர்'ஆ க அன்னஹும் அஃஜாZஜு னக்லின் காவியஹ்
முஹம்மது ஜான்
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
அப்துல் ஹமீது பாகவி
ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீர் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர்.
IFT
அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். (நீர் அங்கு இருந்திருந்தால்) இற்றுப்போன ஈச்சமரத் தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அதை அவன் வசப்படுத்தி (வீசச்செய்து) இருந்தான், ஆகவே, (நபியே! அப்பொழுது நீர் அங்கிருந்திருப்பின்) அவற்றில் அக்கூட்டத்தினரை-நிச்சயமாக அவர்கள், அடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கும் ஈச்சமரங்களைப் போன்று பிணங்களாக(க் கிடப்பதை) நீர் காண்பீர்.
Saheeh International
Which He [i.e., Allah] imposed upon them for seven nights and eight days in succession, so you would see the people therein fallen as if they were hollow trunks of palm trees.
فَهَلْ تَرٰی لَهُمْ مِّنْ بَاقِیَةٍ ۟
فَهَلْஎனவேتَرٰیகாண்கிறீராلَهُمْஅவர்களில்مِّنْۢஏதேனும்بَاقِیَةٍஎஞ்சியிருப்பதை
Fபஹல் தரா லஹும் மின் Bபாகியஹ்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
அப்துல் ஹமீது பாகவி
(இன்றைக்கும்) அவர்களில் எவரும் தப்பி(ப் பிழைத்து) இருப்பதை நீர் காண்கிறீரா?
IFT
இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பது உமக்குத் தெரிய வருகிறதா என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (இன்றைக்கும்) அவர்களில் எஞ்சியிருப்போரை நீர் காண்கின்றீரா?
Saheeh International
Then do you see of them any remains?
وَجَآءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهٗ وَالْمُؤْتَفِكٰتُ بِالْخَاطِئَةِ ۟ۚ
وَ جَآءَமேலும் வந்தான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்وَ مَنْமேலும் எவர்قَبْلَهٗஅவனுக்கு முன்னால்وَ الْمُؤْتَفِكٰتُமேலும் தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்களும்بِالْخَاطِئَةِۚபாவத்துடன்
வ ஜா'அ Fபிரவ்னு வ மன் கBப்லஹூ வல் மு'தFபிகாது Bபில் காதி'அஹ்
முஹம்மது ஜான்
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும் தலைகீழாகப் புறட்டப்பட்ட ஊரிலிருந்த (லூத்துடைய) மக்களும் (அந்த உண்மையான சம்பவத்தை நிராகரித்துப்) பாவம் செய்துகொண்டே வந்தார்கள்.
IFT
ஃபிர்அவ்னும் அவனுக்கு முன்பிருந்த மக்களும், தலை கீழாகப் புரட்டப்பட்ட ஊர் (வாசி)களும் இதே பெருந்தவறைச் செய்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஃபிர் அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும், தலை கீழாய்ப் புரட்டப்பட்ட ஊரிலிருந்தவர்களும் (இணைவைத்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரித்துப்) பாவச்செயலைச் செய்து வந்தார்கள்.
Saheeh International
And there came Pharaoh and those before him and the overturned cities with sin.
فَعَصَوْا رَسُوْلَ رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِیَةً ۟
فَعَصَوْاஎனவே அவர்கள் மாறுசெய்தார்கள்رَسُوْلَதூதருக்குرَبِّهِمْதங்கள் இறைவனின்فَاَخَذَهُمْஎனவே அவன் அவர்களைப் பிடித்தான்اَخْذَةًஒரு பிடியாகرَّابِیَةًகடுமையான
Fப 'அஸவ் ரஸூல ரBப்Bபிஹிம் Fப அகதஹும் அக்ததர் ராBபியஹ்
முஹம்மது ஜான்
அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர்; ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். ஆதலால், அவன் அவர்களை மிக்க பலமாகப் பிடித்துக்கொண்டான்.
IFT
அவர்கள் அனைவரும் தங்களுடைய இறைத்தூதர்களின் பேச்சைக் கேட்கவில்லை. எனவே அவன் அவர்களை மிகக் கடுமையாகப் பிடித்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் தங்கள் இரட்சகனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆகையால், அவன் அவர்களை மிகக் கடுமையான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
Saheeh International
And they disobeyed the messenger of their Lord, so He seized them with a seizure exceeding [in severity].
اِنَّا لَمَّا طَغَا الْمَآءُ حَمَلْنٰكُمْ فِی الْجَارِیَةِ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்لَمَّاபொழுதுطَغَاபொங்கி உயர்ந்தالْمَآءُதண்ணீர்حَمَلْنٰكُمْஉங்களை நாம் சுமந்தோம்فِیஇல்الْجَارِیَةِۙகப்பல்
இன்னா லம்மா தகல் மா'உ ஹமல்னாகும் Fபில் ஜாரியஹ்
முஹம்மது ஜான்
தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நூஹ் நபி காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில்) தண்ணீர் பெருக்கெடுத்தபோது, நிச்சயமாக நாம் உங்(கள் மூதாதை)களைக் கப்பலில் ஏற்றி (காப்பாற்றி)க் கொண்டோம்.
IFT
வெள்ளப் பிரளயம் எல்லை கடந்து போனபோது நாம் உங்களைக் கப்பலில் ஏற்றினோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தண்ணீர் எல்லை மீறிய(தால் பெருக்கெடுத்து ஓடிய)பொழுது, நிச்சயமாக நாம் உங்(கள் முன்னோர்)களைக் கப்பலில் ஏற்றி(க்காப்பாற்றி)னோம்.
Saheeh International
Indeed, when the water overflowed, We carried you [i.e., your ancestors] in the sailing ship
لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَّتَعِیَهَاۤ اُذُنٌ وَّاعِیَةٌ ۟
لِنَجْعَلَهَاநாம் அதனை ஆக்குவதற்காகلَكُمْஉங்களுக்குتَذْكِرَةًஒரு நினைவூட்டலாகوَّ تَعِیَهَاۤமேலும் அதனை நினைவில் இருத்தவும்اُذُنٌசெவிوَّاعِیَةٌநினைவில் இருத்தும்
லி னஜ்'அலஹா லகும் தத்கி ரத(ன்)வ்-வ த'இயஹா உதுனு(ன்)வ் வா'இயஹ்
முஹம்மது ஜான்
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
அப்துல் ஹமீது பாகவி
அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்).
IFT
இச்சம்பவங்களை நாம் படிப்பினையூட்டும் ஒரு பாடமாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும், நினைவுகூரும் செவிகள் இதனை நினைவிலிருத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்குவதற்காகவும், பேணிப்பாதுகாக்கும் செவி, அதனை (க்கேட்ட பின் நினைவில் வைத்து) பேணிப் பாதுகாப்பதற்காகவும் (அவ்வாறு செய்தோம்).
Saheeh International
That We might make it for you a reminder and [that] a conscious ear would be conscious of it.
فَاِذَا نُفِخَ فِی الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۟ۙ
فَاِذَاஆகவே எப்போதுنُفِخَஊதப்படுமோفِیஇல்الصُّوْرِஸூர் (எக்காளம்)نَفْخَةٌஊதுதல்وَّاحِدَةٌۙஒரே ஒரு
Fப இதா னுFபிக Fபிஸ் ஸூரி னFப்கது(ன்)வ் வாஹிதஹ்
முஹம்மது ஜான்
எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
அப்துல் ஹமீது பாகவி
(பலமாக) ஒரு முறை ஸூர் ஊதப்பட்டு,
IFT
பிறகு ஒரே ஒரு தடவை எக்காளம் ஊதப்படும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, குழல் (ஸூர்) ஒரு முறை ஊதப்பட்டால்-
Saheeh International
Then when the Horn is blown with one blast
وَّحُمِلَتِ الْاَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً ۟ۙ
وَّ حُمِلَتِமேலும் தூக்கப்பட்டுالْاَرْضُபூமியும்وَ الْجِبَالُமலைகளும்فَدُكَّتَاபின்னர் அவ்விரண்டும் தூளாக்கப்படும்دَكَّةًதூளாக்கலாகوَّاحِدَةًۙஒரே
வ ஹுமிலதில் அர்ளு வல் ஜிBபாலு Fபதுக்கதா தக்கத(ன்)வ் வாஹிதஹ்
முஹம்மது ஜான்
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
அப்துல் ஹமீது பாகவி
பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) ஒன்றோடொன்று மோதி பலமாக அடிக்கப்பட்டால்,
IFT
மேலும், பூமியையும் மலைகளையும் தூக்கி ஒரே அடியில் அவை நொறுங்கி, துகள்துகளாக ஆக்கப்படும்போது ;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியும், மலைகளும் உயர்த்தப்பட்டு, அவ்விரண்டும் ஒரே தூளாக தூளாக்கப்பட்டுவிட்டால்,
Saheeh International
And the earth and the mountains are lifted and leveled with one blow [i.e., stroke] -
فَیَوْمَىِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ
فَیَوْمَىِٕذٍஅந்நாளில்وَّقَعَتِநிகழும்الْوَاقِعَةُۙநிகழவேண்டிய அச்சம்பவம்
Fப யவ்ம'இதி(ன்)வ் வக'அதில் வாகி'அஹ்
முஹம்மது ஜான்
அந்த நாளில் தான் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில்தான் யுகமுடிவின் மாபெரும் சம்பவம் நிகழும்.
IFT
அந்த நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்தே தீரும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்து விடும்.
Saheeh International
Then on that Day, the Occurrence [i.e., Resurrection] will occur,
وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِیَ یَوْمَىِٕذٍ وَّاهِیَةٌ ۟ۙ
وَ انْشَقَّتِமேலும் பிளந்துவிடும்السَّمَآءُவானம்فَهِیَஆகவே அதுیَوْمَىِٕذٍஅந்நாளில்وَّاهِیَةٌۙபலவீனமானதாகிவிடும்
வன்ஷக்கதிஸ் ஸமா'உ Fபஹிய யவ்ம 'இதி(ன்)வ்-வாஹியஹ்
முஹம்மது ஜான்
வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் வானம் வெடித்து, அது பலவீனமாகி விடும்.
IFT
மேலும் (அந்நாளில்) வானம் பிளக்கும், அதன் கட்டுக்கோப்பு குலைந்து போய்விடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானமும் பிளந்து, அது அந்நாளில் பலமற்றதாகிவிடும்.
Saheeh International
And the heaven will split [open], for that Day it is infirm.
وَّالْمَلَكُ عَلٰۤی اَرْجَآىِٕهَا ؕ وَیَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ یَوْمَىِٕذٍ ثَمٰنِیَةٌ ۟ؕ
وَّ الْمَلَكُவானவர்கள்عَلٰۤیமீதுاَرْجَآىِٕهَا ؕஅதன் ஓரங்கள்وَ یَحْمِلُமேலும் சுமப்பார்கள்عَرْشَஅர்ஷைرَبِّكَஉமது இறைவனின்فَوْقَهُمْதங்களுக்கு மேல்یَوْمَىِٕذٍஅந்நாளில்ثَمٰنِیَةٌؕஎட்டுப் பேர்
வல் மலகு 'அலா அர்ஜா'இஹா; வ யஹ்மிலு 'அர்ஷ ரBப்Bபிக Fபவ்கஹும் யவ்ம'இதின் தமானியஹ்
முஹம்மது ஜான்
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வானவர்கள் அதன் கோடிகளிலிருப்பார்கள். மேலும், அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை, எட்டு வானவர்கள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள்.
IFT
வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். மேலும், உம் இறைவனின் அர்ஷை* அன்று எட்டு வானவர்கள் தங்களின் மீது சுமந்துகொண்டிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) மலக்குகள் அதன் கடைக்கோடிகளில் இருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உமதிரட்சகனின் அர்ஷை (மலக்குகளில்) எட்டுப்பேர் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டிருப்பார்கள்.
Saheeh International
And the angels are at its edges. And there will bear the Throne of your Lord above them, that Day, eight [of them].
یَوْمَىِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰی مِنْكُمْ خَافِیَةٌ ۟
یَوْمَىِٕذٍஅந்நாளில்تُعْرَضُوْنَநீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்لَاஇல்லைتَخْفٰیமறைந்திருக்கும்مِنْكُمْஉங்களில்خَافِیَةٌஎந்த இரகசியமும்
யவ்ம'இதின் துஃரளூன லா தக்Fபா மின் கும் காFபியஹ்
முஹம்மது ஜான்
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
IFT
அந்நாளில் நீங்கள் ஆஜர்படுத்தப்படுவீர்கள். உங்களுடைய எந்த இரகசியமும் அன்று மறைந்து இருக்காது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே! அந்நாளில் நீங்கள் (உங்கள் இரட்சகன் முன்) எடுத்துக் காட்டப்படுவீர்கள்; உங்களிலிருந்து மறையக்கூடியது எதுவும் (அவனுக்கு) மறைந்துவிடாது.
Saheeh International
That Day, you will be exhibited [for judgement]; not hidden among you is anything concealed.
فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۙ فَیَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِیَهْ ۟ۚ
فَاَمَّاஎனவேمَنْஎவர்اُوْتِیَகொடுக்கப்பட்டாரோكِتٰبَهٗதனது ஏட்டைبِیَمِیْنِهٖ ۙதனது வலது கையில்فَیَقُوْلُஅவர் கூறுவார்هَآؤُمُஇதோاقْرَءُوْاவாசியுங்கள்كِتٰبِیَهْۚஎனது ஏட்டை
Fப அம்மா மன் ஊதிய கிதாBபஹூ Bபியமீனிஹீ Fப யகூலு ஹா'உமுக் ர'ஊ கிதாBபியஹ்
முஹம்மது ஜான்
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), “இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்” எனக் கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
எவருடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுகிறாரோ அவர் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்)கூறுவார்: ‘‘இதோ! என் ஏடு; இதை நீங்கள் படித்துப் பாருங்கள்,
IFT
அன்று தன் வலக்கையில் யாருக்குச் செயலேடு தரப்படு கிறதோ அவர் கூறுவார்: “இதோ, பாருங்கள்! படியுங்கள், என் வினைச் சுவடியை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எவர், தன்னுடைய பதிவுப்புத்தகத்தை வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ அவர், (மற்றவர்களிடம்) வாருங்கள், என்னுடைய பதிவுப் புத்தகத்தை நீங்கள் படித்துப் பாருங்கள்” என்று (மகிழ்ச்சியுடன்) கூறுவார்.
Saheeh International
So as for he who is given his record in his right hand, he will say, "Here, read my record!
اِنِّیْ ظَنَنْتُ اَنِّیْ مُلٰقٍ حِسَابِیَهْ ۟ۚ
اِنِّیْநிச்சயமாக நான்ظَنَنْتُஉறுதியாக நம்பினேன்اَنِّیْநான்مُلٰقٍசந்திப்பேன் என்றுحِسَابِیَهْۚஎனது கணக்கை
இன்னீ ளனன்து அன்னீ முலாகின் ஹிஸாBபியஹ்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக, நான் என்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நான் என் கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்.''
IFT
நிச்சயம் என்னுடைய கணக்கை நான் சந்திப்பேன் என்று நான் எண்ணியேயிருந்தேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கை நிச்சயமாக சந்திப்பேன் என்று உறுதியாக எண்ணியிருந்தேன்” (என்றும் கூறுவார்)
Saheeh International
Indeed, I was certain that I would be meeting my account."
فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ۙ
فَهُوَஆகவே அவர்فِیْஇல்عِیْشَةٍவாழ்க்கைرَّاضِیَةٍۙதிருப்தியான
Fபஹுவ Fபீ 'ஈஷதிர் ராளியஹ்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில்,
IFT
அவர் மனத்திற்குகந்த வாழ்க்கையில் இருப்பார்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர் திருப்தியான வாழ்வில் இருப்பார்.
Saheeh International
So he will be in a pleasant life -
فِیْ جَنَّةٍ عَالِیَةٍ ۟ۙ
فِیْஇல்جَنَّةٍசுவனம்عَالِیَةٍۙஉயர்ந்த
Fபீ ஜன்ன்னதின் 'ஆலியஹ்
முஹம்மது ஜான்
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
அப்துல் ஹமீது பாகவி
மேலான சொர்க்கத்தில் இருப்பார்.
IFT
உன்னதமான சுவனத்தில்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உயர்வான சுவனத்தில் இருப்பார்.
Saheeh International
In an elevated garden,
قُطُوْفُهَا دَانِیَةٌ ۟
قُطُوْفُهَاஅதன் கனிக்குலைகள்دَانِیَةٌதாழ்ந்து தொங்கும்
குதூFபுஹா தானியஹ்
முஹம்மது ஜான்
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திலிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும்.
IFT
அங்கு பழக்குலைகள் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதன் கனிகள் (அவர்களின் கைக்கெட்டும் விதமாக பறிப்பதற்கு மிக) நெருங்கியவையாக இருக்கும்.
Saheeh International
Its [fruit] to be picked hanging near.
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَاۤ اَسْلَفْتُمْ فِی الْاَیَّامِ الْخَالِیَةِ ۟
كُلُوْاஉண்ணுங்கள்وَ اشْرَبُوْاமேலும் பருகுங்கள்هَنِیْٓـًٔۢاமகிழ்ச்சியுடன்بِمَاۤஎதன்பொருட்டுاَسْلَفْتُمْநீங்கள் முற்படுத்தினீர்களோفِیஇல்الْاَیَّامِநாட்கள்الْخَالِیَةِகடந்த
குலூ வஷ்ரBபூ ஹனீ'அம் Bபிமா அஸ்லFப்தும் Fபில் அய்யாமில் காலியஹ்
முஹம்மது ஜான்
“சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களை நோக்கி) ‘‘சென்ற நாள்களில் நீங்கள் சேகரித்து வைத்திருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, மிக்க தாராளமாக இவற்றைப் புசியுங்கள்! அருந்துங்கள்'' (என்று கூறப்படும்).
IFT
(இத்தகையவர்களிடம்) கூறப்படும்: “சுவையாக உண்ணுங்கள்; பருகுங்கள்! கடந்து சென்ற நாட்களில் நீங்கள் ஆற்றிய நற்காரியங்களுக்குப் பகரமாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்களிடம்,) “சென்று போன நாட்களில் (உலகில் மறுமைக்காக நன்மையானவற்றை) நீங்கள் முற்படுத்தி வைத்திருந்த காரணத்திற்காக, மகிழ்வோடு (இவைகளை) உண்ணுங்கள், இன்னும், அருந்துங்கள்” (என்று கூறப்படும்)
Saheeh International
[They will be told], "Eat and drink in satisfaction for what you put forth in the days past."
وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ ۙ۬ فَیَقُوْلُ یٰلَیْتَنِیْ لَمْ اُوْتَ كِتٰبِیَهْ ۟ۚ
وَ اَمَّاஆனால்مَنْஎவன்اُوْتِیَகொடுக்கப்பட்டானோكِتٰبَهٗஅவனது குறிப்பேட்டைبِشِمَالِهٖ ۙ۬அவனது இடது கையில்فَیَقُوْلُஅவன் கூறுவான்یٰلَیْتَنِیْஅந்தோ! நான்لَمْஇல்லையேاُوْتَகொடுக்கப்பட்டிருக்கكِتٰبِیَهْۚஎனது குறிப்பேட்டை
வ அம்மா மன் ஊதிய கிதாBபஹூ Bபிஷிமாலிஹீ Fப யகூலு யாலய்தனீ லம் ஊத கிதாBபியஹ்
முஹம்மது ஜான்
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
அப்துல் ஹமீது பாகவி
எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான்.
IFT
மேலும், தன்னுடைய இடக்கையில் செயலேடு கொடுக்கப்படுபவர் கூறுவார்: “அந்தோ! என்னுடைய செயலேடு எனக்குத் தரப்படாமல் இருந்திருக்கக் கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவன் தன்னுடைய (பதிவுப்) புத்தகத்தை இடக்கையில் கொடுக்கப்பட்டானோ அவன், “என்னுடைய (செயல்கள் பதியப்பட்ட) புத்தகத்தை நான் கொடுக்கப்படாமலிருந்திருக்க வேண்டுமே!” என்று கூறுவான்.
Saheeh International
But as for he who is given his record in his left hand, he will say, "Oh, I wish I had not been given my record
وَلَمْ اَدْرِ مَا حِسَابِیَهْ ۟ۚ
وَ لَمْமேலும் இல்லைاَدْرِநான் அறியمَاஎன்னவென்றுحِسَابِیَهْۚஎனது கணக்கு
வ லம் அத்ரி மா ஹிஸாBபியஹ்
முஹம்மது ஜான்
“அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
அப்துல் ஹமீது பாகவி
மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே!
IFT
என் கணக்கு என்னவென்று நான் அறியாமல் இருந்திருக்கக் கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “என்னுடைய கணக்கு என்னவென்பதை நான் அறியவில்லையே!”
Saheeh International
And had not known what is my account.
یٰلَیْتَهَا كَانَتِ الْقَاضِیَةَ ۟ۚ
یٰلَیْتَهَاஅந்தோ! அதுவேكَانَتِஇருந்திருக்கக் கூடாதாالْقَاضِیَةَۚமுடிவாக
யா லய்தஹா கானதில் காளியஹ்
முஹம்மது ஜான்
“(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
அப்துல் ஹமீது பாகவி
நான் இறந்தபொழுதே என் காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டுமே!
IFT
அந்தோ! (உலகத்தில் வந்த) அந்த மரணமே இறுதியானதாய் இருந்திருக்கக் கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நான் இறந்தபின் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படாது) “அதுவே முடிவாக இருந்திருக்க வேண்டுமே!”
Saheeh International
I wish it [i.e., my death] had been the decisive one.
مَاۤ اَغْنٰی عَنِّیْ مَالِیَهْ ۟ۚ
مَاۤஇல்லைاَغْنٰیபயனளித்ததுعَنِّیْஎனக்குمَالِیَهْۚஎன்னுடைய செல்வம்
மா அக்னா 'அன்னீ மாலியஹ்
முஹம்மது ஜான்
“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
அப்துல் ஹமீது பாகவி
என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!
IFT
இன்று என்னுடைய செல்வம் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லையே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய செல்வம் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!”
Saheeh International
My wealth has not availed me.
هَلَكَ عَنِّیْ سُلْطٰنِیَهْ ۟ۚ
هَلَكَஅழிந்துவிட்டதுعَنِّیْஎன்னிடமிருந்துسُلْطٰنِیَهْۚஎன் அதிகாரம்
ஹலக 'அன்னீ ஸுல்தானியஹ்
முஹம்மது ஜான்
“என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).
அப்துல் ஹமீது பாகவி
என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்).
IFT
என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடிந்துபோய் விட்டதே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய அதிகாரமும் என்னைவிட்டு அழிந்துவிட்டதே!” (என்று புலம்புவான்)
Saheeh International
Gone from me is my authority."
خُذُوْهُ فَغُلُّوْهُ ۟ۙ
خُذُوْهُஅவனைப் பிடியுங்கள்فَغُلُّوْهُۙபின்னர் அவனுக்கு விலங்கிடுங்கள்
குதூஹு Fபகுல்லூஹ்
முஹம்மது ஜான்
“(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் நாம்) ‘‘அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்;
IFT
(ஆணை பிறக்கும்:) “பிடியுங்கள் இவனை! இவனுடைய கழுத்தில் விலங்கை மாட்டுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (வல்ல அல்லாஹ் தன் மலக்குகளுக்கு) “அவனைப் பிடியுங்கள், அப்பால் அவனுக்கு விலங்கிடுங்கள்”
Saheeh International
[Allah will say], "Seize him and shackle him.
ثُمَّ الْجَحِیْمَ صَلُّوْهُ ۟ۙ
ثُمَّபின்னர்الْجَحِیْمَநரகத்தில்صَلُّوْهُۙஅவனைப் புகுத்துங்கள்
தும்மல் ஜஹீம ஸல்லூஹ்
முஹம்மது ஜான்
“பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும்,
IFT
பின்னர் இவனை நரகத்தில் வீசி எறியுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பின்னர் நரகத்தில் அவனைத் தள்ளுங்கள்”
Saheeh International
Then into Hellfire drive him.
ثُمَّ فِیْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ۟ؕ
ثُمَّபின்னர்فِیْஒருسِلْسِلَةٍசங்கிலியில்ذَرْعُهَاஅதன் நீளம்سَبْعُوْنَஎழுபதுذِرَاعًاமுழம்فَاسْلُكُوْهُؕஅவனைப் பிணைத்து விடுங்கள்
தும்ம Fபீ ஸில்ஸிலதின் தர்'உஹா ஸBப்'ஊன திரா'அன் Fபஸ்லுகூஹ்
முஹம்மது ஜான்
“பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்று உத்தரவிடப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்'' என்றும் (கூறுவோம்).
IFT
பிறகு இவனை எழுபது முழம் நீளமுள்ள சங்கிலியால் பிணையுங்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பின்னர், அதன் நீளமானது எழுபது முழமுள்ள(தாக இருக்கும் சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்றும் கூறுவான்)
Saheeh International
Then into a chain whose length is seventy cubits insert him."
اِنَّهٗ كَانَ لَا یُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِیْمِ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்لَاஇல்லைیُؤْمِنُநம்பிக்கை கொள்பவனாகبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுالْعَظِیْمِۙமகத்துவமிக்க
இன்னஹூ கான லா யு'மினு Bபில்லாஹில் 'அளீம்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கை கொள்ளவில்லை.
IFT
மேன்மையும் உயர்வும் மிக்கவனாகிய அல்லாஹ்வின் மீது இவன் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக அவன், மகத்துவமிக்க அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளாதவனாக அவன் இருந்தான்”
Saheeh International
Indeed, he did not used to believe in Allah, the Most Great,
وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ؕ
وَ لَاமேலும் இல்லைیَحُضُّஅவன் தூண்டுவதுعَلٰیமீதுطَعَامِஉணவளிப்பதின்الْمِسْكِیْنِؕஏழைக்கு
வ லா யஹுள்ளு 'அலா த'ஆமில் மிஸ்கீன்
முஹம்மது ஜான்
“அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.”
அப்துல் ஹமீது பாகவி
ஏழைகளுக்கு (தானும் உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை.
IFT
ஏழை எளியோர்க்கு உணவு அளிக்கும்படி தூண்டாமலும் இருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஏழைக்கு (தான் ஆகாரமளிக்காததுடன் பிறரையும்) ஆகாரமளிக்கும்படி அவன் தூண்டவுமில்லை”.
Saheeh International
Nor did he encourage the feeding of the poor.
فَلَیْسَ لَهُ الْیَوْمَ هٰهُنَا حَمِیْمٌ ۟ۙ
فَلَیْسَஎனவே இல்லைلَهُஅவனுக்குالْیَوْمَஇன்றுهٰهُنَاஇங்கேحَمِیْمٌۙஉற்ற நண்பன்
Fபலய்ஸ லஹுல் யவ்ம ஹாஹுனா ஹமீம்
முஹம்மது ஜான்
“எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘ஆகவே, இன்று அவனுக்கு (இங்கு) ஒரு நண்பனும் இல்லை.
IFT
எனவே, இன்று இங்கு அவன் மீது அனுதாபப்படும் எந்த நண்பனும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே இன்றையத் தினம் அவனுக்கு இங்கு (உதவ) நண்பன் (எவனும்) இல்லை.
Saheeh International
So there is not for him here this Day any devoted friend
وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِیْنٍ ۟ۙ
وَّ لَاமேலும் இல்லைطَعَامٌஉணவுاِلَّاதவிரمِنْஇருந்துغِسْلِیْنٍۙசீழ்
வ லா த'ஆமுன் இல்லா மின் கிஸ்லீன்
முஹம்மது ஜான்
“சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.”
அப்துல் ஹமீது பாகவி
(புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை'' (என்றும் கூறப்படும்).
IFT
சீழ்நீரைத் தவிர அவனுக்கு எந்த உணவும் இங்கு இல்லை;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நரகவாசிகளின் உடலிலிருந்து வடியும்) “சீழ் ஜலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவுமில்லை” (என்றும் கூறப்படும்).
Saheeh International
Nor any food except from the discharge of wounds;
لَّا یَاْكُلُهٗۤ اِلَّا الْخَاطِـُٔوْنَ ۟۠
لَّاஇல்லைیَاْكُلُهٗۤஅதனை உண்பார்கள்اِلَّاதவிரالْخَاطِـُٔوْنَ۠பாவிகள்
லா ய'குலுஹூ இல்லல் காதி'ஊன்
முஹம்மது ஜான்
“குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.”  
அப்துல் ஹமீது பாகவி
அதைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள்.
IFT
தவறிழைத்தவர்களைத் தவிர வேறெவரும் அதனை அருந்துவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனைப் பாவிகளை தவிர (மற்றெவரும்) புசிக்க மாட்டார்கள்.
Saheeh International
None will eat it except the sinners.
فَلَاۤ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَ ۟ۙ
فَلَاۤஆகவேاُقْسِمُநான் சத்தியம் செய்கிறேன்بِمَاஎவற்றின் மீதுتُبْصِرُوْنَۙநீங்கள் காண்கிறீர்களோ
Fபலா உக்ஸிமு Bபிமா துBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
(மக்களே!) நீங்கள் பார்ப்பவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றுபவற்றின் மீதும்,)
IFT
இல்லை! நீங்கள் பார்க்கின்றவற்றின் மீதும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றைக் கொண்டு நான் சத்தியம் செய்கிறேன்.
Saheeh International
So I swear by what you see
وَمَا لَا تُبْصِرُوْنَ ۟ۙ
وَ مَاமேலும் எவற்றைلَاஇல்லைتُبْصِرُوْنَۙநீங்கள் பார்க்கிறீர்களோ
வமா லா துBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றாதவற்றின் மீதும்) சத்தியமாக!
IFT
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் பார்க்காதவற்றைக் கொண்டும், (நான் சத்தியம் செய்கிறேன்).
Saheeh International
And what you do not see
اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِیْمٍ ۟ۚۙ
اِنَّهٗநிச்சயமாக இதுلَقَوْلُநிச்சயமாக ஒரு சொல்رَسُوْلٍதூதரின்كَرِیْمٍۚۙகண்ணியமிக்க
இன்னஹூ லகவ்லு ரஸூலின் கரீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
அப்துல் ஹமீது பாகவி
இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடியே) மிக்க கண்ணியமான ஒரு தூதரால் கூறப்பட்டதாகும்.
IFT
இது கண்ணியமான ஒரு தூதரின் சொல்லாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இது மிக்க சங்கை மிக்க ஒரு தூதரின் கூற்றாகும்.
Saheeh International
[That] indeed, it [i.e., the Qur’an] is the word of a noble Messenger.
وَّمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ؕ قَلِیْلًا مَّا تُؤْمِنُوْنَ ۟ۙ
وَّ مَاமேலும் அல்லهُوَஅதுبِقَوْلِசொல்شَاعِرٍ ؕஒரு கவிஞரின்قَلِیْلًاமிகக் குறைவாகவேمَّاதான்تُؤْمِنُوْنَۙநீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்கள்
வமா ஹுவ Bபிகவ்லி ஷா'இர்; கலீலன் மா து'மினூன்
முஹம்மது ஜான்
இது ஒரு கவிஞனின் சொல்லன்று; (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.
IFT
யாரோ ஒரு கவிஞனின் சொல்லல்ல. நீங்கள் குறைவாகத்தான் நம்பிக்கை கொள்கின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது எந்தக் கவிஞரின் கூற்றுமல்ல, (எனினும், இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே விசுவாசிக்கின்றீர்கள்.
Saheeh International
And it is not the word of a poet; little do you believe.
وَلَا بِقَوْلِ كَاهِنٍ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟ؕ
وَ لَاமேலும் இல்லைبِقَوْلِசொல்லும்كَاهِنٍ ؕகுறிசொல்பவனின்قَلِیْلًاமிகக் குறைவாகவேمَّاநீங்கள்تَذَكَّرُوْنَؕநல்லுணர்வு பெறுகிறீர்கள்
வ லா Bபிகவ்லி காஹின்; கலீலன் மா ததக்கரூன்
முஹம்மது ஜான்
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று; (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைத்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இது) ஒரு குறிகாரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
IFT
இது யாரோ ஒரு ஜோதிடனின் சொல்லும் அல்ல. நீங்கள் குறைவாகத்தான் சிந்திக்கிறீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இது) ஒரு குறிகாரனின் கூற்றுமல்ல, (எனினும், இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுணர்வு பெறுகின்றீர்கள்.
Saheeh International
Nor the word of a soothsayer; little do you remember.
تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
تَنْزِیْلٌஇறக்கியருளப்பட்டதாகும்مِّنْஇருந்துرَّبِّஇறைவன்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
தன்Zஜீலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அகிலத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது.
IFT
இது அகில உலகங்களின் அதிபதியிடமிருந்து இறங்கியதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து (இது) இறக்கப்பட்டுள்ளதாகும்.
Saheeh International
[It is] a revelation from the Lord of the worlds.
وَلَوْ تَقَوَّلَ عَلَیْنَا بَعْضَ الْاَقَاوِیْلِ ۟ۙ
وَ لَوْமேலும் ஒருவேளைتَقَوَّلَஇட்டுக்கட்டியிருந்தால்عَلَیْنَاநம் மீதுبَعْضَசிலالْاَقَاوِیْلِۙசொற்களை
வ லவ் தகவ்வல 'அலய்னா Bபஃளல் அகாவீல்
முஹம்மது ஜான்
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
அப்துல் ஹமீது பாகவி
ஒரு சில வார்த்தைகளை அவர் நம்மீது கற்பனை செய்து பொய்யாகக் கூறினாலும்,
IFT
மேலும், இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனுமொரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்துச் சொல்லியிருந்தால்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர் நம் மீது சொற்களில் (நாம் சொல்லாத) சிலவற்றை இட்டுக்கட்டி(க்கூறி)யிருப்பாரானால்-
Saheeh International
And if he [i.e., Muhammad] had made up about Us some [false] sayings,
لَاَخَذْنَا مِنْهُ بِالْیَمِیْنِ ۟ۙ
لَاَخَذْنَاநிச்சயமாக நாம் பிடித்திருப்போம்مِنْهُஅவனைبِالْیَمِیْنِۙவலக்கரத்தால்
ல-அகத்னா மின்ஹு Bபில்யமீன்
முஹம்மது ஜான்
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
அப்துல் ஹமீது பாகவி
அவருடைய வலது கரத்தை நாம் (பலமாகப்) பிடித்துக் கொண்டு,
IFT
நாம் அவரது வலக்கையைப் பிடித்திருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக அவருடைய வலக்கரத்தை நாம் பலமாகப் பிடித்துக் கொண்டிருப்போம்.
Saheeh International
We would have seized him by the right hand;
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِیْنَ ۟ؗۖ
ثُمَّபின்னர்لَقَطَعْنَاநாம் நிச்சயமாகத் துண்டித்திருப்போம்مِنْهُஅவனிடமிருந்துالْوَتِیْنَؗۖஉயிர்நாடியை
தும்ம லகதஃனா மின்ஹுல் வதீன்
முஹம்மது ஜான்
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, அவருடைய உயிர் நாடியை நாம் தறித்து விடுவோம்.
IFT
பிறகு அவருடைய பிடரி நரம்பைத் துண்டித்தும் இருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவருடைய (இதயத்தோடு சம்பந்தப்பட்ட) உயிர் நரம்பை நாம் தறித்துவிடுவோம்.
Saheeh International
Then We would have cut from him the aorta.
فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حٰجِزِیْنَ ۟
فَمَاஆகவே இல்லைمِنْكُمْஉங்களில்مِّنْஎந்தاَحَدٍஒருவரும்عَنْهُஅவரிடமிருந்துحٰجِزِیْنَதடுப்பவர்களாக
Fபமா மின்கும் மின் அஹதின்'அன்ஹு ஹாஜிZஜீன்
முஹம்மது ஜான்
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் எவருமே அவரை விட்டும் அதைத் தடுத்துவிட முடியாது.
IFT
பிறகு உங்களில் எவரும் இப்படிச் செய்வதிலிருந்து (நம்மைத்) தடுப்பவராய் இருக்க முடியாது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது, உங்களில் அவரைவிட்டும் (நாம் செய்யும் வேதனையை) தடுத்துவிடக்கூடியவர்கள் எவருமிலர்.
Saheeh International
And there is no one of you who could prevent [Us] from him.
وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِیْنَ ۟
وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக இதுلَتَذْكِرَةٌஒரு நினைவூட்டலாகும்لِّلْمُتَّقِیْنَஇறையச்சமுடையோருக்கு
வ இன்னஹூ லதத்கிரதுல் லில்முத்தகீன்
முஹம்மது ஜான்
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இது இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவே இருக்கிறது.
IFT
உண்மையில் இறையச்சமுள்ளோருக்கு இது ஒரு நல்லுரையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக (குர் ஆனாகிய) இது பயபக்தியுடையோர்களுக்கு நல்லுபதேசமாகும்.
Saheeh International
And indeed, it [i.e., the Qur’an] is a reminder for the righteous.
وَاِنَّا لَنَعْلَمُ اَنَّ مِنْكُمْ مُّكَذِّبِیْنَ ۟
وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَنَعْلَمُதிண்ணமாக அறிவோம்اَنَّஎன்பதைمِنْكُمْஉங்களில்مُّكَذِّبِیْنَபொய்ப்பிப்பவர்கள்
வ இன்ன லனஃலமு அன்ன மின்கும் முகத்திBபீன்
முஹம்மது ஜான்
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்,) உங்களில் அதைப் பொய்யாக்குகிறவர்களும் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
IFT
உங்களில் பொய்யென வாதிடுபவர்கள் சிலரும் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (அதனைப்) பொய்யாக்குகிறவர்களும் உங்களில் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
Saheeh International
And indeed, We know that among you are deniers.
وَاِنَّهٗ لَحَسْرَةٌ عَلَی الْكٰفِرِیْنَ ۟
وَ اِنَّهٗநிச்சயமாக அதுلَحَسْرَةٌஒரு கைசேதமாகும்عَلَیமீதுالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்கள்
வ இன்னஹு லஹஸ்ரதுன் 'அலல் காFபிரீன்
முஹம்மது ஜான்
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அது நிராகரிப்பவர்களுக்குத் துக்கத்தைத் தரக்கூடியதாகவே இருக்கிறது.
IFT
இப்படிப்பட்ட நிராகரிப்பாளர்களுக்கு நிச்சயம் இது மனவருத்தத்தை அளிக்கக்கூடியதே ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக இது நிராகரிப்போருக்கு கைசேதமாகும்.
Saheeh International
And indeed, it will be [a cause of] regret upon the disbelievers.
وَاِنَّهٗ لَحَقُّ الْیَقِیْنِ ۟
وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அதுلَحَقُّஉண்மையானالْیَقِیْنِஉறுதியாகும்
வ இன்னஹூ லஹக்குல் யகீன்
முஹம்மது ஜான்
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்) நிச்சயமாக இது, ஒரு சிறிதும் சந்தேகமற்ற உண்மையாகும்.
IFT
மேலும், இது முற்றிலும் உறுதியான சத்தியமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக இது உறுதியான உண்மையாகும்.
Saheeh International
And indeed, it is the truth of certainty.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠
فَسَبِّحْஎனவே துதிப்பீராகبِاسْمِதிருநாமத்தைக் கொண்டுرَبِّكَஉமது இறைவனின்الْعَظِیْمِ۠மகத்துவமிக்க
Fபஸ்ஸBப்Bபிஹ் Bபிஸ்மி ரBப்Bபிகல் 'அளீம்
முஹம்மது ஜான்
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரை துதிசெய்து கொண்டிருப்பீராக!
IFT
எனவே, (நபியே) உம்முடைய மகத்தான அதிபதியின் பெயரைத் துதிப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமதிரட்சகனின் பெயரைக் கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக!
Saheeh International
So exalt the name of your Lord, the Most Great.