">

தேடல் வார்த்தை: "ஆதம"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

27 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 27)

وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَی الْمَلٰٓىِٕكَةِ ۙ فَقَالَ اَنْۢبِـُٔوْنِیْ بِاَسْمَآءِ هٰۤؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَعَلَّمَஇன்னும் கற்பித்தான்اٰدَمَஆதமுக்குالْاَسْمَآءَபெயர்களைكُلَّهَاஎல்லாவற்றையும்/ அவைثُمَّபிறகுعَرَضَهُمْவைத்தான்/அவற்றைعَلَىமுன்الْمَلٰٓٮِٕكَةِவானவர்கள்فَقَالَஇன்னும் கூறினான்اَنْۢبِـُٔوْنِیْஅறிவியுங்கள்/எனக்குبِاَسْمَآءِபெயர்களைهٰٓؤُلَآءِஇவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ 'அல்லம ஆதமல் அஸ்மா'அ குல்லஹா தும்ம 'அரளஹும் 'அலல் மலா'இகதி Fபகால அம்Bபி'ஊனீ Bபிஅஸ் மா'இ ஹா'உலா'இ இன் குன்தும் ஸாதிகீன்
இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
قَالَ یٰۤاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۚ فَلَمَّاۤ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۙ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ اِنِّیْۤ اَعْلَمُ غَیْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟
قَالَகூறினான்يٰٓـاٰدَمُஆதமاَنْۢبِئْهُمْஅவர்களுக்கு அறிவிப்பீராகبِاَسْمَآٮِٕهِمْ‌ۚஅவற்றின் பெயர்களைفَلَمَّآபோதுاَنْۢبَاَهُمْஅவர்களுக்கு அறிவித்தார்بِاَسْمَآٮِٕهِمْۙபெயர்களை/அவற்றின்قَالَகூறினான்اَلَمْ اَقُلْநான் கூறவில்லையா?لَّـكُمْஉங்களுக்குاِنِّىْٓநிச்சயமாக நான்اَعْلَمُஅறிவேன்غَيْبَமறைவானவற்றைالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِۙஇன்னும் பூமிوَاَعْلَمُஇன்னும் அறிவேன்مَاஎதைتُبْدُوْنَவெளிப்படுத்துகிறீர்கள்وَمَاஇன்னும் எதைكُنْتُمْஇருந்தீர்கள்تَكْتُمُوْنَ‏மறைக்கிறீர்கள்
கால யா ஆதமு அம்Bபி' ஹும் Bபிஅஸ்மா'இஹிம் Fபலம்மா அம்Bப அஹும் Bபி அஸ்மா'இஹிம் கால அலம் அகுல் லகும் இன்னீ அஃலமு கய்Bபஸ் ஸமாவாதி வல் அர்ளி வ அஃலமு மா துBப்தூன வமா குன்தும் தக்துமூன்
ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اَبٰی وَاسْتَكْبَرَ ؗۗ وَكَانَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
وَاِذْசமயம்قُلْنَاகூறினோம்لِلْمَلٰٓٮِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْٓاஆகவே சிரம் பணிந்தார்கள்اِلَّاۤதவிரاِبْلِيْسَؕஇப்லீஸ்اَبٰىமறுத்தான்وَاسْتَكْبَرَ இன்னும் பெருமையடித்தான்وَكَانَஇன்னும் ஆகிவிட்டான்مِنَ الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களில்
வ இத் குல்னா லில்மலா'இ கதிஸ் ஜுதூ லிஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ அBபா வஸ்தக்Bபர வ கான மினல் காFபிரீன்
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
وَقُلْنَا یٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَیْثُ شِئْتُمَا ۪ وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟
وَقُلْنَاஇன்னும் கூறினோம்یٰۤاٰدَمُஆதமاسْكُنْவசிப்பீராகاَنْتَநீர்وَزَوْجُكَஇன்னும் உம் மனைவிالْجَـنَّةَசொர்க்கத்தில்وَكُلَاஇன்னும் இருவரும் சாப்பிடுங்கள்مِنْهَاஅதிலிருந்துرَغَدًاதாராளமாகحَيْثُவிதத்தில்شِئْتُمَاஇருவரும் நாடினீர்கள்وَلَا تَقْرَبَاஇன்னும் இருவரும் நெருங்காதீர்கள்هٰذِهِஇந்தالشَّجَرَةَமரத்தைفَتَكُوْنَاஇருவரும் ஆகிவிடுவீர்கள்مِنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில்
வ குல்னா யா ஆதமுஸ் குன் அன்த வ Zஜவ்ஜுகல் ஜன்னத வ குலா மின்ஹா ரகதன் ஹய்து ஷி'துமா வலா தக்ரBபா ஹாதிஹிஷ் ஷஜரத Fபதகூனா மினள் ளாலிமீன்
மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.
فَتَلَقّٰۤی اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَیْهِ ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
فَتَلَقّٰٓىபெற்றார்اٰدَمُஆதமمِنْஇருந்துرَّبِّهٖதம் இறைவன்كَلِمٰتٍ(சில) வாக்கியங்களைفَتَابَஆகவே மன்னித்தான்عَلَيْهِ‌ؕஅவரைاِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்التَّوَّابُதவ்பாவை அங்கீகரிப்பவன்الرَّحِيْمُ‏பேரன்பாளன்
Fபதலக்கா ஆதமு மிர் ரBப்Bபிஹீ கலிமாதின் FபதாBப 'அலய்ஹி; இன்னஹூ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
اِنَّ اللّٰهَ اصْطَفٰۤی اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِیْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்اصْطَفٰۤىதேர்ந்தெடுத்தான்اٰدَمَஆதமوَنُوْحًاஇன்னும் நூஹைوَّاٰلَஇன்னும் குடும்பத்தைاِبْرٰهِيْمَஇப்றாஹீமின்وَاٰلَ عِمْرٰنَஇன்னும் இம்ரானின் குடும்பத்தைعَلَى الْعٰلَمِيْنَۙ‏அகிலத்தாரை விட
இன்னல் லாஹஸ் தFபா ஆதம வ னூஹ(ன்)வ் வ ஆல இBப்ராஹீம வ ஆல இம்ரான 'அலல் 'ஆலமீன்
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
اِنَّ مَثَلَ عِیْسٰی عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
اِنَّநிச்சயமாகمَثَلَஉதாரணம்عِيْسٰىஈஸாவின்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றுاٰدَمَ‌ؕஆதமخَلَقَهٗஅவரைப் படைத்தான்مِنْஇருந்துتُرَابٍமண்ثُمَّபிறகுقَالَகூறினான்لَهٗஅவருக்குكُنْஆகுفَيَكُوْنُ‏ஆகிவிட்டார்
இன்ன மதல 'ஈஸா 'இன்தல் லாஹி கமதலி ஆதம கலகஹூ மின் துராBபின் தும்ம கால லஹூ குன் Fபயகூன்
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ ابْنَیْ اٰدَمَ بِالْحَقِّ ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ یُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ ؕ قَالَ لَاَقْتُلَنَّكَ ؕ قَالَ اِنَّمَا یَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِیْنَ ۟
وَاتْلُஓதுவீராகعَلَيْهِمْஅவர்கள் முன்نَبَاَசெய்தியைابْنَىْஇரு மகன்களின்اٰدَمَஆதமுடையبِالْحَـقِّ‌ۘஉண்மையில்اِذْபோதுقَرَّبَاகுர்பானி கொடுத்தனர்قُرْبَانًاஒரு குர்பானியைفَتُقُبِّلَஏற்றுக் கொள்ளப்பட்டதுمِنْஇருந்துاَحَدِهِمَاஅவ்விருவரில் ஒருவர்وَلَمْ يُتَقَبَّلْஏற்கப்படவில்லைمِنَஇருந்துالْاٰخَرِؕமற்றவர்قَالَஎன்றார்لَاَقْتُلَـنَّكَ‌ؕநிச்சயமாக உன்னைக்கொல்வேன்قَالَகூறினார்اِنَّمَا يَتَقَبَّلُஏற்பதெல்லாம்اللّٰهُஅல்லாஹ்مِنَ الْمُتَّقِيْنَ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்
வத்லு 'அலய்ஹிம் னBப அBப்னய் ஆதம Bபில்ஹக்க்; இத் கர்ரBபா குர்Bபானன் FபதுகுBப்Bபில மின் அஹதிஹிமா வ லம் யுதகBப்Bபல் மினல் ஆகரி கால ல அக்துலன்ன்னக கால இன்னமா யதகBப்Bபலுல் லாஹு மினல் முத்தகீன்
(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.
وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ ۖۗ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ لَمْ یَكُنْ مِّنَ السّٰجِدِیْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகخَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்ثُمَّபிறகுصَوَّرْنٰكُمْவடிவமைத்தோம்/உங்களைثُمَّபிறகுقُلْنَاகூறினோம்لِلْمَلٰۤٮِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَ‌ ۖ ஆதமுக்குفَسَجَدُوْۤاசிரம் பணிந்தனர்اِلَّاۤ اِبْلِيْسَؕஇப்லீஸைத் தவிரلَمْ يَكُنْஅவன் ஆகவில்லைمِّنَ السّٰجِدِيْنَ‏சிரம் பணிந்தவர்களில்
வ லகத் கலக்னாகும் தும்ம ஸவ்வர்னாகும் தும்ம குல்னா லில்மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fப-ஸஜதூ இல்லா இBப்லீஸ லம் யகும் மினஸ் ஸாஜிதீன்
நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ ؕ قَالَ اَنَا خَیْرٌ مِّنْهُ ۚ خَلَقْتَنِیْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِیْنٍ ۟
قَالَகூறினான்مَاஎது?مَنَعَكَஉம்மை தடுத்ததுاَلَّا تَسْجُدَநீ சிரம் பணியாதிருக்கاِذْபோதுاَمَرْتُكَ‌ ؕஉனக்கு கட்டளையிட்டேன்قَالَகூறினான்اَنَاநான்خَيْرٌமேலானவன்مِّنْهُ‌ ۚஅவரைவிடخَلَقْتَنِىْஎன்னை படைத்தாய்مِنْ نَّارٍநெருப்பால்وَّخَلَقْتَهٗஇன்னும் படைத்தாய்/அவரைمِنْ طِيْنٍ‏களிமண்ணால்
கால மா மன'அக அல்லா தஸ்ஜுத இத் அமர்துக கால அன கய்ரும் மின்ஹு கலக்தனீ மின் னாரி(ன்)வ் வ கலக்தஹூ மின் தீன்
“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
قَالَ فَبِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِیْمَ ۟ۙ
قَالَகூறினான்فَبِمَاۤகாரணமாகاَغْوَيْتَنِىْநீ வழிகெடுத்தாய்/என்னைلَاَقْعُدَنَّநிச்சயமாக உட்காருவேன்لَهُمْஅவர்களுக்காகصِرَاطَكَஉன் பாதையில்الْمُسْتَقِيْمَۙ‏நேரானது
கால FபBபிமா அக்வய் தனீ ல அக்'உதன்ன லஹும் ஸிராதகல் முஸ்தகீம்
(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
وَیٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَیْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟
وَيٰۤاٰدَمُஆதமاسْكُنْவசித்திருاَنْتَநீوَزَوْجُكَஇன்னும் உம் மனைவிالْجَـنَّةَசொர்க்கத்தில்فَـكُلَا(இருவரும்)புசியுங்கள்مِنْ حَيْثُஇடத்தில்شِئْتُمَا(இருவரும்)நாடினீர்கள்وَلَا تَقْرَبَا(இருவரும்) நெருங்காதீர்கள்هٰذِهِ الشَّجَرَةَஇந்த மரத்தைفَتَكُوْنَا(இருவரும்) ஆகிவிடுவீர்கள்مِنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில்
வ யா ஆதமுஸ் குன் அன்த வ Zஜவ்ஜுகல் ஜன்னத Fபகுலா மின் ஹய்து ஷி'துமா வலா தக்ரBபா ஹாதிஹிஷ் ஷஜரத Fபதகூனா மினள் ளாலிமீன்
(பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
یٰبَنِیْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَیْكُمْ لِبَاسًا یُّوَارِیْ سَوْاٰتِكُمْ وَرِیْشًا ؕ وَلِبَاسُ التَّقْوٰی ۙ ذٰلِكَ خَیْرٌ ؕ ذٰلِكَ مِنْ اٰیٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
يٰبَنِىْۤசந்ததிகளேاٰدَمَஆதமின்قَدْதிட்டமாகاَنْزَلْنَاஇறக்கினோம் (படைத்தோம்)عَلَيْكُمْஉங்கள் மீது (உங்களுக்கு)لِبَاسًاஆடையைيُّوَارِىْமறைக்கின்ற(து)سَوْاٰتِكُمْஉங்கள் வெட்கத்தலங்களைوَرِيْشًا‌ ؕஇன்னும் அலங்காரத்தைوَلِبَاسُஆடைالتَّقْوٰى ۙஇறையச்சத்தின்ذٰ لِكَஅதுதான்خَيْرٌ‌ ؕமிகச் சிறந்ததுذٰ لِكَஇவைمِنْ اٰيٰتِஅத்தாட்சிகளில்اللّٰهِஅல்லாஹ்வின்لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
யா Bபனீ ஆதம கத் அன்Zஜல்னா 'அலய்கும் லிBபாஸ(ன்)ய் யுவாரீ ஸவ் ஆதிகும் வ ரீஷ(ன்)வ் வ லிBபாஸுத் தக்வா தாலிக கய்ர்; தாலிக மின் ஆயாதில் லாஹி ல'அல்லஹும் யத் தக்கரூன்
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
یٰبَنِیْۤ اٰدَمَ لَا یَفْتِنَنَّكُمُ الشَّیْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَیْكُمْ مِّنَ الْجَنَّةِ یَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِیُرِیَهُمَا سَوْاٰتِهِمَا ؕ اِنَّهٗ یَرٰىكُمْ هُوَ وَقَبِیْلُهٗ مِنْ حَیْثُ لَا تَرَوْنَهُمْ ؕ اِنَّا جَعَلْنَا الشَّیٰطِیْنَ اَوْلِیَآءَ لِلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ ۟
يٰبَنِىْۤசந்ததிகளேاٰدَمَஆதமின்لَاவேண்டாம்يَفْتِنَـنَّكُمُஉங்களை ஏமாற்றிவிடالشَّيْطٰنُஷைத்தான்كَمَاۤபோன்றுاَخْرَجَவெளியேற்றினான்اَبَوَيْكُمْஉங்கள் தாய் தந்தையைمِّنَ الْجَـنَّةِசொர்க்கத்திலிருந்துيَنْزِعُகழட்டுகிறான்عَنْهُمَاஅவ்விருவரை விட்டுلِبَاسَهُمَاஅவ்விருவரின் ஆடையைلِيُرِيَهُمَاஅவன் காண்பிப்பதற்காக/அவ்விருவருக்குسَوْءاٰتِهِمَا ؕஅவ்விருவருடைய வெட்கத்தலங்களைاِنَّهٗநிச்சயமாக அவன்يَرٰٮكُمْபார்க்கிறான்/உங்களைهُوَஅவன்وَقَبِيْلُهٗஇன்னும் அவனுடைய இனத்தார்مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ‌ ؕநீங்கள் அவர்களைப் பார்க்காதவாறுاِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاஆக்கினோம்الشَّيٰطِيْنَஷைத்தான்களைاَوْلِيَآءَநண்பர்களாகلِلَّذِيْنَஎவர்களுக்குلَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
யா Bபனீ ஆதம லா யFப்தினன்ன்னகுமுஷ் ஷய்தானு கமா அக்ரஜ அBபவய்கும் மினல் ஜன்னதி யன்Zஜி'உ 'அன்ஹுமா லிBபாஸஹுமா லியுரியஹுமா ஸவ் ஆதிஹிமா; இன்னஹூ யராகும் ஹுவ வ கBபீலுஹூ மின் ஹய்து லா தரவ்னஹும்; இன்னா ஜ'அல்னஷ் ஷயாதீன அவ்லியா'அ லில்லதீன லா யு'மினூன்
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
یٰبَنِیْۤ اٰدَمَ خُذُوْا زِیْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْرِفِیْنَ ۟۠
يٰبَنِىْۤ اٰدَمَஆதமின் சந்ததிகளேخُذُوْا زِيْنَتَكُمْஅலங்கரித்துக் கொள்ளுங்கள் / உங்களைعِنْدَஇடம்كُلِّஎல்லாம்مَسْجِدٍமஸ்ஜிதுوَّكُلُوْاஇன்னும் புசியுங்கள்وَاشْرَبُوْاஇன்னும் பருகுங்கள்وَلَا تُسْرِفُوْا‌ ۚவிரயம் செய்யாதீர்கள்اِنَّهٗநிச்சயம் அவன்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْمُسْرِفِيْنَ‏விரயம் செய்பவர்களை
யா Bபனீ அதம குதூ Zஜீனதகும் 'இன்த குல்லி மஸ்ஜிதி(ன்)வ் வ குலூ வஷ்ரBபூ வலா துஸ்ரிFபூ; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஸ்ரிFபீன்
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.  
یٰبَنِیْۤ اٰدَمَ اِمَّا یَاْتِیَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَقُصُّوْنَ عَلَیْكُمْ اٰیٰتِیْ ۙ فَمَنِ اتَّقٰی وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
يٰبَنِىْۤ اٰدَمَஆதமின் சந்ததிகளேاِمَّا يَاْتِيَنَّكُمْநிச்சயமாக வந்தால் / உங்களிடம்رُسُلٌதூதர்கள்مِّنْكُمْஉங்களில் இருந்தேيَقُصُّوْنَவிவரித்தவர்களாகعَلَيْكُمْஉங்களுக்குاٰيٰتِىْ‌ۙஎன் வசனங்களைفَمَنِஎவர்(கள்)اتَّقٰىஅஞ்சினார்(கள்)وَاَصْلَحَஇன்னும் சீர்திருத்தினார்(கள்)فَلَا خَوْفٌபயமில்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا هُمْ يَحْزَنُوْنَ‏அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
யா Bபனீ ஆதம இம்மா ய'தியன்னகும் ருஸுலும் மின்கும் யகுஸ்ஸூன 'அலய்கும் ஆயாதீ Fபமனித் தகா வ அஸ்லஹ Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.
وَاِذْ اَخَذَ رَبُّكَ مِنْ بَنِیْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّیَّتَهُمْ وَاَشْهَدَهُمْ عَلٰۤی اَنْفُسِهِمْ ۚ اَلَسْتُ بِرَبِّكُمْ ؕ قَالُوْا بَلٰی ۛۚ شَهِدْنَا ۛۚ اَنْ تَقُوْلُوْا یَوْمَ الْقِیٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِیْنَ ۟ۙ
وَ اِذْசமயம்اَخَذَஎடுத்தான்رَبُّكَஉம் இறைவன்مِنْۢ بَنِىْۤ اٰدَمَஆதமின் சந்ததிகளில்مِنْ ظُهُوْرِهِمْஇருந்து/முதுகுகள்/அவர்களுடையذُرِّيَّتَهُمْஅவர்களின் சந்ததிகளைوَ اَشْهَدَهُمْஇன்னும் சாட்சியாக்கினான் / அவர்களைعَلٰٓىமீதேاَنْفُسِهِمْ‌ ۚஅவர்கள்اَلَسْتُநான் இல்லையா?بِرَبِّكُمْ‌ ؕஉங்கள் இறைவனாகقَالُوْاகூறினர்بَلٰى‌ ۛۚஏன் இல்லைشَهِدْنَا ۛۚநாங்கள் சாட்சி கூறினோம்اَنْ تَقُوْلُوْاநீங்கள் கூறாமல் இருப்பதற்காகيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்عَنْ هٰذَاஇதை விட்டுغٰفِلِيْنَ ۙ‏கவனமற்றவர்களாக
வ இத் அகத ரBப்Bபுக மின் Bபனீ ஆதம மின் ளுஹூரிஹிம் துர்ரிய்யதஹும் வ அஷ்ஹதஹும் 'அலா அன்Fபுஸிஹிம் அலஸ்து Bபி ரBப்Bபிகும் காலூ Bபலா ஷஹித்னா; அன் தகூலூ யவ்மல் கியாமதி இன்னா குன்னா 'அன் ஹாதா காFபிலீன்
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِیْنًا ۟ۚ
وَاِذْ قُلْنَاநாம் கூறிய சமயம்لِلْمَلٰۤٮِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْۤاசிரம் பணிந்தனர்اِلَّاۤதவிரاِبْلِيْسَஇப்லீஸ்قَالَகூறினான்ءَاَسْجُدُநான் சிரம் பணிவதா?لِمَنْஎவருக்குخَلَقْتَநீ படைத்தாய்طِيْنًا‌ ۚ‏மண்ணிலிருந்து
வ இத் குல்னா லில் மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ கால 'அ-அஸ்ஜுது லிமன் கலக்த தீனா
இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான்.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِیْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِی الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰی كَثِیْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِیْلًا ۟۠
وَلَـقَدْதிட்டவட்டமாகكَرَّمْنَاநாம் கண்ணியப்படுத்தினோம்بَنِىْۤசந்ததிகளைاٰدَمَஆதமுடையوَحَمَلْنٰهُمْஇன்னும் வாகனிக்கச் செய்தோம்/அவர்களைفِى الْبَرِّகரையில்وَالْبَحْرِஇன்னும் கடலில்وَرَزَقْنٰهُمْஇன்னும் உணவளித்தோம்/அவர்களுக்குمِّنَஇருந்துالطَّيِّبٰتِநல்லவைوَفَضَّلْنٰهُمْஇன்னும் மேன்மைப்படுத்தினோம்/அவர்களைعَلٰىவிடكَثِيْرٍஅதிகமானதுمِّمَّنْஎவற்றிலிருந்துخَلَقْنَاநாம் படைத்தோம்تَفْضِيْلًا‏மேன்மையாக
வ லகத் கர்ரம்னா Bபனீ ஆதம வ ஹமல்னாஹும் Fபில் Bபர்ரி வல்Bபஹ்ரி வ ரZஜக்னாஹும் மினத் தய்யிBபாதி வ Fபள்ளல்னாஹும் 'அலா கதீரிம் மிம்மன் கலக்னா தFப்ளீலா
நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.  
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ اَمْرِ رَبِّهٖ ؕ اَفَتَتَّخِذُوْنَهٗ وَذُرِّیَّتَهٗۤ اَوْلِیَآءَ مِنْ دُوْنِیْ وَهُمْ لَكُمْ عَدُوٌّ ؕ بِئْسَ لِلظّٰلِمِیْنَ بَدَلًا ۟
وَاِذْ قُلْنَاநாம் கூறிய சமயம்لِلْمَلٰۤٮِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْۤاஆகவே சிரம் பணிந்தனர்اِلَّاۤதவிரاِبْلِيْسَؕஇப்லீஸ்كَانَஇருந்தான்مِنَ الْجِنِّஜின்களில் ஒருவனாகفَفَسَقَமீறினான்عَنْ اَمْرِகட்டளையைرَبِّهٖؕதன் இறைவனின்اَفَتَـتَّخِذُوْنَهٗஎடுத்துக் கொள்கிறீர்களா?/அவனைوَذُرِّيَّتَهٗۤஇன்னும் அவனது சந்ததியைاَوْلِيَآءَநண்பர்களாகمِنْ دُوْنِىْஎன்னையன்றிوَهُمْஅவர்களோلَـكُمْஉங்களுக்குعَدُوٌّ ؕஎதிரிகள்بِئْسَமிக கெட்டவன்لِلظّٰلِمِيْنَதீயவர்களுக்குبَدَلًا‏மாற்றம்
வ இத் குல்னா லில் மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ கான மினல் ஜின்னி FபFபஸக 'அன் அம்ரி ரBப்Bபிஹ்; அFபதத்தகிதூனஹூ வ துர்ரியதஹூ அவ்லியா'அ மின் தூனீ வ ஹும் லகும் 'அதுவ்வ்; Bபி'ஸ லிள்ளாலிமீன Bபதலா
அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
اُولٰٓٮِٕكَஇவர்கள்தான்الَّذِيْنَஎவர்கள்اَنْعَمَஅருள் புரிந்திருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஇவர்கள் மீதுمِّنَ النَّبِيّٖنَநபிமார்களில்مِنْ ذُرِّيَّةِசந்ததிகளில்اٰدَمَஆதமுடையوَمِمَّنْ حَمَلْنَاஇன்னும் நாம் ஏற்றியவர்களிலும்مَعَ نُوْحٍநூஹூடன்وَّمِنْ ذُرِّيَّةِசந்ததிகளிலும்اِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاِسْرَآءِيْلَஇன்னும் இஸ்ராயீல்وَمِمَّنْ هَدَيْنَاநாம் நேர்வழிகாட்டிوَاجْتَبَيْنَا‌ ؕதேர்ந்தெடுத்தவர்கள்اِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் மீதுاٰيٰتُவசனங்கள்الرَّحْمٰنِபேரருளாளனுடையخَرُّوْاவிழுந்து விடுவார்கள்سُجَّدًاசிரம்பணிந்தவர்களாகوَّبُكِيًّا ۩‏அழுதவர்களாக
உலா'இகல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன மின் துர்ரிய்யதி ஆதம வ மிம்மன் ஹமல்னா ம'அ னூஹி(ன்)வ் வ மின் துர்ரிய்யதி இBப்ராஹீம வ இஸ்ரா'ஈல வ மிம்மன் ஹதய்னா வஜ்த Bபய்னா; இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுர் ரஹ்மானி கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ Bபுகிய்யா
இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
وَلَقَدْ عَهِدْنَاۤ اِلٰۤی اٰدَمَ مِنْ قَبْلُ فَنَسِیَ وَلَمْ نَجِدْ لَهٗ عَزْمًا ۟۠
وَلَـقَدْ عَهِدْنَاۤதிட்டவட்டமாக நாம் கட்டளையிட்டோம்اِلٰٓى اٰدَمَஆதமுக்குمِنْ قَبْلُஇதற்கு முன்னர்فَنَسِىَமறந்து விட்டார்وَلَمْ نَجِدْநாம் காணவில்லைلَهٗஅவரிடம்عَزْمًا‏உறுதியை
வ லகத் 'அஹித்னா இலா ஆதம மின் கBப்லு Fபனஸிய வ லம் னஜித் லஹூ 'அZஜ்மா
முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை.
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اَبٰی ۟
وَاِذْசமயத்தைقُلْنَاநாம் கூறியلِلْمَلٰٓٮِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاநீங்கள் சிரம் தாழ்த்துங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْۤاஅவர்கள் சிரம் தாழ்த்தினர்اِلَّاۤ اِبْلِيْسَؕஇப்லீஸைத் தவிரاَبٰى‏மறுத்து விட்டான்
வ இத் குல்னா லில்ம லா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ; அBபா
“நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.
فَقُلْنَا یٰۤاٰدَمُ اِنَّ هٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا یُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقٰی ۟
فَقُلْنَاஆகவே நாம் கூறினோம்يٰۤاٰدَمُஆதமاِنَّநிச்சயமாகهٰذَاஇவன்عَدُوٌّஎதிரிلَّكَஉமக்குوَلِزَوْجِكَஇன்னும் உமது மனைவிக்குفَلَا يُخْرِجَنَّكُمَاஆகவே, அவன் உங்கள் இருவரையும் வெளியேற்றிவிட வேண்டாம்مِنَ الْجَـنَّةِசொர்க்கத்திலிருந்துفَتَشْقٰى‏நீர்சிரமப்பட்டுவிடுவீர்
Fபகுல்னா யா ஆதமு இன்ன ஹாதா 'அதுவ்வுல் லக வ லிZஜவ்ஜிக Fபலா யுக்ரிஜன் னகுமா மினல் ஜன்னதி Fபதஷ்கா
அப்பொழுது “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.
فَوَسْوَسَ اِلَیْهِ الشَّیْطٰنُ قَالَ یٰۤاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰی شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا یَبْلٰی ۟
فَوَسْوَسَஊசலாட்டத்தை ஏற்படுத்தினான்اِلَيْهِஅவருக்குالشَّيْطٰنُஷைத்தான்قَالَகூறினான்يٰۤاٰدَمُஆதமهَلْ اَدُلُّكَநான் உமக்கு அறிவிக்கவா?عَلٰى شَجَرَةِமரத்தையும்الْخُلْدِநிரந்தரத்தின்وَمُلْكٍஆட்சியையும்لَّا يَبْلٰى‏அழியாத
Fப வஸ்வஸ இலய்ஹிஷ் ஷய்தானு கால யா ஆதமு ஹல் அதுல்லுக 'அலா ஷஜரதில் குல்தி வ முல்கில் லா யBப்லா
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.
فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا یَخْصِفٰنِ عَلَیْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِ ؗ وَعَصٰۤی اٰدَمُ رَبَّهٗ فَغَوٰی ۪۟ۖ
فَاَكَلَاஆக, அவ்விருவரும் சாப்பிட்டனர்مِنْهَاஅதிலிருந்துفَبَدَتْஆகவே தெரியவந்தனلَهُمَاஅவ்விருவருக்கும்سَوْاٰ تُہُمَاஅவ்விருவரின் மறைவிடங்கள்وَطَفِقَاஇன்னும் முற்பட்டனர்يَخْصِفٰنِஅவ்விருவரும் கட்டிக்கொள்வதற்குعَلَيْهِمَاதங்கள் இருவர் மீதுمِنْ وَّرَقِஇலைகளைالْجَـنَّةِ‌சொர்க்கத்தின்وَعَصٰۤىஇன்னும் மாறுசெய்தார்اٰدَمُஆதமرَبَّهٗதன் இறைவனுக்குفَغَوٰى‌ۖ‏ஆகவே வழி தவறி விட்டார்
Fப அகலா மின்ஹா FபBபதத் லஹுமா ஸவ் ஆதுஹுமா வ தFபிகா யக்ஸிFபானி 'அலய்ஹிமா மி(ன்)வ் வரகில் ஜன்னஹ்; வ 'அஸா ஆதமு ரBப்Bபஹூ Fபகவா
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.
اَلَمْ اَعْهَدْ اِلَیْكُمْ یٰبَنِیْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّیْطٰنَ ۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟ۙ
اَلَمْ اَعْهَدْநான் கட்டளையிடவில்லையா?اِلَيْكُمْஉங்களுக்குيٰبَنِىْۤ اٰدَمَஆதமின் மக்களே!اَنْ لَّا تَعْبُدُواநீங்கள் வணங்காதீர்கள் என்றுالشَّيْطٰنَ‌ۚஷைத்தானைاِنَّهٗநிச்சயமாக அவன்لَـكُمْஉங்களுக்குعَدُوٌّஎதிரியாவான்مُّبِيْنٌ ۙ‏தெளிவான
அலம் அஃஹத் இலய்கும் யா Bபனீ ஆதம அல்-லா தஃBபுதுஷ் ஷய்தான இன்னஹூ லகும் 'அதுவ்வும் முBபீன்
ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?