">

தேடல் வார்த்தை: "ஆதம"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

27 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 27)

وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَی الْمَلٰٓىِٕكَةِ ۙ فَقَالَ اَنْۢبِـُٔوْنِیْ بِاَسْمَآءِ هٰۤؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَ عَلَّمَமேலும் அவன் கற்றுக்கொடுத்தான்اٰدَمَஆதமுக்குالْاَسْمَآءَபெயர்களைكُلَّهَاஅவை அனைத்தையும்ثُمَّபிறகுعَرَضَهُمْஅவற்றை அவன் முன்வைத்தான்عَلَیமுன்الْمَلٰٓىِٕكَةِ ۙவானவர்கள்فَقَالَபின் அவன் கூறினான்اَنْۢبِـُٔوْنِیْஎனக்கு அறிவியுங்கள்بِاَسْمَآءِபெயர்களைهٰۤؤُلَآءِஇவற்றின்اِنْநீங்கள்كُنْتُمْஇருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
வ 'அல்லம ஆதமல் அஸ்மா'அ குல்லஹா தும்ம 'அரளஹும் 'அலல் மலா'இகதி Fபகால அம்Bபி'ஊனீ Bபிஅஸ் மா'இ ஹா'உலா'இ இன் குன்தும் ஸாதிகீன்
இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
قَالَ یٰۤاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۚ فَلَمَّاۤ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۙ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ اِنِّیْۤ اَعْلَمُ غَیْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟
قَالَகூறினான்یٰۤاٰدَمُஆதமே!اَنْۢبِئْهُمْஅவர்களுக்குத் தெரிவிப்பீராகبِاَسْمَآىِٕهِمْ ۚஅவற்றின் பெயர்களைفَلَمَّاۤபின்னர் எப்பொழுதுاَنْۢبَاَهُمْஅவர்களுக்குத் தெரிவித்தாரோبِاَسْمَآىِٕهِمْ ۙஅவற்றின் பெயர்களைقَالَகூறினான்اَلَمْஇல்லையாاَقُلْநான் கூறلَّكُمْஉங்களுக்குاِنِّیْۤநிச்சயமாக நான்اَعْلَمُஅறிவேன்غَیْبَமறைவானவற்றைالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ۙமற்றும் பூமியின்وَ اَعْلَمُமேலும் நான் அறிவேன்مَاஎதைتُبْدُوْنَநீங்கள் வெளிப்படுத்துகிறீர்களோوَ مَاஇன்னும் எதைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَكْتُمُوْنَமறைக்கிறீர்களோ
கால யா ஆதமு அம்Bபி' ஹும் Bபிஅஸ்மா'இஹிம் Fபலம்மா அம்Bப அஹும் Bபி அஸ்மா'இஹிம் கால அலம் அகுல் லகும் இன்னீ அஃலமு கய்Bபஸ் ஸமாவாதி வல் அர்ளி வ அஃலமு மா துBப்தூன வமா குன்தும் தக்துமூன்
ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اَبٰی وَاسْتَكْبَرَ ؗۗ وَكَانَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
وَ اِذْஇன்னும் (அப்போது)قُلْنَاநாம் கூறினோம்لِلْمَلٰٓىِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاஸஜ்தா செய்யுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْۤاஉடனே அவர்கள் ஸஜ்தா செய்தார்கள்اِلَّاۤதவிரاِبْلِیْسَ ؕஇப்லீஸைاَبٰیஅவன் மறுத்தான்وَ اسْتَكْبَرَ ؗۗமேலும் பெருமையடித்தான்وَ كَانَமேலும் அவன் ஆகிவிட்டான்مِنَஒருவனாகالْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்களில்
வ இத் குல்னா லில்மலா'இ கதிஸ் ஜுதூ லிஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ அBபா வஸ்தக்Bபர வ கான மினல் காFபிரீன்
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
وَقُلْنَا یٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَیْثُ شِئْتُمَا ۪ وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟
وَ قُلْنَاமேலும் நாம் கூறினோம்یٰۤاٰدَمُஆதமே!اسْكُنْகுடியிருப்பீராகاَنْتَநீரும்وَ زَوْجُكَஉம் மனைவியும்الْجَنَّةَசுவனத்தில்وَ كُلَاஇன்னும் நீங்கள் இருவரும் உண்ணுங்கள்مِنْهَاஅதிலிருந்துرَغَدًاதாராளமாகحَیْثُஎங்குشِئْتُمَا ۪நீங்கள் இருவரும் விரும்புகிறீர்களோوَ لَاஆனால் வேண்டாம்تَقْرَبَاநீங்கள் இருவரும் நெருங்கهٰذِهِஇந்தالشَّجَرَةَமரத்தைفَتَكُوْنَاஆகவே நீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள்مِنَஉள்ளவர்களாகالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களில்
வ குல்னா யா ஆதமுஸ் குன் அன்த வ Zஜவ்ஜுகல் ஜன்னத வ குலா மின்ஹா ரகதன் ஹய்து ஷி'துமா வலா தக்ரBபா ஹாதிஹிஷ் ஷஜரத Fபதகூனா மினள் ளாலிமீன்
மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.
فَتَلَقّٰۤی اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَیْهِ ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
فَتَلَقّٰۤیபின்னர் பெற்றுக்கொண்டார்اٰدَمُஆதமمِنْஇருந்துرَّبِّهٖதனது இறைவனிடம்كَلِمٰتٍசில வார்த்தைகளைفَتَابَஎனவே அவன் மன்னித்தான்عَلَیْهِ ؕஅவர் மீதுاِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவன்தான்التَّوَّابُமன்னிப்பை ஏற்பவன்الرَّحِیْمُநிகரற்ற அன்புடையவன்
Fபதலக்கா ஆதமு மிர் ரBப்Bபிஹீ கலிமாதின் FபதாBப 'அலய்ஹி; இன்னஹூ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
اِنَّ اللّٰهَ اصْطَفٰۤی اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِیْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰۤیதேர்ந்தெடுத்தான்اٰدَمَஆதமوَ نُوْحًاநூஹையும்وَّ اٰلَகுடும்பத்தாரையும்اِبْرٰهِیْمَஇப்ராஹீமின்وَ اٰلَகுடும்பத்தாரையும்عِمْرٰنَஇம்ரானின்عَلَیவிடالْعٰلَمِیْنَۙஅகிலத்தாரை
இன்னல் லாஹஸ் தFபா ஆதம வ னூஹ(ன்)வ் வ ஆல இBப்ராஹீம வ ஆல இம்ரான 'அலல் 'ஆலமீன்
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
اِنَّ مَثَلَ عِیْسٰی عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
اِنَّநிச்சயமாகمَثَلَஉதாரணம்عِیْسٰیஈஸாவின்عِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றதேاٰدَمَ ؕஆதமின்خَلَقَهٗஅவனைப் படைத்தான்مِنْஇருந்துتُرَابٍமண்ثُمَّபின்னர்قَالَகூறினான்لَهٗஅவனுக்குكُنْஆகுفَیَكُوْنُஉடனே ஆகிவிட்டான்
இன்ன மதல 'ஈஸா 'இன்தல் லாஹி கமதலி ஆதம கலகஹூ மின் துராBபின் தும்ம கால லஹூ குன் Fபயகூன்
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ ابْنَیْ اٰدَمَ بِالْحَقِّ ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ یُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ ؕ قَالَ لَاَقْتُلَنَّكَ ؕ قَالَ اِنَّمَا یَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِیْنَ ۟
وَ اتْلُமேலும் ஓதிக்காட்டுவீராகعَلَیْهِمْஅவர்களுக்குنَبَاَசெய்தியைابْنَیْஇரு மகன்களின்اٰدَمَஆதமுடையبِالْحَقِّ ۘஉண்மையுடன்اِذْபோதுقَرَّبَاஅவ்விருவரும் சமர்ப்பித்தقُرْبَانًاஒரு காணிக்கையைفَتُقُبِّلَஎனவே அங்கீகரிக்கப்பட்டதுمِنْஇருந்துاَحَدِهِمَاஅவ்விருவரில் ஒருவரிடம்وَ لَمْமேலும் இல்லைیُتَقَبَّلْஅங்கீகரிக்கப்பட்டதுمِنَஇருந்துالْاٰخَرِ ؕமற்றவரிடம்قَالَஅவன் கூறினான்لَاَقْتُلَنَّكَ ؕநிச்சயமாக உன்னைக் கொலை செய்வேன்قَالَஅவர் கூறினார்اِنَّمَاநிச்சயமாகیَتَقَبَّلُஅங்கீகரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مِنَஇருந்துالْمُتَّقِیْنَபயபக்தியுடையவர்களிடம்
வத்லு 'அலய்ஹிம் னBப அBப்னய் ஆதம Bபில்ஹக்க்; இத் கர்ரBபா குர்Bபானன் FபதுகுBப்Bபில மின் அஹதிஹிமா வ லம் யுதகBப்Bபல் மினல் ஆகரி கால ல அக்துலன்ன்னக கால இன்னமா யதகBப்Bபலுல் லாஹு மினல் முத்தகீன்
(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.
وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ ۖۗ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ لَمْ یَكُنْ مِّنَ السّٰجِدِیْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகخَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்ثُمَّபிறகுصَوَّرْنٰكُمْஉங்களை உருவமைத்தோம்ثُمَّபின்னர்قُلْنَاநாம் கூறினோம்لِلْمَلٰٓىِٕكَةِவானவர்களிடம்اسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَ ۖۗஆதமுக்குفَسَجَدُوْۤاஆகவே அவர்கள் சிரம் பணிந்தார்கள்اِلَّاۤதவிரاِبْلِیْسَ ؕஇப்லீஸைلَمْஇல்லைیَكُنْஅவன் இருக்கمِّنَஇருந்துالسّٰجِدِیْنَசிரம் பணிந்தவர்களில்
வ லகத் கலக்னாகும் தும்ம ஸவ்வர்னாகும் தும்ம குல்னா லில்மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fப-ஸஜதூ இல்லா இBப்லீஸ லம் யகும் மினஸ் ஸாஜிதீன்
நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ ؕ قَالَ اَنَا خَیْرٌ مِّنْهُ ۚ خَلَقْتَنِیْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِیْنٍ ۟
قَالَஅவன் கேட்டான்مَاஎதுمَنَعَكَஉன்னைத் தடுத்ததுاَلَّاசெய்யாதிருக்கتَسْجُدَநீ சிரம் பணியاِذْபோதுاَمَرْتُكَ ؕநான் உனக்குக் கட்டளையிட்டقَالَஅவன் கூறினான்اَنَاநான்خَیْرٌசிறந்தவன்مِّنْهُ ۚஅவனை விடخَلَقْتَنِیْநீ என்னைப் படைத்தாய்مِنْஇருந்துنَّارٍநெருப்புوَّ خَلَقْتَهٗமேலும் அவனை நீ படைத்தாய்مِنْஇருந்துطِیْنٍகளிமண்
கால மா மன'அக அல்லா தஸ்ஜுத இத் அமர்துக கால அன கய்ரும் மின்ஹு கலக்தனீ மின் னாரி(ன்)வ் வ கலக்தஹூ மின் தீன்
“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
قَالَ فَبِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِیْمَ ۟ۙ
قَالَஅவன் கூறினான்فَبِمَاۤஎதனால்اَغْوَیْتَنِیْநீ என்னை வழிகெடுத்தாயோلَاَقْعُدَنَّநான் நிச்சயமாக அமர்வேன்لَهُمْஅவர்களுக்காகصِرَاطَكَஉனது பாதையில்الْمُسْتَقِیْمَۙநேரான
கால FபBபிமா அக்வய் தனீ ல அக்'உதன்ன லஹும் ஸிராதகல் முஸ்தகீம்
(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
وَیٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَیْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟
وَ یٰۤاٰدَمُஇன்னும் ஆதமே!اسْكُنْகுடியிருங்கள்اَنْتَநீரும்وَ زَوْجُكَஉம் மனைவியும்الْجَنَّةَசுவனத்தில்فَكُلَاஎனவே உண்ணுங்கள்مِنْஇருந்துحَیْثُஎங்குشِئْتُمَاவிரும்புகிறீர்களோوَ لَاஆனால்تَقْرَبَاநெருங்க வேண்டாம்هٰذِهِஇந்தالشَّجَرَةَமரத்தைفَتَكُوْنَا(அவ்வாறு செய்தால்) ஆகிவிடுவீர்கள்مِنَசேர்ந்தவர்களாகالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களில்
வ யா ஆதமுஸ் குன் அன்த வ Zஜவ்ஜுகல் ஜன்னத Fபகுலா மின் ஹய்து ஷி'துமா வலா தக்ரBபா ஹாதிஹிஷ் ஷஜரத Fபதகூனா மினள் ளாலிமீன்
(பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
یٰبَنِیْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَیْكُمْ لِبَاسًا یُّوَارِیْ سَوْاٰتِكُمْ وَرِیْشًا ؕ وَلِبَاسُ التَّقْوٰی ۙ ذٰلِكَ خَیْرٌ ؕ ذٰلِكَ مِنْ اٰیٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
یٰبَنِیْۤஓ மக்களேاٰدَمَஆதாமின்قَدْநிச்சயமாகاَنْزَلْنَاநாம் அருளியுள்ளோம்عَلَیْكُمْஉங்கள் மீதுلِبَاسًاஆடையைیُّوَارِیْஅது மறைக்கும்سَوْاٰتِكُمْஉங்கள் மானத்தைوَ رِیْشًا ؕமேலும் அலங்காரத்தையும்وَ لِبَاسُமேலும் ஆடைالتَّقْوٰی ۙஇறையச்சம்ذٰلِكَஅதுخَیْرٌ ؕமிகச் சிறந்ததுذٰلِكَஅதுمِنْஇருந்துاٰیٰتِஅத்தாட்சிகளில்اللّٰهِஅல்லாஹ்வின்لَعَلَّهُمْஅவர்கள்یَذَّكَّرُوْنَநினைவு கூர்வதற்காக
யா Bபனீ ஆதம கத் அன்Zஜல்னா 'அலய்கும் லிBபாஸ(ன்)ய் யுவாரீ ஸவ் ஆதிகும் வ ரீஷ(ன்)வ் வ லிBபாஸுத் தக்வா தாலிக கய்ர்; தாலிக மின் ஆயாதில் லாஹி ல'அல்லஹும் யத் தக்கரூன்
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
یٰبَنِیْۤ اٰدَمَ لَا یَفْتِنَنَّكُمُ الشَّیْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَیْكُمْ مِّنَ الْجَنَّةِ یَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِیُرِیَهُمَا سَوْاٰتِهِمَا ؕ اِنَّهٗ یَرٰىكُمْ هُوَ وَقَبِیْلُهٗ مِنْ حَیْثُ لَا تَرَوْنَهُمْ ؕ اِنَّا جَعَلْنَا الشَّیٰطِیْنَ اَوْلِیَآءَ لِلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ ۟
یٰبَنِیْۤஓ மக்களேاٰدَمَஆதமுடையلَاவேண்டாம்یَفْتِنَنَّكُمُஉங்களை மயக்கிவிடالشَّیْطٰنُஷைத்தான்كَمَاۤஎவ்வாறுاَخْرَجَஅவன் வெளியேற்றினானோاَبَوَیْكُمْஉங்கள் பெற்றோரைمِّنَஇருந்துالْجَنَّةِசுவனத்தில்یَنْزِعُஅவன் நீக்கினான்عَنْهُمَاஅவ்விருவரிடமிருந்தும்لِبَاسَهُمَاஅவ்விருவரின் ஆடையைلِیُرِیَهُمَاஅவ்விருவருக்கும் காட்டுவதற்காகسَوْاٰتِهِمَا ؕஅவ்விருவரின் மறைவிடங்களைاِنَّهٗநிச்சயமாக அவன்یَرٰىكُمْஉங்களைப் பார்க்கிறான்هُوَஅவனும்وَ قَبِیْلُهٗஅவனது கூட்டத்தாரும்مِنْஇருந்துحَیْثُஎவ்விடத்தில்لَاஇல்லைتَرَوْنَهُمْ ؕநீங்கள் அவர்களைப் பார்க்கிறீர்களோاِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاஆக்கினோம்الشَّیٰطِیْنَஷைத்தான்களைاَوْلِیَآءَநண்பர்களாகلِلَّذِیْنَஎவர்களுக்குلَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோ
யா Bபனீ ஆதம லா யFப்தினன்ன்னகுமுஷ் ஷய்தானு கமா அக்ரஜ அBபவய்கும் மினல் ஜன்னதி யன்Zஜி'உ 'அன்ஹுமா லிBபாஸஹுமா லியுரியஹுமா ஸவ் ஆதிஹிமா; இன்னஹூ யராகும் ஹுவ வ கBபீலுஹூ மின் ஹய்து லா தரவ்னஹும்; இன்னா ஜ'அல்னஷ் ஷயாதீன அவ்லியா'அ லில்லதீன லா யு'மினூன்
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
یٰبَنِیْۤ اٰدَمَ خُذُوْا زِیْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْرِفِیْنَ ۟۠
یٰبَنِیْۤ(ஓ) ஆதாமின் மக்களே!اٰدَمَ(ஆதாமே)خُذُوْاஅணியுங்கள்زِیْنَتَكُمْஉங்கள் அலங்காரத்தைعِنْدَஇடத்திலும்كُلِّஒவ்வொருمَسْجِدٍமஸ்ஜிதிலும்وَّ كُلُوْاஉண்ணுங்கள்وَ اشْرَبُوْاபருகுங்கள்وَ لَاமேலும்تُسْرِفُوْا ۚவீண் விரயம் செய்யாதீர்கள்اِنَّهٗநிச்சயமாக அவன்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்الْمُسْرِفِیْنَ۠வீண் விரயம் செய்பவர்களை
யா Bபனீ அதம குதூ Zஜீனதகும் 'இன்த குல்லி மஸ்ஜிதி(ன்)வ் வ குலூ வஷ்ரBபூ வலா துஸ்ரிFபூ; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஸ்ரிFபீன்
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.  
یٰبَنِیْۤ اٰدَمَ اِمَّا یَاْتِیَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَقُصُّوْنَ عَلَیْكُمْ اٰیٰتِیْ ۙ فَمَنِ اتَّقٰی وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
یٰبَنِیْۤஓ மக்களேاٰدَمَஆதமுடையاِمَّاஒருவேளைیَاْتِیَنَّكُمْஉங்களிடம் வந்தால்رُسُلٌதூதர்கள்مِّنْكُمْஉங்களிலிருந்தேیَقُصُّوْنَவிவரிப்பார்கள்عَلَیْكُمْஉங்களுக்குاٰیٰتِیْ ۙஎன் வசனங்களைفَمَنِஎனவே எவர்اتَّقٰیஇறையச்சம் கொண்டுوَ اَصْلَحَமேலும் சீர்திருத்திக் கொண்டாரோفَلَاஎனவே இல்லைخَوْفٌஅச்சம்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَحْزَنُوْنَகவலைப்படுவார்கள்
யா Bபனீ ஆதம இம்மா ய'தியன்னகும் ருஸுலும் மின்கும் யகுஸ்ஸூன 'அலய்கும் ஆயாதீ Fபமனித் தகா வ அஸ்லஹ Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.
وَاِذْ اَخَذَ رَبُّكَ مِنْ بَنِیْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّیَّتَهُمْ وَاَشْهَدَهُمْ عَلٰۤی اَنْفُسِهِمْ ۚ اَلَسْتُ بِرَبِّكُمْ ؕ قَالُوْا بَلٰی ۛۚ شَهِدْنَا ۛۚ اَنْ تَقُوْلُوْا یَوْمَ الْقِیٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِیْنَ ۟ۙ
وَ اِذْமேலும் போதுاَخَذَஎடுத்தான்رَبُّكَஉமது இறைவன்مِنْۢஇருந்துبَنِیْۤமக்களின்اٰدَمَஆதமمِنْஇருந்துظُهُوْرِهِمْஅவர்களின் முதுகுகளில்ذُرِّیَّتَهُمْஅவர்களின் சந்ததிகளைوَ اَشْهَدَهُمْமேலும் அவர்களை சாட்சியாக்கினான்عَلٰۤیமீதுاَنْفُسِهِمْஅவர்களின் ஆத்மாக்களின்اَلَسْتُநான் இல்லையா?بِرَبِّكُمْ ؕஉங்கள் இறைவனாக?قَالُوْاஅவர்கள் கூறினார்கள்بَلٰی ۛۚஆம்شَهِدْنَا ۛۚநாங்கள் சாட்சி கூறுகிறோம்اَنْஎன்றுتَقُوْلُوْاநீங்கள் கூறாதிருக்கیَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைاِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்عَنْபற்றிهٰذَاஇதைغٰفِلِیْنَۙகவனமற்றவர்களாக
வ இத் அகத ரBப்Bபுக மின் Bபனீ ஆதம மின் ளுஹூரிஹிம் துர்ரிய்யதஹும் வ அஷ்ஹதஹும் 'அலா அன்Fபுஸிஹிம் அலஸ்து Bபி ரBப்Bபிகும் காலூ Bபலா ஷஹித்னா; அன் தகூலூ யவ்மல் கியாமதி இன்னா குன்னா 'அன் ஹாதா காFபிலீன்
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِیْنًا ۟ۚ
وَ اِذْமேலும், (நினைவுகூருங்கள்)قُلْنَاநாம் கூறினோம்لِلْمَلٰٓىِٕكَةِவானவர்களிடம்اسْجُدُوْاஸஜ்தா செய்யுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْۤاஉடனே அவர்கள் ஸஜ்தா செய்தார்கள்اِلَّاۤதவிரاِبْلِیْسَ ؕஇப்லீஸைقَالَஅவன் கூறினான்ءَاَسْجُدُநான் ஸஜ்தா செய்வேனா?لِمَنْஎவருக்குخَلَقْتَநீ படைத்தாயோطِیْنًاۚகளிமண்ணால்
வ இத் குல்னா லில் மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ கால 'அ-அஸ்ஜுது லிமன் கலக்த தீனா
இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான்.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِیْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِی الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰی كَثِیْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِیْلًا ۟۠
وَ لَقَدْமேலும் நிச்சயமாகكَرَّمْنَاநாம் கண்ணியப்படுத்தினோம்بَنِیْۤசந்ததியினரைاٰدَمَஆதமுடையوَ حَمَلْنٰهُمْமேலும் அவர்களை நாம் சுமந்தோம்فِیஇல்الْبَرِّதரைوَ الْبَحْرِமற்றும் கடல்وَ رَزَقْنٰهُمْமேலும் அவர்களுக்கு நாம் உணவளித்தோம்مِّنَஇலிருந்துالطَّیِّبٰتِதூய்மையானவற்றوَ فَضَّلْنٰهُمْமேலும் அவர்களை நாம் மேன்மைப்படுத்தினோம்عَلٰیவிடكَثِیْرٍஅநேகரைمِّمَّنْஎவர்களில்خَلَقْنَاநாம் படைத்தோமோتَفْضِیْلًا۠சிறப்பான மேன்மையாக
வ லகத் கர்ரம்னா Bபனீ ஆதம வ ஹமல்னாஹும் Fபில் Bபர்ரி வல்Bபஹ்ரி வ ரZஜக்னாஹும் மினத் தய்யிBபாதி வ Fபள்ளல்னாஹும் 'அலா கதீரிம் மிம்மன் கலக்னா தFப்ளீலா
நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.  
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ اَمْرِ رَبِّهٖ ؕ اَفَتَتَّخِذُوْنَهٗ وَذُرِّیَّتَهٗۤ اَوْلِیَآءَ مِنْ دُوْنِیْ وَهُمْ لَكُمْ عَدُوٌّ ؕ بِئْسَ لِلظّٰلِمِیْنَ بَدَلًا ۟
وَ اِذْமேலும் நினைவுகூருங்கள்قُلْنَاநாம் கூறினோம்لِلْمَلٰٓىِٕكَةِவானவர்களிடம்اسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْۤاஉடனே அவர்கள் சிரம் பணிந்தார்கள்اِلَّاۤதவிரاِبْلِیْسَ ؕஇப்லீஸைكَانَஅவன் இருந்தான்مِنَசேர்ந்தவனாகالْجِنِّஜின் இனத்தைச்فَفَسَقَஎனவே அவன் மாறு செய்தான்عَنْவிட்டுاَمْرِகட்டளையைرَبِّهٖ ؕதன் இறைவனுடையاَفَتَتَّخِذُوْنَهٗஅப்படியிருக்க நீங்கள் அவனை எடுத்துக் கொள்வீர்களாوَ ذُرِّیَّتَهٗۤஅவனுடைய சந்ததிகளையும்اَوْلِیَآءَபாதுகாவலர்களாகمِنْஅன்றிدُوْنِیْஎன்னைوَ هُمْஅவர்களோلَكُمْஉங்களுக்குعَدُوٌّ ؕபகைவர்கள்بِئْسَமிகக் கெட்டதுلِلظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குبَدَلًاபகரம்
வ இத் குல்னா லில் மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ கான மினல் ஜின்னி FபFபஸக 'அன் அம்ரி ரBப்Bபிஹ்; அFபதத்தகிதூனஹூ வ துர்ரியதஹூ அவ்லியா'அ மின் தூனீ வ ஹும் லகும் 'அதுவ்வ்; Bபி'ஸ லிள்ளாலிமீன Bபதலா
அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
اُولٰٓىِٕكَஅத்தகையோர்الَّذِیْنَஎவர்கள் என்றால்اَنْعَمَஅருள்புரிந்தானோاللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْஅவர்கள் மீதுمِّنَ(அவர்கள்)النَّبِیّٖنَநபிமார்களில்مِنْஉள்ளவர்கள்;ذُرِّیَّةِசந்ததியினரில்اٰدَمَ ۗஆதமின்وَ مِمَّنْமேலும் எவர்களைحَمَلْنَاநாம் சுமந்தோமோمَعَஉடன்نُوْحٍ ؗநூஹ்وَّ مِنْமேலும்ذُرِّیَّةِசந்ததியினரில்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْرَآءِیْلَ ؗமற்றும் இஸ்ராயீலின்وَ مِمَّنْமேலும் எவர்களில்هَدَیْنَاநாம் நேர்வழி காட்டினோமோوَ اجْتَبَیْنَا ؕமேலும் நாம் தேர்ந்தெடுத்தோமோاِذَاஎப்போதுتُتْلٰیஓதிக்காட்டப்படுகிறதோعَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتُவசனங்கள்الرَّحْمٰنِஅளவற்ற அருளாளனின்خَرُّوْا(அப்போது) அவர்கள் விழுவார்கள்سُجَّدًاசிரம் பணிந்தவர்களாகوَّ بُكِیًّا۩மேலும் அழுதவர்களாக
உலா'இகல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன மின் துர்ரிய்யதி ஆதம வ மிம்மன் ஹமல்னா ம'அ னூஹி(ன்)வ் வ மின் துர்ரிய்யதி இBப்ராஹீம வ இஸ்ரா'ஈல வ மிம்மன் ஹதய்னா வஜ்த Bபய்னா; இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுர் ரஹ்மானி கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ Bபுகிய்யா
இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
وَلَقَدْ عَهِدْنَاۤ اِلٰۤی اٰدَمَ مِنْ قَبْلُ فَنَسِیَ وَلَمْ نَجِدْ لَهٗ عَزْمًا ۟۠
وَ لَقَدْமேலும் நிச்சயமாகعَهِدْنَاۤநாம் உடன்படிக்கை செய்தோம்اِلٰۤیஇடம்اٰدَمَஆதமمِنْஇதற்குقَبْلُமுன்னர்فَنَسِیَஎனவே அவர் மறந்துவிட்டார்وَ لَمْமேலும் இல்லைنَجِدْநாம் காணلَهٗஅவரிடம்عَزْمًا۠உறுதியை
வ லகத் 'அஹித்னா இலா ஆதம மின் கBப்லு Fபனஸிய வ லம் னஜித் லஹூ 'அZஜ்மா
முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை.
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اَبٰی ۟
وَ اِذْஇன்னும் (அப்போது)قُلْنَاநாம் கூறினோம்لِلْمَلٰٓىِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْۤاஉடனே அவர்கள் சிரம் பணிந்தார்கள்اِلَّاۤதவிரاِبْلِیْسَ ؕஇப்லீஸைاَبٰیஅவன் மறுத்தான்
வ இத் குல்னா லில்ம லா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ; அBபா
“நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.
فَقُلْنَا یٰۤاٰدَمُ اِنَّ هٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا یُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقٰی ۟
فَقُلْنَاஎனவே நாம் கூறினோம்یٰۤاٰدَمُஆதமاِنَّநிச்சயமாகهٰذَاஇவன்عَدُوٌّபகைவன்لَّكَஉமக்கும்وَ لِزَوْجِكَஉமது மனைவிக்கும்فَلَاஎனவே வேண்டாம்یُخْرِجَنَّكُمَاஉங்கள் இருவரையும் அவன் வெளியேற்றிவிடمِنَஇருந்துالْجَنَّةِசுவனத்தில்فَتَشْقٰیபிறகு நீர் சிரமப்படுவீர்
Fபகுல்னா யா ஆதமு இன்ன ஹாதா 'அதுவ்வுல் லக வ லிZஜவ்ஜிக Fபலா யுக்ரிஜன் னகுமா மினல் ஜன்னதி Fபதஷ்கா
அப்பொழுது “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.
فَوَسْوَسَ اِلَیْهِ الشَّیْطٰنُ قَالَ یٰۤاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰی شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا یَبْلٰی ۟
فَوَسْوَسَபிறகு ஊசலாட்டத்தை உண்டாக்கினான்اِلَیْهِஅவனிடம்الشَّیْطٰنُஷைத்தான்قَالَஅவன் கூறினான்یٰۤاٰدَمُஆதமே!هَلْSlஎன்ன?اَدُلُّكَஉமக்கு நான் வழிகாட்டவாعَلٰیபற்றிشَجَرَةِமரத்தைالْخُلْدِநிலையானوَ مُلْكٍமேலும் ஓர் ஆட்சியைلَّاஇல்லைیَبْلٰیஅழியும்
Fப வஸ்வஸ இலய்ஹிஷ் ஷய்தானு கால யா ஆதமு ஹல் அதுல்லுக 'அலா ஷஜரதில் குல்தி வ முல்கில் லா யBப்லா
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.
فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا یَخْصِفٰنِ عَلَیْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِ ؗ وَعَصٰۤی اٰدَمُ رَبَّهٗ فَغَوٰی ۪۟ۖ
فَاَكَلَاஎனவே அவ்விருவரும் உண்டனர்مِنْهَاஅதிலிருந்துفَبَدَتْஆகவே வெளிப்பட்டனلَهُمَاஅவ்விருவருக்கும்سَوْاٰتُهُمَاஅவ்விருவரின் மறைவிடங்கள்وَ طَفِقَاமேலும் அவ்விருவரும் தொடங்கினர்یَخْصِفٰنِஇணைத்துக்கட்டعَلَیْهِمَاதங்கள் மீதுمِنْகொண்டுوَّرَقِஇலைகளைالْجَنَّةِ ؗசுவனத்தின்وَ عَصٰۤیமேலும் மாறு செய்தார்اٰدَمُஆதமرَبَّهٗதன் இறைவனுக்குفَغَوٰی۪ۖஎனவே அவர் வழிதவறினார்
Fப அகலா மின்ஹா FபBபதத் லஹுமா ஸவ் ஆதுஹுமா வ தFபிகா யக்ஸிFபானி 'அலய்ஹிமா மி(ன்)வ் வரகில் ஜன்னஹ்; வ 'அஸா ஆதமு ரBப்Bபஹூ Fபகவா
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.
اَلَمْ اَعْهَدْ اِلَیْكُمْ یٰبَنِیْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّیْطٰنَ ۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟ۙ
اَلَمْஇல்லையாاَعْهَدْநான் கட்டளையிடاِلَیْكُمْஉங்களிடம்یٰبَنِیْۤஓ மக்களேاٰدَمَஆதமின்اَنْஎன்றுلَّاகூடாதுتَعْبُدُواநீங்கள் வணங்கالشَّیْطٰنَ ۚஷைத்தானைاِنَّهٗநிச்சயமாக அவன்لَكُمْஉங்களுக்குعَدُوٌّபகைவன்مُّبِیْنٌۙதெளிவான
அலம் அஃஹத் இலய்கும் யா Bபனீ ஆதம அல்-லா தஃBபுதுஷ் ஷய்தான இன்னஹூ லகும் 'அதுவ்வும் முBபீன்
ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?