">

தேடல் வார்த்தை: "இஸ்மாயீ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

12 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 12)

وَاِذْ جَعَلْنَا الْبَیْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّی ؕ وَعَهِدْنَاۤ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ اَنْ طَهِّرَا بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْعٰكِفِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
وَ اِذْமேலும் (நினைவு கூருங்கள்)جَعَلْنَاநாம் ஆக்கினோம்الْبَیْتَஅந்த வீட்டைمَثَابَةًதிரும்பி வரும் இடமாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَ اَمْنًا ؕமேலும் பாதுகாப்பானதாகவும்وَ اتَّخِذُوْاமேலும் ஆக்கிக்கொள்ளுங்கள்مِنْஇருந்துمَّقَامِநின்ற இடத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமுடையمُصَلًّی ؕதொழும் இடமாகوَ عَهِدْنَاۤமேலும் நாம் கட்டளையிட்டோம்اِلٰۤیநோக்கிاِبْرٰهٖمَஇப்ராஹீமைوَ اِسْمٰعِیْلَமேலும் இஸ்மாயீலைاَنْஎன்றுطَهِّرَاநீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள்بَیْتِیَஎனது வீட்டைلِلطَّآىِٕفِیْنَசுற்றி வருபவர்களுக்காகوَ الْعٰكِفِیْنَமேலும் தங்கியிருப்பவர்களுக்காகوَ الرُّكَّعِமேலும் ருகூஃ செய்பவர்களுக்காகالسُّجُوْدِஸுஜூது செய்பவர்களுக்காக
வ இத் ஜ'அல்னல் Bபய்த மதாBபதல் லின்னாஸி வ அம்ன(ன்)வ் வத்தகிதூ மிம் மகாமி இBப்ராஹீம முஸல்லா; வ 'அஹித்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல அன் தஹ்ஹிரா Bபய்திய லித்தா'இFபீன வல்'ஆகிFபீன வர்ருக்க'இஸ் ஸுஜூத்
(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
وَاِذْ یَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَیْتِ وَاِسْمٰعِیْلُ ؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ؕ اِنَّكَ اَنْتَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَ اِذْஇன்னும், போதுیَرْفَعُஉயர்த்தியاِبْرٰهٖمُஇப்ராஹீம்الْقَوَاعِدَஅடித்தளங்களைمِنَஇருந்துالْبَیْتِஅந்த ஆலயத்தின்وَ اِسْمٰعِیْلُ ؕமேலும் இஸ்மாயீலும்رَبَّنَاஎங்கள் இறைவனேتَقَبَّلْஏற்றுக் கொள்வாயாகمِنَّا ؕஎங்களிடமிருந்துاِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالسَّمِیْعُசெவியேற்பவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
வ இத் யர்Fப'உ இBப்ராஹீமுல் கவா'இத மினல் Bபய்திவ இஸ்மா'ஈலு ரBப்Bபனா தகBப்Bபல் மின்னா இன்னக அன்தஸ் ஸமீ'உல் அலீம்
இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்)
اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ یَعْقُوْبَ الْمَوْتُ ۙ اِذْ قَالَ لِبَنِیْهِ مَا تَعْبُدُوْنَ مِنْ بَعْدِیْ ؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآىِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
اَمْஅல்லதுكُنْتُمْநீங்கள் இருந்தீர்களாشُهَدَآءَசாட்சிகளாகاِذْபோதுحَضَرَவந்தیَعْقُوْبَயஃகூபுக்குالْمَوْتُ ۙமரணம்اِذْஅப்போதுقَالَஅவர் கூறினார்لِبَنِیْهِதன் புதல்வர்களிடம்مَاஎதனைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குவீர்கள்مِنْۢஇருந்துبَعْدِیْ ؕஎனக்குப் பின்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَعْبُدُநாங்கள் வணங்குவோம்اِلٰهَكَஉமது இறைவனைوَ اِلٰهَமேலும் இறைவனைاٰبَآىِٕكَஉமது மூதாதையர்களின்اِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமற்றும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமற்றும் இஸ்ஹாக்اِلٰهًاஇறைவனைوَّاحِدًا ۖۚஏகوَّ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
அம் குன்தும் ஷுஹதா'அ இத் ஹளர யஃகூBபல் மவ்து இத் கால லிBபனீஹி மா தஃBபுதூன மிம் Bபஃதீ காலூ னஃBபுது இலாஹக வ இலாஹ ஆBபா'இக இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக இலாஹ(ன்)வ் வாஹித(ன்)வ் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ۖؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُوْلُوْۤاசொல்லுங்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤஇன்னும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْنَاஎங்களுக்குوَ مَاۤஇன்னும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلٰۤیபால்اِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினர்وَ مَاۤஇன்னும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோمُوْسٰیமூஸாவுக்குوَ عِیْسٰیஇன்னும் ஈஸாவுக்குوَ مَاۤஇன்னும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோالنَّبِیُّوْنَநபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ ۚஅவர்களின் இறைவனிடம்لَاமாட்டோம்نُفَرِّقُநாங்கள் வேறுபடுத்தبَیْنَஇடையில்اَحَدٍஎவருக்கும்مِّنْهُمْ ۖؗஅவர்களில்وَ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
கூலூ ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வ மா உன்Zஜில இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மாஊதிய மூஸா வ 'ஈஸா வ மா ஊதியன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ قُلْ ءَاَنْتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
اَمْஅல்லதுتَقُوْلُوْنَநீங்கள் கூறுகிறீர்களாاِنَّநிச்சயமாகاِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமற்றும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமற்றும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَமற்றும் யஃகூப்وَ الْاَسْبَاطَமற்றும் சந்ததியினர்كَانُوْاஇருந்தார்கள்هُوْدًاயூதர்களாகاَوْஅல்லதுنَصٰرٰی ؕகிறிஸ்தவர்களாகقُلْநீர் கூறுவீராகءَاَنْتُمْநீங்களாاَعْلَمُமிக அறிந்தவர்கள்اَمِஅல்லதுاللّٰهُ ؕஅல்லாஹ்வாوَ مَنْமேலும் யார்اَظْلَمُமிக அநியாயக்காரன்مِمَّنْஎவனை விடكَتَمَமறைத்தானோشَهَادَةًசாட்சியத்தைعِنْدَهٗதன்னிடம் உள்ளمِنَஇருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்وَ مَاமேலும் இல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍபராமுகமானவனாகعَمَّاஎதைப்பற்றிتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
அம் தகூலூன இன்ன இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாத கானூ ஹூதன் அவ் னஸாரா; குல் 'அ-அன்தும் அஃலமு அமில் லாஹ்; வ மன் அள்லமு மிம்மன் கதம ஷஹாததன் 'இன்தஹூ மினல்லாஹ்; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
“இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَالنَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۪ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோعَلَیْنَاஎங்கள் மீதுوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோعَلٰۤیமீதுاِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமேலும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமேலும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَமேலும் யஃகூப்وَ الْاَسْبَاطِமேலும் சந்ததியினர்وَ مَاۤமேலும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோمُوْسٰیமூஸாவுக்குوَ عِیْسٰیமேலும் ஈஸாவுக்குوَ النَّبِیُّوْنَமேலும் நபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ ۪அவர்களின் இறைவனிடம்لَاமாட்டோம்نُفَرِّقُநாங்கள் வேறுபடுத்தبَیْنَஇடையில்اَحَدٍஎவருக்கும்مِّنْهُمْ ؗஅவர்களில்وَ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
குல் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில 'அலய்னா வ மா உன்Zஜில 'அலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மா ஊதிய மூஸா வ 'ஈஸா வன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَیْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَیْكَஉமக்குكَمَاۤபோலவேاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلٰیபால்نُوْحٍநூஹ்وَّ النَّبِیّٖنَஇன்னும் நபிமார்களுக்கும்مِنْۢஇருந்துبَعْدِهٖ ۚஅவருக்குப் பின்وَ اَوْحَیْنَاۤஇன்னும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰۤیபால்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினருக்கும்وَ عِیْسٰیஇன்னும் ஈஸாوَ اَیُّوْبَஇன்னும் அய்யூப்وَ یُوْنُسَஇன்னும் யூனுஸ்وَ هٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَ سُلَیْمٰنَ ۚஇன்னும் ஸுலைமான்وَ اٰتَیْنَاஇன்னும் நாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًاۚஜபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَاِسْمٰعِیْلَ وَالْیَسَعَ وَیُوْنُسَ وَلُوْطًا ؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீலையும்وَ الْیَسَعَஇன்னும் அல்யஸஃவையும்وَ یُوْنُسَஇன்னும் யூனுஸையும்وَ لُوْطًا ؕஇன்னும் லூத்தையும்وَ كُلًّاஇன்னும் அனைவரையும்فَضَّلْنَاநாம் மேன்மையாக்கினோம்عَلَیவிடالْعٰلَمِیْنَۙஅகிலத்தாரை
வ இஸ்மா'ஈல வல் யஸ'அ வ யூனுஸ வ லூதா; வ குல்லன் Fபள்ளல்னா 'அலல் 'ஆலமீன்
இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ وَهَبَ لِیْ عَلَی الْكِبَرِ اِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ ؕ اِنَّ رَبِّیْ لَسَمِیْعُ الدُّعَآءِ ۟
اَلْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالَّذِیْஅவன் எத்தகையவனென்றால்وَهَبَவழங்கினானோلِیْஎனக்குعَلَیநிலையில்الْكِبَرِமுதுமைاِسْمٰعِیْلَஇஸ்மாயீலைوَ اِسْحٰقَ ؕமேலும் இஸ்ஹாக்கைاِنَّநிச்சயமாகرَبِّیْஎன் இறைவன்لَسَمِیْعُநன்கு செவியேற்பவன்الدُّعَآءِபிரார்த்தனையை
அல்ஹம்து லில்லாஹில் லதீ வஹBப லீ 'அலல் கிBபரி இஸ்மா'ஈல வ இஸ்ஹாக்; இன்ன ரBப்Bபீ லஸமீ'உத் து'ஆ
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِسْمٰعِیْلَ ؗ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟ۚ
وَ اذْكُرْஇன்னும் நினைவு கூர்வீராகفِیஇல்الْكِتٰبِவேதத்தில்اِسْمٰعِیْلَ ؗஇஸ்மாயீலைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருந்தார்صَادِقَஉண்மையாளராகالْوَعْدِவாக்குறுதியில்وَ كَانَமேலும் அவர் இருந்தார்رَسُوْلًاஒரு தூதராகنَّبِیًّاۚஒரு நபியாக
வத்குர் Fபில் கிதாBபி இஸ்மா'ஈல்; இன்னஹூ கான ஸாதிகல் வஃதி வ கான ரஸூலன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
وَاِسْمٰعِیْلَ وَاِدْرِیْسَ وَذَا الْكِفْلِ ؕ كُلٌّ مِّنَ الصّٰبِرِیْنَ ۟ۚۖ
وَ اِسْمٰعِیْلَமேலும் இஸ்மாயீலையும்وَ اِدْرِیْسَமேலும் இத்ரீஸையும்وَ ذَاமேலும் துல்الْكِفْلِ ؕகிஃப்லையும்كُلٌّஅனைவரும்مِّنَஉள்ளவர்களேالصّٰبِرِیْنَۚۖபொறுமையாளர்களில்
வ இஸ்மா'ஈல வ இத்ரீஸ வ தல் கிFப்லி குல்லும் மினஸ் ஸாBபிரீன்
இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!
وَاذْكُرْ اِسْمٰعِیْلَ وَالْیَسَعَ وَذَا الْكِفْلِ ؕ وَكُلٌّ مِّنَ الْاَخْیَارِ ۟ؕ
وَ اذْكُرْமேலும் நினைவுகூறுவீராகاِسْمٰعِیْلَஇஸ்மாயீலைوَ الْیَسَعَஇன்னும் அல்யஸஃவைوَ ذَاஇன்னும் துல்الْكِفْلِ ؕஅல்கிஃப்லைوَ كُلٌّஇன்னும் அனைவரும்مِّنَநின்றும்الْاَخْیَارِؕசிறந்தவர்களில்
வத்குர் இஸ்மா'ஈல வல் யஸ'அ வ தல்-கிFப்லி வ குல்லுன் மினல் அக்யார்
இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக; இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.