">

தேடல் வார்த்தை: "தாவூத"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

17 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 17)

فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ۫ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا یَشَآءُ ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ ۙ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰكِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟
فَهَزَمُوْهُمْஎனவே அவர்கள் அவர்களைத் தோற்கடித்தார்கள்بِاِذْنِஅனுமதியால்اللّٰهِ ۙ۫அல்லாஹ்வின்وَ قَتَلَமேலும் கொன்றார்دَاوٗدُதாவூதجَالُوْتَஜாலூத்தைوَ اٰتٰىهُமேலும் அவருக்கு வழங்கினான்اللّٰهُஅல்லாஹ்الْمُلْكَஆட்சியைوَ الْحِكْمَةَமேலும் ஞானத்தைوَ عَلَّمَهٗமேலும் அவருக்குக் கற்றுக்கொடுத்தான்مِمَّاஎவற்றிலிருந்துیَشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ لَوْ لَاஇன்னும் இல்லாவிட்டால்دَفْعُதடுப்பதுاللّٰهِஅல்லாஹ்النَّاسَமனிதர்களைبَعْضَهُمْஅவர்களில் சிலரைبِبَعْضٍ ۙசிலரைக் கொண்டுلَّفَسَدَتِநிச்சயமாகக் கெட்டுப்போயிருக்கும்الْاَرْضُபூமிوَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்ذُوْஉடையவன்فَضْلٍஅருட்கொடைعَلَیமீதுالْعٰلَمِیْنَஅகிலத்தாரின்
FபஹZஜமூஹும் Bபி இத்னில்லாஹி வ கதல தாவூது ஜாலூத வ ஆதாஹுல் லாஹுல்முல்க வல் ஹிக்மத வ 'அல்லமஹூ மிம்மா யஷா'; வ லவ் லா தFப்'உல்லாஹின் னாஸ Bபஃளஹும் BபிBபஃளில் லFபஸததில் அர்ளு வ லாகின்னல் லாஹ தூ Fபள்லின் 'அலல்'ஆலமீன்
இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَیْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَیْكَஉமக்குكَمَاۤபோலவேاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلٰیபால்نُوْحٍநூஹ்وَّ النَّبِیّٖنَஇன்னும் நபிமார்களுக்கும்مِنْۢஇருந்துبَعْدِهٖ ۚஅவருக்குப் பின்وَ اَوْحَیْنَاۤஇன்னும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰۤیபால்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினருக்கும்وَ عِیْسٰیஇன்னும் ஈஸாوَ اَیُّوْبَஇன்னும் அய்யூப்وَ یُوْنُسَஇன்னும் யூனுஸ்وَ هٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَ سُلَیْمٰنَ ۚஇன்னும் ஸுலைமான்وَ اٰتَیْنَاஇன்னும் நாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًاۚஜபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
لُعِنَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟
لُعِنَசபிக்கப்பட்டனர்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْۢஇருந்துبَنِیْۤசந்ததியினரில்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்عَلٰیமூலமாகلِسَانِநாவின்دَاوٗدَதாவூதوَ عِیْسَیமற்றும் ஈஸாابْنِமகன்مَرْیَمَ ؕமர்யமின்ذٰلِكَஅதுبِمَاகாரணமாகعَصَوْاஅவர்கள் மாறுசெய்தார்கள்وَّ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்یَعْتَدُوْنَவரம்பு மீறுபவர்களாக
லு'இனல் லதீன கFபரூ மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா லிஸானி தாவூத வ 'ஈஸBப் னி மர்யம்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَ ؕமேலும் யஃகூபைكُلًّاஅனைவரையும்هَدَیْنَا ۚநாம் நேர்வழியில் நடத்தினோம்وَ نُوْحًاமேலும் நூஹைهَدَیْنَاநாம் நேர்வழியில் நடத்தினோம்مِنْஅதற்குقَبْلُமுன்னரேوَ مِنْமேலும்ذُرِّیَّتِهٖஅவருடைய சந்ததியினரில்دَاوٗدَதாவூதوَ سُلَیْمٰنَமேலும் ஸுலைமானைوَ اَیُّوْبَமேலும் அய்யூபைوَ یُوْسُفَமேலும் யூஸுஃபைوَ مُوْسٰیமேலும் மூஸாவைوَ هٰرُوْنَ ؕமேலும் ஹாரூனைوَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنَجْزِیநாம் நற்கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَۙநன்மை செய்வோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
وَرَبُّكَ اَعْلَمُ بِمَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِیّٖنَ عَلٰی بَعْضٍ وَّاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟
وَ رَبُّكَமேலும் உமது இறைவன்اَعْلَمُநன்கு அறிந்தவன்بِمَنْஎவர்களைப் பற்றியும்فِیஉள்ளالسَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமிوَ لَقَدْமேலும் நிச்சயமாகفَضَّلْنَاநாம் மேன்மைப்படுத்தினோம்بَعْضَசிலரைالنَّبِیّٖنَநபிமார்களில்عَلٰیவிடبَعْضٍமற்ற சிலரைوَّ اٰتَیْنَاமேலும் நாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًاஸபூர் வேதத்தை
வ ரBப்Bபுக அஃலமு Bபிமன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ லகத் Fபள்ளல்னா Bபஃளன் னBபிய்யீன 'அலா Bபஃளி(ன்)வ் வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
وَدَاوٗدَ وَسُلَیْمٰنَ اِذْ یَحْكُمٰنِ فِی الْحَرْثِ اِذْ نَفَشَتْ فِیْهِ غَنَمُ الْقَوْمِ ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِیْنَ ۟ۗۙ
وَ دَاوٗدَதாவூதையும்وَ سُلَیْمٰنَஸுலைமானையும்اِذْபோதுیَحْكُمٰنِஅவ்விருவரும் தீர்ப்பளித்தفِیகுறித்துالْحَرْثِவிளைநிலத்தைاِذْபோதுنَفَشَتْமேய்ந்தனفِیْهِஅதில்غَنَمُஆடுகள்الْقَوْمِ ۚமக்களின்وَ كُنَّاமேலும் நாம் இருந்தோம்لِحُكْمِهِمْஅவர்களின் தீர்ப்புக்குشٰهِدِیْنَۗۙசாட்சிகளாக
தாவூத வ ஸுலய்மான இத் யஹ்குமானி Fபில் ஹர்தி இத் னFபஷத் Fபீஹி கனமுல் கவ்மி வ குன்னா லிஹுக்மிஹிம் ஷாஹிதீன்
இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
فَفَهَّمْنٰهَا سُلَیْمٰنَ ۚ وَكُلًّا اٰتَیْنَا حُكْمًا وَّعِلْمًا ؗ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ یُسَبِّحْنَ وَالطَّیْرَ ؕ وَكُنَّا فٰعِلِیْنَ ۟
فَفَهَّمْنٰهَاஅதனை நாம் புரிய வைத்தோம்سُلَیْمٰنَ ۚஸுலைமானுக்குوَ كُلًّاமேலும் ஒவ்வொருவருக்கும்اٰتَیْنَاநாம் வழங்கினோம்حُكْمًاஞானத்தைوَّ عِلْمًا ؗமேலும் அறிவைوَّ سَخَّرْنَاமேலும் நாம் வசப்படுத்தினோம்مَعَஉடன்دَاوٗدَதாவூதالْجِبَالَமலைகளைیُسَبِّحْنَதுதி செய்யوَ الطَّیْرَ ؕமேலும் பறவைகளைوَ كُنَّاமேலும் நாம் இருந்தோம்فٰعِلِیْنَசெய்பவர்களாக
FபFபஹ்ஹம்னாஹா ஸுலய்மான்; வ குல்லன் ஆதய்னா ஹுக்ம(ன்)வ் வ'இல்ம(ன்)வ் வ ஸக் கர்னா ம'அ தாவூதல் ஜிBபால யுஸBப்Bபிஹ்ன வத்தய்ர்; வ குன்னா Fபா'இலீன்
அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ وَسُلَیْمٰنَ عِلْمًا ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ فَضَّلَنَا عَلٰی كَثِیْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِیْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குوَ سُلَیْمٰنَமற்றும் ஸுலைமானுக்குعِلْمًا ۚகல்வியைوَ قَالَاமேலும் அவ்விருவரும் கூறினார்கள்الْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالَّذِیْஅவன் எத்தகையவன் என்றால்فَضَّلَنَاஎங்களை மேன்மையாக்கினான்عَلٰیவிடكَثِیْرٍபலரைمِّنْஇருந்துعِبَادِهِஅவனுடைய அடியார்களில்الْمُؤْمِنِیْنَமுஃமின்களான
வ லகத் ஆதய்னா தாவூத வ ஸுலய்மான 'இல்மா; வ காலல் ஹம்து லில் லாஹில் லதீ Fபள்ளலனா 'அலா கதீரிம் மின் 'இBபாதிஹில் மு'மினீன்
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள்.
وَوَرِثَ سُلَیْمٰنُ دَاوٗدَ وَقَالَ یٰۤاَیُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّیْرِ وَاُوْتِیْنَا مِنْ كُلِّ شَیْءٍ ؕ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِیْنُ ۟
وَ وَرِثَமேலும் வாரிசானார்سُلَیْمٰنُஸுலைமான்دَاوٗدَதாவூதிற்குوَ قَالَமேலும் அவர் கூறினார்یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேعُلِّمْنَاஎங்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ளதுمَنْطِقَமொழிالطَّیْرِபறவைகளின்وَ اُوْتِیْنَاமேலும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுمِنْஇருந்துكُلِّஒவ்வொருشَیْءٍ ؕபொருளும்اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَهُوَநிச்சயமாக அதுவேالْفَضْلُஅருட்கொடைالْمُبِیْنُதெளிவான
வ வரித ஸுலய்மானு தாவூத வ கால யா அய்யுஹன் னாஸு 'உல்லிம்னா மன்திகத் தய்ரி வ ஊதீனா மின் குல்லி ஷய்'இன் இன்ன ஹாதா லஹுவல் Fபள்லுல் முBபீன்
பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًا ؕ یٰجِبَالُ اَوِّبِیْ مَعَهٗ وَالطَّیْرَ ۚ وَاَلَنَّا لَهُ الْحَدِیْدَ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குمِنَّاநம்மிடமிருந்துفَضْلًا ؕஅருட்கொடையைیٰجِبَالُமலைகளேاَوِّبِیْதுதியுங்கள்مَعَهٗஅவருடன்وَ الطَّیْرَ ۚபறவைகளையும்وَ اَلَنَّاமேலும் நாம் மென்மையாக்கினோம்لَهُஅவருக்காகالْحَدِیْدَۙஇரும்பை
வலகத் ஆதய்னா தாவூத மின்னா Fபள்ல(ன்)ய் யா ஜிBபாலு அவ்விBபீ ம'அஹூ வத்தய்ர வ அலன்னா லஹுல் ஹதீத்
இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
یَعْمَلُوْنَ لَهٗ مَا یَشَآءُ مِنْ مَّحَارِیْبَ وَتَمَاثِیْلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُوْرٍ رّٰسِیٰتٍ ؕ اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا ؕ وَقَلِیْلٌ مِّنْ عِبَادِیَ الشَّكُوْرُ ۟
یَعْمَلُوْنَஅவர்கள் செய்தார்கள்لَهٗஅவனுக்காகمَاஎதைیَشَآءُஅவன் நாடுகிறானோمِنْஆகியمَّحَارِیْبَமாளிகைகளையும்وَ تَمَاثِیْلَமற்றும் சிலைகளையும்وَ جِفَانٍமற்றும் தட்டுகளையும்كَالْجَوَابِதடாகங்களைப் போன்றوَ قُدُوْرٍமற்றும் கொப்பரைகளையும்رّٰسِیٰتٍ ؕநிலையானاِعْمَلُوْۤاசெயல்படுங்கள்اٰلَகுடும்பத்தினரேدَاوٗدَதாவூதின்شُكْرًا ؕநன்றியுடன்وَ قَلِیْلٌமேலும் மிகச் சிலரேمِّنْஇருந்துعِبَادِیَஎன் அடியார்களில்الشَّكُوْرُநன்றியுடையோர்
யஃமலூன லஹூ ம யஷா'உ மிம் மஹாரீBப வ தமாதீல வ ஜிFபானின் கல்ஜவாBபி வ குதூரிர் ராஸியாத்; இஃமலூ ஆல தாவூத ஷுக்ரா; வ கலீலும் மின் 'இBபாதியஷ் ஷகூர்
அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).
اِصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَاذْكُرْ عَبْدَنَا دَاوٗدَ ذَا الْاَیْدِ ۚ اِنَّهٗۤ اَوَّابٌ ۟
اِصْبِرْபொறுத்துக் கொள்வீராகعَلٰیமீதுمَاஎதைیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களோوَ اذْكُرْமேலும் நினைவு கூர்வீராகعَبْدَنَاநம் அடியாரானدَاوٗدَதாவூதذَاஉடையவரானالْاَیْدِ ۚவலிமைاِنَّهٗۤநிச்சயமாக அவர்اَوَّابٌஅதிகம் மீளுபவர்
இஸ்Bபிர் 'அலா மா யகூலூன வத்குர் 'அBப்தனா தாவூத தல் அய்தி இன்னஹூ அவ்வாBப்
இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார்.
وَهَلْ اَتٰىكَ نَبَؤُا الْخَصْمِ ۘ اِذْ تَسَوَّرُوا الْمِحْرَابَ ۟ۙ
وَ هَلْமேலும்اَتٰىكَஉம்மிடம் வந்ததாنَبَؤُاசெய்திالْخَصْمِ ۘவழக்காளிகளின்اِذْபோதுتَسَوَّرُواஅவர்கள் சுவரேறியالْمِحْرَابَۙதொழுமிடத்திற்கு
வ ஹல் அதாக னBப'உல் கஸ்ம்; இத் தஸவ்வருல் மிஹ்ராBப்
அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைந்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி -
اِذْ دَخَلُوْا عَلٰی دَاوٗدَ فَفَزِعَ مِنْهُمْ قَالُوْا لَا تَخَفْ ۚ خَصْمٰنِ بَغٰی بَعْضُنَا عَلٰی بَعْضٍ فَاحْكُمْ بَیْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَاۤ اِلٰی سَوَآءِ الصِّرَاطِ ۟
اِذْபோதுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தார்கள்عَلٰیஇடம்دَاوٗدَதாவூதفَفَزِعَஅப்போது அவர் திடுக்கிட்டார்مِنْهُمْஅவர்களைக் கண்டுقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَاவேண்டாம்تَخَفْ ۚபயப்படாதீர்خَصْمٰنِஇரு வழக்காடிகள்بَغٰیஅநியாயம் செய்துவிட்டனர்بَعْضُنَاஎங்களில் சிலர்عَلٰیமீதுبَعْضٍமற்றவர்فَاحْكُمْஎனவே தீர்ப்பளியுங்கள்بَیْنَنَاஎங்களுக்கிடையேبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ لَاமேலும் வேண்டாம்تُشْطِطْவரம்பு மீறாதீர்கள்وَ اهْدِنَاۤமேலும் எங்களுக்கு வழிகாட்டுங்கள்اِلٰیபக்கம்سَوَآءِநேரானالصِّرَاطِபாதையின்
இத் தகலூ 'அலா தாவூத FபFபZஜி'அ மின்ஹும் காலூ லா தகFப் கஸ்மானி Bபகா Bபஃளுனா 'அலா Bபஃளின் Fபஹ்கும் Bபய்னனா Bபில்ஹக்கி வலா துஷ்தித் வஹ்தினா இலா ஸவா'இஸ் ஸிராத்
தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; “பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!”
قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ اِلٰی نِعَاجِهٖ ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ الْخُلَطَآءِ لَیَبْغِیْ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِیْلٌ مَّا هُمْ ؕ وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰهُ فَاسْتَغْفَرَ رَبَّهٗ وَخَرَّ رَاكِعًا وَّاَنَابَ ۟
قَالَஅவர் கூறினார்لَقَدْநிச்சயமாகظَلَمَكَஉமக்கு அநீதி இழைத்துவிட்டார்بِسُؤَالِகேட்பதன் மூலம்نَعْجَتِكَஉமது பெண் ஆட்டைاِلٰیசேர்த்துக்கொள்ளنِعَاجِهٖ ؕதன் பெண் ஆடுகளுடன்وَ اِنَّமேலும் நிச்சயமாகكَثِیْرًاஅதிகமானோர்مِّنَஇருந்துالْخُلَطَآءِகூட்டாளிகளில்لَیَبْغِیْஅநீதி இழைக்கிறார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰیமீதுبَعْضٍமற்றவர்اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ قَلِیْلٌஇன்னும் மிகக் குறைவானவர்களேمَّاஅவர்கள்هُمْ ؕஅவர்கள்وَ ظَنَّமேலும் எண்ணினார்دَاوٗدُதாவூதاَنَّمَاநிச்சயமாக நாம்فَتَنّٰهُஅவரைச் சோதித்தோம் என்றுفَاسْتَغْفَرَஆகவே அவர் மன்னிப்புக்கோரினார்رَبَّهٗதனது இறைவனிடம்وَ خَرَّமேலும் அவர் விழுந்தார்رَاكِعًاசிரம் பணிந்தவராகوَّ اَنَابَ۩இன்னும் திரும்பினார்
கால லகத் ளலமக Bபிஸு 'ஆலி னஃஜதிக இலா னிஹாஜிஹ்; வ இன்ன கதீரன் மினல் குலதா'இ ல-யBப்கீ Bபஃளுஹும் 'அலா Bபஃளின் இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ கலீலுன் மா ஹும்; வ ளன்ன தாவூது அன்னமா Fபதன்னாஹு Fபஸ்தக்Fபர ரBப்Bபஹூ வ கர்ர ராகி'அ(ன்)வ் வ அனாBப்
(அதற்கு தாவூது:) “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” என்று கூறினார்; இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.
یٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِیْفَةً فِی الْاَرْضِ فَاحْكُمْ بَیْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰی فَیُضِلَّكَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ اِنَّ الَّذِیْنَ یَضِلُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌۢ بِمَا نَسُوْا یَوْمَ الْحِسَابِ ۟۠
یٰدَاوٗدُதாவூதே!اِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنٰكَஉம்மை ஆக்கினோம்خَلِیْفَةًஒரு பிரதிநிதியாகفِیஇல்الْاَرْضِபூமியில்فَاحْكُمْஎனவே தீர்ப்பளிப்பீராகبَیْنَஇடையேالنَّاسِமனிதர்களுக்குبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعِநீர் பின்பற்றالْهَوٰیமன இச்சையைفَیُضِلَّكَஅது உம்மை வழிதவறச் செய்யும்عَنْஇருந்துسَبِیْلِபாதையைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَضِلُّوْنَவழிதவறுகிறார்களோعَنْஇருந்துسَبِیْلِபாதையைاللّٰهِஅல்லாஹ்வின்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைشَدِیْدٌۢகடுமையானதுبِمَاகாரணமாகنَسُوْاஅவர்கள் மறந்ததன்یَوْمَநாளைالْحِسَابِ۠கேள்வி கணக்கு
யா தாவூது இன்னா ஜ'அல்னாக கலீFபதன் Fபில் அர்ளி Fபஹ்கும் Bபய்னன் னாஸி Bபில்ஹக்கி வலா தத்தBபி'இல் ஹவா Fபயுளில்லக 'அன் ஸBபீலில் லாஹ்; இன்னல் லதீன யளில்லூன 'அன் ஸBபீலில் லாஹ்; லஹும் 'அதாBபுன் ஷதீதும் Bபிமா னஸூ யவ்மல் ஹிஸாBப்
(நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.  
وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَیْمٰنَ ؕ نِعْمَ الْعَبْدُ ؕ اِنَّهٗۤ اَوَّابٌ ۟ؕ
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لِدَاوٗدَதாவூதுக்குسُلَیْمٰنَ ؕஸுலைமானைنِعْمَமிகச் சிறந்தالْعَبْدُ ؕஅடியார்اِنَّهٗۤநிச்சயமாக அவர்اَوَّابٌؕஅதிகம் திரும்புபவர்
வ வஹBப்னா லி தாவூத ஸுலய்மான்; னிஃமல் 'அBப்த்; இன்னஹூ அவ்வாBப்
இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.