">

தேடல் வார்த்தை: "தாவூத"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

17 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 17)

فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ۫ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا یَشَآءُ ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ ۙ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰكِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟
فَهَزَمُوْهُمْஆகவே அவர்களைத் தோற்கடித்தார்கள்بِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِ ۙஅல்லாஹ்வின்وَقَتَلَஇன்னும் கொன்றார்دَاوٗدُதாவூதجَالُوْتَஜாலூத்தைوَاٰتٰٮهُஇன்னும் அவருக்குக் கொடுத்தான்اللّٰهُஅல்லாஹ்الْمُلْكَஆட்சியைوَالْحِکْمَةَஇன்னும் ஞானம்وَعَلَّمَهٗஇன்னும் அவருக்குக் கற்பித்தான்مِمَّاஎதிலிருந்துيَشَآءُ ؕநாடுகிறான்وَلَوْلَاஇல்லையென்றால்دَفْعُதடுப்பதுاللّٰهِஅல்லாஹ்வின்النَّاسَமக்களைبَعْضَهُمْஅவர்களில் சிலரை விட்டுبِبَعْضٍசிலரைக் கொண்டுلَّفَسَدَتِஉறுதியாக அழிந்து விடும்الْاَرْضُபூமிوَلٰـکِنَّஎனினும்اللّٰهَஅல்லாஹ்ذُوْ فَضْلٍஅருளுடையவன்عَلَىமீதுالْعٰلَمِيْنَ‏உலகத்தார்கள்
FபஹZஜமூஹும் Bபி இத்னில்லாஹி வ கதல தாவூது ஜாலூத வ ஆதாஹுல் லாஹுல்முல்க வல் ஹிக்மத வ 'அல்லமஹூ மிம்மா யஷா'; வ லவ் லா தFப்'உல்லாஹின் னாஸ Bபஃளஹும் BபிBபஃளில் லFபஸததில் அர்ளு வ லாகின்னல் லாஹ தூ Fபள்லின் 'அலல்'ஆலமீன்
இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குكَمَاۤபோன்றேاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلٰى نُوْحٍநூஹுக்குوَّالنَّبِيّٖنَஇன்னும் நபிமார்களுக்குمِنْۢ بَعْدِهٖ‌ ۚஅவருக்குப் பின்னர்وَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلٰٓى اِبْرٰهِيْمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَعِيْسٰىஇன்னும் ஈஸாوَاَيُّوْبَஇன்னும் அய்யூப்وَيُوْنُسَஇன்னும் யூனுஸ்وَهٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَسُلَيْمٰنَ‌ ۚஇன்னும் ஸுலைமான்وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًا‌ஸபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
لُعِنَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟
لُعِنَசபிக்கப்பட்டார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களில்عَلٰى لِسَانِநாவினால்دَاوٗدَதாவூதுடையوَعِيْسَىஇன்னும் ஈஸாவின்ابْنِமகன்مَرْيَمَ‌ ؕமர்யமின்ذٰ لِكَஅதுبِمَاஎதன் காரணமாகعَصَوْاமாறுசெய்தனர்وَّكَانُوْاஇன்னும் இருந்தனர்يَعْتَدُوْنَ‏மீறுபவர்களாக
லு'இனல் லதீன கFபரூ மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா லிஸானி தாவூத வ 'ஈஸBப் னி மர்யம்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَوَهَبْنَاஇன்னும் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَيَعْقُوْبَ‌ؕஇன்னும் யஃகூபைكُلًّاஎல்லோரையும்هَدَيْنَا ۚநேர்வழி செலுத்தினோம்وَنُوْحًاஇன்னும் நூஹைهَدَيْنَاநேர்வழி செலுத்தினோம்مِنْ قَبْلُ‌இதற்கு முன்னர்وَمِنْஇன்னும் இருந்துذُرِّيَّتِهٖஅவருடைய சந்ததிدَاوٗدَதாவூதوَسُلَيْمٰنَஇன்னும் ஸுலைமானைوَاَيُّوْبَஇன்னும் அய்யூபைوَيُوْسُفَஇன்னும் யூஸýஃபைوَمُوْسٰىஇன்னும் மூஸாவைوَ هٰرُوْنَ‌ؕஇன்னும் ஹறாரூனைوَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىகூலிகொடுக்கிறோம்الْمُحْسِنِيْنَۙ‏நல்லறம்புரிவோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
وَرَبُّكَ اَعْلَمُ بِمَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِیّٖنَ عَلٰی بَعْضٍ وَّاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟
وَرَبُّكَஉம் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَنْஎவர்களைفِى السَّمٰوٰتِவானங்களில்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமிوَلَقَدْதிட்டவட்டமாகفَضَّلْنَاமேன்மைப்படுத்தினோம்بَعْضَசிலரைالنَّبِيّٖنَநபிமார்களில்عَلٰى بَعْضٍ‌சிலர் மீதுوَّاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًا‏ஜபூரை
வ ரBப்Bபுக அஃலமு Bபிமன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ லகத் Fபள்ளல்னா Bபஃளன் னBபிய்யீன 'அலா Bபஃளி(ன்)வ் வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
وَدَاوٗدَ وَسُلَیْمٰنَ اِذْ یَحْكُمٰنِ فِی الْحَرْثِ اِذْ نَفَشَتْ فِیْهِ غَنَمُ الْقَوْمِ ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِیْنَ ۟ۗۙ
وَدَاوٗدَஇன்னும் தாவூதوَسُلَيْمٰنَஇன்னும் ஸுலைமானைاِذْ يَحْكُمٰنِஅவ்விருவரும் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராகفِى الْحَـرْثِவிவசாயத்தின் விளைச்சலில்اِذْ نَفَشَتْநுழைந்த போதுفِيْهِஅதில்غَنَمُஆடுகள்الْقَوْمِ‌ۚமக்களுடையوَكُنَّاஇருந்தோம்لِحُكْمِهِمْஅவர்களின் தீர்ப்பைشٰهِدِيْنَ ۙ‏நாம் அறிந்தவர்களாக
தாவூத வ ஸுலய்மான இத் யஹ்குமானி Fபில் ஹர்தி இத் னFபஷத் Fபீஹி கனமுல் கவ்மி வ குன்னா லிஹுக்மிஹிம் ஷாஹிதீன்
இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
فَفَهَّمْنٰهَا سُلَیْمٰنَ ۚ وَكُلًّا اٰتَیْنَا حُكْمًا وَّعِلْمًا ؗ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ یُسَبِّحْنَ وَالطَّیْرَ ؕ وَكُنَّا فٰعِلِیْنَ ۟
فَفَهَّمْنٰهَاஅதை புரிய வைத்தோம்سُلَيْمٰنَ‌ۚசுலைமானுக்குوَكُلًّاஎல்லோருக்கும்اٰتَيْنَاநாம் கொடுத்தோம்حُكْمًاஞானத்தை(யும்)وَّعِلْمًا‌இன்னும் கல்வியைوَّسَخَّرْنَاஇன்னும் வசப்படுத்தினோம்مَعَ دَاوٗدَதாவூதுடன்الْجِبَالَமலைகளைيُسَبِّحْنَதுதிக்கின்றவையாகوَالطَّيْرَ‌ ؕஇன்னும் பறவைகளைوَكُنَّاஇன்னும் நாம் இருந்தோம்فٰعِلِيْنَ‏முடிவு செய்தவர்களாக
FபFபஹ்ஹம்னாஹா ஸுலய்மான்; வ குல்லன் ஆதய்னா ஹுக்ம(ன்)வ் வ'இல்ம(ன்)வ் வ ஸக் கர்னா ம'அ தாவூதல் ஜிBபால யுஸBப்Bபிஹ்ன வத்தய்ர்; வ குன்னா Fபா'இலீன்
அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ وَسُلَیْمٰنَ عِلْمًا ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ فَضَّلَنَا عَلٰی كَثِیْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِیْنَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் தந்தோம்دَاوٗدَதாவூதுக்கும்وَ سُلَيْمٰنَசுலைமானுக்கும்عِلْمًا‌ ۚஅறிவைوَقَالَاஅவ்விருவரும் கூறினர்الْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேالَّذِىْஎவன்فَضَّلَنَاஎங்களை மேன்மைப்படுத்தினான்عَلٰى كَثِيْرٍபலரைப் பார்க்கிலும்مِّنْ عِبَادِهِதனது அடியார்களில்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களான
வ லகத் ஆதய்னா தாவூத வ ஸுலய்மான 'இல்மா; வ காலல் ஹம்து லில் லாஹில் லதீ Fபள்ளலனா 'அலா கதீரிம் மின் 'இBபாதிஹில் மு'மினீன்
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள்.
وَوَرِثَ سُلَیْمٰنُ دَاوٗدَ وَقَالَ یٰۤاَیُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّیْرِ وَاُوْتِیْنَا مِنْ كُلِّ شَیْءٍ ؕ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِیْنُ ۟
وَوَرِثَவாரிசாக ஆனார்سُلَيْمٰنُசுலைமான்دَاوٗدَ‌தாவூதுக்குوَقَالَஇன்னும் , கூறினார்يٰۤاَيُّهَا النَّاسُமக்களே!عُلِّمْنَاநாங்கள் கற்பிக்கப்பட்டோம்مَنْطِقَபேச்சைالطَّيْرِபறவைகளின்وَاُوْتِيْنَاவழங்கப்பட்டோம்مِنْ كُلِّ شَىْءٍؕ‌எல்லாம்اِنَّநிச்சயமாகهٰذَا لَهُوَஇதுதான்الْفَضْلُமேன்மையாகும்الْمُبِيْنُ‏தெளிவான
வ வரித ஸுலய்மானு தாவூத வ கால யா அய்யுஹன் னாஸு 'உல்லிம்னா மன்திகத் தய்ரி வ ஊதீனா மின் குல்லி ஷய்'இன் இன்ன ஹாதா லஹுவல் Fபள்லுல் முBபீன்
பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًا ؕ یٰجِبَالُ اَوِّبِیْ مَعَهٗ وَالطَّیْرَ ۚ وَاَلَنَّا لَهُ الْحَدِیْدَ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاவழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குمِنَّاநம் புறத்தில் இருந்துفَضْلًا ؕமேன்மையைيٰجِبَالُமலைகளே!اَوِّبِىْநீங்கள் துதியுங்கள்مَعَهٗஅவருடன்وَالطَّيْرَ ۚபறவைகளே!وَاَلَــنَّاஇன்னும் மென்மையாக்கினோம்لَـهُஅவருக்குالْحَدِيْدَ ۙ‏இரும்பை
வலகத் ஆதய்னா தாவூத மின்னா Fபள்ல(ன்)ய் யா ஜிBபாலு அவ்விBபீ ம'அஹூ வத்தய்ர வ அலன்னா லஹுல் ஹதீத்
இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
یَعْمَلُوْنَ لَهٗ مَا یَشَآءُ مِنْ مَّحَارِیْبَ وَتَمَاثِیْلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُوْرٍ رّٰسِیٰتٍ ؕ اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا ؕ وَقَلِیْلٌ مِّنْ عِبَادِیَ الشَّكُوْرُ ۟
يَعْمَلُوْنَஅவை செய்கின்றனلَهٗஅவருக்குمَا يَشَآءُஅவர் நாடுகின்ற(தை)مِنْ مَّحَارِيْبَதொழுமிடங்களை(யும்)وَتَمَاثِيْلَசிலைகளையும்وَجِفَانٍபாத்திரங்களையும்كَالْجَـوَابِநீர் தொட்டிகளைப் போன்றوَقُدُوْرٍசட்டிகளையும்رّٰسِيٰتٍ ؕஉறுதியானاِعْمَلُوْۤاசெய்யுங்கள்اٰلَகுடும்பத்தார்களே!دَاوٗدَதாவூதின்شُكْرًا ؕநன்றி செலுத்துவதற்காகوَقَلِيْلٌகுறைவானவர்களேمِّنْ عِبَادِىَஎன் அடியார்களில்الشَّكُوْرُ‏நன்றி செலுத்துபவர்கள்
யஃமலூன லஹூ ம யஷா'உ மிம் மஹாரீBப வ தமாதீல வ ஜிFபானின் கல்ஜவாBபி வ குதூரிர் ராஸியாத்; இஃமலூ ஆல தாவூத ஷுக்ரா; வ கலீலும் மின் 'இBபாதியஷ் ஷகூர்
அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).
اِصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَاذْكُرْ عَبْدَنَا دَاوٗدَ ذَا الْاَیْدِ ۚ اِنَّهٗۤ اَوَّابٌ ۟
اِصْبِرْசகிப்பீராக!عَلٰى مَا يَقُوْلُوْنَஅவர்கள் கூறுவதைوَاذْكُرْஇன்னும் நினைவு கூறுவீராகعَبْدَنَاநமது அடியார்دَاوٗدَதாவூதذَا الْاَيْدِ‌ۚமிக வலிமை, உறுதி உடையاِنَّـهٗۤநிச்சயமாக அவர்اَوَّابٌ‏முற்றிலும் திரும்பக்கூடியவர்
இஸ்Bபிர் 'அலா மா யகூலூன வத்குர் 'அBப்தனா தாவூத தல் அய்தி இன்னஹூ அவ்வாBப்
இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார்.
وَهَلْ اَتٰىكَ نَبَؤُا الْخَصْمِ ۘ اِذْ تَسَوَّرُوا الْمِحْرَابَ ۟ۙ
وَهَلْ اَتٰٮكَஉம்மிடம் வந்ததா?نَبَؤُاசெய்திالْخَصْمِ‌ۘவழக்காளிகளுடையاِذْ تَسَوَّرُواஅவர்கள் சுவர் ஏறி வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!الْمِحْرَابَۙ‏வீட்டின் முன்பக்கமாக
வ ஹல் அதாக னBப'உல் கஸ்ம்; இத் தஸவ்வருல் மிஹ்ராBப்
அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைந்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி -
اِذْ دَخَلُوْا عَلٰی دَاوٗدَ فَفَزِعَ مِنْهُمْ قَالُوْا لَا تَخَفْ ۚ خَصْمٰنِ بَغٰی بَعْضُنَا عَلٰی بَعْضٍ فَاحْكُمْ بَیْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَاۤ اِلٰی سَوَآءِ الصِّرَاطِ ۟
اِذْ دَخَلُوْاஅவர்கள் நுழைந்த போதுعَلٰى دَاوٗدَதாவூத் (நபி) இடம்فَفَزِعَஅவர் திடுக்கிற்றார்مِنْهُمْ‌அவர்களைப் பார்த்துقَالُوْاஅவர்கள் கூறினர்لَا تَخَفْ‌ۚபயப்படாதீர்خَصْمٰنِநாங்கள் இரு வழக்காளிகள்بَغٰىஅநியாயம் செய்தார்بَعْضُنَاஎங்களில் ஒருவர்عَلٰى بَعْضٍஒருவர் மீதுفَاحْكُمْஆகவே தீர்ப்பளிப்பீராக!بَيْنَنَاஎங்களுக்கு மத்தியில்بِالْحَقِّநீதமாகوَلَا تُشْطِطْஅநீதி இழைத்து விடாதீர்وَاهْدِنَاۤஎங்களுக்கு வழிகாட்டுவீராக!اِلٰى سَوَآءِபாதையின் பக்கம்الصِّرَاطِ‏நேரான
இத் தகலூ 'அலா தாவூத FபFபZஜி'அ மின்ஹும் காலூ லா தகFப் கஸ்மானி Bபகா Bபஃளுனா 'அலா Bபஃளின் Fபஹ்கும் Bபய்னனா Bபில்ஹக்கி வலா துஷ்தித் வஹ்தினா இலா ஸவா'இஸ் ஸிராத்
தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; “பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!”
قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ اِلٰی نِعَاجِهٖ ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ الْخُلَطَآءِ لَیَبْغِیْ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِیْلٌ مَّا هُمْ ؕ وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰهُ فَاسْتَغْفَرَ رَبَّهٗ وَخَرَّ رَاكِعًا وَّاَنَابَ ۟
قَالَகூறினார்لَقَدْ ظَلَمَكَஅவர் உனக்கு அநீதி இழைத்துவிட்டார்بِسُؤَالِ(அவர்) கேட்டதினால்نَعْجَتِكَஉனது ஆட்டைاِلٰى نِعَاجِهٖ‌ ؕதனது ஆடுகளுடன் சேர்க்கوَاِنَّநிச்சயமாகكَثِيْرًاஅதிகமானவர்கள்مِّنَ الْخُلَـطَآءِபங்காளிகளில்لَيَبْغِىْஅநீதிஇழைக்கின்றனர்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰى بَعْضٍசிலர் மீதுاِلَّاதவிரالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைوَقَلِيْلٌ مَّاமிகக் குறைவானவர்களே!هُمْ‌ ؕஅவர்கள்وَظَنَّஅறிந்தார்دَاوٗدُதாவூதاَنَّمَا فَتَنّٰهُநாம் அவரை சோதித்தோம் என்பதைفَاسْتَغْفَرَஆகவே, அவர் மன்னிப்புக் கேட்டார்رَبَّهٗதன் இறைவனிடம்وَخَرَّஇன்னும் விழுந்தார்رَاكِعًاசிரம் பணிந்தவராகوَّاَنَابَ ۩‏இன்னும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்
கால லகத் ளலமக Bபிஸு 'ஆலி னஃஜதிக இலா னிஹாஜிஹ்; வ இன்ன கதீரன் மினல் குலதா'இ ல-யBப்கீ Bபஃளுஹும் 'அலா Bபஃளின் இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ கலீலுன் மா ஹும்; வ ளன்ன தாவூது அன்னமா Fபதன்னாஹு Fபஸ்தக்Fபர ரBப்Bபஹூ வ கர்ர ராகி'அ(ன்)வ் வ அனாBப்
(அதற்கு தாவூது:) “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” என்று கூறினார்; இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.
یٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِیْفَةً فِی الْاَرْضِ فَاحْكُمْ بَیْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰی فَیُضِلَّكَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ اِنَّ الَّذِیْنَ یَضِلُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌۢ بِمَا نَسُوْا یَوْمَ الْحِسَابِ ۟۠
يٰدَاوٗدُதாவூதே!اِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنٰكَஉம்மை ஆக்கினோம்خَلِيْفَةًஅதிபராகفِى الْاَرْضِஇந்த பூமியில்فَاحْكُمْஆகவே தீர்ப்பளிப்பீராக!بَيْنَமத்தியில்النَّاسِமக்களுக்குبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَلَا تَتَّبِعِபின்பற்றிவிடாதீர்الْهَوٰىஆசையைفَيُضِلَّكَஅது உம்மை வழிகெடுத்து விடும்عَنْ سَبِيْلِமார்க்கத்தில் இருந்துاللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகالَّذِيْنَ يَضِلُّوْنَவழிகெடுபவர்கள்عَنْ سَبِيْلِமார்க்கத்தில் இருந்துاللّٰهِஅல்லாஹ்வின்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைشَدِيْدٌۢகடுமையான(து)بِمَا نَسُوْاஅவர்கள் மறந்ததால்يَوْمَநாளைالْحِسَابِ‏விசாரணை
யா தாவூது இன்னா ஜ'அல்னாக கலீFபதன் Fபில் அர்ளி Fபஹ்கும் Bபய்னன் னாஸி Bபில்ஹக்கி வலா தத்தBபி'இல் ஹவா Fபயுளில்லக 'அன் ஸBபீலில் லாஹ்; இன்னல் லதீன யளில்லூன 'அன் ஸBபீலில் லாஹ்; லஹும் 'அதாBபுன் ஷதீதும் Bபிமா னஸூ யவ்மல் ஹிஸாBப்
(நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.  
وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَیْمٰنَ ؕ نِعْمَ الْعَبْدُ ؕ اِنَّهٗۤ اَوَّابٌ ۟ؕ
وَوَهَبْنَاநாம் வழங்கினோம்لِدَاوٗدَதாவூதுக்குسُلَيْمٰنَ‌ ؕசுலைமானைنِعْمَ الْعَبْدُ‌ ؕஅவர் சிறந்த அடியார்اِنَّـهٗۤநிச்சயமாக அவர்اَوَّابٌ ؕஅல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்புகின்றவர்
வ வஹBப்னா லி தாவூத ஸுலய்மான்; னிஃமல் 'அBப்த்; இன்னஹூ அவ்வாBப்
இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.