">

தேடல் வார்த்தை: "நூஹ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

47 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 47)

اِنَّ اللّٰهَ اصْطَفٰۤی اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِیْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰۤیதேர்ந்தெடுத்தான்اٰدَمَஆதமைوَ نُوْحًاநூஹையும்وَّ اٰلَகுடும்பத்தாரையும்اِبْرٰهِیْمَஇப்ராஹீமின்وَ اٰلَகுடும்பத்தாரையும்عِمْرٰنَஇம்ரானின்عَلَیவிடالْعٰلَمِیْنَۙஅகிலத்தாரை
இன்னல் லாஹஸ் தFபா ஆதம வ னூஹ(ன்)வ் வ ஆல இBப்ராஹீம வ ஆல இம்ரான 'அலல் 'ஆலமீன்
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَیْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَیْكَஉமக்குكَمَاۤபோலவேاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلٰیபால்نُوْحٍநூஹوَّ النَّبِیّٖنَஇன்னும் நபிமார்களுக்கும்مِنْۢஇருந்துبَعْدِهٖ ۚஅவருக்குப் பின்وَ اَوْحَیْنَاۤஇன்னும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰۤیபால்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினருக்கும்وَ عِیْسٰیஇன்னும் ஈஸாوَ اَیُّوْبَஇன்னும் அய்யூப்وَ یُوْنُسَஇன்னும் யூனுஸ்وَ هٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَ سُلَیْمٰنَ ۚஇன்னும் ஸுலைமான்وَ اٰتَیْنَاஇன்னும் நாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًاۚஜபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَ ؕமேலும் யஃகூபைكُلًّاஅனைவரையும்هَدَیْنَا ۚநாம் நேர்வழியில் நடத்தினோம்وَ نُوْحًاமேலும் நூஹهَدَیْنَاநாம் நேர்வழியில் நடத்தினோம்مِنْஅதற்குقَبْلُமுன்னரேوَ مِنْமேலும்ذُرِّیَّتِهٖஅவருடைய சந்ததியினரில்دَاوٗدَதாவூதைوَ سُلَیْمٰنَமேலும் ஸுலைமானைوَ اَیُّوْبَமேலும் அய்யூபைوَ یُوْسُفَமேலும் யூஸுஃபைوَ مُوْسٰیமேலும் மூஸாவைوَ هٰرُوْنَ ؕமேலும் ஹாரூனைوَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنَجْزِیநாம் நற்கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَۙநன்மை செய்வோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
لَقَدْநிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹاِلٰیபால்قَوْمِهٖஅவருடைய சமூகத்தாரின்فَقَالَஎனவே அவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஎந்தاِلٰهٍவணக்கத்திற்குரியவனும்غَیْرُهٗ ؕஅவனையன்றிاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்عَلَیْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைیَوْمٍஒரு நாளின்عَظِیْمٍமகத்தான
லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ Fபகால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் 'அளீம்
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.
قَالَ یٰقَوْمِ لَیْسَ بِیْ ضَلٰلَةٌ وَّلٰكِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேلَیْسَஇல்லைبِیْஎன்னிடம்ضَلٰلَةٌவழிகேடுوَّ لٰكِنِّیْஆனால் நான்رَسُوْلٌஒரு தூதர்مِّنْஇருந்துرَّبِّஇறைவனிடம்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
கால யா கவ்மி லய்ஸ Bபீ ளலாலது(ன்)வ் வ லாகின்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
அதற்கு (நூஹு) “என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை; மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்” என்று கூறினார்.
اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ ؕ وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِی الْخَلْقِ بَصْۜطَةً ۚ فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
اَوَ عَجِبْتُمْநீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?اَنْஎன்றுجَآءَكُمْஉங்களிடம் வந்ததைذِكْرٌஒரு நினைவுறுத்தல்مِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்عَلٰیமூலம்رَجُلٍஒரு மனிதர்مِّنْكُمْஉங்களிலிருந்தேلِیُنْذِرَكُمْ ؕஉங்களுக்கு எச்சரிக்கை செய்யوَ اذْكُرُوْۤاமேலும் நினைவு கூருங்கள்اِذْபோதுجَعَلَكُمْஅவன் உங்களை ஆக்கினான்خُلَفَآءَவாரிசுகளாகمِنْۢஇருந்துبَعْدِபிறகுقَوْمِசமூகத்திற்குப்نُوْحٍநூஹوَّ زَادَكُمْமேலும் அவன் உங்களுக்கு அதிகப்படுத்தினான்فِیஇல்الْخَلْقِபடைப்பில்بَصْۜطَةً ۚஉடல் வலிமையைفَاذْكُرُوْۤاஆகவே நினைவு கூருங்கள்اٰلَآءَஅருட்கொடைகளைاللّٰهِஅல்லாஹ்வின்لَعَلَّكُمْநீங்கள்تُفْلِحُوْنَவெற்றி பெறுவதற்காக
அவ 'அஜிBப்தும் அன் ஜா'அகும் திக்ரும் மிர் ரBப்Bபிகும் 'அலா ரஜுலிம் மின்கும் லியுன்திரகும்; வத்குரூ இத் ஜ'அலகும் குலFபா'அ மிம் Bபஃதி கவ்மி னூஹி(ன்)வ் வ Zஜாதகும் Fபில்கல்கி Bபஸ்ததன் Fபத்குரூ ஆலா'அல் லாஹி ல'அல்லகும் துFப்லிஹூன்
“உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்)
اَلَمْ یَاْتِهِمْ نَبَاُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۙ۬ وَقَوْمِ اِبْرٰهِیْمَ وَاَصْحٰبِ مَدْیَنَ وَالْمُؤْتَفِكٰتِ ؕ اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ فَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
اَلَمْவரவில்லையாیَاْتِهِمْஅவர்களிடம்نَبَاُசெய்திالَّذِیْنَஎவர்களின்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்قَوْمِசமூகத்தாரானنُوْحٍநூஹوَّ عَادٍமற்றும் ஆதுوَّ ثَمُوْدَ ۙ۬மற்றும் ஸமூதுوَ قَوْمِமற்றும் சமூகத்தாரானاِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اَصْحٰبِமற்றும் வாசிகளானمَدْیَنَமத்யன்وَ الْمُؤْتَفِكٰتِ ؕமற்றும் தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்களின்اَتَتْهُمْஅவர்களிடம் வந்தார்கள்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَیِّنٰتِ ۚதெளிவான அத்தாட்சிகளுடன்فَمَاஎனவே இல்லைكَانَஇருந்தான்اللّٰهُஅல்லாஹ்لِیَظْلِمَهُمْஅவர்களுக்கு அநீதி இழைக்கوَ لٰكِنْஆனால்كَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اَنْفُسَهُمْதங்களுக்குத் தாங்களேیَظْلِمُوْنَஅநீதி இழைத்துக் கொண்டிருந்தார்கள்
அலம் ய'திஹிம் னBப உல் லதீன மின் கBப்லிஹிம் கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத வ கவ்மி இBப்ராஹீம வ அஸ்ஹாBபி மத்யன வல் மு'தFபிகாத்; அதத்ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபமா கானல் லாஹு லியள்லிமஹும் வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ نُوْحٍ ۘ اِذْ قَالَ لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَیْكُمْ مَّقَامِیْ وَتَذْكِیْرِیْ بِاٰیٰتِ اللّٰهِ فَعَلَی اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا یَكُنْ اَمْرُكُمْ عَلَیْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَیَّ وَلَا تُنْظِرُوْنِ ۟
وَ اتْلُமேலும் ஓதிக்காட்டுவீராகعَلَیْهِمْஅவர்களுக்குنَبَاَசெய்தியைنُوْحٍ ۘநூஹின்اِذْஅப்போதுقَالَஅவர் கூறினார்لِقَوْمِهٖதன் சமூகத்தாரிடம்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاِنْஎன்றால்كَانَஇருந்தால்كَبُرَபெரும் பாரமாகعَلَیْكُمْஉங்கள் மீதுمَّقَامِیْநான் தங்கியிருப்பதும்وَ تَذْكِیْرِیْமேலும் நான் நினைவூட்டுவதும்بِاٰیٰتِவசனங்களைக் கொண்டுاللّٰهِஅல்லாஹ்வின்فَعَلَیஎனவே மீதுاللّٰهِஅல்லாஹ்வின்تَوَكَّلْتُநான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்فَاَجْمِعُوْۤاஆகவே நீங்கள் ஒன்று திரட்டுங்கள்اَمْرَكُمْஉங்கள் காரியத்தைوَ شُرَكَآءَكُمْமேலும் உங்கள் கூட்டாளிகளையும்ثُمَّபிறகுلَاவேண்டாம்یَكُنْஇருக்கاَمْرُكُمْஉங்கள் காரியம்عَلَیْكُمْஉங்கள் மீதுغُمَّةًமறைவானதாகثُمَّபிறகுاقْضُوْۤاசெய்து முடித்து விடுங்கள்اِلَیَّஎனக்கெதிராகوَ لَاமேலும் வேண்டாம்تُنْظِرُوْنِஎனக்கு அவகாசம் அளிக்க
வத்லு 'அலய்ஹிம் னBப-அ-னூஹின் இத் கால லிகவ்மிஹீ யா கவ்மி இன் கான கBபுர 'அலய்கும் மகாமீ வ தத்கீரீ Bபி ஆயாதில் லாஹி Fப'அலல் லாஹி தவக்கல்து Fப அஜ்மி'ஊ அம்ரகும் வ ஷுரகா'அகும் தும்ம லா யகுன் அம்ருகும் 'அலய்கும் கும்மதன் தும்மக் ளூ இலய்ய வலா துன்ளிரூன்
மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ ؗ اِنِّیْ لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹاِلٰیபால்قَوْمِهٖۤ ؗஅவருடைய சமூகத்தாரிடம்اِنِّیْநிச்சயமாக நான்لَكُمْஉங்களுக்குنَذِیْرٌஎச்சரிப்பவன்مُّبِیْنٌۙதெளிவான
வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ இன்னீ லகும் னதீரும் முBபீன்
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.”
قَالُوْا یٰنُوْحُ قَدْ جٰدَلْتَنَا فَاَكْثَرْتَ جِدَالَنَا فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰنُوْحُநூஹே!قَدْநிச்சயமாகجٰدَلْتَنَاநீர் எங்களிடம் தர்க்கம் செய்தீர்فَاَكْثَرْتَமேலும் நீர் அதிகமாக்கினீர்جِدَا لَنَاஎங்களுடனான தர்க்கத்தைفَاْتِنَاஎனவே எங்களிடம் கொண்டு வாரும்بِمَاஎதனைக் கொண்டுتَعِدُنَاۤநீர் எங்களுக்கு எச்சரிக்கிறீரோاِنْஎனில்كُنْتَநீர் இருந்தால்مِنَஉள்ளவர்களில்الصّٰدِقِیْنَஉண்மையாளர்கள்
காலூ யா னூஹு கத் ஜாதல்தனா Fப அக்தர்த ஜிதாலனா Fபாதினா Bபிமா த'இதுனா இன் குன்த மினஸ் ஸாதிகீன்
(அதற்கு) அவர்கள், “நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; அதிகமாகவே நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். எனவே, நீர் உண்மையாளராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
وَاُوْحِیَ اِلٰی نُوْحٍ اَنَّهٗ لَنْ یُّؤْمِنَ مِنْ قَوْمِكَ اِلَّا مَنْ قَدْ اٰمَنَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟ۚۖ
وَ اُوْحِیَமேலும் அறிவிக்கப்பட்டதுاِلٰی-க்குنُوْحٍநூஹاَنَّهٗநிச்சயமாகلَنْஇனி ஒருபோதும்یُّؤْمِنَநம்பிக்கை கொள்ளமாட்டார்مِنْஇருந்துقَوْمِكَஉமது சமூகத்தாரில்اِلَّاதவிரمَنْஎவர்قَدْஏற்கனவேاٰمَنَநம்பிக்கை கொண்டாரோفَلَاஎனவேتَبْتَىِٕسْநீர் கவலைப்படாதீர்بِمَاஎதைக் கொண்டுكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَفْعَلُوْنَۚۖசெய்து கொண்டு
வ ஊஹிய இலா னூஹின் அன்னஹூ ல(ன்)ய்-யு'மின மின் கவ்மிக இல்லா மன் கத் ஆமன Fபலா தBப்த'இஸ் Bபிமா கானூ யFப்'அலூன்
மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.
حَتّٰۤی اِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُ ۙ قُلْنَا احْمِلْ فِیْهَا مِنْ كُلٍّ زَوْجَیْنِ اثْنَیْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَیْهِ الْقَوْلُ وَمَنْ اٰمَنَ ؕ وَمَاۤ اٰمَنَ مَعَهٗۤ اِلَّا قَلِیْلٌ ۟
حَتّٰۤیவரைاِذَاபோதுجَآءَவந்ததுاَمْرُنَاநமது கட்டளைوَ فَارَமேலும் பொங்கியதுالتَّنُّوْرُ ۙஅடுப்புقُلْنَاநாம் கூறினோம்احْمِلْஏற்றிக்கொள்வீராகفِیْهَاஅதில்مِنْஇருந்துكُلٍّஒவ்வொன்றிலும்زَوْجَیْنِஜோடிகள்اثْنَیْنِஇரண்டைوَ اَهْلَكَமேலும் உமது குடும்பத்தினரையும்اِلَّاதவிரمَنْஎவர்سَبَقَமுந்திவிட்டதோعَلَیْهِஅவர் மீதுالْقَوْلُவாக்குوَ مَنْமேலும் எவர்اٰمَنَ ؕநம்பிக்கை கொண்டாரோوَ مَاۤமேலும் இல்லைاٰمَنَநம்பிக்கை கொண்டனர்مَعَهٗۤஅவருடன்اِلَّاதவிரقَلِیْلٌசிலரே
ஹத்தா இதா ஜா'அ அம்ருனா வ Fபாரத் தன்னூரு குல்னஹ் மில் Fபீஹா மின் குல்லின் Zஜவ்ஜய்னித் னய்னி வ அஹ்லக இல்லா மன் ஸBபக 'அலய்ஹில் கவ்லு வ மன் ஆமன்; வ மா ஆமன ம'அஹூ இல்லா கலீல்
இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.
وَهِیَ تَجْرِیْ بِهِمْ فِیْ مَوْجٍ كَالْجِبَالِ ۫ وَنَادٰی نُوْحُ بْنَهٗ وَكَانَ فِیْ مَعْزِلٍ یّٰبُنَیَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِیْنَ ۟
وَ هِیَமேலும் அதுتَجْرِیْசென்று கொண்டிருந்ததுبِهِمْஅவர்களைக் கொண்டுفِیْஇல்مَوْجٍஅலைகள்كَالْجِبَالِ ۫மலைகளைப் போன்றوَ نَادٰیமேலும் அழைத்தார்نُوْحُநூஹبْنَهٗதம் மகனைوَ كَانَஅவன் இருந்தான்فِیْஇல்مَعْزِلٍஒதுங்கிய இடம்یّٰبُنَیَّஎன் அருமை மகனேارْكَبْஏறிக்கொள்مَّعَنَاஎங்களுடன்وَ لَاமேலும் வேண்டாம்تَكُنْநீ இருக்கمَّعَஉடன்الْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்கள்
வ ஹிய தஜ்ரீ Bபிஹிம் Fபீ மவ்ஜின் கல்ஜிBபாலி வ னாதா னூஹுனிBப் னஹூ வ கான Fபீ மஃZஜிலி(ன்)ய் யா Bபுனய் யர்கம் ம'அனா வலா தகும் ம'அல் காFபிரீன்
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.
وَنَادٰی نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِیْ مِنْ اَهْلِیْ وَاِنَّ وَعْدَكَ الْحَقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِیْنَ ۟
وَ نَادٰیமேலும் அழைத்தார்نُوْحٌநூஹرَّبَّهٗதன் இறைவனைفَقَالَபின்னர் கூறினார்رَبِّஎன் இறைவனேاِنَّநிச்சயமாகابْنِیْஎன் மகன்مِنْசார்ந்தவன்اَهْلِیْஎன் குடும்பத்தைச்وَ اِنَّமேலும் நிச்சயமாகوَعْدَكَஉனது வாக்குறுதிالْحَقُّஉண்மையானதுوَ اَنْتَமேலும் நீயேاَحْكَمُமிக மேலானவன்الْحٰكِمِیْنَதீர்ப்பளிப்பவர்களில்
வ னாதா னூஹுர் ரBப்Bபஹூ Fபகால ரBப்Bபி இன்னBப்னீ மின் அஹ்லீ வ இன்ன வஃதகல் ஹக்கு வ அன்த அஹ்கமுல் ஹாகிமீன்
நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார்.
قَالَ یٰنُوْحُ اِنَّهٗ لَیْسَ مِنْ اَهْلِكَ ۚ اِنَّهٗ عَمَلٌ غَیْرُ صَالِحٍ ۖؗۗ فَلَا تَسْـَٔلْنِ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ ؕ اِنِّیْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்یٰنُوْحُநூஹاِنَّهٗநிச்சயமாக அவன்لَیْسَஇல்லைمِنْசார்ந்தவன்اَهْلِكَ ۚஉமது குடும்பத்தாரில்اِنَّهٗநிச்சயமாக அதுعَمَلٌசெயல்غَیْرُஅல்லாதصَالِحٍ ۖؗۗநன்மையானفَلَاஎனவேتَسْـَٔلْنِஎன்னிடம் கேட்காதீர்مَاஎதைப் பற்றிلَیْسَஇல்லையோلَكَஉமக்குبِهٖஅதைப் பற்றிعِلْمٌ ؕஅறிவுاِنِّیْۤநிச்சயமாக நான்اَعِظُكَஉமக்கு உபதேசிக்கிறேன்اَنْநீர்تَكُوْنَஆகிவிடுவதைمِنَஒருவராகالْجٰهِلِیْنَஅறிவீனர்களில்
கால யா னூஹு இன்னஹூ லய்ஸ மின் அஹ்லிக இன்னஹூ 'அமலுன் கய்ரு ஸாலிஹின் Fபலா தஸ்'அல்னி மா லய்ஸ லக Bபிஹீ 'இல்முன் இன்னீ அ'இளுக அன் தகூன மினல் ஜாஹிலீன்
அ(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்.”
قِیْلَ یٰنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَیْكَ وَعَلٰۤی اُمَمٍ مِّمَّنْ مَّعَكَ ؕ وَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ یَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِیْمٌ ۟
قِیْلَகூறப்பட்டதுیٰنُوْحُநூஹاهْبِطْஇறங்குவீராகبِسَلٰمٍசாந்தியுடன்مِّنَّاநம்மிடமிருந்துوَ بَرَكٰتٍமேலும் பாக்கியங்களுடன்عَلَیْكَஉம்மீதுوَ عَلٰۤیமேலும் மீதுاُمَمٍசமூகங்கள்مِّمَّنْஎவர்களில் இருந்துمَّعَكَ ؕஉம்முடன்وَ اُمَمٌமேலும் சில சமூகங்கள்سَنُمَتِّعُهُمْஅவர்களுக்கு நாம் சுகபோகங்களை அளிப்போம்ثُمَّபின்னர்یَمَسُّهُمْஅவர்களைத் தீண்டும்مِّنَّاநம்மிடமிருந்துعَذَابٌஒரு வேதனைاَلِیْمٌதுன்புறுத்தும்
கீல யா னூஹுஹ் Bபித் Bபிஸலாமிம் மின்னா வ Bபரகாதின் 'அலய்க வ 'அலா உமமிம் மிம்மம் ம'அக்; வ உமமுன் ஸனுமத்தி'உஹும் தும்ம யமஸ்ஸுஹும் மின்ன 'அதாBபுன் அலீம்
நூஹே! உம் மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும் அபிவிருத்திகளுடனும் நீர் இறங்குவீராக; இன்னும் சில மக்களுக்கு நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களை தீண்டும்” என்று கூறப்பட்டது.
وَیٰقَوْمِ لَا یَجْرِمَنَّكُمْ شِقَاقِیْۤ اَنْ یُّصِیْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ ؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِیْدٍ ۟
وَ یٰقَوْمِஎன் சமூகத்தாரே!لَاவேண்டாம்یَجْرِمَنَّكُمْஉங்களை தூண்டشِقَاقِیْۤஎன் மீதான பகைமைاَنْஎன்றுیُّصِیْبَكُمْஉங்களை தாக்குவதற்குمِّثْلُபோன்றதுمَاۤஎதுاَصَابَதாக்கியதோقَوْمَசமூகத்திற்குنُوْحٍநூஹاَوْஅல்லதுقَوْمَசமூகத்திற்குهُوْدٍஹூத்اَوْஅல்லதுقَوْمَசமூகத்திற்குصٰلِحٍ ؕஸாலிஹ்وَ مَاமேலும் இல்லைقَوْمُசமூகம்لُوْطٍலூத்مِّنْكُمْஉங்களை விட்டுبِبَعِیْدٍதொலைவில்
வ யா கவ்மி லா யஜ்ரி மன்னகும் ஷிகாகீ அய் யுஸீBபகும் மித்லு மா அஸாBப கவ்ம னூஹின் அவ் கவ்ம ஹூதின் அவ் கவ்ம ஸாலிஹ்; வமா கவ்மு லூதிம் மின்கும் BபிBப'ஈத்
“என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!
اَلَمْ یَاْتِكُمْ نَبَؤُا الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۛؕ۬ وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ۛؕ لَا یَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ ؕ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَرَدُّوْۤا اَیْدِیَهُمْ فِیْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ وَاِنَّا لَفِیْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَنَاۤ اِلَیْهِ مُرِیْبٍ ۟
اَلَمْவரவில்லையாیَاْتِكُمْஉங்களிடம்نَبَؤُاசெய்திالَّذِیْنَஅவர்களின்مِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்قَوْمِசமூகத்தாராகியنُوْحٍநூஹوَّ عَادٍமற்றும் ஆதுوَّ ثَمُوْدَ ۛؕ۬மற்றும் ஸமூதுوَ الَّذِیْنَமேலும் எவர்கள்مِنْۢஇருந்துبَعْدِهِمْ ۛؕஅவர்களுக்குப் பின்لَاஇல்லைیَعْلَمُهُمْஅவர்களை அறிவார்اِلَّاதவிரاللّٰهُ ؕஅல்லாஹ்வைத்جَآءَتْهُمْஅவர்களிடம் வந்தனர்رُسُلُهُمْஅவர்களின் தூதர்கள்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَرَدُّوْۤاஎனவே அவர்கள் திருப்பினார்கள்اَیْدِیَهُمْதங்கள் கைகளைفِیْۤஇல்اَفْوَاهِهِمْதங்கள் வாய்களில்وَ قَالُوْۤاமேலும் அவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்كَفَرْنَاநிராகரிக்கிறோம்بِمَاۤஎதைக் கொண்டுاُرْسِلْتُمْநீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்களோبِهٖஅதனைوَ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَفِیْநிச்சயமாகشَكٍّசந்தேகத்தில்مِّمَّاஎதைப் பற்றிتَدْعُوْنَنَاۤஎங்களை நீங்கள் அழைக்கிறீர்களோاِلَیْهِஅதன் பக்கம்مُرِیْبٍசந்தேகத்திற்குரிய
அலம் ய'திகும் னBப'உல் லதீன மின் கBப்லிகும் கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத், வல்லதீன மிம் Bபஃதிஹிம்; லா யஃலமுஹும் இல்லல்லாஹ்; ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபரத்தூ அய்தியஹும் Fபீ அFப்வாஹிஹிம் வ காலூ இன்னா கFபர்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ வ இன்னா லFபீ ஷக்கிம் மிம்மா தத்'ஊனனா இலய்ஹி முரீBப்
உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
ذُرِّیَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؕ اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا ۟
ذُرِّیَّةَசந்ததியினரேمَنْஎவர்களைحَمَلْنَاநாம் சுமந்தோம்مَعَஉடன்نُوْحٍ ؕநூஹاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருந்தார்عَبْدًاஅடியாராகشَكُوْرًاமிக்க நன்றி செலுத்துபவராக
துர்ரிய்யத மன் ஹமல்னா ம'அ னூஹின் இன்னஹூ கான 'அBப்தன் ஷகூரா
நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.
وَكَمْ اَهْلَكْنَا مِنَ الْقُرُوْنِ مِنْ بَعْدِ نُوْحٍ ؕ وَكَفٰی بِرَبِّكَ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِیْرًا بَصِیْرًا ۟
وَ كَمْமேலும் எத்தனையோاَهْلَكْنَاநாம் அழித்திருக்கிறோம்مِنَஇருந்துالْقُرُوْنِதலைமுறைகளைمِنْۢஇருந்துبَعْدِபிறகுنُوْحٍ ؕநூஹوَ كَفٰیமேலும் போதுமானவன்بِرَبِّكَஉமது இறைவன்بِذُنُوْبِபாவங்களைعِبَادِهٖதனது அடியார்களின்خَبِیْرًۢاநன்கறிந்தவனாகبَصِیْرًاபார்ப்பவனாக
வ கம் அஹ்லக்னா மினல் குரூனி மின் Bபஃதி னூஹ்; வ கFபா Bபி ரBப்Bபிக BபிதுனூBபி 'இBபாதிஹீ கBபீரம் Bபஸீரா
நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தன் அடியார்களின் பாவங்களை நன்கறிந்தவனாகவும், கூர்ந்து நோக்குபவனாகவும் இருப்பதற்கு உம் இறைவன் போதுமானவன்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
اُولٰٓىِٕكَஅத்தகையோர்الَّذِیْنَஎவர்கள் என்றால்اَنْعَمَஅருள்புரிந்தானோاللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْஅவர்கள் மீதுمِّنَ(அவர்கள்)النَّبِیّٖنَநபிமார்களில்مِنْஉள்ளவர்கள்;ذُرِّیَّةِசந்ததியினரில்اٰدَمَ ۗஆதமின்وَ مِمَّنْமேலும் எவர்களைحَمَلْنَاநாம் சுமந்தோமோمَعَஉடன்نُوْحٍ ؗநூஹوَّ مِنْமேலும்ذُرِّیَّةِசந்ததியினரில்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْرَآءِیْلَ ؗமற்றும் இஸ்ராயீலின்وَ مِمَّنْமேலும் எவர்களில்هَدَیْنَاநாம் நேர்வழி காட்டினோமோوَ اجْتَبَیْنَا ؕமேலும் நாம் தேர்ந்தெடுத்தோமோاِذَاஎப்போதுتُتْلٰیஓதிக்காட்டப்படுகிறதோعَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتُவசனங்கள்الرَّحْمٰنِஅளவற்ற அருளாளனின்خَرُّوْا(அப்போது) அவர்கள் விழுவார்கள்سُجَّدًاசிரம் பணிந்தவர்களாகوَّ بُكِیًّا۩மேலும் அழுதவர்களாக
உலா'இகல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன மின் துர்ரிய்யதி ஆதம வ மிம்மன் ஹமல்னா ம'அ னூஹி(ன்)வ் வ மின் துர்ரிய்யதி இBப்ராஹீம வ இஸ்ரா'ஈல வ மிம்மன் ஹதய்னா வஜ்த Bபய்னா; இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுர் ரஹ்மானி கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ Bபுகிய்யா
இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
وَنُوْحًا اِذْ نَادٰی مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
وَ نُوْحًاஇன்னும் நூஹையும்اِذْபோதுنَادٰیஅவர் அழைத்தمِنْஇதற்குقَبْلُமுன்னர்فَاسْتَجَبْنَاஆகவே நாம் பதிலளித்தோம்لَهٗஅவருக்குفَنَجَّیْنٰهُஆகவே அவரை நாம் காப்பாற்றினோம்وَ اَهْلَهٗஇன்னும் அவருடைய குடும்பத்தாரையும்مِنَஇருந்துالْكَرْبِதுன்பத்தில்الْعَظِیْمِۚபெரும்
வ னூஹன் இத் னாதா மின் கBப்லு Fபஸ்தஜBப்னா லஹூ Fபனஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ மினல் கர்Bபில் 'அளீம்
இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.
وَاِنْ یُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّثَمُوْدُ ۟ۙ
وَ اِنْஇன்னும்یُّكَذِّبُوْكَஉம்மைப் பொய்ப்பித்தால்فَقَدْநிச்சயமாகكَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்னர்قَوْمُசமுதாயமும்نُوْحٍநூஹின்وَّ عَادٌஆதுவும்وَّ ثَمُوْدُۙஸமூதும்
வ இ(ன்)ய் யுகத்திBபூக Fபகத் கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ ஆது(ன்)வ் வ தமூத்
(நபியே!) இவர்கள் உம்மைப் பொய்யாக்க முற்பட்டால் (அதற்காக விசனப்படாதீர்; ஏனெனில்) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தினரும்; ஆது, ஸமூது (சமூகத்தினரும் தத்தம் நபிமார்களைப்) பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்.
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹاِلٰیபால்قَوْمِهٖஅவருடைய சமூகத்தாரின்فَقَالَஎனவே அவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاعْبُدُواநீங்கள் வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْயாதொருاِلٰهٍஇறைவனும்غَیْرُهٗ ؕஅவனையன்றிاَفَلَاஎனவே நீங்கள் மாட்டீர்களாتَتَّقُوْنَஅஞ்ச
வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ Fபகால யா கவ்மிஃBபுதுல் லாஹ மா லகும் மின் இலஹின் கய்ருஹூ அFபலா தத்தகூன்
இன்னும்: நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடத்தில் அனுப்பினோம்; அப்போது அவர் (தம் சமூகத்தாரிடம்) “என் சமூகத்தவர்களே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் - அவனன்றி உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை, நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” என்று கூறினார்.
وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنٰهُمْ وَجَعَلْنٰهُمْ لِلنَّاسِ اٰیَةً ؕ وَاَعْتَدْنَا لِلظّٰلِمِیْنَ عَذَابًا اَلِیْمًا ۟ۚۖ
وَ قَوْمَமேலும் சமூகத்தாரைنُوْحٍநூஹுடையلَّمَّاபோதுكَذَّبُواஅவர்கள் பொய்ப்பித்தார்கள்الرُّسُلَதூதர்களைاَغْرَقْنٰهُمْநாம் அவர்களை மூழ்கடித்தோம்وَ جَعَلْنٰهُمْமேலும் நாம் அவர்களை ஆக்கினோம்لِلنَّاسِமனிதர்களுக்குاٰیَةً ؕஓர் அத்தாட்சியாகوَ اَعْتَدْنَاமேலும் நாம் தயார் செய்துள்ளோம்لِلظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குعَذَابًاவேதனையைاَلِیْمًاۚۖநோவினை தரும்
வ கவ்ம னூஹின் லம்மா கத்தBபுர் ருஸுல அக்ரக்னாஹும் வ ஜ'அல்னாஹும் லின்னாஸி ஆயத(ன்)வ் வ அஃதத்னா லிள்ளாலிமீன 'அதாBபன் அலீமா
இன்னும்: நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.
كَذَّبَتْ قَوْمُ نُوْحِ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُசமூகத்தார்نُوْحِநூஹلْمُرْسَلِیْنَۚۖதூதர்களை
கத்தBபத் கவ்மு னூஹினில் முர்ஸலீன்
நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ نُوْحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْஅப்போதுقَالَகூறினார்لَهُمْஅவர்களிடம்اَخُوْهُمْஅவர்களின் சகோதரர்نُوْحٌநூஹاَلَاநீங்கள்تَتَّقُوْنَۚஅஞ்சமாட்டீர்களா
இத் கால லஹும் அகூஹும் னூஹுன் அலா தத்தகூன்
அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது: “நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?”
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ؕ
فَاتَّقُواஆகவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِیْعُوْنِؕமேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள் (என்று நூஹ் கூறியபோது),
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰنُوْحُ لَتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِیْنَ ۟ؕ
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَىِٕنْஎன்றால்لَّمْவில்லைتَنْتَهِநீ விலகிக்கொள்ளیٰنُوْحُநூஹلَتَكُوْنَنَّநிச்சயமாக நீ ஆகிவிடுவாய்مِنَஇருந்துالْمَرْجُوْمِیْنَؕகல்லால் எறியப்பட்டவர்கள்
காலூ ல'இல் லம் தன்தஹி யா னூஹு லதகூனன்ன மினல் மர்ஜூமீன்
அதற்கவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَلَبِثَ فِیْهِمْ اَلْفَ سَنَةٍ اِلَّا خَمْسِیْنَ عَامًا ؕ فَاَخَذَهُمُ الطُّوْفَانُ وَهُمْ ظٰلِمُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹاِلٰیபால்قَوْمِهٖஅவருடைய சமூகத்தாரிடம்فَلَبِثَஆகவே அவர் தங்கியிருந்தார்فِیْهِمْஅவர்களிடையேاَلْفَஆயிரம்سَنَةٍஆண்டுகள்اِلَّاதவிரخَمْسِیْنَஐம்பதுعَامًا ؕவருடங்கள்فَاَخَذَهُمُபின்னர் அவர்களைப் பிடித்துக்கொண்டதுالطُّوْفَانُபெருவெள்ளம்وَ هُمْஅந்நிலையில் அவர்கள்ظٰلِمُوْنَஅநியாயக்காரர்களாக
வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ FபலBபித Fபீஹிம் அல்Fப ஸனதின் இல்லா கம்ஸீன 'ஆமன் Fப அகதஹுமுத் தூFபானு வ ஹும் ளாலிமூன்
மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.
وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِیّٖنَ مِیْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ۪ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟ۙ
وَ اِذْஇன்னும் (நினைவுகூர்க)اَخَذْنَاநாம் வாங்கினோம்مِنَஇருந்துالنَّبِیّٖنَநபிமார்களிடம்مِیْثَاقَهُمْஅவர்களின் உடன்படிக்கையைوَ مِنْكَஉம்மிடமிருந்தும்وَ مِنْஇன்னும் இருந்தும்نُّوْحٍநூஹوَّ اِبْرٰهِیْمَஇன்னும் இப்ராஹீம்وَ مُوْسٰیஇன்னும் மூஸாوَ عِیْسَیஇன்னும் ஈஸாابْنِமகன்مَرْیَمَ ۪மர்யமின்وَ اَخَذْنَاஇன்னும் நாம் வாங்கினோம்مِنْهُمْஅவர்களிடமிருந்துمِّیْثَاقًاஉடன்படிக்கையைغَلِیْظًاۙஉறுதியான
வ இத் அகத்னா மினன் னBபிய்யீன மீதாகஹும் வ மின்க வ மின் னூஹி(ன்)வ் வ இBப்ராஹீம வ மூஸா வ ஈஸBப்-னி-மர்யம வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
وَلَقَدْ نَادٰىنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِیْبُوْنَ ۟ؗۖ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகنَادٰىنَاநம்மை அழைத்தார்نُوْحٌநூஹفَلَنِعْمَஆகவே எவ்வளவு மேலானவர்கள்الْمُجِیْبُوْنَؗۖபதிலளிப்பவர்கள்
வ லகத் னாதானா னூஹுன் Fபலனிஃமல் முஜீBபூன்
அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.
سَلٰمٌ عَلٰی نُوْحٍ فِی الْعٰلَمِیْنَ ۟
سَلٰمٌசாந்திعَلٰیமீதுنُوْحٍநூஹفِیஇல்الْعٰلَمِیْنَஅகிலத்தார்
ஸலாமுன் 'அலா னூஹின் Fபில் 'ஆலமீன்
“ஸலாமுன் அலாநூஹ்” - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவர்مِنْஒருவராவார்عِبَادِنَاநமது அடியார்களில்الْمُؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களில்
இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّفِرْعَوْنُ ذُو الْاَوْتَادِ ۟ۙ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்قَوْمُசமுதாயம்نُوْحٍநூஹுடையوَّ عَادٌஆதுவும்وَّ فِرْعَوْنُஃபிர்அவ்னும்ذُوஉடையالْاَوْتَادِۙஆப்புகளை
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ 'ஆது(ன்)வ் வ Fபிர்'அவ்னு துல் அவ்தாத்
(இவ்வாறு) இவர்களுக்கு முன் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ஆது(சமூகத்தாரு)ம், முளைகளுடைய ஃபிர்அவ்னும் நம் தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّالْاَحْزَابُ مِنْ بَعْدِهِمْ ۪ وَهَمَّتْ كُلُّ اُمَّةٍ بِرَسُوْلِهِمْ لِیَاْخُذُوْهُ وَجٰدَلُوْا بِالْبَاطِلِ لِیُدْحِضُوْا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ ۫ فَكَیْفَ كَانَ عِقَابِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்قَوْمُசமுதாயம்نُوْحٍநூஹின்وَّ الْاَحْزَابُமேலும் கூட்டத்தினரும்مِنْۢஇருந்துبَعْدِهِمْ ۪அவர்களுக்குப் பின்وَ هَمَّتْமேலும் முனைந்தனர்كُلُّஒவ்வொருاُمَّةٍۭசமுதாயமும்بِرَسُوْلِهِمْதங்கள் தூதரைلِیَاْخُذُوْهُஅவரைப் பிடிப்பதற்காகوَ جٰدَلُوْاமேலும் தர்க்கம் செய்தனர்بِالْبَاطِلِஅசத்தியத்தைக் கொண்டுلِیُدْحِضُوْاவீழ்த்துவதற்காகبِهِஅதன் மூலம்الْحَقَّசத்தியத்தைفَاَخَذْتُهُمْ ۫ஆகவே நான் அவர்களைப் பிடித்தேன்فَكَیْفَஎனவே எப்படிكَانَஇருந்ததுعِقَابِஎனது தண்டனை
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வல் அஹ்ZஜாBபு மின் Bபஃதிஹிம் வ ஹம்மத் குல்லு உம்மதின் Bபி ரஸூலிஹிம் லி ய'குதூஹு வ ஜாதலூ Bபில்Bபாதிலி லி யுத் ஹிளூ Bபிஹில் ஹக்க Fப அகத்துஹும் Fப கய்Fப கான 'இகாBப்
இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?
مِثْلَ دَاْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ؕ وَمَا اللّٰهُ یُرِیْدُ ظُلْمًا لِّلْعِبَادِ ۟
مِثْلَபோன்றدَاْبِநிலையைقَوْمِசமூகத்தின்نُوْحٍநூஹوَّ عَادٍஇன்னும் ஆதுوَّ ثَمُوْدَஇன்னும் ஸமூதுوَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்مِنْۢஇருந்துبَعْدِهِمْ ؕஅவர்களுக்குப் பின்وَ مَاமேலும் இல்லைاللّٰهُஅல்லாஹ்یُرِیْدُநாடுகிறான்ظُلْمًاஅநீதியைلِّلْعِبَادِஅடியார்களுக்கு
மித்ல தாBபி கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத வல்லதீன மிம் Bபஃதிஹிம்; வ மல் லாஹு யுரீது ளுல்மல் லில்'இBபாத்
நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் “ஆது”, “ஸமூது”டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால் அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் (என்றும்).
شَرَعَ لَكُمْ مِّنَ الدِّیْنِ مَا وَصّٰی بِهٖ نُوْحًا وَّالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَمَا وَصَّیْنَا بِهٖۤ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسٰۤی اَنْ اَقِیْمُوا الدِّیْنَ وَلَا تَتَفَرَّقُوْا فِیْهِ ؕ كَبُرَ عَلَی الْمُشْرِكِیْنَ مَا تَدْعُوْهُمْ اِلَیْهِ ؕ اَللّٰهُ یَجْتَبِیْۤ اِلَیْهِ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ یُّنِیْبُ 
شَرَعَஅவன் ஏற்படுத்தினான்لَكُمْஉங்களுக்குمِّنَஇலிருந்துالدِّیْنِமார்க்கத்தைمَاஎதனைوَصّٰیஅவன் உபதேசித்தானோبِهٖஅதைக் கொண்டுنُوْحًاநூஹுக்குوَّ الَّذِیْۤமேலும் எதனைاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلَیْكَஉமக்குوَ مَاமேலும் எதனைوَصَّیْنَاநாம் உபதேசித்தோமோبِهٖۤஅதைக் கொண்டுاِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குوَ مُوْسٰیமேலும் மூஸாவுக்கும்وَ عِیْسٰۤیமேலும் ஈஸாவுக்கும்اَنْஎன்றுاَقِیْمُواநீங்கள் நிலைநிறுத்துங்கள்الدِّیْنَமார்க்கத்தைوَ لَاமேலும் வேண்டாம்تَتَفَرَّقُوْاநீங்கள் பிரிந்துவிடفِیْهِ ؕஅதில்كَبُرَகடினமாக இருக்கிறதுعَلَیமீதுالْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களுக்குمَاஎதைتَدْعُوْهُمْநீர் அவர்களை அழைக்கிறீரோاِلَیْهِ ؕஅதன் பக்கம்اَللّٰهُஅல்லாஹ்یَجْتَبِیْۤஅவன் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்اِلَیْهِதன் பக்கம்مَنْஎவரைیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یَهْدِیْۤமேலும் அவன் நேர்வழி காட்டுகிறான்اِلَیْهِதன் பக்கம்مَنْஎவர்یُّنِیْبُதிரும்புகிறாரோ
ஷர'அ லகும் மினத் தீனி மா வஸ்ஸா Bபிஹீ னூஹ(ன்)வ் வல்லதீ அவ்ஹய்னா இலய்க வமா வஸ்ஸய்னா Bபிஹீ இBப்ராஹீம வ மூஸா வ 'ஈஸா அன் அகீமுத் தீன வலா ததFபர்ரகூ Fபீஹ்; கBபுர 'அலல் முஷ்ரிகீன மா தத்'ஊஹும் இலய்ஹ்; அல்லாஹு யஜ்தBபீ இலய்ஹி மய் யஷா'உ வ யஹ்தீ இலய்ஹி மய் யுனீBப்
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّاَصْحٰبُ الرَّسِّ وَثَمُوْدُ ۟ۙ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்னர்قَوْمُசமுதாயம்نُوْحٍநூஹின்وَّ اَصْحٰبُமேலும் தோழர்கள்الرَّسِّரஸ்ஸுடையوَ ثَمُوْدُۙமேலும் ஸமூது
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ அஸ்ஹாBபுர் ரஸ்ஸி வ தமூத்
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ரஸ்ஸு (கிணற்று) வாசிகளும், ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள்.
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟۠
وَ قَوْمَமேலும் சமூகத்தாரைنُوْحٍநூஹுடையمِّنْஇதற்குقَبْلُ ؕமுன்னர்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَوْمًاஒரு சமூகமாகفٰسِقِیْنَ۠வரம்பு மீறியவர்களாக
வ கவ்ம னூஹிம் மின் கBப்லு இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا هُمْ اَظْلَمَ وَاَطْغٰی ۟ؕ
وَ قَوْمَமேலும் சமூகத்தையும்نُوْحٍநூஹின்مِّنْஇதற்குقَبْلُ ؕமுன்பேاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்هُمْஅவர்களேاَظْلَمَமிகவும் அநியாயக்காரர்களாகوَ اَطْغٰیؕமேலும் மிகவும் வரம்பு மீறியவர்களாகவும்
வ கவ்ம னூஹிம் மின் கBப்லு இன்னஹும் கானூ ஹும் அள்லம வ அத்கா
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்னர்قَوْمُசமுதாயம்نُوْحٍநூஹின்فَكَذَّبُوْاஎனவே அவர்கள் பொய்ப்பித்தனர்عَبْدَنَاநமது அடியாரைوَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினர்مَجْنُوْنٌபைத்தியக்காரர்وَّ ازْدُجِرَமேலும் அவர் மிரட்டப்பட்டார்
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹின் Fபகத்தBபூ 'அBப்தனா வ காலூ மஜ்னூனு(ன்)வ் வZஜ்துஜிர்
இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) “பைத்தியக்காரர்” என்று கூறினர்; அவர் விரட்டவும் பட்டார்.
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا وَّاِبْرٰهِیْمَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتٰبَ فَمِنْهُمْ مُّهْتَدٍ ۚ وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹوَّ اِبْرٰهِیْمَமேலும் இப்ராஹீமையும்وَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்فِیْஇல்ذُرِّیَّتِهِمَاஅவ்விருவரின் சந்ததியினர்النُّبُوَّةَநபித்துவத்தைوَ الْكِتٰبَமேலும் வேதத்தையும்فَمِنْهُمْஆகவே அவர்களில்مُّهْتَدٍ ۚநேர்வழி பெற்றவர்கள்وَ كَثِیْرٌமேலும் அதிகமானோர்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَவரம்பு மீறியவர்கள்
வ லகத் அர்ஸல்னா னூஹ(ன்)வ் வ இBப்ராஹீம வ ஜ'அல்னா Fபீ துர்ரிய்யதிஹிமன் னுBபுவ்வத வல் கிதாBப Fபமின்ஹும் முஹ்தத்; வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.
ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّامْرَاَتَ لُوْطٍ ؕ كَانَتَا تَحْتَ عَبْدَیْنِ مِنْ عِبَادِنَا صَالِحَیْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ یُغْنِیَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَیْـًٔا وَّقِیْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِیْنَ ۟
ضَرَبَஎடுத்துக்காட்டுகிறான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஓர் உதாரணத்தைلِّلَّذِیْنَஅவர்களுக்குكَفَرُواநிராகரித்தார்களோامْرَاَتَமனைவியைنُوْحٍநூஹின்وَّ امْرَاَتَமற்றும் மனைவியைلُوْطٍ ؕலூத்தின்كَانَتَاஅவ்விருவரும் இருந்தனர்تَحْتَகீழ்عَبْدَیْنِஇரு அடியார்களின்مِنْஉள்ளعِبَادِنَاநம் அடியார்களில்صَالِحَیْنِநல்லவர்களானفَخَانَتٰهُمَاஆனால் அவ்விருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர்فَلَمْஎனவே இல்லைیُغْنِیَاஅவர்கள் இருவரும் காப்பாற்றعَنْهُمَاஅவ்விருவரையும்مِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்شَیْـًٔاஎதனையும்وَّ قِیْلَமேலும் சொல்லப்பட்டதுادْخُلَاநீங்கள் இருவரும் நுழையுங்கள்النَّارَநரக நெருப்பில்مَعَஉடன்الدّٰخِلِیْنَநுழைபவர்களுடன்
ளரBபல் லாஹு மதலல் லில்லதீன கFபரும் ர அத னூஹி(ன்)வ் வம்ர அத லூத், கானதா தஹ்த 'அBப்தய்னி மின் 'இBபாதினா ஸாலிஹய்னி Fபகானதாஹுமா Fபலம் யுக்னியா 'அன்ஹுமா மினல் லாஹி ஷய் அ(ன்)வ்-வ கீலத் குலன் னார ம'அத் தாகிலீன்
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
اِنَّاۤ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاஅனுப்பினோம்نُوْحًاநூஹاِلٰیபால்قَوْمِهٖۤஅவருடைய சமூகத்தாரின்اَنْஎன்றுاَنْذِرْஎச்சரிக்கை செய்வீராகقَوْمَكَஉமது சமூகத்தாரைمِنْக்குقَبْلِமுன்னர்اَنْஎன்றுیَّاْتِیَهُمْஅவர்களுக்கு வருவதற்குعَذَابٌவேதனைاَلِیْمٌநோவினை தரும்
இன்னா அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ அன் அன்திர் கவ்மக மின் கBப்லி அ(ன்)ய் யா'தியஹும் 'அதாBபுன் அலீம்
நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்: “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரஸூலாக) அனுப்பினோம்.
قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِیْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ یَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًا ۟ۚ
قَالَகூறினார்نُوْحٌநூஹرَّبِّஎன் இறைவனேاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்عَصَوْنِیْஎனக்கு மாறுசெய்தார்கள்وَ اتَّبَعُوْاமேலும் பின்பற்றினார்கள்مَنْஎவரைلَّمْஇல்லைیَزِدْهُஅவருக்கு அதிகப்படுத்தியதுمَالُهٗஅவருடைய செல்வம்وَ وَلَدُهٗۤமேலும் அவருடைய பிள்ளைகள்اِلَّاதவிரخَسَارًاۚநஷ்டத்தை
கால னூஹுர் ரBப்Bபி இன்னஹும் 'அஸவ்னீ வத்தBப'ஊ மல் லம் யZஜித் ஹு மாலுஹூ வ வலதுஹூ இல்லா கஸாரா
நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர்; அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.
وَقَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَی الْاَرْضِ مِنَ الْكٰفِرِیْنَ دَیَّارًا ۟
وَ قَالَமேலும் கூறினார்نُوْحٌநூஹرَّبِّஎன் இறைவனேلَاவிடாதேتَذَرْவிட்டுவைக்கعَلَیமீதுالْاَرْضِபூமியின்مِنَஇருந்துالْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்களில்دَیَّارًاவசிப்பவர் ஒருவரையும்
வ கால னூஹுர் ரBப்Bபி லா ததர் 'அலல் அர்ளி மினல் காFபிரீன தய்யாரா
அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.