">

தேடல் வார்த்தை: "லூத்"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

37 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 37)

وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوْتَ مَلِكًا ؕ قَالُوْۤا اَنّٰی یَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَیْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ یُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ ؕ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰىهُ عَلَیْكُمْ وَزَادَهٗ بَسْطَةً فِی الْعِلْمِ وَالْجِسْمِ ؕ وَاللّٰهُ یُؤْتِیْ مُلْكَهٗ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
وَقَالَஇன்னும் கூறினார்لَهُمْஅவர்களுக்குنَبِيُّهُمْஅவர்களுடைய நபிاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَدْ بَعَثَஅனுப்பி இருக்கிறான்لَـکُمْஉங்களுக்குطَالُوْتَதாலூத்தைمَلِكًا ؕஅரசராகقَالُوْٓاகூறினார்கள்اَنّٰىஎப்படி?يَكُوْنُஇருக்கும்لَهُஅவருக்குالْمُلْكُஆட்சிعَلَيْنَاஎங்கள் மீதுوَنَحْنُநாங்கள்اَحَقُّமிகவும் தகுதியுடையவர்(கள்)بِالْمُلْكِஆட்சிக்குمِنْهُஅவரைவிடوَلَمْ يُؤْتَஅவர் கொடுக்கப்படவில்லையேسَعَةًவசதிمِّنَ الْمَالِ‌ؕசெல்வத்தின்قَالَகூறினார்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்اصْطَفٰٮهُஅவரைத் தேர்ந்தெடுத்தான்عَلَيْکُمْஉங்கள் மீதுوَزَادَهٗஇன்னும் அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான்بَسْطَةًஆற்றலைفِى الْعِلْمِகல்வியில்وَ الْجِسْمِ‌ؕஇன்னும் உடல்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்يُؤْتِىْதருவான்مُلْکَهٗதனது ஆட்சியைمَنْஎவர்يَّشَآءُ ؕநாடுகிறான்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِيْمٌ‏மிக அறிபவன்
வ கால லஹும் னBபிய் யுஹும் இன்னல் லாஹ கத் Bப'அத லகும் தாலூத மலிகா; காலூ அன்னா யகூனு லஹுல் முல்கு 'அலய்னா வ னஹ்னு அஹக்கு Bபில்முல்கி மின்ஹு வ லம் யு'த ஸ'அதம்மினல் மால்; கால இன்னல்லாஹஸ் தFபாஹு 'அலய்கும் வ Zஜாதஹூ Bபஸ்ததன் Fபில்'இல்மி வல்ஜிஸ்மி வல்லாஹு யு'தீ முல்கஹூ மய் யஷா'; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார்.
فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُنُوْدِ ۙ قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِیْكُمْ بِنَهَرٍ ۚ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَیْسَ مِنِّیْ ۚ وَمَنْ لَّمْ یَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّیْۤ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِیَدِهٖ ۚ فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ ۙ قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْیَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖ ؕ قَالَ الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِ ۙ كَمْ مِّنْ فِئَةٍ قَلِیْلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِیْرَةً بِاِذْنِ اللّٰهِ ؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟
فَلَمَّاபோதுفَصَلَபுறப்பட்டார்طَالُوْتُதாலூத்بِالْجُـنُوْدِۙபடைகளுடன்قَالَகூறினார்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்مُبْتَلِيْکُمْஉங்களைச்சோதிப்பான்بِنَهَرٍ‌ۚஓர் ஆற்றின் மூலம்فَمَنْஆகவே எவர்شَرِبَ مِنْهُஅதிலிருந்து குடித்தார்فَلَيْسَஅவர் இல்லைمِنِّىْ‌ۚஎன்னை சேர்ந்தوَمَنْஇன்னும் எவர்لَّمْ يَطْعَمْهُஅதைச் சுவைக்கவில்லைفَاِنَّهٗநிச்சயமாக அவர்مِنِّىْٓஎன்னைச் சேர்ந்தاِلَّاதவிரمَنِஎவர்اغْتَرَفَகையளவு நீர் அள்ளினார்غُرْفَةً ۢகையளவு நீர்بِيَدِهٖ‌ۚதன் கரத்தால்فَشَرِبُوْاகுடித்தார்கள்مِنْهُஅதிலிருந்துاِلَّاதவிரقَلِيْلًاகுறைவானவர்கள்مِّنْهُمْ‌ؕஅவர்களில்فَلَمَّا جَاوَزَهٗஅதை அவர் கடந்தபோதுهُوَஅவர்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்مَعَهٗ ۙஅவருடன்قَالُوْاகூறினார்கள்لَا طَاقَةَஅறவே சக்தியில்லைلَنَاஎங்களுக்குالْيَوْمَஇன்றுبِجَالُوْتَஜாலூத்துடன்وَجُنُوْدِهٖ‌ؕஇன்னும் அவனுடைய படைகள்قَالَகூறினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்يَظُنُّوْنَஅறிகிறார்கள்اَنَّهُمْநிச்சயமாக தாங்கள்مُّلٰقُواசந்திப்பவர்கள்اللّٰهِۙஅல்லாஹ்வைکَمْஎத்தனைمِّنْஇருந்துفِئَةٍகூட்டம்قَلِيْلَةٍகுறைவானغَلَبَتْவென்றுள்ளனفِئَةًகூட்டத்தைکَثِيْرَةً ۢஅதிகமானبِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்مَعَஉடன்الصّٰبِرِيْنَ‏பொறுமையாளர்கள்
Fபலம்மா Fபஸல தாலூது Bபில்ஜுனூதி கால இன்னல் லாஹ முBப்தலீகும் Bபினஹரின் Fபமன் ஷரிBப மின்ஹு Fபலய்ஸ மின்னீ வ மல்லம் யத்'அம்ஹு Fப இன்னஹூ மின்னீ இல்லா மனிக் தரFப குர்Fபதம் Bபியதிஹ்; FபஷரிBபூ மின்ஹு இல்லா கலீலம்மின்ஹும்; Fபலம்மா ஜாவZஜஹூ ஹுவ வல்லதீன ஆமனூ ம'அஹூ காலூ லா தாகத லனல் யவ்ம Bபி ஜாலூத வ ஜுனூதிஹ்; காலல்லதீன யளுன்னூன அன்னஹும் முலாகுல் லாஹி கம் மின் Fபி'அதின் கலீலதின் கலBபத் Fபி'அதன் கதீரதம் Bபி இத்னில் லாஹ்; வல்லாஹும'அஸ் ஸாBபிரீன்
பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்; பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) “ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை” என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
وَلَمَّا بَرَزُوْا لِجَالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟ؕ
وَلَمَّا بَرَزُوْاஅவர்கள் முன்னால் வந்தபோதுلِجَـالُوْتَஜாலூத்திற்குوَجُنُوْدِهٖஇன்னும் அவனுடைய படைகள்قَالُوْاகூறினார்கள்رَبَّنَآஎங்கள் இறைவாاَفْرِغْஇறக்குعَلَيْنَاஎங்கள் மீதுصَبْرًاபொறுமையைوَّثَبِّتْஇன்னும் உறுதிப்படுத்துاَقْدَامَنَاஎங்கள் பாதங்களைوَانْصُرْنَاஇன்னும் எங்களுக்கு உதவுعَلَىஎதிராகالْقَوْمِமக்களுக்குالْکٰفِرِيْنَؕ‏நிராகரிப்பாளர்கள்
வ லம்மா BபரZஜூ லிஜாலூத வ ஜுனூதிஹீ காலூ ரBப்Bபனா அFப்ரிக் 'அலய்னா ஸBப்ர(ன்)வ் வ தBப்Bபித் அக்தாமனா வன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.
فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ۫ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا یَشَآءُ ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ ۙ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰكِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟
فَهَزَمُوْهُمْஆகவே அவர்களைத் தோற்கடித்தார்கள்بِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِ ۙஅல்லாஹ்வின்وَقَتَلَஇன்னும் கொன்றார்دَاوٗدُதாவூதுجَالُوْتَஜாலூத்தைوَاٰتٰٮهُஇன்னும் அவருக்குக் கொடுத்தான்اللّٰهُஅல்லாஹ்الْمُلْكَஆட்சியைوَالْحِکْمَةَஇன்னும் ஞானம்وَعَلَّمَهٗஇன்னும் அவருக்குக் கற்பித்தான்مِمَّاஎதிலிருந்துيَشَآءُ ؕநாடுகிறான்وَلَوْلَاஇல்லையென்றால்دَفْعُதடுப்பதுاللّٰهِஅல்லாஹ்வின்النَّاسَமக்களைبَعْضَهُمْஅவர்களில் சிலரை விட்டுبِبَعْضٍசிலரைக் கொண்டுلَّفَسَدَتِஉறுதியாக அழிந்து விடும்الْاَرْضُபூமிوَلٰـکِنَّஎனினும்اللّٰهَஅல்லாஹ்ذُوْ فَضْلٍஅருளுடையவன்عَلَىமீதுالْعٰلَمِيْنَ‏உலகத்தார்கள்
FபஹZஜமூஹும் Bபி இத்னில்லாஹி வ கதல தாவூது ஜாலூத வ ஆதாஹுல் லாஹுல்முல்க வல் ஹிக்மத வ 'அல்லமஹூ மிம்மா யஷா'; வ லவ் லா தFப்'உல்லாஹின் னாஸ Bபஃளஹும் BபிBபஃளில் லFபஸததில் அர்ளு வ லாகின்னல் லாஹ தூ Fபள்லின் 'அலல்'ஆலமீன்
இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
وَاِسْمٰعِیْلَ وَالْیَسَعَ وَیُوْنُسَ وَلُوْطًا ؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீலைوَالْيَسَعَஇன்னும் அல்யஸஉவைوَيُوْنُسَஇன்னும் யூனுஸ்وَلُوْطًا‌ ؕஇன்னும் லூத்தைوَكُلًّاஎல்லோரையும்فَضَّلْنَاமேன்மைப்படுத்தினோம்عَلَى الْعٰلَمِيْنَۙ‏அகிலத்தாரை விட
வ இஸ்மா'ஈல வல் யஸ'அ வ யூனுஸ வ லூதா; வ குல்லன் Fபள்ளல்னா 'அலல் 'ஆலமீன்
இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟
وَلُوْطًاஇன்னும் லூத்தைاِذْசமயம்قَالَகூறினார்لِقَوْمِهٖۤதம் சமுதாயத்திற்குاَتَاْتُوْنَவருகிறீர்களா?الْفَاحِشَةَமானக்கேடானதிற்குمَاஇல்லைسَبَقَكُمْஉங்களை முந்தبِهَاஇதற்குمِنْ اَحَدٍஒருவருமேمِّنَ الْعٰلَمِيْنَ‏உலகத்தாரில்
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ அத'தூனல் Fபாஹிஷத மா ஸBபககும் Bபிஹா மின் அஹதிம் மினல் 'ஆலமீன்
மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”
فَلَمَّا رَاٰۤ اَیْدِیَهُمْ لَا تَصِلُ اِلَیْهِ نَكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً ؕ قَالُوْا لَا تَخَفْ اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمِ لُوْطٍ ۟ؕ
فَلَمَّا رَاٰۤஅவர் பார்த்தபோதுاَيْدِيَهُمْஅவர்களுடைய கரங்களைلَا تَصِلُசேராதுاِلَيْهِஅதன் பக்கம்نَـكِرَசந்தேகித்தார்هُمْஅவர்களைப் பற்றிوَاَوْجَسَஇன்னும் அவர் மறைத்தார்مِنْهُمْஅவர்களைப் பற்றிخِيْفَةً‌  ؕபயத்தைقَالُوْاகூறினார்கள்لَا تَخَفْபயப்படாதீர்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اُرْسِلْنَاۤஅனுப்பப்பட்டோம்اِلٰى قَوْمِமக்களின் பக்கம்لُوْطٍ ؕ‏லூத்துடைய
Fபலம்மா ர ஆ அய்தியஹும் லா தஸிலு இலய்ஹி னகிரஹும் வ அவ்ஜஸ மின்ஹும் கீFபஹ்; காலூ லா தகFப் இன்னா உர்ஸில்னா இலா கவ்மி லூத்
ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِیْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰی یُجَادِلُنَا فِیْ قَوْمِ لُوْطٍ ۟ؕ
فَلَمَّا ذَهَبَசென்றபோதுعَنْ اِبْرٰهِيْمَஇப்றாஹீமை விட்டுالرَّوْعُதிடுக்கம்وَجَآءَتْهُஇன்னும் வந்தது/அவருக்குالْبُشْرٰىநற்செய்திيُجَادِلُــنَاதர்க்கித்தார்/நம்மிடம்فِىْ قَوْمِமக்கள் விஷயத்தில்لُوْطٍؕ‏லூத்துடைய
Fபலம்மா தஹBப அன் இBப்ராஹீமர் ரவ்'உ வ ஜா'அத் ஹுல் Bபுஷ்ரா யுஜாதிலுனா Fபீ கவ்மி லூத்
(இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
وَلَمَّا جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِیْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالَ هٰذَا یَوْمٌ عَصِیْبٌ ۟
وَلَمَّا جَآءَتْவந்த போதுرُسُلُـنَاநம் தூதர்கள்لُوْطًاலூத்திடம்سِىْٓءَசிரமத்திற்குள்ளானார்بِهِمْஅவர்களால்وَضَاقَஇன்னும் சுருங்கினார்بِهِمْஅவர்களால்ذَرْعًاமனம்وَّقَالَஇன்னும் கூறினார்هٰذَاஇதுيَوْمٌநாள்عَصِيْبٌ‏மிகக் கடுமையான(து)
வ லம்மா ஜா'அத் ருஸுலுனா லூதன் ஸீ'அ Bபிஹிம் வ ளாக Bபிஹிம் தர்'அ(ன்)வ் வ கால ஹாதா யவ்முன் 'அஸீBப்
நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.
وَجَآءَهٗ قَوْمُهٗ یُهْرَعُوْنَ اِلَیْهِ ؕ وَمِنْ قَبْلُ كَانُوْا یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ ؕ قَالَ یٰقَوْمِ هٰۤؤُلَآءِ بَنَاتِیْ هُنَّ اَطْهَرُ لَكُمْ فَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ فِیْ ضَیْفِیْ ؕ اَلَیْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِیْدٌ ۟
وَجَآءَهٗவந்தார்(கள்)/அவரிடம்قَوْمُهٗஅவருடைய மக்கள்يُهْرَعُوْنَவிரைந்தவர்களாகاِلَيْهِ ؕஅவர் பக்கம்وَمِنْ قَبْلُஇன்னும் இதற்கு முன்னர்كَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَஅவர்கள் செய்பவர்களாகالسَّيِّاٰتِ ؕதீயவற்றைقَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேهٰٓؤُلَاۤءِஇவர்களைبَنٰتِىْஎன் பெண் பிள்ளைகள்هُنَّஅவர்கள்اَطْهَرُமிக சுத்தமானவர்(கள்)لَـكُمْ‌ ۚஉங்களுக்குفَاتَّقُوْاஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَلَا تُخْزُوْنِஎன்னை அவமான படுத்தாதீர்கள்فِىْ ضَيْفِىْ ؕஎன் விருந்தினர் விஷயத்தில்اَلَيْسَஇல்லையா?مِنْكُمْஉங்களில்رَجُلٌஓர் ஆடவர்رَّشِيْدٌ‏நல்லறிவுள்ளவர்
வ ஜா'அஹூ கவ்முஹூ யுஹ்ர'ஊன இலய்ஹி வ மின் கBப்லு கானூ யஃமலூனஸ் ஸய்யிஆத்; கால யா கவ்மி ஹா'உலா'இ Bபனாதீ ஹுன்ன அத்ஹரு லகும் Fபத்தகுல் லாஹ வலா துக்Zஜூனி Fபீ ளய்Fபீ அலய்ஸ மின்கும் ரஜுலுர் ரஷீத்
அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.
وَیٰقَوْمِ لَا یَجْرِمَنَّكُمْ شِقَاقِیْۤ اَنْ یُّصِیْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ ؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِیْدٍ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேلَا يَجْرِمَنَّكُمْநிச்சயம் உங்களை தூண்ட வேண்டாம்شِقَاقِىْۤஎன்மீதுள்ள விரோதம்اَنْ يُّصِيْبَكُمْஉங்களை அடைவதற்க்குمِّثْلُபோன்றمَاۤஎதுاَصَابَஅடைந்ததுقَوْمَமக்களைنُوْحٍநூஹூடையاَوْஅல்லதுقَوْمَமக்களைهُوْدٍஹூதுடையاَوْஅல்லதுقَوْمَமக்களைصٰلِحٍ‌ؕஸாலிஹ்வுடையوَمَاஇல்லைقَوْمُமக்கள்لُوْطٍலூத்துடையمِّنْكُمْஉங்களுக்குبِبَعِيْدٍ‏தூரமாக
வ யா கவ்மி லா யஜ்ரி மன்னகும் ஷிகாகீ அய் யுஸீBபகும் மித்லு மா அஸாBப கவ்ம னூஹின் அவ் கவ்ம ஹூதின் அவ் கவ்ம ஸாலிஹ்; வமா கவ்மு லூதிம் மின்கும் BபிBப'ஈத்
“என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!
اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
اِلَّاۤதவிரاٰلَகுடும்பத்தார்لُوْطٍؕலூத்துடையاِنَّاநிச்சயமாக நாங்கள்لَمُنَجُّوْபாதுகாப்பவர்கள்தான்هُمْஅவர்களைاَجْمَعِيْنَۙ‏அனைவரையும்
இல்லா ஆல லூத்; இன்னா லமுனஜ்ஜூஹும் அஜ்ம'ஈன்
லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.
اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِیْنَ ۟۠
اِلَّاதவிரامْرَاَتَهٗஅவருடைய மனைவிقَدَّرْنَاۤ ۙமுடிவு செய்தோம்اِنَّهَاநிச்சயமாக அவள்لَمِنَ الْغٰبِرِيْنَ‏தங்கிவிடுபவர்களில்தான்
இல்லம் ர அதஹூ கத்தர்னா இன்னஹா லமினல் காBபிரீன்
ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்” என்று (வானவர்கள்) கூறினார்கள்.  
فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ لْمُرْسَلُوْنَ ۟ۙ
فَلَمَّا جَآءَவந்த போதுاٰلَகுடும்பத்தார்لُوْطِலூத்துடையۨالْمُرْسَلُوْنَۙ‏தூதர்கள்
Fபலம்ம ஜா'அ ஆல லூதினில் முர்ஸலூன்
(இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.
قَالَ اِنَّكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟
قَالَகூறினார்اِنَّـكُمْநிச்சயமாக நீங்கள்قَوْمٌகூட்டம்مُّنْكَرُوْنَ‏அறியப்படாதவர்கள்
கால இன்னகும் கவ்மும் முன்கரூன்
(அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (லூத்) சொன்னார்,
وَجَآءَ اَهْلُ الْمَدِیْنَةِ یَسْتَبْشِرُوْنَ ۟
وَجَآءَவந்தார்(கள்)اَهْلُ الْمَدِيْنَةِஅந்நகரவாசிகள்يَسْتَـبْشِرُوْنَ‏மகிழ்ச்சியடைந்தவர்களாக
வ ஜா'அ அஹ்லுல் மதீனதி யஸ்தBப்ஷிரூன்
(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
قَالَ اِنَّ هٰۤؤُلَآءِ ضَیْفِیْ فَلَا تَفْضَحُوْنِ ۟ۙ
قَالَகூறினார்اِنَّ هٰٓؤُلَاۤءِநிச்சயமாக இவர்கள்ضَيْفِىْஎன் விருந்தினர்فَلَا تَفْضَحُوْنِۙ‏ஆகவே அவமானப் படுத்தாதீர்கள் / என்னை
கால இன்ன ஹா'உலா'இ ளய்Fபீ Fபலா தFப்ளஹூன்
(லூத் வந்தவர்களை நோக்கி:) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;”
وَنَجَّیْنٰهُ وَلُوْطًا اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا لِلْعٰلَمِیْنَ ۟
وَنَجَّيْنٰهُஇன்னும் நாம் பாதுகாத்தோம்/அவரைوَلُوْطًاலூத்தையும்اِلَىபக்கம்الْاَرْضِபூமியின்الَّتِىْ بٰرَكْنَاஅருள்வளம் புரிந்தفِيْهَاஅதில்لِلْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களுக்கு
வ னஜ்ஜய்னாஹு வ லூதன் இலல் அர்ளில் லதீ Bபாரக்னா Fபீஹா லில் 'ஆலமீன்
இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.
وَلُوْطًا اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّیْنٰهُ مِنَ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ تَّعْمَلُ الْخَبٰٓىِٕثَ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فٰسِقِیْنَ ۟ۙ
وَلُوْطًاஇன்னும் லூத்தை நினைவு கூர்வீராக!اٰتَيْنٰهُஅவருக்கு நாம் கொடுத்தோம்حُكْمًاதீர்ப்பளிக்கின்ற ஆற்றலை(யும்)وَّعِلْمًاகல்வி ஞானத்தையும்وَّنَجَّيْنٰهُநாம் அவரை பாதுகாத்தோம்مِنَ الْقَرْيَةِஊரிலிருந்துالَّتِىْ كَانَتْஇருந்தார்கள்تَّعْمَلُசெய்துகொண்டுالْخَبٰٓٮِٕثَ‌ؕஅசிங்கங்களைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَوْمَமக்களாகسَوْءٍகெட்டفٰسِقِيْنَۙ‏பாவிகளாக
வ லூதன் ஆதய்னாஹு ஹுக்ம(ன்)வ் வ 'இல்ம(ன்)வ் வ னஜ்ஜய்னாஹு மினல் கர்யதில் லதீ கானத் தஃமலுல் கBபா'இத்; இன்னஹும் கானூ கவ்ம ஸவ்'இன் Fபாஸிகீன்
இன்னும், லூத்தையும் (நபியாக்கி) - நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
وَقَوْمُ اِبْرٰهِیْمَ وَقَوْمُ لُوْطٍ ۟ۙ
وَقَوْمُமக்களும்اِبْرٰهِيْمَஇப்றாஹீமுடையوَقَوْمُமக்களும்لُوْطٍ ۙ‏லூத்துடைய
வ கவ்மு இBப்ராஹீம வ கவ்மு லூத்
(இவ்வாறே) இப்ராஹீமுடைய சமூகத்தினரும் லூத்துடைய சமூகத்தினரும் (பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்).
كَذَّبَتْ قَوْمُ لُوْطِ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُமக்கள்لُوْطٍலூத்துடையاۨلْمُرْسَلِيْنَ ۖ ۚ‏தூதர்களை
கத்தBபத் கவ்மு லூதினில் முர்ஸலீன்
லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَகூறிய சமயத்தைلَهُمْஅவர்களுக்குاَخُوْசகோதரர்هُمْஅவர்களதுلُوْطٌலூத்துاَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் அஞ்ச வேண்டாமா?
இத் கால லஹும் அகூஹும் லூதுன் அலா தத்தகூன்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது,
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰلُوْطُ لَتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்لَٮِٕنْ لَّمْ تَنْتَهِநீர் விலகவில்லை என்றால்يٰلُوْطُலூத்தே!لَـتَكُوْنَنَّநிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்مِنَ الْمُخْرَجِيْنَ‏வெளியேற்றப்பட்டவர்களில்
கலூ ல'இல் லம் தன்தஹி யா லூது லதகூனன்ன மினல் முக்ரஜீன்
அதற்கவர்கள்; “லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்” எனக் கூறினர்.
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟
وَلُوْطًاஇன்னும் லூத்தையும்اِذْகூறிய சமயத்தைقَالَநினைவு கூறுவீராக!لِقَوْمِهٖۤஅவர் தம் மக்களுக்குاَتَاْتُوْنَநீங்கள் செய்கிறீர்களா?الْـفَاحِشَةَமகா அசிங்கமானوَاَنْـتُمْநீங்கள்تُبْصِرُوْنَ‏அறியத்தான் செய்கிறீர்கள்
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ அதாதூனல் Fபா ஹிஷத வ அன்தும் துBப்ஸிரூன்
லூத்தையும் (நினைவு கூர்வீராக!) அவர் தம் சமூகத்தாரிடம்; “நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா?” என்று கூறினார்.
فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْۤا اٰلَ لُوْطٍ مِّنْ قَرْیَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟
فَمَا كَانَஇருக்கவில்லைجَوَابَபதிலோقَوْمِهٖۤஅவருடைய மக்களின்اِلَّاۤதவிரاَنْ قَالُـوْۤاகூறுவதாகவேاَخْرِجُوْۤاவெளியேற்றுங்கள்اٰلَகுடும்பத்தாரைلُوْطٍலூத்துடையمِّنْ قَرْيَتِكُمْ‌ۚஉங்கள் ஊரிலிருந்துاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اُنَاسٌஅந்த மக்கள்يَّتَطَهَّرُوْنَ‏அசூசைப்படுகிறார்கள்
Fபமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலூ அக்ரிஜூ ஆலா லூதிம் மின் கர்யதிகும் இன்னஹும் உனாஸு(ன்)ய் யததஹ்ஹரூன்
அதற்கவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தாரிடம்) “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே!” என்று (பரிகாசமாகக்) கூறினார்களே தவிர வேறொரு பதிலும் அவர்களிடமில்லை.
فَاٰمَنَ لَهٗ لُوْطٌ ۘ وَقَالَ اِنِّیْ مُهَاجِرٌ اِلٰی رَبِّیْ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
فَاٰمَنَஆக, நம்பிக்கைகொண்டார்لَهٗஅவரைلُوْطٌ‌ۘலூத்وَقَالَஇன்னும் அவர் கூறினார்اِنِّىْநிச்சயமாக நான்مُهَاجِرٌவெளியேறிசெல்கிறேன்اِلٰى رَبِّىْ ؕஎன் இறைவனின் பக்கம்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
Fப ஆமன லஹூ லூத்; வ கால இன்னீ முஹஜிருன் இலா ரBப்Bபீ இன்னஹூ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
(இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம்): “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார்.
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اِنَّكُمْ لَتَاْتُوْنَ الْفَاحِشَةَ ؗ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟
وَلُوْطًاஇன்னும் லூத்தைاِذْ قَالَஅவர் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக!لِقَوْمِهٖۤதனது மக்களுக்குاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَـتَاْتُوْنَசெய்கிறீர்கள்الْفَاحِشَةَமானக்கேடான செயலைمَا سَبَـقَكُمْஉங்களுக்கு முன் செய்ததில்லைبِهَا مِنْ اَحَدٍஇதை/ஒருவரும்مِّنَ الْعٰلَمِيْنَ‏அகிலத்தாரில்
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ இன்னகும் ல த'தூனல் Fபாஹிஷத மா ஸBபககும் Bபிஹா மின் அஹதின் மினல் 'ஆலமீன்
மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
قَالَ اِنَّ فِیْهَا لُوْطًا ؕ قَالُوْا نَحْنُ اَعْلَمُ بِمَنْ فِیْهَا ؗۥ لَنُنَجِّیَنَّهٗ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗۗ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்اِنَّநிச்சயமாகفِيْهَاஅதில் இருக்கிறார்لُوْطًا ؕலூத்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَحْنُநாங்கள்اَعْلَمُநன்கறிந்தவர்கள்بِمَنْ فِيْهَا‌அதில்உள்ளவர்களைلَـنُـنَجِّيَـنَّهٗநிச்சயமாக அவரையும் நாம் பாதுகாப்போம்وَاَهْلَهٗۤஅவருடைய குடும்பத்தாரையும்اِلَّاதவிரامْرَاَتَهٗஅவருடைய மனைவியைكَانَتْஅவள்ஆகிவிடுவாள்مِنَ الْغٰبِرِيْنَ‏மீதம் இருப்பவர்களில்
கால இன்ன Fபீஹா லூதா; காலூ னஹ்னு அஃலமு Bபிமன் Fபீஹா லனுனஜ்ஜ்ஜியன்னஹூ வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கானத் மினல் காBபிரீன்
“நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்ராஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
وَلَمَّاۤ اَنْ جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِیْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالُوْا لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۫ اِنَّا مُنَجُّوْكَ وَاَهْلَكَ اِلَّا امْرَاَتَكَ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
وَلَمَّاۤ اَنْ جَآءَتْவந்த போதுرُسُلُـنَاநமது தூதர்கள்لُوْطًاலூத்திடம்سِىْٓءَஅவர் மனம் புண்பட்டார்بِهِمْஅவர்களால்وَضَاقَஇன்னும் அவர் நெருக்கடிக்கு உள்ளானார்بِهِمْஅவர்களால்ذَرْعًاமனوَّقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَا تَخَفْபயப்படாதீர்وَلَا تَحْزَنْ‌இன்னும் கவலைப்படாதீர்!اِنَّاநிச்சயமாக நாம்مُنَجُّوْكَஉம்மைபாதுகாப்போம்وَاَهْلَكَஉமது குடும்பத்தையும்اِلَّاதவிரامْرَاَتَكَஉமது மனைவியைكَانَتْஅவள்ஆகிவிடுவாள்مِنَ الْغٰبِرِيْنَ‏மீதம் இருப்பவர்களில்
வ லம்மா அன் ஜா'அத் ருஸுலுனா லூதன் ஸீ'அ Bபிஹிம் வ ளாக Bபிஹிம் தர்'அ(ன்)வ் வ காலூ லா தகFப் வலா தஹ்Zஜன் இன்னா முனஜ்ஜூக வ அஹ்லக இல்லம் ர அதக கானத் மினல் காBபிரீன்
இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
وَاِنَّநிச்சயமாகلُوْطًاலூத்لَّمِنَ الْمُرْسَلِيْنَؕ‏தூதர்களில்
வ இன்ன லூதல் லமினல் முர்ஸலீன்
மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
اِلَّا عَجُوْزًا فِی الْغٰبِرِیْنَ ۟
اِلَّاதவிரعَجُوْزًاஒரு மூதாட்டியைفِى الْغٰبِرِيْنَ‏தங்கி விடுபவர்களில் (தங்கிவிடுகின்ற)
இல்லா 'அஜூZஜன் Fபில் காBபிரீன்
பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.
وَثَمُوْدُ وَقَوْمُ لُوْطٍ وَّاَصْحٰبُ لْـَٔیْكَةِ ؕ اُولٰٓىِٕكَ الْاَحْزَابُ ۟
وَثَمُوْدُஸமூதும்وَقَوْمُமக்களும்لُوْطٍலூத்துடையوَّاَصْحٰبُ لْئَیْكَةِ‌ ؕதோட்டமுடையவர்களும்اُولٰٓٮِٕكَஅவர்கள்தான்الْاَحْزَابُ‏கோஷ்டிகள்
வ தமூது வ கவ்மு லூதி(ன்)வ் வ அஸ்ஹாBபுல் 'அய்கஹ்; உலா'இகல் அஹ்ZஜாBப்
(இவ்வாறு) “ஸமூது”ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.
وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍ ۟ۙ
وَعَادٌஆது மக்களும்وَّفِرْعَوْنُஃபிர்அவ்னும்وَاِخْوَانُசகோதரர்களும்لُوْطٍۙ‏லூத்துடைய
வ 'ஆது(ன்)வ் வ Fபிர்'அவ்னு வ இக்வானு லூத்
“ஆது” (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).
وَالْمُؤْتَفِكَةَ اَهْوٰی ۟ۙ
وَالْمُؤْتَفِكَةَஇன்னும் தலைகீழாக புரட்டப்பட்ட சமுதாயத்தைاَهْوٰىۙ‏அவன்தான் கவிழ்த்தான்
வல் மு'தFபிகத அஹ்வா
அன்றியும், அவனே (லூத் சமூகத்தார் வாழ்ந்திருந்த) ஊர்களான முஃதஃபிகாவையும் அழித்தான்.
كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ بِالنُّذُرِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُமக்களும்لُوْطٍ ۢலூத்துடையبِالنُّذُرِ‏எச்சரிக்கையை
கத்தBபத் கவ்மு லூதின் Bபின்னுதுர்
லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ نَجَّیْنٰهُمْ بِسَحَرٍ ۟ۙ
اِنَّاۤநிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுحَاصِبًاகல் மழையைاِلَّاۤ اٰلَ لُوْطٍ‌ؕலூத்துடைய குடும்பத்தார்களைத் தவிரنَّجَّيْنٰهُمْஅவர்களைப் பாதுகாத்தோம்بِسَحَرٍۙ‏அதிகாலையில்
இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ஹாஸிBபன் இல்லா ஆல லூதின் னஜ்ஜய்னாஹும் Bபிஸஹர்
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்; விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.
ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّامْرَاَتَ لُوْطٍ ؕ كَانَتَا تَحْتَ عَبْدَیْنِ مِنْ عِبَادِنَا صَالِحَیْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ یُغْنِیَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَیْـًٔا وَّقِیْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِیْنَ ۟
ضَرَبَவிவரிக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஓர் உதாரணமாகلِّـلَّذِيْنَ كَفَرُواநிராகரித்தவர்களுக்குامْرَاَتَமனைவியையும்نُوْحٍநூஹூடையوَّ امْرَاَتَமனைவியையும்لُوْطٍ‌ ؕலூத்துடையكَانَـتَاஇருவரும் இருந்தனர்تَحْتَகீழ்عَبْدَيْنِஇரு அடியார்களுக்குمِنْ عِبَادِنَاநமது அடியார்களில்صَالِحَـيْنِநல்ல(வர்கள்)فَخَانَتٰهُمَاஅவ்விருவரும் அவ்விருவருக்கும் மோசடி செய்தனர்فَلَمْ يُغْنِيَاஆகவே, அவ்விருவரும் தடுக்கவில்லைعَنْهُمَاஅவ்விருவரைவிட்டும்مِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்شَيْــٴًــاஎதையும்وَّقِيْلَகூறப்பட்டதுادْخُلَاநீங்கள் இருவரும் நுழையுங்கள்النَّارَநரகத்தில்مَعَ الدّٰخِلِيْنَ‏நுழைபவர்களுடன்
ளரBபல் லாஹு மதலல் லில்லதீன கFபரும் ர அத னூஹி(ன்)வ் வம்ர அத லூத், கானதா தஹ்த 'அBப்தய்னி மின் 'இBபாதினா ஸாலிஹய்னி Fபகானதாஹுமா Fபலம் யுக்னியா 'அன்ஹுமா மினல் லாஹி ஷய் அ(ன்)வ்-வ கீலத் குலன் னார ம'அத் தாகிலீன்
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.