">

தேடல் வார்த்தை: "லூத்"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

37 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 37)

وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوْتَ مَلِكًا ؕ قَالُوْۤا اَنّٰی یَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَیْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ یُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ ؕ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰىهُ عَلَیْكُمْ وَزَادَهٗ بَسْطَةً فِی الْعِلْمِ وَالْجِسْمِ ؕ وَاللّٰهُ یُؤْتِیْ مُلْكَهٗ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
وَ قَالَமேலும் கூறினார்لَهُمْஅவர்களுக்குنَبِیُّهُمْஅவர்களின் நபிاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَدْதிண்ணமாகبَعَثَநியமித்துள்ளான்لَكُمْஉங்களுக்குطَالُوْتَதாலூத்தைمَلِكًا ؕஅரசராகقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَنّٰیஎவ்வாறுیَكُوْنُஇருக்க முடியும்لَهُஅவருக்குالْمُلْكُஆட்சிعَلَیْنَاஎங்கள் மீதுوَ نَحْنُநாங்களோاَحَقُّஅதிக தகுதியுடையவர்கள்بِالْمُلْكِஆட்சிக்குمِنْهُஅவரை விடوَ لَمْமேலும் இல்லைیُؤْتَஅவருக்கு வழங்கப்படسَعَةًதாராளமான வசதிمِّنَஇருந்துالْمَالِ ؕசெல்வத்தில்قَالَஅவர் கூறினார்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰىهُஅவரைத் தேர்ந்தெடுத்துள்ளான்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ زَادَهٗமேலும் அவருக்கு அதிகப்படுத்தியுள்ளான்بَسْطَةًவிசாலத்தைفِیஇல்الْعِلْمِஅறிவில்وَ الْجِسْمِ ؕமற்றும் உடல் வலிமையில்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یُؤْتِیْவழங்குகிறான்مُلْكَهٗதனது ஆட்சியைمَنْயாருக்குیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
வ கால லஹும் னBபிய் யுஹும் இன்னல் லாஹ கத் Bப'அத லகும் தாலூத மலிகா; காலூ அன்னா யகூனு லஹுல் முல்கு 'அலய்னா வ னஹ்னு அஹக்கு Bபில்முல்கி மின்ஹு வ லம் யு'த ஸ'அதம்மினல் மால்; கால இன்னல்லாஹஸ் தFபாஹு 'அலய்கும் வ Zஜாதஹூ Bபஸ்ததன் Fபில்'இல்மி வல்ஜிஸ்மி வல்லாஹு யு'தீ முல்கஹூ மய் யஷா'; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார்.
فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُنُوْدِ ۙ قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِیْكُمْ بِنَهَرٍ ۚ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَیْسَ مِنِّیْ ۚ وَمَنْ لَّمْ یَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّیْۤ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِیَدِهٖ ۚ فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ ۙ قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْیَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖ ؕ قَالَ الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِ ۙ كَمْ مِّنْ فِئَةٍ قَلِیْلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِیْرَةً بِاِذْنِ اللّٰهِ ؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟
فَلَمَّاபின்னர்فَصَلَபுறப்பட்டபோதுطَالُوْتُதாலூத்بِالْجُنُوْدِ ۙபடைகளுடன்قَالَஅவர் கூறினார்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مُبْتَلِیْكُمْஉங்களைச் சோதிக்கப்போகிறான்بِنَهَرٍ ۚஓர் ஆற்றைக் கொண்டுفَمَنْஎனவே எவர்شَرِبَகுடிக்கிறாரோمِنْهُஅதிலிருந்துفَلَیْسَஅவர் இல்லைمِنِّیْ ۚஎன்னைச் சேர்ந்தவர்وَ مَنْமேலும் எவர்لَّمْஇல்லைیَطْعَمْهُஅதைச் சுவைக்கிறாரோفَاِنَّهٗநிச்சயமாக அவர்مِنِّیْۤஎன்னைச் சேர்ந்தவர்اِلَّاதவிரمَنِஎவர்اغْتَرَفَஅள்ளிக் கொள்கிறாரோغُرْفَةًۢஒரு கை அளவுبِیَدِهٖ ۚதனது கையால்فَشَرِبُوْاஆனால் அவர்கள் குடித்தார்கள்مِنْهُஅதிலிருந்துاِلَّاதவிரقَلِیْلًاஒரு சிலரைمِّنْهُمْ ؕஅவர்களில்فَلَمَّاபின்னர் எப்போதுجَاوَزَهٗஅதை அவர் கடந்தாரோهُوَஅவர்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோمَعَهٗ ۙஅவருடன்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَاஇல்லைطَاقَةَசக்திلَنَاநமக்குالْیَوْمَஇன்றுبِجَالُوْتَஜாலூத்தையும்وَ جُنُوْدِهٖ ؕஅவனது படைகளையும்قَالَகூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்یَظُنُّوْنَஉறுதியாக நம்புகிறார்களோاَنَّهُمْநிச்சயமாக தாங்கள்مُّلٰقُواசந்திப்பவர்கள் என்றுاللّٰهِ ۙஅல்லாஹ்வைكَمْஎத்தனையோمِّنْஉள்ளفِئَةٍஒரு கூட்டம்قَلِیْلَةٍசிறியغَلَبَتْவெற்றி பெற்றுள்ளதுفِئَةًஒரு கூட்டத்தைكَثِیْرَةًۢபெரியبِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்مَعَஉடன் இருக்கிறான்الصّٰبِرِیْنَபொறுமையாளர்களுடன்
Fபலம்மா Fபஸல தாலூது Bபில்ஜுனூதி கால இன்னல் லாஹ முBப்தலீகும் Bபினஹரின் Fபமன் ஷரிBப மின்ஹு Fபலய்ஸ மின்னீ வ மல்லம் யத்'அம்ஹு Fப இன்னஹூ மின்னீ இல்லா மனிக் தரFப குர்Fபதம் Bபியதிஹ்; FபஷரிBபூ மின்ஹு இல்லா கலீலம்மின்ஹும்; Fபலம்மா ஜாவZஜஹூ ஹுவ வல்லதீன ஆமனூ ம'அஹூ காலூ லா தாகத லனல் யவ்ம Bபி ஜாலூத வ ஜுனூதிஹ்; காலல்லதீன யளுன்னூன அன்னஹும் முலாகுல் லாஹி கம் மின் Fபி'அதின் கலீலதின் கலBபத் Fபி'அதன் கதீரதம் Bபி இத்னில் லாஹ்; வல்லாஹும'அஸ் ஸாBபிரீன்
பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்; பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) “ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை” என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
وَلَمَّا بَرَزُوْا لِجَالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟ؕ
وَ لَمَّاமேலும் எப்பொழுதுبَرَزُوْاஅவர்கள் எதிர்கொண்டார்களோلِجَالُوْتَஜாலூத்தையும்وَ جُنُوْدِهٖஅவனுடைய படைகளையும்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவாاَفْرِغْபொழிவாயாகعَلَیْنَاஎங்கள் மீதுصَبْرًاபொறுமையைوَّ ثَبِّتْமேலும் நிலைநிறுத்துவாயாகاَقْدَامَنَاஎங்கள் பாதங்களைوَ انْصُرْنَاமேலும் எங்களுக்கு உதவி செய்வாயாகعَلَیஎதிராகالْقَوْمِகூட்டத்தாருக்குالْكٰفِرِیْنَؕநிராகரிக்கும்
வ லம்மா BபரZஜூ லிஜாலூத வ ஜுனூதிஹீ காலூ ரBப்Bபனா அFப்ரிக் 'அலய்னா ஸBப்ர(ன்)வ் வ தBப்Bபித் அக்தாமனா வன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.
فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ۫ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا یَشَآءُ ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ ۙ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰكِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟
فَهَزَمُوْهُمْஎனவே அவர்கள் அவர்களைத் தோற்கடித்தார்கள்بِاِذْنِஅனுமதியால்اللّٰهِ ۙ۫அல்லாஹ்வின்وَ قَتَلَமேலும் கொன்றார்دَاوٗدُதாவூத்جَالُوْتَஜாலூத்தைوَ اٰتٰىهُமேலும் அவருக்கு வழங்கினான்اللّٰهُஅல்லாஹ்الْمُلْكَஆட்சியைوَ الْحِكْمَةَமேலும் ஞானத்தைوَ عَلَّمَهٗமேலும் அவருக்குக் கற்றுக்கொடுத்தான்مِمَّاஎவற்றிலிருந்துیَشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ لَوْ لَاஇன்னும் இல்லாவிட்டால்دَفْعُதடுப்பதுاللّٰهِஅல்லாஹ்النَّاسَமனிதர்களைبَعْضَهُمْஅவர்களில் சிலரைبِبَعْضٍ ۙசிலரைக் கொண்டுلَّفَسَدَتِநிச்சயமாகக் கெட்டுப்போயிருக்கும்الْاَرْضُபூமிوَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்ذُوْஉடையவன்فَضْلٍஅருட்கொடைعَلَیமீதுالْعٰلَمِیْنَஅகிலத்தாரின்
FபஹZஜமூஹும் Bபி இத்னில்லாஹி வ கதல தாவூது ஜாலூத வ ஆதாஹுல் லாஹுல்முல்க வல் ஹிக்மத வ 'அல்லமஹூ மிம்மா யஷா'; வ லவ் லா தFப்'உல்லாஹின் னாஸ Bபஃளஹும் BபிBபஃளில் லFபஸததில் அர்ளு வ லாகின்னல் லாஹ தூ Fபள்லின் 'அலல்'ஆலமீன்
இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
وَاِسْمٰعِیْلَ وَالْیَسَعَ وَیُوْنُسَ وَلُوْطًا ؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீலையும்وَ الْیَسَعَஇன்னும் அல்யஸஃவையும்وَ یُوْنُسَஇன்னும் யூனுஸையும்وَ لُوْطًا ؕஇன்னும் லூத்தையும்وَ كُلًّاஇன்னும் அனைவரையும்فَضَّلْنَاநாம் மேன்மையாக்கினோம்عَلَیவிடالْعٰلَمِیْنَۙஅகிலத்தாரை
வ இஸ்மா'ஈல வல் யஸ'அ வ யூனுஸ வ லூதா; வ குல்லன் Fபள்ளல்னா 'அலல் 'ஆலமீன்
இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟
وَ لُوْطًاஇன்னும் லூத்தையும்اِذْபோதுقَالَஅவர் கூறினார்لِقَوْمِهٖۤதன் சமுதாயத்தாரிடம்اَتَاْتُوْنَநீங்கள் செய்கிறீர்களா?الْفَاحِشَةَமானக்கேடான செயலைمَاஇல்லைسَبَقَكُمْஉங்களுக்கு முந்திبِهَاஇதனைمِنْஇருந்துاَحَدٍஎவரும்مِّنَஇருந்துالْعٰلَمِیْنَஅகிலத்தாரில்
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ அத'தூனல் Fபாஹிஷத மா ஸBபககும் Bபிஹா மின் அஹதிம் மினல் 'ஆலமீன்
மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”
فَلَمَّا رَاٰۤ اَیْدِیَهُمْ لَا تَصِلُ اِلَیْهِ نَكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً ؕ قَالُوْا لَا تَخَفْ اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمِ لُوْطٍ ۟ؕ
فَلَمَّاஆனால் எப்போதுرَاٰۤஅவர் கண்டாரோاَیْدِیَهُمْஅவர்களின் கைகள்لَاஇல்லைتَصِلُசென்றடையاِلَیْهِஅதன்பால்نَكِرَهُمْஅவர்களை அவர் அந்நியமாகக் கருதினார்وَ اَوْجَسَமேலும் அவர் உணர்ந்தார்مِنْهُمْஅவர்களிடமிருந்துخِیْفَةً ؕஓர் அச்சத்தைقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَاவேண்டாம்تَخَفْபயப்படاِنَّاۤநிச்சயமாக நாங்கள்اُرْسِلْنَاۤஅனுப்பப்பட்டிருக்கிறோம்اِلٰیபால்قَوْمِசமுதாயத்தின்لُوْطٍؕலூத்துடைய
Fபலம்மா ர ஆ அய்தியஹும் லா தஸிலு இலய்ஹி னகிரஹும் வ அவ்ஜஸ மின்ஹும் கீFபஹ்; காலூ லா தகFப் இன்னா உர்ஸில்னா இலா கவ்மி லூத்
ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِیْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰی یُجَادِلُنَا فِیْ قَوْمِ لُوْطٍ ۟ؕ
فَلَمَّاஆகவே, எப்போதுذَهَبَநீங்கியதோعَنْவிட்டுاِبْرٰهِیْمَஇப்ராஹீமைالرَّوْعُஅச்சம்وَ جَآءَتْهُமேலும் அவருக்கு வந்ததோالْبُشْرٰیநற்செய்திیُجَادِلُنَاநம்மிடம் விவாதிக்கலானார்فِیْகுறித்துقَوْمِசமூகத்தாரைப்لُوْطٍؕலூத்தின்
Fபலம்மா தஹBப அன் இBப்ராஹீமர் ரவ்'உ வ ஜா'அத் ஹுல் Bபுஷ்ரா யுஜாதிலுனா Fபீ கவ்மி லூத்
(இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
وَلَمَّا جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِیْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالَ هٰذَا یَوْمٌ عَصِیْبٌ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுجَآءَتْவந்தார்களோرُسُلُنَاநம்முடைய தூதர்கள்لُوْطًاலூத்திடம்سِیْٓءَஅவர் வருத்தமடைந்தார்بِهِمْஅவர்களைக் குறித்துوَ ضَاقَமேலும் அவர் நெருக்கமுற்றார்بِهِمْஅவர்களால்ذَرْعًاமனதளவில்وَّ قَالَமேலும் அவர் கூறினார்هٰذَاஇதுیَوْمٌஒரு நாள்عَصِیْبٌகடுமையான
வ லம்மா ஜா'அத் ருஸுலுனா லூதன் ஸீ'அ Bபிஹிம் வ ளாக Bபிஹிம் தர்'அ(ன்)வ் வ கால ஹாதா யவ்முன் 'அஸீBப்
நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.
وَجَآءَهٗ قَوْمُهٗ یُهْرَعُوْنَ اِلَیْهِ ؕ وَمِنْ قَبْلُ كَانُوْا یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ ؕ قَالَ یٰقَوْمِ هٰۤؤُلَآءِ بَنَاتِیْ هُنَّ اَطْهَرُ لَكُمْ فَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ فِیْ ضَیْفِیْ ؕ اَلَیْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِیْدٌ ۟
وَ جَآءَهٗமேலும் அவரிடம் வந்தார்கள்قَوْمُهٗஅவருடைய சமூகத்தினர்یُهْرَعُوْنَவிரைந்து வந்தவர்களாகاِلَیْهِ ؕஅவரிடம்وَ مِنْமேலும்قَبْلُமுன்னிருந்தேكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்கள்السَّیِّاٰتِ ؕதீய செயல்களைقَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேهٰۤؤُلَآءِஇவர்கள்بَنَاتِیْஎன் புதல்விகள்هُنَّஅவர்கள்اَطْهَرُமிகத் தூய்மையானவர்கள்لَكُمْஉங்களுக்குفَاتَّقُواஎனவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ لَاமேலும் வேண்டாம்تُخْزُوْنِஎன்னை அவமானப்படுத்தாதீர்கள்فِیْவிஷயத்தில்ضَیْفِیْ ؕஎன் விருந்தினர்கள்اَلَیْسَஇல்லையாمِنْكُمْஉங்களில்رَجُلٌஒரு மனிதர்رَّشِیْدٌவிவேகமுள்ளவர்
வ ஜா'அஹூ கவ்முஹூ யுஹ்ர'ஊன இலய்ஹி வ மின் கBப்லு கானூ யஃமலூனஸ் ஸய்யிஆத்; கால யா கவ்மி ஹா'உலா'இ Bபனாதீ ஹுன்ன அத்ஹரு லகும் Fபத்தகுல் லாஹ வலா துக்Zஜூனி Fபீ ளய்Fபீ அலய்ஸ மின்கும் ரஜுலுர் ரஷீத்
அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.
وَیٰقَوْمِ لَا یَجْرِمَنَّكُمْ شِقَاقِیْۤ اَنْ یُّصِیْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ ؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِیْدٍ ۟
وَ یٰقَوْمِஎன் சமூகத்தாரே!لَاவேண்டாம்یَجْرِمَنَّكُمْஉங்களை தூண்டشِقَاقِیْۤஎன் மீதான பகைமைاَنْஎன்றுیُّصِیْبَكُمْஉங்களை தாக்குவதற்குمِّثْلُபோன்றதுمَاۤஎதுاَصَابَதாக்கியதோقَوْمَசமூகத்திற்குنُوْحٍநூஹ்اَوْஅல்லதுقَوْمَசமூகத்திற்குهُوْدٍஹூத்اَوْஅல்லதுقَوْمَசமூகத்திற்குصٰلِحٍ ؕஸாலிஹ்وَ مَاமேலும் இல்லைقَوْمُசமூகம்لُوْطٍலூத்مِّنْكُمْஉங்களை விட்டுبِبَعِیْدٍதொலைவில்
வ யா கவ்மி லா யஜ்ரி மன்னகும் ஷிகாகீ அய் யுஸீBபகும் மித்லு மா அஸாBப கவ்ம னூஹின் அவ் கவ்ம ஹூதின் அவ் கவ்ம ஸாலிஹ்; வமா கவ்மு லூதிம் மின்கும் BபிBப'ஈத்
“என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!
اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
اِلَّاۤதவிரاٰلَகுடும்பத்தாரைلُوْطٍ ؕலூத்தின்اِنَّاநிச்சயமாக நாம்لَمُنَجُّوْهُمْஅவர்களைக் காப்பாற்றுவோம்اَجْمَعِیْنَۙஅனைவரையும்
இல்லா ஆல லூத்; இன்னா லமுனஜ்ஜூஹும் அஜ்ம'ஈன்
லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.
اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِیْنَ ۟۠
اِلَّاதவிரامْرَاَتَهٗஅவரது மனைவியைقَدَّرْنَاۤ ۙநாம் நிர்ணயித்துவிட்டோம்اِنَّهَاநிச்சயமாக அவள்لَمِنَநிச்சயமாகالْغٰبِرِیْنَ۠பின்தங்கியவர்களில்
இல்லம் ர அதஹூ கத்தர்னா இன்னஹா லமினல் காBபிரீன்
ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்” என்று (வானவர்கள்) கூறினார்கள்.  
فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ لْمُرْسَلُوْنَ ۟ۙ
فَلَمَّاஆகவே எப்போதுجَآءَவந்தார்களோاٰلَகுடும்பத்தாரிடம்لُوْطِலூத்துடையلْمُرْسَلُوْنَۙதூதர்கள்
Fபலம்ம ஜா'அ ஆல லூதினில் முர்ஸலூன்
(இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.
قَالَ اِنَّكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟
قَالَகூறினார்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்قَوْمٌஒரு கூட்டத்தினர்مُّنْكَرُوْنَஅறிமுகமில்லாதவர்கள்
கால இன்னகும் கவ்மும் முன்கரூன்
(அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (லூத்) சொன்னார்,
وَجَآءَ اَهْلُ الْمَدِیْنَةِ یَسْتَبْشِرُوْنَ ۟
وَ جَآءَமேலும் வந்தார்கள்اَهْلُமக்கள்الْمَدِیْنَةِநகரத்தின்یَسْتَبْشِرُوْنَமகிழ்ச்சியடைந்தவர்களாக
வ ஜா'அ அஹ்லுல் மதீனதி யஸ்தBப்ஷிரூன்
(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
قَالَ اِنَّ هٰۤؤُلَآءِ ضَیْفِیْ فَلَا تَفْضَحُوْنِ ۟ۙ
قَالَகூறினார்اِنَّநிச்சயமாகهٰۤؤُلَآءِஇவர்கள்ضَیْفِیْஎன் விருந்தினர்கள்فَلَاஆகவேتَفْضَحُوْنِۙஎன்னை அவமானப்படுத்தாதீர்கள்
கால இன்ன ஹா'உலா'இ ளய்Fபீ Fபலா தFப்ளஹூன்
(லூத் வந்தவர்களை நோக்கி:) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;”
وَنَجَّیْنٰهُ وَلُوْطًا اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا لِلْعٰلَمِیْنَ ۟
وَ نَجَّیْنٰهُமேலும் நாம் அவரைக் காப்பாற்றினோம்وَ لُوْطًاலூத்தையும்اِلَیநோக்கிالْاَرْضِபூமியைالَّتِیْஎத்தகையதென்றால்بٰرَكْنَاநாம் பாக்கியம் அளித்தோமோفِیْهَاஅதில்لِلْعٰلَمِیْنَஅகிலத்தாருக்காக
வ னஜ்ஜய்னாஹு வ லூதன் இலல் அர்ளில் லதீ Bபாரக்னா Fபீஹா லில் 'ஆலமீன்
இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.
وَلُوْطًا اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّیْنٰهُ مِنَ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ تَّعْمَلُ الْخَبٰٓىِٕثَ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فٰسِقِیْنَ ۟ۙ
وَ لُوْطًاமேலும் லூத்தையும்اٰتَیْنٰهُநாம் அவருக்கு வழங்கினோம்حُكْمًاஞானத்தைوَّ عِلْمًاமேலும் அறிவையும்وَّ نَجَّیْنٰهُமேலும் நாம் அவரைக் காப்பாற்றினோம்مِنَஇருந்துالْقَرْیَةِஅந்த ஊரில்الَّتِیْஎதுكَانَتْஇருந்ததோتَّعْمَلُசெய்து கொண்டிருந்ததோالْخَبٰٓىِٕثَ ؕஅருவருப்பான செயல்களைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَوْمَகூட்டத்தினராகسَوْءٍதீயفٰسِقِیْنَۙவரம்பு மீறுபவர்களாக
வ லூதன் ஆதய்னாஹு ஹுக்ம(ன்)வ் வ 'இல்ம(ன்)வ் வ னஜ்ஜய்னாஹு மினல் கர்யதில் லதீ கானத் தஃமலுல் கBபா'இத்; இன்னஹும் கானூ கவ்ம ஸவ்'இன் Fபாஸிகீன்
இன்னும், லூத்தையும் (நபியாக்கி) - நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
وَقَوْمُ اِبْرٰهِیْمَ وَقَوْمُ لُوْطٍ ۟ۙ
وَ قَوْمُமற்றும் சமூகத்தாரும்اِبْرٰهِیْمَஇப்ராஹீமின்وَ قَوْمُமற்றும் சமூகத்தாரும்لُوْطٍۙலூத்தின்
வ கவ்மு இBப்ராஹீம வ கவ்மு லூத்
(இவ்வாறே) இப்ராஹீமுடைய சமூகத்தினரும் லூத்துடைய சமூகத்தினரும் (பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்).
كَذَّبَتْ قَوْمُ لُوْطِ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُமக்கள்لُوْطِலூத்துடையلْمُرْسَلِیْنَۚۖதூதர்களை
கத்தBபத் கவ்மு லூதினில் முர்ஸலீன்
லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْஅப்போதுقَالَகூறினார்لَهُمْஅவர்களிடம்اَخُوْهُمْஅவர்களின் சகோதரர்لُوْطٌலூத்اَلَاநீங்கள்تَتَّقُوْنَۚஅஞ்சமாட்டீர்களா
இத் கால லஹும் அகூஹும் லூதுன் அலா தத்தகூன்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது,
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰلُوْطُ لَتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَىِٕنْநிச்சயமாகلَّمْஇல்லைتَنْتَهِநீ விலகிக்கொள்ளாவிட்டால்یٰلُوْطُலூத்தே!لَتَكُوْنَنَّநிச்சயமாக நீ ஆகிவிடுவாய்مِنَஇருந்துالْمُخْرَجِیْنَவெளியேற்றப்பட்டவர்களில்
கலூ ல'இல் லம் தன்தஹி யா லூது லதகூனன்ன மினல் முக்ரஜீன்
அதற்கவர்கள்; “லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்” எனக் கூறினர்.
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟
وَ لُوْطًاலூத்தையும்اِذْபோதுقَالَஅவர் கூறினார்لِقَوْمِهٖۤதன் சமுதாயத்தாரிடம்اَتَاْتُوْنَநீங்கள் செய்கிறீர்களாالْفَاحِشَةَமானக்கேடான செயலைوَ اَنْتُمْநீங்கள்تُبْصِرُوْنَபார்த்துக்கொண்டே
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ அதாதூனல் Fபா ஹிஷத வ அன்தும் துBப்ஸிரூன்
லூத்தையும் (நினைவு கூர்வீராக!) அவர் தம் சமூகத்தாரிடம்; “நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா?” என்று கூறினார்.
فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْۤا اٰلَ لُوْطٍ مِّنْ قَرْیَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟
فَمَاஎனவே இல்லைكَانَஇருந்ததுجَوَابَபதில்قَوْمِهٖۤஅவருடைய சமூகத்தாரின்اِلَّاۤதவிரاَنْஎன்றுقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَخْرِجُوْۤاவெளியேற்றுங்கள்اٰلَகுடும்பத்தாரைلُوْطٍலூத்தின்مِّنْஇருந்துقَرْیَتِكُمْ ۚஉங்கள் ஊர்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اُنَاسٌமனிதர்கள்یَّتَطَهَّرُوْنَதூய்மை பேணுபவர்கள்
Fபமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலூ அக்ரிஜூ ஆலா லூதிம் மின் கர்யதிகும் இன்னஹும் உனாஸு(ன்)ய் யததஹ்ஹரூன்
அதற்கவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தாரிடம்) “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே!” என்று (பரிகாசமாகக்) கூறினார்களே தவிர வேறொரு பதிலும் அவர்களிடமில்லை.
فَاٰمَنَ لَهٗ لُوْطٌ ۘ وَقَالَ اِنِّیْ مُهَاجِرٌ اِلٰی رَبِّیْ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
فَاٰمَنَஎனவே ஈமான் கொண்டார்لَهٗஅவருக்குلُوْطٌ ۘலூத்وَ قَالَமேலும் அவர் கூறினார்اِنِّیْநிச்சயமாக நான்مُهَاجِرٌஹிஜ்ரத் செய்பவன்اِلٰیநோக்கிرَبِّیْ ؕஎன் இறைவனைاِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
Fப ஆமன லஹூ லூத்; வ கால இன்னீ முஹஜிருன் இலா ரBப்Bபீ இன்னஹூ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
(இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம்): “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார்.
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اِنَّكُمْ لَتَاْتُوْنَ الْفَاحِشَةَ ؗ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟
وَ لُوْطًاஇன்னும் லூத்தையும்اِذْபோதுقَالَஅவர் கூறினார்لِقَوْمِهٖۤதன் சமூகத்தாரிடம்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَتَاْتُوْنَநிச்சயமாகச் செய்கிறீர்கள்الْفَاحِشَةَ ؗமானக்கேடான செயலைمَاஇல்லைسَبَقَكُمْஉங்களுக்கு முந்தினார்بِهَاஅதைمِنْஎந்தاَحَدٍஒருவரும்مِّنَஇருந்துالْعٰلَمِیْنَஅகிலத்தாரில்
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ இன்னகும் ல த'தூனல் Fபாஹிஷத மா ஸBபககும் Bபிஹா மின் அஹதின் மினல் 'ஆலமீன்
மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
قَالَ اِنَّ فِیْهَا لُوْطًا ؕ قَالُوْا نَحْنُ اَعْلَمُ بِمَنْ فِیْهَا ؗۥ لَنُنَجِّیَنَّهٗ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗۗ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
قَالَகூறினார்اِنَّநிச்சயமாகفِیْهَاஅதில்لُوْطًا ؕலூத்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَحْنُநாம்اَعْلَمُநன்கு அறிந்தவர்கள்بِمَنْயார் இருக்கிறார்களோ அவர்களைப் பற்றிفِیْهَا ؗۥஅதில்لَنُنَجِّیَنَّهٗநிச்சயமாக நாம் அவரைக் காப்பாற்றுவோம்وَ اَهْلَهٗۤமேலும் அவருடைய குடும்பத்தினரையும்اِلَّاதவிரامْرَاَتَهٗ ؗۗஅவருடைய மனைவியைத்كَانَتْஅவள் ஆகிவிட்டாள்مِنَசேர்ந்தவளாகالْغٰبِرِیْنَபின்தங்கியவர்களில்
கால இன்ன Fபீஹா லூதா; காலூ னஹ்னு அஃலமு Bபிமன் Fபீஹா லனுனஜ்ஜியன்னஹூ வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கானத் மினல் காBபிரீன்
“நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்ராஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
وَلَمَّاۤ اَنْ جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِیْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالُوْا لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۫ اِنَّا مُنَجُّوْكَ وَاَهْلَكَ اِلَّا امْرَاَتَكَ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
وَ لَمَّاۤமேலும் எப்போதுاَنْஎன்றுجَآءَتْவந்தார்களோرُسُلُنَاநம் தூதர்கள்لُوْطًاலூத்திடம்سِیْٓءَஅவர் வருத்தமடைந்தார்بِهِمْஅவர்களால்وَ ضَاقَமேலும் சங்கடப்பட்டார்بِهِمْஅவர்களைக் குறித்துذَرْعًاமனதளவில்وَّ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்لَاவேண்டாம்تَخَفْபயப்படوَ لَاமேலும் வேண்டாம்تَحْزَنْ ۫கவலைப்படاِنَّاநிச்சயமாக நாம்مُنَجُّوْكَஉம்மைக் காப்பாற்றுபவர்கள்وَ اَهْلَكَமேலும் உம் குடும்பத்தாரையும்اِلَّاதவிரامْرَاَتَكَஉம் மனைவியைத்كَانَتْஅவள் ஆகிவிட்டாள்مِنَஇருந்துالْغٰبِرِیْنَபின்தங்கியவர்களில்
வ லம்மா அன் ஜா'அத் ருஸுலுனா லூதன் ஸீ'அ Bபிஹிம் வ ளாக Bபிஹிம் தர்'அ(ன்)வ் வ காலூ லா தகFப் வலா தஹ்Zஜன் இன்னா முனஜ்ஜூக வ அஹ்லக இல்லம் ர அதக கானத் மினல் காBபிரீன்
இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
وَ اِنَّமேலும் நிச்சயமாகلُوْطًاலூத்தும்لَّمِنَநிச்சயமாகالْمُرْسَلِیْنَؕதூதர்களில் ஒருவராவார்
வ இன்ன லூதல் லமினல் முர்ஸலீன்
மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
اِلَّا عَجُوْزًا فِی الْغٰبِرِیْنَ ۟
اِلَّاதவிரعَجُوْزًاஒரு கிழவிفِیஇல்الْغٰبِرِیْنَபின்தங்கியவர்கள்
இல்லா 'அஜூZஜன் Fபில் காBபிரீன்
பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.
وَثَمُوْدُ وَقَوْمُ لُوْطٍ وَّاَصْحٰبُ لْـَٔیْكَةِ ؕ اُولٰٓىِٕكَ الْاَحْزَابُ ۟
وَ ثَمُوْدُமேலும் ஸமூதுوَ قَوْمُமேலும் சமூகத்தாரும்لُوْطٍலூத்துடையوَّ اَصْحٰبُமேலும் வாசிகளும்لْـَٔیْكَةِ ؕஐக்கா வனத்தின்اُولٰٓىِٕكَஇவர்களேالْاَحْزَابُபெரும் படைகள்
வ தமூது வ கவ்மு லூதி(ன்)வ் வ அஸ்ஹாBபுல் 'அய்கஹ்; உலா'இகல் அஹ்ZஜாBப்
(இவ்வாறு) “ஸமூது”ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.
وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍ ۟ۙ
وَ عَادٌஇன்னும் ஆது கூட்டத்தினரும்وَّ فِرْعَوْنُஃபிர்அவ்னும்وَ اِخْوَانُஇன்னும் சகோதரர்களும்لُوْطٍۙலூத்துடைய
வ 'ஆது(ன்)வ் வ Fபிர்'அவ்னு வ இக்வானு லூத்
“ஆது” (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).
وَالْمُؤْتَفِكَةَ اَهْوٰی ۟ۙ
وَ الْمُؤْتَفِكَةَதலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்களையும்اَهْوٰیۙஅவன் வீழ்த்தினான்
வல் மு'தFபிகத அஹ்வா
அன்றியும், அவனே (லூத் சமூகத்தார் வாழ்ந்திருந்த) ஊர்களான முஃதஃபிகாவையும் அழித்தான்.
كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ بِالنُّذُرِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُசமுதாயம்لُوْطٍۭலூத்தின்بِالنُّذُرِஎச்சரிக்கைகளை
கத்தBபத் கவ்மு லூதின் Bபின்னுதுர்
லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ نَجَّیْنٰهُمْ بِسَحَرٍ ۟ۙ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاஅனுப்பினோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுحَاصِبًاகல்மாரியைاِلَّاۤதவிரاٰلَகுடும்பத்தாரைلُوْطٍ ؕலூத்தின்نَجَّیْنٰهُمْஅவர்களை நாம் காப்பாற்றினோம்بِسَحَرٍۙவிடியற்காலையில்
இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ஹாஸிBபன் இல்லா ஆல லூதின் னஜ்ஜய்னாஹும் Bபிஸஹர்
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்; விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.
ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّامْرَاَتَ لُوْطٍ ؕ كَانَتَا تَحْتَ عَبْدَیْنِ مِنْ عِبَادِنَا صَالِحَیْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ یُغْنِیَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَیْـًٔا وَّقِیْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِیْنَ ۟
ضَرَبَஎடுத்துக்காட்டுகிறான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஓர் உதாரணத்தைلِّلَّذِیْنَஅவர்களுக்குكَفَرُواநிராகரித்தார்களோامْرَاَتَமனைவியைنُوْحٍநூஹின்وَّ امْرَاَتَமற்றும் மனைவியைلُوْطٍ ؕலூத்தின்كَانَتَاஅவ்விருவரும் இருந்தனர்تَحْتَகீழ்عَبْدَیْنِஇரு அடியார்களின்مِنْஉள்ளعِبَادِنَاநம் அடியார்களில்صَالِحَیْنِநல்லவர்களானفَخَانَتٰهُمَاஆனால் அவ்விருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர்فَلَمْஎனவே இல்லைیُغْنِیَاஅவர்கள் இருவரும் காப்பாற்றعَنْهُمَاஅவ்விருவரையும்مِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்شَیْـًٔاஎதனையும்وَّ قِیْلَமேலும் சொல்லப்பட்டதுادْخُلَاநீங்கள் இருவரும் நுழையுங்கள்النَّارَநரக நெருப்பில்مَعَஉடன்الدّٰخِلِیْنَநுழைபவர்களுடன்
ளரBபல் லாஹு மதலல் லில்லதீன கFபரும் ர அத னூஹி(ன்)வ் வம்ர அத லூத், கானதா தஹ்த 'அBப்தய்னி மின் 'இBபாதினா ஸாலிஹய்னி Fபகானதாஹுமா Fபலம் யுக்னியா 'அன்ஹுமா மினல் லாஹி ஷய் அ(ன்)வ்-வ கீலத் குலன் னார ம'அத் தாகிலீன்
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.