">

தேடல் வார்த்தை: "ஹாரூன"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

23 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 23)

وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اٰیَةَ مُلْكِهٖۤ اَنْ یَّاْتِیَكُمُ التَّابُوْتُ فِیْهِ سَكِیْنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَبَقِیَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰی وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰٓىِٕكَةُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟۠
وَقَالَஇன்னும் கூறினார்لَهُمْஅவர்களுக்குنَبِيُّهُمْஅவர்களுடைய நபிاِنَّநிச்சயமாகاٰيَةَஅத்தாட்சிمُلْکِهٖۤஅவருடைய ஆட்சிக்குاَنْ يَّاْتِيَکُمُஉங்களிடம் வருவதுالتَّابُوْتُபேழைفِيْهِஅதில்سَکِيْنَةٌஆறுதல்مِّنْ رَّبِّکُمْஉங்கள் இறைவனிடமிருந்துوَبَقِيَّةٌஇன்னும் மீதப் பொருட்கள்مِّمَّاஎதிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றார்اٰلُ مُوْسٰىமூஸாவின்குடும்பத்தார்وَاٰلُஇன்னும் குடும்பத்தார்هٰرُوْنَஹாரூனுடையتَحْمِلُهُஅதைச் சுமப்பா(ர்க)ள்الْمَلٰٓٮِٕكَةُ‌ ؕவானவர்கள்اِنَّ فِىْ ذٰلِكَநிச்சயமாக/அதில்لَاٰيَةًதிட்டமாக ஓர் அத்தாட்சிلَّـکُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
வ கால லஹும் னBபிய்யுஹும் இன்ன ஆயத முல்கிஹீ அய் யாதியகுமுத் தாBபூது Fபீஹி ஸகீனதும்மிர் ரBப்Bபிகும் வ Bபகிய்யதும்மிம்மா தரக ஆலு மூஸா வ ஆலு ஹாரூன தஹ்மிலுஹுல் மலா'இகஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லகும் இன் குன்தும் மு'மினீன்
இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார்.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குكَمَاۤபோன்றேاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلٰى نُوْحٍநூஹுக்குوَّالنَّبِيّٖنَஇன்னும் நபிமார்களுக்குمِنْۢ بَعْدِهٖ‌ ۚஅவருக்குப் பின்னர்وَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلٰٓى اِبْرٰهِيْمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَعِيْسٰىஇன்னும் ஈஸாوَاَيُّوْبَஇன்னும் அய்யூப்وَيُوْنُسَஇன்னும் யூனுஸ்وَهٰرُوْنَஇன்னும் ஹாரூனوَسُلَيْمٰنَ‌ ۚஇன்னும் ஸுலைமான்وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًا‌ஸபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَوَهَبْنَاஇன்னும் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَيَعْقُوْبَ‌ؕஇன்னும் யஃகூபைكُلًّاஎல்லோரையும்هَدَيْنَا ۚநேர்வழி செலுத்தினோம்وَنُوْحًاஇன்னும் நூஹைهَدَيْنَاநேர்வழி செலுத்தினோம்مِنْ قَبْلُ‌இதற்கு முன்னர்وَمِنْஇன்னும் இருந்துذُرِّيَّتِهٖஅவருடைய சந்ததிدَاوٗدَதாவூதைوَسُلَيْمٰنَஇன்னும் ஸுலைமானைوَاَيُّوْبَஇன்னும் அய்யூபைوَيُوْسُفَஇன்னும் யூஸýஃபைوَمُوْسٰىஇன்னும் மூஸாவைوَ هٰرُوْنَ‌ؕஇன்னும் ஹறாரூனைوَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىகூலிகொடுக்கிறோம்الْمُحْسِنِيْنَۙ‏நல்லறம்புரிவோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
رَبِّஇறைவனானمُوْسٰىமூஸாوَهٰرُوْنَ‏இன்னும் ஹாரூனுடைய
ரBப்Bபி மூஸா வ ஹாரூன
“அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூறினார்கள்.
وَوٰعَدْنَا مُوْسٰی ثَلٰثِیْنَ لَیْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِیْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِیْنَ لَیْلَةً ۚ وَقَالَ مُوْسٰی لِاَخِیْهِ هٰرُوْنَ اخْلُفْنِیْ فِیْ قَوْمِیْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِیْلَ الْمُفْسِدِیْنَ ۟
وَوٰعَدْنَاவாக்களித்தோம்مُوْسٰىமூஸாவுக்குثَلٰثِيْنَமுப்பதுلَيْلَةًஇரவு(களை)وَّاَتْمَمْنٰهَاஇன்னும் முழுமைப்படுத்தினோம்/அதைبِعَشْرٍபத்து இரவுகளைக் கொண்டுفَتَمَّஆகவே முழுமையடைந்ததுمِيْقَاتُகுறிப்பிட்ட காலம்رَبِّهٖۤஅவருடைய இறைவனின்اَرْبَعِيْنَநாற்பதுلَيْلَةً ۚஇரவு(களாக)وَقَالَகூறினார்مُوْسٰىமூஸாلِاَخِيْهِதன் சகோதரருக்குهٰرُوْنَஹாரூனاخْلُفْنِىْநீர் எனக்கு பிரதிநிதியாக இருفِىْ قَوْمِىْஎன் சமுதாயத்தில்وَاَصْلِحْஇன்னும் சீர்திருத்துوَلَا تَتَّبِعْபின்பற்றாதேسَبِيْلَபாதையைالْمُفْسِدِيْنَ‏விஷமிகளுடைய
வ வா'அத்னா மூஸா தலாதீன லய்லத(ன்)வ் வ அத் மம்னாஹா Bபி'அஷ்ரிம் Fபதம்ம மீகாது ரBப்Bபிஹீ அர்Bப'ஈன லய்லஹ்; வ கால மூஸா லிஅகீஹி ஹாரூனக் லுFப்னீ Fபீ கவ்மீ வ அஸ்லிஹ் வலா தத்தBபிஃ ஸBபீலல் முFப்ஸிதீன்
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!” என்று கூறினார்.
وَلَمَّا رَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِیْ مِنْ بَعْدِیْ ۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ ۚ وَاَلْقَی الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِیْهِ یَجُرُّهٗۤ اِلَیْهِ ؕ قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُوْنِیْ وَكَادُوْا یَقْتُلُوْنَنِیْ ۖؗ فَلَا تُشْمِتْ بِیَ الْاَعْدَآءَ وَلَا تَجْعَلْنِیْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
وَلَمَّاபோதுرَجَعَதிரும்பினார்مُوْسٰٓىமூஸாاِلٰى قَوْمِهٖதன் சமுதாயத்திடம்غَضْبَانَகோபித்தவராகاَسِفًا ۙஆவேசப்பட்டவராக, துக்கித்தவராகقَالَகூறினார்بِئْسَمَاகெட்டுவிட்டது/எதுخَلَفْتُمُوْنِىْநான் சென்றதற்குப்பிறகு செய்தீர்கள்/எனக்குمِنْۢ بَعْدِىْ ۚஎனக்குப் பின்னர்اَعَجِلْتُمْஅவசரப்பட்டீர்களாاَمْرَகட்டளையைرَبِّكُمْ‌ ۚஉங்கள் இறைவனின்وَاَلْقَىஎறிந்தார்الْاَلْوَاحَபலகைகளைوَاَخَذَஇன்னும் பிடித்தார்بِرَاْسِதலையைاَخِيْهِதன் சகோதரனின்يَجُرُّهٗۤஇழுத்தார்/அவரைاِلَيْهِ‌ؕதன் பக்கம்قَالَகூறினார்ابْنَ اُمَّஎன் தாயின் மகனேاِنَّநிச்சயமாகالْـقَوْمَசமுதாயம்اسْتَضْعَفُوْنِىْபலவீனப்படுத்தினர்/என்னைوَكَادُوْاஇன்னும் முற்பட்டனர்يَقْتُلُوْنَنِىْ ۖ கொல்வார்கள்/என்னைفَلَا تُشْمِتْநகைக்கச் செய்யாதீர்بِىَஎன்னைக் கொண்டுالْاَعْدَآءَஎதிரிகளைوَ لَا تَجْعَلْنِىْஆக்கிவிடாதீர்/ என்னைمَعَ الْقَوْمِமக்களுடன்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
வ லம்மா ரஜ'அ மூஸா இலா கவ்மிஹீ கள்Bபான அஸிFபன் கால Bபி'ஸமா கலFப்துமூனீ மின் Bபஃதீ 'அ-'அஜில்தும் அம்ர ரBப்Bபிகும் வ அல்கல் அல்வாஹ வ அகத Bபிர'ஸி அகீஹி யஜுர்ருஹூ இலய்ய்ஹ்; காலBப் ன உம்ம இன்னல் கவ்மஸ் தள்'அFபூனீ வ கதூ யக்து லூனனீ; Fபலா துஷ்மித் Bபியல் அஃதா'அ வலா தஜ்'அல்னீ ம'அல் கவ்மிள் ளாலிமீன்
(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?” என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) “என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) “பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்” இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்” என்று கூறினார்.
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی وَهٰرُوْنَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ بِاٰیٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
ثُمَّபிறகுبَعَثْنَاஅனுப்பினோம்مِنْۢ بَعْدِபின்னர்هِمْஇவர்களுக்குمُّوْسٰமூஸாவைوَهٰرُوْنَஇன்னும் ஹாரூனاِلٰபக்கம்فِرْعَوْنَஃபிர்அவ்ன்وَ مَلَا۟ىِٕهٖஇன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்بِاٰيٰتِنَاநம் அத்தாட்சிகளுடன்فَاسْتَكْبَرُوْاஅவர்கள் கர்வம் கொண்டனர்وَكَانُوْاஇன்னும் இருந்தனர்قَوْمًاசமுதாயமாகمُّجْرِمِيْنَ‏குற்றம் புரிகின்றவர்கள்
தும்ம Bப'அத்னா மின் Bபஃதிஹிம் மூஸா வ ஹாரூன இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Bபி ஆயாதினா Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மன் முஜ்ரிமீன்
இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
یٰۤاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَبُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِیًّا ۟ۖۚ
يٰۤـاُخْتَசகோதரியேهٰرُوْنَஹாரூனுடையمَا كَانَஇருக்கவில்லைاَ بُوْكِஉமது தந்தைامْرَاَ سَوْءٍகெட்டவராகوَّمَا كَانَتْஇருக்கவில்லைاُمُّكِஉமது தாயும்بَغِيًّا‌ ۖ‌ ۚ‏நடத்தைகெட்டவளாக
யா உக்த ஹாரூன மா கான அBபூகிம்ர'அ ஸவ்'இ(ன்)வ் வமா கானத் உம்முகி Bபகிய்யா
ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).
وَوَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِیًّا ۟
وَ وَهَبْنَاஇன்னும் வழங்கினோம்لَهٗஅவருக்குمِنْ رَّحْمَتِنَاۤநமது அருளால்اَخَاهُஅவருடைய சகோதரர்هٰرُوْنَஹாரூனنَبِيًّا‏நபியாக
வ வஹBப்னா லஹூ மிர் ரஹ்மதினா அகாஹு ஹாரூன னBபிய்யா
மேலும், நம்முடைய ரஹ்மத்தில் நின்றும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம்.
هٰرُوْنَ اَخِی ۟ۙ
هٰرُوْنَஹாரூனاَخِى ۙ‏என் சகோதரர்
ஹாரூன அகீ
“என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!
قَالَا رَبَّنَاۤ اِنَّنَا نَخَافُ اَنْ یَّفْرُطَ عَلَیْنَاۤ اَوْ اَنْ یَّطْغٰی ۟
قَالَاஇருவரும் கூறினர்رَبَّنَاۤஎங்கள் இறைவன்اِنَّـنَاநிச்சயமாக நங்கள்نَخَافُபயப்படுகிறோம்اَنْ يَّفْرُطَஅவசரப்படுவதைعَلَيْنَاۤஎங்கள் மீதுاَوْஅல்லதுاَنْ يَّطْغٰى‏வரம்பு மீறுவதை
காலா ரBப்Bபனா இன்னனா னகாFபு அய் யFப்ருத 'அலய்னா அவ் அய் யத்கா
“எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.
فَاُلْقِیَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰی ۟
فَاُلْقِىَஆக, விழுந்தனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்سُجَّدًاசிரம்பணிந்தவர்களாகقَالُوْۤاகூறினார்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِرَبِّஇறைவனைக்கொண்டுهٰرُوْنَஹாரூனوَمُوْسٰى‏இன்னும் மூஸாவுடைய
Fப உல்கியஸ் ஸஹரது ஸுஜ்ஜதன் காலூ ஆமன்னா Bபி ரBப்Bபி ஹாரூன வ மூஸா
(மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
وَلَقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ یٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖ ۚ وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِیْ وَاَطِیْعُوْۤا اَمْرِیْ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகقَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குهٰرُوْنُஹாரூனمِنْ قَبْلُஇதற்கு முன்னர்يٰقَوْمِஎன் சமுதாயமேاِنَّمَا فُتِنْتُمْநிச்சயமாக நீங்கள் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்بِهٖ‌ۚஇதைக் கொண்டுوَاِنَّநிச்சயமாகرَبَّكُمُஉங்கள் இறைவன்الرَّحْمٰنُபேரருளாளன் தான்فَاتَّبِعُوْنِىْஆகவே, என்னைப் பின்பற்றுங்கள்وَاَطِيْعُوْۤاகீழ்ப்படியுங்கள்اَمْرِىْ‏என் கட்டளைக்கு
வ லகத் கால லஹும் ஹாரூனு மின் கBப்லு யா கவ்மி இன்னமா Fபுதின்தும் Bபிஹீ வ இன்ன ரBப்Bபகுமுர் ரஹ்மானு Fபத்தBபி'ஊனீ வ அதீ'ஊ அம்ரீ
இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் “அர்ரஹ்மானே” ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.
قَالَ یٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَیْتَهُمْ ضَلُّوْۤا ۟ۙ
قَالَகூறினார்يٰهٰرُوْنُஹாரூனمَاஎதுمَنَعَكَஉம்மை தடுத்ததுاِذْ رَاَيْتَهُمْநீர் அவர்களைப் பார்த்தபோதுضَلُّوْٓا ۙ‏அவர்கள் வழிதவறி விட்டார்கள்
கால யா ஹாரூனு மா மன 'அக இத் ர அய்தஹும் ளல்லூ
(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
قَالَ یَبْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْیَتِیْ وَلَا بِرَاْسِیْ ۚ اِنِّیْ خَشِیْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَیْنَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِیْ ۟
قَالَஅவர் கூறினார்يَابْنَؤُمَّஎன் தாயின் மகனேلَا تَاْخُذْபிடிக்காதேبِلِحْيَتِىْஎனது தாடியையும்وَلَا بِرَاْسِىْ‌ۚஎன் தலையையும்اِنِّىْ خَشِيْتُநிச்சயமாக நான் பயந்தேன்اَنْ تَقُوْلَநீர் கூறிவிடுவதைفَرَّقْتَபிரித்து விட்டாய்بَيْنَமத்தியில்بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களுக்குوَلَمْ تَرْقُبْநீர் கவனிக்காமல்قَوْلِىْ‏என் கூற்றை
கால யBப்ன'உம்ம லா த'குத் Bபி லிஹ்யதீ வலா Bபி ர'ஸீ இன்னீ கஷீது அன் தகூல Fபர்ரக்த Bபய்ன Bபனீ இஸ்ரா'ஈல வ லம் தர்குBப் கவ்லீ
(இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِیَآءً وَّذِكْرًا لِّلْمُتَّقِیْنَ ۟ۙ
وَلَـقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسٰىமூஸாوَهٰرُوْنَஇன்னும் ஹாரூனுக்குالْفُرْقَانَபிரித்தறிவிக்கக்கூடியوَضِيَآءًவெளிச்சத்தைوَّذِكْرًاஓர் அறிவுரையைلِّـلْمُتَّقِيْنَۙ‏இறையச்ச முள்ளவர்களுக்குரிய
வ லகத் ஆதய்னா மூஸா வ ஹாரூனல் Fபுர்கான வ ளியா'அ(ன்)வ் வ திக்ரல் லில்முத்தகீன்
இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
ثُمَّ اَرْسَلْنَا مُوْسٰی وَاَخَاهُ هٰرُوْنَ ۙ۬ بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
ثُمَّபிறகுاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰىமூஸாவையும்وَاَخَاهُஇன்னும் அவருடையசகோதரர்هٰرُوْنَ ۙஹாரூனையும்بِاٰيٰتِنَاநமது அத்தாட்சிகளைக் கொண்டும்وَسُلْطٰنٍஇன்னும் ஆதாரத்தைக் கொண்டும்مُّبِيْنٍۙ‏தெளிவான
தும்ம அர்ஸல்னா மூஸா வ அகாஹு ஹாரூன Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்-
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗۤ اَخَاهُ هٰرُوْنَ وَزِیْرًا ۟ۚۖ
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاகொடுத்தோம்مُوْسَىமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைوَجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்مَعَهٗۤஅவருடன்اَخَاهُஅவரது சகோதரர்هٰرُوْنَஹாரூனوَزِيْرًا‌ ۖ‌ ۚ‏உதவியாளராக
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப வ ஜ'அல்னா ம'அஹூ அகாஹு ஹாரூன வZஜீரா
மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.
وَیَضِیْقُ صَدْرِیْ وَلَا یَنْطَلِقُ لِسَانِیْ فَاَرْسِلْ اِلٰی هٰرُوْنَ ۟
وَيَضِيْقُஇன்னும் நெருக்கடிக்குள்ளாகிவிடும்صَدْرِىْஎன் நெஞ்சம்وَلَا يَنْطَلِقُஇன்னும் பேசாதுلِسَانِىْஎன் நாவுفَاَرْسِلْஆகவே, நீ அனுப்புاِلٰى هٰرُوْنَ‏ஹாரூனுக்கு
வ யளீகு ஸத்ரீ வலா யன்தலிகு லிஸானீ Fப அர்ஸில் இலா ஹாரூன
“என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது; ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
رَبِّஇறைவனைمُوْسٰىமூஸாوَهٰرُوْنَ‏இன்னும் ஹாரூனுடைய
ரBப்Bபி மூஸா வ ஹாரூன
“அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.” என்று கூறினர்.
وَاَخِیْ هٰرُوْنُ هُوَ اَفْصَحُ مِنِّیْ لِسَانًا فَاَرْسِلْهُ مَعِیَ رِدْاً یُّصَدِّقُنِیْۤ ؗ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّكَذِّبُوْنِ ۟
وَاَخِىْஎனது சகோதரர்هٰرُوْنُஹாரூனهُوَஅவர்اَفْصَحُதெளிவானمِنِّىْஎன்னைவிடلِسَانًاநாவன்மைஉடையவர்فَاَرْسِلْهُஆகவே, அவரைஅனுப்பு!مَعِىَ رِدْاًஎன்னுடன் உதவியாகيُّصَدِّقُنِىْٓ‌அவர் என்னை உண்மைப்படுத்துவார்اِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُநான் பயப்படுகிறேன்اَنْ يُّكَذِّبُوْنِ‏அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை
வ அகீ ஹாரூனு ஹுவ அFப்ஸஹு மின்னீ லிஸானன் Fப அர்ஸில்ஹு ம'இய ரித் அய் யுஸத்திகுனீ இன்னீ அகாFபு அய் யுகத்திBபூன்
இன்னும்: “என் சகோதரர் ஹாரூன் - அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்” (என்றுங் கூறினார்).
وَلَقَدْ مَنَنَّا عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟ۚ
وَلَقَدْதிட்டவட்டமாகمَنَنَّاஅருள்புரிந்தோம்عَلٰى مُوْسٰىமூஸாவிற்கு(ம்)وَهٰرُوْنَ‌ۚ‏ஹாரூனுக்கு
வ லகத் மனன்ன அலா மூஸா வ ஹாரூன
மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
سَلٰمٌ عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟
سَلٰمٌஈடேற்றம் உண்டாகட்டும்عَلٰى مُوْسٰىமூஸாவிற்கும்وَهٰرُوْنَ‏ஹாரூனுக்கும்
ஸலாமுன் 'அலா மூஸா வ ஹாரூன
“ஸலாமுன் அலா மூஸா வஹாரூன்” மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.