">

தேடல் வார்த்தை: "ஈஸா"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

36 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 36)

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَقَفَّیْنَا مِنْ بَعْدِهٖ بِالرُّسُلِ ؗ وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ ۚ فَفَرِیْقًا كَذَّبْتُمْ ؗ وَفَرِیْقًا تَقْتُلُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைوَ قَفَّیْنَاமேலும் நாம் தொடரச் செய்தோம்مِنْۢஇருந்துبَعْدِهٖஅவருக்குப் பின்بِالرُّسُلِ ؗதூதர்களைوَ اٰتَیْنَاமேலும் நாம் வழங்கினோம்عِیْسَیஈஸாவுக்குابْنَமகனானمَرْیَمَமர்யமின்الْبَیِّنٰتِதெளிவான சான்றுகளைوَ اَیَّدْنٰهُமேலும் அவருக்கு வலுவூட்டினோம்بِرُوْحِஆவியைக் கொண்டுالْقُدُسِ ؕபரிசுத்தاَفَكُلَّمَاஎனவே ஒவ்வொரு முறையும்جَآءَكُمْஉங்களிடம் வந்தாரோرَسُوْلٌۢஒரு தூதர்بِمَاஎதனைக் கொண்டுلَاஇல்லைتَهْوٰۤیவிரும்புகிறதோاَنْفُسُكُمُஉங்கள் மனங்கள்اسْتَكْبَرْتُمْ ۚநீங்கள் பெருமையடித்தீர்கள்فَفَرِیْقًاஎனவே ஒரு பிரிவினரைكَذَّبْتُمْ ؗநீங்கள் பொய்ப்பித்தீர்கள்وَ فَرِیْقًاமேலும் ஒரு பிரிவினரைتَقْتُلُوْنَநீங்கள் கொலை செய்கிறீர்கள்
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப வ கFப்Fபய்னா மிம் Bபஃதிஹீ Bபிர் ருஸுலி வ ஆதய்னா 'ஈஸBப்-ன-மர்யமல் Bபய்யினாதி வ அய்யத்னாஹு Bபி ரூஹில் குதுஸ்; அFபகுல்லமா ஜா'அகும் ரஸூலும் Bபிமா லா தஹ்வா அன்Fபுஸுகுமுஸ் தக்Bபர்தும் FபFபரீகன் கத்தBப்தும் வ Fபரீகன் தக்துலூன்
மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ۖؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُوْلُوْۤاசொல்லுங்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤஇன்னும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْنَاஎங்களுக்குوَ مَاۤஇன்னும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلٰۤیபால்اِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினர்وَ مَاۤஇன்னும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோمُوْسٰیமூஸாவுக்குوَ عِیْسٰیஇன்னும் ஈஸாவுக்குوَ مَاۤஇன்னும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோالنَّبِیُّوْنَநபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ ۚஅவர்களின் இறைவனிடம்لَاமாட்டோம்نُفَرِّقُநாங்கள் வேறுபடுத்தبَیْنَஇடையில்اَحَدٍஎவருக்கும்مِّنْهُمْ ۖؗஅவர்களில்وَ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
கூலூ ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வ மா உன்Zஜில இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மாஊதிய மூஸா வ 'ஈஸா வ மா ஊதியன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ ۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ ؕ وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ وَلٰكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا ۫ وَلٰكِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یُرِیْدُ ۟۠
تِلْكَஅந்தالرُّسُلُதூதர்கள்فَضَّلْنَاநாம் மேன்மையாக்கினோம்بَعْضَهُمْஅவர்களில் சிலரைعَلٰیமீதுبَعْضٍ ۘசிலரை விடمِنْهُمْஅவர்களில்مَّنْஎவருடன்كَلَّمَபேசினானோاللّٰهُஅல்லாஹ்وَ رَفَعَமேலும் உயர்த்தினான்بَعْضَهُمْஅவர்களில் சிலரைدَرَجٰتٍ ؕபதவிகளில்وَ اٰتَیْنَاமேலும் நாம் வழங்கினோம்عِیْسَیஈஸாவுக்குابْنَமகனானمَرْیَمَமர்யமின்الْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைوَ اَیَّدْنٰهُமேலும் அவருக்கு நாம் வலுவூட்டினோம்بِرُوْحِஆவியைக் கொண்டுالْقُدُسِ ؕபரிசுத்தوَ لَوْமேலும்شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَاமாட்டார்கள்اقْتَتَلَசண்டையிட்டிருக்கالَّذِیْنَஎவர்கள்مِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்مِّنْۢஇருந்துبَعْدِபின்مَاஎதுجَآءَتْهُمُஅவர்களிடம் வந்ததோالْبَیِّنٰتُதெளிவான அத்தாட்சிகள்وَ لٰكِنِஆனால்اخْتَلَفُوْاஅவர்கள் முரண்பட்டார்கள்فَمِنْهُمْஆகவே அவர்களில்مَّنْசிலர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்கள்وَ مِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْசிலர்كَفَرَ ؕநிராகரித்தார்கள்وَ لَوْமேலும்شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَاமாட்டார்கள்اقْتَتَلُوْا ۫அவர்கள் சண்டையிட்டிருக்கوَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்یَفْعَلُசெய்கிறான்مَاஎதைیُرِیْدُ۠அவன் நாடுகிறானோ
தில்கர் ருஸுலு Fபள்ளல்னா Bபஃளஹும் 'அலா Bபஃள்; மின்ஹும் மன் கல்லமல் லாஹு வ ரFப'அ Bபஃளஹும் தரஜாத்; வ ஆதய்னா 'ஈஸBப் ன மர்யமல் Bபய்யினாதி வ அய்யத்னாஹு Bபி ரூஹில் குதுஸ்; வ லவ் ஷா'அல் லாஹு மக்ததலல் லதீன மிம்Bபஃதிஹிம் மிம் Bபஃதி மா ஜா'அத்ஹுமுல் Bபய்யினாது வ லாகினிக் தலFபூ Fபமின்ஹும் மன் ஆமன வ மின்ஹும் மன் கFபர்; வ லவ் ஷா'அல் லாஹு மக் ததலூ வ லாகின்னல்லாஹ யFப்'அலு மா யுரீத்
அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
اِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ یُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۖۗ اسْمُهُ الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ وَجِیْهًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ
اِذْஅப்போதுقَالَتِகூறினார்கள்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்یٰمَرْیَمُமர்யமே!اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُبَشِّرُكِஉனக்கு நற்செய்தி கூறுகிறான்بِكَلِمَةٍஒரு வார்த்தையைக் கொண்டுمِّنْهُ ۖۗஅவனிடமிருந்துاسْمُهُஅவருடைய பெயர்الْمَسِیْحُமஸீஹ்عِیْسَیஈஸாابْنُமகன்مَرْیَمَமர்யமின்وَجِیْهًاகண்ணியமிக்கவராகفِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ الْاٰخِرَةِமற்றும் மறுமையிலும்وَ مِنَமேலும்الْمُقَرَّبِیْنَۙநெருக்கமானவர்களில் (ஒருவராக இருப்பார்)
இத் காலதில் மலா'இகது யா மர்யமு இன்னல் லாஹ யுBபஷ்ஷிருகி Bபி கலிமதிம் மின்ஹுஸ் முஹுல் மஸீஹு 'ஈஸBப் னு மர்யம வஜீஹன் Fபித் துன்யா வல் ஆகிரதி வ மினல் முகர்ரBபீன்
மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
فَلَمَّاۤ اَحَسَّ عِیْسٰی مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ ۚ اٰمَنَّا بِاللّٰهِ ۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ ۟
فَلَمَّاۤஆகவே எப்போதுاَحَسَّஉணர்ந்தாரோعِیْسٰیஈஸாمِنْهُمُஅவர்களிடமிருந்துالْكُفْرَநிராகரிப்பைقَالَகூறினார்مَنْயார்اَنْصَارِیْۤஎனது உதவியாளர்கள்اِلَیபக்கம்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்قَالَகூறினார்கள்الْحَوَارِیُّوْنَசீடர்கள்نَحْنُநாங்கள்اَنْصَارُஉதவியாளர்கள்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِ ۚஅல்லாஹ்வின் மீதுوَ اشْهَدْமேலும் சாட்சியாக இருப்பீராகبِاَنَّاநிச்சயமாக நாங்கள்مُسْلِمُوْنَமுஸ்லிம்கள்
Fபலம்மா அஹஸ்ஸ 'ஈஸா மின்ஹுமுல் குFப்ர கால மன் அன்ஸாரீ இலல் லாஹி காலல் ஹவாரிய்யூன னஹ்னு அன்ஸாருல் லாஹி ஆமன்னா Bபில்லாஹி வஷ்ஹத் Bபி அன்னா முஸ்லிமூன்
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
وَمَكَرُوْا وَمَكَرَ اللّٰهُ ؕ وَاللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ ۟۠
وَ مَكَرُوْاமேலும் அவர்கள் சூழ்ச்சி செய்தனர்وَ مَكَرَமேலும் சூழ்ச்சி செய்தான்اللّٰهُ ؕஅல்லாஹ்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்خَیْرُமிகச் சிறந்தவன்الْمٰكِرِیْنَ۠சூழ்ச்சி செய்வோரில்
வ மகரூ வ மகரல் லாஹு வல்லாஹு கய்ருல் மாகிரீன்
(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسٰۤی اِنِّیْ مُتَوَفِّیْكَ وَرَافِعُكَ اِلَیَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِیْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِیْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۚ ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَیْنَكُمْ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
اِذْஅப்போதுقَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்یٰعِیْسٰۤیஈஸாவே!اِنِّیْநிச்சயமாக நான்مُتَوَفِّیْكَஉம்மைக் கைப்பற்றுபவன்وَ رَافِعُكَமேலும் உம்மை உயர்த்துபவன்اِلَیَّஎன்னிடம்وَ مُطَهِّرُكَமேலும் உம்மைத் தூய்மைப்படுத்துபவன்مِنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ جَاعِلُமேலும் ஆக்குபவன்الَّذِیْنَஎவர்கள்اتَّبَعُوْكَஉம்மைப் பின்பற்றினார்களோفَوْقَமேலாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاِلٰیவரைیَوْمِநாள்الْقِیٰمَةِ ۚகியாமத்ثُمَّபின்னர்اِلَیَّஎன்னிடமேمَرْجِعُكُمْஉங்கள் திரும்புதல்فَاَحْكُمُநான் தீர்ப்பளிப்பேன்بَیْنَكُمْஉங்களுக்கிடையேفِیْمَاஎவற்றில்كُنْتُمْநீங்கள் இருந்தீர்களோفِیْهِஅதில்تَخْتَلِفُوْنَமுரண்பட்டுக் கொண்டிருந்தீர்களோ
இத் காலல் லாஹு யா 'ஈஸா இன்னீ முதவFப்Fபீக வ ராFபி'உக இலய்ய வ முதஹ் ஹிருக மினல் லதீன கFபரூ வ ஜா'இலுல் லதீனத்தBப ஊக Fபவ்கல் லதீன கFபரூ இலா யவ்மில் கியாமதி தும்ம இலய்ய மர்ஜி'உகும் Fப அஹ்குமு Bபய்னகும் Fபீமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
اِنَّ مَثَلَ عِیْسٰی عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
اِنَّநிச்சயமாகمَثَلَஉதாரணம்عِیْسٰیஈஸாவின்عِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றதேاٰدَمَ ؕஆதமின்خَلَقَهٗஅவனைப் படைத்தான்مِنْஇருந்துتُرَابٍமண்ثُمَّபின்னர்قَالَகூறினான்لَهٗஅவனுக்குكُنْஆகுفَیَكُوْنُஉடனே ஆகிவிட்டான்
இன்ன மதல 'ஈஸா 'இன்தல் லாஹி கமதலி ஆதம கலகஹூ மின் துராBபின் தும்ம கால லஹூ குன் Fபயகூன்
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِیْنَ ۟
اَلْحَقُّசத்தியம்مِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவன்فَلَاஎனவே வேண்டாம்تَكُنْநீர் ஆகிவிடمِّنَஅவர்களில்الْمُمْتَرِیْنَசந்தேகிப்பவர்கள்
அல்ஹக்கு மிர் ரBப்Bபிக Fபலா தகும் மினல் மும்தரீன்
(நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்; எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்.
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَالنَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۪ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோعَلَیْنَاஎங்கள் மீதுوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோعَلٰۤیமீதுاِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமேலும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமேலும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَமேலும் யஃகூப்وَ الْاَسْبَاطِமேலும் சந்ததியினர்وَ مَاۤமேலும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோمُوْسٰیமூஸாவுக்குوَ عِیْسٰیமேலும் ஈஸாவுக்குوَ النَّبِیُّوْنَமேலும் நபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ ۪அவர்களின் இறைவனிடம்لَاமாட்டோம்نُفَرِّقُநாங்கள் வேறுபடுத்தبَیْنَஇடையில்اَحَدٍஎவருக்கும்مِّنْهُمْ ؗஅவர்களில்وَ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
குல் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில 'அலய்னா வ மா உன்Zஜில 'அலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மா ஊதிய மூஸா வ 'ஈஸா வன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِیْحَ عِیْسَی ابْنَ مَرْیَمَ رَسُوْلَ اللّٰهِ ۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰكِنْ شُبِّهَ لَهُمْ ؕ وَاِنَّ الَّذِیْنَ اخْتَلَفُوْا فِیْهِ لَفِیْ شَكٍّ مِّنْهُ ؕ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوْهُ یَقِیْنًا ۟ۙ
وَّ قَوْلِهِمْமேலும் அவர்கள் கூறியதால்اِنَّاநிச்சயமாக நாங்கள்قَتَلْنَاகொன்றோம்الْمَسِیْحَமஸீஹ் ஆகியعِیْسَیஈஸாவைابْنَமகனானمَرْیَمَமர்யமின்رَسُوْلَதூதரானاللّٰهِ ۚஅல்லாஹ்வின்وَ مَاமேலும் அவர்கள்قَتَلُوْهُஅவரைக் கொல்லவில்லைوَ مَاமேலும் அவர்கள்صَلَبُوْهُஅவரைச் சிலுவையில் அறையவில்லைوَ لٰكِنْமாறாகشُبِّهَஒப்பாக்கப்பட்டதுلَهُمْ ؕஅவர்களுக்குوَ اِنَّமேலும் நிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اخْتَلَفُوْاகருத்து வேறுபாடு கொண்டார்களோفِیْهِஇதில்لَفِیْநிச்சயமாக இருக்கின்றனர்شَكٍّசந்தேகத்தில்مِّنْهُ ؕஇது பற்றிمَاஇல்லைلَهُمْஅவர்களுக்குبِهٖஇதைப் பற்றிمِنْஎந்தعِلْمٍஅறிவும்اِلَّاதவிரاتِّبَاعَபின்பற்றுவதைத்الظَّنِّ ۚயூகத்தைوَ مَاமேலும் அவர்கள்قَتَلُوْهُஅவரைக் கொல்லவில்லைیَقِیْنًۢاۙஉறுதியாக
வ கவ்லிஹிம் இன்னா கதல் னல் மஸீஹ 'ஈஸBப்-ன-மர்யம ரஸூலல் லாஹி வமா கதலூஹு வமா ஸலBபூஹு வ லாகின் ஷுBப்Bபிஹ லஹும்; வ இன்னல் லதீனக் தலFபூ Fபீஹீ லFபீ ஷக்கிம் மின்ஹ்; மா லஹும் Bபிஹீ மின் 'இல்மின் இல்லத் திBபா'அள் ளன்ன்; வமா கதலூஹு யகீனா
இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَیُؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ یَكُوْنُ عَلَیْهِمْ شَهِیْدًا ۟ۚ
وَ اِنْஇன்னும் எவரும் இல்லைمِّنْஇருந்துاَهْلِமக்கள்الْكِتٰبِவேதத்தின்اِلَّاதவிரلَیُؤْمِنَنَّநிச்சயமாக நம்பிக்கை கொள்வார்கள்بِهٖஅவர் மீதுقَبْلَமுன்னதாகمَوْتِهٖ ۚஅவருடைய மரணத்திற்குوَ یَوْمَமேலும் நாளில்الْقِیٰمَةِமறுமைیَكُوْنُஅவர் இருப்பார்عَلَیْهِمْஅவர்களுக்கு எதிராகشَهِیْدًاۚசாட்சியாக
வ இம் மின் அஹ்லில் கிதாBபி இல்லா லயு'மினன்ன Bபிஹீ கBப்ல மவ்திஹீ வ யவ்மல் கியாமதி யகூனு 'அலய்ஹிம் ஷஹீதா
வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَیْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَیْكَஉமக்குكَمَاۤபோலவேاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلٰیபால்نُوْحٍநூஹ்وَّ النَّبِیّٖنَஇன்னும் நபிமார்களுக்கும்مِنْۢஇருந்துبَعْدِهٖ ۚஅவருக்குப் பின்وَ اَوْحَیْنَاۤஇன்னும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰۤیபால்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினருக்கும்وَ عِیْسٰیஇன்னும் ஈஸாوَ اَیُّوْبَஇன்னும் அய்யூப்وَ یُوْنُسَஇன்னும் யூனுஸ்وَ هٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَ سُلَیْمٰنَ ۚஇன்னும் ஸுலைமான்وَ اٰتَیْنَاஇன்னும் நாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًاۚஜபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ اِنَّمَا الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ اَلْقٰىهَاۤ اِلٰی مَرْیَمَ وَرُوْحٌ مِّنْهُ ؗ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۫ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ؕ اِنْتَهُوْا خَیْرًا لَّكُمْ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰهٌ وَّاحِدٌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ یَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟۠
یٰۤاَهْلَஓ மக்களேالْكِتٰبِவேதத்தைلَاவேண்டாம்تَغْلُوْاவரம்பு மீறفِیْஇல்دِیْنِكُمْஉங்கள் மார்க்கத்தில்وَ لَاமேலும் வேண்டாம்تَقُوْلُوْاநீங்கள் கூறعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரالْحَقَّ ؕஉண்மையைاِنَّمَاநிச்சயமாகالْمَسِیْحُமஸீஹ்عِیْسَیஈஸாابْنُமகன்مَرْیَمَமர்யமின்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்وَ كَلِمَتُهٗ ۚமேலும் அவனுடைய வார்த்தைاَلْقٰىهَاۤஅதை அவன் அளித்தான்اِلٰیபால்مَرْیَمَமர்யம்وَ رُوْحٌமேலும் ஓர் ஆன்மாمِّنْهُ ؗஅவனிடமிருந்துفَاٰمِنُوْاஎனவே ஈமான் கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رُسُلِهٖ ۫ۚமேலும் அவனுடைய தூதர்கள் மீதுوَ لَاமேலும் வேண்டாம்تَقُوْلُوْاநீங்கள் கூறثَلٰثَةٌ ؕமூவர்اِنْتَهُوْاவிலகிக் கொள்ளுங்கள்خَیْرًاசிறந்ததாகும்لَّكُمْ ؕஉங்களுக்குاِنَّمَاநிச்சயமாகاللّٰهُஅல்லாஹ்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌ ؕஒருவனேسُبْحٰنَهٗۤஅவன் தூய்மையானவன்اَنْஎன்பதை விட்டும்یَّكُوْنَஇருப்பதுلَهٗஅவனுக்குوَلَدٌ ۘஒரு குழந்தைلَهٗஅவனுக்கே உரியதுمَاஎவைفِیஇல்السَّمٰوٰتِவானங்களில்وَ مَاமேலும் எவைفِیஇல்الْاَرْضِ ؕபூமியில்وَ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِیْلًا۠பொறுப்பாளனாக
யா அஹ்லல் கிதாBபி லா தக்லூ Fபீ தீனிகும் வலா தகூலூ 'அலல் லாஹி இல்லல்ஹக்க்; இன்னமல் மஸீஹு 'ஈஸBப்-னு-மர்யம ரஸூலுல் லாஹி வ கலிமதுஹூ அல்காஹா இலா மர்யம வ ரூஹும் மின்ஹும் Fப ஆமினூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ வலா தகூலூ தலாதஹ்; இன்தஹூ கய்ரல்லகும்; இன்னமல் லாஹு இலாஹு(ன்)வ் வாஹித், ஸுBப்ஹானஹூ அ(ன்)ய் யகூன லஹூ வலத்; லஹூ மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கFபா Bபில்லாஹி வகீலா
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
لَنْ یَّسْتَنْكِفَ الْمَسِیْحُ اَنْ یَّكُوْنَ عَبْدًا لِّلّٰهِ وَلَا الْمَلٰٓىِٕكَةُ الْمُقَرَّبُوْنَ ؕ وَمَنْ یَّسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهٖ وَیَسْتَكْبِرْ فَسَیَحْشُرُهُمْ اِلَیْهِ جَمِیْعًا ۟
لَنْஒருபோதும் மாட்டார்یَّسْتَنْكِفَஇழிவாகக் கருதالْمَسِیْحُமஸீஹ்اَنْஎன்றுیَّكُوْنَஇருக்கعَبْدًاஓர் அடியாராகلِّلّٰهِஅல்லாஹ்வுக்குوَ لَاமேலும் மாட்டார்கள்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்الْمُقَرَّبُوْنَ ؕநெருக்கமானவர்கள்وَ مَنْமேலும் எவர்یَّسْتَنْكِفْஇழிவாகக் கருதுகிறாரோعَنْவிட்டும்عِبَادَتِهٖஅவனை வணங்குவதைوَ یَسْتَكْبِرْமேலும் பெருமையடிக்கிறாரோفَسَیَحْشُرُهُمْஆகவே அவன் அவர்களை ஒன்றுதிரட்டுவான்اِلَیْهِஅவனிடமேجَمِیْعًاஅனைவரையும்
லய் யஸ்தன்கிFபல் மஸீஹு அய் யகூன 'அBப்தல் லில்லாஹி வ லல் மலா'இகதுல் முகர்ரBபூன்; வ மய் யஸ்தன்கிFப் 'அன் இBபாததிஹீ வ யஸ்தக்Bபிர் Fபஸ யஹ்ஷுருஹும் இலய்ஹி ஜமீ'ஆ
(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ; அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ قُلْ فَمَنْ یَّمْلِكُ مِنَ اللّٰهِ شَیْـًٔا اِنْ اَرَادَ اَنْ یُّهْلِكَ الْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ وَاُمَّهٗ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
لَقَدْநிச்சயமாகكَفَرَநிராகரித்துவிட்டனர்الَّذِیْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்களோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவன்الْمَسِیْحُமஸீஹ்ابْنُமகன்مَرْیَمَ ؕமர்யமின்قُلْகூறுவீராகفَمَنْஅப்படியென்றால் யார்یَّمْلِكُதடுக்க முடியும்مِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடமிருந்துشَیْـًٔاஎதனையும்اِنْஒருவேளைاَرَادَஅவன் நாடினால்اَنْஎன்றுیُّهْلِكَஅழித்துவிடالْمَسِیْحَமஸீஹைابْنَமகனானمَرْیَمَமர்யமின்وَ اُمَّهٗஇன்னும் அவருடைய தாயாரையும்وَ مَنْஇன்னும் எவர்فِیஇல்الْاَرْضِபூமியில்جَمِیْعًا ؕஅனைவரையும்وَ لِلّٰهِஇன்னும் அல்லாஹ்வுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِஇன்னும் பூமியின்وَ مَاஇன்னும் எவைبَیْنَهُمَا ؕஅவ்விரண்டிற்கும் இடையில்یَخْلُقُஅவன் படைக்கிறான்مَاஎதைیَشَآءُ ؕநாடுகிறானோوَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஅனைத்துشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றல் உடையவன்
லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ ஹுவல் மஸீஹுBப் னு மர்யம்; குல் Fபம(ன்)ய்-யம்லிகு மினல் லாஹி ஷய்'அன் இன் அராத அய் யுஹ்லிகல் மஸீஹBப் ன மர்யம வ உம்மஹூ வ மன் Fபில் அர்ளி ஜமீ'ஆ, வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா; யக்லுகு மா யஷா'; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
یٰۤاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُنَا یُبَیِّنُ لَكُمْ عَلٰی فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَآءَنَا مِنْ بَشِیْرٍ وَّلَا نَذِیْرٍ ؗ فَقَدْ جَآءَكُمْ بَشِیْرٌ وَّنَذِیْرٌ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
یٰۤاَهْلَமக்களேالْكِتٰبِவேதத்தின்قَدْதிண்ணமாகجَآءَكُمْஉங்களிடம் வந்துவிட்டார்رَسُوْلُنَاநம்முடைய தூதர்یُبَیِّنُஅவர் தெளிவுபடுத்துகிறார்لَكُمْஉங்களுக்குعَلٰیபிறகுفَتْرَةٍஇடைவெளிக்குمِّنَஇருந்துالرُّسُلِதூதர்களின்اَنْநீங்கள்تَقُوْلُوْاகூறாதிருக்கمَاவரவில்லைجَآءَنَاஎங்களிடம்مِنْۢஎந்த ஒருبَشِیْرٍநற்செய்தி கூறுபவரும்وَّ لَاமேலும் இல்லைنَذِیْرٍ ؗஎச்சரிக்கை செய்பவரும்فَقَدْஆகவே திண்ணமாகجَآءَكُمْஉங்களிடம் வந்துவிட்டார்بَشِیْرٌநற்செய்தி கூறுபவர்وَّ نَذِیْرٌ ؕமற்றும் எச்சரிக்கை செய்பவர்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஅனைத்துشَیْءٍபொருளின்قَدِیْرٌ۠பேராற்றல் உடையவன்
யா அஹ்லல் கிதாBபி கத் ஜா'அகும் ரஸூலுனா யுBபய்யினு லகும் 'அலா Fபத்ரதிம் மினர் ருஸுலி அன் தகூலூ மா ஜா'அனா மிம் Bபஷீரி(ன்)வ் வலா னதீரின் Fபகத் ஜா'அகும் Bபஷீரு(ன்)வ் வ னதீர்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார்; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
وَقَفَّیْنَا عَلٰۤی اٰثَارِهِمْ بِعِیْسَی ابْنِ مَرْیَمَ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ ۪ وَاٰتَیْنٰهُ الْاِنْجِیْلَ فِیْهِ هُدًی وَّنُوْرٌ ۙ وَّمُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ وَهُدًی وَّمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟ؕ
وَ قَفَّیْنَاமேலும் நாம் தொடரச் செய்தோம்عَلٰۤیமீதுاٰثَارِهِمْஅவர்களின் அடிச்சுவடுகளின்بِعِیْسَیஈஸாவைابْنِமகன்مَرْیَمَமர்யமின்مُصَدِّقًاமெய்ப்படுத்துபவராகلِّمَاஉள்ளதைبَیْنَமுன்னேیَدَیْهِஅவருக்குمِنَஇருந்துالتَّوْرٰىةِ ۪தவ்ராத்தில்وَ اٰتَیْنٰهُமேலும் நாம் அவருக்கு வழங்கினோம்الْاِنْجِیْلَஇன்ஜீலைفِیْهِஅதில்هُدًیநேர்வழிوَّ نُوْرٌ ۙமேலும் ஒளிوَّ مُصَدِّقًاமேலும் மெய்ப்படுத்துவதாகவும்لِّمَاஉள்ளதைبَیْنَமுன்னேیَدَیْهِஅதற்குمِنَஇருந்துالتَّوْرٰىةِதவ்ராத்தில்وَ هُدًیமேலும் நேர்வழியாகவும்وَّ مَوْعِظَةًமேலும் நல்லுரையாகவும்لِّلْمُتَّقِیْنَؕஇறையச்சமுடையோருக்கு
வ கFப்Fபய்னா 'அலா ஆதாரிஹிம் Bபி 'ஈஸBப் னி மர்யம முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி மினத் தவ்ராதி வ ஆதய்னாஹுல் இன்ஜீல Fபீஹி ஹுத(ன்)வ் வ னூரு(ன்)வ் வ முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி மினத் தவ்ராதி வ ஹுத(ன்)வ் வ மவ்'இளதல் லில்முத்தகீன்
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ وَقَالَ الْمَسِیْحُ یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّیْ وَرَبَّكُمْ ؕ اِنَّهٗ مَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَیْهِ الْجَنَّةَ وَمَاْوٰىهُ النَّارُ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
لَقَدْநிச்சயமாகكَفَرَநிராகரித்துவிட்டனர்الَّذِیْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்களோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவன்தான்الْمَسِیْحُமஸீஹ்ابْنُமகன்مَرْیَمَ ؕமர்யமின்وَ قَالَமேலும் கூறினார்الْمَسِیْحُமஸீஹ்یٰبَنِیْۤஓ சந்ததியினரேاِسْرَآءِیْلَஇஸ்ராயீல்اعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைرَبِّیْஎன் இறைவனையும்وَ رَبَّكُمْ ؕஉங்கள் இறைவனையும்اِنَّهٗநிச்சயமாகمَنْஎவர்یُّشْرِكْஇணைவைக்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வுக்குفَقَدْநிச்சயமாகحَرَّمَதடுத்துவிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْهِஅவர் மீதுالْجَنَّةَசுவனத்தைوَ مَاْوٰىهُமேலும் அவரது தங்குமிடம்النَّارُ ؕநரகம்وَ مَاமேலும் இல்லைلِلظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குمِنْஎந்தاَنْصَارٍஉதவியாளர்களும்
லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ ஹுவல் மஸீஹுBப் னு மர்யம வ காலல் மஸீஹு யா Bபனீ இஸ்ரா'ஈல உஃBபுதுல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபகும் இன்ன்னஹூ ம(ன்)ய்-யுஷ்ரிக் Bபில்லாஹி Fபகத் ஹர்ரமல் லாஹு 'அலய்ஹில் ஜன்னத வமா வாஹுன் னாரு வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார்
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
لُعِنَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟
لُعِنَசபிக்கப்பட்டனர்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْۢஇருந்துبَنِیْۤசந்ததியினரில்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்عَلٰیமூலமாகلِسَانِநாவின்دَاوٗدَதாவூதுوَ عِیْسَیமற்றும் ஈஸாابْنِமகன்مَرْیَمَ ؕமர்யமின்ذٰلِكَஅதுبِمَاகாரணமாகعَصَوْاஅவர்கள் மாறுசெய்தார்கள்وَّ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்یَعْتَدُوْنَவரம்பு மீறுபவர்களாக
லு'இனல் லதீன கFபரூ மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா லிஸானி தாவூத வ 'ஈஸBப் னி மர்யம்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ اذْكُرْ نِعْمَتِیْ عَلَیْكَ وَعَلٰی وَالِدَتِكَ ۘ اِذْ اَیَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ ۫ تُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا ۚ وَاِذْ عَلَّمْتُكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ بِاِذْنِیْ فَتَنْفُخُ فِیْهَا فَتَكُوْنُ طَیْرًا بِاِذْنِیْ وَتُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِیْ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰی بِاِذْنِیْ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
اِذْபோதுقَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்یٰعِیْسَیஈஸாவேابْنَமகனேمَرْیَمَமர்யமின்اذْكُرْநினைவு கூர்வீராகنِعْمَتِیْஎனது அருட்கொடையைعَلَیْكَஉம்மீதுوَ عَلٰیமேலும் மீதும்وَ الِدَتِكَ ۘஉமது தாயார்اِذْபோதுاَیَّدْتُّكَஉமக்கு நான் வலுவூட்டினேன்بِرُوْحِஆவியைக் கொண்டுالْقُدُسِ ۫பரிசுத்தتُكَلِّمُநீர் பேசினீர்النَّاسَமக்களிடம்فِیஇல்الْمَهْدِதொட்டில்وَ كَهْلًا ۚமேலும் முதிர் வயதிலும்وَ اِذْமேலும் போதுعَلَّمْتُكَஉமக்கு நான் கற்றுக்கொடுத்தேன்الْكِتٰبَவேதத்தைوَ الْحِكْمَةَமேலும் ஞானத்தைوَ التَّوْرٰىةَமேலும் தவ்ராத்தைوَ الْاِنْجِیْلَ ۚமேலும் இன்ஜீலைوَ اِذْமேலும் போதுتَخْلُقُநீர் உருவாக்கினீர்مِنَஇருந்துالطِّیْنِகளிமண்كَهَیْـَٔةِஉருவத்தைப் போல்الطَّیْرِபறவையின்بِاِذْنِیْஎனது அனுமதியுடன்فَتَنْفُخُபிறகு நீர் ஊதினீர்فِیْهَاஅதில்فَتَكُوْنُபிறகு அது ஆனதுطَیْرًۢاபறவையாகبِاِذْنِیْஎனது அனுமதியுடன்وَ تُبْرِئُமேலும் நீர் குணப்படுத்தினீர்الْاَكْمَهَபிறவிக்குருடனைوَ الْاَبْرَصَமேலும் வெண்குஷ்டக்காரனைبِاِذْنِیْ ۚஎனது அனுமதியுடன்وَ اِذْமேலும் போதுتُخْرِجُநீர் உயிர்ப்பித்தீர்الْمَوْتٰیஇறந்தவர்களைبِاِذْنِیْ ۚஎனது அனுமதியுடன்وَ اِذْமேலும் போதுكَفَفْتُநான் தடுத்தேன்بَنِیْۤசந்ததியினரைاِسْرَآءِیْلَஇஸ்ராயீல்عَنْكَஉம்மிடமிருந்துاِذْபோதுجِئْتَهُمْநீர் அவர்களிடம் வந்தீர்بِالْبَیِّنٰتِதெளிவான சான்றுகளுடன்فَقَالَஅப்போது கூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْهُمْஅவர்களில்اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியம்مُّبِیْنٌதெளிவான
இத் காலல் லாஹு யா 'ஈஸBப்-ன-மர்யமத் குர் னிஃமதீ 'அலய்க வ 'அலா வாலிததிக; இத் அய்யத்துக Bபி ரூஹில் குதுஸி துகல்லிமுன் னாஸ Fபில் மஹ்தி வ கஹ்ல(ன்)வ் வ இத் 'அல்லம்துகல் கிதாBப வல் ஹிக்மத வ தவ்ராத வல் இன்ஜீல வ இத் தக்லுகு மினத் தீனி கஹய் 'அதித் தய்ரி Bபி இத்னீ Fபதன்Fபுகு Fபீஹா Fபதகூனு தய்ரம் Bபி இத்னீ வ துBப்ரி'உல் அக்மஹ வல் அBப்ரஸ Bபி இத்னீ வ இத் துக்ரிஜுல் மவ்தா Bபி இத்னீ வ இத் கFபFப்து Bபனீ இஸ்ரா'ஈல 'அன்க இத் ஜி'தஹும் Bபில் Bபய்யினாதி Fப காலல் லதீன கFபரூ மின்ஹும் இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
اِذْ قَالَ الْحَوَارِیُّوْنَ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ هَلْ یَسْتَطِیْعُ رَبُّكَ اَنْ یُّنَزِّلَ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ ؕ قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِذْஅப்போதுقَالَகூறினார்கள்الْحَوَارِیُّوْنَசீடர்கள்یٰعِیْسَیஈஸாவேابْنَமகனேمَرْیَمَமர்யமின்هَلْமுடியுமாیَسْتَطِیْعُஇயலுமாرَبُّكَஉமது இறைவன்اَنْஎன்றுیُّنَزِّلَஇறக்கி வைக்கعَلَیْنَاஎங்கள் மீதுمَآىِٕدَةًஓர் உணவுத் தட்டைمِّنَஇருந்துالسَّمَآءِ ؕவானம்قَالَஅவர் கூறினார்اتَّقُواஅஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
இத் காலல் ஹவாரிய்யூன யா 'ஈஸBப் ன மர்யம ஹல் யஸ்ததீ'உ ரBப்Bபுக அய் யுனZஜ் Zஜில அலய்னா மா'இததம் மினஸ் ஸமா'இ காலத் தகுல் லாஹ இன் குன்தும் மு'மினீன்
“மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?” என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَنَا عِیْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَةً مِّنْكَ ۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟
قَالَகூறினார்عِیْسَیஈஸாابْنُமகன்مَرْیَمَமர்யமின்اللّٰهُمَّஅல்லாஹ்வேرَبَّنَاۤஎங்கள் இறைவனேاَنْزِلْஇறக்கியருள்வாயாகعَلَیْنَاஎங்கள் மீதுمَآىِٕدَةًஓர் உணவுத் தட்டைمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்تَكُوْنُஅது இருக்கும்لَنَاஎங்களுக்குعِیْدًاஒரு பெருநாளாகلِّاَوَّلِنَاஎங்களில் முன்னவர்களுக்கும்وَ اٰخِرِنَاமேலும் எங்களில் பின்னவர்களுக்கும்وَ اٰیَةًமேலும் ஓர் அத்தாட்சியாகவும்مِّنْكَ ۚஉன்னிடமிருந்துوَ ارْزُقْنَاமேலும் எங்களுக்கு உணவளிப்பாயாகوَ اَنْتَமேலும் நீயேخَیْرُமிகச் சிறந்தவன்الرّٰزِقِیْنَஉணவளிப்பவர்களில்
கால 'ஈஸBப் னு மர்யமல் லாஹும்ம ரBப்Bபனா அன்Zஜில் 'அலய்னா மா'இததம் மினஸ் ஸமா'இ தகூனு லனா 'ஈதல் லி அவ்வலினா வ ஆகிரினா வ ஆயதம் மின்க வர்Zஜுக்னா வ அன்த கய்ருர் ராZஜிகீன்
மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
وَاِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِیْ وَاُمِّیَ اِلٰهَیْنِ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالَ سُبْحٰنَكَ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اَقُوْلَ مَا لَیْسَ لِیْ ۗ بِحَقٍّ ؔؕ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ ؕ تَعْلَمُ مَا فِیْ نَفْسِیْ وَلَاۤ اَعْلَمُ مَا فِیْ نَفْسِكَ ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟
وَ اِذْமேலும் (அந்நேரத்தில்)قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்یٰعِیْسَیஈஸாவே!ابْنَமகனே!مَرْیَمَமர்யமின்ءَاَنْتَநீராقُلْتَகூறினீர்لِلنَّاسِமனிதர்களிடம்اتَّخِذُوْنِیْஎன்னை ஆக்கிக் கொள்ளுங்கள்وَ اُمِّیَமேலும் என் தாயாரையும்اِلٰهَیْنِஇரு கடவுள்களாகمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِ ؕஅல்லாஹ்வைقَالَஅவர் கூறினார்سُبْحٰنَكَநீ தூய்மையானவன்مَاஇல்லைیَكُوْنُதகுதியானதுلِیْۤஎனக்குاَنْஎன்றுاَقُوْلَநான் கூறுவதற்குمَاஎதைلَیْسَஇல்லையோلِیْ ۗஎனக்குبِحَقٍّ ؔؕஉரிமைاِنْஒருவேளைكُنْتُநான்قُلْتُهٗஅதை கூறியிருந்தால்فَقَدْநிச்சயமாகعَلِمْتَهٗ ؕநீ அதை அறிந்திருப்பாய்تَعْلَمُநீ அறிகிறாய்مَاஉள்ளதைفِیْஇல்نَفْسِیْஎன் மனதில்وَ لَاۤமேலும் இல்லைاَعْلَمُநான் அறியமாட்டேன்مَاஉள்ளதைفِیْஇல்نَفْسِكَ ؕஉன் மனதில்اِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேعَلَّامُநன்கறிந்தவன்الْغُیُوْبِமறைவானவற்றை
வ இத் காலல் லாஹு யா 'ஈஸBப் ன மர்யம 'அ-அன்த குல்த லின்னாஸித் தகிதூனீ வ உம்மிய இலாஹய்னி மின் தூனில் லாஹி கால ஸுBப்ஹானக மா யகூனு லீ அன் அகூல மா லய்ஸ லீ Bபிஹக்க்; இன் குன்து குல்துஹூ Fபகத் 'அலிம்தஹ்; தஃலமு மா Fபீ னFப்ஸீ வ லா அ'அலமு மா Fபீ னFப்ஸிக்; இன்னக அன்த 'அல்லாமுல் குயூBப்
இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
وَزَكَرِیَّا وَیَحْیٰی وَعِیْسٰی وَاِلْیَاسَ ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِیْنَ ۟ۙ
وَ زَكَرِیَّاமேலும் ஜக்கரிய்யாوَ یَحْیٰیமேலும் யஹ்யாوَ عِیْسٰیமேலும் ஈஸாوَ اِلْیَاسَ ؕமேலும் இல்யாஸ்كُلٌّஅனைவரும்مِّنَஉள்ளவர்கள்الصّٰلِحِیْنَۙநல்லவர்களில்
வ Zஜகரிய்யா வ யஹ்யா வ 'ஈஸா வ இல்ல்யாஸ குல்லும் மினஸ் ஸாலிஹீன்
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
وَقَالَتِ الْیَهُوْدُ عُزَیْرُ بْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَی الْمَسِیْحُ ابْنُ اللّٰهِ ؕ ذٰلِكَ قَوْلُهُمْ بِاَفْوَاهِهِمْ ۚ یُضَاهِـُٔوْنَ قَوْلَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؕ قٰتَلَهُمُ اللّٰهُ ؗۚ اَنّٰی یُؤْفَكُوْنَ ۟
وَ قَالَتِமேலும் கூறினர்الْیَهُوْدُயூதர்கள்عُزَیْرُஉஸைர்بْنُமகன்اللّٰهِஅல்லாஹ்வின்وَ قَالَتِமேலும் கூறினர்النَّصٰرَیகிறிஸ்தவர்கள்الْمَسِیْحُமஸீஹ்ابْنُமகன்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்ذٰلِكَஅதுقَوْلُهُمْஅவர்களின் கூற்றுبِاَفْوَاهِهِمْ ۚதங்கள் வாய்களால்یُضَاهِـُٔوْنَஅவர்கள் ஒத்திருக்கிறார்கள்قَوْلَகூற்றைالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْஇருந்துقَبْلُ ؕமுன்னர்قٰتَلَهُمُஅவர்களை அழிப்பானாகاللّٰهُ ؗۚஅல்லாஹ்اَنّٰیஎவ்வாறுیُؤْفَكُوْنَஅவர்கள் திசைதிருப்பப்படுகிறார்கள்
வ காலதில் யஹூது 'உZஜய்ருனிBப் னுல் லாஹி வ காலதின் னஸாரல் மஸீஹுBப் னுல் லாஹி தாலிக கவ்லுஹும் Bபி அFப்வாஹிஹிம் யுளாஹி'ஊன கவ்லல் லதீன கFபரூ மின் கBப்ல்; கதலஹுமுல் லாஹ்; அன்னா யு'Fபகூன்
யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?
فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِیًّا ۟
فَحَمَلَتْهُஆகவே அவள் அவரைக் கருவுற்றாள்فَانْتَبَذَتْபின்னர் அவள் ஒதுங்கினாள்بِهٖஅவருடன்مَكَانًاஓர் இடத்திற்குقَصِیًّاதொலைதூரமான
Fபஹமலத் ஹு Fபன்தBபதத் Bபிஹீ மகானன் கஸிய்யா
அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
ذٰلِكَ عِیْسَی ابْنُ مَرْیَمَ ۚ قَوْلَ الْحَقِّ الَّذِیْ فِیْهِ یَمْتَرُوْنَ ۟
ذٰلِكَஅவர்தாம்عِیْسَیஈஸாابْنُமகன்مَرْیَمَ ۚமர்யமின்قَوْلَவாக்குالْحَقِّஉண்மையானالَّذِیْஎதைப்பற்றிفِیْهِஅதில்یَمْتَرُوْنَஅவர்கள் சந்தேகிக்கிறார்கள்
தாலிக 'ஈஸBப்-னு மர்யம; கவ்லல் ஹக்கில் லதீ Fபீஹி யம்தரூன்
இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِیّٖنَ مِیْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ۪ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟ۙ
وَ اِذْஇன்னும் (நினைவுகூர்க)اَخَذْنَاநாம் வாங்கினோம்مِنَஇருந்துالنَّبِیّٖنَநபிமார்களிடம்مِیْثَاقَهُمْஅவர்களின் உடன்படிக்கையைوَ مِنْكَஉம்மிடமிருந்தும்وَ مِنْஇன்னும் இருந்தும்نُّوْحٍநூஹ்وَّ اِبْرٰهِیْمَஇன்னும் இப்ராஹீம்وَ مُوْسٰیஇன்னும் மூஸாوَ عِیْسَیஇன்னும் ஈஸாابْنِமகன்مَرْیَمَ ۪மர்யமின்وَ اَخَذْنَاஇன்னும் நாம் வாங்கினோம்مِنْهُمْஅவர்களிடமிருந்துمِّیْثَاقًاஉடன்படிக்கையைغَلِیْظًاۙஉறுதியான
வ இத் அகத்னா மினன் னBபிய்யீன மீதாகஹும் வ மின்க வ மின் னூஹி(ன்)வ் வ இBப்ராஹீம வ மூஸா வ ஈஸBப்-னி-மர்யம வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
شَرَعَ لَكُمْ مِّنَ الدِّیْنِ مَا وَصّٰی بِهٖ نُوْحًا وَّالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَمَا وَصَّیْنَا بِهٖۤ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسٰۤی اَنْ اَقِیْمُوا الدِّیْنَ وَلَا تَتَفَرَّقُوْا فِیْهِ ؕ كَبُرَ عَلَی الْمُشْرِكِیْنَ مَا تَدْعُوْهُمْ اِلَیْهِ ؕ اَللّٰهُ یَجْتَبِیْۤ اِلَیْهِ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ یُّنِیْبُ 
شَرَعَஅவன் ஏற்படுத்தினான்لَكُمْஉங்களுக்குمِّنَஇலிருந்துالدِّیْنِமார்க்கத்தைمَاஎதனைوَصّٰیஅவன் உபதேசித்தானோبِهٖஅதைக் கொண்டுنُوْحًاநூஹுக்குوَّ الَّذِیْۤமேலும் எதனைاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلَیْكَஉமக்குوَ مَاமேலும் எதனைوَصَّیْنَاநாம் உபதேசித்தோமோبِهٖۤஅதைக் கொண்டுاِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குوَ مُوْسٰیமேலும் மூஸாவுக்கும்وَ عِیْسٰۤیமேலும் ஈஸாவுக்கும்اَنْஎன்றுاَقِیْمُواநீங்கள் நிலைநிறுத்துங்கள்الدِّیْنَமார்க்கத்தைوَ لَاமேலும் வேண்டாம்تَتَفَرَّقُوْاநீங்கள் பிரிந்துவிடفِیْهِ ؕஅதில்كَبُرَகடினமாக இருக்கிறதுعَلَیமீதுالْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களுக்குمَاஎதைتَدْعُوْهُمْநீர் அவர்களை அழைக்கிறீரோاِلَیْهِ ؕஅதன் பக்கம்اَللّٰهُஅல்லாஹ்یَجْتَبِیْۤஅவன் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்اِلَیْهِதன் பக்கம்مَنْஎவரைیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یَهْدِیْۤமேலும் அவன் நேர்வழி காட்டுகிறான்اِلَیْهِதன் பக்கம்مَنْஎவர்یُّنِیْبُதிரும்புகிறாரோ
ஷர'அ லகும் மினத் தீனி மா வஸ்ஸா Bபிஹீ னூஹ(ன்)வ் வல்லதீ அவ்ஹய்னா இலய்க வமா வஸ்ஸய்னா Bபிஹீ இBப்ராஹீம வ மூஸா வ 'ஈஸா அன் அகீமுத் தீன வலா ததFபர்ரகூ Fபீஹ்; கBபுர 'அலல் முஷ்ரிகீன மா தத்'ஊஹும் இலய்ஹ்; அல்லாஹு யஜ்தBபீ இலய்ஹி மய் யஷா'உ வ யஹ்தீ இலய்ஹி மய் யுனீBப்
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
اِنْ هُوَ اِلَّا عَبْدٌ اَنْعَمْنَا عَلَیْهِ وَجَعَلْنٰهُ مَثَلًا لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
اِنْஇல்லைهُوَஅவர்اِلَّاதவிரعَبْدٌஓர் அடியார்اَنْعَمْنَاநாம் அருள்புரிந்தோம்عَلَیْهِஅவர் மீதுوَ جَعَلْنٰهُமேலும் அவரை நாம் ஆக்கினோம்مَثَلًاஓர் உதாரணமாகلِّبَنِیْۤசந்ததியினருக்குاِسْرَآءِیْلَؕஇஸ்ராயீல்
இன் ஹுவ இல்லா 'அBப்துன் அன்'அம்னா 'அலய்ஹி வ ஜ'அல்னாஹு மதலன் லி Bபனீ இஸ்ரா'ஈல்
அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
وَاِنَّهٗ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوْنِ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அவர்لَعِلْمٌஓர் அடையாளமாவார்لِّلسَّاعَةِஇறுதி நாளுக்குفَلَاஆகவேتَمْتَرُنَّசிறிதும் சந்தேகிக்காதீர்கள்بِهَاஅதைப் பற்றிوَ اتَّبِعُوْنِ ؕமேலும் என்னைப் பின்பற்றுங்கள்هٰذَاஇதுவேصِرَاطٌவழியாகும்مُّسْتَقِیْمٌநேரான
வ இன்னஹூ ல 'இல்முன் லிஸ் ஸா'அதி Fப லா தம்தருன்ன Bபிஹா வத்தBபி'ஊன்; ஹாதா ஸிராதுன் முஸ்தகீம்
நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம்) நேரான வழி (என்று நபியே! நீர் கூறுவீராக!)
وَلَمَّا جَآءَ عِیْسٰی بِالْبَیِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَیِّنَ لَكُمْ بَعْضَ الَّذِیْ تَخْتَلِفُوْنَ فِیْهِ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுجَآءَவந்தாரோعِیْسٰیஈஸாبِالْبَیِّنٰتِதெளிவான சான்றுகளுடன்قَالَஅவர் கூறினார்قَدْநிச்சயமாகجِئْتُكُمْநான் உங்களிடம் வந்துள்ளேன்بِالْحِكْمَةِஞானத்துடன்وَ لِاُبَیِّنَமேலும் தெளிவுபடுத்துவதற்காகلَكُمْஉங்களுக்குبَعْضَசிலவற்றைالَّذِیْஎதைتَخْتَلِفُوْنَநீங்கள் முரண்படுகிறீர்களோفِیْهِ ۚஅதில்فَاتَّقُواஎனவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِیْعُوْنِமேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்
வ லம்மா ஜா'அ 'ஈஸா Bபில்Bபய்யினாதி கால கத் ஜி'துகும் Bபில் ஹிக்மதி வ லி-உBபய்யின லகும் Bபஃளல் லதீ தக்தலிFபூன Fபீஹி Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.
ثُمَّ قَفَّیْنَا عَلٰۤی اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّیْنَا بِعِیْسَی ابْنِ مَرْیَمَ وَاٰتَیْنٰهُ الْاِنْجِیْلَ ۙ۬ وَجَعَلْنَا فِیْ قُلُوْبِ الَّذِیْنَ اتَّبَعُوْهُ رَاْفَةً وَّرَحْمَةً ؕ وَرَهْبَانِیَّةَ بْتَدَعُوْهَا مَا كَتَبْنٰهَا عَلَیْهِمْ اِلَّا ابْتِغَآءَ رِضْوَانِ اللّٰهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَایَتِهَا ۚ فَاٰتَیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا مِنْهُمْ اَجْرَهُمْ ۚ وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
ثُمَّபிறகுقَفَّیْنَاநாம் தொடரச் செய்தோம்عَلٰۤیமீதுاٰثَارِهِمْஅவர்களின் அடிச்சுவடுகளின்بِرُسُلِنَاநம்முடைய தூதர்களைوَ قَفَّیْنَاமேலும் நாம் தொடரச் செய்தோம்بِعِیْسَیஈஸாவைابْنِமகன்مَرْیَمَமர்யமுடையوَ اٰتَیْنٰهُமேலும் அவருக்கு நாம் வழங்கினோம்الْاِنْجِیْلَ ۙ۬இன்ஜீலைوَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்فِیْஇல்قُلُوْبِஇதயங்களில்الَّذِیْنَஎவர்கள்اتَّبَعُوْهُஅவரைப் பின்பற்றினார்களோرَاْفَةًஇரக்கத்தைوَّ رَحْمَةً ؕமேலும் கிருபையைوَ رَهْبَانِیَّةَமேலும் துறவறத்தைِ۟ابْتَدَعُوْهَاஅதனை அவர்களே புதிதாக உருவாக்கிக் கொண்டார்கள்مَاஇல்லைكَتَبْنٰهَاஅதனை நாம் கடமையாக்கினோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுاِلَّاதவிரابْتِغَآءَநாடிرِضْوَانِபொருத்தத்தைاللّٰهِஅல்லாஹ்வின்فَمَاஆனால் இல்லைرَعَوْهَاஅதனை அவர்கள் பேணினார்கள்حَقَّமுறைப்படிرِعَایَتِهَا ۚஅதனைப் பேண வேண்டியفَاٰتَیْنَاஎனவே நாம் வழங்கினோம்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோمِنْهُمْஅவர்களில்اَجْرَهُمْ ۚஅவர்களின் கூலியைوَ كَثِیْرٌமேலும் அதிகமானோர்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَபாவிகளாக இருக்கின்றனர்
தும்ம கFப்Fபய்னா 'அலா ஆதாரிஹிம் Bபி ருஸுலினா வ கFப்Fபய்னா Bபி 'ஈஸBப் னி மர்யம வ ஆதய்னாஹுல் இன்ஜீல வ ஜ'அல்னா Fபீ குலூBபில் லதீனத் தBப'ஊஹு ர'Fபத(ன்)வ் வ ரஹ்மத(ன்)வ் ரஹ்Bபானிய்யதன் இBப்தத'ஊஹ மா கதBப்னாஹா 'அலய்ஹிம் இல்லBப் திகா'அ ரிள்வானில் லாஹி Fபமா ர'அவ்ஹா ஹக்க ரி'ஆயதிஹா; Fப ஆதய்னல் லதீன ஆமனூ மின்ஹும் அஜ்ரஹும்; வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.
وَاِذْ قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اِنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیَّ مِنَ التَّوْرٰىةِ وَمُبَشِّرًا بِرَسُوْلٍ یَّاْتِیْ مِنْ بَعْدِی اسْمُهٗۤ اَحْمَدُ ؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَیِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟
وَ اِذْமேலும் (நினைவு கூருங்கள்)قَالَகூறினார்عِیْسَیஈஸாابْنُமகன்مَرْیَمَமர்யமின்یٰبَنِیْۤசந்ததியினரே!اِسْرَآءِیْلَஇஸ்ராயீலின்اِنِّیْநிச்சயமாக நான்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَیْكُمْஉங்களிடம்مُّصَدِّقًاஉண்மைப்படுத்துபவராகلِّمَاஉள்ளதைبَیْنَமுன்னால்یَدَیَّஎனக்குمِنَஇருந்துالتَّوْرٰىةِதவ்ராத்தில்وَ مُبَشِّرًۢاமேலும் நற்செய்தி கூறுபவராகبِرَسُوْلٍஒரு தூதரைப்பற்றிیَّاْتِیْஅவர் வருவார்مِنْۢஇருந்துبَعْدِیஎனக்குப் பின்اسْمُهٗۤஅவருடைய பெயர்اَحْمَدُ ؕஅஹ்மத்فَلَمَّاபின்னர், எப்போதுجَآءَهُمْஅவர்களிடம் வந்தாரோبِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்هٰذَاஇதுسِحْرٌசூனியம்مُّبِیْنٌதெளிவான
வ இத் கால 'ஈஸBப்-னு-மர்யம யா Bபனீ இஸ்ரா'ஈல இன்னீ ரஸூலுல் லாஹி இலய்கும் முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ய மினத் தவ்ராதி வ முBபஷ்ஷிரம் Bபி ரஸூலி(ன்)ய் யா'தீ மிம் Bபஃதிஸ் முஹூ அஹ்மத்; Fபலம்மா ஜா'அஹும் Bபில் Bபய்யினாதி காலூ ஹாதா ஸிஹ்ரும் முBபீன்
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ لِلْحَوَارِیّٖنَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ فَاٰمَنَتْ طَّآىِٕفَةٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَكَفَرَتْ طَّآىِٕفَةٌ ۚ فَاَیَّدْنَا الَّذِیْنَ اٰمَنُوْا عَلٰی عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِیْنَ ۟۠
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோكُوْنُوْۤاஆகுங்கள்اَنْصَارَஉதவியாளர்களாகاللّٰهِஅல்லாஹ்வின்كَمَاஎவ்வாறுقَالَகூறினாரோعِیْسَیஈஸாابْنُமகன்مَرْیَمَமர்யமின்لِلْحَوَارِیّٖنَசீடர்களிடம்مَنْயார்اَنْصَارِیْۤஎனது உதவியாளர்கள்اِلَیபக்கம்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்قَالَகூறினார்கள்الْحَوَارِیُّوْنَசீடர்கள்نَحْنُநாங்களேاَنْصَارُஉதவியாளர்கள்اللّٰهِஅல்லாஹ்வின்فَاٰمَنَتْஎனவே நம்பிக்கை கொண்டதுطَّآىِٕفَةٌஒரு கூட்டம்مِّنْۢஇருந்துبَنِیْۤசந்ததியினரில்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்وَ كَفَرَتْமேலும் நிராகரித்ததுطَّآىِٕفَةٌ ۚஒரு கூட்டம்فَاَیَّدْنَاஎனவே நாம் பலப்படுத்தினோம்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோعَلٰیஎதிராகعَدُوِّهِمْஅவர்களின் பகைவர்களுக்குفَاَصْبَحُوْاஅதனால் அவர்கள் ஆகிவிட்டார்கள்ظٰهِرِیْنَ۠வெற்றி பெற்றவர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ கூனூ அன்ஸாரல் லாஹி கமா கால 'ஈஸBப்-னு-மர்யம லில் ஹவாரிய்யீன மன் அன்ஸாரீ இலல் லாஹ்; காலல் ஹவாரிய்யூன னஹ்னு அன்ஸா ருல் லாஹி Fப ஆமனத் தா'இFபதும் மிம் Bபனீ இஸ்ரா'ஈல வ கFபரத் தா'இFபதுன் Fப அய்யத்னல் லதீன ஆமனூ 'அலா 'அதுவ்விஹிம் Fப அஸ்Bபஹூ ளாஹிரீன்
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.