صحيح مسلم

8. كتاب صلاة العيدين

ஸஹீஹ் முஸ்லிம்

8. தொழுகை நூல் - இரண்டு பெருநாள்கள்

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ عَبْدِ الرَّزَّاقِ، - قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، - أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ، عَبَّاسٍ قَالَ شَهِدْتُ صَلاَةَ الْفِطْرِ مَعَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ فَكُلُّهُمْ يُصَلِّيهَا قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ يَخْطُبُ قَالَ فَنَزَلَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ حِينَ يُجَلِّسُ الرِّجَالَ بِيَدِهِ ثُمَّ أَقْبَلَ يَشُقُّهُمْ حَتَّى جَاءَ النِّسَاءَ وَمَعَهُ بِلاَلٌ فَقَالَ ‏{‏ يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا‏}‏ فَتَلاَ هَذِهِ الآيَةَ حَتَّى فَرَغَ مِنْهَا ثُمَّ قَالَ حِينَ فَرَغَ مِنْهَا ‏"‏ أَنْتُنَّ عَلَى ذَلِكِ ‏"‏ فَقَالَتِ امْرَأَةٌ وَاحِدَةٌ لَمْ يُجِبْهُ غَيْرُهَا مِنْهُنَّ نَعَمْ يَا نَبِيَّ اللَّهِ لاَ يُدْرَى حِينَئِذٍ مَنْ هِيَ قَالَ ‏"‏ فَتَصَدَّقْنَ ‏"‏ ‏.‏ فَبَسَطَ بِلاَلٌ ثَوْبَهُ ثُمَّ قَالَ هَلُمَّ فِدًى لَكُنَّ أَبِي وَأُمِّي ‏.‏ فَجَعَلْنَ يُلْقِينَ الْفَتَخَ وَالْخَوَاتِمَ فِي ثَوْبِ بِلاَلٍ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களுடனும், அபூபக்கர், உமர் மற்றும் உஸ்மான் (ரலி) அவர்களுடனும் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) தொழுகையில் கலந்துகொண்டேன். அவர்கள் அனைவரும் குத்பாவுக்கு (சொற்பொழிவுக்கு) முன்பே தொழுகையை நிறைவேற்றுவார்கள்; அதன் பிறகே சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (மிம்பரிலிருந்து) இறங்கி வந்தார்கள். அவர்கள் ஆண்களைத் தமது கையால் அமர்த்தியவாறு, மக்கள் கூட்டத்தைப் பிளந்து கொண்டு பெண்கள் பகுதிக்குச் சென்றதை இப்போது நான் காண்பது போலுள்ளது. அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள்: **"யா அய்யுஹன் நபிய்யு இதா ஜாஅகல் முஃமினாது யுபாயிஃனக அலா அ(ல்)லா யுஷ்ரிக்ன பில்லாஹி ஷைஅன்..."** (நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்க மாட்டோம் என்று உம்மிடம் பைஅத் - உறுதிமொழி - அளிக்க வந்தால்...) என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 60:12 வது) வசனத்தை இறுதி வரை ஓதினார்கள்.

ஓதி முடித்ததும், "(இந்தக் கட்டுப்பாடுகளின் மீது) நீங்கள் உறுதியுடன் இருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அவர்களிலிருந்து ஒரு பெண் மட்டும் - அவரைத் தவிர வேறு யாரும் பதிலளிக்கவில்லை - "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அவர் யார் என்று அப்போது அறியப்படவில்லை. நபி (ஸல்) அவர்கள், "தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள்.

உடனே பிலால் (ரலி) தமது துணியை விரித்து, "இங்கே கொண்டு வாருங்கள்! என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்" என்று கூறினார்கள். அப்பெண்கள் (தங்கள்) பெரிய வளையங்களையும் மோதிரங்களையும் பிலால் (ரலி) அவர்களின் துணியில் போடலானார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ، عُيَيْنَةَ حَدَّثَنَا أَيُّوبُ، قَالَ سَمِعْتُ عَطَاءً، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَصَلَّى قَبْلَ الْخُطْبَةِ - قَالَ - ثُمَّ خَطَبَ فَرَأَى أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ فَأَتَاهُنَّ فَذَكَّرَهُنَّ وَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ وَبِلاَلٌ قَائِلٌ بِثَوْبِهِ فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي الْخَاتَمَ وَالْخُرْصَ وَالشَّىْءَ ‏.‏
وَحَدَّثَنِيهِ أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنِي يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، كِلاَهُمَا عَنْ أَيُّوبَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குத்பா உரைக்கு முன்பே தொழுதார்கள் என்பதற்குச் சாட்சியம் கூறுகிறேன். பிறகு அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பெண்களுக்குத் (தம் உரை) கேட்கவில்லை என்று அவர்கள் கருதியதால், அவர்களிடம் சென்று, அவர்களுக்கு நினைவூட்டி, உபதேசம் செய்து, தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அப்போது பிலால் (ரழி) தம் ஆடையை விரித்து ஏந்தியிருக்க, பெண்கள் மோதிரம், காதணி மற்றும் (மற்ற) பொருட்களை (அதில்) போடலானார்கள்.

இந்த ஹதீஸ் அய்யூப் அவர்களின் வாயிலாக இதே அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُهُ يَقُولُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَامَ يَوْمَ الْفِطْرِ فَصَلَّى فَبَدَأَ بِالصَّلاَةِ قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ خَطَبَ النَّاسَ فَلَمَّا فَرَغَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم نَزَلَ وَأَتَى النِّسَاءَ فَذَكَّرَهُنَّ وَهُوَ يَتَوَكَّأُ عَلَى يَدِ بِلاَلٍ وَبِلاَلٌ بَاسِطٌ ثَوْبَهُ يُلْقِينَ النِّسَاءُ صَدَقَةً ‏.‏ قُلْتُ لِعَطَاءٍ زَكَاةَ يَوْمِ الْفِطْرِ قَالَ لاَ وَلَكِنْ صَدَقَةً يَتَصَدَّقْنَ بِهَا حِينَئِذٍ تُلْقِي الْمَرْأَةُ فَتَخَهَا وَيُلْقِينَ وَيُلْقِينَ ‏.‏ قُلْتُ لِعَطَاءٍ أَحَقًّا عَلَى الإِمَامِ الآنَ أَنْ يَأْتِيَ النِّسَاءَ حِينَ يَفْرُغُ فَيُذَكِّرَهُنَّ قَالَ إِي لَعَمْرِي إِنَّ ذَلِكَ لَحَقٌّ عَلَيْهِمْ وَمَا لَهُمْ لاَ يَفْعَلُونَ ذَلِكَ.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஈதுல் ஃபித்ர் நாளில் (தொழுகைத் திடலில்) எழுந்து நின்று, குத்பாவுக்கு (சொற்பொழிவுக்கு) முன்பே தொழுகையைத் துவங்கித் தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையை) முடித்ததும், (மிம்பரிலிருந்து) இறங்கிப் பெண்களிடம் சென்று, அவர்களுக்கு (மார்க்கத்தை) நினைவூட்டி உபதேசித்தார்கள். அப்போது அவர்கள் பிலால் (ரலி) அவர்களின் கையின் மீது சாய்ந்திருந்தார்கள். பிலால் (ரலி) தமது ஆடையை விரித்து வைத்திருக்க, பெண்கள் (தங்கள்) தர்மப் பொருட்களை அதில் போட்டார்கள்.

(இதைக் கேட்ட அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ் ஆகிய) நான் அதாவிடம், "(அது) நோன்புப் பெருநாள் ஜகாத்தா (ஸதகத்துல் ஃபித்ரா)?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இல்லை; ஆனால், அது அவர்கள் அந்த நேரத்தில் தர்மம் செய்துகொண்டிருந்த (உபரியான) தர்மமாகும். ஒரு பெண் தனது மோதிரத்தைப் போடுவார்; (இப்படியே) மற்றவர்களும் போடுவார்கள்; மற்றவர்களும் போடுவார்கள்" என்று கூறினார்.

நான் அதாவிடம், "இமாம் (உரையை) முடித்த பிறகு, இப்போது பெண்களிடம் வந்து அவர்களுக்கு நினைவூட்டுவது இமாம் மீது கடமையா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆம், என் வாழ்வின் மீது ஆணையாக! இது அவர்கள்மீது கடமையாகும். இதைச் செய்யாமல் இருக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கூறினார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الصَّلاَةَ يَوْمَ الْعِيدِ فَبَدَأَ بِالصَّلاَةِ قَبْلَ الْخُطْبَةِ بِغَيْرِ أَذَانٍ وَلاَ إِقَامَةٍ ثُمَّ قَامَ مُتَوَكِّئًا عَلَى بِلاَلٍ فَأَمَرَ بِتَقْوَى اللَّهِ وَحَثَّ عَلَى طَاعَتِهِ وَوَعَظَ النَّاسَ وَذَكَّرَهُمْ ثُمَّ مَضَى حَتَّى أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ فَقَالَ تَصَدَّقْنَ فَإِنَّ أَكْثَرَكُنَّ حَطَبُ جَهَنَّمَ فَقَامَتْ امْرَأَةٌ مِنْ سِطَةِ النِّسَاءِ سَفْعَاءُ الْخَدَّيْنِ فَقَالَتْ لِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّكُنَّ تُكْثِرْنَ الشَّكَاةَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ قَالَ فَجَعَلْنَ يَتَصَدَّقْنَ مِنْ حُلِيِّهِنَّ يُلْقِينَ فِي ثَوْبِ بِلَالٍ مِنْ أَقْرِطَتِهِنَّ وَخَوَاتِمِهِنَّ
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் பெருநாள் அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் குத்பாவிற்கு (சொற்பொழிவிற்கு) முன்பு, பாங்கும் இகாமத்தும் இல்லாமல் தொழுகையைத் தொடங்கினார்கள். பிறகு அவர்கள் பிலால் (ரழி) அவர்கள் மீது சாய்ந்தவர்களாக எழுந்து நின்று, அல்லாஹ்வை அஞ்சி நடக்குமாறு கட்டளையிட்டார்கள்; அவனுக்குக் கீழ்ப்படிதலை வலியுறுத்தினார்கள்; மக்களுக்கு உபதேசம் செய்து, அவர்களுக்கு நினைவூட்டினார்கள். பிறகு அவர்கள் (அங்கிருந்து) சென்று பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். அவர்களுக்கும் உபதேசம் செய்து, நினைவூட்டினார்கள். (பிறகு), "தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், உங்களில் பெரும்பாலோர் நரகத்தின் எரிபொருளாக இருக்கிறீர்கள்" என்று கூறினார்கள். (அப்போது) பெண்களின் நடுவிலிருந்து கன்னத்தில் கரிய தழும்புடைய ஒரு பெண்மணி எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதரே! ஏன் அவ்வாறு?" என்று கேட்டார். அதற்கு அவர்கள் (ஸல்), "ஏனெனில் நீங்கள் அதிகமாகப் புகார் கூறுகிறீர்கள்; கணவன்மார்களுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்" என்று கூறினார்கள். உடனே அப்பெண்கள் தங்கள் காதணிகள் மற்றும் மோதிரங்கள் போன்ற ஆபரணங்களிலிருந்து தர்மம் செய்யலானார்கள்; அவற்றை பிலால் (ரழி) அவர்களின் துணியில் எறிந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، قَالاَ لَمْ يَكُنْ يُؤَذَّنُ يَوْمَ الْفِطْرِ وَلاَ يَوْمَ الأَضْحَى ‏.‏ ثُمَّ سَأَلْتُهُ بَعْدَ حِينٍ عَنْ ذَلِكَ فَأَخْبَرَنِي قَالَ أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரழி) அவர்களும் அறிவித்தார்கள்:
"ஈதுல் ஃபித்ர் மற்றும் ஈதுல் அள்ஹா (பெருநாட்களில்) அதான் இருக்கவில்லை."
பிறகு சிறிது காலத்திற்குப் பின் நான் (இப்னு ஜுரைஜ்) அவரிடம் அது பற்றிக் கேட்டேன். அவர் (அதா) கூறினார்: "ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَرْسَلَ إِلَى ابْنِ الزُّبَيْرِ أَوَّلَ مَا بُويِعَ لَهُ أَنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ لِلصَّلاَةِ يَوْمَ الْفِطْرِ فَلاَ تُؤَذِّنْ لَهَا - قَالَ - فَلَمْ يُؤَذِّنْ لَهَا ابْنُ الزُّبَيْرِ يَوْمَهُ وَأَرْسَلَ إِلَيْهِ مَعَ ذَلِكَ إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلاَةِ وَإِنَّ ذَلِكَ قَدْ كَانَ يُفْعَلُ - قَالَ - فَصَلَّى ابْنُ الزُّبَيْرِ قَبْلَ الْخُطْبَةِ ‏.‏
அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அஸ்-ஸுபைர் (ரலி) அவர்களுக்கு (கிலாஃபத்துக்காக) பைஅத் கொடுக்கப்பட்ட ஆரம்ப நேரத்தில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அவரிடம் ஆள் அனுப்பி, "ஈதுல் ஃபித்ர் அன்று தொழுகைக்கு அதான் சொல்லப்படுவதில்லை; எனவே நீங்களும் அதற்கு அதான் சொல்ல வேண்டாம்" என்று கூறினார்கள். அதன்படியே இப்னு அஸ்-ஸுபைர் (ரலி) அவர்கள் அந்நாளில் அதான் சொல்லவில்லை. மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அவரிடம், "குத்பா என்பது தொழுகைக்குப் பிறகுதான் (நிகழ்த்தப்பட வேண்டும்); முன்பும் அவ்வாறே செய்யப்பட்டு வந்தது" என்றும் செய்தி அனுப்பினார்கள். எனவே, இப்னு அஸ்-ஸுபைர் (ரலி) அவர்கள் குத்பாவிற்கு முன்பே தொழுகையை நிறைவேற்றினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَحَسَنُ بْنُ الرَّبِيعِ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ، سَمُرَةَ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْعِيدَيْنِ غَيْرَ مَرَّةٍ وَلاَ مَرَّتَيْنِ بِغَيْرِ أَذَانٍ وَلاَ إِقَامَةٍ ‏.‏
ஜாபிர் இப்னு ஸமுரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒன்று அல்லது இரண்டு தடவைகளுக்கு மேல் இரு ஈத்களின் தொழுகைகளை அதான் மற்றும் இகாமத் இல்லாமல் தொழுதேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ، اللَّهِ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يُصَلُّونَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரழி) அவர்களும், உமர் (ரழி) அவர்களும் குத்பாவுக்கு (சொற்பொழிவுக்கு) முன்பு இரு 'ஈத்' தொழுகைகளையும் தொழுவார்கள் என அறிவித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَخْرُجُ يَوْمَ الأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ فَيَبْدَأُ بِالصَّلاَةِ فَإِذَا صَلَّى صَلاَتَهُ وَسَلَّمَ قَامَ فَأَقْبَلَ عَلَى النَّاسِ وَهُمْ جُلُوسٌ فِي مُصَلاَّهُمْ فَإِنْ كَانَ لَهُ حَاجَةٌ بِبَعْثٍ ذَكَرَهُ لِلنَّاسِ أَوْ كَانَتْ لَهُ حَاجَةٌ بِغَيْرِ ذَلِكَ أَمَرَهُمْ بِهَا وَكَانَ يَقُولُ ‏ ‏ تَصَدَّقُوا تَصَدَّقُوا تَصَدَّقُوا ‏ ‏ ‏.‏ وَكَانَ أَكْثَرَ مَنْ يَتَصَدَّقُ النِّسَاءُ ثُمَّ يَنْصَرِفُ فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى كَانَ مَرْوَانُ بْنُ الْحَكَمِ فَخَرَجْتُ مُخَاصِرًا مَرْوَانَ حَتَّى أَتَيْنَا الْمُصَلَّى فَإِذَا كَثِيرُ بْنُ الصَّلْتِ قَدْ بَنَى مِنْبَرًا مِنْ طِينٍ وَلَبِنٍ فَإِذَا مَرْوَانُ يُنَازِعُنِي يَدَهُ كَأَنَّهُ يَجُرُّنِي نَحْوَ الْمِنْبَرِ وَأَنَا أَجُرُّهُ نَحْوَ الصَّلاَةِ فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ مِنْهُ قُلْتُ أَيْنَ الاِبْتِدَاءُ بِالصَّلاَةِ فَقَالَ لاَ يَا أَبَا سَعِيدٍ قَدْ تُرِكَ مَا تَعْلَمُ ‏.‏ قُلْتُ كَلاَّ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَأْتُونَ بِخَيْرٍ مِمَّا أَعْلَمُ ‏.‏ ثَلاَثَ مِرَارٍ ثُمَّ انْصَرَفَ ‏.‏
அபூ ஸயீத் அல்-குத்ரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழ்ஹா பெருநாள் அன்றும் ஃபித்ர் பெருநாள் அன்றும் (தொழுமிடத்திற்கு) வெளியே சென்று தொழுகையைக்கொண்டே (நிகழ்வுகளைத்) துவங்குவார்கள். தொழுகையை நிறைவேற்றி ஸலாம் கொடுத்த பிறகு, மக்கள் தங்கள் தொழுமிடங்களில் அமர்ந்திருந்த நிலையில், (நபி (ஸல்) அவர்கள்) எழுந்து அவர்களை முன்னோக்குவார்கள். அவர்களுக்கு ஒரு படையை அனுப்ப வேண்டிய தேவையிருந்தால் அது பற்றி மக்களிடம் கூறுவார்கள்; அல்லது வேறு ஏதேனும் தேவையிருந்தால் அது குறித்து அவர்களுக்குக் கட்டளையிடுவார்கள். மேலும் அவர்கள் கூறுவார்கள்:

"தர்மம் செய்யுங்கள்! தர்மம் செய்யுங்கள்! தர்மம் செய்யுங்கள்!"

தர்மம் செய்பவர்களில் பெரும்பாலோர் பெண்களாக இருந்தனர். பின்னர் அவர்கள் (வீட்டிற்குத்) திரும்புவார்கள். மர்வான் பின் அல்-ஹகம் (ஆட்சிக்கு வரும்) வரை இந்நிலை நீடித்தது.

(ஒரு முறை) நான் மர்வான் உடன் கைகோர்த்தவாறு (தொழுமிடத்திற்குச்) சென்றேன். நாங்கள் தொழுமிடத்திற்கு வந்தபோது, அங்கே கஸீர் பின் அஸ்-ஸல்த் என்பவர் களிமண்ணாலும் செங்கல்லாலும் ஒரு மிம்பரை (மேடையை) கட்டியிருந்தார். அப்போது மர்வான், என்னை மிம்பரை நோக்கி இழுப்பது போலவும், நான் அவரை தொழுகையை நோக்கி இழுப்பது போலவும் (என்னிடமிருந்து) தன் கையை இழுத்தார். அவரிடம் இந்தச் செயலைக் கண்டபோது நான், "தொழுகையை முதலில் துவங்கும் நடைமுறை எங்கே?" என்று கேட்டேன்.

அதற்கு அவர், "இல்லை அபூ ஸயீத்! உங்களுக்குத் தெரிந்த அந்த நடைமுறை கைவிடப்பட்டுவிட்டது" என்றார்.

நான் கூறினேன்: "ஒருபோதும் இல்லை! என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! எனக்குத் தெரிந்ததை விட சிறந்த எதையும் நீங்கள் கொண்டு வரப்போவதில்லை."

(இவ்வாறு) மூன்று முறை (கூறினேன்). பின்னர் அவர் திரும்பிச் சென்றார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب ذِكْرِ إِبَاحَةِ خُرُوجِ النِّسَاءِ فِي الْعِيدَيْنِ إِلَى الْمُصَلَّى وَشُهُودِ الْخُطْبَةِ مُفَارِقَاتٌ لِلرِّجَالِ
பெண்கள் ஈத் தொழுகைக்குச் செல்வதும், ஆண்களிடமிருந்து பிரிக்கப்பட்டு குத்பாவில் கலந்து கொள்வதும் அனுமதிக்கப்பட்டதாகும்
حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أَمَرَنَا - تَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم - أَنْ نُخْرِجَ فِي الْعِيدَيْنِ الْعَوَاتِقَ وَذَوَاتِ الْخُدُورِ وَأَمَرَ الْحُيَّضَ أَنْ يَعْتَزِلْنَ مُصَلَّى الْمُسْلِمِينَ ‏.‏
உம்மு அதிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) கன்னிப் பெண்களையும், திரைக்குப் பின்னிருக்கும் பெண்களையும் ஈத் தொழுகைக்காக நாங்கள் அழைத்துவர வேண்டுமென எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; மேலும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் முஸ்லிம்களின் தொழுமிடத்திலிருந்து விலகி இருக்குமாறு கட்டளையிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ حَفْصَةَ بِنْتِ، سِيرِينَ عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ كُنَّا نُؤْمَرُ بِالْخُرُوجِ فِي الْعِيدَيْنِ وَالْمُخَبَّأَةُ وَالْبِكْرُ قَالَتِ الْحُيَّضُ يَخْرُجْنَ فَيَكُنَّ خَلْفَ النَّاسِ يُكَبِّرْنَ مَعَ النَّاسِ ‏.‏
உம்மு அதிய்யா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"இரு பெருநாட்களிலும் நாங்களும், திரைக்குள் இருக்கும் பெண்களும், கன்னிப்பெண்களும் வெளியே செல்லுமாறு கட்டளையிடப்பட்டோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் வெளியேறி, மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும்; மக்களுடன் சேர்ந்து அவர்களும் தக்பீர் கூற வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ، سِيرِينَ عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نُخْرِجَهُنَّ فِي الْفِطْرِ وَالأَضْحَى الْعَوَاتِقَ وَالْحُيَّضَ وَذَوَاتِ الْخُدُورِ فَأَمَّا الْحُيَّضُ فَيَعْتَزِلْنَ الصَّلاَةَ وَيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِحْدَانَا لاَ يَكُونُ لَهَا جِلْبَابٌ قَالَ ‏ ‏ لِتُلْبِسْهَا أُخْتُهَا مِنْ جِلْبَابِهَا ‏ ‏ ‏.‏
உம்மு அதிய்யா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஈதுல் ஃபித்ர் மற்றும் ஈதுல் அள்ஹா பெருநாட்களில் கன்னிப் பெண்களையும், மாதவிடாய்ப் பெண்களையும், அந்தப்புரப் பெண்களையும் வெளியே அழைத்து வருமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாய்ப் பெண்கள் தொழுகையிலிருந்து விலகி இருப்பார்கள்; ஆயினும், அவர்கள் முஸ்லிம்களின் நற்செயல்களிலும் அவர்களின் துஆவிலும் பங்கெடுப்பார்கள். நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே, எங்களில் ஒருத்திக்கு (அவளுடைய முகத்தையும் உடலையும் மறைப்பதற்கு) மேலாடை இல்லை. அவர்கள் கூறினார்கள்: அவளுடைய சகோதரி தனது மேலாடையால் அவளுக்குப் போர்த்தட்டும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب تَرْكِ الصَّلاَةِ قَبْلَ الْعِيدِ وَبَعْدَهَا فِي الْمُصَلَّى ‏
ஈதுக்காக தொழுகை நடத்தப்படும் இடத்தில் ஈத் தொழுகைக்கு முன்னரோ பின்னரோ வேறு எந்த தொழுகையும் நிறைவேற்றக்கூடாது
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، عَنْ سَعِيدِ، بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمَ أَضْحَى أَوْ فِطْرٍ فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ بِلاَلٌ فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي خُرْصَهَا وَتُلْقِي سِخَابَهَا ‏.‏
وَحَدَّثَنِيهِ عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، ح وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، وَمُحَمَّدُ، بْنُ بَشَّارٍ جَمِيعًا عَنْ غُنْدَرٍ، كِلاَهُمَا عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்ஹா அல்லது ஃபித்ர் பெருநாளில் வெளியே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்னரும் பின்னரும் அவர்கள் எந்தத் தொழுகையையும் நிறைவேற்றவில்லை. பின்னர் அவர்கள் பிலால் (ரழி) அவர்களுடன் பெண்களிடம் வந்து, தர்மம் செய்யுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் காதணிகளையும் கழுத்தணிகளையும் (தர்மமாகப்) போடலானார்கள்.
இந்த ஹதீஸ் இதே அறிவிப்பாளர் தொடருடன் ஷுஃபா அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَا يُقْرَأُ بِهِ فِي صَلاَةِ الْعِيدَيْنِ ‏
ஈத் தொழுகையில் என்ன ஓத வேண்டும்?
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ مَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الأَضْحَى وَالْفِطْرِ فَقَالَ كَانَ يَقْرَأُ فِيهِمَا بِـ ‏{‏ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ‏}‏ وَ ‏{‏ اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏}‏
உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் அபூ வாக்கித் அல்-லைத்தி (ரழி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஈதுல்-அழ்ஹா' மற்றும் 'ஈதுல்-பித்ர்' பெருநாட்களில் எதனை ஓதுவார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் கூறினார்கள்:

"அவர்கள் அவ்விரண்டிலும் '{காஃப், வல் குர்ஆனில் மஜீத்}' மற்றும் '{இக்தரபதிஸ் ஸாஅத்து வன்ஷக்கல் கமர்}' ஆகியவற்றை ஓதுவார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ ضَمْرَةَ، بْنِ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، قَالَ سَأَلَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ عَمَّا قَرَأَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَوْمِ الْعِيدِ فَقُلْتُ بِـ ‏{‏ اقْتَرَبَتِ السَّاعَةُ‏}‏ وَ ‏{‏ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ‏}‏
அபூ வாக்கித் அல்-லைத்தீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஈத்' பெருநாள் அன்று எதை ஓதினார்கள் என்று என்னிடம் கேட்டார்கள். நான் கூறினேன்: "{இக்தரபத்திஸ் ஸாஅஹ்}" மற்றும் "{காஃப் வல் குர்ஆனில் மஜீத்}".

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الرُّخْصَةِ فِي اللَّعِبِ الَّذِي لاَ مَعْصِيَةَ فِيهِ فِي أَيَّامِ الْعِيدِ ‏
ஈத் நாட்களில் கீழ்ப்படியாமையை உள்ளடக்காத விளையாட்டுகளை அனுமதிக்கும் சலுகை
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَ عَلَىَّ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتْ بِهِ الأَنْصَارُ يَوْمَ بُعَاثٍ قَالَتْ وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ ‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ أَبِمُزْمُورِ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

அபூபக்கர் (ரழி) என்னிடம் வந்தார்கள். அப்போது அன்சாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள், 'புஆத்' போரின்போது அன்சாரிகள் ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டவற்றை (கவிதைகளை) என்னிடம் பாடிக்கொண்டிருந்தனர். அவ்விருவரும் பாடகிகள் அல்லர். அப்போது அபூபக்கர் (ரழி), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவியா?" என்று கூறினார்கள். இந்நிகழ்வு ஒரு பெருநாள் தினத்தில் நடந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூபக்கரே! நிச்சயமாக ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு பெருநாள் உண்டு; இது நம்முடைய பெருநாளாகும்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَفِيهِ جَارِيَتَانِ تَلْعَبَانِ بِدُفٍّ ‏.‏
ஹிஷாம் அவர்கள் இதே அறிவிப்பாளர் தொடர் வாயிலாக அறிவிக்கிறார்கள். அதில், "இரண்டு சிறுமிகள் தஃப் அடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ ابْنَ شِهَابٍ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ، دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنًى تُغَنِّيَانِ وَتَضْرِبَانِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُسَجًّى بِثَوْبِهِ فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ فَكَشَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْهُ وَقَالَ ‏ ‏ دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ ‏ ‏ ‏.‏ وَقَالَتْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتُرُنِي بِرِدَائِهِ وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ وَهُمْ يَلْعَبُونَ وَأَنَا جَارِيَةٌ فَاقْدِرُوا قَدْرَ الْجَارِيَةِ الْعَرِبَةِ الْحَدِيثَةِ السِّنِّ ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது மினாவுடைய நாட்களில் இரண்டு சிறுமிகள் (தஃப்) அடித்துக்கொண்டு பாடிக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களது ஆடையால் போர்த்திக்கொண்டிருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்விருவரையும் கடிந்துகொண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முகத்திலிருந்து ஆடையை) விலக்கி, "அபூபக்ரே! அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்; ஏனெனில், இவை பெருநாள் நாட்களாகும்" என்று கூறினார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தம் மேலாடையால் மறைத்துக்கொண்டிருக்க, நான் அபிசீனியர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் ஒரு சிறுமியாக இருந்தேன். எனவே, விளையாட்டில் விருப்பம் கொண்ட இளம் வயதுச் சிறுமியின் ஆர்வத்தை நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، بْنِ الزُّبَيْرِ قَالَ قَالَتْ عَائِشَةُ وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُومُ عَلَى بَابِ حُجْرَتِي - وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - يَسْتُرُنِي بِرِدَائِهِ لِكَىْ أَنْظُرَ إِلَى لَعِبِهِمْ ثُمَّ يَقُومُ مِنْ أَجْلِي حَتَّى أَكُونَ أَنَا الَّتِي أَنْصَرِفُ ‏.‏ فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ حَرِيصَةً عَلَى اللَّهْوِ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறையின் வாசலில் நின்று கொண்டிருந்ததையும், அபிசீனியர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொண்டிருந்ததையும் நான் பார்த்தேன். நான் அவர்களது விளையாட்டைப் பார்ப்பதற்காகத் தங்களது மேலாடையால் என்னை அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு, (விளையாட்டைப் பார்த்துவிட்டு) நானாகத் திரும்பும் வரை எனக்காக அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஆகவே, வேடிக்கை பார்ப்பதில் ஆவல் கொண்ட ஒரு இளம் வயதுச் சிறுமியின் நிலையை (அவள் எவ்வளவு நேரம் பார்ப்பாள் என்பதை) நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَيُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، - وَاللَّفْظُ لِهَارُونَ - قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثٍ فَاضْطَجَعَ عَلَى الْفِرَاشِ وَحَوَّلَ وَجْهَهُ فَدَخَلَ أَبُو بَكْرٍ فَانْتَهَرَنِي وَقَالَ مِزْمَارُ الشَّيْطَانِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ دَعْهُمَا ‏"‏ فَلَمَّا غَفَلَ غَمَزْتُهُمَا فَخَرَجَتَا وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ فَإِمَّا سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَإِمَّا قَالَ ‏"‏ تَشْتَهِينَ تَنْظُرِينَ ‏"‏ ‏.‏ فَقُلْتُ نَعَمْ فَأَقَامَنِي وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ وَهُوَ يَقُولُ ‏"‏ دُونَكُمْ يَا بَنِي أَرْفَدَةَ ‏"‏ ‏.‏ حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ ‏"‏ حَسْبُكِ ‏"‏ ‏.‏ قُلْتُ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ فَاذْهَبِي ‏"‏ ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் வீட்டிற்குள்) நுழைந்தபோது, என்னிடம் இரண்டு சிறுமிகள் ‘புஆஸ்’ (போர் தொடர்பான)ப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். அண்ணலார் படுக்கையில் படுத்து, தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகே ஷைத்தானின் இசைக் கருவியா?” என்று கூறி என்னைக் கடிந்துகொண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்கர் பக்கம் திரும்பி, “அவ்விருவரையும் (பாட) விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்.

(அபூபக்கர்) கவனத் திரும்பியபோது, நான் அவ்விருவருக்கும் சைகை காட்டினேன்; உடனே இருவரும் வெளியேறிவிட்டனர். அது ஒரு பெருநாள் தினமாகும். (அன்று) சூடான் வாசிகள் கேடயங்களாலும் ஈட்டிகளாலும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பார்க்க அனுமதி) கேட்டேனா அல்லது அவர்களே “நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?” என்று கேட்டார்களா (என்பது எனக்கு நினைவில்லை). அதற்கு நான் “ஆம்” என்றேன்.

அவர்கள் என்னை தமக்குப்பின்னால் என் கன்னம் அவர்களின் கன்னத்தின் மீது படுமாறு நிற்கவைத்தார்கள். மேலும், “பனூ அர்பதாவினரே! (உங்கள் விளையாட்டைத்) தொடருங்கள்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். நான் சலிப்படைந்தபோது, “உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு அவர்கள், “அப்படியென்றால் நீ போகலாம்” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَ حَبَشٌ يَزْفِنُونَ فِي يَوْمِ عِيدٍ فِي الْمَسْجِدِ فَدَعَانِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَوَضَعْتُ رَأْسِي عَلَى مَنْكِبِهِ فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ حَتَّى كُنْتُ أَنَا الَّتِي أَنْصَرِفُ عَنِ النَّظَرِ إِلَيْهِمْ.
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"‘ஈத்’ பெருநாள் அன்று அபிசீனியர்கள் பள்ளிவாசலுக்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் எனது தலையை அவர்களின் தோளின் மீது வைத்து, அவர்களின் விளையாட்டைப் பார்க்கலானேன்; நானாகவே அவர்களைப் பார்ப்பதிலிருந்து விலகும் வரை (பார்த்தேன்)."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، ح وَحَدَّثَنَا ابْنُ، نُمَيْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، كِلاَهُمَا عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرَا فِي الْمَسْجِدِ ‏.‏
இந்த ஹதீஸ் ஹிஷாம் அவர்கள் வழியாக இதே அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் (அறிவிப்பாளர்கள்) பள்ளிவாசலைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ، وَعُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، كُلُّهُمْ عَنْ أَبِي، عَاصِمٍ - وَاللَّفْظُ لِعُقْبَةَ - قَالَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، أَخْبَرَنِي عُبَيْدُ بْنُ عُمَيْرٍ، أَخْبَرَتْنِي عَائِشَةُ، أَنَّهَا قَالَتْ لِلَعَّابِينَ وَدِدْتُ أَنِّي أَرَاهُمْ قَالَتْ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقُمْتُ عَلَى الْبَابِ أَنْظُرُ بَيْنَ أُذُنَيْهِ وَعَاتِقِهِ وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ ‏.‏ قَالَ عَطَاءٌ فُرْسٌ أَوْ حَبَشٌ ‏.‏ قَالَ وَقَالَ لِي ابْنُ عَتِيقٍ بَلْ حَبَشٌ ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(பள்ளிவாசலில்) விளையாடிக் கொண்டிருந்தவர்களைப் பற்றி, "நான் அவர்களைப் பார்க்க விரும்புகிறேன்" என்று கூறினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நான் வாசலில் நின்று, அவர்களின் காதுக்கும் தோளுக்கும் இடையில் பார்த்தேன்; அவர்கள் பள்ளிவாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

(அறிவிப்பாளர்) அதாஉ கூறினார்: "அவர்கள் பாரசீகர்களா அல்லது அபிசீனியர்களா (என்று சந்தேகமாக உள்ளது)?" (ஆனால்) இப்னு அதீக் என்னிடம், "இல்லை! அவர்கள் அபிசீனியர்கள்தாம்" என்று கூறினார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا الْحَبَشَةُ يَلْعَبُونَ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِحِرَابِهِمْ إِذْ دَخَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَأَهْوَى إِلَى الْحَصْبَاءِ يَحْصِبُهُمْ بِهَا ‏.‏ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ دَعْهُمْ يَا عُمَرُ.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் அபிசீனியர்கள் தங்கள் ஈட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் (அங்கு) நுழைந்தார்கள். உடனே அவர்கள்மீது எறிவதற்காகச் சிறுகற்களை எடுக்கக் குனிந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், "உமரே, அவர்களை விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح